இடுகைகள்

ஜூலை 9, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆதியாகமம்-தொடர் 3

தொடர்2  இன் தொடர்ச்சி  உள்ளடக்கம் 7.சூரியனை படைக்க முன்பே பகல் வெளிச்சம் பூமியில் உண்டாகிவிட்டதாம் 8.சூரியனை படைக்க முன்பே தாவரங்களை படைத்துவிட்டாராம். 9.சூரியனை படைக்க முன்பே மூன்று சாயங்காலங்களும் மூன்று காலைப்பொழுதுகளும் ஏற்பட்டு முடிந்து விட்டதாம். 10.நமது ரூபம், நமது சாயல் என்று தேவன் பன்மையில் பேசுவது திரித்துவத்திற்கு ஆதாரமா? 11.அனைத்து மிருகங்களும் மனிதனும் தாவரவுண்ணிகளாக படைக்கப்பட்டதாம்! (அதாவது 6000 வருடங்கள் முன்பு உணவு சங்கிலி கிடையாதாம்!) 7.சூரியனை படைக்க முன்பே பகல் வெளிச்சம்  தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று. தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.""   - ஆதி 1:3,5  பகலானது முதலில் தேவனால் படைக்கப்பட்டு விடுகிறது. ஆனால் அதற்கு ஒளி வழங்கும் சூரியனோ நான்காவது நாளில் படைக்கப்பட்டதாம் . ¹⁶ "தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்." ¹⁸ "பகலையும் இரவையு...

ஆதியாகமம்-தொடர் 2

 ஆதியாகமம்-தொடர் 2 தொடர்1  இன் தொடர்ச்சி உள்ளடக்கம் 5.ஆதியாகமம் 1:2 ஆவியானவர் என்ற நபரை குறிக்கிறதா? ஆவியின் வகைகள் 6.தேவனுடை வார்த்தை என்பது நபரா? 5.ஆதியாகமம் 1:2 ஆவியானவர் என்ற நபரை குறிக்கிறதா? 2.“பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.”   — 1:2  இது பூமி படைக்கப்பட்ட போது இருந்த நிலையை சொல்கிறது.  திரித்துவத்தின் மூன்றாம் நபராக பரிசுத்த ஆவி என்ப்படுபவர் கருதப்படுகிறார். அவர் ஆரம்பம் முதலே இருக்கிறார் என்பதற்கு இதை ஆதாரமாக பாமர கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். உண்மையில் "தேவ ஆவியானவர்" என்று இருக்கும் வார்த்தை குழப்பமானதாக இருக்கலாம். ஆனால் இதன் அர்த்தம் "தேவனுடைய ஆவி" என்பதாகும். அதுவும் இங்கே பெண்பாலில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.  அதாவது (מְרַחֶ֖פֶת-மெரஹெபேத்")- அசைவாடிக்கொண்டிருந்தாள் என்று பெண்பால் ஒருமையிலேயே உள்ளது. ஆவியானவர் என்ன ஒரு பெண்ணா? உண்மையில் இது தேவனுடைய ஆவி எனும் நபரை பற்றி கூறும் வசனமே அல்ல. மாறாக தண்ணீருக்கு மேல் அசைந்து வீசிக்கொண்டிருந்த கா...

ஆதியாகமம்- தொடர் 1

ஆதியாகமம் பாகம் 1 பழைய ஏற்பாட்டின் ஆதியாகம புத்தகத்தை நாம் சற்று அலசலாம் என்று உள்ளோம். அதில் முதல் வசனத்தையும் அதை திரித்து கிறிஸ்தவர்கள் வைக்கும் வாதங்களையும் அதற்கான பதில்களையும் பார்ப்போம். உள்ளடக்கம்: 1.எலோஹீம் என்பது திரித்துவமா? 2.எத் (את) என்பது திரித்துவத்திற்கு சாதகமாக அமையுமா? 3.எழுத்து விளையாட்டு 1 - பென் 4.எழுத்து விளையாட்டு 2- பாராவும் பாரும் 1.“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.”   — 1:1  1.எலோஹீமும் கிறிஸ்தவ திரிபும் அ.இங்கே தேவன் என்பதை குறிக்க "எலோஹிம் (אלהים) " என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது.  இது "எலோஹ்ஹ (אלוֹהַּ)"என்பதன் பன்மையாகும். இதன் நேரடி அர்த்தம் "கடவுள்கள்" என்பதாகும்.  இதனால் கிறிஸ்தவர்கள் , "இது திரித்துவத்தை குறிக்கிறது " என்கிறார்கள். இது அறிவீனமான வாதமாகும். ஏனெனில் திரித்துவம் என்பது ஒரே கடவுள் மூன்று நபர்களாக செயற்படுகிறார்கள் என்பதாகும். இவர்கள் கருதுவது போல் வரவேண்டுமாயின் பன்மையில் வரவே கூடாது. வேண்டுமானால் பலதெய்வ கொள்கைக்கு தான் ஆதாரமாக கருதவேண்டும். இது இவர்களது அடிமனதில் இருந்தே , இவர்கள...