அன்னை மர்யமுடன் பேசிய மலக்கு ஒருவரா பலரா? - குர்ஆனில் முறண்பாடா?
அன்னை மர்யமுடன் வானவர் பேசியதில் குர்ஆன் முறண்படுகிறதா? - மொழியறிவற்றோருக்கு பதில் ------------------------------------------------ அரபு மொழியில் போதிய அறிவு இல்லாமலும் குர்ஆனிய மொழிநடையில் போதிய அறிவு இல்லாமலும் சில மடையர்கள், "மர்யம் அவர்களுடன் வானவர் பேசிய சம்பவத்தில் முறண்படுகிறது" கூறுகிறார்கள். அதாவது, மர்யம் அவர்களிடம் வந்து பேசியது ஜிப்ரீல் (அலை) அவர்களா? (19:17-21), அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மலக்குகளா? (3:42,45-47) என்று நம்மிடம் கேட்டு, இதை முறண்பாடு என்று பிதற்றுகிறார்கள். நம் பதில் என்னவென்றால், மர்யம் அவர்களிடம் அனுப்பபட்டு , அவரோடு பேசியவர் ஒருவர் தான்.. அவர் தான் ஜிப்ரீல். (19:17-21) அப்படியென்றால், ஏன் குர்ஆன் 3:42,45-47 இல் "இத் காலதில் #அல்மலாயிகது" என அதாவது "வானவர்கள் கூறிய சமயத்தில்.. (நினைத்துபாரும்!)" கூறுகிறது? இதற்கு பதில் மிக இலகுவானது... அரபு மொழியில் பன்மையான வார்த்தைகளின் மூலம் ஒருவரை குறிக்கவும் பாவிப்பதுண்டு.. இந்த விசயம் அறியாததால் தான் இந்த மடையர்கள் இப்படி கதறுகிறார்கள். உதாரணமாக, 1. அரபு மொழியில் "மின்மன் ஸமிஃத...