இடுகைகள்

டிசம்பர் 2, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பழைய ஏற்பாடு தேவனை எவ்வாறு சித்தரிக்கிறது பாகம் 2 (லேவியர்-எண்-உபாகமம்)

படம்
 பழைய ஏற்பாடு தேவனை எவ்வாறு சித்தரிக்கிறது?  பாகம் 2 லேவியர்-உபாகமம் ( பாகம் 1 ) 1.தான் படைத்ததையே அறியாதவர். குழிமுயலும், முயலும் வாயை அசைப்பதால், அது அசைபோடுவதாக நினைத்து , அவை அசைபோடும் மிருகம் என்கிறார்- லேவியராகமம் 11:5-6 2.பெண் பிள்ளையை இழிவாக பார்க்கிறார் ஆண்பிள்ளையினால் வரும் தீட்டின் இருமடங்கு பெண் பிள்ளையால் வரும் என்கிறார்-லேவியராகமம் 12:2-5 3.அங்கவீணனை இழிவுபடுத்துகிறார் தேவன். அங்கவீணன் பரிசுத்தஸ்தலத்தினுள் போனால் பரிசுத்தக்குளைச்சல் ஏற்படுமாம்.(லேவியராகமம் 21:23) 4.நரபலியையும் ஆதரிக்கிறார் தேவன். மனிதனை காணிக்கையாக நேர்ந்து கொடுத்தால், அந்த மனிதனை மீட்க முடியாதாம். அவனை கொல்லவே வேண்டுமாம்- லேவியராகமம் 27:28-29 அந்நிய தேவர்களுக்கு தான் நரபலி கொடுப்பதை தேவன் தடுத்துள்ளாரோ? தனக்கென வரும்போது நரபலி காணிக்கையையும் ஏற்கிறார் போலும் 😅. இவ்வாறே யெப்தா என்பவர் தன் மகளை தேவனுக்கு பலியாக கொடுத்தார்- நியாயதிபதிகள் 11:40 5.கர்த்தர் அடிக்கடி கோபப்படுகிறார் ஜனங்கள் முறையிட்டதால் கோபப்படுகிறார்- எண்ணாகமம் 11:1 ஜனங்கள் கூடார வாசலில் இறைச்சி வேண்டும் என அழுததால் மீண்டும் கர்த்தர...