சங்கீதம் 22:16 சிலுவையில் அறையப்படுவதை குறிக்குமா
சங்கீதம் 22:16 சிலுவையில் அறையப்படுவதை குறிக்கிறதா? -------------------------------------------------------------------------------- பொதுவாக ஆதிமுதலே கிறிஸ்தவர்கள் தம் நிலைப்பாட்டை சரி என காட்டுவதற்கு பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம் என வசனங்களை திரித்து காட்டுவது வாடிக்கையாகவே இருந்துவந்தது. அந்த வகையில் மூன்றாம் நான்காம் நூற்றாண்டு கண்டுபிடிப்பே சங்கீதம் 22:16 சிலுவையில் கையும் காலும் உருவக்குத்தப்படுவதை குறித்த தீர்க்கதரிசனம் என்பதாகும். இதை உப பிரிவுகளாக பிரித்து ஆராய்வோம். 1.புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களுக்கு இவ்வசனம் ஏன் தென்படவில்லை? ஆவி ஏன் இவ்வசனத்தை மேற்கோள் காட்ட உந்தவில்லை? 2.மூன்றாம் நான்காம் நூற்றாண்டு சபைப் பிதாக்கள் எப்படி இதை கண்டுபிடித்தனர்? அல்லது உண்டாக்கினர் 3.இதன் சரியான அர்த்தம் என்ன? 4.சில பிரதிகளில் "யொத்" எழுத்துக்கு பதிலாக "வாவ் " எழுத்து எழுதப்பட்டுள்ளதா? அதனால் இவர்களுக்கு சார்பாக இது அமையுமா? 5.ஒரு பேச்சுக்கு இவர்கள் சொல்லுவது போன்றே இருந்தால் கூட இயேசுவுக்கு பொருந்துமா? ******** 1.புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களுக்கு இவ்வசனம் ஏன் தென்படவில்லை? ஆ...