புதன், 20 ஜூலை, 2022

வெளிப்படுத்தின விசேஷம் படி இயேசு கடவுள் அல்ல

 யூதா படி இயேசு கடவுள் அல்ல

வெளிப்படுத்தின விஷேசம் படி இயேசு கடவுள் அல்ல

இது யோவான் என்பவர் தான் கண்ட கனவை எழுதியதாக கருதப்படுகிறது


1.இதன் முதலாவது வசனமே இயேசு வேறு தேவன் வேறு என்று தெளிவாக கூறுகிறது.


அதாவது தேவன் இயேசுவுக்கு ஒப்புவித்ததை , இயேசு தூதனை அனுப்பி யோவானுக்கு வெளிப்படுத்தியதாம் இது… தேவன் சொல்லி கொடுத்தால் தான் யேசுவுக்கு தெரியவரும் போல.


¹ “சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம்.”(வெளி 1:1)


2.இயேசு வேறு தேவன் வேறு.. அதாவது இயேசுவுடைய பிதா தான் தேவனாம்.


⁶ “நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.” (வெளி 1:6)


3.இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவரும் இயேசு அல்ல

“"இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்."”

  — Revelation 1:8 (TBSI)


Note: “இதில் இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய” என வருவது இயேசுவை குறித்து அல்ல. ஏனெனில் கிரேக்க பிரதிகளில் தியோஸ் (தேவன்) என உள்ளது..





தேவன் என்பது மொழிபெயர்ப்பில் விடப்பட்டுள்ளது. ஆனால் வெளி 4:8,16:5-7 இல் விடப்படவில்லை. தேவனே இருக்கிறவர் இருந்தவர் வருகிறவர். இயேசு அல்ல


————–


3.இயேசு தன்னை அல்ஃபா, ஒமேகா , முந்தினவர் பிந்தினவர் என சொன்னாராம்.



¹¹ “அது: நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது.” (வெளி 1:11)

இதே புத்தகத்தில் இயேசுவே தேவனது முதல் படைப்பு என்று கூறப்பட்டுள்ளது


“"லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;"”

  — Revelation 3:14 (TBSI)


இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு இன்னும் தெளிவாக இருக்கும்:

“And unto the angel of the church of the Laodiceans write; These things saith the Amen, the faithful and true witness, the beginning of the creation of God“And unto the angel of the church of the Laodiceans write; These things saith the Amen, the faithful and true witness, the beginning of the creation of God;”

  — Revelation 3:14 (KJV)

அதாவது இயேசு தேவனது முதல் படைப்பாக இருப்பதால், முந்தினவர் என்றும்

மேலும் கடைசி காலத்திலும் இயேசு வருகிறதாக சொல்லப்படுவதால், அவரை பிந்தினவர் என்றும் சொல்லப்படுகிறது.


இதில் தெய்வீகம் இல்லை.


இயேசு வேறு தேவன் வேறு னு இதே புத்தகம் கூறும்போது, இது இயேசுவை தேவனாக சித்தரிப்பதாக கூறுவது அபத்தமாகும்.


மேலதிகமாக

 யேசு என்பவர் வார்த்தை மனிதனாக வந்தவர் என்கிறது புதிய ஏற்பாடு.(யோவான் 1:14).

 வார்த்தை என்பது , தேவனது பேச்சிலிருந்து உள்ளது ஆகும்.. அது நபர் கிடையாது.. அது ஏற்கனவே தேவனது பையனாக அவரது மடியில் இருந்தது என்பதாக நினைத்துக்கொண்டனர்..(யோவான் 1:18). காரணம் யேசு குழந்தையாக தாயின் வயிற்றிலிருந்து வந்ததால், பிறக்க முன்பும் குழந்தையாக இருந்ததாக கருதினர்.


தேவன் தான் கட்டளையிட்டதன் மூலம் சகலதும் உண்டானதாக (ஆதி 1:3,5,7..) பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளதால், இது இயேசு தான் என புரிந்த இவர்கள், இயேசு மூலமாக தேவன் சகலத்தையும் படைத்தார் எழுதியுமுள்ளார்கள். (உதாரணமாக யோவான் 1:2-3, கொலோசெயர் 1:16-17)

குறிப்பு: கடவுள் முந்தினவரும் பிந்தினவரும் ஆவார் என்பது அவருக்கு முன் வேறு தேவன் இருக்கவில்லை. அவருக்கு பின் வேறு தேவன் உருவாவதில்லை என்பதை குறிக்கிறது. அதாவது நான் மட்டுமே கடவுள் என்பதை குறிக்கிறது (ஏசாயா 44:6).

ஆனால் இயேசுவோ கடவுளுடைய ஒரே மகன் என்பதை குறிப்பதற்காக (யோவான் 1:18 ,எபிரேயர் 1:2) அதாவது இயேசுவுக்கு முன் தேவனிடம் ஜனிப்பிக்கப்பட்ட மகன் இல்லை என்றும் பிறகும் உண்டாவதில்லை என்பதையே வெளிப்படுத்தின விசேஷம் சித்தரிக்கிறது. இதனால் இயேசுவின் ஆவியை பெற்று தேவனுக்கு இயேசுவின் உடன் பங்காளிகளாக நாம் இருப்போம் என பவுல் எழுதுகிறார் (ரோமர் 8:17 , கலாத்தியர் 4:7)


----------


5.இயேசு மீண்டும் தன்னை முந்தினவர் பிந்தினவர் என சொன்னாராம். அவர் மரணித்தாராம். பிறகு எப்போதும் உயிருடன் இருக்கிறாராம்.


¹⁷ “நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;”

¹⁸ “மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன் (வெளி 1:17-18) also 2:8


முந்தினவர் பிந்தினவர் குறித்து குறிப்பு 4ஐ பார்க்கவும்.


இயேசு மரணித்ததாக கூறுகிறார்.. மரணித்தவர் இறைவனில்லையே..


மரணித்த பின் சகலரும் உயிரோடு. தான் இருப்பதாக தான் கூறப்படுகிறது.


ஏனெனில் தேவன் தன்னை குறித்து முட்செடி கதையில் மோசேயிடம் தன்னை இறந்தோரின் தேவன் அல்ல.. உயிருள்ளோரின் தேவன் என்பதை நான் ஆப்ரகாம் ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் தேவன் என சொன்னாராம் என இயேசு சொன்னாராம்.(மாற்கு 12:26-27, லூக்கா 20:37-38)


அதேபோல ஆப்ரகாம் சொர்க்கத்தில் உயர் அந்தஸ்த்தில் இயேசு காலத்திலேயே இருந்துள்ளார். (லூக்கா 16:23-31)


சோ மரணித்த பின் உயிரோடு இருப்பதால் ஆச்சரியம் இல்லையே..


எலியா , ஏனோக் மரணிக்காமல் வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக கூறுகிறது.. அதேபோல் மெல்கிசேதேக் என்ற ஆசாரியனும் முடிவில்லாதவனாக எபிரேயர் (தப்பாக) புத்தகம் கூறுகிறது.

------


6.தேவன் வேறு இயேசு வேறு. இயேசு தன்னை தேவனுடைய பையன் என்றாராம்.

.


¹⁸ “தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: அக்கினிஜூவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது;” (வெளி 2:18)

இவர்களது நம்பிக்கை தேவன் வேறு இயேசு வேறு என்பதே.

இயேசு எப்படி தேவகுமாரன் ஆனார் என்று இயேசு சொல்லும்போது,

 தேவனால் பரிசுத்தம்பண்ணப்பட்டதாலும், அவரால் அனுப்பப்பட்டதாலுமே என்று யோவான் 10:36 என்கிறார்.

இதேபோல் சொலமோனை குறித்தும் அவனுக்கு நான் பிதாவாக இருப்பேன். அவன் எனக்கு குமாரனாக இருப்பான் என்று 2 சாமுவேல் 7:14 இல் கூறப்படுகிறது.

தேவனது குமாரன் என்றாலே தேவன் என்பவர் வேறு நபர் என்றாகிவிடும்.

-------


7.இயேசு பிதாவிடம் அதிகாரம் பெற்றவரே என்று இயேசு சொன்னார்னு எழுதுகிறார்.. அதாவது இவர் கடவுள்னா கடவுளுக்கு சமம்னா ஏன் பிதா கொடுத்து இவர் பெற வேண்டும்?


²⁶ “ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.”(வெளி 2:26)

-----------


8.தேவன் என்பவர் இயேசுவுக்கும் தேவனாயிருக்கிறார்…சோ இயேசு வேறு தேவன் வேறு;”


¹² “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.”(வெளி 3:12)


இதில் மட்டும் தேவனை “என் தேவன்” என இயேசு சொன்னதாக நான்கு தடவைகள் வந்துள்ளன.

------------


9.இயேசு என்பவர் தேவனது படைப்பின் ஆரம்பம்

“"லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;"”


  — வெளி 3:14 (TBSI)




இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு இன்னும் தெளிவாக இருக்கும்:


“And unto the angel of the church of the Laodiceans write; These things saith the Amen, the faithful and true witness, the beginning of the creation of God“And unto the angel of the church of the Laodiceans write; These things saith the Amen, the faithful and true witness, the beginning of the creation of God;

  — Revelation 3:14 (KJV)

அதாவது தேவன் முதலாவதாக இவரை படைத்ததாக இது சித்தரிக்கிறது.

-------


10.தேவன் வேறு இயேசு வேறு.. தேவன் தான் சகலத்தையும் படைத்ததாகவே இப்புத்தகம் கூறுகிறது


.

⁸ “அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.”


¹⁰ “இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்குமுன்பாக வைத்து:”

¹¹ “கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள். ” (வெளி 4:8,10-11)

இயேசுவும் இதில் அடங்கும் (வெளி 3:14)

---------


11.தேவன் வேறு.. ஆட்டுக்குட்டியாகிய இயேசு வேறு என்பதே இது கூறுவது


“”பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை. மறைத்துக்கொள்ளுங்கள்;””

— வெளி 6:16


ஆட்டுக்குட்டி வேறு தேவன் வேறு.


⁵ “அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.”

⁶ “அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.”

⁷ “அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்து புஸ்தகத்தை வாங்கினார்.”

⁸ “அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து:”

⁹ “தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,”

¹⁰ எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.


¹² அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்.

¹³ “அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன். (வெளி 5::5-10,12-13)


தேவன் வேறு இயேசு வேறு னு 5:9,10 இல் தெளிவாகவும், 5:7,13 இல் தேவனாகியவர் சிங்காசனத்தில் இருப்பதாகவும், இவரோ ஆட்டுக்குட்டியாக இருப்பதாகவும் சித்தரிக்கிறது.

--------

12.மீண்டும் தேவன் வேறு ஆட்டுக்குட்டி வேறு என இப்புத்தகம் சித்தரிக்கிறது.


¹⁰ அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.


¹¹ “தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழநின்று, சிங்காசனத்திற்குமுன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு:”

¹² “ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள்.”


¹⁷ “சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான். ” (வெளி 7:10-12,17)

அதாவது ஆட்டுக்குட்டி மற்ற ஆடுகளை மேய்ப்பவர்.

சோ இயேசு வேறு தேவன் வேறு


------

13.தேவன் வேறு அவருடைய கிறிஸ்து வேறு

.


¹⁰ “அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ்சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத்தள்ளப்பட்டுப்போனான்.” (வெளி 12:10)


14.மீண்டும் தேவன் வேறு இயேசு வேறு என்கிறது


⁴ ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.(வெளி 14:4)

----


15.தேவன் ஒருவரே பரிசுத்தர்.. அதாவது அவர் ஒருவர்.. ஆட்டுக்குட்டி வேறு தேவன் வேறு..


³ “அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.”


⁴ “கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள்.” (வெளி 15:3-4)

----------


16.ஆட்டுக்குட்டி கர்த்தாதி கர்த்தரால். ராஜாதி ராஜாவாம்


இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான்.”

— வெளி 17:14


இயேசுவை கர்த்தராக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36


ராஜாதி ராஜா என்பது ஏனைய மனித ராஜாக்களுக்கும் பைபிளில் பயன்படுத்த பட்டுள்ளது… உதாரணமாக தேவனே தன் வாயால் நெபுகாத்நசரை ராஜாதிராஜா என்கிறார் - எசேக்கியேல் 26:7


இதனால் தேவனாவதில்லை.


----------


17.தேவன் என்பவர் அவருடைய சிங்காசனத்தில் இருப்பவர்


¹ “இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நீயாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.”


⁴ “இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் வணக்கமாய் விழுந்து: ஆமென், அல்லேலூயா, என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள்.”


⁵ “மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது.”


⁶ “அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்.” (வெளி 19:1,4-6)


இங்கு தேவன் என்பவர் ஒரு நபராகவே சித்தரிக்கப்பட்டுள்ளார்…

-----------


18.தேவனையே தொழுது கொள்ளுமாறு தேவதூதன் கூறியதாக கூறப்பட்டுள்ளது. இயேசுவுக்கு இங்கு எங்குமே தேவன் என்ற பட்டம் வழங்கப்படவில்லை!


¹⁰ அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான்.(வெளி 19:10)


---------


19.இயேசுவின் பெயர் தேவனுடைய வார்த்தையாம்…. இந்த பெயரால் தான் கிறிஸ்தவர்கள் மனோ இச்சையால் வழிகெட்டனர்.


¹³ இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.

¹⁶ “ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.” (வெளி 19:13,16)

மேலும் குறிப்பு 16ஐ பார்க்க.

இயேசு வார்த்தை மூலம் உண்டானதால் இப்பெயர் வந்தது. இவர்களோ அவரையே தேவனது பேச்சாக மாற்றி தனி நபராக இருந்ததாக எழுதியுள்ளனர் (பார்க்க யோவான் 1:1)

இப்புத்தகமோ இயேசுவுக்கு தேவன் இருப்பதாகவும் (3:12), இயேசுவே முதல் படைப்பு (3:14) என்றும் கூறி இவர் கடவுளல்ல என்கிறது.

------


20.வேறு சிலருக்கும் நியாயத்தீர்ப்பு வழங்க அதிகாரம் கொடுக்கப்பட்டதாம். அவர்கள் இயேசுவோடு 1000 வருடம் அரசாண்டார்களாம்.


⁴ “அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.”(வெளி 20:4)


இவ்வாறே இயேசுவும் அதிகாரம் கொடுக்கப்பட்ட நபராக பவுலின் கடிதங்கள் கூட கூறுகின்றன


.----


21.மீண்டும் தேவன் வேறு கிறிஸ்து வேறு என சித்தரிக்கிறது இப்புத்தகம்

அதாவது கிறிஸத்து வேறு தேவன் வேறு

⁶ “முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.”(வெளி 20:6)


22.தேவன் தான் தான் மக்களுக்கு தேவனாக இருப்பார்.. இயேசுவல்ல… மக்கள் தேவனது பிள்ளையாக இருப்பார்களாம்.


² “யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.”


³ “மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.”


⁴ “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.”


⁵ “சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாத்குகிறேன் என்றார். பின்னும் அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.”


⁶ “அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.”


⁷ “ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.” (வெளி 21:2-7)


அதாவது ஜெயங்கொள்ளுகிறவன் தேவனுக்கு வாரிசாகி தேவனுடைதை எடுத்துக்கொள்வானாம்.. காரணம் அவன் தேவனது பையனாக இருப்பானாம்.. ஆனாலும் அவர் அவனுக்கு தேவனாக தான் இருப்பாராம். (21:7)

இயேசுவுக்கும் அவரே தேவன் (வெளி 3:12)


.

23.சர்வ வல்லமை உள்ள கர்த்தராகிய தேவன் வேறு இயேசு வேறு என மீண்டும் வேறுபடுத்தி கூறுகிறார்


²² அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்

²³ “நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.” (வெளி 21:22-23)


24.மீண்டும் யேசு வேறு தேவன் வேறு என பிரித்து கூறுகிறார்


¹ “பின்பு, பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான்.”


³ இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்.

⁴ “அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.”

⁵ அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள். (வெளி 22:1,3-5)


25 .மீண்டும் யோவான் தேவதூதனை வணங்க முற்படுகிறான்.. மீண்டும் ஏவதூதன் தேவனை வணங்குமாறே கூறுகிறார்.. ஆட்டுக்குட்டியையும் சேர்த்து வணங்கு என கூறவில்லை.


⁸ “யோவானாகிய நானே இவைகளைக் கண்டும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுக் கண்டபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன்.”


⁹ “அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள் என்றான்.” (வெளி 22:8-9)


26.மீண்டும் யேசு தன்னை குறித்து சொன்னதாக வருவதில் கூட, தன்னை கடவுளாக அறிமுகப்படுத்தியவில்லை!! தன்னை தாவீதின் வேறும் சந்ததியும் என்றே கூறுகிறார்.


முந்தினவர் பிந்தினவர் கதைக்கு ஆரம்பத்திலேயே விளக்கம் கூறிவிட்டேன்

.

இயேசு அவனவனுடைய கிரியைகளுக்கு தக்க பலனளிப்பாராம். இயேசுவை அதிகாரம் பெற்ற நபராக இது சித்தரிக்கிறது அவ்வளவே.


¹² “இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.”

¹³ “நான் அல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.”

¹⁴ “ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.”


¹⁶ “சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.”


²⁰ “இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.”

(வெளி 22:12-14,16,20)


தேவனானவர் இயேசுவுக்கும் தேவன் தான் -வெளி 3:12


சோ இயேசு தான் தேவன் என அடம்பிடிப்பதை நிறுத்தவும்


முந்தைய பதிவு: யூதாவின்படி இயேசு கடவுளா?

எபிரேயர் படி இயேசு கடவுள் அல்ல

 எபிரேயர் படி இயேசு கடவுள் அல்ல

————

இந்த புத்தகம் யாரென்று அறியப்படாத நபர் மூலமாக எபிரேயர்களுக்கு எழுதப்பட்ட கடிதம்


1.இதை எழுதிய ஆசிரியர் தேவன் வேறு இயேசு வேறு என வித்தியாசப்படுத்துகிறார்.


அதாவது இயேசவை தன் வாரிசாக தேவன் நியமித்தார் என்கிறார். அதாவது சொந்த பிள்ளை என்கிறார். இயேசு மூலமாக தேவன் உலகங்களை படைத்தார் என்கிறார். சோ இயேசு வேறு தேவன் வேறு.


¹ “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன்,”


² “இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.” (எபிரேயர் 1:1-2)

———–



2.மீண்டும் இயேசு வேறு தேவன் வேறு என வேறு பிரிக்கிறார். இயேசு தேவனுடைய வலது பக்கத்தில் உட்கார்ந்தாராம்! குறிப்பாக தேவன் இனப்பெருக்கம் செய்த குழந்தை இயேசு என்பதாக இவர் கருதுகிறார்.


³ “இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்தார்.” (எபிரேயர் 1:3)


——



3.இயேசு தேவனால் ஜனிப்பிக்கப்பட்ட (பெற்றெடுக்க பட்ட) பையன் என்பதே இவரது கருத்து.


இதற்காக தாவீதை குறித்து தேவன் சொன்னதாக கூறப்படும் வசனத்தையும் (சங் 2:7), சொலமோனை குறித்து தேவன் சொன்ன கருத்தையும் (2 சாமு 7:14-15) மிக்ஸ் பண்ணி, இயேசுவை குறித்து சொன்னதாக கதைவிடுகிறார்.


⁵ “எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா?” (எபிரேயர் 1:5)


எது எப்படியோ, இயேசு வேறு தேவன் வேறு என இவரும் வேறுபடுத்துகிறார்.

———–


4.மீண்டும் இயேசு வேறு தேவன் வேறு என்கிறார். அதாவது இயேசு என்பவர் தேவனுடைய மூத்த மகனாம்.


⁶ “மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார்.” (எபிரேயர் 1:6)


இப்படி ஒரு வசனம் பழைய ஏற்பாட்டில் இல்லை… சும்மா அடித்து விடுகிறார். ஆனாலும் இயேசு வேறு தேவன் வேறு என பிரிக்கிறார்.

———–



5.அதிகாரமுள்ள ராஜாக்களை தேவன் என சொல்லும் வழக்கம் பழைய ஏற்பாட்டில் உள்ளதால், சங்கீதம் 45 இல் ராஜாவை குறித்து அவரது ஊழியர்கள் கூறியதை, அப்படியே இயேசுவை குறித்து சொன்னதாக கதைவிடுகிறார். (அதில் அந்த ராஜாவுக்கு தகப்பன்மாரும், மகன்களும், மகளும், மனைவியும் இருப்பதோடு மட்டுமல்ல, அவருக்கு தோழர்களும், அவருக்கு ஒரு தேவனும் இருப்பதாக எழுதப்பட்டுள்ளது)


⁸ “குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.”


⁹ “நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்தத் தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்;” (எபிரேயர் 1:8-9)


இந்த வசனத்தில் கூட, குமாரன் எனப்படுபவருக்கு தேவன் இருப்பதாகவும், அந்த தேவன் தான் அவரை அவரது தோழர்களை விட மேன்மையாக்கி வைத்ததாகவும் கூறுகிறார்.. சோ இயேசு வேறு தேவன் வேறு என்பதே இவரது கொள்கை (1:9)


—————–


6 .இயேசு மூலமாக தேவன் படைத்தார் என்று நம்பிக்கையுடைய இவர், நோயாளி தேவனிடம் தன்னை பாதி வயதிலேயே சாகடித்து விட வேண்டாம் என ஜெபிக்கும் வசனத்தை , அப்படியே இயேசுவை குறிப்பதாக அவர் கதைவிடுகிறார்.


அத்தோடு இயேசுவை தேவன் பெற்ற மகன் என இவர் கருதுவதால், அவரும் பெற்றெடுத்த பின் நிலையாக உள்ளார் என்பதை கூறுவதற்கு இவ்வசனங்களை புகுத்துகிறார்.


¹⁰ “கர்த்தாவே, நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது;”


¹¹ அவைகள் அழிந்துபோகும்; நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போலப் பழைமையாய்ப்போகும்;


¹² “ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது மாறிப்போகும்; நீரோ மாறாதவராயிருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது.” (எபிரேயர் 1:10-12)


——————


7.குமாரனுடைய எதிரிகளை குமாரனது காலடியில் தேவன் போடும் வரை, தன் வலது பக்கத்தில் உட்கார சொன்னாராம்.


¹³ “மேலும், நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா?” -எபிரேயர் 1:13)


இவ்வசனங்களில் இயேசு தேவதூதரை விட மேலானவர் என்பதை காட்ட, இவ்வாறெல்லாம் திரித்து எழுதிய இவர், இயேசு வேறு தேவன் வேறு என்றே கருதுவதோடு, இயேசுவுக்கும் அந்த தேவன் தேவனாக இருக்கிறார் (1:9) என்கிறார்

————–


8.இயேசுவை தேவதூதரிலும் சற்று சிறியவராக்கினாராம். பிறகு அவரை முடிசூட்டினாராம்.இயேசு என்ற இரட்சிப்பின் அதிபதியை உபதிரவங்களால் பூரணப்படுத்தினாராம்.


⁹ “என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.”(எபிரேயர் 2:9-10)


¹⁰ “ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது.”


சோ இயேசுவை தேவனின் லிருந்து வித்தியாசப்படுத்தியே இவரும் எழுதியுள்ளார்

————-



9.மீணாடும் இயேசு வேறு தேவன் வேறு என வேறுபடுத்துகிறார்.


அதாவது தேவனது நாமத்தை இயேசு தன் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவே தேவனை துதிபாடுவாராம். (2:12)


அதேபோல தேவனிடத்தில் நம்பிக்கையாயிருப்பாராம்… நான் வேறு தேவன் வேறு பிரித்து சொன்னதாக சொல்கிறார் (2:13)


இயல்பிலே அவர் தேவனது பிள்ளை என்பதே இவரது கருத்து.. ஆனாலும் தேவன் இயேசுவுக்கும் தேவன் என்பதும் இவரது கருத்து

¹² “உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப்பாடுவேன் என்றும்;”


¹³ “நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார்

¹⁴ “ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், (எபிரேயர் 2:12-14)

சோ இயேசு வேறு தேவன் வேறு


—————–


10.இயேசு என்பவரும் தேவனது வீட்டில் மோசேயை போல ஏற்படுத்தப்பட்டவர் என்பதே இவரது கருத்து. அதாவது இயேசு வேறு தேவன் வேறு




² “மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்ததுபோல, இவரும் தம்மை ஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார்.”

⁴ “ஏனெனில், எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்.” (எபிரேயர் 3:2,4)

————



11.இயேசு என்பவர் தேவனது மகனாம்.. அவர் பிரதான ஆசாரியனாம். அவர் எபிரேயரை போல் பரிதவிக்கும் பிரதான ஆசாரியராம்..


ஆசாரியர் வேறு தேவன் வேறு..குமாரன் வேறு தேவன் வேறு.


¹⁴ “வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்.”

¹⁵ “நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.”

(எபிரேயம் 4:14-15)

—————–


12.இயேசு ஒன்றும் தானாக ஆசாரியனாக ஆகவில்லையாம்… தேவன் தான் அவரை அவ்வாறு உயர்த்தி ஏற்படுத்தினாராம்..

சோ தேவன் வேறு இயேசு வேறு என்பதே அவரது கருத்து




⁴ “மேலும், ஆரோனைப்போல தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை.”

⁵ “அந்தப்படியே கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை; நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று அவரோடே சொன்னவரே அவரை உயர்த்தினார்.”

⁶ அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார். (எபிரேயர் 5:4-6)

—————


13.இயேசு பூமியில் மனுசனாக உள்ள வேளையில் கூட தேவன் ஒருவர் இருந்துள்ளார்.. அவரிடமே இயேசு ன்னை இரட்சிக்குமாறு வேண்டினார் என இவர் எழுதுகிறார். ஆனாலும் அவர் அந்த தேவனோட பையன் என்பதே இதன் கருத்து.

⁷ “அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லைமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,”

⁸ “அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு,” (எபிரேயர் 5:7-8)

————-



14.பிரதான ஆசாரியன் என்ற நாமத்தை இயேசுவுக்கு கொடுத்ததே தேவன் தான் என்கிறார் இவர். அதாவது இயேசு வேறு தேவன் வேறு

¹⁰ மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார். (எபிரேயர் 5:10)

———–


15.இயேசு எப்போதுமே கிறிஸ்தவர்களுக்காக தேவனிடம் வேண்டுதல் செய்கிற ஆசாரியர் என்றே இதை எழுதியவர் கூறுகிறார்



²⁵ “மேலும், தமது மூலமாய்  தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.”


²⁶ “பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார்.” (எபிரேயர் 7:25-26)


சோ, தேவனிடம் வேண்டுதல் செய்பவர் தேவனல்ல…இயேசு வேறு தேவன் வேறு

————




16.இயேசு மகத்துவ ஆசனத்தின் வலது பாரிசத்தில் உட்காருகிறவராம்.. அதாவது தேவனுடைய ஆசனத்தில் அல்ல என்பது இவரது கருத்து.


இயேசு ஆசாரியன் ஊழியத்தை பெற்றவர்.


சோ அவரு வேறொரு நபர்.. தேவனல்ல


¹ “மேற்சொல்லியவைகளின் முக்கியமான பொருளென்னவெனில்; பரலோகத்திலுள்ள மகத்துவ ஆசனத்தின் வலதுபாரிசத்திலே உட்கார்ந்திருக்கிறவருமாய்,”


² “பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷரால் அல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ்செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு.”


⁶ “இவரோ விசேஷித்த வாக்குத்தத்தங்களின்பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்தியஸ்தராயிருக்கிறாரோ, அப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும் பெற்றிருக்கிறார்.” (எபிரேயர் 8:1-2,6)

———–


17.இயேசு தன்னை தேவனுக்கு பலியாக செலுத்தினாராம். மேலும் இயேசு என்பவர் மத்தியஸ்தர் என்பதே இவரது கருத்து


¹⁴ நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!


¹⁵ “ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.” (எபிரேயர் 9:14-15)


————–


18.தேவன் வேறு இயேசு வேறு என்பதே இவரது கொள்கை.. அதுமட்டுமின்றி யேசுவுக்கும் அந்த தேவனே தேவனாக இருக்கிறார் என்பதே இவரது கொள்கை



⁵ “ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்;”


⁶ “சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரணபலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர்.”


⁷ “அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்.”

⁹ “தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன் என்று சொன்னார். இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார்.” (எபிரேயர் 10:5-7,9)


இயேசுவுக்கு உடலை ஆயத்தம் செய்தவர் தேவன், இயேசு அந்த தேவனை என் தேவனே என அழைத்ததாக அவர் குறிப்பிடுகிறார்

—————-




19.இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணினவர் தான் தேவன் என்கிறார்..


²⁰ “நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன்,” (எபிரேயர் 13:20)

முந்தைய பதிவு: 

அடுத்த புத்தகம்: யாக்கோபின் படி இயேசு கடவுளா

யூதாவின் படி இயேசு கடவுள் அல்ல


 யூதா படி இயேசு கடவுள் அல்ல

————————–

1.தேவன் வேறு இயேசு வேறு… பிதாவே தேவன் என்பதே இவரது கொள்கை.



¹ “இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாயிருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது:” (யூதா 1:1)


————-

.2 . ஒன்றான தேவன் வேறு இயேசு வேறு என்பதே இவரது கருத்து



⁴ “ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்களாகிய சிலர் பக்க வழியாய் நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது.” (யூதா 1:4)

——-


3.தேவன் ஒருவரே ஞானமுள்ளவர் ஆவார்… சோ இயேசு கடவுள் அல்ல


²⁵ தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். (யூதா 1:25)


அடுத்தபதிவு

வெளிப்படுத்தினவிஷேசத்தின்படி இயேசு கடவுளா?

1 & 2 யோவான் படி இயேசு கடவுள் அல்ல

 1 யோவான் படி இயேசு கடவுள் அல்ல

—————————-


இது யோவான் என்பவரால் எழுதப்பட்ட கடிதம்



இயேசு என்பவர் பிதாவிடம் பரிந்து பேசுபவராகவே உள்ளார்.. சோ அவர் பிதாவுக்கு சமமானவரல்ல!



¹ “என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.”

(1 யோவான் 2:1)

————






…2. இயேசு என்பவர் ஜீவ வார்த்தை, அவர் பிதாவிடமிருந்து வந்ததாக இவர் கருதுகிறார்



¹ “ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.”

² “அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம்.”


³ “நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.” (1 யோவான் 1:1-3)

———


3 இயேசு என்பவர் அந்த தேவனுடைய பையன் என்பதே இவரது கருத்து




⁷ “அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.” (1 யோவான் 1:7)


————


4.. பிதாவே தேவன் என்பதே இவரது கருத்து


¹ நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை. (1 யோவான் 3:1)


———


5.இயேசு என்பவர் அந்த தேவனது பையன் என மீண்டும் வேறுபடுத்தி கூறுகிறார்.

²³ “நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது.”(1 யோவான் 3:23)

—————-


தேவன் என்பவர் பிதா தான் என்பதே இவரது கருத்து.. இயேசு என்பவர் அவருடைய ஒரே பையன் என்பதேயாகும்… சோ இயேசு வேறு தேவன் வேறு


¯

⁹ தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.


¹⁰ “நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.”(1 யோவான் 4:9-10)


——————


7.தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை என்கிறார்

அதாவது தேவன் எனப்படுபவர் வேறு இயேசு வேறு… அந்த தேவனை யாருமே கண்டதில்லை என்பதாகும்.


¹² தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.

(1 யோவான் 4:12)


———–


8.இயேசுவை ரட்சகராக அனுப்பியதே தேவனாகிய பிதா, அவர் தேவனது பையன் என்பதே இவரது கருத்து…. அதாவது இயேசு வேறு தேவன் வேறு


¹⁴ பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்.

¹⁵ “இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான்.”(1 யோவான் 4:14-15)


———————–


5:7 திரித்துவக்தை பேசுகிறார்?


.

⁷ “(பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;”

⁸ “பூலோகத்திலே) சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.”(1 யோவான் 5:7-8)

பிதா , வார்த்தை, ஆவி என்பன ஒன்றாக இருக்கிறார்கள் என்பது ஒரே கடவுளாக இருக்கிறார்கள் என்பதல்ல!

எப்படி ஆவி, ஜலம், ரத்தம் ஆகியன ஒரே பொருள் இல்லையோ அதே போன்று தான்.

பிதா ஆவி வார்த்தை என்பன ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதே இதன் அர்த்தம்.

இது குறித்து தனியாக பதிவிடுகிறேன்



——-




10.மீண்டும் யேசு வேறு தேவன் வேறு.. இயேசு அவரது பையன் என்கிறார்



⁹ “நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே.” (1 யோவான் 5:9)


————

.


11.மீண்டும் இயேசு வேறு தேவன் வேறு என கூறுகிறார்.

.

¹¹ “தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்.”

¹² “குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.” (1 யோவான் 5:11-12)


—————–



12.இயேசுவே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாக இருக்கிறார் என இவர் சொல்கிறாரா?


¹⁹ “நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.”

²⁰ “அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார். (1 யோவான் 5:19-20)


இந்த புத்தகம் முழுவதும் பிதாவையே தேவன் என கூறிவிட்டு, இயேசுவை குமாரன் என்று கூறிவிட்டு, கடைசியில் இயேசுவை இவரே மெய்யான தேவன் என சொன்னால், அது முற்றிலும் முரண்பட்டதாக இருப்பதோடு, பிதா தேவனல்ல என கூறுவதாகும்…


இவரே மெய்யான தேவன் என கூறும்போது, இவர் அல்லாதவர் மெய்யான தேவன் அல்ல என தெளிவாகிறது.. ஆகவே பிதா தேவனல்ல என வரும். அதனால் இது முரண்பட்ட கருத்தாக அமையும்.


யோவான் சுவிசேசத்தில் பிதா ஒருவரே மெய்யான தேவன் என இயேசு கூறியதாக எழுதப்பட்டிருக்கிறது. (யோவான் 17:3). அப்படி எனின் பிதா தவிர மற்றவர்கள் மெய்யான தேவன் அல்ல என்பதாகும்.


ஆகவே 1 யோவான் 5:20 இலுள்ள இவரே என்பது இயேசுவை குறிக்காது.



மாறாக 5:19 இல் தேவனால் இவர்கள் உண்டாயிருப்பதாக சொல்லி, 20வது வசனத்தில் அந்த தேவனுடைய பையன் வந்து இவர்களுக்கு புத்தியை கொடுத்ததாகவும், அவருடைய பையன் சத்தியமுள்ளவர் என்றும் அவரது பெயர் இயேசு கிறிஸ்து என்றும் கூறுகிறார்.


அதன் பின்னர் தான், இவரே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாக இருக்கிறார் என்கிறார்..


இங்கே உள்ள இவரே (houtos) என்பது மிக சமீபத்தில் கூறப்பட்டவரையே குறிக்க வேண்டிய அவசியமில்லை!


உதாரணமாக அப்போஸ்தலர் 7:18-19 இல், யோசேப்பை அறியாத ராஜா ஒருவன் எழுப்பியதாகவும், அவன் நம் ஜனங்களை வஞ்சனையாக நடத்தி , உபத்திரவப்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.


இங்கே 7:18 இல் கடைசி வார்த்தை யோசேப்பு என்பதாகும். 19ம் வசனம் houtos என்றே ஆரம்பிக்கிறது. அது சமீபமாயிருக்கும் வார்த்தையையே குறிக்க வேண்டுமாயின் யோசேப்பு தான் ஜனங்களை வஞ்சனையாக நடத்தி உபத்திரவப்படுத்தினார் என்று அர்த்தம் வரும்.


ஆகவே அது மிகவும் சமீபத்தில் இருப்பதை குறிக்கவேண்டியதில்லை.. சொல்லவரும் மொத்த கருத்தையும் வைத்தே அதை தீர்மானிக்க வேண்டும்.

ஆகவே மெய்யான தேவன் என கூறப்படுவது இயேசுவாக இருக்க முடியாது. ஏனெனில் இயேசு வேறு தேவன் வேறு என இதே கடிதத்தில் 4:9-10,14-15 , 5:9, 5:11 வேறுபிரித்து கூறியுமுள்ளார்.


அதேபோல தேவனை யாரும் ஒருபோதும் கண்டதில்லை (4:12) என கூறியுமுள்ளார். ஆனால் இயேசுவை குறித்து, அவரை தொட்டு பார்த்ததாகவும், கண்ணால் கண்டதாகவும் ஆரம்பத்திலேயே எழுதுகிறார் (1:1-3).


சோ 5:20 இயேசுவை மெய்யான தேவன் என சொல்லவில்லை !!! மாறாக இயேசு யாரை ஒரே மெய்யான தேவன்-யோவான் 17:3 என சொன்னாரோ அவரையே குறிக்கும்… இயேசுவை அல்ல!!!



———————————-


2 யோவான் படி இயேசு கடவுள் அல்ல

——————————-


இது யோவான் எழுதின இன்னொரு கடிதமாக கருதப்படுகிறது


1.தேவன் வேறு இயேசு வேறு என்பதே இவரது கருத்து.. அதாவது பிதாவே தேவன் ன்பதாகும்.



³ “பிதாவாகிய தேவனாலும் பிதாவின் குமாரனாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும், சத்தியத்தோடும் அன்போடுங்கூட, உங்களோடிருப்பதாக.” (2 யோவான் 1:3)

——



2.தேவன் வேறு கிறிஸ்து வேறு என்பதே இவரது கருத்து


⁹ “கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன். (2 யோவான் 1:9


முந்தைய பதிவு: 1&2 பேதுருவின்படி இயேசு கடவுளா

அடுத்த பதிவு: யூதாவின்படி இயேசு கடவுளா

1 & 2 பேதுரு படி இயேசு கடவுள் அல்ல

யாக்கோபின் படி இயேசு கடவுள் அல்ல

 1 பேதுரு படி இயேசு கடவுள் அல்ல

—————-


இது பேதுரு கிறிஸ்தவத்தை ஏற்ற பரதேசிகளுக்கு எழுதியதாக கருதப்படுகிறது (1:2)



1.பிதாவே தேவன் என்பதே இவரது கருத்து


² “பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந்தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது.”


³ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; (1 பேதுரு 1:2-3)

——–_—–



2.இயேசு என்பவர் ஆட்டுக்குட்டி.. தேவன் வேறு அவர் வேறு என்பதே இவரது கொள்கை


¹⁹ குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.

²⁰ “அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார்.”


————


3.இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பி மகிமையை கொடுத்தது தேவன் தான் என்பதே அவரது கருத்து


²¹ “உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்மேலிருக்கும்படி, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்.”(1 பேதுரு 1:21)


———–.


4.இயேசு மூலமாக தேவனுக்கு பலி செலுத்துவதற்காம்.. அதாவது தேவன் வேறு இயேசு வேறு



“”ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.””

— 1 பேதுரு 2:5


————


4.கர்த்தராகிய தேவன் வேறு இயேசு வேறு…


இயேசு இவர்களை தேவனிடம் சேர்ப்பதற்காக கொலை செய்யப்பட்டாராம்.


இப்போது தேவனது வலது பக்கத்தில் இருக்கிறாராம்.. அதாவது தேவன் வேறு இயேசு வேறு.


¹⁵ கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.


¹⁸ “ஏனெனில், கிறிஸ்துவும் நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.”


²² “அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலது பாரிசத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. (1 பேதுரு 3: 15,18,22)

—————-


6.எல்லாவற்றிலும் இயேசு மூலமாக தேவன் மகிமைப்படும்படி செய்யவேண்டும் என்கிறார். அதாவது இயேசு வேறு தேவன் வேறு என கூறுகிறார்



¹¹ ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்து  மூலமாய் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (1 பேதுரு 4:11)


———


7.இயேசு என்பவர் வேறு தேவன் வேறு.. என்று மீண்டும் வேறுபடுத்தி கூறுகிறார்

.


¹⁰ “கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக;” (1 பேதுரு 5:10)

—————-


2 பேதுரு படி இயேசு கடவுள் அல்ல

———————————————————

இது பேதுருவால் எழுதப்பட்ட இன்னொரு கடிதமாக கருதப்படுகிறது



1.இயேசுவை தேவன் என இவர் சொல்கிறாரா?


¹ “நம்முடைய தேவனும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது:”

² தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது. (2 பேதுரு 1:1-2)



இரண்டாம் வசனத்திலேயே தேவன் வேறு இயேசு வேறு என தெளிவாக கூறும்போது, முதலாம் வசனத்தில் யேசுவை தேவன் என கூறியிருப்பார் என கருதுவது மடத்தனமாகும்.


ஆகவே முதலாம் வசனம் 2 தெசலோனிக்கேயர் 1:11(12) இல் கூறப்பட்டது போன்ற வசன அமைப்பே இங்கும் உள்ளது. ஆனால் அங்கே சரியாக இயேசு வேறு தேவன் வேறு தெளிவாக மொழிபெயர்த்திருப்பார்கள்.



ஆகவே முதலாம் வசனம், “நம் தேவனுடைய நீதியாலும், இரட்சகராக இயேசு கிறிஸ்துவுடைய நீதியாலும்” என்றே அமைய வேண்டும்.


ஏனெனில் அடுத்த வசனத்திலேயே தேவன் வேறு, இயேசு வேறு என வேறுபடுத்தி எழுதியிருக்கிறார்


அப்படி இருக்க, இயேசுவை தேவனென அவர் சொன்னதாக சொல்வது அவரது கருத்தை திரிப்பதாகும்


————


2 பிதாவே தேவன்.. இயேசு அவரது பையன் என்பதே இவரது கருத்து


¹⁷ “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது,”


¹⁸ “அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம்.” (2 பேதுரு 1:17-18)


அதாவது இயேசு வேறு தேவன் வேறு


அடுத்த பதிவு: 1&2 யோவான்படி இயேசு கடவுளா?

யாக்கோபின் படி இயேசு கடவுள் அல்ல

முந்தைய பதிவு: எபிரேயர்

 யாக்கோபின் படி இயேசு கடவுள் அல்ல

——————————————————-

இது யாக்கோபினால் இஸ்ரேலிய கோத்திர கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதமாக கருதப்படுகிறது



1.தேவன் வேறு இயேசு வேறு என இவர் வேறுபடுத்துகிறார். சோ இயேசு கடவுள் அல்ல


¹ “தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது:” (யாக்கோபு 1:1)

——–


2.பிதாவே தேவன் என்பதே இவரது கொள்கை

.”


²⁷ “திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது. “(யாக்கோபு 1:27)

———-


3 தேவன் ஒருவர் தான் உள்ளார்.


“”தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன.””

— யாக்கோபு 2:19

சோ இயேசு கடவுள் அல்ல.. பிதா தான் அந்த ஒருவர் (1:27)

——–


4.மீண்டும் பிதா தான் தேவன் என கூறுகிறார்


“அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்.”

— யாக்கோபு 3:9

அடுத்த பதிவு: 1&2 பேதுருவின்படி இயேசு கடவுளா


1 & 2 தெசலோனிக்கேயர் படி இயேசு கடவுள் அல்ல

 கொலோசெயர் படி இயேசு கடவுள் அல்ல

1 தெசலோனிக்கேயர் படி இயேசு கடவுள் அல்ல

—————————

இது பவுல் தெசலோனிக்கியேர் சபைக்கு எழுதிய கடிதமாக கருதப்படுகிறது



1.தேவன் வேறு இயேசு வேறு.. தேவன் என்பவர் பிதாவே.. கர்த்தர் என்பவர் இயேசு என்பதே பவுலின் நம்பிக்கை



¹ “பவுலும், சில்வானும், தீமோத்தேயும், பிதாவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.”


² “தேவனுக்குப் பிரியமான சகோதரரே, உங்கள் விசுவாசத்தின் கிரியையையும், உங்கள் அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூர்ந்து,”

(1 தெசலோனிக்கேயர் 1:1-2)


இயேசுவுக்கும் அவர் தான் தேவன் (எபேசியர் 1:17),

இயேசுவை கர்த்தராக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36


—————



2.இயேசு என்பவரை தேவன் தான் மரித்தோரிலிருந்து எழுப்பினார் ன்பதே பவுலின் நம்பிக்கை.. அவர் வேறு தேவன் வேறு


¹⁰ “அவர் மரித்தோரிலிருந்தெழுப்பினவரும், இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும், அறிவிக்கிறார்களே. ” (1 தெசலோனிக்கேயர் 1:10)


——————

3.மீண்டும் இயேசுவை கர்த்தராம், பிதாவை தேவனாம்.. இதற்கு குறிப்பு 1 போதுமானது.


¹¹ நம்முடைய பிதாவாகிய தேவனும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் உங்களிடத்திற்கு எங்களை நேராக வழிநடத்துவாராக. (1 தெசலோனிக்கேயர் 3:11)


———


4.பிதாவே தேவன் என்கிறார். அதனால் மீண்டும் யேசு வேறு தேவன் வேறு என தெளிவு


¹³ “இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக. ” (1 தெசலோனிக்கேயர் 3:13)


————


5.இயேசு இறந்த பின் எழுந்தது போல, தேவன் கிறிஸ்தவர்களையும் எழுப்புவாராம். பிறகு மேகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்களாம்.. இயேசுவோடு இருப்பார்களாம்.



¹⁴ இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார்.


¹⁶ “ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.”


¹⁷ “பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.” (1 தெசலோனிக்கேயர் :14,16-17)


இயேசுவை தேவனே எழுப்பியதால், இயேசு மரணித்த பின் எழுந்துள்ளார் என்பதே பவுலின் நம்பிக்கை…

சோ தேவன் வேறு இயேசு வேறு

——————————-




2 தெசலோனிக்கேயர் படி இயேசு கடவுள் அல்ல

————————————–


இது பவுல் தெசலோனிக்கியேர் சபைக்கு எழுதிய இன்னொரு கடிதமாக கருதப்படுகிறது



1.பிதாவே தேவன்.. இயேசு கர்த்தர் என்பதே பவுலின் நம்பிக்கை.. சோ இயேசு வேறு தேவன் வேறு



¹ “பவுலும், சில்வானும், தீமோத்தேயும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குள்ளும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது:”

² நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

(2 தெசலோனிக்கேயர் 1:1-2)


பிதா தான் இயேசுவ்கும் தேவன் -எபேசியர் 1:17 என்பதே பவுலின் நம்பிக்கை

இயேசுவை கர்த்தராக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36

——————-



2.இயேசு வேறு தேவன் வேறாக பிரித்து பவுல் எழுதுகிறார்


¹¹ “ஆகையால், நம்முடைய தேவனும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் அளிக்கும் கிருபையின்படியே. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் உங்களிடத்திலும், நீங்கள் அவரிடத்திலும் மகிமைப்படும்பொருட்டாக;” (2 தெசலோனிக்கேயர் 1:11)




“”நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்திய ஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாய் நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும்,””

— 2 தெசலோனிக்கேயர் 2:16


சோ இயேசு வேறு தேவன் வேறு!!!!!

அடுத்த பதிவு: 1&2 தீமோத்தேயுவின்படி இயேசு கடவுளா

கொலோசெயர் படி இயேசு கடவுள் அல்ல

பிலிப்பியர் படி இயேசு கடவுள் அல்ல

 கொலோசெயர் படி இயேசு கடவுள் அல்ல

——————-


இது கொலோசே ஊரில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதிய கடிதமாக கருதப்படுகிறது.


.

1.தேவன் வேறு இயேசு வேறு. தேவன் என்பவரே பிதா என்பதே பவுலின் நம்பிக்கை


.

² கொலோசே பட்டணத்தில் கிறிஸ்துவுக்குள் பரிசுத்தவான்களும் விசுவாசிகளுமாயிருக்கிற சகோதரர்களுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. (கொலோசெயர் 1:2)

——–


2.இயேசுவின் பிதாவே தேவன் என்பதே பவுல் கூறும் கருத்து


⁵ “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம்.” (கொலோசெயன் 1:5)


————–


3 . இயேசு என்பவர் தேவனால் பெறப்பட்ட மகன்.. தத்தெடுக்கப்பட்ட மகன் அல்ல என்றும், அவர் சகல படைப்புகளுக்கு முன்பும் இருந்ததாகவும், அவரைக் கொண்டே தேவன் சகலத்தையும் படைத்தார் என்பதும் பவுலின் நம்பிக்கை .

அதாவது அந்த ஒரே தேவன் இயேசு அல்ல.. அவரது பையனே அவர் என்பதே பவுலின் நம்பிக்கை



¹⁵ “அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வசிருஷ்டிக்கும் முந்தினபேறுமானவர்.”


¹⁶ “ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.”


¹⁷ “அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.”


¹⁸ “அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.” (கொலோசெயர் 1:15-18)


அப்படி இருந்தும் இயேசுவுக்கும் அந்த பிதாவே தேவன் (எபேசியர் 1:17)

—————-


4.தேவன் வேறு இயேசு வேறு என்பதே பவுலின் நம்பிக்கை.. பிதாவே தேவனாம்


.² “அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன்.” (கொலோசெயர் 2:2)


———–


5.இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பியவரே தேவன் என்கிறார் பவுல்


¹² “ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.”

(கொலோசெயர் 2:12)

————-




6.இயேசு தேவனது வலது பக்கத்தில் இருக்கிறாராம். இதன்மூலம் இயேசு வேறு தேவன் வேறு என தெளிவு


¹ “நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.” (கொலோசெயர் 3:1)

———————–



7.இயேசுவின் நாமத்தினால் தேவனை ஸ்தோத்திரிக்குமாறு பவுல் கூறுகிறார்.. இதன்படி இயேசு வேறு தேவன் வேறு என்பதே பவுலின் நம்பிக்கை ஆகும்


¹⁷ “வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.”“” (கொலோசெயர் 3:17)


————

அடுத்த பதிவு: 1&2 தெசலோனிக்கேயர்படி இயேசு கடவுளா

பிலிப்பியர் படி இயேசு கடவுள் அல்ல

எபேசியர் படி இயேசு கடவுள் அல்ல

 பிலிப்பியர் படி இயேசு கடவுள் அல்ல

———————-

பிலிப்பி என்ற ஊரில் வாழ்ந்த இறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதியதாக நம்பப்படுகிறது


1.பிலிப்பியரினதும் பவுலினதும் பிதாவே தேவனாம்.. இயேசு என்பவர் கர்த்தராம்


² நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. (பிலிப்பியர் 1:2)


இயேசுவை கர்த்தராக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36

———


2.இயேசுவின் நீதியின் கரிகால் தேவனுக்கு மகிமை, துதி உண்டாகுமாம். அதாவது இயேசு வேறு தேவன் வேறு.


¹⁰ “தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி. (பிலிப்பியர் 1:10)

————-


3.இயேசு தேவனுடைய ரூபமாம். ஆனாலும் தன்னை தேவனுக்கு சமமாயிருப்பதை கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் தன்னை தாழ்த்தினாராம்.


அதனால், தேவன் அவரை உயர்ந்த அந்தஸ்த்துக்கு உயர்த்தினார் என்பதே பவுலின் நம்பிக்கை.

அதாவது இயேசு கடவுளல்ல… கடவுளால் அந்தஸ்து உயர்த்தப்பட்டவர் என்கிறார். காரணம் அவர் தன்னை தாழ்த்தினாராம்.



⁵ கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;


⁶ “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,”


⁷ “தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.”


⁸ “அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.”


⁹ “ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,”


¹⁰ “இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,”


¹¹ “பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். (பிலிப்பியர் 2:5-11)

—————



3.இயேசு வேறு தேவன் வேறு.பிதாவே தேவன் என்பது பவுலின் நம்பிக்கை


¹⁹ என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.


²⁰ நம்முடைய பிதாவாகிய தேவனானவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (பிலிப்பியர் 4:19-20)

——————-


கொலோசெயர் படி இயேசு கடவுள் அல்ல

எபேசியர் படி இயேசு கடவுள் அல்ல

கலாத்தியர் படி இயேசு கடவுள் அல்ல

 எபேசியர் படி இயேசு கடவுள் அல்ல

—————–


எபேசு பட்டணத்து கிறிஸ்தவ மக்களுக்கு பவுல் எழுதிய கடிதமாக இது கருதப்படுகிறது.



1.இயேசு வேறு தேவன் வேறு.. பிதாவே தேவன் என்பதே பவுலின் நம்பிக்கை.



² “நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாவதாக.”


³ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். (எபேசியர் 1:1-2)


————-

2 .எபேசியரும் இயேசு மூலமாக தேவனது வாரிசு பிள்ளைகளாம்.. இதன்படியும் யேசு வேறு தேவன் வேறு என்பதே தன் நிலைப்பாடென உறுதிபடுத்துகிறார்



⁶ “தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.” (எபேசியர் 1:6)

———–


3.தேவன் என்பவர் இயேசுவுக்கும் தேவனாக இருக்கிறார் என்பதே பவுலின் நம்பிக்கை (எபேசியர் 1:17)

அவரே இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினாராம்.


¹⁷ “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,”


¹⁸ “தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்;”


¹⁹ “தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்.” (எபேசியர் 1:17-19)


——————


4.இயேசுவின் அந்தஸ்தை உயர்த்தியதே தேவன் தான், அவரை தன் வலது பக்கத்தில் உட்கார செய்ததும் தேவன் தான், சகலத்தையும் இயேசுவுக்கு கீழ் படுத்தி கொடுத்துவரும் தேவன் தான், சபைக்கு தலைவனாக இயேசுவை ஆக்கியதும் தேவன் தான் என்பதே பவுலின் நம்பிக்கை


²⁰ “எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில் மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக,”


²¹ “அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து,”


²² “எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி,”


²³ எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்

(எபேசியர் 1:20-23)


———


5.பவுல் பிதாவிடமே வேண்டுதல் செய்கிறார்


.

¹⁵ “நம்முடைய கர்த்தாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு,”

¹⁶ “நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும், (எபேசியர் 3:15-16)

———-


6.எல்லோருக்கும் தேவன் ஒருவரே என்பதே பவுலின் நம்பிக்கை.. அதுவே

⁵ “ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்,”


⁶ “எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர்.” (எபேசியர் 4:5-6)

அவரே இயேசுவுக்கும் தேவன் என அவரே குறிப்பிடுகிறார் (எபேசியர் 1:17)

————-



7.எபேசியரை இயேசுவுக்குள் மன்னித்தது தேவன் தான் என்கிறார் பவுல்.. அதாவது தேவன் வேறு இயேசு வேறு


.

³² “ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். (எபேசியர் 4:32)


————


8.இயேசு தன்னை தேவனுக்கு பலியிட்டாராம்…சோ இயேசு வேறு தேவன் வேறு என்பதே பவுலின் நம்பிக்கை


² “கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.” (எபேசியர் 5:2)

————


9.பவுல் இயேசுவின் பெயரால் தேவனை ஸ்தோத்திரிக்கிறாராம்.. அதாவது தேவன் வேறு இயேசு வேறு


²⁰ “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து,” (எபேசியர் 5:20)

————–


10.பிதாவே தேவன்.. இயேசு கர்த்தர் என்பதே பவுலின் நம்பிக்கை


““”பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், சகோதரருக்குச் சமாதானமும் விசுவாசத்தோடு கூடிய அன்பும் உண்டாவதாக.””

— எபேசியர் 6:23

இயேசுவை கர்த்தராக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36


சோ இயேசுவை கடவுள் என அடம்பிடிப்பதை நிறுத்தவும்


பிலிப்பியர் படி இயேசு கடவுள் அல்ல

கலாத்தியர் படி இயேசு கடவுள் அல்ல

2 கொரிந்தியரின்படி இயேசு கடவுள் அல்ல

 கலாத்தியர் படி இயேசு கடவுள் அல்ல

————

கலாத்தியா எனும் ஊரில் வாழ்ந்த இறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதியதாக இது கருதப்படுகிறது.


1.இயேசு என்பவர் தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவர். தேவன் என்பவரே பிதா.. சொ இயேசு வேறு தேவன் வேறு


¹ “மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும், அப்போஸ்தலனாயிருக்கிற பவுலாகிய நானும்,” (கலாத்தியர் 1:1)


——-



2.இயேசு வேறு தேவன் வேறு.. பிதா தான் தேவன். அந்த தேவனுடைய சித்தப்படி தான் இயேசு கிறிஸ்தவர்களின் பாவத்துக்காக தன்னை ஒப்புக்கொடுத்தாராம்.    



³ “பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக;”


⁴ அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்; (கலாத்தியர் 1:3-4)

———.


3.இயேசு என்பவர் தேவனுடைய குமாரன் என்பதே பவுலின் நிலைப்பாடு.. அதாவது தேவன் இயேசு அல்ல!

¹⁶ “தம்முடைய குமாரனை நான் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும் பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது, உடனே நான் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசனைபண்ணாமலும்;” (கலாத்தியர் 1:16)


——-


4.இயேசுவுக்கு சகோதரர் உண்டு என்பதே பவுலின் நம்பிக்கை


¹⁹ “கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் காணவில்லை.” (கலாத்தியர் 1:19))


———-


5.இயேசு என்பவர் ஆபிரகாமின் ஒரு சந்ததி என்பதே பவுலின் நிலைப்பாடு.



¹⁶ “ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள்பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைக்குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே.”(கலாத்தியர் 3:16)


தேவன் ஒன்றும் ஆபிரகாமின் சந்ததியுமல்ல.. தேவன் தான் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் பண்ணியவர். இயேசு என்பது அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட சந்ததி என்பதே அவரது கருத்து

——


6.தேவன் என்பவர் ஒருவரே என்பதே பவுலின் நம்பிக்கை


²⁰ “மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவனல்ல, தேவனோ ஒருவர். (கலாத்தியர் 3:20)


அந்த தேவன் இயேசு அல்ல. பிதா என்பவரே தேவன் என்பதே பவுலின் நம்பிக்கை


———

இயேசு என்பவர் பெண்ணிடம் பிறந்தவரும், நியாயபிரமானத்துக்கு கீழானவர். அவர் தேவனுடைய மகனாம்.. அவரை தேவன் அனுப்பினாராம்.

சோ தேவன் வேறு இயேசு வேறு என்பதே பவுலின் நம்பிக்கை



⁵ “காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.” (கலாத்தியர் 4:5


————


8.கலாத்தியரும் பிள்ளைகளாக இருப்பதால், குமாரனுடைய ஆவியை தேவன் அவர்களது இதயத்தில் அனுப்பினாராம். இதனால் இயேசு மூலமாக கலாத்தியரும் தேவனது வாரிசாம்… (அதாவது தேவன் செத்து போனால் , கலாத்நியருக்கு பங்கு கிடைக்கும் போல). இதன்படி இயேசு வேறு தேவன் வேறு!!


⁶ “மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.”


⁷ “ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய். (கலாத்தியர் 4:6-7)


எபேசியர் படி இயேசு கடவுள் அல்ல

2 கொரிந்தியர் படி இயேசு கடவுள் அல்ல

 1 கொரிந்தியரின்படி இயேசு கடவுள் அல்ல

2 கொரிந்தியரின்படி இயேசு கடவுள் அல்ல

இது பவுல் கொரிந்தியருக்கு எழுதிய அடுத்த கடிதமாக கருதப்படுகிறது


கிறிஸ்தவர்களுடைய பிதாவும் இயேசுவும் பிதாவுமான நபர் தான் கடவுளாம். சோ இயேசு வேறு.. பிதா என்ற தேவன் வேறு என்பதே பவுலின் நம்பிக்கை


² “நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.”


³ “நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.” (2 கொரிந்தியர் 1:2-3)


தேவன் என்பவர் தான் கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவர்களை ஸ்திரப்படுத்தி , பவுலையும் அவரது குழுவையும் அபிசேகம் பண்ணியவராம்.. சோ இயேசு வேறு தேவன் வேறு


²¹ “உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே.” (2 கொரிந்தியர் 1:21)


3.சாத்தானை கூட பிரபஞ்சத்தின் தேவன் என கூறும் பவுல், இயேசுவை மட்டும் கடவுளென சொல்வதேயில்லை.. மாறாக பிதா என்பவரையே தேவன் என்கிறார்


⁴ “தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.” (2 கொரிந்தியர் 4:4)

4.இயேசுவை எழுப்பியவர் இயேசு மூலமாக பவுலையும் கிறிஸ்தவர்களையும் எழுப்புவாராம். அதாவது இயேசு வேறு.. எழுப்புபவரான தேவன் வேறு.


¹⁴ “கர்த்தராகிய இயேசுவை எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி, உங்களுடனேகூடத் தமக்குமுன்பாக நிறுத்துவாரென்று அறிந்திருக்கிறோம். (2 கொரிந்தியர் 4:14)


5 . தேவன் வேறு இயேசு வேறு.. தேவனானவர் இயேசு மூலமாக பவுலையும் கிறிஸ்தவர்களையும் தன்னோடு ஒப்புரவாக்கினாராம்.


¹⁸ “இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.”


¹⁹ “அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார்.” (2 கொரிந்தியர் 5:18-19)


6.தேவன் இயேசுவை பாவமாக ஆக்கினாராம்… சோ பாவமாக்கிய தேவனும் பாவமாக்கப்பட்டவரும் வேறு வேறு.. சோ இயேசு வேறு தேவன் வேறு.


²¹ “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார். (2 கொரிந்தியர் 5:21)


7.தேவன் தான் சர்வ வல்லமையுள்ள கர்த்தர்..


”அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார். “”

— 2 கொரிந்தியர் 6:18


இயேசு என்பவர் தேவனால் கர்த்தராக ஆக்கப்பட்டவர் -அப்போஸ்தலர் 2:36

8.என்றென்றும் ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவன் என்பவர் இயேசுவின் பிதா என்பதே பவுலின் நம்பிக்கை


“”என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறதில்லையென்று அறிவார்.””


— 2 கொரிந்தியர் 11:31

இயேசு பலவீனத்தால் இறந்தார்.. ஆனால் தேவனது வல்லமையால் பிழைத்திருக்கிறாராம். இதேபோல் பவுலும் குழுவும் பிழைத்திருப்பார்களாம்.


⁴ “ஏனெனில் அவர் பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையினால் பிழைத்திருக்கிறார்; அப்படி நாங்களும் அவருக்குள் பலவீனராயிருந்தும், உங்களிடமாய் விளங்கிய தேவனுடைய வல்லமையினால் அவருடனேகூடப் பிழைத்திருப்போம்.” (2 கொரிந்தியர் 13:4)


சோ தேவன் வேறு இயேசு வேறு.

—————–


தேவன் என்பவர் வேறு.. பரிசுத்த ஆவி என்பவர் வேறு.. இயேசு என்பவர் வேறு என்பதே பவுலின் நம்பிக்கை.

அதாவது இயேசுவும் பரிசுத்த ஆவியும் தேவனல்ல.. வேறொருவரே தேவன் என்பதே அவரது கருத்து



¹⁴ “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். ” (2 கொரிந்தியர் 13:14)

கலாத்தியர் படி இயேசு கடவுள் அல்ல


1 கொரிந்தியர் படி இயேசு கடவுள் அல்ல

ரோமர் அடிப்படையில் இயேசு கடவுள் அல்ல

 1 கொரிந்தியரின்படி இயேசு கடவுள் அல்ல

-----------------------


இந்த புத்தகம் பவுல் எழுதிய ஒரு கடிதம் ஆகும். இது கொரிந்தியா என்ற இடத்தில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு எழுதியதாக நம்பப்படுகிறது.


இது கூட இயேசு வேறு தேவன் வேறு என வேறுபிரித்து காட்டுவதாக எழுதப்பட்டுள்ளது



1.இயேசு என்பவர் கர்த்தர்/ஆண்டவர். பிதா தான் தேவன் என்பதே பவுலின் நிலைப்பாடு.




² "கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:"


³ நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. (1 கொரிந்தியர் 1:2-3)


-------

2.இயேசு என்பவர் தேவனுடைய மகனாம். இதன்படி தேவன் எனப்படுபவர் வேறு , இயேசு வேறு என கூறுகிறார்



⁹ தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.

(1 கொரிந்தியர் 1:9)


----------


 3.இயேசு வேறு தேவன் வேறு. இயேசு என்பவர் கிறிஸ்தவர்களுக்கு தேவனால் ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானாராம் 



³⁰ "அந்தப்படி, நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி, மேன்மை பாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக,"


³¹ அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார். (1 கொரிந்தியர் 1:30-31)


---------


பவுலும் சகலமும் கொரிந்தியர்களுடையதாம். கொரிந்தியர்கள் இயேசுவினுடையவர்களாம். இயேசு தேவனுடையவராம்.


அதாவது கொரிந்தியர் எப்படி இயேசு இல்லையோ, அதே போல் இயேசு தேவன் அல்ல.. தேவன் என்பவர் வேறோரு நபர்.



²² "பவுலாகிலும், அப்பொல்லோவாகிலும், கேபாவாகிலும், உலகமாகிலும், ஜீவனாகிலும் மரணமாகிலும், நிகழ்காரியங்களாகிலும், வருங்காரியங்களாகிலும், எல்லாம் உங்களுடையது;"

²³ நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்; கிறிஸ்து தேவனுடையவர்.

(1 கொரிந்தியர் 3:22-23)


சோ இயேசு தான் தேவன் என்பது மடமையான வாதம் 


-----------------


இயேசு என்பவர் கர்த்தராம்... அந்த கர்த்தரை தேவன் தான் எழுப்பினாராம்! சோ தேவன் எனப்படுபவர் வேறு. இயேசு வேறு.



¹³ "வயிற்றுக்குப் போஜனமும் போஜனத்துக்கு வயிறும் ஏற்கும்; ஆனாலும் தேவன் இதையும் அதையும் அழியப்பண்ணுவார். சரீரமோ வேசித்தனத்திற்கல்ல, கர்த்தருக்கே உரியது; கர்த்தரும் சரீரத்திற்கு உரியவர்."


¹⁴ "தேவன் கர்த்தரை எழுப்பினாரே, நம்மையும் தமது வல்லமையினாலே எழுப்புவார். (1 கொரிந்தியர் 6:13-14)

------------


தேவன் என்பவர் ஒரே நபர் தான். அவர் தான் பிதா. அவரே சகலதையும் படைத்தாராம். ஒரே கர்த்தர் இயேசுவாம். அவர் மூலமாக சகலதும் உண்டானதாம்.

அதாவது இயேசு மூலமாக தேவன் படைத்தார் என்பது பவுலின் நம்பிக்கை!!!

ஆனால் ஒரே தேவன் இயேசு அல்ல.. பிதா என்பதே பவுலின் நம்பிக்கை!!


"

⁴ "விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்."

⁵ "வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும்,"

⁶ "பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்."

(1 கொரிந்தியர் 8 :4-6)


-----------------

பழைய ஏற்பாட்டு காலத்தில் இயேசுவை தடியால் அடித்து தண்ணீர் வரவைத்தாராம் மோசே (அதாவது மலை வேசத்தில் யேசு தான் இருந்தாராம்.)


இயேசுவிலிருந்து தண்ணீரை குடித்திருந்தும்கூட, தேவன் அவர்களிடம் பிரியப்படவில்லையாம்.


சோ தேவன் வேறு.. மலைவேசம் போட்டு சென்ற இயேசு வேறு என்பதே பவுலின் கற்பனை




³ எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள்.

⁴ "எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே."


⁵ "அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை; ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்."(1 கொரிந்தியர் 10:3-5)


----------------


8.இயேசுவை இஸ்ரேலியர் பரீட்சை பார்த்தார்களா?

 …  

⁹ "அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைப்பார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக."(1 கொரிந்தியர் 10:9)

இது தவறான மொழிபெயர்ப்பாகும்.


அவர்கள் சிலர் பரீட்சை பார்த்து பாம்புகளால் அழிக்கப்பட்டது போல, நாம் கிறிஸ்துவை பரீட்சை பாராதிருப்போமாக என்றே பவுல் கூறுகிறார்


“Neither let us tempt Christ, as some of them also tempted, and were destroyed of serpents.”

  — 1 Corinthians 10:9 (KJV)


பழைய ஏற்பாட்டில் இஸ்ரேலியர் மோசேயையும் தேவனையும் பரீட்சை பார்த்தார்கள். அதற்காக பாம்புகளால் அழிக்கப்பட்டனர். அது போல இயேசுவை பரீட்சை பார்க்க வேண்டாம் என்கிறார் பவுல்.



பவுலின் நம்பிக்கை பிரகாரம் இயேசு என்பவர் வேறொரு நபர், தேவன் என்பவர் வேறோரு நபர். இந்த இயேசு தேவனுக்கு அடிபணிந்தே இன்றும் இருக்கிறார் என்பதே பவுலின் நம்பிக்கை (1 கொரிந்தியர் 14:28)


-------------

அந்தஸ்தில் எப்படி ஆணும் பெண்ணும் வெவ்வேறோ, அந்தஸ்தில் மற்ற ஆணும் இயேசுவும் வெவ்வேறோ, அதேபோன்று இயேசுவும் தேவனும் அந்தஸ்தில் வெவ்வேறானவர்கள் மட்டுமல்ல! அவர்கள் இருவரும் வெவ்வேறு நபர்கள்.


அப்படி இருக்க, இயேசு தேவன் என்பது பவுலின் கருத்துக்கு முரணானவை!




“"ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்."”

  — 1 கொரிந்தியர் 11:3 ()


இயேசுவுக்கு தலைவர் தேவன் தானாம்!


----------------


10.ஆவியானவர் ஒருவர். இயேசு இன்னொருவர். தேவன் வேறொருவர். சோ இயேசு வேறு தேவன் வேறு.



⁴ "வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே."


⁵ "ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே."


⁶ "கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே.(1 கொரிந்தியர் 12:4-6)


----------------


11.இயேசு வேறு தேவன் வேறு.. இயேசுவை தேவன் எழுப்பினார்



¹⁵ "மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சிசொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே."

1 கொரிந்தியர் 15:15


---------

12.ஆதாம் என்பவர் மனிதனோ, அதே போன்று இயேசு என்பவரும் ஒரு மனிதரே.

 …  


²¹ "மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று."


²² "ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்."


²³ "அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்."

1 கொரிந்தியர் 15:21-23


-----------------



தேவன் என்பவரே பிதா. அவர் தான் இயேசுவுக்கு சகலதையும் கீழ்படுத்தி கொடுத்தாராம் 


அவர் கீழ் படுத்தி கொடுத்தார் என்பதிலிருந்து அவர் இயேசுவுக்கு கீழ்ப்படிய வில்லை. மாறாக இயேசு தான் அவருக்கு கீழ்படிந்திருப்பார் என்பதே பவுலின் நம்பிக்கை!


²⁴ "அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்."

²⁵ "எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகை செய்யவேண்டியது."

 …  

²⁷ "சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும்போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது."


²⁸ "சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்." (1 கொரிந்தியர் 15:24-25,27-28)


சோ இயேசு வேறு, இயேசு யாருக்கு அடிபணிவாரோ , அந்த தேவன் வேறு!

-----------------



14.இயேசு என்பவர் இரண்டாம் ஆதாம்... இரண்டாம் தேவன் அல்ல! இயேசு என்பவர் இரண்டாம் மனிதன். இரண்டாம் தேவன் அல்ல! என்பதே பவுலின் நம்பிக்கை


⁴⁵ அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.


 …  

⁴⁷ முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்.


⁴⁸ "மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே."


⁴⁹ "மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்ளுவோம்." (1 கொரிந்தியர் 15:45,47-49)


-------------

2 கொரிந்தியரின்படி இயேசு கடவுள் அல்ல

ரோமர் படி இயேசு கடவுள் அல்ல

அப்போஸ்தலர் நடபடிகளின்படி இயேசு  கடவுளல்ல

 ரோமர் அடிப்படையில் இயேசு கடவுள் அல்ல

------------------------------------------------------------------------


ரோமர் புத்தகம் புதிய ஏற்பாட்டின் 6வது புத்தகம். இதை பவுல் எழுதியதாக நம்பப்படுகிறது (கடைசி அதிகாரத்தை வேறு யாரோ எழுதியிருப்பார் 😜).


இப்புத்தகம் இயேசுவை தேவனல்ல..


 இயேசுவின் பிதா தான் தேவன் என்றே கூறுகிறது.






1.பிதா தான் தேவன். சோ இயேசு வேறு.. தேவன் வேறு




³ நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. (ரோமர் 1:3)



-------------



2.இயேசு என்பவர் தேவனால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவர். சோ தேவன் வேறு இயேசு வேறு.



⁴ "இயேசுகிறிஸ்துவைக்குறித்து தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப்பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர்,"



⁵ "மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்." (ரோமர் 1:4-5)


----------



 3.இயேசு வேறு தேவன் வேறு.. இயேசு மூலமாக தேவனை ஸ்த்தோத்திரிகீகிறாராம் பவுல்




⁸ "உங்கள் விசுவாசம் உலகமெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே, முதலாவது நான் உங்களெல்லாருக்காகவும் இயேசுகிறிஸ்து மூலமாய் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்."(ரோமர் 1:8)

 …  




------------



4.இயேசு வேறு தேவன் வேறு. தேவன் இயேசுவைக்கொண்டு தீர்ப்பு வழங்குவாராம்.


 …  

¹⁶ "என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்." (ரோமர் 2:16)




-----------




5.தேவன் தான் இயேசுவை பலியாக ஆக்கினாராம். சோ இயேசு வேறு தேவன் வேறு.


 


²⁶ கிறிஸ்து இயேசுவினுடைய இரத்ததைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார்.(ரோமர் 3:26)



-------------


6.தேவன் என்பவர் ஒருவரே.



³⁰ "விருத்தசேதனமுள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனமில்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே."(ரோமர் 3:30)



அந்த தேவன் இயேசு அல்ல என்பதால், இயேசு தேவனல்ல!




-------------



7.இயேசு என்பவரை மரித்தோரிலிருந்து தேவன் தான் எழுப்பினார். சோ தேவன் வேறு இயேசு வேறு.


 …  



²⁴ நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும்.



²⁵ "அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார். " (ரோமர் 4:24-25)





------------



8.இயேசு வேறு தேவன் வேறு. இயேசு மூலமாக தேவனிடம் சமாதானத்தை பெற்றிருக்கிறார்களாம்.




¹ "இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்."(ரோமர் 5:1)



--------



9.இயேசு என்பவர் கடவுள் அல்ல..


 அவருடைய குமாரனாம்! குமாரன் வேறு தேவன் வேறு.

இந்த இயேசு மூலமாய் தேவனை மேன்மை பாராட்டுகிறார்களாம்.



 …  

¹⁰ "நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே."



¹¹ "அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் நாம் தேவனைப்பற்றியும் மேன்மைபாராட்டுகிறோம்." (ரோமர் 5:10-11)



-----------




10.இயேசு என்பவர் ஒரு மனுசன். தேவனுடைய கிருபை இயேசு என்ற மனுசனின் கிருபையினால் வருகிறதாம்.


 …  



¹⁵ "ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது." (ரோமர் 5:15)



-----------



.

11.இயுசு வேறு தேவன் வேறு.. பிதாவின் மகிமையினால் இயேசு மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டாராம்.




⁴ "மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்."

(ரோமர் 6:4)



---------.




12.இயேசுவும் பாவமும் எப்படி வேறு வேறானதோ, அதே போல் இயேசுவும் தேவனும் வேறுவேறானவர்கள்.



காரணம் இயேசு பாவத்துக்காக மரணித்தாராம்.


 தேவனுக்காக பிழைத்திருக்கிறாராம்.

 …  




¹⁰ "அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார்."



¹¹ "அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்." (ரோமர் 6:10-11)



--------------.




13.இயேசு என்பவர் வேறு தேவன் வேறு.. இயேசு மூலமாக மீண்டும் தேவனை ஸ்தோத்திரிக்கிறாராம்.





²⁵ "நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலேயோ பாவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன். " (ரோமர் 7:25)



-------


14.தேவன் வேறு இயேசு வேறு.தேவன் இயேசுவை பாவ மாம்சத்தின் சாயலாக அனுப்பினாராம்.


பாவத்தின் சாயலாக அனுப்பப்பட்டவரும் அனுப்பிய தேவனும் வேறுவேறு.



³ "அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்." (ரோமர் 8:3)



---------


15 இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பியவர் தான் தேவன்

 இயேசு அல்ல."



¹¹ "அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்." (ரோமர் 8:11)




 -------



16.இயேசு வேறு தேவன் வேறு. இயேசுவோடு உடன் சுதந்தரர்களாக பவுலும் கிறிஸ்தவர்களும் இருக்கிறார்களாம். அதாவது இயேசுவின் பங்காளிகளாக இருக்கிறார்களாம்.





¹⁷ "நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்."


.


 …  

²⁹ "தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார்;"


 …  

³² "தம்முடைய சொந்தக்குமாரனென்றும்பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?" (ரோமர் 8:17,29,32)



----------



17.தேவன் வேறு இயேசு வேறு.. தேவனது வலது பக்கத்தில் இயேசு இருந்து கிறிஸ்தவர்களுக்காக வேண்டுதல் செய்கிறாராம்




³⁴ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே. (ரோமர் 8:34)



----------


 

18.இயேசு தான் சர்வத்திற்கும் மேலான தேவனா?





“"பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென்."”

  — Romans 9:5 (TBSI)




இது தவறான மொழிபெயர்ப்பும் பவுலின் மொத்த கருத்துக்கும் முரணானதும் ஆகும்.

ஏனெனில் பவுலின் கருத்துப்படி , இயேசு என்பவர் தேவனல்ல.. மாறாக ஒரு மனுசன் என்பதே.(ரோமர் 5:15)




⁵ "தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே."



⁶ எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது. (1 தீமோத்தேயு 2:5-6)




அதாவது ஒரே தேவன் உள்ளார். இயேசு என்பவர் ஒரு மனிதர். அவர் மனிதருக்கும் தேவனுக்குமான மத்தியஸ்தர் (இடைத்தரகர்) என்பதே பவுலின் நம்பிக்கை ஆகும்.



அதனால் இவ்வசனத்தை KJV இவ்வாறு மொழிபெயர்த்திருக்கிறது:



“Whose are the fathers, and of whom as concerning the flesh Christ came, who is over all, God blessed for ever. Amen.”

  — Romans 9:5 (KJV)



"தேவன் என்றென்றும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்" என்றே பவுல் சொல்கிறார்.


 இயேசுவை ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவன் என கூறவில்லை! 


இதேபோல் RSV:.

RSV: “to them belong the patriarchs, and of their race, according to the flesh, is the Christ. God who is over all be blessed forever. Amen.”



அதாவது "தேவனே சர்வத்திற்கும் மேலானவர் என்றென்றும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்." இயேசுவை பற்றியது அல்ல!




கிறிஸ்தவர்களை பொருத்தமட்டில் நேரடியாக இயேசு வேறு தேவன் வேறு என இருப்பதையெல்லாம் விட்டுவிட்டு, பல வகையில் அர்த்தம் செய்ய முடியுமான வசனங்களை மட்டும் தமக்கு சார்பாக மொழிபெயர்த்து அதை ஆதாரமாக காட்டுவார்கள்.




இங்கே பவுல், யூதர்களுக்கு தேவன் செய்த நலவுகளை பட்டியல் படுத்தும் போது, அவர்களில் தான் இயேசுவும் வந்தார் என கூறிவிட்டு, தேவன் எப்படிப்பட்டவர் என்று தான் இங்கே சொல்கிறார். இயேசுவை அல்ல!





இந்த புத்தகத்தின் ஆரம்பம் முதல் கடைசிவரை தேவன் வேறு இயேசு வேறு என்றே சித்தரிக்கப்படும் போது, ஒரு வசனத்தை மாற்றி மொழிபெயர்த்து அடம்பிடிப்பது அறிவீனம்!




மேலும் என்றென்றும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்ற வாசகத்தை பவுல் பிதாவுக்கு தான் தனது எல்லா எழுத்துக்களிலும் எழுதியும் இருக்கிறார்.

.


 உதாரணமாக ரோமர் 1:25, 2 கொரிந்தியர் 11:31



அப்படியிருக்க பவுலே யாரை மனுசன் என்றும் தேவன் வேறு அவர் வேறு என்று சொல்கிறாரோ, அந்த நபரை தான் பவுல் கடவுளென சொல்கிறார் என்பது பவுலுடைய கருத்துக்களையே திரிப்பதாகும்!.




-------



19.தேவன் வேறு . இயேசு வேறு. தேவன் தான் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினாராம்!

.



⁹ "என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்." (ரோமர் 10:9)



----------



20.இயேசு வேறு தேவன் வேறு

.



¹⁸ இவைகளிலே கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறவன் தேவனுக்குப்பிரியனும் மனுஷரால் அங்கிகரிக்கப்பட்டவனுமாயிருக்கிறான்.(ரோமர் 14:18)



-----------



21 . இயேசு வேறு தேவன் வேறு.. இயேசுவின் பிதா தான் தேவனாம்.




⁵ "நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு," (ரோமர் 15:5)


---------


22.இயேசு என்பவர் தேவனுடைய சத்தியத்தின் நிமித்தம் யூதர்களுக்கு ஊழியக்காரனாம்.



⁸ "மேலும், பிதாக்களுக்குப்பண்ணப்பட்ட வாக்குத்தத்தங்களை உறுதியாக்கும்படிக்கு, தேவனுடைய சத்தியத்தினிமித்தம் இயேசுகிறிஸ்து விருத்தசேதனமுள்ளவர்களுக்கு ஊழியக்காரரானாரென்றும்;"(ரோமர் 15:8)



----------



23.இயேசு என்பவர் ஈசாயின் வேர். சோ தேவன் அல்ல. ஈசாயின் வேர் ஒரு மனிதர்.




¹² "மேலும், ஈசாயின் வேரும் புறஜாதியாரை ஆளும்படிக்கு எழும்புகிறவருமாகிய ஒருவர் தோன்றுவார்; அவரிடத்தில் புறஜாதியார் நம்பிக்கை வைப்பார்கள் என்று ஏசாயா சொல்லுகிறான்."(ரோமர் 15:12)


அவர் தேவனுக்கு பயப்படும் ஆவியை உடையவர் (ஏசாயா 11:2-3)

--------




 24.தேவன் ஒருவரே ஞானமுள்ளவராம். இயேசு மூலம் அந்த ஞானமுள்ள தேவனுக்கு மகிமை உண்டாவதாக என அவர் எழுதுகிறார்.

.


 …  

²⁷ தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாயிருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (ரோமர் 16:27)

-------------

1 கொரிந்தியரின்படி இயேசு கடவுள் அல்ல

அல்லாஹ் வழிதவறச்செய்கிறான் என்பதன் விளக்கம்

1.மனிதனுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது  --மனிதனுக்கு இறைவன் வழி காட்டியுள்ளான். ஒன்று அவன் நன்றியுள்ளவனாக இருக்கிறான் அல்லது காஃபிராக இருக்கிறான...