வியாழன், 17 ஜனவரி, 2019

அன்னை ஸைனப் உடனான நபிகளாரின் திருமணம் பாகம்2

அன்னை ஸைனப் உடனான நபிகளாரின் திருமணம் பாகம்2

-------------------------------------------------

முதல் பாகத்தை காண:

https://answeringchristian.blogspot.com/2019/01/1_17.html?m=1


ஸைனப் (ர) அவர்களுடன் நபியவர்களை சம்பந்தப்படுத்தி வரும் அறிவிப்புகளையும் அவற்றின் உண்மை தன்மையையும் காண்போம்:


1. முதலாவது அறிவிப்பு


இப்னு சஅத் அவர்களின் தபகாத் (8/101), இப்னு ஜரீர் அத் தபரீ அவர்களின் தாரீக் (3/161)

முஹம்மத் இப்னு யஹ்யா இப்னு ஹிப்பான் அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் இப்னு ஆமிர் அல்-அஸ்லமி கூற அவரிடமிருந்து முஹம்மத் இப்னு உமர் அல் வாகிதி அறிவிக்கிறார்:

"அல்லாஹ்வின் தூதர் ஸைதுடைய வீட்டுக்கு அவரை தேடி வந்தார்கள். அவர் முஹம்மதுடைய மகன் ஸைத் என சொல்லப்பட்டார்.ஸைதை காணாததால் அவர் எங்கே என கேட்பதற்கு அவருடைய வீட்டுக்கு அவரை தேடி வந்தார்கள் ஆனால் அவரை காணவில்லை. ஸைதுடைய மனைவியாகிய ஸைனப் அன்னாரை நோக்கி இரவுஆடையுடன் எழுந்துவந்தார். அல்லாஹ்வின் தூதர் தன் முகத்தை திருப்பிகொண்டார்கள். " அவர் இங்கு இல்லை அல்லாஹ்வின் தூதரே! உள்ளே வாருங்கள்" என ஸைனப் கூறினார். அல்லாஹ்வின் தூதர் நுழைய மறுத்துவிட்டார்கள். "அல்லாஹ்வின் தூதர் கதவருகே நிற்கிறார்" என ஸைனபுக்கு சொல்லப்பட்ட போது, அவர் அவசரமாக ஆடை அணிந்தார். அவசரத்தில் குதிக்க அல்லாஹ்வின் தூதரை ஈர்த்துவிட்டார். ஆகவே அல்லாஹ்வின் தூதர் திரும்பி சென்றபடி எதையோ முனுமுனுத்தார்கள். அவர் சொன்னது "மகத்தான அல்லாஹ் தூயவன், உள்ளங்களை திருப்புவன் தூயவன்" என கூறினார்கள்.

ஸைத் வீடு வந்தபோது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் வந்ததாக ஸைனப் கூறினார். "அவரை உள்ளே வர ஏன் கூப்பிடவில்லை?" என ஸைத் சொன்னார்.
"அவரை உள்ளேநுழைய நான் வேண்டினேன். அவர் மறுத்துவிட்டார்" என ஸைனப் கூறினார்.
"அவர் எதையாவது கூற நீ செவிமடுத்தாயா?" என ஸைத் கேட்டார்.

"அவர் திரும்பி செல்லும்போது மகத்தான அல்லாஹ் தூயவன், உள்ளங்களை திருப்புபவன் தூயவன் என கூற கேட்டேன்" என ஸைனப் பதில் அளித்தார்.

ஆகவே ஸைத் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் என் வீட்டுக்கு வந்ததாக கேள்விபட்டேன். நீங்கள் ஏன் உள்ளே நுழையவில்லை? ஸைனப் உங்களை ஈர்த்திருக்க கூடும். எனஙே அவளை நான் பிரிந்துவிடுகிறேன்" என கூறினார்.

"உம் மனைவியை உம்மிடமே நிறுத்திவைத்துகொள்" என அல்லாஹ்வின் தூதர் கூறினார்.

ஆனால் அந்த நாள் முதல் ஸைதுக்கு ஸைனபோடு வாழ முடியவில்லை. அவர் வந்து நபியிடம் வந்து பிரிந்துவிட அனுமதி கேட்பார். அல்லாஹ்வின்தூதர் "உம் மனைவியை உம்மிடம் நிறுத்திகொள்" என கூறிவருவார்கள். ஸைத் மீண்டும் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் "உம் மனைவியை உம்மிடம் வைத்துகொள்" என கூறினார்கள்.

ஆனால் ஸைத் விவாகரத்து செய்திவிட்டார். ஸைனபுடைய இத்தா காலம் முடிவடைந்தது.

அல்லாஹ்வின் தூதர் ஆயிஷாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது மயக்கம் அவரை ஆட்கொண்டது. பின் அதிலிருந்து தெளிந்தபோது , சிரித்துவிட்டு "ஸைனபை அல்லாஹ் எனக்கு திருமணம் முடித்து தந்துவிட்டான் என்ற நல்லசெய்தியை ஸைனபிடம் போய் சொல்பவர் யார்" என கூறினார்கள். பிறகு 33:37ஐ இறுதிவரை ஓதினார்கள்."

☝☝



🛑. இந்த அறிவிப்பு பற்றி பார்ப்போம்:

இது முர்ஸல் தரத்திலமைந்த பலவீனமான செய்தி ஆகும். ஏனெனில் இரண்டு அறிவிப்பாளர்கள் இதில் இல்லை.

இதை அறிவிப்பவரான ர முகம்மத் இப்னு யஹ்யா இப்னு ஹப்பான் என்பவர் இறந்தது ஹிஜ்ரி 121 இல் தன் 74வது வயதில் ஆகும்.

இதன்படி அவர் பிறந்தது, ஹிஜ்ரி 47 இல் ஆகும்.

ஆனால் இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட மூவரில் இறுதியாக இறந்தவர் ஸைனப் ஆவார். அவர் ஹிஜ்ரி 20இல் மரணித்துவிட்டார்.

இவர் மரணித்து 27 வருடங்களின் பின் பிறந்த ஒருவரே இச்செய்தியை கூறிகிறார்.
(தஹ்தீப் (9/507-509))

இரண்டாவது, இதில்வரும் அடுத்த அறிவிப்பாளரான
அப்துல்லாஹ் இப்னு ஆமிர் அல்-அஸ்லமி என்பாரை பற்றி இமாம் புகாரி "அவரது அறிவிப்பு புறக்கணிக்கப்பட வேண்டியது" என்கிறார். இமாம் அபூஹாதிம் "இவர் ஹதீஸ்துறையில் கைவிடப்பட்டவர்" என கூறுகிறார்
(தஹ்தீப் 5/275, மீஸானுல் இஃதிதால் 2/448)

அடுத்த அறிவிப்பாளர் முகம்மத் இப்னு உமர் அல்-வாகிதி என்பவர். இவரை பற்றி சில அறிஞர்கள் பொய்யர் எனவும் ஹதீஸ்களை இட்டுகட்டுபவர் என கூறியிருக்கிறார்கள்.
(மீஸானுல் இஃதிதால் 3/664)

எனவே இதை ஆதாரமாக கருதவே முடியாது.

இனி அடுத்த அறிவிப்பை பார்ப்போம்.






2. இரண்டாவது அறிவிப்பு:


இது இப்னு ஜரீர் அத்-தபரீயின் தஃப்சீர் (22/13) குறிப்பிடுகிறார்.

இப்னு ஸைத் கூறியதாக இப்னு வஹப் கூறியதை யூனுஸ் என்னிடம் சொன்னார்.

"அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஸைத் இப்னு ஹாரிஸாவுக்கு தன் மாமியின் மகளான ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களை திருமணம் முடித்து வைத்தார்கள்.

ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் ஸைதை தேடி புறப்பட்டார்கள்.


   அங்கு வாசலில் உரோமங்களாலான துணியால் திரைச்சீலை இடப்பட்டிருந்தது. ஆனால் காற்று திரைச்சீலையை உயர்த்திவிட்டது. இதனால் ஸைனப் தன் அறையில் ஆடையின்றி/தலையை மூடாமல் இருப்பதை வெளிப்படுத்தியது. இதனால் அல்லாஹ்வின் தூதரின் உள்ளம் ஈர்க்கப்பட்டது. அதன்பிறகு ஸைனப் மற்றவரை (ஸைதை) வெறுத்தார். ஸைத் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து: "அல்லாஹ்வின் தூதரே! என் மனைவியை பிரிந்துவிட விரும்புகிறேன்" என கூறினார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் : "உனக்கு என்ன நேர்ந்தது? ....... உன் மனைவியை உன்னிடமே வைத்துகொள் அல்லாஹ்வை பயந்துகொள்" என கூறினார்கள். அப்போது அல்லாஹ் 33:37ஐ இறக்கிவைத்தான்.

"அல்லாஹ் எவருக்கு அருள்புரிந்து, நீரும் எவருக்கு உபகாரம் செய்தீரோ அவரிடம் " உம் மனைவியை உம்மிடமே நிறுத்திகொள்ளும், இன்னும் அல்லாஹ்வை பயநுகொள்ளும்" என்று நீர் கூறியபோது, அல்லாஹ் வெளியாக்க இருந்ததை நீர் உம் மனதில் மறைத்தீர்." அதாவது நீ அவளை பிரிந்துவிட்டால் நான் மணந்துகொள்வளன் என்பதை உள்ளத்தில் மறைத்தீர்"



 🛑. இந்த அறவிப்பை பற்றி பார்ப்போம்:

முதலாவது இதிலும் அறிவிப்பாளர்கள் விடப்பட்ட பலவீனமான செய்தி ஆகும். இதை அறிவிப்பவர் இப்னு ஸைத் என்பவர். இவர் நபித்தோழரோ அதனை தொடர்ந்தவரோ இல்லை. இவர் மரணித்தது ஹிஜ்ரி 182 இல் ஆகும். இதனால் இவர் மிக பிந்தியவர்.

இரண்டாவது இந்த அறிவிப்பாளரை பொருத்தமட்டில் ஹதீஸ்துறை அறிஞர்கள் இவரை மிக பலவீனமானவர் என கூறியுள்ளார்கள். சில அறிஞர்கள் இவரது அறிவிப்புகள் அனைத்தும் கைவிடப்படவேண்டியவை என்கிறார்கள்.

இமாம் புகாரி மற்றும் இமாம் அபூஹாதிம் கூறுகிறார்கள: அலீ இப்னுல் மதீனீ அவரை (இப்னு ஸைதை) மிக பலவீனமானவராக கருதினார். சாஃபியிடமிருந்து அவர் கூறியதாக அறிவிக்கபடுவதாவது:

 அப்துர்ரஹ்மான் இப்னு ஸைத் இப்னு அஸ்லம் இவ்வாறு கேட்கப்பட்டார், " நூஹுடைய கப்பல் கஃபாவை தவாஃப் செய்து இரண்டு ரக்அத்துகள் மகாமு இப்ராஹீமில் தொழுததாக முகம்மது நபி கூறியதாக உம்முடைய பாட்டனாரிடமிருந்து உம் தந்தை உம்மிடம் சொன்னாரா?" என கேட்கப்பட்டது.

அதற்கு அவர் "ஆம்" என பதிலளித்தார்.
(தஹ்தீப் 6/178)

இந்த வசனத்துக்கு இவர் கொடுப்பது அவரது சொந்த விளக்கமே தவிர வேறொன்றுமில்லை.

எப்படி நூஹுடைய கப்பல் கஃபாவை வலம்வந்து இரண்டு ரக்அத் தொழுதது என்பது போல.

இது ஆதாரமன்று


 3.மூன்றாவது அறிவிப்பு:.


முஸ்னத் அஹ்மத் 3/149-150

அனஸ் (ர) கூறியதாக ஹம்மாத் இப்னு ஸைத் கூறியதாக முஅம்மல் இப்னு இஸ்மாயீல் எம்மிடம் கூறினார்:

அல்லாஹ்வின் தூதர் ஸைதுடைய வீட்டுக்கு வந்தார் அவருடைய மனைவி ஸைனபை கண்டார்கள்
அவர் வீட்டினுள் நுழைந்தபடி (இது ஹம்மாதின் கருத்தா அல்லது ஹதீஸிலுள்ளதா என நான் அறியமாட்டேன்).

அப்போது ஸைத் அல்லாஹ்வின் தூதரிடம் ஸைனபை பற்றி முறையிட வந்தார். ஆனால் அல்லாஹ்வின் தூதர், "உம் மனைவியை உம்மிடமே நிறுத்திகொள் அல்லாஹ்வை பயந்துகொள்" என கூறினார்கள். அப்போது "அல்லாஹ் வெளியாக்க இருந்ததை நீர் மறைத்தீர்" என்ற வசனம் "அவளை (ஸைனபை) உமக்கு திருமணம் முடித்து தந்தோம்" வரைக்கும் இறங்கியது.


 🛑. இந்த அறிவிப்பு பற்றி:

இதை அறிவிக்கும் முஅம்மல் இப்னு இஸ்மாயீல் என்பவர் அநேக அறிஞர்களால் பலவீனமானவர் என கூறப்பட்டவர்.
(தஹ்தீப் 10/381)

மேலும் இந்த அறிவிப்பானது புகாரி 7420, திர்மிதி 3212, நஸாயீ 3251 ஆகிய அறிவிப்புகளுக்கு முரணாக உள்ளது.

அவற்றில் 33:37 இன் ஆரம்ப பகுதி ஸைத் முறையிட வந்தபோது எனவும், அடுத்த பகுதி இத்தா காலம் முடிந்த பின்பு இறங்கியது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

எனவே இதுவும் ஏற்றுகொள்ள முடியாத செய்தியே... ஆனாலும் இதில் பாரதூரமான அவதூறு இல்லை



 4.நான்காவது அறிவிப்பு:


இப்னு ஜரீர் அத்- தபரீ தனது தஃப்சீரில் (22/13) கூறுகிறார்.

கதாதாவிடமிருந்து சஈத் அறிவித்ததாக யஸீத் நம்மிடம் சொன்னதாக பிஷ்ர் எம்மிடம் சொன்னார்:

"யாருக்கு அல்லாஹ் அருள்புரிந்து"- அதாவது ஸைதுக்கு இஸ்லாத்தினால் அருள் புரிந்து

"நீரும் யாருக்கு அருள்புரிந்தீரோ'- அதாவது யார் முகம்மது நபியால் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டாரோ,

"உம் மனைவியை உம்மிடம் வைத்துகொள்! அல்லாஹ்வை பயந்துகொள்!"
அல்லாஹ்வின் தூதர் அவ்விருவரும் பிரிந்திவிட வேண்டும் என விரும்பினார்.

ஹசன் கூறினார்: "அல்லாஹ் வெளியாக்க இருந்ததை நீர் உம் மனதில் மறைத்தீர்" என்ற வசனத்தைவிட நபியவர்களுக்கு கடுமையான வசனம் இருந்ததில்லை. அவர் வஹியில் எதையேனும் மறைப்பதாக இருந்தால் இதை மறைத்திருப்பார்.

"நீர் மனிதர்களுக்கு பயந்தீர். ஆனால் அல்லாஹ்வே நீர் பயப்பட மிகவும் தகுதியானவன்" - அல்லாஹ்வின் தூதர் , மக்கள் என்ன கூறுவார்களோ என பயந்தார்கள்.

இந்த கதையை கதாதாவிடமிருந்து மஃமர் வழியாக அப்துர்-ராசிக் அறிவிக்கிறார்:

ஸைத் வந்து "அல்லாஹ்வின் தூதரே! ஸைனபுடைய நாவு என்னோடு மிக கடுமையாக உள்ளது. அவரை பிரிந்துவிட நான் விரும்புகிறேன்" என கூறினார்.

ஆனால் அல்லாஹ்வின் தூதர், "அல்லாஹ்வை பயந்துகொள்! உம் மனைவியை உன்னிடமே நிறுத்திகொள்" என கூறினார்கள். அதேநேரம் அவர்கள் பிரிந்துவிடுவதை விரும்பினார்கள். ஆனால் மனிதர்கள் என்ன பேசுவார்கள் என்பதை பயந்தார்கள்"
(பத்ஹுல் பாரி 8/524)

கதாதா என்ப்பவர் தஃப்சீருக்காக அறியப்பட்ட இமாம். இது அவருடைய சொந்த விளக்கம்.

இவரை பற்றி இமாம் சஅபி கூறுகிறார்.
கதாதா (ஆதாரபூரவமானதையும் ஆதாரபூர்வமற்றதையும்) வேறுபிரித்து அறியமுடியாதவர்.

அபூஉமர் இப்னுல் அலா இவரைபற்றி கூறுகறார.:

 கதாதாவும் அம்ர் இப்னு சுஐபும் அனைவரிடமிருந்தும் அறிவிப்புகளை எடுப்பவர்களாக இருந்தனர். எதையும் தவறானதாக அவர்கள் கருதியதில்லை.
(தஹ்தீப் 8/301-305)

இதில் தவறான எதுவும் நினைக்க இல்லை.

ஸைத் ஸைனபை பிரிந்துவிடுவதை தன்னிடம் கேட்காமல் செய்துவிடுவதையே முகம்மது நபி விரும்பினார். ஏனெனில் ஸைத் ஸைனபை விவாகரத்து செய்துவிடுவார் என அவர் இறைவன் புறத்திலிருந்து அறிந்திருந்தார். இதனால் விவாகரத்து நடப்பதானால் தன்னிடம் கேட்காமலே நடந்துவிட வேண்டும் என விரும்பினார்.

ஆனால் தன்னிடம் அவர் ஆலோசனை கூறியபோது அவ்வாறு செய்துவிட வேண்டாம் என கூறினார்கள்.



 5. ஐந்தாவது அறிவிப்பு:


இப்னு இஸ்ஹாக், ஸீரா அந்நபவிய்யா 283

சஃஅபி கூறியதாக அவரது விடுதலைசெய்யப்பட்ட அடிமை அபூசலமா அல் ஹம்தானியிடமிருந்து யூனுஸ் இப்னு புகைர் அறிவிக்கிறார்:

"ஸைத் சுகயீனப்பட்டார். அல்லாஹ்வின் தூதர் அவரை பார்க்க சென்றார்கள். அப்போது ஸைனப் சைதுடைய தலைமாட்டில் அமர்ந்திருந்தார். ஸைனப் எழுந்தபோது, அல்லாஹ்வின் தூதர் ஸைனபை பார்த்தார்கள். தன் தலையை பணித்துக்கொண்டு ," உள்ளங்களையும் பார்வைகளையும் புரட்டும் அல்லாஹ் தூய்மையானவன்" என கூறினார்கள்.
உடனே ஸைத் "அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்காக அவரை விவாகரத்து செய்துவிடவா?" என கேட்டார்.
உடனே அல்லாஹ்வின் தூதர்: "வேண்டாம்" என கூறினார்கள். அப்போது அல்லாஹ் "எவருக்கு அல்லாஹ் அருள்புரிந்து நீரும் அருள்புரிந்தீரோ அவரிடம் நீர் கூறியபோது" முதல் "அல்லாஹ்வின் கட்டளை நடைபெற்றுதீரவேண்டியதே" வரைக்கும் இறக்கினான்."
இப்னு இஸ்ஹாக்

இதை அறிவிக்கும் சஅபீ ஹிஜ்ரி 21இல் பிறந்தவர். ஆனால் அம்மூவருமோ அவர் பிறக்க முன்பே மரணித்துவிட்டனர். மேலும் இவரும் ஒரு பலவீனமான அறிவிப்பாளரே.
(அபூஸுர்ஆ, அல் ளுஅஃபா (மதீனா பல்கலைகழகம் 1982) பாகம் 2, பக்கம் 432; இப்னு அதீயினுடைய அல்காமில் ஃபிள் ளுஅஃபா பாகம்:4 பக்கம் 333, இலக்கம் 775; இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்களின் அள்-ளுஅஃபா வல்-மத்ரூகீன், பாகம் 2, 12 இலக்கம் 1493; இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானியின் லிஸானுல் மீஸான் பாகம் 3, பக்கம் 112)



 6.ஆறாவது அறிவிப்பு:


தபரானியில் வரும் செய்தி

முகம்மத் இப்னு அப்துல்லாஹ் அல்ஹள்ரமி- அல்ஹசன் பின் அலி அல்ஹுல்வானி- முகம்மத் இப்னு காலித் பின் அஸ்மா- மூஸா இப்னு யஃகூப்- அப்துர்ரஹ்மான் இப்னுல் முனீப்- அபூபக்ர் இப்னு சுலைமான் இப்னு அபூஹஸ்மா:

"அல்லாஹ்வின் தூதர் ஸைதுடைய வீட்டுக்கு சென்று உள்ளே நுழைவதற்கு அனுமதி கேட்டார்கள். ஸைனப் அவருக்கு அனுமதியளித்தார். அவர் முக்காடு அணிந்திருக்கவில்லை. எனவே அவரது ஆடையொன்றை தலையில் போட்டுகொண்டார். அல்லாஹ்வின் தூதர் ஸைதை பற்றி கேட்டார்கள். அதற்கு அவர்: " சற்றுமுன்பு அவன் சென்றார் அல்லாஹ்வின் தூதரே! " என்றார்.
அல்லாஹ்வின் தூதர் எதையோ முணுமுணுத்தபடி போவதற்கு எழுந்தார்.
ஸைனப் சொல்கிறார்: "நான் அவர் சொல்வதை செவிமடுக்க பின்தொடர்ந்து சென்றேன். அவர் "உள்ளங்களை திருப்பக்கூடியவன் பாக்கியம்பொருந்தியவன்" என மறையும்வரை கூறிகொண்டே இருந்தார்.
(தபரானி)

இதை கூறும் அபூபக்ர் பின் சுலைமான் பின் அபூஹஸ்மா என்பவர் தாபீயீன்களில் பிற்காலத்தவர். அவரிடமிருந்து அறிவிக்கும் அப்துர்ரஹ்மான் இப்னுல் முனீப் என்பவர் யாரென்றே அறியப்படாதவர்.

அவருக்கு பின்னுள்ள அறிவிப்பாளரான மூஸா இப்னு யஃகூபுக்கு அறியப்படாத ஆசிரியர்கள் இருந்தனர் என அப்துர்ரஹ்மான் இப்னுல் மஹ்தி கூறுகிறார்.
(தஹ்தீபுல் கமால்-அல்மிஸ்ஸி , பாகம் 29 பக்கம் 172)

இந்த மூஸா இப்னு யஃகூப் என்பவர் கூட மனனத்தன்மை குறைபாடுடையவர் என விமர்சிக்கப்பட்டுள்ளார். (இப்னு ஹஜர் அஸ்கலானியின் தக்ரீபுத் தஹ்தீப் )

எனவே இது பலவீனமான செய்தி ஆகும். இதை கூறுபவர் கூட ஸைனப் அவர்களையோ ஸைத் அவர்களையோ சந்தித்தவரல்ல..

எனவே
இதுவும் தவறான தகவல் ஆகும்.





 7. ஏழாவது அறிவிப்பு:


யஹ்யா இப்னு ஸலாம் தன் தஃப்சீரில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

அல்கல்பீ கூறினார்:
அல்லாஹ்வின் தூதர் ஸைனபை சந்திக்க வந்தார்கள். அவர் நின்றிருப்பதை பார்க்கவே அவர் அன்னாரை ஈர்த்துவிட்டார். ஆகவே அல்லாஹ்வின் தூதர், "உள்ளங்களை புரட்டக்கூடிய அல்லாஹ் தூயவன்" என கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸைனபை விரும்புகிறார் என்பதை கண்ட ஸைத் , "அல்லாஹ்வின் தூதரே! அவரை விவாகரத்து செய்துவிட என்னை அனுமதியுங்கள்" என கூறினார்.

அதற்கு அல்லாஹ்வின்தூதர் அவரிடம் ,"அல்லாஹ்வ பயந்துகொள்! உன் மனைவியை உன்னிடமே வைத்துகொள்" என கூறினார்கள்.

ஆகவே அவரும் அல்லாஹ்நாடியவாறு தன் மனைவியை வைத்துக்கொண்டு பிறகு விவாகரத்து செய்துவிட்டார். அவருடைய இத்தா காலம் முடிந்த பின் அல்லாஹ் அவரது திருமணத்தை தன் தூதருடன் வானத்திலிருந்து இறக்கிவைத்தான்.
(யஹ்யா இப்னு ஸலாமுடைய தஃப்சீர், பாகம் 2, பக்கம் 721-722)

இதை அறிவிக்கும் அல்கல்பீ என்பவர் ஹிஜ்ரி 146 இல் மரணித்தவர். அவர் தான் யாரிடமிருந்து இதை கேட்டேன் என்பதை சொல்லவுமில்லை.

அதுமட்டுமின்றி அவர் ஹதீஸ்துறையில் நிராகரிக்கப்பட்ட அறிவிப்பாளர் ஆவார்.
(சியாருல் ஆலம் அந்நுபலா- தஹபி பாகம் 6 பக்கம் 248-249)

எனவே இதுவும் ஆதாரமற்ற தவறான செய்தி ஆகும்






 8.எட்டாவது அறிவிப்பு:


முகாதில் இப்னு சுலைமானின் அறிவிப்பு

ஸைனபை பற்றி ஸைத் அல்லாஹ்வின் தூதரிடம் முறையிட்டார். அல்லாஹ்வின் தூதர் வந்து ஸைனபுக்கு அறிவுரை கூறினார்கள். ஸைனபோடு பேசியபோது ஸைனபீன் அழகு அவரை ஈர்த்துவிட்டது. அது அல்லாஹ் விதித்தபடி நடந்தது. பின்பு அல்லாஹ்வின் தூதர் திரும்பிவந்துவிட்டார்கள். அல்லாஹ் நாடியது அவருடைய நினைப்பில் இருந்தது. அதன்பின்பு, அல்லாஹ்வின்தூதர் ஸைதிடம் "அவர் உன்னுடன் எப்படி நடந்துகொள்கிறார்" என கேட்டார்கள்.
அவரோ தன் மனைவியை பற்றி முறையிடலானார். ஆகவே அல்லாஹ்வின் தூதர் "அல்லாஹ்வை பயந்துகொள்! உம் மனைவியை உம்மிடமே வைத்துகொள்" என கூறினார்கள் ஆனால் அவரது உள்ளத்திலோ அதுவல்லாததே இருந்தது. .... அதன்பின் அல்லாஹ்வின் தூதர் ஸைதிடம் வந்து ஸைனப் நின்றிருப்பதை பார்த்தார்கள். அவர் அழகானவராகவும் மிகசிறந்த குறைசிய பெண்களில் வெண்மையானவராகவும் அவர் இருந்தார். அவரை அல்லாஹ்வின் தூதர் விரும்பினார்கள். ஆகவே அவர்கள் "உள்ளங்களை புரட்டக்கூடிய அல்லாஹ் தூயவன்" என கூறினார்கள். ஸைத் இதை உணர்ந்து , "அல்லாஹ்வின் தூதரே! என்னை விவாகரத்து செய்துவிட அனுமதியுங்கள். இவர் என்னுடன் கர்வமாக நடக்கிறார் அவரது பேச்சுகளால் என்னை துன்புருத்துகிறார்" என ஸைத் கூறினார். அல்லாஹ்வின்தூதர் "உம் மனைவியை உம்மிடமே வைத்துகொள்ளும். அல்லாஹ்வை பயந்துகொள்ளும்!" என கூறினார்கள். அதன்பிறகும் ஸைத் அவரை விவாகரத்து செய்துவிட்டார்."
(முகாதில் இப்னு சுலைமானின் தஃப்சீர் பாகம் 3 , பக்கம் 492-494)

இதிலுள்ள பிரச்சினை:

இதை கூறுபவர் முகாதில் இப்னு சுலைமான். இவர் இறந்தது ஹிஜ்ரி 150 இல் ஆகும். இவர் இங்கு எந்த அறிவிப்பாளர் வரிசையையும் குறிப்பிடவில்லை. எனவே இது தொடர்பு அறுந்த செய்தி.

இவர் விளக்கமுள்ளவராக இருந்தாலும், இவரது அறிவிப்புகளை நிராகரிப்பதில் அறிஞர்கள் ஒன்றுபட்டுள்ளார்கள் என இமாம் தஹபி சொல்கிறார்.
(இமாம் தஹபியிடைய , சியருல் ஆலம் அந்நுபலா பாகம் 7 பக்கம் 202)


 எனவே இதுவும் பலவீனமான தவறான செய்தி ஆகும்

 ******************************************************************
எனவே இந்த அத்தனை செய்திகளும் அறிவிப்பாளர் வரிசைரீதியாக மிகவும் பலவீனமானவைகள்.

இனி இதன் உள்ளடக்கத்திலுள்ள குழப்பங்களை காண்போம்
*****************************************************************************************************************************


   இந்த அறிவிப்புகளின் உள்ளடக்கத்திலுள்ள குளருபடிகளை காண்போம்:




1.முரண்பாடுகள்:

I. நபியவர்கள் ஸைதுடைய வீட்டுக்கு ஏன் வந்தார்கள் என்பதில் முரண்பாடு:

*ஸைதை காணாததால் பார்க்கவந்ததாக 1வது மற்றும் 2வது செய்திகள் கூறுகின்றன.

*ஸைனபுக்கு உபதேசம் செய்ய வந்ததாக 7வது மற்றும் 8வது அறிவிப்புகள் கூறுகின்றன.

*ஸைதுக்கு சுகயீனம் காரணமாக நலம் விசாரிக்க வந்தார்கள் என 5வது அறிவிப்பு சொல்கிறது

II. நபியவர்கள் வந்தபோது ஸைனபை கண்டபோது ஸைத் இருந்தாரா இல்லையா என்பதில் முரண்பாடு:

*ஸைத் வீட்டிலிருக்கவில்லை என 1வதும் ,2வது, 6வது அறிவிப்புகள் கூறுகின்றன.

*வீட்டில் ஸைத் இருந்ததாகவும் நபியவர்கள் நுழைந்தவுடன் ஸைனபை பற்றி முறையிட அவர் வந்தார் என 3வது அறிவிப்பும்,
ஸைது சுகயீனமாக வீட்டில் இருந்ததாகவும் ஸைனப் அவரது தலைமாட்டில் இருந்ததாகவும் 5வது அறிவிப்பு கூறுகிறது.

III. ஸைனபை எப்படி எந்த நிலையில் பார்த்தார் என்பதில் முரண்பாடு:

*வீட்டில் இரவுஆடையுடன் இருக்க அவர் துள்ளியது ஈர்த்துவிட்டது என 1வது அறிவிப்பும்

*திரைச்சீலை காற்றினால் விலகியதால், ஸைனப் ஆடையின்றி இருந்ததை கண்டு ஈர்க்கப்பட்டார் என 2வது அறிவிப்பு கூறுகிறது.

*ஸைத் சுகயீனமாக இருந்தபோது ஸைதுக்கு தலைமாட்டில் அமர்ந்திருந்த ஸைனப் எழுந்தபோது பார்த்தால் ஈர்க்கப்பட்டார்கள் என 5வது அறிவிப்பு கூறுகிறது.

*முக்காடு இல்லாமல் பார்த்தால் ஈர்க்கப்பட்டார்கள் என 6வது அறிவிப்பு கூறுகிறது.

*ஸைனபை பார்த்து உபதேசிக்க வந்தபோது, அவரை பார்த்து ஈர்க்கப்பட்டார் என 7வது மற்றும் 8வது அறிவிப்புகள் கூறுகின்றன.


இதுவல்லாமலும் இதில் முரண்பாடுகள் உள்ளன. உதாரணமாக நபியவர்கள் என்ன கூறினார்கள்? செவிமடுத்தது ஸைதா ஸைனபா?  வஹி எப்போது வந்தது என சகலதிலும் முரண்

 எனவே இது சாத்தியமல்லாத ஒன்று.





2. இந்த எட்டுஅறிவிப்புகளில் 3வதை தவிர மற்ற அனைத்தும் ஸைனபை முகம்மது நபி பார்த்தபோது விரும்பினார் என்பதில் உடன்படுகிறது. ஆனாலும் இவர்கள் கூறும் இந்த காதல் மிகவும் பிந்தியே (ஸைனப் திருமணம் முடித்தபின்னால்) ஏற்படத்தாக கூறுவது அபத்தமானது.

ஏனெனில் ஸைனப் பிறந்து வளர்ந்தது நபியவர்களுக்கு மத்தியில் தான். அந்த காலத்தில் அவரது அழகை ஸைதுக்கு திருமணம் முடித்து வைக்கும்வரை அவர்கள் அறியாமல் இருப்பார்களா?

எந்தளவுக்கெனில் ஸைனபிடம் ஸைதுக்காக போய் திருமணம் பேசியதே முகம்மது நபி தான். 

முக்காடு அணிவது கடமையாக்கப்பட்டிருக்காத காலத்திலிருந்தே ஸைனபை கண்டுதான் உள்ளார்கள். எனவே முக்காட்டுடனும் முக்காடு இல்லாமலும் அவரை பார்த்தே உள்ளார்கள். இவர்கள் கூறும் காதல் எனும் கதை  உண்மையானதாக இருந்திருந்தால், ஸைதுக்கு திருமணம் செய்து கொடுக்க முன்பே முடித்திருப்பாரே! தன் சொந்த மாமியின் (தந்தையின் சகோதரியின்) மகளை பற்றி அவருக்கு தெரியாமலா இருந்திருக்கும்???





3.இந்த அறிவிப்புகள் கூறுவதுபோல நபியவர்கள் ஸைனபை பார்த்தால் ஈர்ப்பு ஏற்பட்டதை ஒரு பேச்சுக்கு உண்மையென கருதினால்,அதுவும் விமர்சனத்திற்குரியது அல்ல.. ஈர்ப்பு ஏற்பட காரணம் ஹோர்மோன்களே. அது மனித கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. அப்போது கூட முகம்மது நபி செய்ததை போல அப்படி ஈர்க்கப்பட்டவரால் நடந்துகொள்ள முடியுமா? அதாவது தலையை பணித்துகொண்டோ அல்லது அன்னார் கூறியதைபோன்று கூறவோ அப்படிப்பட்டவர்களால் முடியுமா?

 அதாவது மிகவும் கண்ணியமாகவே நடந்ததாக தான் உள்ளன.






 4.இந்த அறிவிப்புகள் அறிவிப்பாளர் வரிசையிலும், உள்ளடக்கத்திலும் உள்ள குறைகள் தெளிவான பின்னாலும் இவற்றை ஏன் பயன்படுத்தவேண்டும்??

நபியவர்களின் உள்ளத்தில் மறைத்திருந்தது "ஸைது தன் மனைவியை விவாகரத்து செய்வார். அதன்பின் நான் முடிப்பேன்" என முன்கூட்டியே இறைவனால் அறிவித்து கொடுக்கப்பட்டது தான் என சாதாரணமாக சிந்தித்தாலும் புரிந்துவிடகூடியதாகவே உள்ளது.



இந்த திருமணத்தை இறைவன் நிறைவேற்றியதற்கு காரணத்தை 33 :37 தெளிவாக சொல்கிறது.


-----------------------------------------------------

முடிவு:

1.நபியவர்கள் தம் உள்ளத்தில் மறைத்து வைத்திருந்தது எதையெனில், அல்லாஹ் அவர்கள் மீது கடமையாக்கிய/விதியாக்கிய இத்திருமணத்தை ஆகும்.

2.இதை மக்கள் குற்றமாக கருதுவார்கள் என்பதால், அல்லாஹ் விதியாக்கியதை செயவதில் எந்த குற்றமும் இல்லை என இறைவன் சொல்கிறான்.
மக்கள் இவ்வாறு குற்றமாக கருதுவதையே நபியவர்கள் பயந்தார்கள்.

3.இத்திருமணத்தை இறைவன் கடமையாக்க முன்பு ஜைதுக்கு ஸைனபை திருமணம் செய்ய வைத்தான். 

4.ஸைத் தன் விருப்பத்தின் படியே தன் மனைவியை விவாகரத்து செய்தார். நபிகளாரின் ஆலோசனையை எடுக்கவில்லை (திர்மிதீ 3212)


5.தன் முன்னாள் மனைவி மீது ஸைதுக்கு ஈர்ப்பு இல்லாத நிலையிலேயே அவரை அனுப்பியே நபிகளார் தனக்கு திருமணம் பேசினார் (முஸ்லிம் 2798)

6.அவர் தலாக் செய்த பின் நபிகளாருக்கு திருமணம் செய்துவைத்தான். காரணம்,
"விசுவாசிகளால் வளர்க்கப்பட்டவர்கள் தம் மனைவியரை விவாகரத்து செய்தால், அந்த விவாகரத்து செய்யப்பட்ட பெண்களை வளர்த்த விசுவாசிகளுக்கு முடிப்பதில் எந்த குற்றமும் இருக்காது" என்பதை நிகழ்த்தி காட்டுவதற்கு ஆகும் என்பதை 33:37 சொல்கிறது.

ஏனெனில் சொந்த மகன்களினால் விவாகரத்து செய்யப்பட்டால் ,விவாகரத்து செய்யப்பட்டோரை திருமணம் முடிப்பது அவர்களின் பெற்றோரான வளர்த்தவர்களுக்கு பெரும் குற்றம்(குர்ஆன் 4:23). 

இதேபோன்று வளர்க்கப்பட்டோருக்கு வராது என்பதை நிகழ்த்தி காட்டுவதற்கு ஆகும்.


7..நபியவர்கள் தம் வசதிக்காக இதை இட்டுகட்டியிருக்க முடியாது. ஏனெனில் இந்த வசனங்களே அவருக்கு மிகவும் கஷ்டமானதாக இருந்தன. குர்ஆனில் எதையாவதை மறைப்பதாக இருந்திருந்தால் , இந்த 33:37 வசனத்தை மறைத்திருப்பார்கள் என நபித்தோழர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி 7420


அன்னை ஸைனப் உடனான நபிகளாரின் திருமணம் பாகம்1

அன்னை ஸைனப் அவர்களுடன் நபிகளாரின் திருமணம் பாகம்1


ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களுடனான முகம்மது நபி (ஸல்) அவர்களின் திருமணம் - ஒரு சிறு அலசல்
-------------------------------------------------------------------------------

நபி(ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களை திருமணம் செய்ததை பற்றி சில கருத்துக்கள் சில தஃப்சீர்களில் காணக்கிடைக்கின்றன. அந்த கதைகளை விரிவாக அடுத்த பாகத்தில் காணலாம்



இந்த திருமணத்தின் உண்மை நிகழ்வு என்ன❓ என்று இதில் பார்ப்போம்.

1.யார் ஸைத் (ர) ? :


இவர் அடிமையாக இருந்து, முகம்மது நபியால் விடுவிக்கப்பட்டவர். வளர்ப்பு மகனாக முகம்மது நபி இவரை அறிவித்திருந்தார்.

“வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே, அல்லாஹ்விடம் நீதியாகும்“ எனும் (திருக்குர்ஆன் 33:5 வது) குர்ஆன் வசனம் அருளப்படும்வரை, நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களை “ஸைத் இப்னு முஹம்மத்“ (முஹம்மதின் புதல்வர் ஸைத்) என்றே அழைத்து வந்தோம்.
ஸஹீஹ் புகாரி (4782)

2. அன்னை ஸைனப் அவர்கள யார்?


இவர் முகம்மது நபி(ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரியின் மகள் ஆவார்.


ஜைனப் அவர்களுக்கு , ஜைத் அவர்களை முகம்மது நபி(ஸல்) அவர்கள் திருமணம் முடித்து வைத்தார்கள்.

ஸைனப் (ர) அவர்களை பற்றி ஆயிஷா (ர) அவர்கள் சொல்லும்போது, (நீண்ட ஹதீஸின் இறுதி பகுதி)

....... ஸைனப் அவர்கள்தான் நபியவர்களின் துணைவியரில் நபியவர்களிடம் அந்தஸ்து பெற்றிருந்த விஷயத்தில் எனக்குப் போட்டியாக இருந்தவராவார். மார்க்க ஈடுபாட்டிலும் இறைவனை அஞ்சி நடப்பதிலும் உண்மை பேசுவதிலும் உறவுகளை அனுசரிப்பதிலும் தாராளமாகத் தானம் வழங்குவதிலும் இறைநெருக்கத்தையும் வாய்மையையும் தரும் நற்செயல்களில் தம்மைத் தீவிரமாக ஈடுபடுத்திக்கொள்வதிலும் ஸைனப் அவர்களைவிடச் சிறந்த ஒரு பெண்ணை நான் ஒருபோதும் கண்டதில்லை.
 ஆயினும், அவர் விரைவாகக் கோபப்படக்கூடியவராக இருந்தார். அதே வேகத்தில் கோபம் தணியக்கூடியவராகவும் இருந்தார்.
(புகாரி 4829)

--

ஜைத் அவர்களுக்கும் ஸைனப் அவர்களுக்கும் பிரச்சினை ஏற்படவே, அதை பற்றி முறையிடுவதற்காக ஜைத் அவர்களே நபியவர்களிடம் வந்து விவாகரத்து செய்வதற்கு ஆலோசனை கேட்டார்.

ஆனால் முகம்மது நபி அவர்களோ, "அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உன் மனைவியை மணபந்தத்தில் நீடித்துக்கொள்ள செய்" என்று கட்டளையிட்டார்கள்.

புகாரி 7420

அனஸ்(ரலி) அறிவித்தார்.

ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்கள் தம் மனைவியின் போக்கு குறித்து (நபி(ஸல்) அவர்களிடம்) முறையிட வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்துகொள்; உன் மனைவியை (மண விலக்குச் செய்துவிடாமல்) மணபந்தத்தில் நீடிக்கச் செய்“ என்று கூறலானார்கள்.
👆👆👆

நபி(ஸல்) அவர்கள் (தம் வாழ்நாளில் குர்ஆன் வசனங்களில்) எதையேனும் மறைப்பவர்களாக இருந்திருந்தால் (பின்வரும் 33:37 வது வசனமான) இதைத்தான் மறைத்திருப்பார்கள். இதன் காரணத்தால் ஸைனப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மற்ற துணைவியர் முன்பாக (தமக்குத் தனிச் சிறப்பு இருப்பதாகப்) பெருமை பாராட்டிக் கொள்வார்கள்.

“உங்களை (நபி(ஸல்) அவர்களுக்கு) உங்கள் வீட்டார் மணமுடித்துத்தந்தார்கள். என்னையோ உயர்ந்தவனான அல்லாஹ்வே ஏழுவானங்களுக்கு மேலிருந்து (நபி(ஸல்) அவர்களுக்கு) மணமுடித்துக் கொடுத்தான்“ என்று சொல்வார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸாபித் அல்புனானீ(ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
“(நபியே!) நீங்கள் (அந்நேரத்தில்) அல்லாஹ் வெளிப்படுத்த நாடியிருந்த விஷயத்தை உங்களின் உள்ளத்தில் மறைத்து வைத்துக் கொண்டீர்கள்“ எனும் (திருக்குர்ஆன் 33:37 வது) இறைவசனம், (தம்பதியராயிருந்த) ஸைனப்(ரலி) அவர்களுக்கும் ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களுக்குமிடையே நடந்த பிரச்சினையில் (நபி(ஸல்) அவர்கள் கருத்து தெரிவித்தபோது) தான் அருளப்பெற்றது“ என்று அனஸ்(ரலி) அவர்கள் சொன்னார்கள்.
-----

3. முகம்மது நபி(ஸல்) எதை தன் மனதினுள் மறைத்து வைத்திருந்தார் என்று 33:37 சொல்கிறது


ஸைத் விவாகரத்து செய்துவிட்டால், நபிகளார் ஸைனபை மணக்க வேண்டும் என்பதே அது. அதை அதே வசனத்தின் இறுதி காரணமாக கூறுகிறது 

இதே போல , ஜைத் விவாகரத்து செய்ய வந்த போது,

இவர் விவாகரத்து செய்துவிட்டால், மக்கள் குறை சொல்லுவார்கள் என்க்ஷ அச்சத்தில் "அல்லாஹ்வை அஞ்சி, உன்னிடமே வைத்துக்கொள்!" என்றார்கள்.

ஏனெனில் , அக்காலத்தில் வளர்ப்பு மகனை சொந்த மகனாக கருதியிருந்தார்கள். இதனால் வளர்ப்பு மகனின் மனைவியை முடிப்பது மிகப்பெரிய தப்பாக கருதப்படும்.

இது தான் "மனிதர்களுக்கு நீர் பயப்படுகிறீர்" என்று அல்லாஹ் சொல்கிறான் (33:37).

*. இந்த வசனத்தின் (33:37) இறுதியிலும், 38வது வசனத்திலும் ,,, இது நடக்கவேண்டியிருந்த கட்டளை என்றும், இதை முகம்மது நபிக்கு அல்லாஹ் தான் கடமையாக்கினான் என்றும் சொல்லப்பட்டுள்ளது..

இது எடுத்துக்காட்டுவது என்னவென்றால், இது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட நிகழ்வு என்றும் இதை தான் நபியவர்கள் தம் உள்ளத்தில் மறைத்திருந்தார்கள் என்றும் காட்டுகிறது.

நபியவர்கள் இந்த நிகழ்வை பயந்ததால் தான் அவ்வாறு நடந்துகொண்டார்கள். இதற்கு ஆறுதலாக நபியவர்களுக்கு 33:38 ஐ சொல்கிறான்.

"
நபியின் மீது அல்லாஹ் விதியாக்கியதை அவர் நிறைவேற்றுவதில் எந்தக் குற்றமும் இல்லை; இதற்கு முன் சென்று போன (நபிமா)ர்களுக்கு ஏற்பட்டிருந்த அல்லாஹ்வின் வழி இதுவேயாகும் - இன்னும் அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட விதியாகும்.
(அல்குர்ஆன் : 33:38)

(இறை தூதர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்துக் கூறுவார்கள்; அவர்கள் அவனுக்கே பயப்படுவார்கள்; அல்லாஹ்வையன்றி வேறு யாருக்கும் அவர்கள் பயப்படமாட்டார்கள்; ஆகவே, கேள்வி கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
(அல்குர்ஆன் : 33:39)"

இந்த வசனத்தில் "நபியவர்களுக்கு அல்லாஹ் விதியாக்கியதை கடமையாக்கியதை அவர் நிறைவேற்றுவது குற்றமல்ல" என இறைவன் சொல்வது, இந்த திருமணத்தை மக்கள் குற்றமாக கருதுவார்கள் என நபியவர்கள் பயந்ததை விளக்ககூடியதாக உள்ளது.

இந்நிகழ்வை இறைவன் கடமையாக்கியதையே நபியவர்கள் மனிதர்களுக்கு பயந்து மறைத்தார்கள். இதையே அல்லாஹ் வெளியாக்க இருந்தான்.




------

*. 33:37 வசனம் முழுமையாக , முகம்மது நபி(ஸல்) அவர்கள் "உன் மனைவியை உன்னிடம் நிறுத்திக்கொள்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!" என்று சொன்ன போது இறங்கவில்லை.

அதன் ஆரம்ப பகுதியே இறங்கியது. அதாவது, "அல்லாஹ் வெளியாக்க இருந்ததை நீர் உம் மனதில் மறைத்தீர். மனிதர்களுக்கு பயப்படுகிறீர். அல்லாஹ் தான் பயப்படுவதற்கு தகுதியானவன்" என்பவையே இறங்கியது.

இதையே மேலே குறிப்பிட்ட புகாரி 7420வது ஹதீஸும் சொல்கிறது.

இதே போல திர்மிதி 3212 (ஆங்கிலம்) , 3518 (அரபு) இலும் சொல்லப்பட்டுள்ளது.

Hadith

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ نَزَلَتْ هَذِهِ الآيَةُ ‏:‏ ‏(‏وتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى النَّاسَ ‏)‏ فِي شَأْنِ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ جَاءَ زَيْدٌ يَشْكُو فَهَمَّ بِطَلاَقِهَا فَاسْتَأْمَرَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏‏ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏"

Narrated Anas:

"அல்லாஹ் வெளியாக்கவிருந்ததை நீர் உமக்குள் மறைத்தீர் .நீர் மனிதர்களுக்கு பயந்தீர்..." எனும் வசனம் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் விசயத்தில் இறங்கியது .ஸைத் அவரை விவாகரத்து செய்ய விரும்பி முறையிட்டவராக வந்து நபிகளாரிடம் ஆலோசனை கேட்டார். அதற்கு நபிகளார் உன் மனைவியை உம்மிடம் வைத்துக்கொள். அல்லாஹ்வை அஞ்சிக்கொள் என்று கூறினார்கள்.

Sahih (Darussalam)

English : Vol. 5, Book 44, Hadith 3212
Arabic : Book 47, Hadith 3518

இதன் பின், ஜைது விவாகரத்து செய்துவிட்டார்.

இதன்படி நபிகளாரின் ஆலோசனைப்படி நடக்காமல், தன் சுயமான விருப்பத்தின்படியே விரும்பி விவாகரத்து செய்தார் என காட்டுகிறது 


*. விவாகரத்து நடந்து, ஜைனபின் காத்திருப்பு காலம் (இத்தா) முடிந்த பின்னால், ஜைத் அவர்களையே ஜைனபிடம் சென்று முகம்மது நபியை முடிப்பது பற்றி பேசும்படி சொன்னார்.

ஜைத் அவர்கள் சென்று இதை சொல்ல ,
ஜைனப் அவர்கள் அல்லாஹ்விடம் அனுமதி பெறாமல் ஏதும் செய்வதற்கு இல்லை என்று சொல்லிவிட்டு, தொழுமிடத்திற்கு சென்று தொழ நின்று விட்டார்.

அப்போது தான் 33:37இன் ஏனைய பகுதி இறங்கியது.


முஸ்லிம்
2798. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் மணவிலக்குச் செய்ததையடுத்து) ஸைனப் (ரலி) அவர்களது காத்திருப்புக் காலம் (இத்தா) முடிந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் (ரலி) அவர்களிடம், ”ஸைனபிடம் என்னை (மணந்துகொள்வதை)ப் பற்றிப் பேசு” என்றார்கள்.

எனவே, ஸைத் (ரலி) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள்.

அப்போது அவர் மாவு பிசைந்து கொண்டிருந்தார்.

ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
👉👉
ஸைனபைக் கண்டதும் என் மனத்தில் அவரைப் பற்றி மரியாதை ஏற்பட்டது. அவரை ஏறெடுத்துப் பார்க்கவும் என்னால் இயலவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை(த் தாம் மணந்துகொள்வது) பற்றிக் கூறியதே அதற்குக் காரணம்.
எனவே, அவ்வாறே திரும்பி அவருக்கு எனது முதுகைக் காட்டியபடி நின்று, ”ஸைனப்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை (மணக்க விரும்புவது) பற்றி உன்னிடம் கூறுவதற்காக (என்னை) அனுப்பிவைத்துள்ளார்கள்” என்றேன்.

அதற்கு அவர், ”நான் என் இறைவனிடம் (முடிவு வேண்டிப் பிரார்த்தித்து) அனுமதி பெறாமல் ஏதும் செய்வதற்கில்லை” என்று கூறிவிட்டுத் தாம் தொழுமிடத்திற்குச் சென்று (தொழ) நின்றுவிட்டார்.

அப்போது (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு) குர்ஆன் வசனம் (33:37) அருளப்பெற்றது.

(அதில், ”(நபியே! ஸைத், தம் மனைவியான ஸைனபை விவாகரத்துச் செய்துவிட்ட பின்னர், உமக்கு நாம் அவரை மணமுடித்து வைத்தோம் என்று அல்லாஹ் அறிவித்தான்.) அதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து அனுமதி பெறாமலேயே ஸைனபின் இல்லத்திற்குள் நுழைந்தார்கள்.

(முஸ்லிம் 2798)
👈👈👈

இதன்படி முன்னாள் மனைவி மீது ஸைதுக்கு ஆசை இல்லாத நிலையில் அவரை அனுப்பியே நபிகளார் பேசினார். 

அப்போது அவர் மீதான மரியாதை அதிகரித்தது என்று கூறுகிறார் 
----------------

இப்போது 33:37 ஐ பார்ப்போம்:


37. யாருக்கு அல்லாஹ் அருள் புரிந்து (முஹம்மதே!) நீரும் அவருக்கு அருள் புரிந்தீரோ, அவரிடம் "உமது மனைவியை உம்மிடமே வைத்துக் கொள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்'' என்று நீர் கூறியதை எண்ணிப் பார்ப்பீராக! அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை உமது மனதுக்குள் மறைத்துக் கொண்டீர். மனிதருக்கு அஞ்சினீர்! நீர் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே தகுதியானவன். ஸைத் என்பார் அவரிடம் தன் தேவையை முடித்துக் கொண்ட போது (விவாகரத்துச் செய்த போது) உமக்கு அவரை மணமுடித்துத் தந்தோம். வளர்ப்பு மகன்கள் தம் மனைவியரிடம் தமது தேவையை முடித்துக் கொண்டால் (விவாகரத்துச் செய்தால்) அவர்களை (வளர்ப்புத் தந்தையரான) நம்பிக்கை கொண்டோர் மணந்து கொள்வது குற்றமாக ஆகக் கூடாது என்பதற்காக (இவ்வாறு செய்தோம்). அல்லாஹ்வின் கட்டளை செய்து முடிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

திருக்குர்ஆன் 33:37

👆👆

இறைவன் வெளியாக்கயிருந்தது - ஜைத் விவாகரத்து செய்த பின்னால் முகம்மது நபி (ஸல்) ஜைனபை முடிப்பது. 

ஜைனபுடனான இத்திருமணத்தின் நோக்கத்தையும் 33:37 இல் கூப்பட்டுள்ளது.

அதாவது வளர்ப்பு மகன்கள் விவாகரத்து செய்த பெண்களை முடிப்பதில் எந்த குற்றமும் இல்லை என்பதை காட்டுவதற்காகும்.

ஏனெனில் இதை வெறும் அனுமதியாக சொல்லப்பட்டிருந்தால், அதை யாருமே செய்திருக்க மாட்டார்கள். பயப்படுவார்கள். இதையே முகம்மது நபி(ஸல்) அவர்கள் மூலமாகவே நிறைவேற்றி விட்டால், அதற்கு பின் வருவோர் அவ்வாறு விவாகரத்து செய்யப்பட்ட வளர்ப்புமகனின் மனைவியை திருமணம் முடித்து கொள்வது தவறு அல்ல என்று உணர்ந்து அவ்வாறு வாழ்வு கொடுக்க விரும்பினால் , செய்துகொள்வதற்கு முன்மாதிரியாகவே இத்திருமணம் நடந்தது.

----------------------------------------


முடிவு:

1.நபியவர்கள் தம் உள்ளத்தில் மறைத்து வைத்திருந்தது எதையெனில், அல்லாஹ் அவர்கள் மீது கடமையாக்கிய/விதியாக்கிய இத்திருமணத்தை ஆகும்.

2.இதை மக்கள் குற்றமாக கருதுவார்கள் என்பதால், அல்லாஹ் விதியாக்கியதை செயவதில் எந்த குற்றமும் இல்லை என இறைவன் சொல்கிறான்.
மக்கள் இவ்வாறு குற்றமாக கருதுவதையே நபியவர்கள் பயந்தார்கள்.

3.இத்திருமணத்தை இறைவன் கடமையாக்க முன்பு ஜைதுக்கு ஸைனபை திருமணம் செய்ய வைத்தான். 

4.ஸைத் தன் விருப்பத்தின் படியே தன் மனைவியை விவாகரத்து செய்தார். நபிகளாரின் ஆலோசனையை எடுக்கவில்லை (திர்மிதீ 3212)


5.தன் முன்னாள் மனைவி மீது ஸைதுக்கு ஈர்ப்பு இல்லாத நிலையிலேயே அவரை அனுப்பியே நபிகளார் தனக்கு திருமணம் பேசினார் (முஸ்லிம் 2798)

6.அவர் தலாக் செய்த பின் நபிகளாருக்கு திருமணம் செய்துவைத்தான். காரணம்,
"விசுவாசிகளால் வளர்க்கப்பட்டவர்கள் தம் மனைவியரை விவாகரத்து செய்தால், அந்த விவாகரத்து செய்யப்பட்ட பெண்களை வளர்த்த விசுவாசிகளுக்கு முடிப்பதில் எந்த குற்றமும் இருக்காது" என்பதை நிகழ்த்தி காட்டுவதற்கு ஆகும் என்பதை 33:37 சொல்கிறது.

ஏனெனில் சொந்த மகன்களினால் விவாகரத்து செய்யப்பட்டால் ,விவாகரத்து செய்யப்பட்டோரை திருமணம் முடிப்பது அவர்களின் பெற்றோரான வளர்த்தவர்களுக்கு பெரும் குற்றம்(குர்ஆன் 4:23). 

இதேபோன்று வளர்க்கப்பட்டோருக்கு வராது என்பதை நிகழ்த்தி காட்டுவதற்கு ஆகும்.


7..நபியவர்கள் தம் வசதிக்காக இதை இட்டுகட்டியிருக்க முடியாது. ஏனெனில் இந்த வசனங்களே அவருக்கு மிகவும் கஷ்டமானதாக இருந்தன. குர்ஆனில் எதையாவதை மறைப்பதாக இருந்திருந்தால் , இந்த 33:37 வசனத்தை மறைத்திருப்பார்கள் என நபித்தோழர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி 7420



இனி அடுத்த பதிவில் அந்த தவறான அறிவிப்புகள் பற்றியும் அதன் உண்மை நிலையையும் காண்போம்

அடுத்த பதிவை காண:பாகம்2



வெள்ளி, 4 ஜனவரி, 2019

திரித்துவம் 2


திரித்துவம் உண்மையானதா?
பாகம் 2

--------------------------------------------


பரிசுத்த ஆவி, இயேசு என்போர் யார்??

--------

1. பரிசுத்த ஆவி ( πνεῦμα- pneuma in greek,  ruach in Hebrew):

---- ----------------------

பரிசுத்த ஆவியை திரித்துவத்தில் ஓர் ஆள் என கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். உண்மையில் பரிசுத்த ஆவி எத்தனை?



I.இறைவன் ஆவியாக இருப்பதாக பைபிள் கூறுவதால்,  இறைவன் சில இடங்களில் ஆவி என அறியப்படுகிறார்.  அதாவது பிதாவாகிய தேவனையே ஆவி என குறிப்பதுண்டு.



II.தேவ தூண்டுதல்கள், வல்லமை (ஆவி-வானலோகதூதர்கள் மூலம்):
 தீர்க்கதரிசிகளுக்கு வரும் தேவ தூண்டுதல்கள் பரிசுத்த ஆவி என பைபிளில் அழைக்கப்பட்டுள்ளது.




3 ஞானம், அறிவுக்கூர்மை, அனுபவம், தொழில்திறமை அனைத்தும் அவனுக்கு உண்டாகுமாறு நான் அவனை இறை ஆவியால் நிரப்பியுள்ளேன்.

விடுதலைப் பயணம் (யாத்திராகமம்) 31:3



17 நான் இறங்கி வந்து அங்கே உன்னோடு பேசுவேன்; உன்னிலிருக்கும் ஆவியில் கொஞ்சம் எடுத்து நான் அவர்களுக்கு அளிப்பேன்; நீ மட்டும் சுமக்காதபடி மக்களின் பளுவை அவர்களும் உன்னோடு சேர்ந்து தாங்குவார்கள்.
எண்ணிக்கை (எண்ணாகமம்) 11:17




25 பின்னர் ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து அவரோடு பேசினார்; அவரில் இருந்த ஆவியில் கொஞ்சம் எடுத்து எழுபது மூப்பருக்கு அளித்தார்; ஆவி அவர்கள்மேல் இறங்கவே அவர்கள் இறைவாக்கு உரைத்தனர்; அதன் பின்னர் அவர்கள் அப்படிச் செய்யவில்லை.

26 இரண்டு மனிதர் பாளையத்திலேயே தங்கிவிட்டனர்; ஒருவன் பெயர் எல்தாது, மற்றவன் பெயர் மேதாது. அவர்கள் மீதும் ஆவி இறங்கியது; பதிவு செய்யப்பட்டவர்களில் இவர்களும் உண்டு; ஆனால் அவர்கள் கூடாரத்துக்குச் சென்றிருக்கவில்லை; ஆகவே அவர்கள் பாளையத்திலேயே இறைவாக்குரைத்தனர்;
எண்ணிக்கை (எண்ணாகமம்) 11:25-26



34 ஆண்டவரின் ஆவி கிதியோனை ஆட்கொண்டது. அவர் எக்காளம் ஊதி, அபியேசர் குடும்பத்தவரைத் தம்மைப் பின்பற்றி வருமாறு அழைத்தார்.
நீதித் தலைவர்கள் (நியாயாதிபதிகள்) 6:34


6 ஆண்டவரின் ஆவி ஆற்றலுடன் அவர் மீது இறங்கியது. ஆட்டை இரண்டாகக் கிழிப்பது போல் சிங்கக்குட்டியை அவர் வெறுங்கையால் கிழித்தார். அவர் தாம் செய்ததைத் தம் தந்தைக்கும் தாய்க்கும் கூறவில்லை.
நீதித் தலைவர்கள் 14:6



13 உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகோதரர் முன்னிலையில் அவனைத் திருப் பொழிவு செய்தார். அன்று முதல் ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது. சாமுவேல் இராமாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
1 சாமுவேல் 16:13

14 ஆண்டவரின் ஆவி சவுலை விட்டு நீங்க, ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி அவரைக் கலக்கமுறச் செய்தது.

1 சாமுவேல் 16:14



இப்படி ஆவி தூண்டும், வல்லமை வரும்.
----------------------
----------------------

🛑. எப்படி இந்த ஆவிகள் உண்மையில் தீர்க்கதரிசிகளிடம் வருகின்றன?

👇👇👇


21 இறுதியாக, ஓர் ஆவி ஆண்டவர் திருமுன் வந்து நின்று, 'நான் அவனைத் தூண்டி விடுகிறேன்.' என்றது. அதற்கு ஆண்டவர், 'அது எப்படி?' என்றார்.


22 அப்பொழுது அது, 'நான் போய் அவனுடைய போலி இறைவாக்கினர் அனைவரின் வாயிலும் இருந்துகொண்டு பொய் உரைக்கும் ஆவியாய் இருப்பேன்' என்றது. அதற்கு அவர், 'நீ அவனை ஏமாற்றி வெற்றி காண்பாய். போய் அப்படியே செய்' என்றார்.

1 அரசர்கள் (இராஜாக்கள் ) 22:21-22



7 இதோ, நான் அவனிடம் ஓர் ஆவியை அனுப்புவேன். அவன் ஒரு வதந்தியைக் கேட்டுத் தன் நாட்டிற்குத் திரும்பி போய்விடுவான். அவனது நாட்டில் வாளால் வெட்டுண்டு அவன் இறக்கும்படி செய்வேன்" என்றார்.
2 அரசர்கள் (இராஜாக்கள்) 19:7




20 அப்பொழுது ஒர் ஆவி ஆண்டவர் திருமுன் வந்து, 'நானே போய் அவனை வஞ்சிப்பேன்' என்றது. 'எவ்வாறு?' என் று ஆண்டவர் அதைக் கேட்டார்.


21 அந்த ஆவி, 'நான் போய் அவனுடைய இறைவாக்கினர் அனைவரின் வாயிலும் பொய்யுரைக்கும் ஆவியாக இருப்பேன்' என்றது. அதற்கு ஆண்டவர் 'நீ அவனை ஏமாற்றி வெற்றி காண்பாய். போய் அவ்வாறே செய்' என்றார்.


22 எனவே, இதோ இறைவாக்கினர் இவர்களின் வாயில் ஆண்டவர் பொய்யுரைக்கும் ஆவியை இட்டுள்ளார். உண்மையில் ஆண்டவர் உனக்குத் தீங்கானவற்றையே கூறியுள்ளார்" என்றார்.



23 அப்பொழுது கெனானாவின் மகன் செதேக்கியா மீக்காயாவின் அருகில் வந்து, அவரது கன்னத்தில் அறைந்து, "ஆண்டவரின் ஆவி என்னைவிட்டு எவ்வழியாகச் சென்று உன்னிடம் பேசிற்று என்று சொல்" என்றான்.

2 குறிப்பேடு (நாளாகமம்) 18:20-23



வானலோகத்திலுள்ள ஆவிகள் /தேவதூதர்கள் தான் இந்த வேலையை செய்கிறார்கள். அவர்களே இந்த ஆவிகள். இவர்களாலே தூண்டுதல்கள் ஏற்படுகிறதாக பைபிள் சொல்கிறது

7 வானதூதரைக் குறித்து அவர் "தம் தூதரைக் காற்றுகளாகவும் (ஆவிகள்) தம் பணியாளரைத் தீப்பிழம்புகளாகவும் செய்கிறார்" என்றார். 

எபிரேயர் 1:7

13 மேலும், கடவுள், வானதூதர் எவரிடமாவது, எப்போதாவது, "நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்" என்று கூறியதுண்டா? 

எபிரேயர் 1:13

14 அவர்கள் அனைவரும் ஊழியம் புரியும் ஆவிகள் அல்லவா? மீட்பை உரிமைப்பேறாகப் பெறவிருப்போருக்குத் தொண்டாற்ற அனுப்பப்பட்டவர்கள் அல்லவா 

எபிரேயர் 1:14

இந்த வசனங்களின்படி , ஆவிகள் எனப்படுவோர் வானலோக தூதுவர்கள் ஆவார்கள் என தெளிவாகிவிடுகிறது. தள்ளப்பட்ட தூதர்கள் சாத்தான்கள் எனவும், தேர்ந்தெடுத்துக்கொள்ளப்பட்ட வானலோக தூதுவர்கள் மிக சிறப்பானவர்கள் என புதிய ஏற்பாட்டிலிருந்து புரிந்து கொள்கிறோம்!!


தீர்க்கதரிசிகளிடம் வரும்  தேவ ஆவிகள் இந்த வானலோக தூதர்கள் தான். அதில் இருவகை இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
(1 யோவான் 4:1-3)

------

III. வானலோக தேவதூதர் ஒருவரை பரிசுத்த ஆவி என பவுல் அழைக்கிறார்: - இவர்தான் கிறிஸ்தவர்கள் நம்பும் பரிசுத்த ஆவி!!


IIவது வகையில் வானலோக தேவதூதர்களே ஆவிகள் என கண்டோம். அவர்கள் தான் தூண்டிவிடுகிறார்கள்!!


இனி பவுல் தூய ஆவியானவர் பற்றி என்ன சொல்கிறார் என பாருங்கள்:

----------------------

**பவுல் பரிசுத்த ஆவி பற்றி என்ன சொல்கிறார்?:**

----------------------


26 இவ்வாறு தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்; ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது; தூய ஆவியார் தாமே சொல்வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்துபேசுகிறார். 

உரோமையர் 8:26

27 உள்ளங்களைத் துருவி ஆயும் கடவுள் தூய ஆவியாரின் மனநிலையை அறிவார். தூய ஆவியாரும் கடவுளுக்கு உகந்த முறையில் இறைமக்களுக்காகப் பரிந்துபேசுகிறார். 

உரோமையர் 8:27

ஆவியானவர் இறைமக்களுக்காக பரிந்து பேசுகிறார் என இங்கு கூறப்பட்டுள்ளது.  அவர் திரித்துவத்தின் ஒரு பகுதியாக இருந்தால், அவர் பரிந்து பேசவேண்டிய அவசியமில்லை.  காரணம் அவர் தேவனாகிய கர்த்தரை விட மிக கீழ்நிலையிலுள்ள ஒரு வானதூதுவரே அவர் என தெளிவாகிறது.

இயேசு மற்றும் பவுல் சீடர்கள் என்போர் சில இடங்களில் பிதா, குமாரன், வானலோக தூதுவர்கள் என கூறுகிறார்கள். அப்படி கூறும்போது பரிசுத்த ஆவி என்று கூறுவதில்லை. காரணம், வானலோக தூதுவர்களில் பரிசுத்த ஆவி உள்ளடங்குவார் என்பதினால் ஆகும்.

சில வசனங்களை காண்போம்:
👇👇

20 பாவம் செய்கிறவர்களை அனைவர் முன்னிலையிலும் கடிந்துகொள். அப்பொழுது மற்றவர்களும் அச்சம் கொள்வர். 

1 திமொத்தேயு 5:20

21 கடவுளின் முன்னிலையிலும் கிறிஸ்து இயேசுவின் முன்னிலையிலும் தேர்ந்துகொள்ளப்பட்ட வான தூதர்களின் முன்னிலையிலும் உனக்கு நான் முன்னெச்சரிக்கையாகக் கூறுவது; நான் சொன்னவற்றைக் கடைப்பிடித்து வா. முன்கூட்டியே முடிவெடுக்காதே. நடுநிலை தவறாதே. 

1 திமொத்தேயு 5:21



இந்த வசனத்தில்,  பவுலடிகளார் இயேசு, கடவுள் (இயேசு கடவுள் அல்ல என இங்கேயே தெளிவாகிறது. ஏனெனில் கடவுள் ஒருவர் மட்டுமே), தேர்ந்துகொள்ளப்பட்ட வானதூதர்கள் முன்னிலையில் கூறுவதாக எழுதுகிறார். 

பரிசுத்த ஆவி வானதூதர்களிலேயே உள்ளடங்கிவிடுகிறார் என்பதால் தான் அவர் அதை குறிப்பிடவில்லை


இயேசு இவ்வாறு கூறுகிறார்:


26 என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும் ஒவ்வொருவரைப் பற்றியும் மானிட மகன் தமக்கும் தந்தைக்கும் தூய வானதூதருக்கும் உரிய மாட்சியோடு வரும் போது வெட்கப்படுவார். 

லூக்கா நற்செய்தி 9:26
மாற்கு 8:38



இயேசு தனக்கும், பிதாக்கும், தூய வானதூதர்களுக்கும் உரிய மகிமையோடு வருவார் என்று இதிலிருந்து கூறப்படுகிறது.     

இங்கு அவர் பரிசுத்த ஆவிக்குரிய மகிமையோடு வருவார் என இயேசு கூறவில்லை . மாறாக தூயவானதூதர்களின் மகிமையோடு என்கிறார்.  தூயவானதூதர்கள் பரிசுத்த ஆவியைவிட சிறந்தவர்களா?

காரணம், பரிசுத்த ஆவி இந்த தூய வானதூதர்களில் ஒருத்தர் என்பதால் தான் கூறப்படவில்லை. 



அவர் வானதூதர், இயேசு வேறொருவர் என்பதால், உபாகமம் 4:39 கூறுகிறபடி

"வானத்தின்மேலோ, கீழே பூமியிலோ அவரை (hū- he) தவிர வேறு கடவுள் இல்லை "

எனவே வானத்திலுள்ள பரிசுத்த ஆவி, மற்றும் பிதாவின் வலப்பக்கத்திலுள்ள இயேசு என்போர் கடவுள் அல்ல..




----------------------

2.இயேசு

------ ---------------------- ----------------------



இயேசுவிடம் வேத அறிஞன் ஒருவன் வந்து கட்டளைகளில் முதன்மையானது எது என கேட்டார். 

28 அவர்கள் வாதாடிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருந்த மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு அவர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, "அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?" என்று கேட்டார். 


29 அதற்கு இயேசு, "இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். 

மாற்கு நற்செய்தி 12:28,29


கடவுள் ஒருவர் என்று இயேசு சொல்கிறார். அதாவது உபாகமம் 6:4 ஐ மேற்கோள்காட்டுகிறார்.

சரி அந்த ஒரே கடவுள் யாரென பழைய ஏற்பாட்டில் பார்த்துவிட்டோம். 


----------------------

**புதிய ஏற்பாட்டில் கடவுள் யாரென இயேசு சொல்கிறார்:**

----------------------


3 உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு. 

யோவான் நற்செய்தி 17:3

இங்கே பிதா தான் ஒரே தேவன் என இயேசுவே சொல்லிவிட்டார்..

----------------------

**இயேசு அந்த பிதாவை தனக்கும் அவரே தேவன் என கூறுகிறார்:

----------------------


17 இயேசு அவரிடம், "என்னை இப்படிப் பற்றிக் கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், "என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்" எனச் சொல்" என்றார். 

யோவான் நற்செய்தி 20:17


----------------------

**அதுமட்டுமல்ல, பவுல்கூட இயேசுவுக்கு பிதா தான் கடவுள் என சொல்கிறார்:**

----------------------

3 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். 



17 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சி மிகு தந்தையுமானவர் அவரை முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ளுமாறு ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக! 

எபேசியர் 1:3,17


----------------------

**மேலும் அந்த தன் தேவனிடம் தன்னை காக்கும்படி வேண்டினார் இயேசு:**

----------------------

39 பிறகு அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து, "என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும் "என்று கூறி இறைவனிடம் வேண்டினார். 



42 மீண்டும் சென்று, "என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக்கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியேட ஆகட்டும்"இரண்டாம் முறையாக இறைவனிடம் வேண்டினார். 


44 அவர் அவர்களை விட்டு மீண்டும் சென்று மறுபடியும் அதே வார்த்தைகளைச் சொல்லி மூன்றாம் முறையாக இறைவனிடம் வேண்டினார். 

மத்தேயு நற்செய்தி 26:39,42,44



மேலும் , பைபிளின் படி சிலுவையில் இருக்கும்போது, என் தேவனே! என் தேவனே! என கூப்பிட்டார்:


46 மூன்று மணியளவில் இயேசு, "ஏலி, ஏலி லெமா சபக்தானி?" அதாவது, "என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று உரத்த குரலில் கத்தினார். 

மத்தேயு நற்செய்தி 27:46


இதை தீர்க்கதரிசன நிறைவேற்றத்திற்காக கூறினார் என்று பிதற்றுவோர் கவனத்திற்கு, அப்படி கூறினால் சங்கீதம் 22:1-3 இலுள்ளதன் சிறுபகுதியையே கூறியுள்ளார் மற்றது நிறைவேறவில்லை என்றாகிவிடும். இதனால் அது போலிதீர்க்கதரிசனம் ஆகிவிடும்.

இயேசு இங்கே நாடகமா ஆடுகிறார் தீர்க்கதரிசனம் நிறைவேறுவதாக கூறுவதற்கு? ஆனால் அவர் வருத்தப்பட்டு சத்தம்போட்டு கத்துவது சும்மா நடிப்புக்கா?

இவர்களின் இவ்வாதம் மிகவும் தவறு!!


----------------------

**.இயேசுவால் சுயமாக எதுவும் செய்ய முடியாது:**

----------------------

30 நானாக எதுவும் செய்ய இயலாது. தந்தை சொற்படியே நான் தீர்ப்பிடுகிறேன். நான் அளிக்கும் தீர்ப்பு நீதியானது. ஏனெனில் என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகிறேன். 

யோவான் நற்செய்தி 5:30


----------------------

**பிதாவிடம் பரிந்து பேசுபவராகவே அவர் உள்ளார்**

----------------------

இது இங்கு மட்டுமல்ல,  பரலோகத்திற்கு சென்ற பின்பு கூட அவர் தேவனாகிய பிதாவிடம் பரிந்து பேசுபவராகவே உள்ளார்:


34 அவர்களுக்கு யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? இறந்து, ஏன், உயிருடன் எழுப்பப்பட்டு கடவுளின் வலப் பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ! 

உரோமையர் 8:34


1 என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன்; ஆயினும் ஒருவர் பாவம் செய்ய நேர்ந்தால் தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார். 


2 நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே; நம் பாவங்களுக்கு மட்டும் அல்ல, அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் அவரே. 

1 யோவான் 2:1-2

இங்கு அவரால் வெறும் பரிந்துரையே பண்ண முடிகிறது என கூறப்படுகிறது. அதிகாரமிருந்தால் அவரே மன்னித்துவிடுவார்

இவ்வுலகில் மன்னித்தார் என இவர்கள் அடித்துவிடுவார்கள். தேவதூதனும், தீர்க்கதரிசிகளும் பாவங்களை மன்னிப்பார்கள் என பழைய ஏற்பாடு சொல்கிறது. சீடர்கள் பாவத்தை மன்னிப்பார்கள் என இயேசுவே சொல்லியுள்ளார்


----------------------

**அவர் மரணித்த பின்பு கூட பிதாவுக்கு குறிப்பாக கடவுளுக்கு அடிபணிந்திருக்கிறார். :**

----------------------

27 ஏனெனில், "கடவுள் எல்லாவற்றையும் அவருக்கு அடிபணியச் செய்தார். "ஆனால் எல்லாம் அடிபணிந்தன என்று சொல்லும்போது அனைத்தையும் கிறிஸ்துவுக்கு அடிபணிய வைக்கும் கடவுளைத் தவிர மற்றவை யாவும் அடிபணிந்தன என்பது தெளிவாகிறது. 



28 அனைத்துமே மகனுக்கு அடிபணியும்போது தமக்கு அனைத்தையும் அடிபணியச் செய்த கடவுளுக்கு மகனும் அடிபணிவார். அப்போது கடவுளே அனைத்திலும் அனைத்துமாயிருப்பார். 

1 கொரிந்தியர் 15:27-28


----------------------

**இயேசு கடவுளிடமிருந்து கேட்டறிந்ததை அறிவிப்பவரே:**

----------------------
40 ஆனால் கடவுளிடமிருந்து கேட்டறிந்த உண்மையை எங்களுக்கு எடுத்துரைத்த என்னை நீங்கள் கொல்ல முயலுகிறீர்கள். ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே! 

யோவான் நற்செய்தி 8:40


----------------------

**இயேசு கடவுளுக்கும் மனிதனுக்குமான இணைப்பாளர் மட்டுமே!:**

----------------------

5 ஏனெனில் கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர். 

1 திமொத்தேயு 2:5



இவற்றின்படி இயேசு தெளிவாக கடவுள் இல்லை என புரிந்துவிடுகிறது.

புதிய ஏற்பாட்டு யோவான் சுவிசேசம் மற்றும் பவுலுடைய கடிதங்கள் மற்றும் ஏனைய கடிதங்கள் மட்டுமே இயேசுவை சாதாரணமான வானலோக ஒருவரின் அவதாரம் போல சித்தரிக்கிறார்கள் அதாவது ஒரு தேவதூதனை போல சித்தரிக்கிறார்கள். ஆனால் நிச்சயமாக கடவுள் இல்லை என்பதை தெளிவாக கூறுகின்றன. சில இடங்களில் சாத்தானை எப்படி அழைப்பட்டுள்ளதோ (2 கொரிந்தியர் 4:4) , எரோது அழைக்கப்பட்டானோ அதே போல அழைக்கப்பட்டுள்ளார்.

இது சம்பந்தமாக கிறிஸ்தவர்கள் வைக்கும் வாதங்களுக்கும் ஏற்கனவே பதில் கொடுத்திருக்கிறோம்.

புதன், 2 ஜனவரி, 2019

திரித்துவம் 1

திரித்துவம் உண்மையானதா?

பாகம் 1
------------------------


திரித்துவம் உண்மையானதா❓❓
--------------------------------------------


திரித்துவம் எனப்படுவது கிறித்தவ மதத்தில் அடிப்படைகொள்கை போல் ஆக்கப்பட்ட வேதாகமத்திற்கே முரணான ஒரு தவறான  நம்பிக்கை!

திரித்துவம் என்பது பிதா,பரிசுத்த ஆவி, குமாரன் ஆகிய மூன்றும் ஒரே தேவன். பிதா ஒரு தேவன். குமாரன் ஒரு தேவன். ஆவி ஒரு தேவன். மூன்றுபேரும் மூன்று தேவர்கள் அல்ல. ஒரே தேவன். பிதா ,குமாரன், ஆவி இந்த மூன்றும் சமமானவர்கள். சக்தி வல்லமை வயது எல்லாமே இம்மூவருக்கும் சமம் என்பதே இவர்களது நம்பிக்கை.

இதற்காக பைபிளை எவ்வளவு திரித்துகூற முடியுமோ அவ்வளவுக்கு திரித்து கூறி திரித்துவத்தை நியாயப்படுத்த முற்படுவார்கள்.

கடவுள் எத்தனை?

*.பைபிள் என்ன சொல்கிறது??


שְׁמַ֖ע  יִשְׂרָאֵ֑ל  יְהוָ֥ה  אֱלֹהֵ֖ינוּ  יְהוָ֥ה   אֶחָֽד׃

שְׁמַ֖ע-சமா
יִשְׂרָאֵ֑ל-இஸ்ராஏலொ
יְהוָ֥ה-யாவே
אֱלֹהֵ֖ינוּ-எலோஹைனொ
יְהוָ֥ה -யாவே
אֶחָֽד׃-எஹத்

சமா இஸ்ராஏலு! யாவே எலோஹைனு யாவே எஹத்

சமா-கேள் இஸ்ராஏலு- இஸ்ரவேலே
யாவே- கர்த்தர்
எலோஹைனு- எமது தேவன்
எஹத்- ஒன்று

"இஸ்ரவேலே கேள்! நம்முடைய தேவனாகிய கர்த்தர், கர்த்தர் ஒருவரே!"

உபாகமம் 6:4



கடவுள் ஒருத்தர் தான் என்று சொன்ன பின்னாடி, அவர் எப்படி மூனு நபர்களாக முடியும்? அப்படி ஆகிவிட்டால் மூன்றுகடவுள் என்றாகிவிடும்.

கிறிஸ்தவ போதகரின் கருத்து திரிபு

இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் இல்லாமையினால்,  ஒரு கிறிஸ்தவ போதகர் ஒருவர் அரைகுறையாக ஹிப்ருவை படித்துவிட்டு, இதில் உள்ள "எஹத்" என்ற வார்த்தைக்கு வெறும் ஒருவர் என்ற அர்த்தம் இல்லை. மாறாக பன்மையை உள்ளடக்கிய ஒருமை என கருத்துக்கூறி,

ஆதாரமாக, ஆதியாகமம் 1:5 "சாயங்காலமும் விடியற்காலையும் ஆகிமுதலாம் (ஒரு) நாள் ஆகிற்று"

ஆதி 2:24 ,  
24 இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர். 

தொடக்கநூல் 2:24


அதே போல எண்ணாகமம் 13:23

23 பின்னர் அவர்கள் எசுக்கோல் பள்ளத்தாக்குக்கு வந்தனர்; அங்கிருந்து ஒரே குலையாயிருந்த திராட்சைப் பழங்களின் கிளையொன்றை அறுத்தனர்; அதை ஒரு தடியில் கட்டி, இருவர் சுமந்து வந்தனர்; அத்துடன் அவர்கள் மாதுளம் பழங்கள், அத்திப் பழங்கள் சிலவற்றையும் கொண்டு வந்தனர்.

போன்ற வசனங்களை தம் ஆதாரத்திற்கு முன்வைத்து,  

ஒரு குலையில் நிறைய பழம் இருக்கலாம் அல்லவா? ஒரு நாளில் காலை, மாலை இருக்கலாமல்லவா? அதே போன்று ஒரு கடவுள் என்றால் அதற்குள் திரித்துவம் இருக்கவேண்டும். அத்தகைய வார்த்தையையே இங்கு வேதம் சொல்கிறது என்று போலியாக அடித்துவிடுகிறார்கள்.

இங்கே எஹத் என்பது ஒன்றுக்கு மேற்பட்டதை உள்ளடக்கிய ஒருமை. எனவே தேவன் ஒன்றுக்கு மேற்பட்டவரை உள்ளடக்கியவர் என்பதே இந்த போதகர் அடித்துவிட்ட கருத்து!!
--

எஹத் (எகாத்) என்பது திரித்துவத்திற்கு ஆதாரமா?

நம் பதில்:


உண்மையில் "எஹத்" என்ற வார்த்தைக்கு "ஒன்று", " முதலாவது" என அர்த்தம் தரக்கூடியது.

இந்த போதகர்கள் கல்லத்தனமாக கூறுவது போல அர்த்தமல்ல,

இந்த "எஹத்" என்ற வார்த்தை வெறும் ஒன்று , ஒருவர் என்பதை குறிக்கவே பயன்படும்.

உதாரணமாக,


21 ஆகவே ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும் பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார். 

தொடக்கநூல் 2:21
11 நாங்களெல்லாரும் ஒரே தந்தையின் புதல்வர்கள். நாங்கள் நேர்மையானவர்கள்; ஒற்றர்கள் அல்ல" என்றனர். 

தொடக்கநூல் 42:11


13 அவர்கள் மறுமொழியாக "உம் அடியார்களாகிய நாங்கள் கானான் நாட்டில் வாழும் ஒரே தந்தையின் பன்னிரு புதல்வர்கள். இப்பொழுது எங்களுள் இளையவன் எங்கள் தந்தையோடு இருக்கின்றான். இன்னொருவன் இறந்துவிட்டான்" என்றனர். 

தொடக்கநூல் 42:13


16 எனவே, உங்கள் சகோதரனை அழைத்துவரும்படி உங்களில் ஒருவனை அனுப்புங்கள். மற்றவர்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். உங்கள் சொற்களைச் சோதித்து உண்மை உங்களிடம் உள்ளதா என்று அறிய விரும்புகிறேன். இல்லையெனில் பார்வோனின் உயிர்மேல் ஆணை! நீங்கள் ஒற்றர்கள்தாம்" என்றார். 

தொடக்கநூல் 42:16


19 நீங்கள் குற்றமற்றவர்களானால் சகோதரராகிய உங்களில் ஒருவன் சிறைச்சாலையில் அடைப்பட்டிருக்கட்டும். மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தால் வாடும் உங்கள் குடும்பங்களுக்குத் தானியம் கொண்டு போகலாம். 

தொடக்கநூல் 42:19


10 நம் அனைவர்க்கும் தந்தை ஒருவரன்றோ? நம்மைப் படைத்தவர் ஒரே கடவுளன்றோ? பின்னர் ஏன் நாம் ஒருவருக்கொருவர் நம்பிக்கைத் துரோகம் செய்கின்றோம்? நம் மூதாதையரின் உடன்படிக்கையை ஏன் களங்கப்படுத்துகிறோம்? 

மலாக்கி 2:10

🤞🤞🤞


ஒரு விலா எலும்பு , ஒரே தகப்பன், ஒருவன், ஒரே கடவுள் என்பவற்றில் இந்த எஹத் என்ற வார்த்தை பாவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் வெறும் ஒருமையை மட்டுமே காட்டுகிறது. இவர்கள் சொல்வதுபோல அல்ல.


அவர்கள் குறிப்பிட்ட வசனங்களில் கூட, "ஒரு நாள்" என்றால் வெறும் நாளின் எண்ணிக்கை ஒன்று என்பது  தான் அர்த்தம்.

ஒரு குலை என்றால் குலைகளின் எண்ணிக்கை ஒன்று என்பது தான் அர்த்தம்

ஒரே உடல் என்றால், ஆதாமின் உடலிலிருந்து ஏவாள் படைக்கப்பட்டதால், இருவரும் ஒரே உடலை சேர்ந்தவர்கள். அதாவது ஆதாமின் உடலை சேர்ந்தவர்கள். ஆதாம் கணவன், ஏவாள் மனைவி என்பதால் இதே பிரதிபலிப்பு மற்ற கணவன் மனைவியிடமும் இருக்கும் என்பதே கூறப்படும் அர்த்தம்.

அதே போன்று ஒரே குடும்பம் என்றால் , குடும்பத்தின் எண்ணிக்கை ஒன்று. ஒரு மனிதன் என்றால், கருதப்படும் மனிதனின் எண்ணிக்கை ஒன்று ஆகும்.

அதேபோல "ஒரு கடவுள்" என்றால்,  கடவுள் என கருதப்படும் இறைவனின் எண்ணக்கை "ஒன்று" தான். ஒன்றுக்கு மேல் கடவுள் இல்லை. வேறு எவரும் கடவுள் இல்லை என்பதே இதன் அர்த்தம்.

இதை மற்ற வசனங்கள் தெளிவு படுத்துகிறது
👇👇👇👇


2 நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர். 


3 என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது. 


4 மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். 


5 நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன்; என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன். 
(யாத்திராகமம் 20:2-5)

இங்கே "நானே  கர்த்தராகிய (யகாவா ஆகிய) தேவன் (எலோஹிம்)

என்னை தவிர வேறு தேவர்கள் (எலோஹிம்) இருக்க கூடாது  என்று தெளிவாக கர்த்தர் சொல்கிறார்.

கடவுள் என்பவர் இவர்கள் கூறுவதுபோல பிதா,குமாரன்,ஆவி என இருக்குமாயின், " நாங்களே உன் கர்த்தராகிய தேவன், எங்களை தவிர வேறு தேவர்கள் இருப்பது கூடாது" என வந்திருக்கும்.

ஆனால் ஒருமையில் "நான்" "என்னை தவிர" என பாவிப்பதிலிருந்து அவர் மூவரின் சேர்க்கை அல்ல.. ஒரு குடும்பம் போல அல்ல என தெளிவாகிவிடுகிறது.

அதேபோல இன்னொரு வசனத்தை பாருங்கள்:
👇👇👇

35 "ஆண்டவரே கடவுள், அவரைத் ( הוּא)  தவிர வேறு எவரும் இலர், என நீங்கள் அறிந்து கொள்ளும் படியாக இவை உங்கள் கண்முன் நிறைவேற்றப்பட்டன. 

இணைச் சட்டம் உபாகமம் 4:35


39 மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள், அவரைத் (  הוּא)   தவிர வேறு எவரும் இலர்" என இன்று அறிந்து, உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள். 

இணைச் சட்டம் உபாகமம் 4:39


இந்த இருவசனங்களிலும் கடவுள் வெறும் தனியான நபர் என தெளிவாக விளங்குகிறது. இவர்கள் போலியாக இட்டுக்கட்டுவது போல அவர் மூவரின் சேர்க்கை என்றால்,  (hu- הוּא means "he") என்ற வார்த்தை பயன்படுத்தியிருக்க முடியாது.

இது வெறும் ஒரு ஆள் தான் ஒரே ஒருவர் தான் கடவுள். அந்த ஒருத்தரை தவிர வேறு கடவுள் இல்லை என்கிறது.

இதன்படி பரிசுத்த ஆவி, மற்றும் குமாரன் அதில் வரமாட்டார்கள்!!**

எலோஹிம் என்பது திரித்துவத்திற்கு ஆதாரமா?


*எலோஹிம் என்றது ,  திரித்துவத்திற்கு ஆதாரமா❓

"எலோஹ்-இம்" என்பதன் நேரடி அர்த்தம் "தேவர்கள்" என இருந்தாலும், அது கண்ணியமானவர்களை குறிக்க பயன்படுத்தும்போது ஒருவராக இருந்தாலும் அப்படியே பயன்படுத்தும்.

உதாரணமாக,,


1 ஆண்டவர் மோசேயை நோக்கி, "பார், நான் உன்னைப் பார்வோனுக்குக் கடவுளாக (  אֱלֹהִ֖ים-எலோஹிம்) வைத்துள்ளேன். உன் சகோதரன் ஆரோன் உன் வாக்கினனாக இருப்பான். 

யாத்திராகமம்
விடுதலைப் பயணம் 7:1


இங்கு ஒருவரான மோசேயே அவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார். காரணம் அது பன்மையை குறிக்கும் நோக்கத்தில் அல்ல. மாறாக கண்ணியத்திற்காக ஆகும்.


கடவுள் ஒருவர் என்பதையும், அவரை தவிர வேறு ஒருவர் இல்லை என்பதையும் ஏற்கனவே பார்த்துவிட்டோம். அங்கே தேவனை ஒருமையாக " அவன் (ஹூ- הוּא - he) என அழைப்பதிலிருந்தும் இதை புரிந்துகொள்ளலாம்!!

வேடிக்கை என்னவென்றால், புதிய ஏற்பாட்டில் தேவனை ஒருமையில் மட்டுமே காண கிடைக்கிறது.

கிரேக்க மொழி மூலபிரதியான Septuagint பிரதிகளில் தியோஸ் என ஒருமையில் தான் உள்ளது. 
 இது ஆதாரமல்ல

*.இயேசு ,பரிசுத்த ஆவி என்போர் யார் என பார்க்க முன்னாடி, குர்ஆன் திரித்துவத்தை போதிக்கிறதா என காண்போம்:

குர்ஆன் திரித்துவத்தை போதிக்கிறதா?

குர்ஆன்:

1. கூறு! அவன் அல்லாஹ் ஒருவனே!
(குர்ஆன் 112:1)

2. அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை!
(2:225, 3:2, ......)

3.அவனே அனைவரையும் படைத்தவன். (2:21)

இப்படி பல வசனங்கள் இருக்கின்றன.

இதையெல்லாம் விட்டுவிட்டு, தமக்கு எதுபற்றி அறிவு இல்லையோ, அதில் அறிந்தவர்கள் போல சில வசனங்களை எடுத்துக்காட்டி அப்பாவிகளை வஞ்சிக்கின்றனர்.

அதில் குறிப்பாக,

50:16 "நிச்சயமாக நாமே மனிதனை படைத்தோம்..."

இங்கு "நாம் படைத்தோம்" என்று உள்ளதே. இது பன்மையாக உள்ளதே.. இது ஒரு இறைவனல்ல , ஒன்றுக்கு மேற்பட்ட இறைவன் இருக்கவேண்டும் என வாதம் வைக்கிறார்கள்.


உண்மையில், இது அவர்களுக்கு ஆதாரமாகாது. ஒழுங்கான மொழி அறிவுகூட அவர்களுக்கு இல்லை!


ஏனெனில், இறைவனை பற்றி படர்க்கையில் (Third person) கூறும்போது "அவன்/he" என கூறப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் என்றால் "ஹும்" என அதாவது "அவர்கள்/They" என பாவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அது அவ்வாறு இல்லை. எனவே அது ஒரே ஒரு இறைவனே

அடுத்தது, இறைவனை முன்னிலையில் (second person) கூறும்போது, "அன்த" அதாவது "நீ" என ஒருமையில் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது! (உதாரணமாக குர்ஆன் 3:26,27)


ஆனால், தன்மையில் (first person) இல் பயன்படுத்தும்போது,  நேரடியாக பேசும்போது "நான், என்னிடம், எனக்கு" என ஒருமையில் பேசுவான். உதாரணமாக மூசாவோடு பேசிய போது



13. மேலும், "நான் உம்மை தேர்ந்தெடுத்துக்கொண்டேன். ஆகவே, அறிவிக்கப்படுபவைகளை நீ செவிமடுப்பாயாக!

14. நிச்சயமாக நான் தான் அல்லாஹ்;  என்னை தவிர வேறு இறைவன் இல்லை. ஆகவே, என்னையே வணங்குவாயாக! ...
(குர்ஆன் 20:13-14)

 10."... மூஸாவே பயப்படாதீர்! நிச்சயமாக என்னிடத்தில் தூதர்கள் பயப்படமாட்டார்கள்" 
(குர்ஆன் 27:10)

இவற்றின்படி இறைவன், தன்னை "நான்" என ஒருமையில் பேசுவதே இவர்களின் கூற்றை பொய்யாக்கிவிடும்.


ஆனாலும், சில இடங்களில் இறைவன் தன்னை "நாம்" என பன்மையில் சொல்ல காரணம், அது பேச்சு வழக்கில் உள்ள ஒரு விசயம் என்பதால் ஆகும். 

 

இவ்வாறு, தனிநபர்கள் கூட தன்னை "நாம்" என பன்மையில் கூறிக்கொள்வதுண்டு. அது கண்ணியத்தின் நிமித்தம் அவ்வாறு கூறிக்கொள்கிறார்கள்.

இதை குர்ஆனிலேயே காணலாம்:

மூஸா நபி , ஹிழ்ர் என்ற இறைத்தூதரிடம் சில விடயங்களை கற்றுக்கொள்ள சென்றார்கள். அதில் ஹிழ்ர் அவர்கள் ஒரு வாலிபனை கொன்றுவிட்டார்கள். அதுபற்றி அவர் கூறும்போது கூட, "நாம்" என்றே அவரும் சொல்கிறார். காரணம் பன்மை என்பதால் அல்ல!!

👇👇

80. "(அடுத்து) அந்த இளைஞனுடைய தாய், தந்தையர் இருவரும் முஃமின்களாக இருக்கிறார்கள்; அவன்  அவ்விருவரையும் வழிகேட்டிலும், குஃப்ரிலும் சேர்த்து விடுவான் என்று நாம் பயந்தோம்.




81. "இன்னும், அவ்விருவருக்கும், பரிசுத்தத்திலும் (பெற்றோரிடம்) அன்பு செலுத்துவதிலும் சிறந்திருக்க கூடிய (ஒரு மகனை) அவ்விருவருடைய இறைவன் (கொலையுண்டவனுக்குப்) பதிலாக கொடுப்பதை நாம் விரும்பினோம்.

(18:80-81)


இதே போன்றே , இறைவனும் தன்னை கண்ணியமான முறையில், "நாம்" என சில இடங்களில் கூறுகிறான்.



எனவே இவர்களது வாதம் சுக்குநூறு ஆகிவிடுகிறது.

அல்லாஹ் வழிதவறச்செய்கிறான் என்பதன் விளக்கம்

1.மனிதனுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது  --மனிதனுக்கு இறைவன் வழி காட்டியுள்ளான். ஒன்று அவன் நன்றியுள்ளவனாக இருக்கிறான் அல்லது காஃபிராக இருக்கிறான...