சனி, 30 நவம்பர், 2019

அன்னை மர்யமுடன் பேசிய மலக்கு ஒருவரா பலரா? - குர்ஆனில் முறண்பாடா?

அன்னை மர்யமுடன் வானவர் பேசியதில் குர்ஆன் முறண்படுகிறதா? -  மொழியறிவற்றோருக்கு பதில்------------------------------------------------



அரபு மொழியில் போதிய அறிவு இல்லாமலும் குர்ஆனிய மொழிநடையில் போதிய அறிவு இல்லாமலும் சில மடையர்கள், "மர்யம் அவர்களுடன் வானவர் பேசிய சம்பவத்தில் முறண்படுகிறது" கூறுகிறார்கள்.

அதாவது, மர்யம் அவர்களிடம் வந்து பேசியது ஜிப்ரீல் (அலை) அவர்களா? (19:17-21), அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மலக்குகளா? (3:42,45-47)  என்று நம்மிடம் கேட்டு, இதை முறண்பாடு என்று பிதற்றுகிறார்கள்.


நம் பதில் என்னவென்றால், மர்யம் அவர்களிடம் அனுப்பபட்டு , அவரோடு பேசியவர் ஒருவர் தான்.. அவர் தான் ஜிப்ரீல். (19:17-21)


அப்படியென்றால், ஏன் குர்ஆன் 3:42,45-47 இல் "இத் காலதில் #அல்மலாயிகது"  என அதாவது "வானவர்கள் கூறிய சமயத்தில்.. (நினைத்துபாரும்!)" கூறுகிறது?


இதற்கு பதில் மிக இலகுவானது...
அரபு மொழியில் பன்மையான வார்த்தைகளின் மூலம் ஒருவரை குறிக்கவும் பாவிப்பதுண்டு..
இந்த விசயம் அறியாததால் தான் இந்த மடையர்கள் இப்படி கதறுகிறார்கள்.

உதாரணமாக,


1. அரபு மொழியில் "மின்மன் ஸமிஃத ஹாஃதல் ஃகபர (minman sami'tha haadhal khabara)" என்றல், "இந்த செய்தியை யாரிடமிருந்து நீ செவிமடுத்தாய்!" என கேட்பதுண்டு.
இதற்கு பதிலாக அவர், "மின் அந்நாஸி (மினன்நாஸி)" என்று அதாவது "மனிதர்களிடமிருந்து" என பன்மையில் சொல்லுவதுண்டு... ம ஆனால் உண்மையில் அவர் செவிமடுத்ததோ ஒரு மனிதரிடமிருந்து தான்.

இதேபோல குர்ஆனில் உள்ள சில வசனங்களை பாருங்கள்,
2."அல்லஃதீன கால லஹும் #அந்நாஸு  இந்நன்னாஸ கத் ஜமஊலகும்......"

-#மனிதர்கள் அவர்களிடம் : நிச்சயமாக மக்கள் உங்களுக்கு விரோதமாக (போர்செய்ய) ஒன்றுசேர்ந்திருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு பயந்துகொள்ளுங்கள் என்று கூறினார்கள். அப்போது அது அவர்களுக்கு விசுவாசத்தை அதிகப்படுத்தியது....(3:173)

இங்கே மனிதர்கள் கூறினார்கள் என கூறப்படுள்ளது... ஆனால் உண்மையில் அங்கு ஒரு மனிதன் வந்து தான் இதை சொன்னார்.. அம்மனிதருக்கு பன்மையில் மனிதர்கள் என கூறப்பட்டுள்ளது.


அதேபோல,
3. "#ஹுமுல்லதீன #யகூலூன லா துன்ஃபிகூ அலா மன் இந்த ரஸூலில்லாஹி....."
#அவர்கள் "அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்கள் பிரிந்து செல்லும்வரை அவர்களுக்கு நீங்கள் செலவு செய்யவேண்டாம்." என்று கூறுகிறார்கள்....(63:7)
#யகூலூன லயிர் ரஜஃனா இலல் மதீனதி..
அவர்கள் #கூறுகிறார்கள : "நாங்கள் மதீனாவுக்கு திரும்பிவந்தால், மிக்க கண்ணியமிக்கவர் மிக இழிவானவரை அங்கிருந்து வெளியேற்றி விடுவார்".(63:8)

இங்கே அவர்கள் கூறினார்கள் என பன்மையில் சொல்லப்பட்டுள்ளது.
ஆனாலும் இதை சொன்னவன் " அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூல்" என்ற நயவஞ்சகன் தான்.

இந்த சம்பவம் திர்மிதி 3312வது ஹதீஸாக  பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவன் சொன்னதை கூட பன்மையில் அவர்கள் சொன்னார்கள் என இந்த வசனம் கூறுகிறது.
காரணம், அரபு மொழி நடைமுறையில் அப்படி சொல்வதுண்டு.

4. அதேபோல 30:33 இலும் ஒருமனிதனை பன்மையில் பாவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல,
5. "Kazzabath qawmu noohin #al-mursaleen"
நூஹுடைய சமூகம் தூதர்களை பொய்ப்பித்தார்கள்.(26:105)
இதேபோல 26:123, 141, 160, 172 ஆகிய வசனங்களிலும் தூதர்கள் (அல்முர்ஸலூன்) என்று உள்ளது.
ஆனால் அந்தந்த சமூதாயங்கள் உதாரணமாக,
நூஹ் நபியின் சமூகம் அவரை பொய்ப்பித்தது.
அதேபோல ஆது என்பவர்கள் ஹூது அவர்களை பொய்பித்தார்கள்.
சமூது என்பவர்கள் ஸாலிஹ் அவர்களை பொய்பித்தார்கள்.
லூத் நபியின் சமூகம், லூத் அவர்களை பொய்ப்பித்தார்கள்.

இந்த விசயங்களை குர்ஆன் பன்மையில் கூறுகிறது.

6. இன்னும் அரபு பேச்சுவழக்கில்,  
ரகிப அர்ரஜுலு அஸ்ஸுஃபுன- அம் மனிதன் கப்பல்களில் ஏறி பயணம் செய்தான்
இங்கே அவன் ஒரு கப்பலில் தான் புறப்பட்டு பயணம் செய்தான்.. ஆனால் அதையே  கப்பல்களில் பயணம் செய்ததாக கூறுவதுண்டு.

இதேபோன்று குர்ஆனில் இன்னும் நிறைய உள்ளன இதுபோன்ற நடை.
7. உதாரணமாக, அல்லாஹ் தன்னை "நாங்கள்" என கூறுவது (2:3 2:23 இன்னும்பல)

அது போன்று தான் ஜிப்ரீல் என்ற ஒருவானவர் வந்து பேசியதை, பன்மையில் வானவர்கள் என குர்ஆன் 3:42-47 இல் கூறப்பட்டுள்ளது.

அரபு மொழி வழக்குகளோ குர்ஆனிய மொழிவழக்குகளோ அறியாததால் தான் இப்படி லூசுத்தனமாக உலறுகிறார்கள்.

குர்ஆனின் ஒரு பகுதி மற்றைய பகுதியை உறுதிப்படுத்தும்விதமாகவே இறக்கப்பட்டுள்ளது.

அந்தபடி 3:42,45-47 இல் கூறப்பட்ட அல்மலாயிகது என்பது ஜிப்ரீல் (அலை) தான் என 19:17-21 கூறுகிறது.!!



எனவே இவர்களின் உலரல்கள் மடத்தனமான வாதங்கள் ஆகும்.. குர்ஆனின் அரபு நடை பற்றி தெரியாததால் இப்படி புலம்புகிறார்கள்!!!

வியாழன், 24 அக்டோபர், 2019

இயேசு கடவுள் அல்லவே அல்ல!!

இயேசு கடவுள் அல்லவே அல்ல!!

------------------------------------------------------------------------




உலகிலுள்ள கிறிஸ்தவர்களில் ஒருசில பிரவினரை தவிர மற்ற அனைவரும் இயேசு கிறிஸ்துவை கடவுள் என நம்புகிறார்கள்.   இயேசு கிறிஸ்து அவர்கள் கடவுளா? என்றால் நிச்சயமாக இல்லை என்பதையே நாம் பைபிளிலிருந்து புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.

கிறிஸ்தவர்கள் செய்வது என்னவென்றால், பைபிளை தமது தவறான நம்பிக்ககைக்கேற்ப திரித்து படிக்கிறார்களேயன்றி உண்மையை அறிந்துகொள்ள படிப்பதில்லை!!


*இயேசு கடவுளாக இருந்திருப்பாரானால், தன்னை கடவுள் என நேரடியாக "நானே கடவுள்! என்னை தான் நீங்கள் வணங்கி வழிபட வேண்டும்" என கூறியிருப்பார்.

ஆனால் அவர் அப்படி கூறவில்லை..... தன்னை கடவுள் என கூறாத நபரை  , "கடவுள் என்றும், அவரையே வணங்கவேண்டும்" என்று சொல்வதும் மிக அபத்தம்!!!



*இயேசு ஏன் தன்னை கடவுள் என கூறவில்லை??:



இக்கேள்வியை நாம் கிறிஸ்தவர்களிடம் கேட்டால், அவர்கள் சொல்வது :



"ஒரு மனிதன் தன்னை கடவுளென வாதிட்டால் ஏற்றூக்கொள்வீர்களா? தன்னை கடவுளென வாதிடுபவர்களையெல்லாம் கடவுளென ஏற்றுக்கொள்வீர்களா?" என்று கேட்கிறார்கள்.


நம் பதில் என்னவென்றால்,,,

ஒரு மனிதன் கடவுளென சொல்வதானால் அவன் பைத்தியமாக இருப்பான் அல்லது பொய்யனாக இருப்பான்.

ஆனால் இயேசுவோ பொய்யருமல்ல பைத்தியமும் அல்ல!

அதனால் அவர் சொல்வது உண்மையாக தானே இருக்கும்! அப்படிப்பட்டவர் சொன்னால் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்.


நாம் ஏன் அவர் வாதிட்டாரா என கேட்கிறோமெனில், 

அவர் தன்னை கடவுளென கூறவேயில்லை என்று நாம் அறிவோம்!! கிறிஸ்தவர்களும் அறிவார்கள்!!




ஒருவர் வெற்றியடைய (நித்தியஜீவனை அடைய) வேண்டுமானால், உண்மையான கடவுளை அறிய வேண்டும்!!! 

பொய்யான கடவுளை வணங்கினால் நிச்சயமாக அடையவே முடியாது!

ஆகவே ஒருவர் நித்தியஜீவனை அடைய உண்மை கடவுளை கட்டாயம் அறிய வேண்டும்!! இயேசு கடவுளெனின் அவர் கடவுளென அறயவேண்டுமா இல்லையா?

இப்படி அத்தியாவசியமான விசயத்தில் வாயை மூடிக்கொண்டு "தன்னை கடவுளென" நேரடியாக அறிவிக்காமல் இருந்தால்  ,   எப்படி நித்தியஜீவனை அடைவது??




எனவே நிச்சயம் அவர் கடவுள் இல்லை என்பதால் தான் , தன்னை கடவுள் என கூறவில்லை!!

  உண்மைக் கடவுளை அறியாதவன் பரலோகம் போகமுடியாது!!  போலியான கடவுளை வணங்குபவனும் போக முடியாது!

இப்படிப்பட்ட விசயத்தில் அவர் தன்னை கடவுளென வாதிடவில்லை எனின் அவர் கடவுள் அல்ல என்ற ஒரே காரணம் தான்!


எனவே அவர் அந்த மெய்க்கடவுள் அல்ல!!

தான் கடவுள் இல்லை என்ற காரணத்தால், தன்னை கடவுள் என கூறாத பணிவான மனிதரை கடவுளாக்கி வணங்குவது மிகப்பெரிய தப்பு ஆகும்!!


இதிலிருந்து விலகிக்கொள்ளவிட்டால் நித்திய அக்கினியில் கருக வேண்டிவரும்!!! தோல் கருகிப்போனதும் புதுத்தோல் தரப்பட்டு நித்தியமாக வேதனை அனுபவிக்க வேண்டிவரும்! 
எனவே எச்சரிக்கையாயிருங்கள்.





*அப்படியென்றால் அவர் தன்னை கடவுள் இல்லை என்றாரா??




ஒருவர் மனிதராக பூமியில் உள்ளபோது , "நான் கடவுளில்லை" என சொல்ல அவசியமே இல்லை!! காரணம் , பார்த்தவுடனே இவர் கடவுளல்ல! மனிதனே ஆவார் என புரிந்துகொள்ள முடியும்



ஆனாலும் இயேசு தன்னை கடவுள் இல்லை என்பதை தன் வாயாலேயே உணர்த்தினார்! நேரடியாகவே சொன்னார்.


உதாரணமாக,..


1. உண்மையான கடவுள் ஒருவரே! அவரே அந்த பிதா என்று இயேசு தன் வாயாலேயே கூறுகிறார்:



3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். 
யோவான் 17:3



ஒரே உண்மைக்கடவுளே உள்ளார். அவரே பிதா எனும்போது, இயேசு  உண்மைக்கடவுள் அல்ல என்று தெளிவாகிறது. இது இயேசு நேரடியாக சொன்ன வார்த்தை!


பவுலடிகளார் கூட , தேவர்கள் என அநேகர் இருந்தாலும், நமக்கு பிதா எனும் ஒரே கடவுளே உள்ளார் என்கிறார். (1 கொரிந்தியர் 8:5-6)


பிதா ஒரே ஒரு உண்மை கடவுளாக இருக்க, இயேசு உண்மைக்கடவுளாக முடியாது
--------


2. இயேசு பிதாவிடமே (உண்மைக்கடவுளிடமே)  ஜெபம் செய்தார், பிரார்த்தித்தார்.




39 சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். 
மத்தேயு 26:39



12 அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி: ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார். 
லூக்கா 6:12



இதன்மூலம் ஜெபம் செய்யப்படவேண்டியவர் பிதா ஒருவரே என வாழ்ந்து வழிகாட்டினார்.

-------

3. பிதாவிடமே ஜெபம் செய்ய வேண்டும் என ஜெபத்தை கற்பித்தார்:




1 அவர் ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீஷரில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம்பண்ணப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்குப் போதிக்கவேண்டும் என்றான். 
லூக்கா 11:1

2 அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக, உம்முடைய ராஜ்யம் வருவதாக, உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக, 
லூக்கா 11:2



இங்கே நாம் ஜெபிக்க வேண்டியது பிதாவாகிய உண்மை தேவனை நோக்கி தான் இருக்க வேண்டும் என இங்கே கற்பிக்கிறார். அவர் ஜெபித்து முடிந்த பின்பே , சீடர்களுக்கு கற்பித்தார்.

-----


4. உண்மையாக தொழுதுகொள்பவர்கள் பிதாவையே தொழுதுகொள்வார்கள்  என்றும் பிதாவையே ஆவியோடு தொழ வேண்டும் என்றும் கூறினார் கூறினார்:



23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது: தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். 
யோவான் 4:23

24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். 
யோவான் 4:24


இங்கே உண்மையான தொழுகையாளிகள் பிதாவை தான் தம் ஆவியோடு தொழுவார்கள் என்பதன்மூலம் பிதாவை தொழுதுகொள்வோரே உண்மையான தொழுகையாளிகள் என கூறுகிறார். அதன்மூலம் தான் தொழுகொள்ளப்பட கூடாது என்பதை எவ்வளவு தெளிவாக கூறுகிறார் என பாருங்கள்

------;



5. பிதாவின் சித்தப்படி செய்வோரே பரலோகத்தில் நுழைவார்கள் என்றும் இயேசுவை நோக்கி வெறுமனே "கர்த்தாவே! கர்த்தாவே!" என கூறுவோர் நுழையமாட்டார்கள் என்றார்:



21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. 
மத்தேயு 7:21

22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே!உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். 
மத்தேயு 7:22

23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். 
மத்தேயு 7:23



இங்கே பிதாவின் சித்தப்படி செய்யாமல் இயேசுவை கர்த்தாவே! கர்த்தாவே என அழைப்போரும், இயேசுவின் பெயரால் அற்புதம் செய்வோரும் அதில் நுழைவதில்லை என்கிறார்.



பிதாவின் சித்தம் என்ன??


1. பிதாவாகிய அவரை ஆவியுடன் உண்மையாக தொழ வேண்டும்.  (யோவான் 4:23)


2. பிதாவாகிய அவரை தவிர வேறு யாரையும் நமஸ்கரிக்கவோ தொழவோ கூடாது!


3 என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். 
யாத்திராகமம் 20:3

4 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; 
யாத்திராகமம் 20:4

5 நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். 
யாத்திராகமம் 20:5



இங்கே பிதா, வானத்திலுள்ளவர்களைப்போலவோ பூமியிலுள்ளவர்களை போலவோ யாரையுமே வணங்க வேண்டாம் என்கிறார்.

குறிப்பாக அவரை தவிர வேறு தேவர்கள் உண்டாயிருக்கவே கூடாது என்கிறார்.

இயேசு பிதா அல்ல என எல்லோருக்குமே தெரியும். அப்படியிருக்கும்போது அவரை தேவனாக ஆக்கி அவரிடம் ஜெபம் செய்வது மிகப்பெரிய தவறாகும்.

அப்படி செய்தால் , அவர் இயேசுவை ஆண்டவராக மெசியாவாக ஏற்றவராக இருந்தாலும் அவர் பரலோகம் போக மாட்டார் என்றே இயேசு சொல்கிறார்.



அப்படியிருக்க அவரை கடவுளாக தொழுதுகொண்டு நரகம் போகவேண்டுமா?????

------

6. இயேசு தன்னை தேவ குமாரன் என சொன்னதன் அர்த்தம்கூட, தன்னை தேவன் அனுப்பினார் என்பதாலும் அவருக்கு அடிபணிந்து இருக்கிறார் என்பதாலும் தான் என அவரே விளக்கமளிக்கறார்!


34 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? 
யோவான் 10:34

35 தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க, 
யோவான் 10:35

36 பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ்சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா? 
யோவான் 10:36



தேவ வசனத்தை பெற்றுக்கொண்டவர்கள் தேவர்கள் என அழைக்கப்பட்டிருக்கிறார்கள். உண்மையில் அவர்கள் தேவர்கள் அல்ல..

அதேபோன்றே நானும் என்னை தேவ குமாரன் என்கிறேன். காரணம் தேவன் என்னை பெற்றெடுத்தார் என்பதல்ல.. மாறாக அவர் என்னை அனுப்பினார், பரிசுத்தப்படுத்தினார் என்பதால் தான் என்று கூறி யூதர்களை வாயடைக்க வைத்தார்...

-----

7. ஒரு யூதர் இயேசுவை நல்ல போதகர் என்கிறார். அப்போது இயேசு, "என்னை ஏன் நல்லவன் என்கிறாய்? தேவன் ஒருவரை தவிர நல்லவர் இல்லையே" என கூறி தனக்கு தெய்வீகமெல்லாம் இல்லை என தெளிவாகவே கூறிவிட்டார்:



17 பின்பு அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். 
மாற்கு 10:17

18 அதற்கு இயேசு, நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே. 
மாற்கு 10:18

19 விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, வஞ்சனை செய்யாதிருப்பாயாக,உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை அறிந்திருக்கிறாயே என்றார். 
மாற்கு 10:19




இப்படியிருக்க அவரை வணங்கினால் நிச்சயம் நரகம் போகவேண்டும்!! (அதையே இயேசு மத்தேயு 7:21ல் சொன்னார் மேலே பார்க்கவும்).



எனவே நரகத்தில் வீழ்ந்துவிடாதிருக்க இயேசுவை கடவுளாக வணங்குவதை விட்டு விலகியிருங்கள்!!




இதை தான் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்,

*நிச்சயமாக அல்லாஹ் தான் என் இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான். எனவே அவனையே வணங்குங்கள். இதுவே நேரான வழி ஆகும் (என ஈசா கூறினார்.)"
(3:51)



"நிச்சயமாக அல்லாஹ் தான் மர்யமின் குமாரன் மஸீஹ் என கூறியோர் நிராகரித்துவிட்டனர்.  இன்னும் மஸீஹோ , " இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும் உங்கள் இறைவனுமான அல்லாஹ்வையே வணங்குங்கள்" என்றுகூறினார். " 
(5:72)


--------------

சனி, 17 ஆகஸ்ட், 2019

இயேசு கடவுள் அல்ல காரணங்கள் 1- 25

இயேசு ஒருநாளும் கடவுளாக முடியாது!!!

காரணம் என்ன தெரியுமா??
Part 1
--------------------------------------------




1.அவர் ஒருபோதும் தன்னை கடவுள் என கூறவில்லை. அதற்கு மாற்றமாக,  அவரை அனுப்பிய பிதாவையே கடவுளாக வாதிடஇருந்தார்கள்
பிதா ஒருவரே கடவுள் என கூறினார்.


"மெய்யான ஒரே தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பிய கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்"
(யோவான் 17:3)


*****

2.அவர் அநேக இடங்களில் தன்னை தேவகுமாரனாகவே அறிவிக்கப்பட்டிரிக்கிறார். தந்தையும் மகனும் ஒரே நேரத்தில் ஆதிமுதல் ஆரம்பமின்றி இருந்திருக்க முடியுமா?  

மகன் என்றாலே தகப்பனால் உண்டாக்கப்பட்டவன் என்றே அர்த்தம். அதாவது உண்டாக்கப்பட்டவர் கடவுளாக முடியாது.


" அப்பொழுது, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. 
(மத்தேயு  3:17)

இதைப்போன்றே இயேசுவுடன் நாமும் பிதாவிடம் அனந்தரம் கோருவோம் என பவுலடியார் சொல்கிறார்.

****


3.பரிசுத்த ஆவியின் பலத்தை இயேசுமேல் பொழிந்தவரே கடவுள் என்கிறது பைபிள்.  பலத்தை கொடுத்தவரும் கொடுக்கப்பட்டவரும் சமமாவார்களா??


" 38 கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்தால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார். 
(திருத்தூதர் பணிகள் 10:38)

*****


4. இயேசு அப்போஸ்தலராகவும் தலைமை குருவாகவும் உள்ளார். கடவுளும் கடவுளின் அப்போஸ்லனும் ஒன்றாக முடியுமா?  தலைமை ஆசாரியன் எனும் குரு தேவனுடைய வீட்டில் ஊழியகாரன். ஊழியகாரனும் எஜமானும் ஒன்றாவதெப்படி?


" 1 எனவே, தூய சகோதர சகோதரிகளே, விண்ணக அழைப்பில் பங்கு கொண்டவர்களே, நாம் அறிக்கையிடும் திருத்தூதரும் தலைமைக் குருவுமான இயேசுவைப்பற்றி எண்ணிப்பாருங்கள். 
(எபிரேயர் 3:1)

*****

5. ஒரே கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலுள்ள மனிதனான மத்தியஸ்தரே இயேசு ஆவார்.

அந்த ஒரே கடவுள் இவரல்ல என்றாகிவிடுகிறதோடு அவர் மனிதர் என தெளிவாகிறது

" 5 ஏனெனில் கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர். 
(1 திமொத்தேயு 2:5)
****


6.இயேசு தேவனால் அனுப்பபட்ட மீட்பர் ஆவார். அனுப்பபட்டவர் அனுப்பியவரோடு சமமாவதெப்படி??


" 14 தந்தை தம் மகனை உலகிற்கு மீட்பராக அனுப்பினார் என்பதை நாங்களே கண்டறிந்தோம்; சான்றும் பகர்கிறோம். (1 யோவான் 4:14)

குறிப்பு: பழைய ஏற்பாட்டிலும் இரட்சகர் எனப்படும் மீட்பர்கள் இருந்தார்கள்


****

7.இயேசுவும் கடவுளால் நியமிக்கப்பட்ட அப்போஸ்தலரே! அவர் தேவனுக்கு நம்பிக்கைகுரியவராக இருந்தார். அவரும் மோசேயின் வரிசையில் வந்தவரே!



" 2 கடவுளின் குடும்பத்தினர் அனைவரிடையேயும் மோசே நம்பிக்கைக்குரியவராய் இருந்தார். அவ்வாறே இவரும் தம்மை நியமித்த கடவுளுக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்தார். 
(எபிரேயர் 3:2)
****

8.இயேசு தேவனிடம் பரிந்து பேசுபவராகவே உள்ளார். கடவுளிடம் பரிந்து பேசுபவரும் , கடவுளும் சமமாக முடயுமா??


33 கடவுள் தேர்ந்து கொண்டவர்களுக்கு எதிராய் யார் குற்றம் சாட்ட இயலும்? அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே. 
(உரோமையர் 8:33)

34 அவர்களுக்கு யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? இறந்து, ஏன், உயிருடன் எழுப்பப்பட்டு கடவுளின் வலப் பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ! 
(உரோமையர் 8:34)

இது இயேசு உயிர்த்தெழுந்ததாக கருதப்படும் கதைக்கு பிறகுள்ள நிகழ்வு ஆகும். அப்போதும் இவரால் பரிந்துபேசவே முடிகிறதெனின் , இவர் எப்படி கடவுளாவார்?


****

9. பெண்ணுக்கு தலைமை ஆண். ஆணுக்கு தலைமை இயேசு. இயேசுவுக்கு தலைமை கடவுள் என்கிறது பைபிள்.

இதன்படி தெளிவாக அவர் கடவுளல்ல என பவுலடியார் கூறுகிறார்


" 3 ஆனால் நீங்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என் விரும்புகிறேன்; ஒவ்வொரு பெண்ணுக்கும் தலைவர் ஆண்; ஆணுக்குத் தலைவர் கிறிஸ்து; கிறிஸ்துவுக்கோ தலைவர் கடவுள். 
(1 கொரிந்தியர் 11:3)

****

10. பவுல் போன்றவர்கள் கொரிந்தியருக்குரியவர்களாம். கொரிந்தியர்கள் இயேசுவுக்குரியவர்களாம். இயேசு கடவுளுக்குரியவராம்!


கடவுளுக்குரியவர் (கடவுளுக்கு சொந்தமானவர்) எப்படி கடவுளாக முடியும்?


21 எனவே மனிதரைக் குறித்து யாரும் பெருமை பாராட்டலாகாது. பவுல், அப்பொல்லோ, கேபா, ஆகிய அனைவரும் உங்களுக்குரியவர்களே. 

22 அவ்வாறே உலகம், வாழ்வு, சாவு, நிகழ்காலம், எதிர்காலம் இவை அனைத்தும் உங்களுக்குரியவைகளே. 

23 ஆனால் நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்குரியவர். 
(1 கொரிந்தியர் 3:21-23)

****

11.ஒரே கடவுளாகிய பிதா அனைவரிலும் பெரியவர், என்னைவிடவும் பெரியவர் என்று சொல்கிறார் இயேசு.


29 அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது. 

(யோவான்  10:29)


28 "நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன்" என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வது பற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் தந்தை என்னைவிடப் பெரியவர். 
(யோவான்  14:28)


இதுவே அவர் கடவுளுக்கு சமமானவரல்ல என்பதை காட்டுகிறது!

****

12. தனக்கு தேவத்துவமே இல்லை என்பதை அவர் மறுத்துவிட்டார். 

 ஒருதடவை "நல்ல போதகரே!" என ஒருவர் அழைத்தார். என்னை ஏன் நல்லவன் என்கிறாய்? கடவுள் ஒருவரை தவிர நல்லவர் இல்லை என கூறுவதால் தான் கடவுளே அல்ல என மறுத்துவிட்டார்



16. அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்;
17. அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.
(மத்தேயு 19:16-17)


****

13. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என இயேசு சொன்னதை (யோ 10:30) தவறாக சீடர்கள் புரிந்துகொள்ள கூடாது என்பதற்காக  பிதாவிடம் பிரார்த்தனை செய்து இந்த "ஒன்றாயிருக்கிறோம்" என்பது முரண்பாடில்லாமல் ஒற்றுமையாக இருப்பதையே குறிக்கும் என்பதை தெளிவாக காட்டி, அதேபோல சீடர்கள் 12பேரும் பிதாவும் இயேசுவும் ஒன்றாக இருக்க வேண்டும் என வேண்டிகொண்டார்!

இது முரண்படு பிரிந்துவிடாதிருக்கும் ஒற்றுமையையே குறிக்கிறது என்பதை தெளிவாக்கினார். தான் கடவுளெனின் அதை தெளிவாக வெளிப்படுத்தியிருப்பார் அல்லவா?




21. அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.

22. நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.

23. ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
(யோவான் 17:21-23)

****

14. பிதாவாகியவர் எப்படி சீடர்களுக்கு தேவனோ அதேபோன்று தனக்கும் தேவன் தனக்கும் கடவுள் என கூறி தனக்கு கடவுள் தன்மை இல்லை என மறுத்துவிட்டார்!

இல்லாவிட்டால், அப்படி கூறியிருக்க மாட்டார்!!



17. இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
(யோவான் 20:17)

****

15.பவுல் கூட இயேசுவை தேவனிலிருந்து பிரித்து, தேவன் என்பவர் எப்படிபட்டவர் என சொல்கிறார்! அவரே பிதா!!



16. ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.


இயேசுவை மக்கள் கண்டனர். பைபிளின் கூற்றுப்படி மரித்தார். அவர் தேவனல்ல

****

16. கடவுள்கள் என்று நிறைய பேர் இருப்பார்கள் ஆனால் நமக்கு ஒரே தேவனே உள்ளார். அவர்தான் பிதா என்கிறார் அதே பவுலடியார்.

அதேபோல கர்த்தராக (ஆண்டவராக) இயேசு உள்ளார் என்கிறார்.

கர்த்தர் என்பது கடவுளுக்கு மட்டும் உரிய ஒன்று அல்ல..   இதன் அர்த்தம் ஆண்டவர் என்பதாகும்!


 5. வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும்,
6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்
(1 கொரிந்தியர் 8:5-6)



இங்கே இயேசுமூலம் சகலதும் உண்டானது என பவுல் தப்பாக புரிந்துகொள்ள காரணம், ,

தேவன் அனைத்தையும் தன் வார்த்தையாகிய "ஆக கடவது" என்று சொல்வதன்மூலம் படைத்தார். (ஆதி 1)

இயேசுவானவர் வார்த்தை மாம்சமானதால் உண்டானவர் என்பது கிறிஸ்தவ நம்பிக்கை.

வார்த்தை மாம்சமாக முன்பு இயேசு என்ற மனிதர் இருக்கவே இல்லை!!  

அப்படியிருக்க அவர்மூலமாக சகலதும் உண்டானது என கூறுவது அபத்தமாகும். ஏனெனில் அவர் இருக்கவில்லை!! அவர் கி.மு. 4 இல் மரியாளின் கர்ப்பத்தில் படைக்கப்பட்டவர் ஆவார்!!

*****


17. இயேசுவுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதே!  கொடுக்கப்பட்டுள்ளது என்றாலே அவராகவே  அதற்கு உரிமையானவர் அல்ல என்று தெளிவாகிறது.


18. அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
(மத்தேயு 28:18) 


இயேசுவுக்கு சகல அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது ஒட்டுமொத்த அதிகாரங்களும் அல்ல.. அவருக்கு தேவையான அவசியமான அதுகாரங்கள் மட்டுமே!!

இதை பைபிளே சொல்கிறது

அவர் இன்றுவரை பிதாவிடம் பரிந்து பேசுபவராகவே உள்ளார். இதன்படி அவருக்கு சகல அதிகாரமும் இல்லைனு தெளிவாகிறது.
(1 யோவான் 2:1-2 , ரோமர் 8:34)


****
18. அவர் பிதாவையே தொழுதுகொண்டார் ஜெபித்தார்.  பிதாவிடம் உதவி தேடினார்!


"அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி , இராமுழுதும் தேவனை நோக்கி: ஜெபம் பண்ணிகொண்டிருந்தார்."
(லூக்கா 6:12)


"ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு ஏலி!ஏலி! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டு கூப்பிட்டார், அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னை கைவிட்டீர் என்று அர்த்தமாம."
(மத்தேயு 27:46)


"சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்த பாத்திரம் என்னைவிட்டு நீங்க்ககூடுமானால் நீங்கும்படி செய்யும், ஆகிலும் என் சித்தப்படியல்ல, உம்முடைய சித்ததின்படியே ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார்."
(மத்தேயு 26:39)


****

19. பிதாவிடமே ஜெபம் பண்ணும்படியாகவே ஜெபத்தை கற்றுகொடுத்தார்! பிதாவிடம் கேட்டுகொள்ளுங்கள் என்றே சொன்னார்.



யோவான் ஸ்நானன் ஜெபம் பண்ண கற்றுகொடுத்ததது போல எமக்கும் கற்று தாருங்கள் என சீடர்கள் கேட்டபோது,


"அதற்கு அவர்: நீங்கள் ஜெபம் பண்ணும்போது:  பரமண்டலத்திலிருக்கிற எங்கள் பிதாவே! உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக, உம்முடைய ராஜ்யம் வருவதாக, உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக, 
(லூக்கா 11:2)

என கற்பித்தார்.


****

20. என் நாமத்தில் பிதாவிடம் கேளுங்கள் என்றே அவர் கற்பித்தார். பிதா தான் தருவார் என்றே போதித்தார். இயேசு போனபின்பு இயேசுவிடம் எதையும் கேட்கமாட்டீர்கள் என சீடர்களக்கு சொன்னார்.




23 அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றுங் கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார். 
யோவான் 16:23


*****

21. சத்திய ஆவியை அனுப்புவதற்கு கூட பிதாவிடம் வேண்டிக்கொள்வேன் என்று தான் சொன்னார். 

16 நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். 
யோவான் 14:16

****

22. உண்மையாக தொழுதுகொள்பவர்கள் பிதாவை தான் தொழுவார்கள் என்று சமாரிய பெண்ணிடம் சொன்னார். உண்மையோடும் ஆவியோடும் பிதாவை தான் தொழ வேண்டும்


23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது: தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். 
யோவான் 4:23


***

23. தேவனாகிய கர்த்தர் ஒருவரை சாஷ்டாங்கமாய் பணிந்து ஆராதனை செய்ய வேண்டும் என்பதே இயேசு சொல்வது!!


9 நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான். 
மத்தேயு 4:9

10 அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். 
மத்தேயு 4:10



இதை சொன்னால், இயேசு குழந்தையாக இருந்தபோது சிலர் அவருக்கு பணிந்துகொண்டார்கள், ரோம சிப்பாய்கள் கேலியாக தொழுதுகொண்டார்கள் என்ற வசனங்களை கிறிஸ்தவர்கள் காட்டுகிறார்கள்.


முதலில் இயேசுவை பணிந்துதொழுதுகொண்டார்கள் என்பது proskeneo  என்ற கிரேக்க வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தலையை நிலத்தில்வைத்து பணிந்துகொள்வதை தான் குறிக்கிறது.

இதே போல யூதர்கள் தம் ராஜாக்களை புனிதர்களை பணிந்துகொள்வார்கள்.

உதாரணமாக,

20 அதின்பின்பு தாவீது சபை அனைத்தையும் நோக்கி: இப்போது உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்றான், அப்பொழுது சபையார் எல்லாரும் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்து, தலை குனிந்து கர்த்தரையும் ராஜாவையும் பணிந்துகொண்டு, 
1 நாளாகமம் 29:20



அதேபோன்று யாக்கோபு ஏசாவை 7 முறை  வணங்கினான். மனைவி பிள்ளைகளும் வணங்கினர்

3 தான் அவர்களுக்கு முன்னாக நடந்துபோய், ஏழுவிசை தரைமட்டும் குனிந்து வணங்கி, தன் சகோதரன் கிட்டச் சேர்ந்தான். 
ஆதியாகமம் 33:3

6 அப்பொழுது பணிவிடைக்காரிகளும் அவர்கள் பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள். 
ஆதியாகமம் 33:6

7 லேயாளும் அவள் பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள். பின்பு யோசேப்பும் ராகேலும் சேர்ந்துவந்து வணங்கினார்கள். 
ஆதியாகமம் 33:7



இது அவர்களிடையே சாதாரணமாக இருந்த வணக்கமாகும். இதை மரியாதைக்காக கண்ணியத்திற்காக பணிந்துதொழுநுகொள்வர்.


ஆனால், இறைவனாக பணிந்துகொள்வதே தடுக்கப்பட்டதாகும்!


உதாரணமாக ஒருவன் சிலைக்கு முன்னால் நின்று அதை வணங்கினால், அது மரியாதைக்கான வணக்கமல்ல.. கடவுளாக வணங்குவதாகும்


அதேபோல வேறு மிருகங்களை வணங்கினாலும் இதே போன்று தான் இறைநிராகரிப்பாக இருக்கும்.


அதேபோன்று சூரிய சந்திர நட்சத்திரங்களை வணங்குவதும் இதுபோன்ற கண்ணியத்திற்குரிய வணக்கமன்று. அவை கடவுளாக கருதி வணங்குவதாகும்!


ஆனால், ஒரு உயிரோடுள்ள மனிதனை வணங்குவதென்பது மரியாதைக்கு செய்வதாக தான் இருக்கும்.

அது போன்றே இயேசுவுக்கு செய்யப்பட்டது. 

சாத்தான் தன்னை கடவுளாக வணங்கும்படியே கேட்டுகொண்டான். ஏனெனில் அவன் தன்னை உயர்த்தி தேவனாக்கிகொள்ள நினைத்ததை ஏசாயா புத்தகம் 14, எசேக்கியேல் 28 போன்றவற்றில் கூறப்பட்டுள்ளது.


இத்தகைய இறைவனுக்குரிய வணக்கத்தை இறைவனுக்கு மட்டுமே செலுத்தவேண்டும்!!! அதையே இயேசு  உன் தேவனாகிய கர்த்தரை மட்டும் சாஷ்டாங்கமாக  பணிந்து கொள்ளவேண்டும் என எழுதியிருக்கிறதே என கூறினார்.

இங்கும் தனக்கு அத்தகைய வணக்கம் தகாது என மறுத்துவிட்டார்


****

24. சீடர்கள் கூட, பவுல்கூட இயேசுவை தொழுதுகொள்ளாமல் ஜெபம் பண்ணாமல் பிதாவிடமே வேண்டினர்! இயேசுவை ஸ்தோத்திரிக்காமல் பிதாவையே ஸ்தோத்திரம் செய்தனர்!


"நம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து  மூலமாய. தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்... ".
(ரோமர் 7:25)


" நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு,"
எபேசியர் 3:15

****

25.  குமாரனும் தேவதூதர்களும் ஞானத்தில் பூரணமில்லாதவர்கள்.

பிதா ஒருவரே சகல ஞானமும் உள்ளவர்!

"அந்த நாளையும் நாழிகையையும் பிதா ஒருவரை தவிர மற்றொரிவனும் அறியான். பரலோகத்திலுள்ள தேவதூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்!



தொடரும்

சனி, 27 ஜூலை, 2019

பலதாரமணம் இயல்பான ஒன்றே!!

பலதாரமணம் இயல்பானதே!!!
--------------------------------------------

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இக்காலத்தில்  இயற்கையான முறைக்கு மாற்றமாகவே பலர் வாழ்ந்துகொண்டுள்ளார்கள்.

மனிதனைவிட மாட்டை நேசிக்கிறார்கள்.. குழந்தையைவிட நாயை கொஞ்சுகிறார்கள்..

விபச்சாரத்தை, ஓரினச்சேர்க்கையை சொந்த உரிமையாக கருதுகிறார்கள்.

இப்படிப்பட்ட காலத்தில் தான் பலதாரமணம் பற்றியும் விமர்சிக்கிறார்கள்.

இது பற்றி சற்று நோக்குவோம்!!

1. உலகில் ஆணும் பெண்ணும் சமவிகிதத்தில் பிறக்கின்றனர். ஆனாலும் பெண்குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புசக்தி ஆண்குழந்தைகளைவிட அதிகமாக இருப்பதால், சிறுவயதுகளில் ஆண்குழந்தைகளே அதிகமாக மரணிக்கிறார்கள். 
இதனால் ஆண் இனத்தின் எண்ணிக்கை பெண்ணினத்தின் எண்ணிக்கையிலும் குறையும் விகிதம் அதிகரித்து செல்கிறது.

இந்நிலையில் ஒவ்வொரு ஆணும் ஒரே திருமணமே முடிக்கவேண்டும் என்பது மட்டுமே இயற்கையானதாக இருந்திருப்பின்,, ஆண் மற்றும் பெண்ணின் எண்ணிக்கை சமவிகிதத்தில் இருந்திருக்கும்.. ஆனால் அப்படி இல்லை!!

இஸ்லாம் அனைவரும் ஆற்றலிருந்தால் திருமணம் முடிக்க வேண்டும் என கட்டளையிடுகிறது.

ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணை மட்டுமே மணந்தால், பல பெண்களுக்கு இவ்வாழ்க்கை கிடைக்காது!!

எனவே ஒரு ஆண் பலதாரம் செய்தால் மட்டுமே இது சாத்தியமாகிறது!! 

இது இயல்பானது என்பதற்கு இது ஆதாரமாக அமைகிறது
-------------------

2. பொதுவாக ஆண்கள் முதலாவதாக திருமணம் செய்யும்போது விதவைகளைவிட கன்னிகளுக்கே முன்னுரிமை வழங்குவார்கள் ஒரு சிலரை தவிர!!

இப்படியே சென்றால் இளம் விதவைகள் திருமணம் செய்துவாழ தேவை ஏற்பட்டால்,,  இது சாத்தியமற்றதாகவே ஆகிவிடுகிறது.

இவர்கள் அப்போது எதை செய்வார்கள்??

மனக்கவலையிலேயே காலத்தை கழிப்பதா?

இப்படியானவர்களுக்கு வாழ்வு கிடைப்பதற்கு, பலதார திருமணமே அவசியமாகிறது!!

-------------------

3. விபச்சாரிகளிடம் செல்வோரில் அதிகமானோர் யாரென பார்த்தோமானால், ஏற்கனவே திருமணமான மனைவியுள்ள கணவர்களாகவே இருப்பார்கள். இது யதார்த்தமான உண்மை!!

இவ்விபச்சாரம் ஒழிய வேண்டுமானால், சட்டரீதியாக ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை ஆணுக்கு அனுமதிப்பதால் மட்டுமே சாத்தியமாகிறது..

ஏனெனில், இந்த விபச்சாரத்தொழிலில் ஈடுபடுவோரை முறையாக கட்டுப்பட்டுத்தி தன் கீழ் வைத்துக்கொள்ள ஒரு ஆண் இல்லை என்பதால் தான் அவர்கள் பணதேவைக்காகவோ வேறு தேவைகளுக்காகவோ ஆசைகளுக்காகவோ இப்பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள்.

இவர்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால், இதில் இறங்கியிருக்க மாட்டார்கள்..

அதே நேரம் திருமணமான ஆண்கள் அவர்கள் பக்கமாக போகவேண்டி ஏற்பட்டிருக்காது!!

இதற்கு ஒரே சாத்தியமான முடிவு பலதாரமணம் மட்டுமே!!

--------------------

4. பலதாரமணம் ஏன் ஆணுக்கு மட்டும்?? பெண் செய்யகூடாதா??❓

சிலர் நம்மிடம் கேட்பதுண்டு, உன் மனைவி இன்னொரு ஆணுடன் வாழ்ந்தால் நீ பொருந்திகொள்வாயா?  அதே போன்று தானே அவளுக்கும் இருக்கும் என கேட்கிறார்கள்!!

இது அடிப்படையிலேயே மூடத்தனமான கேள்வி ஆகும்.

ஏனெனில் ஆணுடைய மனநிலையும், உடலமைப்பும் பெண்ணுடைய மனநிலையிலிருந்தும் உடலமைப்பிலிருந்தும் முற்றாக வேறுபட்டதாகும்!!

உதாரணமாக , ஒரு ஆண் கர்ப்பம்சுமந்து சிசேரியன் எதுவுமின்றி இயல்பாக பிள்ளை பெறுகிறான் என வைத்துக்கொள்ளுங்கள்!

இப்போது ஒரு ஆண் அந்த வேதனையை உணரும்போது, திரும்பவும் இதேபோல நடக்க ஒருபோதும் சம்மதிக்கமாட்டான்.

அதுமட்டுமன்றி,  இன்னொரு ஆண் வேதனை அடைவதை பார்த்தாலே, அதிலிருந்து முற்றாக விலகிவிடுவான்.

ஆனால், பெண்ணை பொருத்தவரையில், அவள் சாகிற அளவு வேதனையை அனுபவித்து பிள்ளை பெற்றெடுக்கிறாள்.. பிள்ளையை பெற்றெடுத்தவுடன் அவளது வேதனையையே மறந்து இன்னொரு பிள்ளைக்காக தயாராகிவிடுகிறாள்!!
இது பெண்ணினது மனநிலை

* நம்மிடம் இப்படி கேள்விகேட்கும் இத்தகையவர்களிடம் நாம் கேட்பது என்னவென்றால்,,,,

நீ உன் மனைவியுடைய இடத்திலிருந்து அவள் உன்னை கர்ப்பமாக்கி ஒன்றுக்கு மேல்பட்ட பிள்ளைகளை பெற்றெடுக்க வைத்தால், நீ ஒப்புக்கொள்வாயா??
குறைந்தது முதல் குழந்தைக்காகவாவது இயல்பான முறையில் பிள்ளைபெற்றெடுக்க ஒத்துகொள்வாயா??

அப்படியிருக்கும்போது பெண்ணை மட்டும் பிள்ளைப்பெற்றெடுக்க சொன்னால் எப்படி நீதமாகும்???

என கேட்டால்,, என்ன சொல்வார்கள்??

ஒன்றேயொன்றைத்தான் சொல்ல முடியும்!!

இயல்புநிலை அவ்வாறு இல்லை என்பது தான்..

ஒரே பெற்றோருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளை இருக்கலாம். 

 இதற்காக பெற்றோரிடம் உங்களுக்கு மட்டும் ஏன் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள்? 

நமக்கு உங்களுடன் சேர்த்து ஒன்றுக்கு மேற்பட்ட பெற்றோர்கள்  இருந்தால் ஒத்துக்குவீங்களா? னு கேட்போமா???

இல்லை தானே!

நமக்கு இருப்பது போல அதே சதையும் ரத்தமும் பெற்றோருக்கு இருந்தாலும் நாம் இவ்வாறு கேட்கமாட்டோம்!

அதேபோல ஒரு நாட்டுக்கு ஒரு ஜனாதிபதி இருப்பார். ஒரு பிரதமர் இருப்பார்.

அவர்களுக்கு கீழ் பல கோடிக்கணக்கான மக்கள் இருப்பார்கள்!

இதேபோல உங்களுடன் பல ஜனாதிபதிகள் இருந்தால் ஒத்துக்குவீங்களா? உங்களுக்கு கீழ் மட்டும் ஏன் இத்தனை மக்களை வைத்துள்ளீர்கள்? அதேபோல மக்கள் ஒவ்வொருவரும் தமக்குதமக்கு விருப்பமான வெவ்வேறு ஜனாதிபதிகளை வைத்திருந்தால் நீங்கள் ஒப்புகொள்வீர்களா என ஜனாதிபதியிடம் கேட்போமா??

 இல்லை தானே!

இவற்றிற்கெல்லாம் காரணம்,  நிர்வாகம் செய்யும் தலைமை ஒன்று தான் இருக்கவேண்டும் என்பது தான் காரணம். 

அதேபோன்று தான் ஆண்களே பெண்களை நிர்வகிக்ககூடியவர்களாக இறைவன் ஆக்கியுள்ளான்.

ஒரு நிர்வகிக்கும் தலைவனுக்கு கீழ் பலர் இருக்கலாம்.. ஆனால் ஒரேநபருக்கு பல நிர்வகிக்கும் தலைமைகள் இருக்க முடியாது!!

இதற்கேற்ப தான் பொதுவாக ஆண்கள் பெண்களைவிட மிகவும்  ரோசமுள்ளவர்களாக இருக்கிறார்கள்..  
இதனால் ஒருபோதும் சாத்தியமில்லை!
ஒரு குழந்தைக்கு பல பெற்றோர் (பெற்றெடுத்தோர்) இருக்கமுடியாதோ,  அதே போன்று தான் இதுவும்!!


இதற்கு மேலதிகமாக

*ஒரு பெண்ணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்கள் இருந்தால், அவர்கள் ஒழுக்கமானவர்களாக இருந்தாலும் ,, பாலியல் நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்!!
ஆனால், ஒரு ஆண் பலமனைவிகளை வைத்திருக்கும்போது அப்படி ஏற்படுவதில்லை!!


*ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களை வைத்திருந்தால், அவளது குழந்தைக்கு தகப்பன் யார் என்பதை கண்டுபிடிக்கவே பல செலவுகளை செய்யவேண்டி வரும்!!

ஆனால் ஒரு ஆண் பல மனைவிகளை கொண்டிருந்தால்,, குழந்தைக்கு தகப்பன் யார் தாய் யார் என தெளிவாக தெரியும்!!

*பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும்போது அவள் மனதளவில் மாற்றங்கள் ,பாதிப்புகள் ஏற்படுகின்றன.. இந்த நிலையில் பல கணவர்களை சமாளிப்பது  sorry.com

ஆனால் ஆண்களுக்கு இது சாத்தியம்!!


*மனரீதியாக, தன் கணவனால் சில கெடுதிகள் தனக்கு ஏற்படும்போது, பெண் இலகுவில் தன் கணவனின் உபகாரத்தை மறந்துவிடுவாள்!
இப்போது பல கணவர்கள் இருந்தால், ஒருவரை உயர்த்தி இன்னொருவரை தாழ்த்தும்போது,, அவளது வாழ்க்கைக்கு sorry.com

எனவே இப்படி கேள்விகேட்பது மிக தவறானது
--------------------

5. ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்தால் முதல் மனைவி பாதிக்கபடுகிறாளா??

அதே போன்று தான், ஒரு பெற்றோர் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளை பெற்றெடுக்கும்போது மூத்த பிள்ளையும் பாதிக்கப்படத்தான் போகிறது.
இதனால் ஒவ்வொருவரும் ஒரே பிள்ளையை தான் பெற்றெடுக்க வேண்டும் என்பார்களா?

(அதாவது பெற்றோரின் அன்பு,கவனம்,சொத்து கிடைக்கும் அளவு மூத்த பிள்ளைக்கு வேறு உடன்பிறப்பு வரும்போது குறைகிறது)

அதேபோல தான் கணவனின் நேரம், அன்பு, சொத்து என்பவற்றில் முதல்மனைவிக்கு கிடைக்கும் பங்கில் குறைவு ஏறபட்டாலும்,  இன்னொரு பெண் தப்பான வழிக்கு செல்லாமலிருக்க இது உதவுகிறது என்பதை அவள் சிந்திக்கும்போது அவள் உண்மையில் பாதிக்கப்படவில்லை என்பதை உணர்ந்துகொள்வாள்.

அதுமட்டுமின்றி விபச்சாரிகள் உருவாவதை தடுக்கவும், முறையற்ற பாலியல் உறவுகளை தடுக்கவும் இப்பலதாரமணமே உதவ முடியும்..  அப்படி செய்வதால் இவளது கணவனின் கற்பும் பாதுகாக்கப்படுகிறது.

இதை கருதும்போது அவளுக்கு எந்த இழப்பும் இதில் இல்லை!!
------------------

ஞாயிறு, 9 ஜூன், 2019

Sister of Harun, ஹாரூனின் சகோதரி (in Tamil & English)

ஹாரூனின் சகோதரி மரியம்
Maryam (Mary) ,the sister of Harun (Aaron)
--------------------------------------------


கிறிஸ்தவர்களின் வாதம்:

அன்னை மர்யம் அவர்களை குர்ஆன் ஹாரூனின் சகோதரி என அழைக்கிறது ஆனால் ஹாரூனோ மூசாவின் சகோதரன் அவருக்கும் ஈசாவுக்கும் இடையில் 1400 வருட இடைவெளி உள்ளது. எனவே நபி(ஸல்) அவர்கள் பைபிளை தப்பாக படித்து குர்ஆனை எழுதினார்கள்

ஏனெனில் மர்யமின் தந்தை இம்ரான் என குர்ஆன் சொல்கிறது (3:35-36)

மூசா,ஹாரீனின் தந்தையின் பெயர் இம்ரான் (அம்ராம்) என பைபிள் சொல்கிறது.(யாத்திராகமம் 6:20)

 ஹாரூனுக்கு மர்யம் (மிர்யம்) என சகோதரி இருந்தாள் என பைபிள் சொல்கிறது (யாத்திராகமம் 15:20)


எனவே முஹம்மது நபி அம்ராமின் மகளான மிர்யாமை தவறுதலாக ஈசாவின் தாயென சொல்லிவிட்டார்.

இது தான் இவர்களது வாதம்!


Claim of Christians:

The Quran calls  Maryam (Mary) as the sister of Harun (Aaron), but Harun was the brother of Moses . between him and Jesus , there is the gap of 1400 years.  So prophet Muhammad misunderstood the Bible and wrote the Quran.

Because, the Qur'an says, Father of Maryam was Imran (quran 3:35-36),

Bible says, Father's name of Moses & Harun  is Amram (or Imran) (Exodus 6:20)

Harun Had a sister whose name was Miryam (or Maryam). (Exodus 15:20)

So , prophet Muhammad called the daughter of Amram as mother of Jesus incorrectly.

This is their claim!


#✅.விளக்கம்:

குர்ஆனோ நபி(ஸல்) அவர்களோ தப்பாக எதுவும் சொல்லவில்லை ஏனெனில், 

ஹாரூன் என்பவர் மூசாவின் சகோதரன் என்றே குர்ஆன் சொல்கிறது. (19:51,53 ; 20:29-30 இன்னும் பல இடங்களில் சொல்கிறது)

மூசா இஸ்ரேலியரை எகிப்திலிருந்து பிர்அவ்னிடமிருந்து  காப்பாற்றி அழைத்து சென்றவர். (20:77-80)

இந்த ஹாரூனின் சகோதரி தான் ஈசாவின் தாய் என்று நபிகளார் கருதியிருந்தால், மூசாவின் காலத்தில் ஈசா இருந்திருக்க வேண்டும் என நினைதிருப்பார் அல்லவா?

அப்படி முஹம்மது நபி நினைத்தார்களா?

நிச்சயமாக இல்லை!!! மாறாக ஈசாவை இஸ்ரவேலருக்கு அனுப்பப்பட்ட கடைசி இஸ்ரேலிய நபி என்றும், தனக்கும் அவருக்கும் இடையில் எந்த நபியும் இல்லை என்றே கூறுகிறார்கள்.
(புகாரி 3442)


அதாவது, யூதர்களில் இறுதியான நபியாக அவரை கூறுகிறார். ஆனால் ஹாரூன் மற்றும் மூசாவின் பின்பே யூத மதம் தோன்றியது.

மூசாவிற்கு பின் யூத அரசர்கள் இருந்ததாக குர்ஆன் சொல்கிறது. தாலூத், தாவூத் , சுலைமான் என அவர்களின் சம்பவங்களை கூறுகிறது.(2:246-251, 21:76-82)

 இதற்கேல்லாம் பின்பு கடைசியாக வந்தவரே ஈசா நபியாவார்.

எனவே முஹம்மது நபி ஈசாவின் மாமனார் தான் மூசா என நம்பவில்லை கூறவுமில்லை என்பது மிக தெளிவு!!


❤. குர்ஆன்  மர்யமுக்கு ஹாரூன் என சகோதரன் இருந்ததாக சொல்கிறதா?❓


இல்லை!!!

யூதர்கள் கூறியதையே குர்ஆன் மேற்கோள் காட்டுகிறது:

"பின்னர் , அவர் அவரை (ஈசாவை) சுமந்துகொண்டு தன் சமூகத்திடம் வந்தார்.  அவர்கள், ' மர்யமே! நிச்சயமாக நீர் மறுக்கப்பட்ட காரியத்தை கொண்டுவந்துவிட்டீர்;  ஹாரூனுடைய சகோதரியே! உன் தந்தை கொண்ட கொண்ட மனிதராக இருக்கவில்லை! உன் தாயும் நடத்தை கெட்டவராக இருக்கவில்லை' என்று கூறினார்கள். "
(19:27-28)


யூதர்கள் மரியமை "ஹாரூனின் சகோதரி" என அழைத்து விமர்சித்ததாகவே இவ்வசனம் தெளிவுபடுத்துகிறது.

இஸ்ரேலிய முன்னோர்கள் , நபிமார்களினதும் நல்லவர்களினதும் பெயர்களை சூட்டிகொண்டனர் (முஸ்லிம் 4327)


அந்த அடிப்படயில் தான், மர்யம் என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளது. மூசா & ஹாரூனின் சகோதரி சிறந்த பெண்ணாக இருந்ததால், அவருடைய பெயரையே ஈசா நபியின் தாயாருக்கு சூட்டப்பட்டுள்ளது.


இப்படிப்பட்ட நல்லவருடைய பெயரை வைத்துள்ள நீ, இக்காரியத்தை செய்யலாமா?  

"ஹாரூனின் சகோதரியே!" என அவர்கள் அழைத்தது , ஹாரூனுடைய சகோதரியின் பெயர் என்பதால் , அதைக்கொண்டே அழைத்து விமர்சிக்கிறார்கள்.

இதில் எந்த வரலாற்று பிழையும் இல்லை! குர்ஆன் தவறிழைக்கவுமில்லை நபிகளார் தவறிழைக்கவும் இல்லை!


✅.Explanation:

Neither Quran nor The prophet said anything incorrectly. because


The Qur'an says , "Harun was the brother of Moses". (19:51-53,  20:29-30)

Moses was the prophet who delivered Israelites from the pharaoh of Egypt (20:77-80)

If the prophet Muhammad thought that this Harun's sister was the mother of Jesus,  he would have thought that Jesus was  at the time of Moses. Wouldn't he?

Did the prophet Muhammad think so?

No... But, he said that Jesus was the last Israelite prophet and there was no prophet between him and Jesus. (Bukharin 3442)

This means, He mentioned Jesus as the final Jewish prophet. But  Judaism formed after Moses & Harun.

Quran says, After Moses, there were many Jewish king among them. It mentions the stories of Taluth, David & Solomon. (2:246-251, 21:76-82)

Jesus came after these incidents.


So, it's clear that the prophet Muhammad didn't believe Moses as a uncle of Jesus.


❤. Does the Qur'an say that Maryam had a brother whose name was Harun?❓.


No. The Qur'an didn't say like that.

Qur'an quotes what the Jews told her:

27 Then she brought him to her people, carrying him. They said: "O Mary! Indeed you have brought . thing Fariy.'') (28. "O sister of Harun! Your father was not a man who used to commit adultery, nor your mother was an unchaste woman."
(19:27-28)



Qur'an says that Jewish people condemn Maryam by  calling her sister of Harun.


Those people named with the names of prophets and the righteous who had lived before them.
( Sahih Muslim 2135 
In-book : Book 38, Hadith 13 
USC-MSA web (English) : Book 25, Hadith 5326)



According to this,  the mother of Jesus was named as Maryam. Because Maryam, the sister of  Moses & Harun was a righteous woman.


They condemned her,your name is the name of a righteous woman, can you do this evil thing?


They called her as "oh sister of Harun!", because her name was the name of Harun's sister.  By calling her like that, they condemn her.


So, there is no historical error.  Neither the Qur'an nor the prophet made a mistake in this mater.

வியாழன், 17 ஜனவரி, 2019

அன்னை ஸைனப் உடனான நபிகளாரின் திருமணம் பாகம்2

அன்னை ஸைனப் உடனான நபிகளாரின் திருமணம் பாகம்2

-------------------------------------------------

முதல் பாகத்தை காண:

https://answeringchristian.blogspot.com/2019/01/1_17.html?m=1


ஸைனப் (ர) அவர்களுடன் நபியவர்களை சம்பந்தப்படுத்தி வரும் அறிவிப்புகளையும் அவற்றின் உண்மை தன்மையையும் காண்போம்:


1. முதலாவது அறிவிப்பு


இப்னு சஅத் அவர்களின் தபகாத் (8/101), இப்னு ஜரீர் அத் தபரீ அவர்களின் தாரீக் (3/161)

முஹம்மத் இப்னு யஹ்யா இப்னு ஹிப்பான் அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் இப்னு ஆமிர் அல்-அஸ்லமி கூற அவரிடமிருந்து முஹம்மத் இப்னு உமர் அல் வாகிதி அறிவிக்கிறார்:

"அல்லாஹ்வின் தூதர் ஸைதுடைய வீட்டுக்கு அவரை தேடி வந்தார்கள். அவர் முஹம்மதுடைய மகன் ஸைத் என சொல்லப்பட்டார்.ஸைதை காணாததால் அவர் எங்கே என கேட்பதற்கு அவருடைய வீட்டுக்கு அவரை தேடி வந்தார்கள் ஆனால் அவரை காணவில்லை. ஸைதுடைய மனைவியாகிய ஸைனப் அன்னாரை நோக்கி இரவுஆடையுடன் எழுந்துவந்தார். அல்லாஹ்வின் தூதர் தன் முகத்தை திருப்பிகொண்டார்கள். " அவர் இங்கு இல்லை அல்லாஹ்வின் தூதரே! உள்ளே வாருங்கள்" என ஸைனப் கூறினார். அல்லாஹ்வின் தூதர் நுழைய மறுத்துவிட்டார்கள். "அல்லாஹ்வின் தூதர் கதவருகே நிற்கிறார்" என ஸைனபுக்கு சொல்லப்பட்ட போது, அவர் அவசரமாக ஆடை அணிந்தார். அவசரத்தில் குதிக்க அல்லாஹ்வின் தூதரை ஈர்த்துவிட்டார். ஆகவே அல்லாஹ்வின் தூதர் திரும்பி சென்றபடி எதையோ முனுமுனுத்தார்கள். அவர் சொன்னது "மகத்தான அல்லாஹ் தூயவன், உள்ளங்களை திருப்புவன் தூயவன்" என கூறினார்கள்.

ஸைத் வீடு வந்தபோது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் வந்ததாக ஸைனப் கூறினார். "அவரை உள்ளே வர ஏன் கூப்பிடவில்லை?" என ஸைத் சொன்னார்.
"அவரை உள்ளேநுழைய நான் வேண்டினேன். அவர் மறுத்துவிட்டார்" என ஸைனப் கூறினார்.
"அவர் எதையாவது கூற நீ செவிமடுத்தாயா?" என ஸைத் கேட்டார்.

"அவர் திரும்பி செல்லும்போது மகத்தான அல்லாஹ் தூயவன், உள்ளங்களை திருப்புபவன் தூயவன் என கூற கேட்டேன்" என ஸைனப் பதில் அளித்தார்.

ஆகவே ஸைத் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் என் வீட்டுக்கு வந்ததாக கேள்விபட்டேன். நீங்கள் ஏன் உள்ளே நுழையவில்லை? ஸைனப் உங்களை ஈர்த்திருக்க கூடும். எனஙே அவளை நான் பிரிந்துவிடுகிறேன்" என கூறினார்.

"உம் மனைவியை உம்மிடமே நிறுத்திவைத்துகொள்" என அல்லாஹ்வின் தூதர் கூறினார்.

ஆனால் அந்த நாள் முதல் ஸைதுக்கு ஸைனபோடு வாழ முடியவில்லை. அவர் வந்து நபியிடம் வந்து பிரிந்துவிட அனுமதி கேட்பார். அல்லாஹ்வின்தூதர் "உம் மனைவியை உம்மிடம் நிறுத்திகொள்" என கூறிவருவார்கள். ஸைத் மீண்டும் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் "உம் மனைவியை உம்மிடம் வைத்துகொள்" என கூறினார்கள்.

ஆனால் ஸைத் விவாகரத்து செய்திவிட்டார். ஸைனபுடைய இத்தா காலம் முடிவடைந்தது.

அல்லாஹ்வின் தூதர் ஆயிஷாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது மயக்கம் அவரை ஆட்கொண்டது. பின் அதிலிருந்து தெளிந்தபோது , சிரித்துவிட்டு "ஸைனபை அல்லாஹ் எனக்கு திருமணம் முடித்து தந்துவிட்டான் என்ற நல்லசெய்தியை ஸைனபிடம் போய் சொல்பவர் யார்" என கூறினார்கள். பிறகு 33:37ஐ இறுதிவரை ஓதினார்கள்."

☝☝



🛑. இந்த அறிவிப்பு பற்றி பார்ப்போம்:

இது முர்ஸல் தரத்திலமைந்த பலவீனமான செய்தி ஆகும். ஏனெனில் இரண்டு அறிவிப்பாளர்கள் இதில் இல்லை.

இதை அறிவிப்பவரான ர முகம்மத் இப்னு யஹ்யா இப்னு ஹப்பான் என்பவர் இறந்தது ஹிஜ்ரி 121 இல் தன் 74வது வயதில் ஆகும்.

இதன்படி அவர் பிறந்தது, ஹிஜ்ரி 47 இல் ஆகும்.

ஆனால் இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட மூவரில் இறுதியாக இறந்தவர் ஸைனப் ஆவார். அவர் ஹிஜ்ரி 20இல் மரணித்துவிட்டார்.

இவர் மரணித்து 27 வருடங்களின் பின் பிறந்த ஒருவரே இச்செய்தியை கூறிகிறார்.
(தஹ்தீப் (9/507-509))

இரண்டாவது, இதில்வரும் அடுத்த அறிவிப்பாளரான
அப்துல்லாஹ் இப்னு ஆமிர் அல்-அஸ்லமி என்பாரை பற்றி இமாம் புகாரி "அவரது அறிவிப்பு புறக்கணிக்கப்பட வேண்டியது" என்கிறார். இமாம் அபூஹாதிம் "இவர் ஹதீஸ்துறையில் கைவிடப்பட்டவர்" என கூறுகிறார்
(தஹ்தீப் 5/275, மீஸானுல் இஃதிதால் 2/448)

அடுத்த அறிவிப்பாளர் முகம்மத் இப்னு உமர் அல்-வாகிதி என்பவர். இவரை பற்றி சில அறிஞர்கள் பொய்யர் எனவும் ஹதீஸ்களை இட்டுகட்டுபவர் என கூறியிருக்கிறார்கள்.
(மீஸானுல் இஃதிதால் 3/664)

எனவே இதை ஆதாரமாக கருதவே முடியாது.

இனி அடுத்த அறிவிப்பை பார்ப்போம்.






2. இரண்டாவது அறிவிப்பு:


இது இப்னு ஜரீர் அத்-தபரீயின் தஃப்சீர் (22/13) குறிப்பிடுகிறார்.

இப்னு ஸைத் கூறியதாக இப்னு வஹப் கூறியதை யூனுஸ் என்னிடம் சொன்னார்.

"அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஸைத் இப்னு ஹாரிஸாவுக்கு தன் மாமியின் மகளான ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களை திருமணம் முடித்து வைத்தார்கள்.

ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் ஸைதை தேடி புறப்பட்டார்கள்.


   அங்கு வாசலில் உரோமங்களாலான துணியால் திரைச்சீலை இடப்பட்டிருந்தது. ஆனால் காற்று திரைச்சீலையை உயர்த்திவிட்டது. இதனால் ஸைனப் தன் அறையில் ஆடையின்றி/தலையை மூடாமல் இருப்பதை வெளிப்படுத்தியது. இதனால் அல்லாஹ்வின் தூதரின் உள்ளம் ஈர்க்கப்பட்டது. அதன்பிறகு ஸைனப் மற்றவரை (ஸைதை) வெறுத்தார். ஸைத் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து: "அல்லாஹ்வின் தூதரே! என் மனைவியை பிரிந்துவிட விரும்புகிறேன்" என கூறினார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் : "உனக்கு என்ன நேர்ந்தது? ....... உன் மனைவியை உன்னிடமே வைத்துகொள் அல்லாஹ்வை பயந்துகொள்" என கூறினார்கள். அப்போது அல்லாஹ் 33:37ஐ இறக்கிவைத்தான்.

"அல்லாஹ் எவருக்கு அருள்புரிந்து, நீரும் எவருக்கு உபகாரம் செய்தீரோ அவரிடம் " உம் மனைவியை உம்மிடமே நிறுத்திகொள்ளும், இன்னும் அல்லாஹ்வை பயநுகொள்ளும்" என்று நீர் கூறியபோது, அல்லாஹ் வெளியாக்க இருந்ததை நீர் உம் மனதில் மறைத்தீர்." அதாவது நீ அவளை பிரிந்துவிட்டால் நான் மணந்துகொள்வளன் என்பதை உள்ளத்தில் மறைத்தீர்"



 🛑. இந்த அறவிப்பை பற்றி பார்ப்போம்:

முதலாவது இதிலும் அறிவிப்பாளர்கள் விடப்பட்ட பலவீனமான செய்தி ஆகும். இதை அறிவிப்பவர் இப்னு ஸைத் என்பவர். இவர் நபித்தோழரோ அதனை தொடர்ந்தவரோ இல்லை. இவர் மரணித்தது ஹிஜ்ரி 182 இல் ஆகும். இதனால் இவர் மிக பிந்தியவர்.

இரண்டாவது இந்த அறிவிப்பாளரை பொருத்தமட்டில் ஹதீஸ்துறை அறிஞர்கள் இவரை மிக பலவீனமானவர் என கூறியுள்ளார்கள். சில அறிஞர்கள் இவரது அறிவிப்புகள் அனைத்தும் கைவிடப்படவேண்டியவை என்கிறார்கள்.

இமாம் புகாரி மற்றும் இமாம் அபூஹாதிம் கூறுகிறார்கள: அலீ இப்னுல் மதீனீ அவரை (இப்னு ஸைதை) மிக பலவீனமானவராக கருதினார். சாஃபியிடமிருந்து அவர் கூறியதாக அறிவிக்கபடுவதாவது:

 அப்துர்ரஹ்மான் இப்னு ஸைத் இப்னு அஸ்லம் இவ்வாறு கேட்கப்பட்டார், " நூஹுடைய கப்பல் கஃபாவை தவாஃப் செய்து இரண்டு ரக்அத்துகள் மகாமு இப்ராஹீமில் தொழுததாக முகம்மது நபி கூறியதாக உம்முடைய பாட்டனாரிடமிருந்து உம் தந்தை உம்மிடம் சொன்னாரா?" என கேட்கப்பட்டது.

அதற்கு அவர் "ஆம்" என பதிலளித்தார்.
(தஹ்தீப் 6/178)

இந்த வசனத்துக்கு இவர் கொடுப்பது அவரது சொந்த விளக்கமே தவிர வேறொன்றுமில்லை.

எப்படி நூஹுடைய கப்பல் கஃபாவை வலம்வந்து இரண்டு ரக்அத் தொழுதது என்பது போல.

இது ஆதாரமன்று


 3.மூன்றாவது அறிவிப்பு:.


முஸ்னத் அஹ்மத் 3/149-150

அனஸ் (ர) கூறியதாக ஹம்மாத் இப்னு ஸைத் கூறியதாக முஅம்மல் இப்னு இஸ்மாயீல் எம்மிடம் கூறினார்:

அல்லாஹ்வின் தூதர் ஸைதுடைய வீட்டுக்கு வந்தார் அவருடைய மனைவி ஸைனபை கண்டார்கள்
அவர் வீட்டினுள் நுழைந்தபடி (இது ஹம்மாதின் கருத்தா அல்லது ஹதீஸிலுள்ளதா என நான் அறியமாட்டேன்).

அப்போது ஸைத் அல்லாஹ்வின் தூதரிடம் ஸைனபை பற்றி முறையிட வந்தார். ஆனால் அல்லாஹ்வின் தூதர், "உம் மனைவியை உம்மிடமே நிறுத்திகொள் அல்லாஹ்வை பயந்துகொள்" என கூறினார்கள். அப்போது "அல்லாஹ் வெளியாக்க இருந்ததை நீர் மறைத்தீர்" என்ற வசனம் "அவளை (ஸைனபை) உமக்கு திருமணம் முடித்து தந்தோம்" வரைக்கும் இறங்கியது.


 🛑. இந்த அறிவிப்பு பற்றி:

இதை அறிவிக்கும் முஅம்மல் இப்னு இஸ்மாயீல் என்பவர் அநேக அறிஞர்களால் பலவீனமானவர் என கூறப்பட்டவர்.
(தஹ்தீப் 10/381)

மேலும் இந்த அறிவிப்பானது புகாரி 7420, திர்மிதி 3212, நஸாயீ 3251 ஆகிய அறிவிப்புகளுக்கு முரணாக உள்ளது.

அவற்றில் 33:37 இன் ஆரம்ப பகுதி ஸைத் முறையிட வந்தபோது எனவும், அடுத்த பகுதி இத்தா காலம் முடிந்த பின்பு இறங்கியது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

எனவே இதுவும் ஏற்றுகொள்ள முடியாத செய்தியே... ஆனாலும் இதில் பாரதூரமான அவதூறு இல்லை



 4.நான்காவது அறிவிப்பு:


இப்னு ஜரீர் அத்- தபரீ தனது தஃப்சீரில் (22/13) கூறுகிறார்.

கதாதாவிடமிருந்து சஈத் அறிவித்ததாக யஸீத் நம்மிடம் சொன்னதாக பிஷ்ர் எம்மிடம் சொன்னார்:

"யாருக்கு அல்லாஹ் அருள்புரிந்து"- அதாவது ஸைதுக்கு இஸ்லாத்தினால் அருள் புரிந்து

"நீரும் யாருக்கு அருள்புரிந்தீரோ'- அதாவது யார் முகம்மது நபியால் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டாரோ,

"உம் மனைவியை உம்மிடம் வைத்துகொள்! அல்லாஹ்வை பயந்துகொள்!"
அல்லாஹ்வின் தூதர் அவ்விருவரும் பிரிந்திவிட வேண்டும் என விரும்பினார்.

ஹசன் கூறினார்: "அல்லாஹ் வெளியாக்க இருந்ததை நீர் உம் மனதில் மறைத்தீர்" என்ற வசனத்தைவிட நபியவர்களுக்கு கடுமையான வசனம் இருந்ததில்லை. அவர் வஹியில் எதையேனும் மறைப்பதாக இருந்தால் இதை மறைத்திருப்பார்.

"நீர் மனிதர்களுக்கு பயந்தீர். ஆனால் அல்லாஹ்வே நீர் பயப்பட மிகவும் தகுதியானவன்" - அல்லாஹ்வின் தூதர் , மக்கள் என்ன கூறுவார்களோ என பயந்தார்கள்.

இந்த கதையை கதாதாவிடமிருந்து மஃமர் வழியாக அப்துர்-ராசிக் அறிவிக்கிறார்:

ஸைத் வந்து "அல்லாஹ்வின் தூதரே! ஸைனபுடைய நாவு என்னோடு மிக கடுமையாக உள்ளது. அவரை பிரிந்துவிட நான் விரும்புகிறேன்" என கூறினார்.

ஆனால் அல்லாஹ்வின் தூதர், "அல்லாஹ்வை பயந்துகொள்! உம் மனைவியை உன்னிடமே நிறுத்திகொள்" என கூறினார்கள். அதேநேரம் அவர்கள் பிரிந்துவிடுவதை விரும்பினார்கள். ஆனால் மனிதர்கள் என்ன பேசுவார்கள் என்பதை பயந்தார்கள்"
(பத்ஹுல் பாரி 8/524)

கதாதா என்ப்பவர் தஃப்சீருக்காக அறியப்பட்ட இமாம். இது அவருடைய சொந்த விளக்கம்.

இவரை பற்றி இமாம் சஅபி கூறுகிறார்.
கதாதா (ஆதாரபூரவமானதையும் ஆதாரபூர்வமற்றதையும்) வேறுபிரித்து அறியமுடியாதவர்.

அபூஉமர் இப்னுல் அலா இவரைபற்றி கூறுகறார.:

 கதாதாவும் அம்ர் இப்னு சுஐபும் அனைவரிடமிருந்தும் அறிவிப்புகளை எடுப்பவர்களாக இருந்தனர். எதையும் தவறானதாக அவர்கள் கருதியதில்லை.
(தஹ்தீப் 8/301-305)

இதில் தவறான எதுவும் நினைக்க இல்லை.

ஸைத் ஸைனபை பிரிந்துவிடுவதை தன்னிடம் கேட்காமல் செய்துவிடுவதையே முகம்மது நபி விரும்பினார். ஏனெனில் ஸைத் ஸைனபை விவாகரத்து செய்துவிடுவார் என அவர் இறைவன் புறத்திலிருந்து அறிந்திருந்தார். இதனால் விவாகரத்து நடப்பதானால் தன்னிடம் கேட்காமலே நடந்துவிட வேண்டும் என விரும்பினார்.

ஆனால் தன்னிடம் அவர் ஆலோசனை கூறியபோது அவ்வாறு செய்துவிட வேண்டாம் என கூறினார்கள்.



 5. ஐந்தாவது அறிவிப்பு:


இப்னு இஸ்ஹாக், ஸீரா அந்நபவிய்யா 283

சஃஅபி கூறியதாக அவரது விடுதலைசெய்யப்பட்ட அடிமை அபூசலமா அல் ஹம்தானியிடமிருந்து யூனுஸ் இப்னு புகைர் அறிவிக்கிறார்:

"ஸைத் சுகயீனப்பட்டார். அல்லாஹ்வின் தூதர் அவரை பார்க்க சென்றார்கள். அப்போது ஸைனப் சைதுடைய தலைமாட்டில் அமர்ந்திருந்தார். ஸைனப் எழுந்தபோது, அல்லாஹ்வின் தூதர் ஸைனபை பார்த்தார்கள். தன் தலையை பணித்துக்கொண்டு ," உள்ளங்களையும் பார்வைகளையும் புரட்டும் அல்லாஹ் தூய்மையானவன்" என கூறினார்கள்.
உடனே ஸைத் "அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்காக அவரை விவாகரத்து செய்துவிடவா?" என கேட்டார்.
உடனே அல்லாஹ்வின் தூதர்: "வேண்டாம்" என கூறினார்கள். அப்போது அல்லாஹ் "எவருக்கு அல்லாஹ் அருள்புரிந்து நீரும் அருள்புரிந்தீரோ அவரிடம் நீர் கூறியபோது" முதல் "அல்லாஹ்வின் கட்டளை நடைபெற்றுதீரவேண்டியதே" வரைக்கும் இறக்கினான்."
இப்னு இஸ்ஹாக்

இதை அறிவிக்கும் சஅபீ ஹிஜ்ரி 21இல் பிறந்தவர். ஆனால் அம்மூவருமோ அவர் பிறக்க முன்பே மரணித்துவிட்டனர். மேலும் இவரும் ஒரு பலவீனமான அறிவிப்பாளரே.
(அபூஸுர்ஆ, அல் ளுஅஃபா (மதீனா பல்கலைகழகம் 1982) பாகம் 2, பக்கம் 432; இப்னு அதீயினுடைய அல்காமில் ஃபிள் ளுஅஃபா பாகம்:4 பக்கம் 333, இலக்கம் 775; இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்களின் அள்-ளுஅஃபா வல்-மத்ரூகீன், பாகம் 2, 12 இலக்கம் 1493; இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானியின் லிஸானுல் மீஸான் பாகம் 3, பக்கம் 112)



 6.ஆறாவது அறிவிப்பு:


தபரானியில் வரும் செய்தி

முகம்மத் இப்னு அப்துல்லாஹ் அல்ஹள்ரமி- அல்ஹசன் பின் அலி அல்ஹுல்வானி- முகம்மத் இப்னு காலித் பின் அஸ்மா- மூஸா இப்னு யஃகூப்- அப்துர்ரஹ்மான் இப்னுல் முனீப்- அபூபக்ர் இப்னு சுலைமான் இப்னு அபூஹஸ்மா:

"அல்லாஹ்வின் தூதர் ஸைதுடைய வீட்டுக்கு சென்று உள்ளே நுழைவதற்கு அனுமதி கேட்டார்கள். ஸைனப் அவருக்கு அனுமதியளித்தார். அவர் முக்காடு அணிந்திருக்கவில்லை. எனவே அவரது ஆடையொன்றை தலையில் போட்டுகொண்டார். அல்லாஹ்வின் தூதர் ஸைதை பற்றி கேட்டார்கள். அதற்கு அவர்: " சற்றுமுன்பு அவன் சென்றார் அல்லாஹ்வின் தூதரே! " என்றார்.
அல்லாஹ்வின் தூதர் எதையோ முணுமுணுத்தபடி போவதற்கு எழுந்தார்.
ஸைனப் சொல்கிறார்: "நான் அவர் சொல்வதை செவிமடுக்க பின்தொடர்ந்து சென்றேன். அவர் "உள்ளங்களை திருப்பக்கூடியவன் பாக்கியம்பொருந்தியவன்" என மறையும்வரை கூறிகொண்டே இருந்தார்.
(தபரானி)

இதை கூறும் அபூபக்ர் பின் சுலைமான் பின் அபூஹஸ்மா என்பவர் தாபீயீன்களில் பிற்காலத்தவர். அவரிடமிருந்து அறிவிக்கும் அப்துர்ரஹ்மான் இப்னுல் முனீப் என்பவர் யாரென்றே அறியப்படாதவர்.

அவருக்கு பின்னுள்ள அறிவிப்பாளரான மூஸா இப்னு யஃகூபுக்கு அறியப்படாத ஆசிரியர்கள் இருந்தனர் என அப்துர்ரஹ்மான் இப்னுல் மஹ்தி கூறுகிறார்.
(தஹ்தீபுல் கமால்-அல்மிஸ்ஸி , பாகம் 29 பக்கம் 172)

இந்த மூஸா இப்னு யஃகூப் என்பவர் கூட மனனத்தன்மை குறைபாடுடையவர் என விமர்சிக்கப்பட்டுள்ளார். (இப்னு ஹஜர் அஸ்கலானியின் தக்ரீபுத் தஹ்தீப் )

எனவே இது பலவீனமான செய்தி ஆகும். இதை கூறுபவர் கூட ஸைனப் அவர்களையோ ஸைத் அவர்களையோ சந்தித்தவரல்ல..

எனவே
இதுவும் தவறான தகவல் ஆகும்.





 7. ஏழாவது அறிவிப்பு:


யஹ்யா இப்னு ஸலாம் தன் தஃப்சீரில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

அல்கல்பீ கூறினார்:
அல்லாஹ்வின் தூதர் ஸைனபை சந்திக்க வந்தார்கள். அவர் நின்றிருப்பதை பார்க்கவே அவர் அன்னாரை ஈர்த்துவிட்டார். ஆகவே அல்லாஹ்வின் தூதர், "உள்ளங்களை புரட்டக்கூடிய அல்லாஹ் தூயவன்" என கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸைனபை விரும்புகிறார் என்பதை கண்ட ஸைத் , "அல்லாஹ்வின் தூதரே! அவரை விவாகரத்து செய்துவிட என்னை அனுமதியுங்கள்" என கூறினார்.

அதற்கு அல்லாஹ்வின்தூதர் அவரிடம் ,"அல்லாஹ்வ பயந்துகொள்! உன் மனைவியை உன்னிடமே வைத்துகொள்" என கூறினார்கள்.

ஆகவே அவரும் அல்லாஹ்நாடியவாறு தன் மனைவியை வைத்துக்கொண்டு பிறகு விவாகரத்து செய்துவிட்டார். அவருடைய இத்தா காலம் முடிந்த பின் அல்லாஹ் அவரது திருமணத்தை தன் தூதருடன் வானத்திலிருந்து இறக்கிவைத்தான்.
(யஹ்யா இப்னு ஸலாமுடைய தஃப்சீர், பாகம் 2, பக்கம் 721-722)

இதை அறிவிக்கும் அல்கல்பீ என்பவர் ஹிஜ்ரி 146 இல் மரணித்தவர். அவர் தான் யாரிடமிருந்து இதை கேட்டேன் என்பதை சொல்லவுமில்லை.

அதுமட்டுமின்றி அவர் ஹதீஸ்துறையில் நிராகரிக்கப்பட்ட அறிவிப்பாளர் ஆவார்.
(சியாருல் ஆலம் அந்நுபலா- தஹபி பாகம் 6 பக்கம் 248-249)

எனவே இதுவும் ஆதாரமற்ற தவறான செய்தி ஆகும்






 8.எட்டாவது அறிவிப்பு:


முகாதில் இப்னு சுலைமானின் அறிவிப்பு

ஸைனபை பற்றி ஸைத் அல்லாஹ்வின் தூதரிடம் முறையிட்டார். அல்லாஹ்வின் தூதர் வந்து ஸைனபுக்கு அறிவுரை கூறினார்கள். ஸைனபோடு பேசியபோது ஸைனபீன் அழகு அவரை ஈர்த்துவிட்டது. அது அல்லாஹ் விதித்தபடி நடந்தது. பின்பு அல்லாஹ்வின் தூதர் திரும்பிவந்துவிட்டார்கள். அல்லாஹ் நாடியது அவருடைய நினைப்பில் இருந்தது. அதன்பின்பு, அல்லாஹ்வின்தூதர் ஸைதிடம் "அவர் உன்னுடன் எப்படி நடந்துகொள்கிறார்" என கேட்டார்கள்.
அவரோ தன் மனைவியை பற்றி முறையிடலானார். ஆகவே அல்லாஹ்வின் தூதர் "அல்லாஹ்வை பயந்துகொள்! உம் மனைவியை உம்மிடமே வைத்துகொள்" என கூறினார்கள் ஆனால் அவரது உள்ளத்திலோ அதுவல்லாததே இருந்தது. .... அதன்பின் அல்லாஹ்வின் தூதர் ஸைதிடம் வந்து ஸைனப் நின்றிருப்பதை பார்த்தார்கள். அவர் அழகானவராகவும் மிகசிறந்த குறைசிய பெண்களில் வெண்மையானவராகவும் அவர் இருந்தார். அவரை அல்லாஹ்வின் தூதர் விரும்பினார்கள். ஆகவே அவர்கள் "உள்ளங்களை புரட்டக்கூடிய அல்லாஹ் தூயவன்" என கூறினார்கள். ஸைத் இதை உணர்ந்து , "அல்லாஹ்வின் தூதரே! என்னை விவாகரத்து செய்துவிட அனுமதியுங்கள். இவர் என்னுடன் கர்வமாக நடக்கிறார் அவரது பேச்சுகளால் என்னை துன்புருத்துகிறார்" என ஸைத் கூறினார். அல்லாஹ்வின்தூதர் "உம் மனைவியை உம்மிடமே வைத்துகொள்ளும். அல்லாஹ்வை பயந்துகொள்ளும்!" என கூறினார்கள். அதன்பிறகும் ஸைத் அவரை விவாகரத்து செய்துவிட்டார்."
(முகாதில் இப்னு சுலைமானின் தஃப்சீர் பாகம் 3 , பக்கம் 492-494)

இதிலுள்ள பிரச்சினை:

இதை கூறுபவர் முகாதில் இப்னு சுலைமான். இவர் இறந்தது ஹிஜ்ரி 150 இல் ஆகும். இவர் இங்கு எந்த அறிவிப்பாளர் வரிசையையும் குறிப்பிடவில்லை. எனவே இது தொடர்பு அறுந்த செய்தி.

இவர் விளக்கமுள்ளவராக இருந்தாலும், இவரது அறிவிப்புகளை நிராகரிப்பதில் அறிஞர்கள் ஒன்றுபட்டுள்ளார்கள் என இமாம் தஹபி சொல்கிறார்.
(இமாம் தஹபியிடைய , சியருல் ஆலம் அந்நுபலா பாகம் 7 பக்கம் 202)


 எனவே இதுவும் பலவீனமான தவறான செய்தி ஆகும்

 ******************************************************************
எனவே இந்த அத்தனை செய்திகளும் அறிவிப்பாளர் வரிசைரீதியாக மிகவும் பலவீனமானவைகள்.

இனி இதன் உள்ளடக்கத்திலுள்ள குழப்பங்களை காண்போம்
*****************************************************************************************************************************


   இந்த அறிவிப்புகளின் உள்ளடக்கத்திலுள்ள குளருபடிகளை காண்போம்:




1.முரண்பாடுகள்:

I. நபியவர்கள் ஸைதுடைய வீட்டுக்கு ஏன் வந்தார்கள் என்பதில் முரண்பாடு:

*ஸைதை காணாததால் பார்க்கவந்ததாக 1வது மற்றும் 2வது செய்திகள் கூறுகின்றன.

*ஸைனபுக்கு உபதேசம் செய்ய வந்ததாக 7வது மற்றும் 8வது அறிவிப்புகள் கூறுகின்றன.

*ஸைதுக்கு சுகயீனம் காரணமாக நலம் விசாரிக்க வந்தார்கள் என 5வது அறிவிப்பு சொல்கிறது

II. நபியவர்கள் வந்தபோது ஸைனபை கண்டபோது ஸைத் இருந்தாரா இல்லையா என்பதில் முரண்பாடு:

*ஸைத் வீட்டிலிருக்கவில்லை என 1வதும் ,2வது, 6வது அறிவிப்புகள் கூறுகின்றன.

*வீட்டில் ஸைத் இருந்ததாகவும் நபியவர்கள் நுழைந்தவுடன் ஸைனபை பற்றி முறையிட அவர் வந்தார் என 3வது அறிவிப்பும்,
ஸைது சுகயீனமாக வீட்டில் இருந்ததாகவும் ஸைனப் அவரது தலைமாட்டில் இருந்ததாகவும் 5வது அறிவிப்பு கூறுகிறது.

III. ஸைனபை எப்படி எந்த நிலையில் பார்த்தார் என்பதில் முரண்பாடு:

*வீட்டில் இரவுஆடையுடன் இருக்க அவர் துள்ளியது ஈர்த்துவிட்டது என 1வது அறிவிப்பும்

*திரைச்சீலை காற்றினால் விலகியதால், ஸைனப் ஆடையின்றி இருந்ததை கண்டு ஈர்க்கப்பட்டார் என 2வது அறிவிப்பு கூறுகிறது.

*ஸைத் சுகயீனமாக இருந்தபோது ஸைதுக்கு தலைமாட்டில் அமர்ந்திருந்த ஸைனப் எழுந்தபோது பார்த்தால் ஈர்க்கப்பட்டார்கள் என 5வது அறிவிப்பு கூறுகிறது.

*முக்காடு இல்லாமல் பார்த்தால் ஈர்க்கப்பட்டார்கள் என 6வது அறிவிப்பு கூறுகிறது.

*ஸைனபை பார்த்து உபதேசிக்க வந்தபோது, அவரை பார்த்து ஈர்க்கப்பட்டார் என 7வது மற்றும் 8வது அறிவிப்புகள் கூறுகின்றன.


இதுவல்லாமலும் இதில் முரண்பாடுகள் உள்ளன. உதாரணமாக நபியவர்கள் என்ன கூறினார்கள்? செவிமடுத்தது ஸைதா ஸைனபா?  வஹி எப்போது வந்தது என சகலதிலும் முரண்

 எனவே இது சாத்தியமல்லாத ஒன்று.





2. இந்த எட்டுஅறிவிப்புகளில் 3வதை தவிர மற்ற அனைத்தும் ஸைனபை முகம்மது நபி பார்த்தபோது விரும்பினார் என்பதில் உடன்படுகிறது. ஆனாலும் இவர்கள் கூறும் இந்த காதல் மிகவும் பிந்தியே (ஸைனப் திருமணம் முடித்தபின்னால்) ஏற்படத்தாக கூறுவது அபத்தமானது.

ஏனெனில் ஸைனப் பிறந்து வளர்ந்தது நபியவர்களுக்கு மத்தியில் தான். அந்த காலத்தில் அவரது அழகை ஸைதுக்கு திருமணம் முடித்து வைக்கும்வரை அவர்கள் அறியாமல் இருப்பார்களா?

எந்தளவுக்கெனில் ஸைனபிடம் ஸைதுக்காக போய் திருமணம் பேசியதே முகம்மது நபி தான். 

முக்காடு அணிவது கடமையாக்கப்பட்டிருக்காத காலத்திலிருந்தே ஸைனபை கண்டுதான் உள்ளார்கள். எனவே முக்காட்டுடனும் முக்காடு இல்லாமலும் அவரை பார்த்தே உள்ளார்கள். இவர்கள் கூறும் காதல் எனும் கதை  உண்மையானதாக இருந்திருந்தால், ஸைதுக்கு திருமணம் செய்து கொடுக்க முன்பே முடித்திருப்பாரே! தன் சொந்த மாமியின் (தந்தையின் சகோதரியின்) மகளை பற்றி அவருக்கு தெரியாமலா இருந்திருக்கும்???





3.இந்த அறிவிப்புகள் கூறுவதுபோல நபியவர்கள் ஸைனபை பார்த்தால் ஈர்ப்பு ஏற்பட்டதை ஒரு பேச்சுக்கு உண்மையென கருதினால்,அதுவும் விமர்சனத்திற்குரியது அல்ல.. ஈர்ப்பு ஏற்பட காரணம் ஹோர்மோன்களே. அது மனித கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. அப்போது கூட முகம்மது நபி செய்ததை போல அப்படி ஈர்க்கப்பட்டவரால் நடந்துகொள்ள முடியுமா? அதாவது தலையை பணித்துகொண்டோ அல்லது அன்னார் கூறியதைபோன்று கூறவோ அப்படிப்பட்டவர்களால் முடியுமா?

 அதாவது மிகவும் கண்ணியமாகவே நடந்ததாக தான் உள்ளன.






 4.இந்த அறிவிப்புகள் அறிவிப்பாளர் வரிசையிலும், உள்ளடக்கத்திலும் உள்ள குறைகள் தெளிவான பின்னாலும் இவற்றை ஏன் பயன்படுத்தவேண்டும்??

நபியவர்களின் உள்ளத்தில் மறைத்திருந்தது "ஸைது தன் மனைவியை விவாகரத்து செய்வார். அதன்பின் நான் முடிப்பேன்" என முன்கூட்டியே இறைவனால் அறிவித்து கொடுக்கப்பட்டது தான் என சாதாரணமாக சிந்தித்தாலும் புரிந்துவிடகூடியதாகவே உள்ளது.



இந்த திருமணத்தை இறைவன் நிறைவேற்றியதற்கு காரணத்தை 33 :37 தெளிவாக சொல்கிறது.


-----------------------------------------------------

முடிவு:

1.நபியவர்கள் தம் உள்ளத்தில் மறைத்து வைத்திருந்தது எதையெனில், அல்லாஹ் அவர்கள் மீது கடமையாக்கிய/விதியாக்கிய இத்திருமணத்தை ஆகும்.

2.இதை மக்கள் குற்றமாக கருதுவார்கள் என்பதால், அல்லாஹ் விதியாக்கியதை செயவதில் எந்த குற்றமும் இல்லை என இறைவன் சொல்கிறான்.
மக்கள் இவ்வாறு குற்றமாக கருதுவதையே நபியவர்கள் பயந்தார்கள்.

3.இத்திருமணத்தை இறைவன் கடமையாக்க முன்பு ஜைதுக்கு ஸைனபை திருமணம் செய்ய வைத்தான். 

4.ஸைத் தன் விருப்பத்தின் படியே தன் மனைவியை விவாகரத்து செய்தார். நபிகளாரின் ஆலோசனையை எடுக்கவில்லை (திர்மிதீ 3212)


5.தன் முன்னாள் மனைவி மீது ஸைதுக்கு ஈர்ப்பு இல்லாத நிலையிலேயே அவரை அனுப்பியே நபிகளார் தனக்கு திருமணம் பேசினார் (முஸ்லிம் 2798)

6.அவர் தலாக் செய்த பின் நபிகளாருக்கு திருமணம் செய்துவைத்தான். காரணம்,
"விசுவாசிகளால் வளர்க்கப்பட்டவர்கள் தம் மனைவியரை விவாகரத்து செய்தால், அந்த விவாகரத்து செய்யப்பட்ட பெண்களை வளர்த்த விசுவாசிகளுக்கு முடிப்பதில் எந்த குற்றமும் இருக்காது" என்பதை நிகழ்த்தி காட்டுவதற்கு ஆகும் என்பதை 33:37 சொல்கிறது.

ஏனெனில் சொந்த மகன்களினால் விவாகரத்து செய்யப்பட்டால் ,விவாகரத்து செய்யப்பட்டோரை திருமணம் முடிப்பது அவர்களின் பெற்றோரான வளர்த்தவர்களுக்கு பெரும் குற்றம்(குர்ஆன் 4:23). 

இதேபோன்று வளர்க்கப்பட்டோருக்கு வராது என்பதை நிகழ்த்தி காட்டுவதற்கு ஆகும்.


7..நபியவர்கள் தம் வசதிக்காக இதை இட்டுகட்டியிருக்க முடியாது. ஏனெனில் இந்த வசனங்களே அவருக்கு மிகவும் கஷ்டமானதாக இருந்தன. குர்ஆனில் எதையாவதை மறைப்பதாக இருந்திருந்தால் , இந்த 33:37 வசனத்தை மறைத்திருப்பார்கள் என நபித்தோழர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி 7420


அல்லாஹ் வழிதவறச்செய்கிறான் என்பதன் விளக்கம்

1.மனிதனுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது  --மனிதனுக்கு இறைவன் வழி காட்டியுள்ளான். ஒன்று அவன் நன்றியுள்ளவனாக இருக்கிறான் அல்லது காஃபிராக இருக்கிறான...