இடுகைகள்

நவம்பர் 2, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சுவர்க்கமும் மதுவும் ஹூருல் ஈனும் வேலைக்கார சிறுவர்களும்

சுவர்க்கத்தின் மது  சுவர்க்த்து மதுவில் போதையோ, தீங்கோ , தலைவலியோ இருக்காது (குர்ஆன் 37:47, 52:23, 56:19) சிறுவர்கள் வேலைக்காரர்கள் உலகத்தில் சிறுவர்களின் கல்வியுரிமை வேறு உரிமைகள் பறிக்கப்பட்டு எதிர்காலம் பாதிக்கப்படுவதால் சிறுவர்களிடம் வேலை வாங்குவது குற்றமாக பார்க்கப்படுகிறது. ஆனால் சுவர்க்கத்திலோ அதற்கென்றே படைக்கப்பட்டவர்கள் அதை செய்வதால் எந்த பிரச்சனையும் இல்லை...  உதாரணமாக ரோபோவை குறித்த வேலைக்கு நியமிப்பதால் அது குற்றம் என சொன்னால் எப்படி?..  இறைவனே உடலைக் கொடுத்து உயிரைக் கொடுத்து அதற்கான தெம்பையும் கொடுத்து வேலை செய்விப்பதை எப்படி விமர்சிக்க முடியும் ?? கண்ணழகிகள் -கண்ணழகிகள் திருமணம் முடித்தே தரப்படுவார்கள் (குர்ஆன் 52:20, புகாரி 3254) அதிலே அவர்களது அந்தரங்க உறுப்புகளை வர்ணித்து எதுவும் கூறப்படவில்லை 78:33 இலுள்ள " கவாயிப் " என்பது கூட முலைகள் முகிழ்ந்த வயதுள்ள பெண்களை குறிக்கும் .  அங்கே முலை வர்ணனை எதுவும் இல்லை . அதுவும் குறிப்பிட்ட வயது பெண்களுக்கு அவ்வார்த்தையை பாவிக்கும் வழக்கம் அவர்களிடம் இருந்தவொன்றே . அதனையே இணைவைப்பாளர்கள் உஹதைவிட்டு திரும்பியபோ...

ஒரே இரவில் நபிகளார் தம் அனைத்து மனைவியரிடமும் சென்றதும் கர்த்தரின் செயலும்

 - ஒரே இரவில் நபிகளார் அனைத்து மனைவியரிடமும் தாம்பத்யத்தில் ஈடுபடுவார்களா? நபி(ஸல்) இரவில் அல்லது பகலில் தம் மனைவிகளிடம் வருபவர்களாக இருந்தார்கள். அப்போது 11 பேர் இருந்தனர் என அனஸ் (ர) கூறினார்கள் . அப்போது அதற்கு நபிகளார் சக்திபெருவார்களா? என்று கேட்டதற்கு, நபி(ஸல்) அவர்களுக்கு முப்பது பேருடைய சக்தி கொடுக்கப்பட்டுள்ளது என நாம் பேசிக்கொள்வோம் என்றார்கள் -புகாரி 268 நபிகளாரிடம் 11 பெண்கள் இருந்த காலம் ஹிஜ்ரி 8-10 காலத்திலாகும். மாரியா ,ரைஹானா எனும் இரு வலக்கரம் சொந்தமானவர்களும் 9 மனைவியருமாக இருந்தனர். இது வழமையாக நடந்த ஒன்று அல்ல. மாறாக ஒரு நாள் நடந்ததொன்றே என அனஸ் (ர) அவர்களின் வேறொரு அறிவிப்பு கூறுகிறது: ஒரு நாள் நபிகளார் அனைத்து மனைவியரிடமும் ஒரே குளிப்பில் சென்று வந்தார்கள் என அனஸ்(ர) கூறினார்கள் (அபூதாவூத் 218) இது எப்போது நடந்தது என்றால் நபிகளார் இறுதி ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டுவதற்கு முந்திய இரவு நிகழ்ந்தது என்பதை அன்னை ஆயிஷா (ர) கூறுகிறார்கள் : " நான் நபி(ஸல்) அவர்களுக்கு மணப்பொருட்களை பூசுவேன். அவர்கள் தம் மனைவியரிடம் சென்றுவிட்டு காலையில் இஹ்ராம் அணிந்தவர்களாக இருப்பார்...