வெள்ளி, 6 மே, 2022

அப்போஸ்தலர் நடபடிகளின் படி இயேசு ஏன் கடவுளல்ல

 

அப்போஸ்தலர் நடபடிகளின்படி இயேசு ஏன் கடவுளல்ல?

----------------------------------------------------------

இது லூக்காவினால் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. முதல் மூன்று சுவிசேசங்களில் இயேசுவைப் பற்றி சொல்லப்பட்ட கருத்துகளுடன் இது உடன்படுகிறது. யோவான் சுவிசேஷம் இயேசு தேவனிடம் ஏற்கனவே சொந்த பிள்ளையாக இருந்தவர்.. ஆனால் உண்மையான தேவன் பிதா தான் என கூறுகிறது . ஆனால் முதல் மூன்று சுவிசேசங்களும், இயேசு ஒரு நல்ல மனிதராக இருந்தார். அவர் மூலம் தேவன் அற்புதம் செய்தார். பிறகு அவரை தன் பிள்ளையாக தத்தெடுத்து கொண்டார் என போதிக்கின்றன.

அதே வகையில் இந்த அப்போஸ்தலர் நடபடிகளும் இயேசு மூலம் தேவன் அற்புதங்கள் செய்ததாகவும், தேவன் அவரை உயர்த்தி உயர் அந்தஸ்த்தை கொடுத்ததாகவும் கூறுகிறது. அதாவது இயேசுவை மெசியாவாக ஆக்கியதே தேவன் தான் என இது கூறுகிறது.

ஒருபடி மேலே போய், இயேசுவின் நாமத்தில் அற்புதம் செய்ததாகவும், அவரிடம் நேரடியாக வேண்டுதல் செய்ததாகவும் இது கூறுகிறது. அத்தோடு தேவனிடமே ஜெபம் செய்ததாக இது கூறுகிறது.. இயேசு பிதாவை தொழுது கொள்ளவும் , பிதாவிடமே ஜெபம் செய்யவுமே போதித்ததாகவும் , அவ்வாறே இயேசுவும் பிதாவிடமே ஜெபம் செய்ததாகவுமே சுவிசேஷ கதைகள் போதிக்கின்றன. 


இனி நாம் இப்புத்தகத்தினுள் போவோம்:



1.இயேசு என்பவர் தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதனே. அவர் மூலம் அற்புதம் செய்ததே தேவன் தான்.


²² "இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்." -அப்போஸ்தலர் 2:22

இவ்வசனத்தில் இயேசுவை மனிதன் என்றே கூறியிருக்கிறது. அது இம்மொழியாக்கத்தில் விடப்பட்டிருக்கிறது. 

அதை ரோமன் கத்தோலிக்க பைபிளில்:

,“ԇஎனது யூத சகோதரர்களே, இந்த வார்த்தைகளைக் கவனியுங்கள். நாசரேத்தின் இயேசு மிகச் சிறப்பான மனிதர். தேவன் இதைத் தெளிவாக உங்களுக்குக் காட்டினார். இயேசுவின் மூலமாக அவர் செய்த வல்லமை மிக்க வியப்பான காரியங்களால் தேவன் இதை நிரூபித்தார். நீங்கள் எல்லோரும் இந்தக் காரியங்களைப் பார்த்தீர்கள். எனவே இது உண்மையென்பது உங்களுக்குத் தெரியும்.”

  — திருத் 2:22 (ERV-TA)


KJV பைபிளில் :

“Ye men of Israel, hear these words; Jesus of Nazareth, a man approved of God among you by miracles and wonders and signs, which God did by him in the midst of you, as ye yourselves also know:”

  — Acts 2:22 (KJV)

NRSV:.

“"You that are Israelites, listen to what I have to say: Jesus of Nazareth, a man attested to you by God with deeds of power, wonders, and signs that God did through him among you, as you yourselves know--”

  — Acts 2:22 (NRSV)

இங்கே அவை அனைத்தும் இயேசு தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதனே என்றும், அவர் மூலம் தேவன் தான் அற்புதம் செய்து தன்னை வெளிப்படுல்தியதாகவுமே அவை கூறுகின்றன. அதாவது அவர் ஒரு கடவுளாகவோ அல்லது கடவுளின் ஏற்கனவே இருந்த குழந்தையாகவோ சித்தரிக்க வில்லை! 

-------------




2.தேவன் தான் இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பினார் என்றே இது கூறுகிறது.  

²⁴ "தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை ஏழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது." (அப்போஸ்தலர் 2:24) , 2:32, 3:15, 4:10, 5:30,10:40, 13:30



 அதாவது இயேசுவை விட வல்லமை மிக்க ஒருவர் உள்ளார். அவரே தேவன் என்றே இது கூறுகிறது

-------------

3.இயேசுவை ஆண்டவராகவும் , கிறிஸ்துவாகவும் (மெசியாவாகவும்) ஆக்கியதே தேவன் தான் என்கிறது.

³⁶ "ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்." -அப்போஸ்தலர் 2:36

அதாவது இயேசுவுக்கு மெசியா / கிறிஸ்து என்ற அந்தஸ்தையும், ஆண்டவர் என்ற அந்தஸ்தையும் கொடுத்த பெரிய ஒருவர் இருக்கிறார். அந்த பெரியவரே தேவன் என்கிறது.

அந்த பெரியவர் மட்டுமே மெய்யான தேவன் என இயேசு சொன்னதாக யோவான் 17:3 இல் எழுதப்பட்டுள்ளது.


------------


4.இயேசுவின் நாமத்தில் சீடர்கள் அற்புதம் செய்ததாகவும், அதற்கு மூல காரணம் தேவன் தான் என்றே இது கூறுகிறது


⁶ "அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி,"

⁷ வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது.

⁸ "அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்."

⁹ "அவன் நடக்கிறதையும், தேவனைத்துதிக்கிறதையும், ஜனங்களெல்லாரும் கண்டு:" (அப்போஸ்தலர் 3:6-9)

யாருக்கு இந்த அற்புதம் நடந்ததோ, அவன் தேவனைத் தான் துதித்தான் -3:8,9

இயேசு மூலம் அற்புதம் செய்தது கூட தேவன் தான் என்பதே இது கூறுவது- 2:22

-----------


5.இயேசு வேறு தேவன் வேறு. தேவன் என்பவர் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாவார். அவருடைய ஊழியக்காரனே இயேசு. அவரை தேவன் மகிமைப்படுத்தினார் என்பதே இது கூறுவது.

¹³ "ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார்; அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலையாக்கத் தீர்மானித்தபோது, அவனுக்கு முன்பாக அவரை மறுதலித்தீர்கள்." (அப்போஸ்தலர் 3:13) மேலும் 3:26, 4:28,30

இங்கே தேவனுடைய பிள்ளை என மொழிபெயர்த்திருந்தாலும், அதிலுள்ள கிரேக்க வார்த்தை ஊழியரையே குறிக்கிறது. இதை கத்தோலிக்க மொழியாக்கம் சரி செய்கிறது:


“ԇஇல்லை! தேவன் இதைச் செய்தார்! அவர் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனும் ஆனவர். அவரே நமது முன்னோர்களின் தேவன். அவர் தனது விசேஷ ஊழியரான இயேசுவுக்கு மகிமையை அளித்தார். ஆனால் நீங்களோ இயேசுவைக் கொல்லும்படியாகக் கொடுத்தீர்கள். பிலாத்து இயேசுவுக்கு விடுதலையளிக்க முடிவு செய்தான். ஆனால் உங்களுக்கு இயேசு வேண்டாதவரென நீங்கள் பிலாத்துவுக்குக் கூறினீர்கள்.”

  — திருத் 3:13 (ERV-TA)


இதே கிரேக்க வார்த்தை தான் மத்தேயு 12:18 இல் கூறப்பட்டுள்ளது. அதுவும் எபிரேய வார்த்தையான "ஏபேத்- அடிமை" என்பதன் கிரேக்கம் மொழியாக்கமாக பாவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன தீர்க்கதரிசனமாக மத்தேயு அதை குறிப்பிடுகிறார். ஏசாயா 42:1 இல் ஏபேத்-அடிமை (தாசன்) / ஊழியன் என்று தான் கூறப்படுகிறது.


அதாவது தேவன் என்பவருடைய விசேட ஊழியரே இயேசு என்பதே இது கூறுவது.

-------------



 6.இயேசு என்பவர் மோசேயைப் போன்ற தீர்க்கதரிசி என்றே இப்புத்தகம் கூறுகிறது.

²² மோசே பிதாக்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.

²³ "அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனெவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான் என்றான்." (அப்போஸ்தலர் 3:22-23)

அதாவது மோசே எப்படி தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடியாரோ, அதேபோன்று தான் இயேசுவும் இருந்தார் என்றே சொல்கிறது. பிறகு தேவன் அவரது அந்தஸ்தை மிக உயர்வாக உயர்த்தினார் என்பதே இப்புத்தகம் சொல்லும் கருத்து

----------



7.இயேசு வேறு தேவன் வேறு. தேவனுடைய கிறிஸ்துவே இயேசு.


 …  

²⁴ "அவர்கள் அதைக் கேட்டு, ஒருமனப்பட்டு தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனாயிருக்கிறீர்."


²⁶ "கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே."

(அப்போஸ்தலர் 4:24,26)

மேலும் இயேசுவை கிறிஸ்துவாக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36

--------------

8.இயேசு என்பவர் தேவனுடைய பரிசுத்த ஊழியர். அவருடைய நாமத்தினால் அற்புதம் செய்ய சீடர்கள் தேவனிடம் வேண்டுதல் செய்தார்கள்.

 …  

²⁸ "ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள்."


 …  

³⁰ "உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள்." (அப்போஸ்தலர் 4:28,30)


இங்கே இந்த தமிழாக்கம் பிள்ளை என சொன்னாலும், அதன் கிரேக்க வார்த்தை ஊழியர் என்பதையே குறிக்கிறது.  

இதை குறிப்பு 5 இல் சொல்லிவிட்டதால் தவிர்க்கிறேன்


இதன்படி இயேசுவை விட பெரியவராக தேவன் உள்ளார். அவரிடமே இயேசுவின் நாமத்தில் அற்புதம் செய்வதற்காக சீடர்கள் ஜெபித்தனர் என இது கூறுகிறது!

--------------------------


9.இயேசுவை தேவனே எழுப்பினார். அதுமட்டுமின்றி அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தேவன் தான் உயர்த்தினார்.

³⁰ "நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலைசெய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி,"

³¹ "இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார்."

(அப்போஸ்தலர் 5:30-31)

தேவன் வேறு இயேசு வேறு. இயேசுவின் அந்தஸ்தை உயர்த்தியதே தேவன் தான் என்கிறது இது.

--------------


 10.சீடர்கள் இயேசுவே தேவன் என பிரசங்கம் பண்ணவில்லை! இப்போதுள்ள கிறிஸ்தவர்களை போல.

அவரை கிறிஸ்து என்றே பிரசங்கம் பண்ணினர்.

⁴² "தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள். " (அப்போஸ்தலர் 5:42)


அதாவது இயேசு தேவன் மூலமாக தான் கிறிஸ்துவாக ஆக்கப்பட்டார்- அப்போஸ்தலர் 2:36

---------------

11.இயேசு வேறு தேவன் வேறு. தேவனது வலது பக்கத்தில் இருப்பவராகவே இது இயேசுவை காட்டுகிறது:


 

⁵⁵ "அவன் பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவனாய், வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டு:"

⁵⁶ "அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்." (அப்போஸ்தலர் 7:55-56)


தேவன் வேறு இயேசு வேறு என தெளிவாக இப்புத்தகம் கூறும்போது, இயேசுவாக தேவன் தான் செயற்படுகிறார் என கூறுவது அபத்தம் இல்லையா?

-------------


 12.இயேசு அந்தஸ்து உயர்த்தப்பட்ட ஊழியர் என்பதால், இயேசுவிடம் தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு ஸ்தேவான் வேண்டியதாக சித்தரிக்கிறது

⁵⁹ "அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள்."

⁶⁰ "அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப்பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான். " (அப்போஸ்தலர் 7:59-60)

லூக்கா சுவிசேசத்தில் இயேசுவும் தேவனிடம் இவ்வாறே சொன்னதாக இதே நபர் எழுதியுள்ளார்.

³⁴ "அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்."

⁴⁶ "இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்." (லூக்கா 23:34,46)

இயேசு இப்புத்தகத்தில் தேவனால் பிள்ளையாக தத்தெடுக்கப்பட்டவர் என கருதப்படுவதால் இதெல்லாம் தெய்வீகத்திற்கு ஆதாரமாகாது!

---------------------


13.இயேசு தான் நோய்களுக்கு சுகத்தை கொடுக்கிறார் என்றே இது சொல்கிறது

³³ அங்கே எட்டு வருஷமாய்க் கட்டிலின்மேல் திமிர்வாதமுள்ளவனாய்க்கிடந்த ஐனேயா என்னும் பேருள்ள ஒரு மனுஷனைக் கண்டான்.

³⁴ "பேதுரு அவனைப் பார்த்து: ஐனேயாவே, இயேசுகிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார்; நீ எழுந்து, உன் படுக்கையை நீயே போட்டுக்கொள் என்றான். உடனே அவன் எழுந்திருந்தான்." (அப்போஸ்தலர் 9:33-34)

ஆனாலும் இயேசு மூலம் அற்புதம் செய்தது தேவன் தான்-அப்போஸ்தலர் 2:22

இயேசு அந்தஸ்து உயர்த்தப்பட்டுள்ளது என்பதே இது கூறவரும் கருத்து.. தேவனாக சித்தரிப்பதல்ல!!



------------

14.இயேசு என்பவர் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாயாதிபதி என்றே இது கூறுகிறது.

 

⁴² "அன்றியும் அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாயாதிபதியென்று ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார்." (அப்போஸ்தலர் 10:42)

அதாவது தேவன் வேறு இயேசு வேறு. இயேசு என்பவர் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாயாதிபதி..

-------------------------


15.தேவன் என்பவர் வேறு. இயேசு என்பவர் வேறு



¹⁷ ஆதலால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்திருக்கிற நமக்கு தேவன் வரத்தை அநுக்கிரகம்பண்ணினதுபோல அவர்களுக்கும் அந்த வரத்தையே அநுக்கிரகம்பண்ணியிருக்கும்போது தேவனைத் தடுக்கிறதற்கு நான் எம்மாத்திரம் என்றான்.

¹⁸ "இவைகளை அவர்கள் கேட்டபொழுது அமர்ந்திருந்து: அப்படியானால் ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலை தேவன் புறஜாதியாருக்கும் அருளிச்செய்தார் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்."

(அப்போஸ்தலர் 11:17-18)

-------------

16.சீடர்கள் தேவனிடமே ஜெபம் செய்தார்கள்.

“அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்.”

  — அப்போஸ்தலர் 12:5 

----------

17.இயேசு என்பவர் தாவீதுடைய சந்ததியில் இஸ்ரவேலருக்கு இரட்சகராக தேவனால் எழும்பப்பண்ணப்பட்டவராவார்.

²³ அவனுடைய சந்ததியிலே தேவன் தமது வாக்குத்தத்தத்தின்படியே இஸ்ரவேலுக்கு இரட்சகராக இயேசுவை எழும்பப்பண்ணினார். (அப்போஸ்தலர் 13:23)

அதாவது தேவனால் எழும்பப்பண்ணப்பட்ட ஒரு இரட்சகரே இயேசு.

இதேபோல் வேறு சிலரையும் இரட்சகராக எழும்பப்பண்ணியதாக நியாயாதிபதிகள் புத்தகம் கூறுகிறது. 

ஒத்னியேல் எனும் இரட்சகன் -நியாயாதிபதிகள் 3:9

ஏகூத் எனும் இரட்சகன்- நியாயாதிபதிகள் 3:15




 -------------

18.இயேசு தேவனின் குமாரனாக ஜனிப்பிக்கப்பட்டது அவரை எழுப்பிய பின்னரே என்பதே பவுல் கூறும் கருத்து

 …  

³² "நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று இரண்டாம் சங்கீதத்தில் எழுதியிருக்கிறபடியே,"

³³ இயேசுவை எழுப்பினதினாலே தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் என்று நாங்களும் உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கிறோம்.- அப்போஸ்தலர் 13:32-33)

--------------


19.இயேசு என்பவர் தேவனால் மரணத்திலிருந்து எழுப்பப்பட்ட அவருடைய பரிசுத்தர். சோ இயேசு வேறு தேவன் வேறு


³⁴ இனி அவர் அழிவுக்குட்படாதபடிக்கு அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்பதைக்குறித்து: தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக் கட்டளையிடுவேன் என்று திருவுளம் பற்றினார்.

³⁵ "அன்றியும், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர் என்று வேறொரு சங்கீதத்தில் சொல்லியிருக்கிறது."

³⁷ தேவனால் எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை. (அப்போஸ்தலர் 13:34-35,37)


இதேபோல் ஆரோனும் தேவனுடைய பரிசுத்தர் என அழைக்கப்பட்டுள்ளார்- சங்கீதம் 106:16 என்பது மேலதிக தகவல்

----------------

20.தேவன் தான் சகலத்தையும் படைத்தவர். இயேசு அல்ல!


¹⁵ "மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம்." (அப்போஸ்தலர் 14:15)

ஏனெனில் மெய்யான ஒரே தேவன் பிதா மட்டுமே-யோவான் 17:3

--------------


21. பவுல் கூட தேவனிடம் தான் ஜெபம் செய்தார். இயேசுவிடம் அல்ல!



²⁵ "நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்." (அப்போஸ்தலர் 16:25)


--------------


22.தேவனே சகலத்தையும் படைத்தவர். சகலத்தையும் செய்பவர்.. இயேசு என்பவர் தேவனால் எழுப்பப்பட்ட மனுசன். அந்த மனுஷனைக்கொண்டு பூமியை நியாயந்தீர்ப்பார் என்றே பவுல் சொல்கிறார்.

,"


²⁴ உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை.

²⁵ "எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை."

²⁶ "மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;"

²⁷ கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.

²⁸ "ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்."

²⁹ "நாம் தேவனுடைய சந்ததியாராயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது."

³⁰ அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.

³¹ "மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்."

 (அப்போஸ்தலர் 17:24-31)



அதாவது இயேசு வேறு தேவன் வேறு. தேவன் சகலத்தையும் உண்டாக்கியவர். இயேசு என்பவர் ஒரு மனுசன். அந்த மனுஷனை கொண்டு தேவன் நியாயந்தீர்ப்பார் என்றே பவுல் நம்பிய கருத்து!! மாறாக இயேசுவே கடவுள் என்பதல்ல!!

-----------------------


23.பவுல் மூலமும் அற்புதம் செய்தது தேவன் தான் என்றே இப்புத்தகம் கூறுகிறது



 …  

¹¹ பவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார்.

¹² "அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும், கச்சைகளையும் கொண்டுவந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களைவிட்டுப் புறப்பட்டன."

(அப்போஸ்தலர் 19:11-12)

இதேபோல் இயேசு மூலமும் தேவன் தான் அற்புதம் செய்தார்-அப்போஸ்தலர் 2:22

-------------------


24.இயேசுவின் ரத்தம் தேவனது ரத்தமா?


“"ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்."”

  — அப்போஸ்தலர் 20:28

தேவனுக்கு ரத்தம் இல்லை.. காரணம் அவர் ஆவியாக இருக்கிறார் -யோவான 4:24

அதேபோல் பவுல் அவர்களின் நம்பிக்கை என்பது , இயேசு என்ற மனுஷனுடைய ரத்தம் மூலமே மீற்கப்பட்டனர் என்பதாகும்!

“எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.”

  — 1 தீமோத்தேயு 2:6

அப்படியிருக்க இது தேவனுடைய ரத்தம் என கூறமுடியாது.

மேலும் இதிலுள்ள கிரேக்க வார்த்தை

tou haimatios tou idiou-, the blood of His own அதாவது அவருக்கு சொந்தமானவருடைய ரத்தம் என்றே வரும்.

idiou haimatios என இருந்தால் தான் “his own blood.” அவருடைய சொந்த ரத்தம் என வரும்.


திரித்துவர்கள் இயேசுவை தேவனென ஏற்கனவே தீர்மானித்து விட்டதால் , அவ்வாறு மொழிபெயர்க்கின்றனர்.

ஆனால் நேரடி அர்த்தத்தை பவுலுடைய ஏனைய கருத்தோடு ஒப்பிட்டால், பவுல் இப்படி கூறவில்லை.. பவுல் கூறியதை தவறாக மொழிபெயர்த்திருக்கிறார்கள் என புரியவரும்!

ஏனெனில் பவுல், இயேசு வேறு தேவன் வேறு என்றும், இயேசு என்பவர் தேவனால் ஏற்படுத்தப்பட்ட மனுசனான நியாயாதிபதி என்றும் இரட்சகர் என்றுமே கூறுகிறார்.(அப்போஸ்தலர் 13:23, 32-33, 17:31, 1 தீமோத்தேயு 2:5-6)



சோ இந்த புத்தகம் இயேசுவை கடவுள் என சொல்லவில்லை!! மாறாக ஒரு மனுசனாகவும் அந்தஸ்து உயர்த்தப்பட்டவராகவுமே சொல்கிறது!

ரோமர் அடிப்படையில் இயேசு கடவுள் அல்ல

புதன், 4 மே, 2022

யோவானின் படி இயேசு ஏன் கடவுளல்ல! பாகம் 2

 பாகம் 1

52.இயேசுவை பிதா முத்திரித்திருக்கிறாராம்.. முத்திரித்தவர் தேவனா முத்திரிக்கப்பட்டவர் தேவனா?


²⁷ "அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்."

(யோவான் 6:27)


53.தேவனுக்கேற்ற கிரியை என்பது தேவன் அனுப்பியவரை நம்புவது என இயேசு கூறி, தன்னை தேவனால் அனுப்பப்பட்டவர் என்கிறார்.

²⁸ அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள்.

²⁹ இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார். 

(யோவான் 6:28-29)


-------------



54.இயேசு வானத்திலிருந்து தேவனால் கொடுக்கப்பட்ட அப்பமாம்!


³² "இயேசு அவர்களை நோக்கி: வானத்திலிருந்து வந்த அப்பத்தை மோசே உங்களுக்குக் கொடுக்கவில்லை; என் பிதாவோ வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்."

³³ வானத்திலிருந்திறங்கி. உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார்.

³⁴ "அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்குத் தரவேண்டும் என்றார்கள்."

³⁵ "இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்."

(யோவான் 6:33-35)

தேவன் கொடுத்த சாப்பாடும் தேவனும் ஒன்றாகுமா?? சாப்பாடு கடவுளாகுமா? இந்த அப்பத்தை கொடுத்தவர் கடவுளா?


நானே என்பது தெய்வீகமா?

-------------

55.இயேசு எதையும் சுயமாக உடையவரல்ல!! பிதா கொடுப்பதே அவருக்கு வருகிறது.

 

³⁷ பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. (யோவான் 6:37)

-----------------


56.இயேசு பூமிக்கு வந்தது, அவரை அனுப்பியவருடைய சித்தத்தின்படி செய்யவே என்கிறார். 


³⁸ "என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்." (யோவான் 6:38)

இயேசு வானத்திலிருந்து இறங்கி வந்தார் என இதை எழுதிய நபர் நம்பியதால் அதை இயேசுவுடைய வாயில் போட்டிருக்கிறார்.


காரணம், இயேசு பிறக்க முன்பு இயேசு இருக்கவே இல்லையே!! தேவனது ஒரு கட்டளை மூலம் மரியாள் இயேசுவை பெற்றெடுத்ததால், வார்த்தை தான் மனிசனானது என நம்பிய யோவான், இயேசு குழந்தையாக பிறந்ததால், தேவனிடம் இயேசு ஏற்கனவே அவரது மடியில் இருந்த குழந்தை என நம்பினார்.

அதன் வெளிப்பாடே இது!!

-----------------

57. இயேசு கடைசி நாளில் அவரை நம்பியோரை எழுப்புவது அவரை அனுப்பினவருடைய சித்தமாம்! இயேசுவுடைய சித்தம் அல்ல!



³⁹ "அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது."



⁴⁰ "குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்."

(யோவான் 6:39-40)

இயேசு தேவனுக்கு அடிபணிந்திருக்கும் அவரது பையன் என்பதே இவை கூறும் கருத்து.. ஒரே மெய்யான தேவனாக இயேசுவை யோவான் சித்தரிக்கவில்லை!

-------------------


58.பிதா இழுத்துக்கொண்டால் மட்டுமே இயேசுவிடம் ஒருவன் வருவானாம்! அதேபோல் பிதாவிடம் கேட்டு கற்றுக்கொள்பவன் தான் வருவானாம்


⁴⁴ என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.

⁴⁵ எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.

(யோவான் 6:44-45)

அதாவது இயேசுவாக தன் வல்லமையால் யாருக்கும் நேர்வழி கொடுக்க இயலாது.. மாறாக பிதாவே கொடுக்கிறார் என்பதே இது கூறும் கருத்து!

-----------------------------



59. இயேசு பிதாவை கண்டவராக சித்தரிக்கப்படுகிறது. இதன் மூலம் பிதா வேறொரு நபர் என அறிய்ப்படுகிறார்.


⁴⁶ "தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர்."(யோவான் 6:46)

இயேசு தேவனுடைய பையன் என நம்பியதால், அவர் தன் தகப்பனை கண்டிருப்பார் என்பதே இதன்மூலம் யோவான் சொல்ல வருகிறார்.

-------



.60.இயேசு ஜீவனுள்ள பிதாவின் மூலமாக தான் பிழைத்திருக்கிறாராம்!


⁵⁷ "ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்."(யோவான் 6:57)

அதாவது இயேசு சுயமாக பிழைத்திருக்கவில்லை! அப்படி இருக்க இவர் எப்படி ஒரே தேவனாவது??

--------------


61.இயேசு ஏற்கனவே இருந்த இடத்திற்கு ஏறிப்போவாராம்!

⁶² மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்? (யோவான் 6:62)

இயேசு ஏற்கனவே குழந்தையாக தேவனிடம் இருந்தார் என்பதே இது கூறவரும் மறைமுக கருத்து!

--------------

62.இயேசு சொல்லுகிற வசனங்கள் ஆவியும் ஜீவனுமாக இருக்கிறதாம்!


⁶³ "ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது." (யோவான் 6:63)

இயேசு சொல்லக்கூடிய வசனங்கள் அவருடையதல்ல.. தேவனுடையது என்பதால் அவை ஆவியும் ஜீவனுமாக உள்ளன


-------

.




63.இயேசுவை அவரது சொந்த சகோதரர்கள் கூட ஆரம்பத்தில் நம்பவில்லை. தேவனுக்கு சகோதரர் இல்லை!


⁵ அவருடைய சகோதரரும் அவரை விசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள் (யோவான் 7:5)

--------.



64.இயேசுவின் உபதேசம் அவருடையவை அல்ல!. அவரை அனுப்பியவருடையதாம்! அதுமட்டுமின்றி இயேசு சுயமகிமையௌ தேடாமல் அனுப்பினவருடைய மகிமையையே தேடுபவராம்!


¹⁶ "இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது."

¹⁷ "அவருடைய சித்தத்தின்படி செய்யமனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்."

¹⁸ "சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை." (யோவான் 7:16-18)

-------------



65.இயேசு சுயமாக வரவில்லையாம்! பிதா தான் அவரை அனுப்பினாராம்!



²⁸ "அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கையில் சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கேயிருந்து வந்தேனென்றும் அறிவீர்கள்; நான் என்சுயமாய் வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர், அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்."

²⁹ "நான் அவரால் வந்திருக்கிறபடியினாலும், அவர் என்னை அனுப்பியிருக்கிறபடியினாலும், நானே அவரை அறிந்திருக்கிறேன் என்றார்."(யோவான் 7:28-29)

அனுப்பப்பட்டவர், சுயமாக வராதவர் எப்படி ஒரே தேவனாவார்?

-----------------



66.இயேசுவின் பேச்சை கேட்டவர்கள் கூட அவரை தீர்க்கதரிசி என்றும் கிறிஸ்து என்றும் தான் சொன்னார்கள்-(யோவான் 7:40-41)


 -----------



67.இயேசு உலகத்துக்கு ஒளியாக இருக்கிறாராம்! அவரை பின்பற்றுபவரும் ஜீவ ஒளியை அடைவார்களாம்!

¹² "மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்." (யோவான் 8:12)

இருளான பாதையில் செல்வதற்கு வழிகாட்டுதல் தேவை. அந்த வழிகாட்டுதல் தான் ஒளி..

-------


68.இயேசு வேறு பிதா வேறு என மூளை உள்ள எல்லோரும் புரிந்துகொள்வார்கள். ஆனால் கிறாஸ்தவர்களிலுள்ள ஒரு பிரிவினர் இயேசு தான் பிதா என்று வேறு கூறுகிறார்கள். அவர்களுக்கு பதிலாக இயேசுவும் பிதாவும் இரண்டு பேர் என இயேசு நேரடியாக சொல்வதாக யோவான் எழுதுகிறார்.



¹⁷ இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே.

¹⁸ "நான் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவனாயிருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறார் என்றார். (யோவான் 8:17-18)

------------"


69.நானே அவர் என இயேசு சொன்னதால் அவர் தன்னை கடவுளென வாதிட்டதாக மடத்தனமான வாதத்தை சிலன் வைப்பார்கள்!


²⁴ ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்.

²⁵ அதற்கு அவர்கள்: நீர் யார் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் ஆதிமுதலாய் உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர்தான்.

²⁶ உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்களுண்டு. என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன் என்றார்.

²⁷ பிதாவைக்குறித்துப் பேசினாரென்று அவர்கள் அறியாதிருந்தார்கள்.

²⁸ "ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தினபின்பு, நானே அவரென்றும், நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்."

(யோவான் 8:24-28)

தான் பிதாவால் அனுப்பப்பட்ட கிறிஸ்த்து என்பதை தான் அவ்வாறு சொல்கிறார் என படித்தாலே புரிந்துவிடும்.. ஒரு வசனத்தை மட்டும் பிடித்து மற்றதை விட்டுவிட்டு பார்த்தால் தப்பாக தான் தெரியும்!

நானே அவர் என்பது தெய்வீகமா?

----------------

70.இயேசுவை அனுப்பியவர் இயேசுவுடனே இருக்கிறாராம். அவருக்கு பிரியமானவைகளையே இயேசு செய்பவராம்!


²⁹ "என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்கவிடவில்லை என்றார்." (யோவான் 8:29)

இயேசு தேவனால் பக்கபலம் கொடுக்கப்பட்டதாக தான் இவை சொல்கின்றன.

----------



71.இயேசு தேவனிடத்தில் சத்தியத்தை கேட்ட மனுசன் என்றே இயேசு சொல்வதாக எழுதப்பட்டுள்ளது.


⁴⁰ "தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே." (யோவான் 8:40)

--------------


72.இயேசு சுயமாக வரவில்லை.. அவரே இயேசுவை அனுப்பினாராம்!


⁴² "இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்." (யோவான் 8:42)

சுயமாக வராதவர் தேவனா?

-----------+



 73.இயேசு தனக்கு மகிமையை தேடமாட்டாராம்! அதை தேடி நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் இருக்கிறாராம்!


⁵⁰ "நான் எனக்கு மகிமையைத் தேடுகிறதில்லை; அதைத் தேடி, நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் இருக்கிறார்." (யோவான் 8:50)


---------------.

74.இயேசு ஆப்ராகாமிற்கு முன்பே இருக்கிறாராம்!



⁵⁶ உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார்.

⁵⁷ "அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்."

⁵⁸ அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான் 8:56-58)

ஆப்ரகாம் இயேசுவுடைய நாளை கண்டு களிகூர்ந்தான் என கூறப்படுவதிலிருந்து, ஆப்ரகாம் தீர்க்கதரிசனத்தில் இதை கண்டார்.. அந்த படி இயேசு தேவனுடைய சித்தத்தில் ஆப்ரகாமுக்கு முன்பே இருக்கிறார் என்பதே இதன் கருத்து.


ஆனாலும் இயேசு ஆரம்பத்திலேயே தேவனுடைய குழந்தையாக மடியில் இருந்தார் என்பதே இப்புத்தகம் சொல்லும் கருத்து!

நானே என்பது தெய்வீகமா 

--------


75.இயேசு மூலம் பாரவையடைந்த குருடன் கூட இயேசுவை தேவன் என நம்பவில்லை!! மாறாக தீர்க்கதரிசி என்றே நம்பினான்.


¹⁷ "மறுபடியும் அவர்கள் குருடனை நோக்கி: உன் கண்களைத் திறந்தானே, அவனைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய் என்றார்கள். அதற்கு அவன்: அவர் தீர்க்கதரிசி என்றான்."(யோவான் 9:17)

-----------

 

76.இயேசுவை சுகப்படுத்தப்பட்ட குருடன் பணிந்து கொண்டாராம்!



³⁵ "அவனை அவர்கள் புறம்பே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைக் கண்டபோது: நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா என்றார்."

³⁶ "அதற்கு அவன்: ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாயிருக்கும்படிக்கு அவர் யார் என்றான்."

³⁷ "இயேசு அவனை நோக்கி: நீ அவரைக் கண்டிருக்கிறாய், உன்னுடனே, பேசுகிறவர் அவர்தான் என்றார்."

³⁸ "உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான்." (யோவான் 9:35-38)


இயேசுவை ஆண்டவராக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36

பணிந்துகொள்வது பைபிளில் வழமையாக காணக்கிடைக்கும்

.தாவீதையும் தேவையும் மக்கள் பணிந்து கொண்டதாக பைபிளில் காணமுடிகிறது.

“"அதின்பின்பு தாவீது சபை அனைத்தையும் நோக்கி: இப்போது உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்தரியுங்கள் என்றான்; அப்பொழுது சபையார் எல்லாரும் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்தரித்து, தலை குனிந்து கர்த்தரையும் ராஜாவையும் பணிந்துகொண்டு,"”

  — 1 நாளாகமம் 29:20 (TBSI)


---------------


77.இயேசு ஆடுகளுக்காக உயிரை கொடுப்பாராம்! அதே உயிரை பிதா திருப்பி கொடுப்பாராம்!


¹⁵ நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.


¹⁷ நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக்கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். (யோவான் 10:17-15,17)

உயிரை திருப்பி இவருக்கு கொடுக்கிறவர் தான் கடவுள்.. இவரல்ல!!

----------

78.இயேசுவுக்கு அந்த தன் உயிரை கொடுக்கவும் அதை திரும்ப எடுக்கவும் அதிகாரம் உண்டாம்!! இந்த கட்டளையை பிதா விடம் பெற்றுக்கொண்டாராம!



¹⁸ "ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்."(யோவான் 10:18)

பெற்றுக்கொண்டார் கடவுளல்ல!! கொடுத்தவரே கடவுள்!

-------------


79.இயேசுவும் பிதாவும் ஒரே நபர் என இயேசு சொன்னாரா? நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம என்பதன் அர்த்தம்:




“"நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதுமில்லை."”

 ²⁹ அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.

³⁰ நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.

இயேசுவின் கையிலிருந்து பிதா அவருக்கு கொடுத்த ஆடுகளை ஒருவராலும் பறித்துக்கொள்ள முடியாது. காரணம் பிதா எல்லோரிலும் பெரியவர். அவரது கையிலிருந்து யாருக்கும் பறிக்க இயலாது. . பிதா என்னை கைவிட்டுவிடவில்லை.. நாம் ஒன்றாக ஒற்றுமையாக தான் இருக்கிறோம் என்று தான் அதை படித்தால் புரிகிறது.


இது ஒற்றுமையை தான் குறிக்கிறது என்பதற்கு இதே யோவான் 17 இல் இயேசு சொன்னதாகவே எழுதப்பட்டுள்ளது.

²⁰ "நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும், வேண்டிக்கொள்ளுகிறேன்."

²¹ "அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்."

²² "நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்."

(யோவான் 17:20-22)

 அதாவது பிதா இயேசுவுடன் ஒற்றுமையாக தான் உள்ளார். அதனால் அவரது கையிலிருந்து ஆடுகளை பறிக்க முடியாது என்றே இங்கே கூறப்படுகிறது!

--------------------



80.கிறிஸ்தவர்களின் இன்னொரு தப்பான புரிதல்: இயேசு நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என சொன்னதற்காக யூதர்கள் தேவதூசனம் சொன்னதாக கூறி கல்லெறிந்தார்கள் என அதே அதிகாரத்தில் உள்ளது. ஆகவே இயேசு தெய்வீகத்தை இதில் வாதிட்டுள்ளார் என அடம்பிடிக்கிறார்கள்!

இது உண்மையா என பார்ப்போம்:




³³ "யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி, இவ்விதமாக தேவதூஷணஞ்சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்."

³⁴ இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா?

³⁵ "தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க,"

³⁶ "பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ்சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?"

(யோவான் 10:33-36)


இதை படித்தால், இயேசு தேவதூசனம் சொன்னதாக யூதர்கள் கூற காரணம் "ஒன்றாக இருக்கிறோம்" என்பதற்காக அல்ல! மாறாக தேவனை பிதா என்றும் தன்னை தேவனுடைய குமாரன் என்றும் சொன்னதை குறித்து தான் என தெளிவாக புரிகிறது! அதை தான் யோவான் 10:36 இல் இயேசு சொன்னதாகவே எழுதப்பட்டுள்ளது!


ஏன் தன்னை தேவகுமாரன் என சொல்வதையும் அங்கே கூறப்படுகிறது!!

அதாவது தேவன் அவரை அனுப்பியதாலும், தேவனால் பரிசுத்தம்பண்ணப்பட்டதாலுமே அவ்வாறு சொன்னதாக கூறப்பட்டுள்ளது!

இதே போல பிதா குமாரன் உறவு பைபிளில் சாதாரணமாக காணக்கிடைக்கும் .


உதாரணமாக சாலமோனை குறித்து, 

“"நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனுஷருடைய மிலாற்றினாலும் மனுபுத்திரருடைய அடிகளினாலும் தண்டிப்பேன்."”

  — 2 சாமுவேல் 7:14 


ஆனாலும் இதை எழுதியவர் இயேசு தேவனிடம் அவரது மடியில் ஏற்கனவே குழந்தையாக இருந்தார் என்ற நம்பிக்கை உடையவர் தான் (யோவான் 1:18) அதை குறித்து அதிகாரம் 1 இல் எழுதியுள்ளேன்.

----------------------------

81. இயேசுவினுள் பிதா இருந்தாரா? 


³⁷ "என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்கவேண்டியதில்லை."

³⁸ "செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார்." (யோவான் 10:37-38)

இயேசு மூலம் பிதா தான் அற்புதம் செய்தார்.. அதனால் தான் 10:38 இல் அந்த கிரியைகளை விசுவாசிக்க சொல்கிறார்.


மேலும் இயேசு மூலம் தேவன் தான் அற்புதம் செய்தார் என்பதே ஆரம்பகால சீடர்கள் ஆவி தூண்டி பேசியதாக கூறப்படுகிறது -அப்போஸ்தலர் 2:22

இதே போல இயேசுவும் சீடர்களில் இருப்பதற்கும், பிதா இயேசுவில் இருப்பதற்கும் இயேசு வேண்டுதல் செய்கிறதாக இதே புத்தகம் கூறுகிறது:

“"ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்."”

  — யோவான் 17:23 

பிதா இவரது உடலுக்குள் புகுந்துவிடவில்லை என்பதை இவை காட்டுகிறது! ஏனெனில் புகுந்துவிட்டால், இவர் பிதாவிடம் வேண்டவேண்டியதில்லை... காரணம் அவரே பிதாவாகிவிடுவார். மேலும் சீடர்களுக்குள்ளும் இயேசு புகுந்தார் என நம்பவேண்டிவரும்.. அப்படி பார்த்தால் அவர்களும் இயேசு என புரியவேண்டும்!!


----------------




82.இயேசுவை நம்பிய மார்த்தாள் கூட இயேசுவை கடவுளென நம்பவில்லை! மாறாக கடவுளிடம் இயேசு எதை கேட்டாலும் கடவுள் இயேசுவுக்கு கொடுப்பார் என்றே நம்பினாள்


²¹ "மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான்."

²² இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன் என்றாள். (யோவான் 11:21-22)


-----------------------

83.இயேசு தன்னை உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் என சொல்வது தெய்வீகமான?



²³ இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார்.

²⁴ அதற்கு மார்த்தாள்: உயிர்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.

²⁵ "இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;"

²⁶ உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.

²⁷ "அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்." (யோவான் 11:23-27)

தேவன் ஒன்றும் உயிர்த்தெழுதல் அல்ல!! காரணம் அவர் மரணிப்பவர் அல்ல!

இதை சொன்னபோது கூட, இயேசுவை கிறிஸ்த்து என்றே நம்பினாள்!! தேவன் என்று அல்ல (யோவான் 11:27)

மேலும் இயேசுவை கிறிஸ்துவாக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36 

-----------------------------.


84.இயேசு லாசருவை உயிர்ப்பித்ததுகூட தேவன் அவருக்கு செவிகொடுப்பதால் தான் .


 …  

⁴¹ "அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்."

⁴² நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள்நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார்.

⁴³ "இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்."(யோவான் 11:41-43)

சோ இது தெய்வீகம் அல்ல-!

-----------------------

.

85. இயேசு கர்த்தரின் நாமத்தில் வந்தார்


 …  

¹³ "குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள்." (யோவான் 12:13)

கர்த்தரின் நாமத்தில் தான் தீர்க்கதரிசிகள் வருவார்கள்.

தாவீது கூட தான் கர்த்தரின் நாமத்தில் வந்தேன் என்றான் என் எழுதப்பட்டுள்ளது. 1 சாமுவேல் 17:45

-------------------


86.இயேசுவிடம் விசுவாசமாயிருக்கிறவன் அவரை அனுப்பியவருக்கு விசுவாசமாக இருப்பவனாம். அதேபோல் இயேசை கண்டவன் அவரை அனுப்பினவரை கொண்டவனாய்!



⁴⁴ "அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான்."

⁴⁵ என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான்.(யோவான் 12:44-45)


-------

87.இயேசு சுயமாக பேசாமல், அவருக்கு பிதா கட்டளையிட்டவற்றையே பேசுகிறாராம்.. உபதேசிக்கிறாராம்!


⁴⁹ "நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்."

⁵⁰ அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.

(யோவான் 12:49-50)

இவை அவர் கடவுள் அல்ல என தெளிவாக சொல்கிறது!.


----------------------

88.இயேசு தன்னை ஆண்டவர் என சொன்னாராம்.


¹³ "நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்."

¹⁴ "ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்."(யோவான் 13:13-14)


இயேசுவை ஆண்டவராக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36

அதிகாரம் உள்ள நபரை ஆண்டவர் என அழைப்பர்.. மற்றபடி கடவுள் அல்ல!

தாவீதை அடிக்கடி ஆண்டவன் என அழைக்கப்பட்டதை சாமுவேல், நாளாகம புத்தகங்களில் காண கிடைக்கிறது. ஏற்கனவே எழுதியும் விட்டேன்!

----------------------



 89. அனுப்பினவரை விட அனுப்பப்பட்டவன் பெரியவனல்ல என சொல்லிவிட்டு, என்னை ஏற்பவன் என்னை அனுப்பியவரை ஏற்கிறார் என கூறி தன்னைவிட பிதா பெரியவர் என கூறுகிறார்.


¹⁶ "மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல."


 …  

²⁰ "நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்." (யோவான் 13:16,20)

---------------


90.இயேசு வழியும் சத்தியமுமாம்.


⁴ "நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார்."

⁵ "தோமா அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான்."

⁶ அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

(யோவான் 14:4-6)

பிதாவிடம் செல்வதற்கான வழியாகவே தன்னை காட்டுகிறார். அதாவது பிதாவிடம் போகவேண்டுமானால் இயேசு மூலமாக தான் போகவேண்டும் என்கிறார்.


இதன்மூலம் பிதா வேறு அவர் வேறு என்பதுடன், பிதா ஒருவரே மெய்யான தேவன்-யோவான் 17:3 என அவர் கூறியதாக எழுதவும் பட்டுள்ளது.

தேவன் எப்படி சத்தியமுள்ளவரோ, அதேபோல் சத்தியத்தை போதிக்க வருவோரும் சத்தியமானவரே.. அவர் தேவனல்ல!


------------------

91.இயேசுவை கண்டவன் பிதாவை கண்டவன் என்பது தெய்வீகத்தை வாதிடுவதா??


⁷ என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.

⁸ "பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்."

⁹ "அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?"

¹⁰ "நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்."

¹¹ நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.

(யோவான் 14:7-11)

இயேசு மூலம் காரியங்களை செய்தது பிதா என்பதால், தன்னை கண்டவன் பிதாவை கண்டவன் என கூறுகிறார். 

பிதா இயேசுவில் வாசமாயிருக்கிறார் என்பதை விளக்கும் வகையில் 14:23 உள்ளது.

²³ "இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்


மற்றபடி இயேசு தேவனிடம் சத்தியத்தை கேட்ட மனுசன்-யோவான் 8:40

-------------------------


92. இயேசு பிதாவிடம் வேண்டும் வராமலே உள்ளார்.

 …  

¹⁶ "நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்." (யோவான் 14:16)


 …  

--------


93.இயேசுவிடம் கேட்கும் வசனங்கள் பிதாவினுடையவை. இயேசுவினுடையவை அல்ல!


²⁴ என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது. (யோவான் 14:24)



 ------------------

94.பிதா இயேசுவிலும் பெரியவர்.


²⁸ "நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக்குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்."(யோவான் 14:28)

--------------


95.பிதா கட்டளையிட்டபடியே இயேசு செய்கிறாராம்.


³¹ "நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இவ்விடம்விட்டுப் போவோம் வாருங்கள் என்றார். " (யோவான் 14:31)

----------------



96.இயேசு திரிட்சை செடி.. தேவன் அதன் தோட்டக்காரன்


 அதாவது தேவனால் நடப்பட்ட செடியே இயேசு..

¹ "நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர்."

² "என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்." (யோவான் 15:1-2)

-----------------


97.பிதாவின் கற்பனைகளை கைக்கொள்வதால் இயேசு பிதாவின் அன்பில் நிலைத்திருக்கிறாராம்!

.

¹⁰ "நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்."

(யோவான் 15:10)

------------


98.இயேசு பிதாவிடம் கேள்விப்பட்டவற்றை அறிவிப்பவரே.

 …  

¹⁵ "இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்."

(யோவான் 15:15)



----------------


99.யூதர்கள் இயேசுவையும் பிராவையும் கண்டும் பகைத்தார்களாம்.



²³ என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான்.

²⁴ "வேறொருவரும் செய்யாத கிரியைகளை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தேனானால், அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் கண்டும் பகைத்துமிருக்கிறார்கள்."(யோவான் 15:23-24)



இயேசு மூலம் தேவனே அற்புதம் செய்தார் என்பதாலும் தேவனது கட்டளைகளையே இயேசு போதித்ததாலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது

-----------





 100. பிதாவினுடையவை யாவும் இயேசுவுடையதாம். இயேசு பிதாவின் மடியிலிருந்த அவரது வாரிசு என்பதே இந்நூலாசிரியரின் கருத்து!


¹⁵ பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன். (யோவான் 16:15)

 … -----------



101. பிதா ஒருவரே மெய்யான தேவன் என்பதையே இயேசு பிதாவிடம் சொல்கிறார்.


³ ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். (யோவான் 17:3)

பிதா மட்டுமே மெய்யான தேவனாக வானத்தில் இருக்க, இயேசு அவரால் அனுப்பபட்டுமிருக்க இயேசு எப்படி தேவனாவார்?

------------------


102.உலக தோற்றம் முன்பே இயேசு இருந்தாரா?



²⁴ "பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்கவிரும்புகிறேன்.". (யோவான் 17:24)



இயேசு தேவனிடம் உலக தோற்றத்தின் முன்பே இருந்தார் என்பதே யோவான் கூறவரும் கருத்து. ஆனாலும் இயேசு நேரடியாக இருக்கவில்லை என்பதே உண்மை.. இல்லாத ஒன்று உருவாக முன்பே அதை நேசிக்க அன்பு காட்ட இறைவனுக்கு இயலும்!

-------------



103.தேவன் தான் பிதா. அவர் இயேசுவுக்கும் தேவன்.. ஏனையோருக்கும் பிதா!



¹⁷ "இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்." (யோவான் 20:17)


-------------

104. தோமா இயேசுவை என் தேவனே என் ஆண்டவனே என சொன்னாராம்.



²⁷ "பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்."

²⁸ தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.(யோவான் 20:27-28)

இயேசுவை ஆண்டவராக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36

மேலும் தேவன் என்பது அதிகாரம் கொடுக்கப்பட்டவர்களை தேவ வசனத்தை பெற்றுக்கொண்டவர்களை தேவன் என அழைப்பது பைபிளில் சாதாரணமாக காணக்கிடைக்கும்.


உதாரணமாக இயேசு கூட, தேவ வசனத்தை பெற்றுக்கொண்டவர்கள் தேவர்கள் என அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என யோவான் 10:35 இல் சொல்கிறார். அதேபோல ராஜாவை குறித்து தேவனே என ஊழியகாரனால் அழைக்கப்பட்டிருக்கிறான்.



⁶ "தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உமது ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது."

⁷ "நீர் நீதியை விரும்பி, அக்கிர

மத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்ததைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்."


 …  



¹⁶ உமது பிதாக்களுக்குப் பதிலாக உமது குமாரர் இருப்பார்கள்; அவர்களைப் பூமியெங்கும் பிரபுக்களாக வைப்பீர்.(சங்கீதம் 45:6-7,16)


இதுபோன்றே தோமா அழைத்திருக்கிறார்.


ஆனால் இயேசு , பிதா ஒருவரே மெய்யான தேவன் என்கிறார்-யோவான் 17:3


இதை எழுதிய யோவான் கூட, இவைற்றையெல்லாம் இயேசுவை கிறிஸ்த்து என அறியவேண்டும் என்பதற்காக எழுதியதாகவே சொல்கிறான்:


³¹ "இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது. " (யோவான் 20:31)

----------------

அப்போஸ்தலர் நடபடிகளின்படி இயேசு  கடவுளல்ல



அல்லாஹ் வழிதவறச்செய்கிறான் என்பதன் விளக்கம்

1.மனிதனுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது  --மனிதனுக்கு இறைவன் வழி காட்டியுள்ளான். ஒன்று அவன் நன்றியுள்ளவனாக இருக்கிறான் அல்லது காஃபிராக இருக்கிறான...