ஞாயிறு, 2 நவம்பர், 2025

சுவர்க்கமும் மதுவும் ஹூருல் ஈனும் வேலைக்கார சிறுவர்களும்

சுவர்க்கத்தின் மது

 சுவர்க்த்து மதுவில் போதையோ, தீங்கோ , தலைவலியோ இருக்காது (குர்ஆன் 37:47, 52:23, 56:19)


சிறுவர்கள் வேலைக்காரர்கள்

உலகத்தில் சிறுவர்களின் கல்வியுரிமை வேறு உரிமைகள் பறிக்கப்பட்டு எதிர்காலம் பாதிக்கப்படுவதால் சிறுவர்களிடம் வேலை வாங்குவது குற்றமாக பார்க்கப்படுகிறது.

ஆனால் சுவர்க்கத்திலோ அதற்கென்றே படைக்கப்பட்டவர்கள் அதை செய்வதால் எந்த பிரச்சனையும் இல்லை...

 உதாரணமாக ரோபோவை குறித்த வேலைக்கு நியமிப்பதால் அது குற்றம் என சொன்னால் எப்படி?.. 

இறைவனே உடலைக் கொடுத்து உயிரைக் கொடுத்து அதற்கான தெம்பையும் கொடுத்து வேலை செய்விப்பதை எப்படி விமர்சிக்க முடியும்

??

கண்ணழகிகள்

-கண்ணழகிகள் திருமணம் முடித்தே தரப்படுவார்கள் (குர்ஆன் 52:20, புகாரி 3254)

அதிலே அவர்களது அந்தரங்க உறுப்புகளை வர்ணித்து எதுவும் கூறப்படவில்லை

78:33 இலுள்ள "கவாயிப்" என்பது கூட முலைகள் முகிழ்ந்த வயதுள்ள பெண்களை குறிக்கும்அங்கே முலை வர்ணனை எதுவும் இல்லை. அதுவும் குறிப்பிட்ட வயது பெண்களுக்கு அவ்வார்த்தையை பாவிக்கும் வழக்கம் அவர்களிடம் இருந்தவொன்றே.

அதனையே இணைவைப்பாளர்கள் உஹதைவிட்டு திரும்பியபோது அவர்கள் கூறியதாக வருவதில்" நீங்கள் முகம்மதை கொல்லவும் இல்லை. கவாயிபை (78:33 இலுள்ள வாசகம்)- இளம்பெண்களை சிறைபிடிக்கவுமில்லை. நீங்கள் செய்தது மிகவும் கெட்டது" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது

(ولا محمدا قتلتم.

ولا الكواعب أردفتم

(சுனனுல் குப்ரா (இமாம் நஸாயீயுடையது) 11083,தபரானீ (11/247) 11632)

இப்படி இளவயது பெண்கள் மனைவியராக சுவர்க்கத்தில் கிடைப்பார்கள் என்று சொல்லப்படுகிறது . உணவு பானங்கள் ஓய்வு என்பதோடு ஆணுக்கு மிகவும் விருப்பமானது பெண் என்பதால் அவர்களையும் சுவர்க்கத்தில் கொடுப்பான்


-சுவர்க்கத்தில் சாப்பிடும் நேரத்தில் சாப்பிடுதல் குடிக்கும் நேரத்தில் குடித்தல் தாம்பத்ய நேரத்தில் தாம்பத்யத்தில் ஈடுபடல், இறைவனை துதிக்கும் நேரத்தில் இறைவனை துதித்தல் என அதற்கேற்றபடியே இருக்கும் (புகாரி 3245,3246)



வெறுமனே ஆன்மீகரீதியிலோ அல்லது வெறுமனே மாம்சரீதியிலோ சுவர்க்கம் இருக்காது.


 மாறாக இவ்வுலகில் நல்லோராக வாழ்ந்தோருக்கு இறைவனின் கூலி. அங்கே ஆன்மீக இன்பம் உடலியல் இன்பம் என இரண்டும் கலந்தே இருக்கும்.


ஒரு பெண்ணுக்கு பல ஆண்கள் கணவர்களாக கிடைப்பார்கள் என்பது தற்கால தற்குறிகளின் கருத்தேயாகும். ஹூருல்ஈன் என்போர் பெண்கள் மட்டுமே.. ஆண்களில் அப்படி இல்லை.. 

இவ்வுலகில் நல்ல கணவன் மனைவியாக இருந்தால் அதே பெண்ணுக்கு அதே நபர் கணவராக கிடைப்பார். அதனால் தான் நபிகளாரின் மனைவியர் சுவர்க்கத்திலும் அவரது மனைவியர் என கூறப்பட்டுள்ளது. இவ்வாறே நபித்தோழர்களும் புரிந்து கொண்டனர்.

இவ்வுலகில் விபச்சாரத்தை தடைசெய்த இறைவன் சுவர்க்கத்தில் அனுமதிக்கிறான் என கூறுவது இவர்களின் வேசித்தன ஆவியின் வெளிப்பாடு.. அத்தகையோர் பெண்கள் விசயத்தில் அசிங்கப்பட்டுப்போனார்கள் என்பது வரலாறு

ஒரே இரவில் நபிகளார் தம் அனைத்து மனைவியரிடமும் சென்றதும் கர்த்தரின் செயலும்

 -ஒரே இரவில் நபிகளார் அனைத்து மனைவியரிடமும் தாம்பத்யத்தில் ஈடுபடுவார்களா?



நபி(ஸல்) இரவில் அல்லது பகலில் தம் மனைவிகளிடம் வருபவர்களாக இருந்தார்கள். அப்போது 11 பேர் இருந்தனர் என அனஸ் (ர) கூறினார்கள். அப்போது அதற்கு நபிகளார் சக்திபெருவார்களா? என்று கேட்டதற்கு, நபி(ஸல்) அவர்களுக்கு முப்பது பேருடைய சக்தி கொடுக்கப்பட்டுள்ளது என நாம் பேசிக்கொள்வோம் என்றார்கள் -புகாரி 268


நபிகளாரிடம் 11 பெண்கள் இருந்த காலம் ஹிஜ்ரி 8-10 காலத்திலாகும். மாரியா ,ரைஹானா எனும் இரு வலக்கரம் சொந்தமானவர்களும் 9 மனைவியருமாக இருந்தனர்.


இது வழமையாக நடந்த ஒன்று அல்ல. மாறாக ஒரு நாள் நடந்ததொன்றே என அனஸ் (ர) அவர்களின் வேறொரு அறிவிப்பு கூறுகிறது:


ஒரு நாள் நபிகளார் அனைத்து மனைவியரிடமும் ஒரே குளிப்பில் சென்று வந்தார்கள் என அனஸ்(ர) கூறினார்கள் (அபூதாவூத் 218)


இது எப்போது நடந்தது என்றால் நபிகளார் இறுதி ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டுவதற்கு முந்திய இரவு நிகழ்ந்தது என்பதை அன்னை ஆயிஷா (ர) கூறுகிறார்கள்:


"நான் நபி(ஸல்) அவர்களுக்கு மணப்பொருட்களை பூசுவேன். அவர்கள் தம் மனைவியரிடம் சென்றுவிட்டு காலையில் இஹ்ராம் அணிந்தவர்களாக இருப்பார்கள். அவர்களிடமிருந்து நறுமணம் கமழும் என ஆயிஷா (ர) கூறுகிறார்கள்- புகாரி 267,270


அதாவது இஹ்ராம் அணிவதற்கு முன் தன் அனைத்து மனைவியருடனும் இல்லறத்தில் ஈடுபட்டார்கள்.


வழமையாக நடப்பது போன்று (كان يدور /كان يطوف ) என்று உள்ளதும் அந்த ஒரு நாளில் ஒரு தடவை நிகழ்ந்தது என்பதையே இங்கு (அபூதாவூத் 218 -طاف ذات يوم -ஒரு நாள் <மனைவியர் அனைவரிடமும்> வலம்வந்தார்) குறிக்கிறது. இதற்கு ஆதாரமாக புகாரி 267 இலும் அன்னை ஆயிஷா (ர) மணம் பூசிவிட்டதை குறிப்பிடுவதற்காகவும் (كنت أطيب) என்று இதே "كان" என்பதையே பாவித்திருக்கிறார்கள். ஆனால் அதுவும் ஒரு தடவை நடந்ததே என புகாரி 270 காட்டுகிறது (தமிழ் மொழிபெயர்ப்பில் சற்று தவறியுள்ளார்கள். அரபியில் (أنا طيبت-நான் மணம்பூசிவிட்டேன்") என்றே உள்ளது.


இது ஆபாசமா?- நிச்சயமாக இல்லை.. இக்காலத்தில் நீலப்பட (2சாமு12:11-12) கலாச்சாரத்தில் ஊறி இருப்பதால், உடலுறவு என்பதே நீலப்படம் என்று நினைத்து விடுகிறார்கள். உண்மையில் அது கணவனுக்கு மனைவி மீதும் மனைவிக்கு கணவன்மீதுமுள்ள உரிமை.. பல நாட்களுக்கு மீண்டும் தாம்பத்யத்தில் ஈடுபட கிடைக்காது என்பதால் அவர்களுக்குரிய உரிமையை நபிகளார் பூரணமாக நிறைவேற்றினார்கள். அது தவறு அல்ல... நீதி.


-வழமையாக எப்படி நடப்பார்கள்?


வழமையாக நபிகளார் அனைத்து மனைவியரிடமும் தினமும் வருவார்கள் என்றும் ஆனாலும் அவர்களை தீண்ட மாட்டார்கள் என்றும் இறுதியாக யாருடன் இரவு தங்கும் நாளுக்குரியதோ அவரோடே தாம்பத்யத்தில் ஈடுபடுவார்கள் என அன்னை ஆயிஷா (ர) கூறுகிறார்- அபூதாவூத் 2135


மனைவியரில் விரும்பியவர்களை (விரும்பும் காலம்) ஒதுக்கி வைக்கலாம் விரும்பியவர்களை (விரும்பும் காலம்) உங்களுடன் இருக்க வைக்கலாம் . நீங்கள் ஒதுக்கி வைத்தவர்களில் யாரை விரும்புகிறீர்களோ அவர்களை உங்களுடன் சேர்த்து கொள்ளலாம். இதனால் உங்கள் மீது குற்றம் ஏதுமில்லை (குர்ஆன் 33:51) இறங்கிய பின்பும், ஒரு மனைவியுடைய நாளில் மற்ற மனைவியிடம் செல்ல விரும்பினால், அந்நாளை விட்டுக்கொடுக்குமாறு அனுமதி கேட்பார்கள் என்கிறார் அன்னை ஆயிஷா (புகாரி 4789)


நபிகளாரிடம் ஒன்பது மனைவியர் இருந்த காலத்தில் ஒரு மனைவியிடம் சென்றால் மீண்டும் அவரிடம் செல்வதற்கு ஒன்பது நாட்கள் எடுக்கும். அதனால் அனைத்து மனைவியரும் அந்த நாளுக்குரிய மனைவியின் வீட்டில் இரவில் ஒன்று கூடுவர். ஆயிஷா (ர) அவர்களின் வீட்டில் ஸைனப் (ர) அவர்களை அன்னை ஆயிஷா என நினைத்து நபிகளார் அவரிடம் கையை நீட்டினார்கள். அப்போது அன்னை ஆயிஷா,"இவர் ஸைனப்" என்றார்கள். உடனே நபிகளார் கையை விலக்கிக் கொண்டார்கள்.. முஸ்லிம் 2898 (1462 ஆங்கில அரபு)


இதன்படி அந்த இரவுக்குரிய மனைவியல்லாதவரை தொடவும் மாட்டார்கள் என்று தெளிவாக காட்டுகிறது.


இது சம்பந்தமாக இன்னும் பல ஹதீஸ்கள் உள்ளன. 



ஆகவே தன் மனைவியரின் உரிமைகளை நீண்ட நாட்கள் கழித்தே கொடுக்கவேண்டிய நிலை இருக்கும்போது அனைவரிடமும் ஒரே இரவில் சென்று வந்தார்கள். அது அவர்களது நீதியை தான் காட்டுகிறது.


நீலப்பட (2 சாமுவேல் 12:11-12) ஆதிக்கத்தினால் இது ஆபாசமாக தென்படுகிறது:


தாவீதின் அனைத்து மனைவியரையும் ஒரே ஆணுக்கு சப்லை செய்து இஸ்ரவேலர் முன்பாக பட்டப்பகலில் உறவுகொள்ள வைப்பேன் என கர்த்தர் சொன்னது குறித்து வெட்கமே இல்லை:


2 சாமுவேல் 12:11-12 IRVTam

[11] யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன்னுடைய வீட்டிலே அழிவை உன்மேல் எழும்பச்செய்து, உன்னுடைய கண்கள் பார்க்க, உன்னுடைய மனைவிகளை எடுத்து, உன்னுடைய அயலானுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன்னுடைய மனைவிகளோடு உறவுகொள்வான். [12] நீ மறைவில் அதைச் செய்தாய்; நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர்கள் எல்லோருக்கும் முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்வேன் என்றார் என்று சொன்னான்.

https://bible.com/bible/1899/2sa.12.11-12.IRVTam 

அல்லாஹ் வழிதவறச்செய்கிறான் என்பதன் விளக்கம்

1.மனிதனுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது  --மனிதனுக்கு இறைவன் வழி காட்டியுள்ளான். ஒன்று அவன் நன்றியுள்ளவனாக இருக்கிறான் அல்லது காஃபிராக இருக்கிறான...