ஞாயிறு, 9 ஜூலை, 2023

ஆதியாகமம்-தொடர் 3


தொடர்2 இன் தொடர்ச்சி 


உள்ளடக்கம்

7.சூரியனை படைக்க முன்பே பகல் வெளிச்சம் பூமியில் உண்டாகிவிட்டதாம்

8.சூரியனை படைக்க முன்பே தாவரங்களை படைத்துவிட்டாராம்.

9.சூரியனை படைக்க முன்பே மூன்று சாயங்காலங்களும் மூன்று காலைப்பொழுதுகளும் ஏற்பட்டு முடிந்து விட்டதாம்.

10.நமது ரூபம், நமது சாயல் என்று தேவன் பன்மையில் பேசுவது திரித்துவத்திற்கு ஆதாரமா?

11.அனைத்து மிருகங்களும் மனிதனும் தாவரவுண்ணிகளாக படைக்கப்பட்டதாம்! (அதாவது 6000 வருடங்கள் முன்பு உணவு சங்கிலி கிடையாதாம்!)




7.சூரியனை படைக்க முன்பே பகல் வெளிச்சம் 


தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று.

தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.""

  - ஆதி 1:3,5 


பகலானது முதலில் தேவனால் படைக்கப்பட்டு விடுகிறது. ஆனால் அதற்கு ஒளி வழங்கும் சூரியனோ நான்காவது நாளில் படைக்கப்பட்டதாம்.


¹⁶ "தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்."

¹⁸ "பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்."(ஆதி 1:16,18)


பகலுக்கு காரணமே சூரியனாக தான் உள்ளது. சூரியன் மறைந்துவிடும்போது ஒளி போய்விடுகிறது. சூரிய கிரகணம் ஏற்படும் போது இருளாகி விடுகிறது. சூரியன் வெறும் ஆளுகை தான் செய்கிறதென்றால், பூரண சூரிய கிரகணம் ஏற்படும் போது இருளாக கூடாது. ஆகவே இவ்வசனம் புரிதலற்ற மனித வார்த்தை என்று புரிகிறது.


இதை சமாளிக்க நவீன கிறிஸ்தவர்களோ, உண்டாக்கினார் என்பதிலுள்ள எபிரேய வார்த்தை "ஆசா- עשׂה" என்பதாகும். இது புதிதாக உண்டாக்குவதை குறிக்காது. ஏற்கனவே இருந்த ஒன்றை செயற்பாட்டுக்கு கொண்டுவருவதை குறிக்கும் என்று பொய்யாக பைபிள் மொழியறிவின்றி வாதிக்கிறார்கள்.


ஆனால் இவ்வார்த்தையும் புதிதாக உண்டாக்குவதையே குறிக்கிறது. ஏனெனில் 1:14இல் சுடர்கள் ஆகாய விரிவில் உண்டாகக்கடவது என்று சொல்கிறார். அதன்பின்பு தான் அவை உருவானது.

இதே ஆசா எனும் வார்த்தையை தான் மனிதனை உண்டாக்குவோம் (ஆதி 1:26) என்று சொல்வதற்கும் இதே வார்த்தை தான் பாவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மனிதன் இருந்து அவனை செயற்பாட்டுக்கு கொண்டுவருவோம் என்பதா இதன் அர்த்தம்? இதற்கு பின்பு தானே மனிதனை தேவன் படைக்கிறார்- ஆதி 1:27

ஆகவே இது தவறான சமாளிப்பாகவே உள்ளது.

---


8.சூரியனை படைக்க முன்பே கனிமரங்களை படைத்தாராம் 


¹¹ "அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களின் விதையையுடைய கனிகளைத் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று."

¹² "பூமியானது புல்லையும், தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் ஜாதியின்படியே தங்கள் விதையை கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைத்தது; தேவன் அது நல்லது என்று கண்டார்."

¹³ சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.(ஆதியாகமம் 1:11-13)


இதிலிருந்து மரங்களுக்கு சூரியன் அவசியமில்லை என்பதை தெரிவிக்கிறது. ஆனால் சூரிய ஒளி படாமல் இருக்கும்போது மரங்கள் வாடி போய்விடுகின்றன

.

சூரியனுக்கு முன்பே தேவன் ஒளியை படைத்துவிட்டார் தானே என்று இவர்கள் வாதிடலாம். அப்படி பூமியில் ஒரு ஒளி இருக்குமாயின் சூரிய கிரகணம் ஏற்படும் போது அந்த ஒளி எங்கே போகிறது? அதுகூட பகலை தான் குறிக்கிறது. (1:5). ஆகவே பூமியில் பகல் போன்ற வெளிச்சத்திற்கு சூரியனே காரணமாக அமைவதால், இதுகூட பேதமை கொண்ட ரபீக்களின் எழுத்தாக இருக்க வேண்டும்.


-----

9.சூரியனை படைக்க முன்பே மூன்று சாயங்காலம், மூன்று விடியற்காலை உண்டாகியிருக்கிறது- ஆதி 1:5,8,13


சூரியன் உதிப்பதால் தான் விடியற்காலையே தோன்றுகிறது. இது தெளிவாக இதை எழுதியவரின் அறிவீனத்தை வெளிப்படுத்துகிறது.


-----

10.நமது சாயல், நமது ரூபம், உண்டாக்குவோம் என்பன திரித்துவத்திற்கு ஆதாரமா?


""பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.""

  — ஆதி 1:26 


தேவன் தன் மகிமையை நிலைநாட்டும்விதமாக தான் இங்கே "நமது ரூபம், நமது சாயல்", "உண்டாக்குவோமாக" என்று கூறியவை அமைகின்றன.

ஏனெனில் அடுத்த வசனத்திலேயே,

""தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.""

  — ஆதி 1:27 


இதிலே தெளிவாக "தம்முடைய சாயலாக - அவனுடைய உருவத்தில்" "சிருஷ்டித்தார் - அவன் படைத்தான்" என்றும் தெளிவாக உள்ளது. தங்களுடைய சாயல் என்றோ சிருஷ்டித்தார்கள் என்று கூறப்படவில்லை. இதிலிருந்து தன் மகிமையை வெளிக்காட்டும் விதமாக தான் இது கூறப்பட்டுள்ளது என்று புரிகிறது.


அதுமட்டுமின்றி ஏசாயா 45:12இல் தெளிவாக,


"""நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதன்மேல் இருக்கிற மனுஷனைச் சிருஷ்டித்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன்."”

  — ஏசாயா 45:12 


நான் தான் மனுஷனை படைத்தேன் என்கிறார். நாங்கள் படைத்தோம் என்று கூறவில்லை. காரணம் ஒரே நபரான தேவன் தானே படைத்தார்.


ஆகவே ஆதி 1:26 பன்மையை குறிக்கிறது என்று கூறுவது அதற்கு அடுத்த வசனத்திற்கும் முரணாகவே அமைகிறது.


இதேபோல் பன்மையில் ஏசாயா 6:8 இல் "நமது காரியம்" என்று கூறப்படுகிறது.


அப்படியென்றால் அவர் யாரிடம் அவ்வாறு சொன்னார்?


மனிதனை படைக்க முன்பே தன் தூதர்களை அவர் படைத்துவிட்டார். அதனால் தான் மனிதன் பழத்தை சாப்பிட்டவுடன், கெரூபீன் என்று அறியப்படுகிற தூதர்களை ஏதேன் தோட்டத்தில் காவலுக்கு வைத்தார் - ஆதி 3:24

தேவன் அனைத்தையும் தன் இஷ்டப்படி செய்தாலும் அதை தன் தீர்க்கதரிசிகளுக்கு தெரிவிக்காமல் செய்யமாட்டார் என்று ஆமோஸ் 3:7 சொல்கிறது.. 

தீர்க்கதரிசிகளுக்கே இந்த நிலைமை என்றால், முழுமையாக கட்டுப்பட்டு சுயவிருப்பு இன்றி இருக்கும் தன் வானதூதர்களுக்கு அறிவிக்காமல் இருப்பாரா?

அதையே ஏசாயா 6:1-8 கூறுகிறது. தேவ சபையில் தேவன் பேசுவதை அவை கூறுகிறது.

அதை தான் ஆதி 1:26 சொல்கிறது.

இந்நிகழ்வை தான் குர்ஆன்,

"உமது இறைவன் வானவர்களிடம், நான் பூமியில் ஒரு தலைமுறையை உண்டாக்க போகிறேன் என்று சொன்னபோது.." குர்ஆன் 2:30 நான் சொல்கிறது.

-------

11.அனைத்து மிருகங்களையும்,மனிதனையும் தாவரவுண்ணிகளாக தேவன் படைத்திருக்கிறார் போலும்


“"பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;"”

  — ஆதி 1:29 


""பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன்; அது அப்படியே ஆயிற்று.""

  — ஆதி 1:30 


ஆரம்பத்தில் உணவுச்சங்கிலி இருக்கவில்லை போலும். இந்த காலம் 6000 வருடங்கள் முன்பானது என கூறப்படுகிறது. அதை ஆதியாகமம் 5ம் அதிகாரத்தில் வைத்து கூறுகிறேன்.

அதன்படி, 6000 வருடங்கள் முன்பு பூமியே வெஜிடேரியன்களால் நிறைந்திருந்தது. அனைத்தும் இயற்கை மரணத்தையே அடைந்துள்ளது போலும்.

தொடர்4

இது தெளிவான பிழையாகும்.

ஆதியாகமம்-தொடர் 2

 ஆதியாகமம்-தொடர் 2


தொடர்1 இன் தொடர்ச்சி


உள்ளடக்கம்

5.ஆதியாகமம் 1:2 ஆவியானவர் என்ற நபரை குறிக்கிறதா?

ஆவியின் வகைகள்

6.தேவனுடை வார்த்தை என்பது நபரா?


5.ஆதியாகமம் 1:2 ஆவியானவர் என்ற நபரை குறிக்கிறதா?

2.“பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.”

  — 1:2 



இது பூமி படைக்கப்பட்ட போது இருந்த நிலையை சொல்கிறது. 

திரித்துவத்தின் மூன்றாம் நபராக பரிசுத்த ஆவி என்ப்படுபவர் கருதப்படுகிறார். அவர் ஆரம்பம் முதலே இருக்கிறார் என்பதற்கு இதை ஆதாரமாக பாமர கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர்.


உண்மையில் "தேவ ஆவியானவர்" என்று இருக்கும் வார்த்தை குழப்பமானதாக இருக்கலாம். ஆனால் இதன் அர்த்தம் "தேவனுடைய ஆவி" என்பதாகும். அதுவும் இங்கே பெண்பாலில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

அதாவது (מְרַחֶ֖פֶת-மெரஹெபேத்")- அசைவாடிக்கொண்டிருந்தாள் என்று பெண்பால் ஒருமையிலேயே உள்ளது.

ஆவியானவர் என்ன ஒரு பெண்ணா?

உண்மையில் இது தேவனுடைய ஆவி எனும் நபரை பற்றி கூறும் வசனமே அல்ல.

மாறாக தண்ணீருக்கு மேல் அசைந்து வீசிக்கொண்டிருந்த காற்றை பற்றி தான் கூறுகிறது. அது தேவனுக்கே உரிய காற்றாக இருப்பதால் தேவனுடைய காற்று (רוּח אלהים- ருஆஹ் எலோஹீம்) என்று அழைக்கப்படுகிறது.


இதே போல கீழ் காற்றையும் கர்த்தருடைய காற்று (கர்த்தருடைய ஆவி - רוּח יהוה - ருஆஹ் யாஹ்வே) என பைபிள் கூறுகிறது .


".... கர்த்தருடைய காற்றாகிய (ருஆஹ் யாஹ்வே- கர்த்தரின் ஆவி) கீழ் காற்று வனாந்தரத்தில் எழும்பி வரும்;.." -ஓசியா 13:15


ஆதி 1:2 வசனம் தேவனது காற்று தண்ணீரின் மேல் அசைவாடியது என்பதையே குறிக்கிறது.


பரிசுத்த ஆவியை குறிக்க எந்த முகாந்திரமும் இல்லை. தண்ணீரின் மேல் அசைவாடி விளையாடுபவரா தேவன்? அதுவும் பெண்பாலிலேயே உள்ளது. அவர் அசைந்தாடும் சிறுமியா?


கீழ்காற்று எப்படி கர்த்தருடைய ருஆவாக இருக்கிறதோ அதுபோல ஒரு காற்றுதான் தண்ணீரின் மேல் அசைந்தாடியது.



பைபிளிலுள்ள ருஆக்களின் (ஆவிகளின்) வகைகள் 



1.காற்று. - காற்றை ருஆக் ( רוּח) என்றே எபிரேயத்தில் சொல்லப்படும்.(ஆதி 8:1)

தேவனுடைய காற்று 

( רוּח אלהים)

-ருஆஹ் எலோஹீம்- ஆதி 1:2 இது பெண்பால்


கர்த்தருடைய காற்று

 (רוּח יהוה)

ருஆஹ் யாஹ்வே- ஓசியா 13:15 



2.உயிர் எனும் மூச்சு காற்று.

(רוּח אלוֹה)

ருஆ எலோஆ

யோபு 27:3 (தமிழ் பைபிளில் 27:2)


தமிழில் 

"தேவன் தந்த ஆவி என் நாசியில் இருக்குமட்டும்" என்று போடப்பட்டிருக்கிறது.


ஆனால் மூல மொழியில் "தேவனது ஆவி என் நாசியில் இருக்குமட்டும்" என்றே வரும்.


3.தேவனது பிரசன்னம்


רוּחך

உம்முடைய ஆவி (ரூஹெகா) -சங்கீதம் 139:7


கடவுள் தன் ஞானத்தால் வியாபித்திருக்கிறார் என்பதை கூறும் வசனங்களே சங்கீதம் 139:6-8


அதேபோல் ஆகாய் 2:5 இலும் தேவனது ஆவி மக்கள் மத்தியில் நிலைகொண்டிருக்கும் என்றும் பயப்பட வேண்டாம் என்றும் கூறுகிறது


அதிலே

רוּחִי

ரூஹீ -என்னுடைய ஆவி என்று வருகிறது.


அது பெண்பாலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆவியானவர் என்ன பெண்ணா?


வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பதென்றால்,


"என்னுடைய ஆவியானவளும் உங்கள் நடுவில் நிலைத்திருப்பாள் " என்று தான் வரும்.



உண்மையில் இது தேவனது பிரசன்னத்தையே குறிக்கிறது. தேவன் தன் ஞானத்தால் அவர்களுடன் இருக்கிறார். அவரது இருப்பிடமோ வானத்தின் மேலே ஆகும்.



4.வல்லமை/ஆற்றல்

யோபு 33:4

“தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது.”

  இங்கே ஆவியானவர் என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். 

ஆனால் எபிரேயத்தில் பெண்பாலில் தான் இது உள்ளது

רוּח אל עשׂתני

ருஆஹ் எல் ஆசாதெனீ (பெண்பால் ஒருமை வினைச்சொல்)

இதன் நேரடி அர்த்தம்

"தேவனுடைய ஆவியானவள் என்னை உண்டாக்கினாள்" என்று தான் வரும். 


அதாவது இங்கே ஆவி என்பது நபராக இருந்தால், நிச்சயமாக பெண்ணாக தான் இருக்க வேண்டும். அப்படி பார்த்தால் திரித்துவத்தில் பெண்தெய்வமும் வந்துவிடும். மாறாக இது தேவனது சக்தி ஆற்றல் என்பவற்றை குறிக்கிறது. தேவனது வல்லமை தான் உண்டாக்கியது. அது நபர் அல்ல. தேவனுடைய வல்லமை உண்டாக்கியது என்பது தேவன் உண்டாக்கியதை குறிக்கும். நபரை குறிக்காது.

மேலும் யோபு 26:13 இலும் அவருடைய ஆவி என்பது வல்லமையை குறிக்கும். நபரை அல்ல. 


5.தேவனுடைய ஒரு ஈவு/பரிசு/வரம், மற்றும் இறைத்தூண்டல் 


“"நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்; — சகரியா 12:10 

ஆவிகள் ஊற்றப்படும் என்று சொல்லப்படுகிறது. இதேபோல் பெந்தகோஸ்த்து ஆவியை பற்றிய தீர்க்கதரிசனமாக அப்போஸ்தலர் நடபடிகள் மேற்கோள்காட்டும் யோவேல் 2:28-29 இலும் கூறப்பட்டுள்ளது. நபரை எப்படி ஊற்றுவது?

இதேபோல் தாவீதின் மேல் ஆவி வந்திருக்கிறது.அங்கேயும் பெண்பாலில் தான் உள்ளது. ஆவியானவர் என மொழிபெயர்த்துள்ளனர். 1 சாமுவேல் 16:13-14

தீர்க்கதரிசிகள் மத்தியில் சவுல் போனபோது அவன் மீதும் ஆவி (பெண்பால்) இறங்கியது. அதனால் அவனும் தீர்க்கதரிசனம் சொன்னானாம்.-1 சாமுவேல் 10:10

இதேபோல் நியாயாதிபதிகள் 3:10, 6:34, 9:23, 11:29, 13:25,14:6,19, 15:14, எண் 11:25-27,24:2 இலும் காணப்படுகின்றன. இவை பெண்பாலில் தான் உள்ளன. தேவனுடைய தூண்டல், மற்றும் ஒருவித வரத்தையே (வரம்) இது குறிக்கிறது.

இதனால் தான் தாவீது ராஜா, "உமது பரிசுத்த ஆவியை என்னிடமிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்"-சங்கீதம் 51:11 என வேண்டுகிறார். 


இது கடவுளல்ல. கடவுளால் கொடுக்கப்படுகிறது.

இந்த வரத்தினால் தூண்டல்களும், சக்தியும்,உள்ளுணர்வும் கொடுக்கப்படுகிறது. இதை தான் பரிசுத்த ஆவியினால் அபிசேகம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.


6.தேவதூதர்

தேவதூதர்களை ஆவிகள் என்று பைபிள் சொல்கிறது.

"அவர் தம்முடைய தூதர்களை காற்றுகளாகவும் (ரூஹோத்-ஆவிகள்), தம்முடைய ஊழியக்காரரை அக்கினி ஜுவாலைகளாகவும் செய்கிறார்- சங்கீதம் 104:4


இதேபோல் ஆகாபை வஞ்சிப்பதற்கு ஒரு ஆவி கர்த்தர் முன் வந்து நின்றதாக சொல்லபடுகிறது. அங்கே அது ஆண்பாலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அது பேசக்கூடியதாகவும் இருக்கிறது. 1 இராஜாக்கள் 22:21-23 ,2 நாளாகமம் 18:20-22.


இதன்மூலம் தீர்க்கதரிசிகள் மூலமாக தேவதூதர்கள் பேசுவார்கள் என தெரிகிறது.

இதேபோல் தாவீது ராஜா தன்னை குறித்து கூறும்போது, 

கர்த்தருடைய ஆவியானவர் (ருஆக் யாஹ்வே- கர்த்தரின் ஆவி) என்னைக் கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது.”

  — 2 சாமுவேல் 23:2 

இவர்களுக்கு எந்த தெய்வீகமும் கிடையாது.

7.தேவனுடைய பரிசுத்த உள்ளம் (மனது)

“"அவர்களோ கலகம்பண்ணி, அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்; அதினால் அவர் அவர்களுக்குச் சத்துருவாய் மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணினார்."”

  — ஏசாயா          63:10 

இதேபோல் எஸ்போன் ராஜாவின் ஆவியை (ருஆஹ் என்று தான் எபிரேயத்தில் உள்ளது) கடினப்படுத்தியதாக உபாகமம் 2:30 இல் கூறப்படுகிறது.  இங்கே ஆவி என்பது மனதை குறிக்கிறது.

இதேபோல் ஏசாவின் மனைவிகள் ஈசாக்கிற்கும் ரெபேக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள் -ஆதி 26:35 இங்கும் ருஆஹ் -ஆவி என்பது மனதையே குறிக்கிறது.. இதுபோல் ஆதி 41:8, யாத்திராகமம் 6:9, 

இதன்படி ருஆஹ் கோதேஷ் (பரிசுத்த ஆவி) என்று ஏசாயா 63:10 கூறுவது தேவனது பரிசுத்த மனதையே குறிக்கிறது என புரிகிறது.


ஆனால் அதே ஏசாயா 63:11,14 ஆகியவற்றில் உள்ளதோ ஏற்கனவே கூறிய தேவனது ஈவு பற்றியதாகும். அதிலுள்ள பரிசுத்த ஆவியை தேவன் அவர்கள்மேல் கட்டளையிட்டார். 

63:14 இலோ அவரது ஆவி அவர்களை இளைப்பாற பண்ணியதாக கூறப்படுகிறது. அதுவும் பெண்பாலிலேயே உள்ளது. ஆவியானவர் ஒன்றும் பெண் அல்லவே.  தேவன் கொடுத்த ஈவாகிய பரிசுத்த ஆவி அவர்களை இளைப்பாறப்பண்ணியது.


முதலில் இவை நபரே கிடையாது.


தேவதூதர்களும் வரும் ஆவிகளே நபர்களாக இருப்பார்கள். அவர்களை ஆண்பாலில் பாவிக்கப்பட்டிருக்கும். அவர்களுக்கு தெய்வீகம் கிடையாது. அவர்களில் உள்ள பரிசுத்த ஆவி என்பது கடவுளோ தெய்வீகம் பொருந்தியவரோ கிடையாது. அவருக்கு தெய்வீகம் உண்டு என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.

--------------


6.தேவனுடைய வார்த்தை (ஆதி 1:3) ஒரு நபரா? 


3.தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார்.வெளிச்சம் உண்டாயிற்று. ஆதியாகமம் 1:3

இதன் மூலம் வார்த்தையானவர் என்பவர் இருக்கிறார் என்கிறார்கள் கிறிஸ்தவர்கள். அவரே திரித்துவத்தின் ஒரு நபரான இயேசு என்கிறார்கள்.


பதில்: இது பார்த்தவுடனே மடத்தனமான வாதம் என்று புரிந்துவிடும். 

தேவன் "யஹீ-உண்டாகு" என்று பேசுகிறார். அதனால் படைப்புகள் உண்டாகின்றன.

தேவன் பேசுவது எப்படி ஒரு நபராக ஆகும்? 

தேவனது பேச்சு என்பது தேவனோ அல்லது இன்னொரு நபரோ அல்ல. மாறாக தேவனது பண்புகளில் ஒன்றாகும். தேவனது பார்வை, கேள்விப்புலம் எப்படி பண்போ அதுபோன்றே பேச்சு என்பதும் ஒரு பண்பே. அது நபர் கிடையாது.

இதேபோல் சங்கீதம் 33:6, 148:5 வசனங்களை விளக்கும் விதமாக ஆதி 1:3 முதல் வரும் வசனங்கள் அமைகின்றன.

இதை தவறாக புரிந்துகொண்ட யோவான், வார்த்தையை ஒரு நபராக கருதி, அவரே இயேசுவாக வந்ததாக யோவான் 1:1-14 இல் எழுதுகிறார்


தேவனது வார்த்தை மூலம் இயேசு தன் தாயின் வயிற்றில் கருவுற்றதால் இயேசு கடவுளுடைய ஒரு வார்த்தையாக கருதப்படுகிறார். 

தேவனது ஒரு வார்த்தை மூலம்  எப்படி ஒளி  உண்டானதோ, (அதை பகல் என்று தேவன் பெயரிட்டார்.) அதுபோன்றே மரியாளிடம் "ஆகு" என்ற கட்டளைப்படி கருவுற்றார். அதனால் வார்த்தை மனிதனாக  மாறியதாக இவர்கள் கருதிவிட்டனர். ஆனால் உண்மையில் வார்த்தை மூலமே அவர் மனிதனாக மாறினார்.. எப்படி ஒளி (பகல்) கடவுள் கிடையாதோ, அதே போன்று இயேசு கடவுளல்ல. ஒளி (பகல்) எப்படி ஒரு படைப்போ, அது போன்று இயேசுவும் ஒரு படைப்பாவார்.

ஏனெனின் ஒரு பெண்ணின் இரத்தத்தை உறிஞ்சு கர்ப்பத்தில் வளரும் ஒரு பூச்சு மனித படைப்பே அன்றி படைத்தவராக மாட்டார்.

இந்த வார்த்தை எனும் விசயத்திலேயே கிறிஸ்தவர்கள் மிகவும் குழம்பியே இருக்கிறார்கள். 

தேவனது பேச்சு, கட்டளை, வார்த்தை என்பது ஒரு நபரே கிடையாது. இவர்கள் சிந்திக்க வேண்டும்!

----------

தொடர்3


ஆதியாகமம்- தொடர் 1

ஆதியாகமம் பாகம் 1


பழைய ஏற்பாட்டின் ஆதியாகம புத்தகத்தை நாம் சற்று அலசலாம் என்று உள்ளோம்.

அதில் முதல் வசனத்தையும் அதை திரித்து கிறிஸ்தவர்கள் வைக்கும் வாதங்களையும் அதற்கான பதில்களையும் பார்ப்போம்.

உள்ளடக்கம்:

1.எலோஹீம் என்பது திரித்துவமா?

2.எத் (את) என்பது திரித்துவத்திற்கு சாதகமாக அமையுமா?

3.எழுத்து விளையாட்டு 1 - பென்

4.எழுத்து விளையாட்டு 2- பாராவும் பாரும்






1.“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.”


  — 1:1 




1.எலோஹீமும் கிறிஸ்தவ திரிபும்



அ.இங்கே தேவன் என்பதை குறிக்க "எலோஹிம் (אלהים) " என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. 




இது "எலோஹ்ஹ (אלוֹהַּ)"என்பதன் பன்மையாகும். இதன் நேரடி அர்த்தம் "கடவுள்கள்" என்பதாகும்.




 இதனால் கிறிஸ்தவர்கள் , "இது திரித்துவத்தை குறிக்கிறது " என்கிறார்கள்.




இது அறிவீனமான வாதமாகும். ஏனெனில் திரித்துவம் என்பது ஒரே கடவுள் மூன்று நபர்களாக செயற்படுகிறார்கள் என்பதாகும்.




இவர்கள் கருதுவது போல் வரவேண்டுமாயின் பன்மையில் வரவே கூடாது. வேண்டுமானால் பலதெய்வ கொள்கைக்கு தான் ஆதாரமாக கருதவேண்டும். இது இவர்களது அடிமனதில் இருந்தே , இவர்களது நம்பிக்கை ஒரு கடவுள்கொள்கை அல்ல. மூன்று கடவுள்கள் கொள்கையே என்று வெளிப்படுகிறது.




  


இனி எலோஹிம் பற்றி பார்ப்போம்:


எலோஹீம் என்பது பாவிக்கப்பட்ட சில இடங்களும் அர்த்தமும்




1.பல தேவர்கள் என்பதை குறிக்கவும் (1 சாமுவேல் 4:8, யாத்திராகமம் 20:3, உபாகமம் 5:7, நியாயாதிபதிகள் 2:3)




2.தேவதூதர்கள் (சங்கீதம் 8:5)




3.மோசே என்ற தனி மனிதரை குறித்து (யாத்திராகமம் 7:1)




4.சாமுவேல் தீர்க்கதரிசியை குறித்து-(1 சாமுவேல் 28:13-14)




5.நியாயதிபதிகளை குறிக்க- (யாத்திராகமம் 21:6) 




6.பாகால்பேரீத் எனும் போலி தேவனை குறிக்க (நியாயாதிபதிகள் 8:33)




7.பாகால் என்ற ஒத்தை கடவுளை குறித்து கேலியாக எலியா சொன்னது (1 இராஜாக்கள் 18:27)


இவ்வாறு பலவிதமாக எலோஹீம் என்பது கையாளப்பட்டுள்ளது.




அது பன்மையை (plural) மட்டுமே குறிக்கும் என்று வாதிடுவது அபத்தமாகும்.




பெரிய கடவுளாக வணங்கப்படும் ஒற்றை கடவுளுக்கும் எலோஹீம் என்பது பயன்படுத்தப்படுகிறது. ஒற்றையான போலிக் கடவுளையும் இதே எலோஹீம் என்ற வார்த்தையால் பைபிள் குறிப்பிடுகிறது (நியா 8:33, 1 இராஜாக்கள் 18:27)




அதேபோல் ஒற்றை நபர்களுக்கும் (மோசே , சாமுவேல்) பாவிக்கப்பட்டுள்ளது. (யாத்திராகமம் 7:1, 1சாமுவேல் 28:13-14)




ஆகவே எலோஹீம் என்றாலே பன்மையை மட்டுமே குறிக்கும் என்றும் அது திரித்துவத்திற்கு ஆதாரம் என கருதுவதும் மடத்தனமாகும்.






மேலதிகமாக,




"சிருஷ்டித்தார்" என்பதை குறிக்க "பாரா (baaraa) -(בָּרָא)" என்றே உள்ளது. அதாவது இது ஒருமை ஆண்பால் வினைச்சொல் ஆகும்.




இவர்கள் கருதுவது போல், ஒரு தேவன் மூன்று நபர்களாக செயற்பட்டு, மூன்று நபர்களும் படைத்தனர் என்றால், "பாரூ -baaru (בּרוּ) என்று வரவேண்டும்.




இதிலிருந்து கடவுள் ஒரு நபரே என்று தெளிவாகிறது.




அவர் ஒற்றை நபர் தான் என்பதை ஏசாயா 43:10-15,25, 44:24, 45:5-7, 46:9 என பல வசனங்கள் கூறுகின்றன.


“"நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதின்மேல் இருக்கிற மனுஷனைச் சிருஷ்டித்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன்."”


  — Isaiah 45:12 (TBSI)


“"நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்."”


  — Isaiah 44:6 (TBSI)






⁵ "நானே கர்த்தர், வேறொருவர் இல்லை; என்னைத்தவிர தேவன் இல்லை."


⁶ "என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே கர்த்தர், வேறொருவர் இல்லை." ஏசாயா 45:5-6




நான் தான் படைத்தேன். என்னை தவிர தேவன் இல்லை என்று தான் ஒரே நபர் தான். மூன்று நபர்களது கூட்டு அல்ல என தெளிவான ஏகத்துவத்தை இவை கூறுகின்றன.


ஆகவே எலோஹீம் என்பதை வைத்து இப்படி கதை கட்டுவது அபத்தமாகும்




2.எத் (את) பற்றிய திரிபுக்கு மறுப்பு


ஆ.ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் என்பதில் "எத் -eth (את)" என்ற சொல் இருதடவை வருகிறது. இது ஆவியானவரும் வார்த்தையானவரும் ஆகிய இருவரையும் குறிக்கும் என்கிறார்கள் சில போதகர்கள். யூட்யூப் இல் இது பற்றி மணித்தியாலக்கணக்கில் பொய்களை பேசியிருக்கிறார்கள்.






இது பற்றி பார்ப்போம்.




உண்மையில் את-எத் என்பது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க இயலாத வார்த்தை ஆகும். ஆனால் இதை தமிழில் மொழிபெயர்க்கலாம். இது தான் தமிழில் நாம் பாவிக்கும் இரண்டாம் வேற்றுமை உருபு "ஐ" என்பதாகும்.






எபிரேயத்தில் நேரடி செயற்படுபொருளை குறிக்க "את-எத்" என்பது செயற்படுபொருளுக்கு முன்னால் இடம்பெறும். தமிழில் செயற்படுபொருளை குறிக்க சொல்லின் இறுதியில் "ஐ" என்ற வேற்றுமை உருபு இடம்பெறுவது போல தான் இது.






உதாரணமாக


ஆதாம் ஏவாளை அறிந்தான்-


ஹாஆதாம் யாதஃ' எத்-ஹவ்வா (ஆதி 4:1)




ஏவாள்+ஐ = எத்+ஹவ்வா




எபிரேய இலக்கண அறிவில் சற்றும் ஞானம் இல்லாத மடையர்கள் தான் இவ்வாறு புதுசு புதுசாக பொய்களை அடித்துவிடுவார்கள்.






இந்த இலக்கண விசயத்தை மேலும் ஆழமாக விளக்க தேவையில்லை.




கடைசியாக ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் எசேக்கியேல் 23இலிருந்து காட்டுகிறேன்.




"தான் எகிப்திலே பண்ணின வேசித்த்தனங்களை அவள் விடவில்லை" எசேக்கியேல் 23:8




இங்கேயும் அவளுடைய "வேசித்தனங்களை" என்பதை குறிக்க את- முதலிலேயே பாவிக்கப்பட்டுள்ளது.




இதன்படி வேசித்தனங்களை வார்த்தையானவரும் ஆவியானவரும் செய்தனர் என்று சொன்னால் அவர்களை இழிவுபடுத்துவதாக அமையுமே.






ஆகவே மொழியறிவு இன்றி கதை கட்டுவது தன் கடவுள்களையே கேவலப்படுத்துவதாக அமையும்




3.எழுத்து விளையாட்டு 1. (பென்)


இ."ஆதியிலே" என்று தொடங்கும் இவ்வசனம் எபிரேயத்தில் "பெரேசீத் -Bereshith -(בְּרֵאשִׁ֖ית)" என தொடங்குகிறது. இதன் ஆரம்ப எழுத்து ba (பா) ஆகும். வெளிப்படுத்தின விசேஷம் இறுதி வசனம் "ஆமென்" என முடிகிறது. அதாவது "ன்" இல் முடிகிறது.




ஆகவே பே யில் தொடங்கி "ன்" இல் முடிகிறது. இதை சேர்த்து வாசித்தால் "בּן" ben- பென் என வரும். அதாவது "மகன்" என்பதாகும்.




இதிலிருந்து தேவனுடைய பையனை பற்றி வெளிப்படுத்துவதற்கே வேதம் வந்தது என புரிகிறது என்று இவர்கள் கதை விடுகிறார்கள்.




இதை பார்த்தவுடனே அபத்தமான வாதம் என புரிந்துவிடும். ஆரம்ப எழுத்தையும் கடைசி எழுத்தையும் சேர்த்து வார்த்தை அமைத்து விளையாடுவது மடத்தனம். பென் என்றாலே தேவனது பையன் என்று வராது. 


இப்படி கூறுவதானால் இது Ben 10 கார்ட்டூனை பற்றி தான் வெளிப்படுத்துகிறது என்றும் சொல்லலாம். அல்லது அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரை குறிக்கலாம் என்றும் சொல்லலாம்.


 பழைய ஏற்பாட்டை படித்தால், அதிலே இஸ்ரேலை தான் தேவனது பையன் என்று குறிப்பாக சொல்லப்பட்டிருக்கும். (யாத்திராகமம் 4:22, ஓசியா 11:1).


புதிய ஏற்பாட்டிலோ பழைய ஏற்பாட்டை திரித்து, யாரையெல்லாம் தேவனது குமாரன் என்று சொல்லப்பட்டிருக்கிறதோ, அங்கே போய் அது இயேசவை குறித்து சொல்லப்பட்டுள்ளதாக எழுதியுள்ளனர். உதாரணமாக ஓசியா 11:1 ஐ மத்தேயு 2:15 இல் இயேசுவை குறித்து சொல்லப்பட்டுள்ளதாக எழுதப்பட்டுள்ளது.


ஆகவே சொல் விளையாட்டு எழுத்து விளையாட்டு எல்லாம் சரிவராது. வீண் கற்பனைகளே




4.எழுத்து விளையாட்டு 2- பாரா (בּרא)


பாராவும் (ברא) பாரும் (בר)

 


பாரா என்றால் படைத்தார் என்று அர்த்தம். அராமிக் பாசையில் பர் (bar- בַּר) என்றால் மகன் என்று அர்த்தம். அதனால் ஆதியாகமத்திலேயே இயேசுவை பற்றி உள்ளது என்று கதைவிடுகிறார்கள் சில போதகர்கள்.


அப்படி பார்த்தால் ஆங்கிலத்தில் bar என்ற எழுத்துமுறையே அராமிக்கில் மகனை குறிக்க பயன்படுகிறது. அப்படி பார்த்தால் மகன் என்று அராமிக்கில் வருவதெல்லாம் மதுக்கடைகளை குறிக்கும் என்று சொன்னால் ஏற்பார்களா?




Zebra runs fast என்றால் அதை நேரடி அர்த்தத்தை விட்டுவிட்டு, Zebra என்பதிலேயே bra என்று உள்ளது என்று கூறி அதற்கென்று கதை அளந்தால் சரிப்பட்டு வருமா?




தேவனை (אלהים) எலோஹீம் என்று ஆதி 1:1 இல் எழுதப்பட்டுள்ளது. அதேபோல் எலோவா (אלה) என அபக்கூக் 1:11 இல் எழுதப்பட்டுள்ளது. அராமிக்கில் எலாஹ் (אלה) என எஸ்ரா 5:1 இல் எழுதப்பட்டுள்ளது. . அதேபோல் சாபம் என்பதை ஆலா (אלה) என்று தான் சொல்வார்கள்-உபா29:20 . அதற்கும் ஒரே எழுத்துக்கள் தான் வருகிறது.


அப்படி பார்த்தால் தேவன் என்பது சாபத்தை வெளிப்படுத்துகிறது என்று சொன்னால் ஏற்பார்களா?


அதேபோல் சில ஏசாவின் வம்சத்தில் வரும் பிரபுவான ஏலா (אלה) என்பதற்கும் அதே எழுத்துக்கள் தான் வருகிறது.-ஆதி 36:41


இதுபோல் நிறைய உள்ளன.


ஆகவே இதுபோன்ற கதைகள் மடத்தனமானவை ஆகும். 




ஆகவே இதுபோன்ற மடத்தனமான வாதங்களை தவிருங்கள்.


-----

தொடர்2









அல்லாஹ் வழிதவறச்செய்கிறான் என்பதன் விளக்கம்

1.மனிதனுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது  --மனிதனுக்கு இறைவன் வழி காட்டியுள்ளான். ஒன்று அவன் நன்றியுள்ளவனாக இருக்கிறான் அல்லது காஃபிராக இருக்கிறான...