பரலோக ராஜ்ஜியத்தின் வெற்றிக்கு பைபிள் வழிகாட்டுமா ?
பரலோக ராஜ்ஜியத்தின் வெற்றிக்கு என்ன வழி ? 18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்: விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. யோவான் 3 :18 36 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்: குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். யோவான் 3 :36 குமாரனை விசுவாசித்தால் போதும் நித்திய ஜீவனை அடையலாம் என இவ்வசனங்கள் கூறுகிறது இல்ல இல்ல !! மனந்திரும்புதல் வேண்டும் அதனால் தான் கர்த்தர் இறுதி நாளையே தாமதப்படுத்துகிறார் 2 பேதுரு 3 :9 அட இல்லப்பா இயேசு கிட்ட இந்த கேள்விய கேட்டா அவர் என்ன சொல்றாரு தெரியுமா ? 17 அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே, நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார். மத்தேயு 19 :17 18 அவன் அவரை நோக்கி: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக...