இடுகைகள்

செப்டம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆயிஷா (ர) அவர்களுடனான நபிகளாரின் திருமணம்

  நபி(ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா அவர்களை முடித்தது பற்றி மிசநரிகளும் ஏனைய நிராகரிப்பாளர்களும் இஸ்லாத்தையும் உயர்வான நபிகளாரையும் கேலி செய்வதை வழமையாக கொண்டிருக்கிறார்கள். அத்தோடு கேலிச்சித்திரங்களையும் வரைந்து தம் மனதை சந்தோசப் படுத்திக் கொள்கிறார்கள் . குர்ஆனின் போதனைகளிலே நியாயமாக குறைகாண முடியாமலும் நபிகளாரின் போதனைகளிலே நியாயமாக குறைகாண முடியாமலும் இருப்பதால், இதுபோன்றவற்றை பயன்படுத்திக்கொள்ள பார்ப்பார்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தற்குரித்தனமானவை என்பதை வரலாற்றை ஆராய்ந்தால் புலனாகும். அதற்கேற்ப இதை சில பகுதிகளாக பிரித்து பார்ப்போம்  1.ஆயிஷா (ர) அவர்களுக்கு திருமணம் பேசப்படும் காலத்திலேயே நபிகளாருக்கு பேசப்பட்டார்கள் 2.அக்காலத்திலேயே இளவயது திருமணம் நடைமுறையில் இருந்தது  3.இல்லறவாழ்க்கைக்கான உடல் தகுதியை அடைந்த பின்பே நபிகளாருடன் வாழ்ந்தார்கள் . 4.இத்திருமணத்தால் அன்னை ஆயிஷா பாதிக்கப்படவில்லை  5.ஆயிஷா(ர) நபிகளாரை அதிகம் நேசிப்பவராகவே இருந்தார்  6.படித்த யூதர்கள் இவ்விசயத்தில் கப்சிப் 7.உலகளாவிய ரீதியில் இத்தகைய திருமணங்கள் சர்வசாதாரணமாக இருந்தன  8.இஸ்லாம...

பாவிகளை கடவுள் நேசிப்பாரா? - தற்குறிகளுக்கு மறுப்பு

 அல்லாஹ் பாவிகளை ,காஃபிர்களை நேசிப்பதில்லை . ஆனால் கர்த்தரோ அப்படி அல்ல.. பாவிகளை நேசிப்பவர் என  போதகர்கள் உருட்டுவார்கள். 1.அல்லாஹ் யாரை நேசிப்பதில்லை? ஏன் 2.அல்லாஹ் யாரை நேசிக்கிறான்? 3.கர்த்தர் பாவிகளை நேசிக்கிறாரா? 1.அல்லாஹ் யாரை நேசிப்பதில்லை? ஏன்? அல்லாஹ் அநியாயக்காரர்களை நேசிப்பதில்லை (3:57,140) பாவிகளான காஃபிர்களை நேசிப்பதில்லை (2:276, 3:32), வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை (2:190),கர்வமுடையோரை வீண் பெருமையுடையோரை நேசிப்பதில்லை (4:36), கொடும்பாவியான சதிசெய்துகொண்டிருப்பவனை நேசிப்பதில்லை (4:107),குழப்பம் புரிவோரை நேசிப்பதில்லை (5:64), வீண்விரயம் செய்வோரை நேசிப்பதில்லை (6:141,7:31), துரோகம் செய்வோரை நேசிப்பதில்லை (8:58), பெருமையடிப்போரை நேசிப்பதில்லை (16:23) என குர்ஆன் கூறுகிறது. இப்படி நேசிக்காமல் இருப்பதுவே நீதியானது. அத்தோடு அவ்வாறு நேசிப்பதில்லை என்று முன்பே அறிவித்து விடுவது தான் உண்மையான நேசம்.  காரணம் இத்தகையோர் நரகத்தில் புகுத்தப்படுவர் .. அதுவே குற்றவாளிகளுக்கான இறைவன் ஏற்படுத்திய தண்டனை எனும் நீதி..   ஆகவே இறைவன் அவர்களை நேசிப்பதாக பொய் கூறிவிட்டு நரகத...

இஸ்லாமும் பெண்களும் பைபிளும்

  1.பெண்களை ஒரு பொருட்டாகவும் மதிக்காதவர்களிடமே பெண்களின் உரிமைகளை குர்ஆன் கூறியது-(புகாரி 5843). ஆனால் பைபிள் பெண்ணோ விற்பனை பொருளாக பார்க்கிறது . அதாவது தகப்பனுக்கு தன் மகளை விற்பனை செய்யும் உரிமையும் உண்டு (யாத்திராகமம் 21:7-10) 2.பெண்குழந்தை பிறப்பதை இழிவாகவும், அவர்களை உயிரோடு புதைக்கும் மக்களிடையே (குர்ஆன் 16:58-59, ) , பெண் குழந்தைகளை உயிருடன் புகைப்பதை பெரும் பாவம் என்றும் (புகாரி 2408), பெண்குழந்தைகளால் சோதிக்கப்பட்டவர்களை அக்குழந்தைகள் நரகத்திலிருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள் என்றும் (புகாரி 1418), இரண்டு பெண் குழந்தைகளை நல்லமுறையில் வளர்ப்பவரும் நானும் சுவர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என தன் இரு விரல்களை இணைத்து காட்டினார்கள் (முஸ்லிம் 5127 (2631)) ஆனால் பைபிளோ பெண் குழந்தையை பெற்றெடுத்தால் ஆண்குழந்தையை பெறுவதைவிட இருமடங்கு தீட்டு ஏற்படும் ( லேவியராகமம் 12:1-5 ) 3.பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படாத காலத்தில், அவளது திருமணத்திற்கு அவளது சம்மதம் அவசியம் என்றும் அவளது விருப்பமின்றி திருமணம் செய்து வைக்க கூடாது என்றும் உரிமையை வழங்கியது (புகாரி 5136,5138, 6945,6946) ஆ...

இஸ்லாம் அடிமைகளை நடத்தியவிதம்

  இஸ்லாம் அடிமைகளை கண்ணியப்படுத்துகிறதோடு அவர்களை நல்லமுறையில் நடத்துமாறு வழிகாட்டுகிறது   * அடிமைகள் என்போர் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் தந்துள்ள உங்கள் சகோதரர்கள் என்றும் அத்தகையோருக்கு நீங்கள் உண்ணுவதிலிருந்து உணவளிக்க வேண்டும் என்றும் நீங்கள் அணிவதிலிருந்து அணியக்கொடுக்க வேண்டும் என்றும் அவர்களின் சக்திக்கு மீறிய பணியை கொடுத்து சிரமப்படுத்த கூடாது என்றும் அப்படி கொடுத்தால் அவருக்கு உதவி செய்யட்டும் என்றும் நபிகளார் வழிகாட்டினார்கள் (புகாரி 30,6050, முஸ்லிம் 3417 ,3419, 3420 (1661a,c,1662) * அடிமைகள் விசயத்தில் இறைவனை அஞ்சிக்கொள்ளுமாறு நபிகளார் கூறியுள்ளார்கள் ( அபூதாவூத் 5156,இப்னுமாஜா 2698, அஹ்மத் 585) * அடிமைக்கு அறைந்தாலோ நியாயமின்றி அடித்தாலோ அவரை விடுதலை செய்வதே அதன் பரிகாரம் (முஸ்லிம் 3408 ,3409 (1657a,b) - ஆனால் பைபிளில் பல் உடைவதற்கு அடித்தால் தான் விடுதலை செய்யவேண்டும்.அல்லது கண்ணை கெடுத்தால் தான் விடுதலை செய்ய வேண்டும் (யாத்திராகமம் 21:26,27 ) * அடிமைக்கு சாட்டையால் அடித்த நபித்தோழரை கண்ட நபிகளார் , உமக்கு உம் அடிமை மீது உள்ள அதிகாரத்தை விட , அல்லாஹ்வுக்கு உம்...

அடிமைப்பெண்களும் முத்ஆ திருமணமும்

 உள்ளடக்கம் 1.விபச்சாரத்திலிருந்து தூரமாக வழிகாட்டும் இஸ்லாம் 2.இஸ்லாமிய நம்பிக்கைப்படி விபச்சாரம் என்பது என்ன? 3.அடிமைப்பெண்களுடன் தாம்பத்திய வாழ்க்கையும் ஒழுங்குமுறையும் 4.முத்ஆ திருமணம் 1.விபச்சாரத்திலிருந்து தூரமாக வழிகாட்டும் இஸ்லாம் *இஸ்லாம் விபச்சாரத்தை நெருங்கவே வேண்டாம் என்று கூறுகிறது (குர்ஆன் 17:32). * விபச்சாரத்தில் விழுந்துவிடாதிருக்க ,,  -முதலில் ஆண்களுக்கு பார்வையை தாழ்த்திக்கொள்ளுமாறும் (குர்ஆன் 24:30), பின் பெண்களுக்கு பார்வையை தாழ்த்திக்கொள்ளுமாறும் தம் அலங்காரங்களை அந்நிய ஆண்களுக்கு வெளிப்படுத்த கூடாது என்றும் மறைத்து வைத்துள்ள அலங்காரம் வெளிப்படுவதற்காக கால்களை தட்டி நடக்க வேண்டாம் என்றும் (குர்ஆன் 24:31), ஒரு பெண் அந்நிய ஆணுடன் பேசும்போது குளைந்து குளைந்து கவர்ச்சியாக பேசக்கூடாது என்றும் அவ்வாறு செய்தால் , மனதில் நோயுள்ளவன் ஆசைப்படுவான் என்றும் (குர்ஆன் 33:32), ஒரு பெண்ணுடன் அந்நிய ஆண் (திருமணம் செய்ய தடைசெய்யப்பட்ட ஆண் அல்லது கணவன் அல்லாதவர்) தனித்திருக்க கூடாது (புகாரி 5233,3006), என்றும் தனியாக உள்ள பெண்ணிடம் கணவனின் சகோதரன் செல்வதை கூட மரணத்துக்கு ஒப்ப...