இடுகைகள்

மே, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அப்போஸ்தலர் நடபடிகளின் படி இயேசு ஏன் கடவுளல்ல

  யோவானின் படி இயேசு ஏன் கடவுளல்ல! பாகம் 2 அப்போஸ்தலர் நடபடிகளின்படி இயேசு ஏன் கடவுளல்ல? ---------------------------------------------------------- இது லூக்காவினால் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. முதல் மூன்று சுவிசேசங்களில் இயேசுவைப் பற்றி சொல்லப்பட்ட கருத்துகளுடன் இது உடன்படுகிறது. யோவான் சுவிசேஷம் இயேசு தேவனிடம் ஏற்கனவே சொந்த பிள்ளையாக இருந்தவர்.. ஆனால் உண்மையான தேவன் பிதா தான் என கூறுகிறது . ஆனால் முதல் மூன்று சுவிசேசங்களும், இயேசு ஒரு நல்ல மனிதராக இருந்தார். அவர் மூலம் தேவன் அற்புதம் செய்தார். பிறகு அவரை தன் பிள்ளையாக தத்தெடுத்து கொண்டார் என போதிக்கின்றன. அதே வகையில் இந்த அப்போஸ்தலர் நடபடிகளும் இயேசு மூலம் தேவன் அற்புதங்கள் செய்ததாகவும், தேவன் அவரை உயர்த்தி உயர் அந்தஸ்த்தை கொடுத்ததாகவும் கூறுகிறது. அதாவது இயேசுவை மெசியாவாக ஆக்கியதே தேவன் தான் என இது கூறுகிறது. ஒருபடி மேலே போய், இயேசுவின் நாமத்தில் அற்புதம் செய்ததாகவும், அவரிடம் நேரடியாக வேண்டுதல் செய்ததாகவும் இது கூறுகிறது. அத்தோடு தேவனிடமே ஜெபம் செய்ததாக இது கூறுகிறது.. இயேசு பிதாவை தொழுது கொள்ளவும் , பிதாவிடமே ஜெபம் செய்யவுமே...

யோவானின் படி இயேசு ஏன் கடவுளல்ல! பாகம் 2

  பாகம் 1 52.இயேசுவை பிதா முத்திரித்திருக்கிறாராம்.. முத்திரித்தவர் தேவனா முத்திரிக்கப்பட்டவர் தேவனா? ²⁷ "அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்." (யோவான் 6:27) 53.தேவனுக்கேற்ற கிரியை என்பது தேவன் அனுப்பியவரை நம்புவது என இயேசு கூறி, தன்னை தேவனால் அனுப்பப்பட்டவர் என்கிறார். ²⁸ அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள். ²⁹ இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார்.  (யோவான் 6:28-29) ------------- 54.இயேசு வானத்திலிருந்து தேவனால் கொடுக்கப்பட்ட அப்பமாம்! ³² "இயேசு அவர்களை நோக்கி: வானத்திலிருந்து வந்த அப்பத்தை மோசே உங்களுக்குக் கொடுக்கவில்லை; என் பிதாவோ வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ³³ வான...