இயேசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயேசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 8 ஜூலை, 2023

ஈசா நபி பற்றி குர்ஆன் ஹதீஸ்

 ஈஸா நபி பற்றி குர்ஆன் ஹதீஸ்

----------------------------------------------------------


ஈசா நபி குறித்து பைபிளே அவரை தேவனது தாசன் (ஊழியன்) (மத் 12:18) என்றும் , பிதா ஒருவரே மெய்யான தேவன் (யோவான் 17:3) என்றும் தன்னை தேவனுடைய பையன் என்று சொல்ல காரணம், தேவனால் அனுப்பப்பட்டும் பரிசுத்தம் பண்ணப்பட்டும் இருப்பதால் தான் என்றும் வேதத்தை பெற்றவர்களை தேவர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவரே சொல்வதாக (யோவான் 10:33-36) எழுதப்பட்டிருந்தாலும், தெளிவாக தேவன் வேறு இயேசு வேறு என்று சொல்லப்பட்டிருந்தாலும் (வெளி 3:12, யோவான் 20:16-17, 17:3) இயேசு ஒருவரே மெய்யான தேவன் என்று கிறிஸ்தவர்கள் கூறுவார்கள். அதற்கு சான்றாக மூடலான வசனங்களையும் , புதிய ஏற்பாட்டாசிரியர்களே குழம்பிப்போய் எழுதியதையும் காட்டுகிறார்கள். அதோடு நிறுத்தாமல் ஏகத்துவத்தை போதிக்கும் இஸ்லாத்தில் கூட அவரை கடவுளாக தான் கூறப்பட்டுள்ளது என்று வாய் கூசாமல் பேசுவதோடு அதை வைத்து கதைப்புத்தகங்கள் கூட எழுதியுள்ளார்கள். ஆகவே இந்நிலை குறித்து அலசுவோம்:




1.ஈசா நபி தன்னையும் தன் தாயையும் கடவுள்களாக கூறவில்லை. மறுமையில் இறைவன் அவரிடமே இதுகுறித்து விசாரணை செய்வான்.


அதற்கு அவர் "எனக்கு உரிமையில்லாத விசயத்தை நான் நான் சொல்வதற்கில்லை , என் இறைவனும் உங்கள் இறைவனும் ஆகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்" என்று தான் கூறினேன் என்பார்.


 

இன்னும், “மர்யமுடைய மகன் ஈஸாவே, “அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், “நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் கூறுவார். (அல்குர்ஆன் : 5:116)

நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), “என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்” என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை; மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்; அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்” (என்றும்); (அல்குர்ஆன் : 5:117)


(இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர்; அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீ தான்(யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்” (என்றும் கூறுவார்). (அல்குர்ஆன் : 5:118)



2.ஈசா நபி தான் அல்லாஹ் என்று கூறுபவர்கள்  நிராகரித்தவர்கள். அல்லாஹ் நாடினால் ஈசாவையும் அவரது தாயையும், உலக மக்கள் அனைவரையும் அழித்துபோட முடியும்.



திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்தகையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். “மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்” என்று (நபியே!) நீர் கேளும்; வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவன் நாடியதைப் படைக்கிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.  (அல்குர்ஆன் : 5:17 மேலும் 5:72)


3.ஈசா நபி அல்லாஹ்வை வணங்குவதற்கே சொன்னார். யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறாரோ, அவர்மீது சுவர்க்கத்தை தடை செயதுவிடுவான். அவரது தங்குமிடம் நரகமே. (அதாவது ஈசா நபியை வணங்கினால், அவர் நரகமே போவார். அவருக்கு சுவர்க்கம் தடைசெய்யப்பட்டுள்ளது)


 “நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்” என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: “இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை. (அல்குர்ஆன் : 5:72)



4.ஈசா அல்லாஹ்வின் அடியார் ஆவார்.  அவரை நபியாக ஆக்கியிருக்கிறான். மேலும் அவரை பாக்கியம் பொருந்தியவராகவும், தொழுகையை நிலைநாட்டவும், ஸகாத் கொடுக்கவும், தாய்க்கு உபகாரம் செய்யவும் அவர் கட்டளையிடப்பட்டிருக்கிறார்.  அல்லாஹ்வுக்கு பிள்ளையை ஏற்படுத்திக்கொள்ள எந்த தேவையுமில்லை. அவன் தூயவன்.
அவரை குறித்து அபிப்பிராய பேதம் கொண்டு அவரை கடவுளுக்கியவர்களுக்கு மறுமையில் கேடு தான்
.



நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான். (அல்குர்ஆன் : 19:30 மேலும் 43:59)


“இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கானவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறை வேற்ற) எனக்கு வஸீய்யத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான். (அல்குர்ஆன் : 19:31)


“என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.(அல்குர்ஆன் : 19:32)


“இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்” என்று (அக்குழந்தை) கூறியது. (அல்குர்ஆன் : 19:33)


இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்); எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்). (அல்குர்ஆன் : 19:34)


அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை; அவன் தூயவன்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், “ஆகுக!” என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது. (அல்குர்ஆன் : 19:35)


“நிச்சயமாக அல்லாஹ்வே (படைத்துப் பரிபக்குவப்படுத்தும்) என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருக்கின்றான்; ஆகையால், அவனையே நீங்கள் வணங்குங்கள்; இதுவே நேரான வழியாகும்” (என்று நபியே! நீர் கூறும்). (அல்குர்ஆன் : 19:36)


ஆனாலும், அவர்களிடையே இருந்த கூட்டத்தார் இது பற்றி(த் தங்களுக்குள்ளே) அபிப்பிராய பேதங் கொண்டனர். (சத்தியத்தை) நிராகரித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, அவர்கள் யாவரும் ஒன்று சேர்க்கப்படும் வலுப்பமான நாளில் கேடுதான்! (அல்குர்ஆன் : 19:37)


அவர்கள் நம்மிடத்தில் வரும் நாளில் எவ்வளவு தெளிவாகக் கேட்பார்கள், பார்ப்பார்கள்! எனினும் அந்த அக்கிரமக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இன்று இருக்கிறார்கள். (அல்குர்ஆன் : 19:38)


மேலும், (நபியே!) தீர்ப்பு அளிக்கப்படும் அந்த கைசேதப்படக்கூடிய நாளைக் குறித்து, நீங்கள் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! எனினும் அவர்கள் அதைப்பற்றிக் கலலைப்படாதவர்களாகவும், நம்பாதவர்களாகவும் இருக்கின்றார்கள். (அல்குர்ஆன் : 19:39)









5.அவர் ஒரு படைப்பு ஆவார். தனக்கு எப்படி மகன் பிறக்க முடியும் என அவரது தாய் கேட்டபோது, "இவ்வாறே, அல்லாஹ் நாடியதை படைக்கிறான்" என்று சொல்லப்பட்டது. ஆனால் யஹ்யா குறித்து கூறிய போது "தான் நாடியதை செய்கிறான்" என்று சொல்லப்பட்டது. காரணம் அழுத்தம் திருத்தமாக கூறுவதற்கு இவருக்கு மட்டும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.



(அச்சமயம் மர்யம்) கூறினார்: “என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?” (அதற்கு) அவன் கூறினான்: “அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் “ஆகுக” எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.” (அல்குர்ஆன் : 3:47)



6.அவர் மர்யமின் மகன். ஒரு தூதரேயன்றி வேறில்லை. அவரும் அவரது தாயாரும் உணவு உண்ணுவோராகவே இருந்து வந்தனர்.
இவர்களால் மனிதர்களுக்கு நன்மை செய்யவோ தீங்கு செய்யவோ கூட சக்தி கிடையாது.



மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை, இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர். இவருடைய தாயார் மிக்க உண்மையானவர்; இவ்விருவரும் (மற்ற மனிதர்களைப் போல்) உணவு உண்பவர்களாகவே இருந்தனர்; அவர்களுக்கு நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு எவ்வாறு தெளிவாக்கினோம் என்பதை (நபியே!) நீங்கள் கவனிப்பீராக! அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனிப்பீராக! (அல்குர்ஆன் : 5:75)


“அல்லாஹ்வையன்றி, உங்களுக்கு எந்த தீங்கையோ, நன்மையோ செய்ய அதிகாரம் இல்லாதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்?” என்று (நபியே!) நீர் கேளும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாவற்றையம்) அறிபவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 5:76)



7.இவர் அற்புதம் செய்ததெல்லாம் இறைவனது அனுமதிகொண்டேயாகும். அது அவர் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதர் என்பதற்கு ஆதாரமாகவே ஆகும்.

 


இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்:) “நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது” (என்று கூறினார்).


(அல்குர்ஆன் : 3:49 மேலும் 5:110)

சோதனைக்காக கெட்டவர்களுக்கும் இறந்தவரை உயிர்பிக்க வாய்ப்பளிப்பான். உதாரணமாக தஜ்ஜாலுக்கு இவ்வாய்ப்பை அளிப்பான்- புகாரி 1882

இங்கே இவர் இறைவனது தூதர் என்பதற்கு ஆதாரமாகவே இவை இவருக்கு வழங்கப்பட்டன



8.அவருக்கு மரணம் உண்டு. அவரும் மறுமையில் உயிர்த்தெழுப்பப்படுபவர்.


வேதமுடையவர்களில் எவரும் அவரது (ஈசாவின் ) மரணத்திற்கு  முன் அவரை  ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை; ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார்.

(அல்குர்ஆன் : 4:159)


“இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்” என்று (அக்குழந்தை) கூறியது.(அல்குர்ஆன் : 19:33)


மீள்வருகையின் பின் நாப்பது வருடங்கள் வாழ்ந்து அவர் மரணிப்பார்-அபூதாவூத் 4324



9.அவர் அல்லாஹ்வின் ஒரு வார்த்தை. அவனிடமிருந்துள்ள ஒரு ரூஹ் (உயிர்)


(மேலும், மர்யமிடம்) மலக்குகள் “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து (ஆகுக!என்ற) ஒரு வார்த்தையைக் கொண்டு உனக்கு (ஒரு மகவை அளிக்க) நன்மாராயங் கூறுகின்றான்.  அவரின் பெயர் மஸீஹ்_ மர்யமுடைய மகன் ‘ஈஸா’ என்பதாகும்,  அவர் இம்மையிலும், மறுமையிலும் மிக்க அந்தஸ்தையுடையவராகவும் (இரட்சகனுக்கு) மிக்க நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்” என்று கூறியபோது. (அல்குர்ஆன் : 3:45)


இங்கே ஒரு வார்த்தையை கொண்டு நன்மாராயம் சொல்லப்படுகிறது. வார்த்தை (கலிமா) என்பது பெண்பால் ஆகும். ஆனால் பெயரை குறிப்பிடும் போது "இஸ்முஹு"- அவரது பெயர் என ஆண்பாலில் உள்ளது. இதன்மூலம் கூறப்படுவது, "ஒரு வார்த்தையை கொண்டு ஒரு பிள்ளையை நன்மாராயம் கூறுகிறான். அவருடைய பெயர் அல்மஸீஹ் மர்யமின் மகன் ஈசா என்பதாகும்" .  


இங்கே அவர் மர்யமின் மகன் என்று சொல்வதன் மூலம், அவர் ஒரு படைப்பு மற்றும் இன்னொரு படைப்பால் ஈன்றெடுக்கப்பட்டவர் என்றும் அவருக்கு தாய் உண்டு என்றும் காட்டக்கூடியதாக உள்ளது.



வேதத்தையுடையவர்களே! உங்கள் மார்க்கத்தில், நீங்கள் அளவு கடந்து செல்லாதீர்கள், இன்னும், அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்,  நிச்சயமாக மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ், அல்லாஹ்வுடைய தூதரும், அவனுடைய வார்த்தையும்  ஆவார், அல்லாஹ், மர்யமின் பால் அதைப் போட்டான், மேலும் அவனிடமிருந்துள்ள  ஓர் உயிர் ஆவார்., ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நீங்கள் விசுவாசியுங்கள், இன்னும் (வணக்கத்திற்குரிய தெய்வங்களான அவர்கள்) மூவர் என்று கூறாதீர்கள்,  (இவ்வாறு கூறுவதை)  விட்டு விலகி விடுங்கள், (அது) உங்களுக்குத்தான் மிக்க நன்று, (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் ஒரே நாயன்தான், அவனுக்கு மகன் இருப்பதைவிட்டும் அவன் மிகப் பரிசுத்தமானவன்.  வானங்களில் உள்ளவை மற்றும் பூமியில் உள்ளவை அவனுக்கே உரியன-  பொறுப்பேற்றுக் கொள்ள அல்லாஹ் (ஒருவனே) போதுமானவன். (அல்குர்ஆன் 4:171)


இவ்வசனத்தில் கூட இறைவன் ஈசா நபியை மர்யமின் மகன் என்றே அழைக்கிறான்.


அதாவது படைப்பாகிய இவர் ஒரு தூதர். அத்தோடு இறைவன் மர்யமின்மீது போட்ட அவனது வார்த்தை. அதாவது இந்த வார்த்தை மூலமாக அவர் உண்டானதால் இறைவனுடைய வார்த்தை என்று அழைக்கப்படுகிறார்.


மேலும் அவனிடமிருந்துள்ள ஒரு ரூஹ் (உயிர்).  இறைவன் தன் தூதரான ரூஹ் எனும் ஜிப்ரீலை மர்யமிடம் அனுப்பி, அவர் மூலமாக தான் படைத்த ரூஹை மர்யமின்மீது ஊதவைத்தான். அது தான் ஈசா நபியின் ரூஹ். (19:17-19, 21:91,66:12)


இதேபோல் ஆதமாகிய முதல் மனிதருக்கோ இறைவன் தன் ரூஹிலிருந்து (உயிரிலிருந்து) நேரடியாக ஊதினான்.(15:29,38:72)


எல்லா உயிரும் அல்லாஹ்வின் படைப்பே. ஈசா நபியிற்கு இந்த விசேச நிலை காரணமாக அவனது உயிர் (ரூஹ்)  என்று அழைக்கப்படுகிறார்.

எப்படி அல்லாஹ்வின் ஒட்டகம்  (91:13) என்றும், அல்லாஹ்வின் (என்) வீடு என்று கஃபாவையும் (22:26, 2:125), ஆதமுடைய உருவத்தை இறைவனுடைய உருவம் (புகாரி 6227) என்றும் ஆதமில் ஊதப்பட்ட உயிரை "தன் உயிரிலிருந்துள்ளது" (15:29,38:72) என்றும் கூறப்படுவது போன்றே ஈசா நபியும் அல்லாஹ்வின் உயிரென அழைக்கப்படுகிறார்.


ஆனால் இவர்கள் கருதுவது போல் அல்ல. அதனால் தான் இறைவன் 4:171இன் தொடர்ச்சியாக,


"அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் விசுவாசம் கொள்ளுங்கள். (கடவுள்களான அவர்கள்) மூவர் என்று கூறாதீர்கள். விலகிக் கொள்ளுங்கள். (அதுவே) உங்களுக்கு நல்லது. அல்லாஹ் ஒரே இறைவன் தான்.அவனுக்கு மகன் இருப்பதை விட்டும் தூயவன்" என்று தொடர்கிறது.


இறைவனுக்கு மகன் கிடையாது. அவன் ஒரே இறைவன் தான் என்றும் , ஈசா நபி குறித்து அவரை கடவுள் என்றும் கடவுளது பையன் என்றும் கூறுவோரை தம் மார்க்கத்தில் வரம்பு மீறவேண்டாம் என்றும் கடவுள் மீது உண்மையை தவிர வேறெதுவும் கூற வேண்டாம் என்றும் எச்சரிக்கும் வசனத்தையே சில கிறிஸ்தவர்கள் தம் கருத்துக்கு ஆதாரமாக காட்டுவது வேடிக்கை.


காரணம், அவர் ஒரு படைப்பு-3:47, அவர் இறைவனது அடிமை -19:30,43:59 , அவரை கடவுளாக வணங்கியோருக்கு சுவர்க்கமே தடைசெய்யப்பட்டுள்ளது.-5:72, இறைவனுக்கு எந்த பையனும் கிடையாது.-4:171,19:35, இறைவன் நாடினால் ஈசாவையும் அவரது தாயையும் உலக மக்கள் அனைவரையும் அழித்துப் போட முடியும்.-5:17, அவரால் சுயமாக மக்களுக்கு நலவோ கெடுதியோ கூட ஏற்படுத்த முடியாது-5:76   என்றெல்லாம் தெளிவாக கூறும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு, தமக்கு அறிவில்லாத விசயத்தில் மூக்கை நுழைவிப்பது மடமையான செயலாகும்.




10. குர்ஆன் 9:31 பற்றி கிறிஸ்தவ பாமரர்களின் திரிபுக்கு பதில்:


 ٱتَّخَذُوٓاْ أَحۡبَارَهُمۡ وَرُهۡبَٰنَهُمۡ أَرۡبَابًا مِّن دُونِ ٱللَّهِ وَٱلۡمَسِيحَ ٱبۡنَ مَرۡيَمَ وَمَآ أُمِرُوٓاْ إِلَّا لِيَعۡبُدُوٓاْ إِلَٰهًا وَٰحِدًا لَّآ إِلَٰهَ إِلَّا هُوَ سُبۡحَٰنَهُۥ عَمَّا يُشۡرِكُونَ


(இவ்வாறே) அவர்கள் அல்லாஹ்வையன்றித் தங்கள் அறிஞர்களையும், தங்கள் துறவிகளையும்  மர்யமுடைய குமாரர் மஸீஹையும் தங்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டனர்.  இன்னும், ஒரே ஒரு இரட்சகனையே வணங்க வேணடுமென்றல்லாது (வேறு எதனையும்) அவர்கள் கட்டளையிடப்படவில்லை,  அவனையன்றி வணக்கத்திற்குரியவன் (வேறெவரும்) இல்லை, அவர்கள் இணைவைப்பவற்றைவிட்டும் அவன் மிகவும் பரிசுத்தமானவன்.

(அல்குர்ஆன் : 9:31)




இதிலே தெளிவாக கிறிஸ்தவர்கள் , தம் மார்க்க அறிஞர்களையும், தம் துறவிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக எடுத்துக்கொண்டுள்ளார்கள் என்று எச்சரிப்பதை , சரியான மொழியறிவு இன்றி அல்லாஹ்வையும் மர்யமின் மகன் மஸீஹையும் தவிர்த்து  தம் அறிஞர்களையும் தம் துறவிகளை யும் கடவுள்களாக எடுத்துக்கொண்டார்கள் என்றே வசனம் சொல்வதாக பைத்தியக்காரத்தனமான உலரியிருக்கிறார் ஒரு ஆங்கில கிறிஸ்தவர். இதை நம்பி பலர் பரப்பி திரிகிறார்கள்.


இவர்கள் கூறுவது போல் வரவேண்டுமாயின் "வல்மஸீஹிப்னி மர்யம-wal maseehi'bni maryama" என்று அரபியில் வரவேண்டும். ஆனால் அரபியில் "வல்மஸீஹப்ன மர்யம- wal maseeha'bna maryama" என்றே வந்திருக்கிறது. அதாவது "கடவுள்களாக எடுத்துக்கொண்டார்கள்" என்பதற்கு நேரடி செயற்படுபொருள்களில் ஒன்றாகவே இது வருகிறது.


அதுமட்டுமின்றி அதில் "மர்யமின் மகன்" என்று கூறி அவர் ஒரு மனிதர் மற்றும் ஒரு பெண்ணின் பையன் என்றும் தெளிவாக அவரது நிலையை குறிப்பிடுகிறதோடு,  "அல்லாஹ்வாகிய அவனை தவிர வேறு இறைவன் கிடையாது" என்றும் அதே வசனத்திலேயே உள்ளது. இதையெல்லாம் புரியாமல் சிறு குழந்தை போன்று மற்றவர் துப்பியதை விழுங்குவது நல்லதல்ல.



11.அவர் சிலுவையில் அறையப்படவுமில்லை. கொல்லப்படவுமில்லை. மாறாக அல்லாஹ் அவரை தன் பக்கம் உயர்த்திக் கொண்டான். அவரது மரணத்திற்கு முன் அவரை மறுத்து வாழும் யூதர்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்

 



இன்னும், “அல்லாஹ்வுடைய தூதர் மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹை நிச்சயமாக நாங்கள் கொலை செய்து விட்டோம்” என்று அவர்கள் கூறியதன் காரணமாகவும் (அவர்களை அல்லாஹ்   சபித்துவிட்டான்), அவரை அவர்கள் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை.  எனினும், அவர்களுக்கு (ஈஸாவின் தோற்றத்தைப் பெற்ற) ஒருவனை ஒப்பாக்கிக் காண்பிக்கப்பட்டது, இன்னும் நிச்சயமாக இவ்விஷயத்தில் கருத்துவேறுபாடு கொண்டிருக்கிறார்களே அத்தகையோர், அதுபற்றி சந்தேகத்திலேயே உள்ளனர்,  வெறும் யூகத்தைப் பின்பற்றுவதைத்தவிர, அதில் அவர்களுக்கு உண்மையான அறிவு (ஆதாரம்) கிடையாது, மேலும், உறுதியாக அவர்கள் அவரை கொலை செய்யவே இல்லை. (அல்குர்ஆன் : 4:157)


மாறாக, அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக்கொண்டான், இன்னும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:158)


வேதத்தையுடையவர்களிலிருந்து எவரும் அவர் இறப்பதற்கு முன்னதாக திட்டமாக அவரை விசுவாசிக்காமல் இருப்பதில்லை, இன்னும், மறுமைநாளில் அவர்களுக்கு அவர் பாதகமான சாட்சியாளராக இருப்பார்.


(அல்குர்ஆன் : 4:159)



12.நீதமான நீதிபதியாகவும், நேர்வழிகாட்டப்பட்ட தலைவராகவும் மீள்வருகையில் அவர் இறங்கி வருவார்.

. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! (உலக அழிவுக்குமுன்) மர்யமின் மைந்தர் (ஈசா அலை) உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கி றார். அவர் சிலுவையை உடைப்பார். பன்றியைக் கொல்வார். காப்பு (ஜிஸ்யா) வரியை வாங்க மறுப்பார். (இஸ்லாம் ஒன்றையே ஏற்பார். அந்நாளில்) வாங்கு வதற்கு ஆளில்லாத அளவுக்குச் செல்வம் கொழிக்கும். (புகாரி 2222)

பிறகு அவர் மரணிப்பார். முஸ்லிம்கள் அவருக்காக ஜனாஸா தொழுகை நடத்துவார்கள்-அபூதாவூத் 4324





வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

லூக்காவின்படி இயேசு ஏன் கடவுளல்ல

 மாற்குவின்படி இயேசு  கடவுளல்ல

லூக்காவின்படி இயேசு ஏன் கடவுளல்ல?

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



லூக்கா சுவிசேசத்தின்படி இயேசு பரிசுத்த ஆவி மூலம் மரியாளிடம் பிறந்த மனிதர். அவரை தேவன் தன் பிள்ளையாக தத்தெடுத்துக் கொண்டார்.. அவருக்கு அதிகாரங்களை கொடுத்து ஓரமாய் நின்று வேடிக்கை பார்க்கிறார் என்பதே இதன் சுருக்கம்!

லூக்கா ஏனைய சுவிசேங்களை போலல்லாமல், இயேசு செய்த அற்புதங்கள் அனைத்துமே தேவன் நிகழ்த்தியது என கூறுவதோடு, அவ்வாறே மக்கள் புரிந்து கொண்டனர் என்பதை தெளிவாக சொல்லும் சுவிசேஷ கதையே இது!




 

1.அவர் ஒரு பெண் பெற்றெடுத்த குழந்தை! ஒரு பெண் பெற்றெடுத்த குழந்தை ஒரு படைப்பே அன்றி வேறில்லை!


³¹ "இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக." (லூக்கா 1:31)




2.அவர் பெரியவராக இருப்பார். தேவனுடைய குமாரன் எனப்படுவாராம்.

கர்த்தராகிய தேவன் அவருக்கு இயேசுவின் பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை கொடுப்பாராம்!

³² "அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்." (லூக்கா 1:32)

தேவன் தான் இயேசுவுக்கு தாவீதின் சிங்காசனத்தையே கொடுக்க போகிறாராம்.. வாங்குபவர் கடவுளல்ல.. சிங்காசனத்தை கொடுப்பவரே கடவுள்




3.அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவாராம்! அவருடைய ராஜ்யத்துக்கு முடிவு இருக்காதாம்!


³³ அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான். (லூக்கா 1:33)

அதாவது இவர் ஒட்டுமொத்த மக்களுக்கும் ராஜாவாக அல்லாமல், யாக்கோபின் குடும்பத்தாரை மட்டுமே அரசாள போகிற நபர்.

அந்த ஆட்சியை கூட தேவனே கொடுப்பார்- லூக்கா 1:32





4.இயேசு தேவனுடை குமாரன் என்பது , பரிசுத்த ஆவியால் மரியாள் கர்ப்பமானதால் ஆகும் என்பதே லூக்கா பதிந்தது.

³⁴ அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.

³⁵ தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக; பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.

(லூக்கா 1:34-35)

இங்கேயும் பெண் பெற்றதால் படைப்பு என தெளிவாகிறது.





5.இயேசு தேவனின் கனி அல்ல! மரியாளின் கர்ப்பத்தின் கனி ஆவார். இதை நான் சொல்லல. பரிசுத்த ஆவியால் எலிசபத்து சொன்னார்!

⁴¹ "எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று; எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு,"

⁴² "உரத்த சத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது." (லூக்கா 1:41-42)

6.இயேசுவை எலிசபெத் தன் ஆண்டவர் என்கிறார். அதாவது மரியாளை தன் ஆண்டவரின் தாய் என்கிறார்


⁴³ என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது. (லூக்கா 1:43)

ஆண்டவர் என்பது பொதுவாக அதிகாரத்தில் இருப்போரை குறிக்க பாவிக்கப்படும்.

ஆரோன் தன் தம்பி மோசேயை தன் ஆண்டவன் என்கிறார்- எண்ணாகமம் 12:11

மேலும் இயேசுவை ஆண்டவராக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36

சோ, இது அவரை கடவுளாக்காது.

மேலும் இதில் இயேசுவை விட மரியாளே உயர்ல்தப்பட்டிருக்கிறாள்.. ஆண்டவர் தன்னிடம் வந்தார் என சொல்லாமல், ஆண்டவரின் தாய் வந்தாள் என் கூறி மரியாளையே அதிகம் சிறப்பிக்கிறது.




7.இயேசு என்பவர் தாவீதின் வம்சத்தில் அவர்களுடைய எதிரிகளிடமிருந்து தேவன் அவர்களை பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இரட்சணியக்கொம்பாம்!


⁷⁴ "தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும்படிக்கு,"

⁷⁵ தம்முடைய தாசனாகிய தாவீதின்வம்சத்திலே நமக்கு இரட்சணியக்கொம்பை ஏற்படுத்தினார்.

(லூக்கா 1:74-75)

தேவன் ஒன்றும் தாவீதுடைய வம்சத்தார் அல்ல!

வேடிக்கையாக இங்கே சொல்லப்பட்டது போல, இயேசு அவர்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்றவில்லை..




8.யோவான் கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம் பண்ணுபவனாம்

⁷⁶ "நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,"

⁷⁷ "நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய ஜனத்துக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்னாக நடந்துபோவாய்." (லூக்கா 1:76-77)


இதிலுள்ள கர்த்தர் என்பது இயேசுவை குறிக்கும் என வாதிட்டாலும், இதே போல ஏசாயா தீர்க்கதரிசி யாவே என அழைக்கப்படிருக்கிறார்.-ஏசாயா 7:10

தேவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் யாவே என அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆதி 18 & 19 32:25-30

தீர்க்கதரிசிகள் கர்த்தரின் நாமத்தில் வருவார்கள். 

தாவீது ராஜா "நான் கர்த்தரின் (யாவேயின்) நாமத்தில் உன்னிடத்தில் வருகிறேன் " என சொன்னார்- 1 சாமுவேல் 17:45


தீர்க்கதரிசி காத் கர்த்தரின் நாமத்தில் பேசினான்- 1 நாளாகமம் 21:19 

இவ்வாறே இயேசுவும் தீர்க்கதரிசி என்பதால் , கர்த்தரின் நாமத்தில் வருவதால் அவ்வாறு கூறப்படுகிறது.

இயேசு சுயமாக எதுவும் செய்துவிடவில்லை.

மாறாக தேவன் தான் இயேசு மூலமாக அற்புதம் செய்தார்- அப்போஸ்தலர் 2:22





9.இயேசு மரியாளுக்கே முதற்பேரான குமாரன். மரியாளின் குமாரன் தேவனல்ல!

 …  

⁷ "அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்."

(லூக்கா 2:7)



10.கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாவீதின் ஊரில் பிறந்தார் என தேவதூதன் மேய்ப்பர்களுக்கு சொன்னானாம்!


¹⁰ "தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்."

¹¹ இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.

(லூக்கா 2:10-11)

இங்கே கர்த்தர் என கூறப்படுவது, ராஜாக்கள் அவ்வாறு அழைக்கப்படுவார்கள்.

இயேசுவை கர்த்தராக (கர்த்தர் என்றால் ஆண்டவர் lord) , மெசியாவாக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36

அடுத்து பிறந்தவர் கடவுளல்ல! பிறக்க வைப்பவரே கடவுள்!


¹² "பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்."

."




11.மேய்ப்பர்கள் இயேசு குழந்தையை பார்த்து எல்லாவற்றுக்காகவும் தேவையே மகிமைப்படுத்தினார்கள். 

²⁰ "மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்." (லூக்கா 2:20)

அவர்கள் கூட தேவன் யார் குழந்தை யார் என அறிந்து வைத்திருந்தார்கள்.. இவர்களுக்கு தான் இன்னும் அறிவு வரவில்லை!




12.சிமியோன் என்ற தீர்க்கதரிசி இயேசுவை தேவனுடைய மெசியா என்றும், அவரை கண்டதற்காக தேவனையே ஸ்தோத்திரித்தார்.

தேவனால் ஆயத்தம் பண்ணப்பட்ட இரட்சணியமே இயேசு.. தேவனல்ல!


²⁵ "அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன்மேல் பரிசுத்தஆவி இருந்தார்."

²⁶ கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது.

²⁷ "அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாணமுறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டுவருகையில்,"

²⁸ "அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து:"

²⁹ "ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்;"

³⁰ "புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,"

³¹ தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின.

³² உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.

(லூக்கா 2:25-32)



13.இதை கேட்டு மரியாள் ஆச்சரியப்படுகிறார். தேவதூதன் நேரடியாகஜமரியாளிடம் பேசியும் , இயேசுவை குறித்து எடுத்துச் சொல்லியும் சென்ற பின்பு கூட இயேசுவை தேவன் என அவர் நம்பவில்லை.. அதனால் தான் சிமியோன் இதை சொன்னபோது ஆச்சரியப்பட்டார்.


³³ அவரைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் அவருடைய தாயாரும் ஆச்சரியப்பட்டார்கள். (லூக்கா 2:33)



14.இயேசு ஞானத்திலும் வளர்த்திலும் தேவகிருபையிலும் விருத்தியடைந்தாராம்!


⁵² "இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் ் விருத்தியடைந்தார். "(லூக்கா 2:52)

தேவனென்பவர் பூரணமானவர்.. படைப்புகள் தான் படிப்படியாக விருத்தியடைவார்கள்!








15.கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள் என ஏசாயா வில் சொன்னது யோவானை குறிக்குமாம். (லூக்கா 3:3-5)





இயேசுவை கர்த்தர் என்று லூக்கா 3:3 சொல்வது தேவனாகிய கர்த்தர் என்பதல்ல. அதனால் தான் ஏசாயா 40:3 இலுள்ள தேவன் என்பதை நீக்கிவிட்டு வெறும் கர்த்தர் என்கிறார் லூக்கா.


புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் கிரேக்க மொழியில் தான் பழைய ஏற்பாட்டை படித்தனர். அதனால் யாஹ்வே,அதோன் என்பன இரண்டையுமே குரியோஸ் என்று தான் கூறுவதால் இயேசுவுக்கு அப்லை பண்ணியுள்ளார்கள்.


இயேசு தேவனால் கர்த்தராக ஆக்கப்பட்டவர்-அப் 2:36 என்று கூறுகிறது. இதை எழுதியவர் லூக்கா என்று நம்பப்படுகிறது


இன்னொரு விதமாக புரிவதானால், இயேசுவை கர்த்தருடைய தூதன் என்பதால் கர்த்தருடைய தூதனின் வருகை கர்த்தரின் வருகையாக கூறப்படுகிறது.


ஆனாலும் இவர் தேவன் அல்ல என்பதால், ஏசாயா 40:3 இலுள்ள தேவன் எனும் சொல்லை லூக்கா நீக்கியுள்ளார்.


அதனால் தான் மலையில் ஏறி தேவனிடம் ஜெபம்  செய்தார். லூக்கா 6:12






16.யோவான் இயேசுவை குறித்து அவரது செருப்பு வாரை அவிழ்ப்பதற்கு கூட நான் பாத்திரன் அல்ல என சொன்னாராம். -லூக்கா 3:16

யோவானே ஸ்திரிகளிடம் பிறந்தவர்களில் மிகப்பெரியவன் என இயேசு சொல்கிறார்-(மத்தேயு 11:11)




 இயேசுவும் ஸ்திரீயிடம் பிறந்தவர். சோ இயேசுவின் வார்த்தைப் படி யோவானே இயேசுவிலும் பெரியவர்.


சோ அவர் கடவுளாக இயலாது



17.இயேசு ஞானஸ்நானம் பெற்று ஜெபம் செய்தார்


²¹ "ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம்பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம்பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது;"

(லூக்கா 4:21)

இயேசு யாரிடம் ஜெபம் செய்தாரோ அவரே கடவுள்.. இயேசு அல்ல!



18.பரிசுத்த ஆவி இயேசு மேல் அப்போது தான் இறங்கினார். வானத்திலிருந்து சத்தமும் டாக்ஸி நீர் என் நேசகுமாரன் என்றதாம்!

²² "பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது."

லூக்கா 3:22


ஆனால் யோவானோ கர்ப்பத்தில் இருக்கும் போதே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார்-லூக்கா 1:15

மேலும் தேவனது குமாரன் என்பது புதிதான ஒன்று அல்ல.

இஸ்ரேலை (யாக்கோபின் பிள்ளைகளை) தன் குமாரன் என தேவன் சொன்னதாக யாத்திராகமம் 4:22, ஓசியா 11:1-2 இல் எழுதப்பட்டுள்ளது


சொலமோனை குறித்து அவன் எனக்கு குமாரனாக இருப்பான், நான் அவனுக்கு பிதாவாக இருப்பேன் என தாவீதிடம் சொன்னதாக எழுதப்பட்டுள்ளது- 2 சாமுவேல் 7:14-16



19.அவர் யோசேப்பின் குமாரன் என்று எண்ணப்பட்டாராம். (எண்ணப்பட்டார் என்பது பழைய பிரதிகளில் இல்லை.. லூக்கா அவரை யோசேப்பின் மகன் என கருதி அதற்கேற்ப ஆதாம் வரை வம்ச வரலாற்றை எழுதியுள்ளார்)

²³ அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்;

(லூக்கா 3:23)




20.இயேசு பிசாசினால் சோதிக்கப்பட்டார். தேவனை சோதிக்க இயலாது!

உணவு சாப்பிடாததால் அவருக்கு பசி ஏற்பட்டுவிட்டது.

² நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று.

(லூக்கா 4:2)

உணவு சாப்பிட்டு மலம் கழித்து வாழ்பவர் பலவீனமான படைப்பே அன்றி வேறில்லை.

 …  



21.இயேசு அவர் மீது இறங்கிய ஆவியானவருடைய பலத்தினால் தான் செய்யவேண்டியவற்றை செய்தார்.

¹⁴ பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று. (லூக்கா 4:14)

 …  



22.இயேசு சுவிசேஷத்தை பிரசங்கிப்பதற்காக அபிஷேகம் பண்ணப்பட்டவரே. தேவனால் அற்புதங்களும் அனுப்பப்பட்டவரே இயேசு. தேவன் அல்ல!


¹⁸ "கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,"

¹⁹ "கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு,"

²⁰ "வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெப ஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது." (லூக்கா 4:18-20)




 23.தன்னை ஒரு தீர்க்கதரிசி என்றே இயேசு கருதினார்.. தேவன் என்று அல்ல!

²⁴ ஆனாலும் தீர்க்கதரிசி ஒருவனும் தன் ஊரிலே அங்கீகரிக்கப்படமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.(லூக்கா 4:24)



24.அசுத்த ஆவி ஒன்று இயேசுவை தேவனுடைய பரிசுத்தர் என சொன்னதால்! 

 …  

³³ ஜெப ஆலயத்திலே அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு மனுஷன் இருந்தான்.

³⁴ "அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று உரத்த சத்தமிட்டான்."

(லூக்கா 4:33-34)

இதேபோல் ஆரோனும் தேவனுடைய பரிசுத்தர் என பைபிள் சொல்கிறது. சங்கீதம் 106:16

இதில் தெய்வீகம் இல்லை!

இயேசுவை பரிசுத்தம் பண்ணியதே தேவன் தான் என இயேசு சொன்னதாக யோவான் 10:36 இல் எழுதப்பட்டுள்ளது!

அவரை பரிசுத்தம் பண்ணியவர் தான் தேவன்.. இயேசு அல்ல!



25.இயேசு பிசாசை போ என அதட்டியதும் அது ஓடிவிட்டதாம்- லூக்கா 4:35

இயேசு பேயோட்டியது தேவனது ஆவியால் என்று அவரே சொல்கிறார். -மத்தேயு 12:28.

அந்த ஆவியே ஞானஸ்நானத்தின்போதே அவர்மீது இறங்கியது-லூக்கா 3:22

விசுவாசமிருந்தால் மலையை பார்த்து கடலில் போய் விழச்சொன்னாலும் அது நிகழுமாம்! மத்தேயு 21:21

சோ இயேசுவுக்கு விசுவாசம் இருந்ததால் இது முடிந்தது.

மேலும் இயேசு மூலம் அற்புதம் செய்தது தேவன் தான்-அப்போஸ்தலர் 2:22



26.சீமோனின் மாமியாருக்கு காய்ச்சல் நீங்க கட்டளையிட்டார் அது நீங்கியது. நோயாளிகளை சுகப்படுத்தினார்.பேய்களை ஓட்டினார்- லூக்கா 4:38-41

இதற்கு குறிப்பு 25இலும் பதில் கொடுக்கப்பட்டு விட்டது.


27.பிசாசுகள் இயேசுவை தேவனுடைய குமாரன் என சத்தமிட்டனவாம்! லூக்கா 4:41

 …இதற்கும் பதில் குறிப்பு 18 போதுமானது.



28.இயேசு தேவனுடைய ராஜ்யத்தை குறித்து பிரசங்கிக்க அனுப்பப்பட்டவரே. ஆவார்.

⁴³ "அவரோ அவர்களை நோக்கி: நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன் என்றார்." (லூக்கா 4:43)

அனுப்பப்பட்டவர் கடவுளல்ல! இயேசுவை அனுப்பியவரே கடவுள்.



29.இயேசு குஷ்டரோகியை சுகப்படுத்தினாராம்!

¹² "பின்பு அவர் ஒரு பட்டணத்தில் இருக்கையில், குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனுஷன் இயேசுவைக் கண்டு, முகங்குப்புற விழுந்து: ஆண்டவரே, உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மாலே ஆகும் என்று அவரை வேண்டிக்கொண்டான்."

¹³ "அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று."

(லூக்கா 5:12-13)

இயேசு மூலம் அற்புதம் செய்தது தேவன் தான்-அப்போஸ்தலர் 2:22

மேலும் இயேசுவை ஆண்டவராக மெசியாவாக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36.

விசுவாசம் இருந்ததால் மலையை பார்த்து கடலில் போய் விழச்சொன்னாலும் அது நிகழுமாம்-மத்தேயு 21:21..

இயேசுவுக்கு விசுவாசம் இருந்ததால் இது முடிந்தது.


 

30.இயேசு தனித்து போய் ஜெபம் பண்ணினார்.

¹⁶ "அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்."

லூக்கா 5:16

இயேசு யாரிடம் ஜெபம் செய்தாரோ அவரே கடவுள்.. இயேசு அல்ல!



31.திமிர்வாதக்காரனை நோக்கி உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார் -லூக்கா 5:20

பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்றாராம் லூக்கா 5:24


இதைக்கண்ட மக்கள் தேவனை மகிமைப்படுதினார்கள்.லூக்கா 5:26

மை கமெண்ட்: 


*இயேசு தன்னை மனுஷகுமாரன் என சொல்லி , தான் ஒரு மனுஷனே ஆவேன். கடவுள் அல்ல என்கிறார்.




*.இதை கண்ட மக்கள் கூட, இவரை தேவன் என நம்பவில்லை.. இது போன்ற மனுசனுக்கு அதிகாரத்தை கொடுத்ததே தேவன் தான் என்பதால், தேவனை மகிமைப்படுத்தினார்கள்.



*இயேசுவுக்கு எல்லா பாவத்தையும் மன்னிக்க பூமியில் அதிகாரமில்லை.. பாரிசவாதத்துக்கு காரணமான பாவம் (??), அதை தான் மன்னிக்க முடிந்தது.


ஆனால் இயேசுவை கொல்ல பார்த்த பாவத்தை இயேசுவால் மன்னிக்க முடியல.. பிதாவிடம் மன்னிக்க வேண்டினார் என எழுதப்பட்டுள்ளது.(லூக்கா 23:34



*தீர்க்கதரிசிகளுக்கு பாவத்தை மன்னிக்க இயலும் என்பதே பைபிள் கூறுவது. அதனால் தான் சவுல் தன் பாவத்தை மன்னிக்க சாமுவேல் தீர்க்கதரிசியிடம் வேண்டினார். 1 சாமுவேல் 15:25

இயேசு தீர்க்கதரிசி என்பதால் இது முடிந்தது. அது கூட தேவன் கொடுத்ததே.



*இயேசுவின் கூற்றுப்படி, பரிசுத்த ஆவியை பெற்றவர்களுக்கு பாவத்தை மன்னிக்க இயலுமாம். சீடர்களுக்கு பரிசுத்த ஆவி வழங்கப்பட்ட பின், 


"“"எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்."”

  — John 20:23 (TBSI)


சோ, பரிசுத்த ஆவி வழங்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் அதிகாரமாக இது பார்க்கப்படுகிறது.


*இயேசுவுக்கு ஆதிமுதல் பரிசுத்த ஆவி இருக்கவில்லை.. மாறாக ஞானஸ்நானம் பண்ணிய பின்னே பரிசுத்த ஆவி வழங்கப்பட்டது.(லூக்கா 3:21-22


*பரிசுத்த ஆவி வழங்கப்பட்ட பின்பு கூட, இயேசு பாவம் செய்வோரை மன்னிப்பவராக இல்லாமல், அவர்களுக்கு பிதாவிடம் பரிந்து பேசுபவராகவே உள்ளார் என யோவான் எழுதுகிறார். 1 யோவான் 2:1


சோ, இதுவெல்லாம் இயேசு என்ற மனிதனை கடவுளாக்காது.



32.பரிசேயர் நினைத்ததை இயேசு அறிந்துகொண்டாராம்-லூக்கா 5:21-22

மை கமெண்ட்:

பைபிள் படி தீர்க்கதரிசிகளுக்கு தேவன் வெளிப்படுத்தி கொடுப்பதால், அறிந்திருப்பார்கள்.


*அனனியா என்பவன் தன் சொத்துக்களை விற்று சிலதை தனக்கு வைத்துக்கொண்டு, சீடர்களிடம் மற்றதை கொடுக்கிறான். பேதுரு இதை அறிந்திருந்தான் என கூறப்படுகிறது.

அப்போஸ்தலர் 5:1-3



*தீர்க்கதரிசிகள் மறைவான விடயங்களை (தேவன் வெளிப்படுத்தி கொடுப்பதால்) அறிந்திருப்பார்கள் என்பதே அக்கால மக்களின் நம்பிக்கையும்கூட. 


"இவன் தீர்க்கதரிசியாக இருந்தால், தம்மை தொடுகிற ஸ்திரீ இன்னாள் என்றும் இப்படிப்பட்டவள் என்றும் அறிந்திருப்பார்"-லூக்கா 7:39


* கேயாசி நாகமானிடம் செய்த செயல்களை பார்க்காமலேயே எலீஷா அறிந்திருந்தான் என கூறப்படுகிறது. 2 இராஜாக்கள் 5:19-26


சோ, தீர்க்கதரிசி இப்படி இருப்பதால் தெய்வீகமெல்லாம் இல்லை!!





33.மனுஷகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவர் என சொன்னாராம்- லூக்கா 6:5


-முதலாவது ஓய்வு நாள் மனிதனுக்காக உண்டாக்கப்பட்ட து- மாற்கு 3:27


-இயேசு மனுச குமாரன். மனுசகுமாரன் ஒரு மனிதனே.


-இயேசுவை ஆண்டவராக தேவனே ஆக்கினார்- அப்போஸ்தலர் 2:36


இயேசுவை ஆண்டவராக ஆக்கியவரே கடவுள். இயேசு வல்ல!


34.சூம்பின கையுடையவனை சுகப்படுத்தினார்- லூக்கா 6:6-8

இயேசு மூலம் அற்புதம் செய்தது தேவன் தான்-அப்போஸ்தலர் 2:22.



 35.மலையில் ஏறி இரவு முழுவதும் தேவனிடம் ஜெபம் செய்தார் இயேசு

¹² "அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்."

(லூக்கா 6:12)

இயேசு யாரிடம் ஜெபம் செய்தாரோ அவரே கடவுள். இயேசு அல்ல!!





36.இயேசு மரித்துப் போன ஒரு பையனை உயிர்ப்பித்தாராம்.

இதை கண்ட மக்கள் கூட இயேசுவை மகா தீர்க்கதரிசி என்று கூறியதோடு தேவனை தான் மகிமைப்படுத்தினார்கள்.



¹² "அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள்."

¹³ "கர்த்தர் அவளைப் பார்த்து, அவள்மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி,"

¹⁴ "கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்."

¹⁵ "மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்."

¹⁶ "எல்லாரும் பயமடைந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்." (லூக்கா 7:12-16)

தேவன் தீர்க்கதரிசி மூலம் அற்புதம் செய்வார் என யூதர்கள் அறிந்திருந்ததாலே இவ்வாறு சொன்னார்கள்.

இயேசு மூலம் அற்புதம் செய்தது தேவன் தான்-அப்போஸ்தலர் 2:22



37.தேவன் மக்களை சந்தித்தார் என மக்கள் ஏன் சொன்னார்கள்?


¹⁶ "எல்லாரும் பயமடைந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்." (லூக்கா 7:12-16)

லூக்கா 7:16

தேவன் தீர்க்கதரிசிகளை அனுப்பி அற்புதங்கள் செய்வதையே தேவன் மக்களை சந்தித்தார் என கூறப்படுகிறது.

மோசேயும் ஆரோனும் இஸ்ரேலியர் மத்தியில் அற்புதம் செய்ததால், "கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை சந்தித்தார்" என மக்கள் சொன்னதாக யாத்திராகமம் 4:31 கூறுகிறது.

இது போல் பல வசனங்களை பழைய ஏற்பாட்டில் காணலாம்! அனைத்தும் குறிப்பிட்டால் பதிவு இதைவிட நீண்டு விடும் என்பதால் தவிர்க்கிறேன்!

சோ, இதில் இயேசு அவர்களுக்கு தெய்வீகம் என வாதிட எந்த முகாந்திரமும் இல்லை!!!




38.இயேசு தேவனால் அனுப்பப்பட்டவரே. அவருக்கு முன்பாக இயேசுவின் வழியை ஆயத்தம் பண்ண யோவான் அனுப்பப்பட்டாராம்.

.

²⁷ "இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான்." லூக்கா 7:27

அனுப்பப்பட்ட இயேசு கடவுளல்ல!! அவரை அனுப்பியவரே கடவுள்!



39.யோவான் இயேசுவை விட பெரிய தீர்க்கதரிசி

²⁸ "ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப்பார்க்கிலும் பெரிய தீர்க்கதரிசி ஒருவனுமில்லை; ஆகிலும், தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்."-லூக்கா 7:28

இயேசுவும் ஸ்திரீயிடம் பிறந்தவர்.


 …  



40.தேவனுடைய வசனத்தை கேட்டு அதன்படி செய்கிறவர்கள் இயேசுவுக்கு தாயும் சகோதரர்களும் ஆவார்களாம். லூக்கா 8:21

தேவனுக்கு தாயும் சகோதரருமாக மனிதர்கள் ஆக முடியாதே...


41.படகு ஓடும்போது இயேசுவுக்கு நித்திரை போய்விட்டது-லூக்கா 8:23

தூங்குபவர் கடவுளல்லவே.. பலவீனமான மனிதனுக்கு தான் தூக்கம் வரும்.



42.இயேசு காற்றை அதட்டினாராம்.. உடனே அமைதி ஏற்பட்டு விட்டதாம்!


²³ "படவு ஓடுகையில் அவர் நித்திரையாயிருந்தார். அப்பொழுது கடலிலே சுழல் காற்றுண்டானதால், அவர்கள் மோசமடையத்தக்கதாய்ப் படவு ஜலத்தினால் நிறைந்தது."

²⁴ "அவர்கள் அவரிடத்தில் வந்து, ஐயரே, ஐயரே, மடிந்து போகிறோம் என்று அவரை எழுப்பினார்கள்; அவர் எழுந்து, காற்றையும் ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டினார்; உடனே அவைகள் நின்றுபோய்,, அமைதலுண்டாயிற்று."

²⁵ "அவர் அவர்களை நோக்கி: உங்கள் விசுவாசம் எங்கே என்றார். அவர்கள் பயந்து ஆச்சரியப்பட்டு: இவர் யாரோ, காற்றுக்கும் ஜலத்துக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்."(லூக்கா 8:23-25)

சீடர்கள் இங்கே பயப்பட காரணம் விசுவாசம் இல்லாமை என 8:25இல் கூறுகிறார்.

கடுகளவு விசுவாசம் இருந்தால் காட்டு அத்தி மரத்தை கடலில் போய் போட்டுக்கொள்ள சொன்னாலும் அப்படியே ஆகுமாம்-லூக்கா 17:6

இயேசுவுக்கு விசுவாசம் இருந்ததால் இது முடிந்தது.

இயேசு மூலம் அற்புதம் செய்தது தேவன் தான்-அப்போஸ்தலர் 2:22




43.பிசாசுக்கூட்டத்தை பன்றிக்கூட்டத்தில் அனுப்பிய பின், பிசாசுபிடித்திருந்தவனை சுகமாக்கியது தேவன் தான் என இயேசுவே சொல்கிறார்.


 …  

³⁸ பிசாசுகள் நீங்கின மனுஷன் அவரோடேகூட இருக்கும்படி உத்தரவு கேட்டான்.

³⁹ "இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் பிரசித்தப்படுத்தினான்."(லூக்கா 8:38-39)

அதாவது "தேவன் உனக்கு செய்தவை கையெல்லாம் அறிவி" 8:39 அறு சொன்னார்.

ஏனெனில் இயேசு மூலம் அற்புதம் செய்தது தேவன் தான்-அப்போஸ்தலர் 2:22




44. 12 வருடம் நோயுள்ள பெண் இயேசுவை தொட்டதும் அவளது நோய் நீங்கி விட்டது.

ஆனால் இயேசுவுக்கு யார் அவரை தொட்டார் என தெரியவில்லை! தன்னிடமிருந்து வல்லமை புறப்பட்டதை உணர்ந்தார். ஆனால் யாரென அறிய கேட்கிறார். (லூக்கா 8:46)

⁴³ "அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரீ,"

⁴⁴ "அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று."

⁴⁵ "அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லாரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனேகூட இருந்தவர்களும்: ஐயரே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள்."

⁴⁶ அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார்.

⁴⁷ "அப்பொழுது அந்த ஸ்திரீ தான் மறைந்திருக்கவில்லையென்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தான் சொஸ்தமானதையும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள்."

⁴⁸ "அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்."(லூக்கா 8:43-48)

தொட்டது யாரென அறியாதவர் அறிவில் குறைவுள்ளவர்.

அதுமட்டுமின்றி இயேசு மூலம் அற்புதம் செய்தது தேவன் தான்-அப்போஸ்தலர் 2:22



 


45.இயேசு சீடர்களுடன் சேர்ந்து ஜெபம் செய்துகொண்டிருந்தார்.(லூக்கா 9:18)

 இயேசுவை யூதர்கள் யாரும் தேவனென நம்பவில்லை-லூக்கா 9:19

¹⁸ "பின்பு அவர் தமது சீஷரோடேகூடத் தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், அவர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்."

¹⁹ "அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்." (லூக்கா 9:18-19)


46.சீடர்கள் கூட இயேசுவை தேவனுடைய கிறிஸ்து என்றே நம்பினர். தேவன் என நம்பவுமில்லை

²⁰ அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் தேவனுடைய கிறிஸ்து என்றான்.

²¹ அப்பொழுது அவர்கள் அதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார்.(லூக்கா 9:20-21)



 47.இயேசு தம் மகிமையுடனும் பிதாவுடைய மகிமையுடனும் தேவதூதரின்ஸமகிமையுடனும் வருவாராம்!


²⁶ "என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்."(லூக்கா 9:26)

இயேசுவை தேவனால் தான் மகிமைப்படுத்த இயலும். அதனால் தேவனிடம் தன்னை மகிமைப்படுத்த வேண்டுகிறார்-யோவான் 17:2




 48.மீண்டும் இயேசு ஜெபம் பண்ண மலைக்கு ஏறினார்.

²⁸ "இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டுநாளானபின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார்."

²⁹ "அவர் ஜெபம்பண்ணுகையில் அவருடைய முகரூபம் மாறிற்று, அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது." லூக்கா 9:28-29

இயேசு யாரிடம் ஜெபம் செய்தாரோ அவரே கடவுள்.




49.பொல்லாத வேறொரு ஆவியை சீடர்களால் விரட்ட முடியாமல் போய்விட்டது. காரணம் அவர்களுக்கு விசுவாசம் இல்லை-லூக்கா 9:39-41

பிறகு இயேசு அதை விரட்டினார். அப்போது மக்கள் தேவனுடைய மகத்துவத்தை குறித்து பிரம்மித்தார்கள்-லூக்கா 9:42-43

காரணம் தேவன் தான் இயேசு மூலம் அற்புதம் செய்தார் - அப்போஸ்தலர் 2:22



³⁹ "ஒரு ஆவி அவனைப் பிடிக்கிறது. அப்பொழுது அலறுகிறான், அது அவனை நுரைதள்ள அலைக்கழித்து, அவனைக் கசக்கினபின்பும், அவனை விட்டு நீங்குவது அரிதாயிருக்கிறது."

⁴⁰ "அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரை வேண்டிக்கொண்டேன், அவர்களால் கூடாமற்போயிற்று என்றான்."

⁴¹ "இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார்."

⁴² "அவன் சமீபித்துவருகையில், பிசாசு அவனைக் கீழே தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்த ஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார்."

⁴³ அப்பொழுது எல்லாரும் தேவனுடைய மகத்துவத்தைக்குறித்துப் பிரமித்தார்கள். இயேசு செய்த யாவையுங்குறித்து அனைவரும் ஆச்சரியப்படுகையில் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: (லூக்கா 9:39-43)




50.சிறுபிள்ளைகளை இயேசுவுக்காக ஏற்றுக்கொள்பவன் இயேசுவை ஏற்றுக்கொள்பவன். இயேசுவை ஏற்றுக்கொள்பவன் அவரை அனுப்பியவரை ஏற்றுக்கொண்டவன்.


⁴⁸ அவர்களை நோக்கி: இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; உங்களெல்லாருக்குள்ளும் எவன் சிறியவனாயிருக்கிறானோ அவனே பெரியவனாயிருப்பான் என்றார். லூக்கா 9:48

இதன் மூலம் இயேசுவை அனுப்பி வைத்த பெரியவர் இருக்கிறார் என தெளிவாகிறது.



51.இயேசுவை பின்பற்றாத ஒருவன் இயேசுவின் நாமத்தினால் பிசாசுகளை விர்டினானாம்!

⁴⁹ "அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களுடனேகூட உம்மைப் பின்பற்றாதவனானபடியால், அவனைத் தடுத்தோம் என்றான்."

⁵⁰ அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான் என்றார். (லூக்கா 9:49-50)


இயேசு பிசாசுகளை தேவனுடைய விரலினால் விரட்டினாராம்.லூக்கா 11:20





52.சீடரை அசட்டை பண்ணுபவன் இயேசுவை அசட்டை பண்ணுபவன். இயேசுவை அசட்டை பண்ணுபவன் அவரை அனுப்பினவரை அசட்டை பண்ணுபவன்

¹⁶ "சீஷரை நோக்கி: உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான், உங்களை அசட்டைபண்ணுகிறவன் என்னை அசட்டைபண்ணுகிறான், என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைப்பண்ணுகிறான் என்றார்."லூக்கா 10:16

மீண்டும் இயேசுவை அனுப்பிய பெரியவர் இருக்கிறார் என தெளிவாகிறது.


 


53.இயேசு சீடர்களுக்கு அதிகாரம் கொடுத்தாராம்.

¹⁹ "இதோ, சர்ப்பங்களையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகலவல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது." (லூக்கா 10:19)

இயேசுவும் அதிகாரம் கொடுக்கப்பட்டவரே- மத்தேயு 28:18

அதேபோல் சாத்தானும் ராஜ்யங்களின் மீது அதிகாரம் ஒப்புக்கொடுத்தார் பட்டுள்ளது. அதை அவன் விரும்பியவனுக்கு கொடுக்க இயலுமாம்- லூக்கா 4:6-7


சோ இதை வைத்து தெய்வீகம் உண்டு என கூற முடியாது.

.



54.பிதா தான் வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவர்-

²¹ "அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது."

லூக்கா 10:21


இயேசுவை ஆண்டவராக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36



55.இயேசுவுக்கு பிதாவினால் சகலதும் ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளதாம்

²² "சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனுந்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று, அறியான் என்றார்."லூக்கா 10:22.

ஒப்புக்கொடுத்தவரே கடவுள்.. கொடுக்கப்பட்டவர் அல்ல!

அதேபோல் சாத்தானும் ராஜ்யங்களின் மீது அதிகாரம் ஒப்புக்கொடுக்கபட்டுள்ளதாம்- லூக்கா 4:6




56. இயேசு மீண்டும் ஜெபம் செய்கிறார்

 சீடர்களுக்கு பிதாவிடம் ஜெபம் செய்யுமாறு கற்றுக்கொடுத்தார்

¹ "அவர் ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீஷரில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம்பண்ணப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்குப் போதிக்கவேண்டும் என்றான்."

² "அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக;"

(லூக்கா 11:1-2)

இதன் மூலம் இயேசு கடவுளல்ல என்பதை இயேசுவே நம்பவில்லை என தெளிவாக புரிகிறது




 57.இயேசு தேவனுடைய விரலினால் பிசாசுகளை விர்டினாராம்

¹⁹ "நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள்."

²⁰ "நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே."

லூக்கா 11:19-20

தேவன் இவரல்ல!



 


58.இயேசு கர்ப்பத்தில் சுமத்தப்பட்டு முலைப்பால் குடித்து வளர்ந்தவர்.. தேவனுடைய வார்த்தையை கேட்டு நடப்போரே இயேசுவை சுமந்த கர்ப்பத்தைவிடவும் அவர் பாலுண்ட முலைகளைவிடவும் பாக்கியவான்கள்

²⁷ "அவர் இவைகளைச் சொல்லுகையில், ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்று சத்தமிட்டுச் சொன்னாள்."

²⁸ "அதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்."

லூக்கா 11:27-28

இதன் மூலம் இயேசு பலவீனமாக படைப்பு என தெளிவாகிறது. தேவன் அல்ல!.




59.தேவனுக்கு பயப்படுமாறு இயேசு போதித்தார்.இயேசுவுக்கு சீடர்கள் சிநேகிதர்கள் என்பதால் அவர்கள் அவருக்கு பயப்பட தேவையில்லை.. ஆனால் தேவனுக்கு பயப்பட வேண்டும்.


⁴ "என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள்."

⁵ "நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலேதள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."

லூக்கா 12:4-5



60. இயேசு பரிசுத்த ஆவியிலும் தாழ்ந்தவர்.. ஆவியை திட்டினால் மன்னிப்பில்லை.. ஆனால் இயேசுவை திட்டினால் மன்னிப்பு கிடைக்கலாம்

¹⁰ எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான விசேஷத்தைச் சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; பரிசுத்த ஆவிக்கு விரோதமாய்த் தூஷணஞ்சொல்லுகிறவனுக்கோ மன்னிக்கப்படுவதில்லை. லூக்கா 12:10




.61.இயேசு முதுகுவளைந்த பெண்ணை சுகப்படுத்தியபோது கூட அந்த பெண்ணும் தேவனை தான் மகிமைப்படுத்தினாள்- லூக்கா 13:11-13


¹¹ அப்பொழுது பதினெட்டுவருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக்கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்.

¹² "இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி,"

¹³ "அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்." லூக்கா 13:11-13

காரணம் அவளுக்கு தெரியும்.. இயேசு மூலம் தேவன் தான் அற்புதம் செய்தார்-அப்போஸ்தலர் 2:22






62.குஷ்டரோகிகள் பத்து பேரை சுகப்படுத்தினாராம். சுகப்படுத்தப்பட்டவர்களில் ஒருவன் மட்டுமே திரும்பி வந்தான். அவனும் தேவனையே மகிமைப்பஞுத்தினான்- லூக்கா 17:15



¹² "அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, குஷ்டரோகமுள்ள மனுஷர் பத்துப்பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று:"

¹³ "இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள்."

¹⁴ "அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள்."

¹⁵ "அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி," 

லூக்கா 17:12-15



63.இயேசுவிடம் முகங்குப்புற விழுந்தானாம் அவன்

¹⁶ "அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான்."லூக்கா 17:16

தீர்க்கதரிசிகள் பாதத்தில் விழுந்து வணங்கும் வழக்கம் அவர்களிடம் இருந்தது. (1 சாமுவேல் 28:14)

ராஜாவை வணங்குவது அதைவிட அதிகமாக உள்ளது. உதாரணமாக 1 நாளாகமம் 29:20



64.ஒருவன் இயேசுவை நல்ல போதகரே என கூப்பிடுகிறார்.. உடனே இயேசு என்னை ஏன் நல்லவன் என்கிறாய் என கேட்டு , தேவன் ஒருவனை தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே என கூறி தனக்கு தெய்வீகம் இல்லை என நிரூபித்தார்.

 …  

¹⁸ "அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்."

¹⁹ அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்லுவானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.

லூக்கா 18:18-19



65.இயேசு ஒரு குருடனை சுகப்படுத்தியபோது , அவனும் தேவனையே மகிமைப்படுத்தினான். மக்களும் தேவனையே மகிமைப்படுத்தினார்கள்

 

⁴¹ "நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்."

⁴² "இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்."

⁴³ "உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்சென்றான். ஜனங்களெல்லாரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள். "

(லூக்கா 18:41-43)

அவர்களெல்லாரும் இயேசுவை தேவனல்ல என அறிந்திருந்தனர்.

இயேசு மூலம் தேவன் தான் அற்புதம் செய்தார்- அப்போஸ்தலர் 2:22

..




66.இயேசு கர்த்தருடைய நாமத்தில் வந்தார் . அதற்காக மக்கள் தேவனை தான் புகழ்ந்தார்கள்

³⁷ "அவர் ஒலிவமலையின் அடிவாரத்துக்குச் சமீபமாய் வருகையில் திரளான கூட்டமாகிய சீஷரெல்லாரும் தாங்கள் கண்ட சகல அற்புதங்களையுங்குறித்துச் சந்தோஷப்பட்டு,"

³⁸ "கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள்." லூக்கா 19:37-38

கர்த்தருடைய நாமத்தில் தான் தாவீதும் வந்ததாக வேறொரு ராஜாவிடம் சொன்னார்- 1 சாமுவோல் 17:45

சோ இதில் தெய்வீகம் இல்லை!!

மக்களும் தேவனை தான் புகழ்ந்தனர்.



 67.இயேசு தேவனுடைய மார்க்கத்தை போதிப்பவர்



²¹ "அவர்கள் வந்து: போதகரே, நீர் நிதானமாய்ப் பேசி உபதேசிக்கிறீரென்றும், முகதாட்சணியமில்லாமல் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீரென்றும் அறிந்திருக்கிறோம்."

லூக்கா 20:21



 …  

.68. கிறிஸ்த்து தாவீதின் குமாரன் என எப்படி சொல்லலாம்? காரணம் தாவீது அவரை ஆண்டவர் என சொன்னாரே என்கிறார்



⁴¹ அவர் அவர்களை நோக்கி: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று எப்படிச் சொல்லுகிறார்கள்?

⁴² "நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று,"

⁴³ கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று தாவீது தானே சங்கீத புஸ்தகத்தில் சொல்லுகிறானே.

⁴⁴ "தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்."

முதலில் சங்கீதம் 110:1 தாவீது மெசியாவை பற்றி பாடியதல்ல.. தாவீதை பற்றி பாடகர் பாடியது ஆகும்.


ஒரு பேச்சுக்கு மெசியாவை குறித்து தாவீது பாடியிருந்தால், மெசியா தாவீதின் குமாரனில்லை என ஆகிவிடுவாரா?




ஆரோன் தன் தம்பியான மோசேயை ஆண்டவன் என சொல்லவில்லையா?? யாத்திராகமம் 32:22


அண்ணன் தன் தம்பியை ஆண்டவனே என கூறியிருக்க முடியுமாயின், தாவீதை விட பெரிய ராஜாவான மெசியாவை தாவீது அப்படி கூறுவதில் ஆச்சரியம் இல்லையே..




இதில் இயேசு சிறு புரிதல் குறைபாட்டை விட்டுள்ளார். இறைவனுக்கு இப்படி நிகழாது. (இது மத்தேயுவிலும் இடம்பெற்றுள்ளது.. நான் அதை மத்தேயு பற்றிய ஆக்கத்தில் குறிப்பிடவில்லை




69.ஆலயத்தின் ஒரு கல்லின் மீது மறு கல் இல்லாதவாறு இடிபட்டு போகும் என இயேசு முன்னறிவித்தார்.


⁶ அவர்: நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார்.

லூக்கா 21:6


ஆனால் இன்றுவரை மேற்கு சுவர் இருந்துகொண்டே உள்ளது.. 




70. மனுசகுமாரன் மிகுந்த வல்லமையோடு மேகத்தில் வருவாராம்!

²⁷ அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.

லூக்கா 21:27

இங்கே கூட தன்னை மனுஷகுமாரன் என கூறி தெய்வீகம் இல்லை என நிரூபித்தார்.




71.தேவனுடைய ராஜ்யத்தில் கூட இயேசு அப்பம் சாப்பிட்டு திராட்சை பழரசம் குடிப்பவராகவே உள்ளார்.

¹⁶ "தேவனுடைய ராஜ்யத்திலே இது நிறைவேறுமளவும் நான் இனி இதைப் புசிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,"

¹⁷ "அவர் பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி: நீங்கள் இதை வாங்கி, உங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொள்ளுங்கள்;"

¹⁸ தேவனுடைய ராஜ்யம் வருமளவும் நான் திராட்சப்பழரசத்தைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

லூக்கா 22:16-18

அப்போது கூட அவர் மனிதராக தான் இருப்பார்.. தேவனாக அல்ல



72.இயேசுஸசீமோனுக்காக வேண்டிக்கொண்டாராம்.

 …  

³¹ "பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்."

³² நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்.லூக்கா 22:31-32

இயேசு யாரிடம் வேண்டினாரோ அவரே கடவுள்..





73.இயேசு தேவனிடம் தன்னை காப்பாற்ற சித்தமிருந்தால் காப்பாற்றுமாறு ஜெபம் பண்ணினார்.


 …  

⁴¹ "அவர்களை விட்டுக் கல்லெறி தூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு:"

⁴² "பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்."

லூக்கா 22:41-42

இயேசு யாரிடம் ஜெபம் செய்தாரோ அவரே கடவுள்.. இயேசு அல்ல




74.இயேசுவை வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி அவரை பலப்படுத்தினாராம்.

⁴³ "அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்." லூக்கா 22:43

தேவதூதனால் பலப்படுத்தப்பட காரணம் அவர் தேவனல்ல.. தேவதூதனிலும் வல்லமையால் தாழ்ந்தவர் என்பதால் தான்!!



75 அவர் மிகவும் பயந்தாராம்.ஊக்கத்தோடே ஜெபம் செய்தாராம்.

⁴⁴ "அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது."

லூக்கா 22:44

அவர் பலவீனமான உணர்வுள்ள மனிதரேயன்றி கடவுளல்ல..




 76.இயேசு தேவனது வலது பக்கத்தில் வீற்றிருப்பாராம்.

⁶⁹ இதுமுதல் மனுஷகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பார் என்றார்.லூக்கா 22:69

சர்வ வல்லமையுள்ள தேவனாக இவர் இல்லை.. மாறாக அவருக்கு வலது பக்கத்தில் வீற்றிருப்பாராம்.. இது கூட அவர் தேவனல்ல என்பதற்கு ஆதாரம்.



77.இயேசு அவரை தேவனுடைய குமாரன் என்றாராம்

⁷⁰ "அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார்."

லூக்கா 22:70

இயேசு தன்னை தேவன் பெற்றெடுத்த பிள்ளை என சொல்லவில்லை .. மாறாக பழைய ஏற்பாட்டில் உள்ளது போல் தான் சொல்லியிருக்கிறார்.

இதை ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன்.




77.தன்னை கொடுமைப்படுத்தி சிலுவையில் அறைவோரை மன்னிக்கும்படி பிதாவிடம் வேண்டினாராம். காரணம் பிதா தான் தேவன்.


³⁴ "அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்." லூக்கா 23:34




78.இயேசு தன் ஆவியை பிதாவுடைய கையில் ஒப்புவிக்கிறேன் என்று சத்தமிட்டு சொன்னாராம்!

இதைக்கேட்ட நூற்றுக்கு அதிபதி அவரை நீதிபரன் என்று கூறி தேவனை மகிமைப்படுத்தினார்.

⁴⁶ "இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்."

⁴⁷ "நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்."

லூக்கா 23:46-47

மரணிப்பவர் கடவுளல்ல!! அவரது உயிரை தன் கையில் வாங்குபவரே கடவுள். நூற்றுக்கு அதிபதி கூட அவரை யாரென அறிந்திருந்தான். அவரை கடவுள் எனஜசொல்லவில்லை!




79.இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதை கூட ஆரம்பத்தில் யாரும் நம்பவில்லை. காரணம் அவர் தேவனல்ல என அறிந்திருந்தனர் என்பதால் தான். அவர் தேவனல்ல என்பதால் தான் அதை குறித்து ஆச்சரியப்பட்டனர்.


¹¹ "இவர்களுடைய வார்த்தைகள் அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றினதினால், அவர்கள் இவர்களை நம்பவில்லை."

¹² "பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்துபார்க்கையில், சீலைகளைத் தனிப்பட வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக் குறித்துத் தன்னில் ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான்."

(லூக்கா 24:11-12)




80.சீடர்கள் கூட இயேசுவை வல்லமையுள்ள தீர்க்கதரிசி என்றே நம்பினார்கள். கிறிஸ்தவர்களை போல அவரை வல்லமையுள்ள தேவன் என நம்பவில்லை!


¹⁸ அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் பிரதியுத்தரமாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ என்றான்.

¹⁹ அவர்: எவைகள் என்றார். அதற்கு அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைக் குறித்தவைகளே; அவர் தேவனுக்கு முன்பாகவும் ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தார்.

லூக்கா 24:18-19

.



 81.இந்த போலி உயிர்த்தெழுதலின் பின்பு கூட இயேசு உடலோடு தான் இருந்தார்.. உணவு சாப்பிடுபவராக தான் இருந்தார்.

³⁶ "இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்."

³⁷ "அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள்."

³⁸ அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?

³⁹ "நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும், எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,"

⁴⁰ தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.

⁴¹ ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார்.

⁴² அப்பொழுது பொரித்த மீன் கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள்.

⁴³ "அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்து,"

லூக்கா 24:36-43



82.இயேசு பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டாராம்.

எடுத்துக்கொள்ளப்பட்டவர் கடவுளா? எடுத்தவர் கடவுளா?

 …  

⁵¹ "அவர்களை ஆசிர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்." லூக்கா 24:51


83.அவரை பணிந்து கொண்டார்களாம்! தீர்க்கதரிசிகளை பணிந்து கொள்ளும் வழமை அவர்களுக்கு உண்டு (1 சாமுவேல் 28:14). ராஜாவை வணங்குவது அதைவிட அதிகமாகவே உள்ளது. உதாரணமாக 1 நாளாகமம் 29:20.


⁵² "அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பிவந்து," லூக்கா 24;52


84.இதன் பின்பு கூட, தேவனை தான் புகழ்ந்து துதித்துக் கொண்டிருந்தனர். இயேசுவை அல்ல


⁵³ நாடோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென். லூக்கா 24:53

திங்கள், 21 பிப்ரவரி, 2022

மத்தேயுவின்படி இயேசு ஏன் கடவுளல்ல

 மத்தேயுவின்படி இயேசு ஏன் கடவுள் அல்ல?

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


சுருக்கம்: மத்தேயு , மாற்கு, லூக்கா ஆகிய மூன்று சுவிசேசங்களும் இயேசுவை கடவுளுக்கு நெருக்கமான நல்லடியாராக காட்டுகின்றன. கடவுளாக அல்ல!

இயேசுவை தேவன் தன் பிள்ளையாக தத்தெடுத்து, அவருக்கு சகல அதிகாரங்களையும் கொடுத்துவிட்டு ஓரமாக இருக்கிறார் என்பதே இவற்றின் சுருக்கம்! இதற்காக பல பொய்களை கலந்து எழுதியிருக்கிறார்கள்.



இவற்றில் குர்ஆனையோ ஹதீசையோ உள்நுழைக்காமல், ஒரு கிறிஸ்தவருக்கு இதில் கூறப்பட்டதை அவர் மத்தேயுவை படித்தால் புரிந்துவிடும்!



1.அவர் ஆப்ரகாமின் குமாரனும் தாவீதின் குமாரனுமானவர்- மத்தேயு 1:1 

இவர்களின் பிள்ளை கடவுளாக முடியாது.



2.இவரது பரம்பரையிலேயே விபச்சாரம் செய்தவர்களும் வேசிகளும் இடம் பெறுகிறார்கள். இதில் கூறப்படும் நான்கு பெண்களில் மூவரும் ஒழுக்கத்தில் குறையுள்ளவர்கள். (மத் 1:3,5,6)

விபச்சார சந்ததி மட்டுமல்ல.. எந்த சந்ததியிலும் இறைவன் வர இயலாது.



3.இவர் ஒரு பெண்ணுக்கு பிறந்தார். அவரது பெயர் மரியாள்.(மத் 1:16)

ஒரு பெண் பெற்றெடுத்த குழந்தை ஒரு படைப்பே அன்றி கடவுளோ அவதாரமாகவோ முடியவே முடியாது.



4.சாஸ்திரிகள் குழந்தையை கடவுளாக எண்ணி வணங்க வரவில்லை. மாறாக யூதரின் ராஜா என எண்ணியே வணங்க வந்தனர். (மத் 2:1-2,11) 

ராஜாவை தொழுவது யூதருடையதும் ஏனையோரிடனதும் மரபாக இருந்தது. 1 நாளாகமம் 29:20




5.அவர் பெதலகேமில் பிறப்பார். (மத் 2:5,6)

பிறந்தவர் ஒரு படைப்பே அன்றி படைத்தவராக முடியாது.



6.குழந்தையை காப்பாற்ற எகிப்துக்கு தூக்கிக்கொண்டு போ என யோசேப்புக்கு கர்த்தரின் தூதன் கட்டளையிடுகிறான். (மத் 2:13-15)


ஏனெனில் அந்த குழந்தை வெறும் படைப்பு. தனக்கே நன்மையை ஏற்படுத்திக்கொள்ள இயலாதவர்



7.யோவான் ஸ்நானனிடம் ஞானஸ்நானம் பெற்றார். அதுவே நீதி என சொன்னார். (மத் 3:15)


8.இயேசு தேவனின் நேச குமாரன் என வானத்திலிருந்து சத்தம் வந்ததாம் அவரிடம் பரிசுத்த ஆவி இறங்கி வந்ததாம்..(மத் 3:16-17)

தேவகுமாரன் என்பது ஏன் என யோவான் 10:34-36 இல் இயேசு சொல்கிறார். தேவன் அவரை அனுப்பியதாலும், பரிசுத்தப்படுத்தியதாலுமே தவிர, தேவன் பெற்றெடுத்ததால் அல்ல.


இதே போல இஸ்ராயீலும் (இஸ்ராயீலின் பிள்ளைகள்) என் குமாரன் என அழைக்கப்பட்டிருக்கிறார்கள். (யாத்தி 4:22, ஓசியா 11:1)


சமாதானம் பண்ணுகிறவர்களும் தேவனது புத்திரர் எனப்படுவர்-மத் 5:9


குமாரன் என்றாலே பிற்காலத்தில் பிறந்தவர் என புரிகிறது.. பிறந்தவர் ஒருநாளும் கடவுளல்ல




9.இயேசு மேல் இறங்கிய பரிசுத்த ஆவி, இயேசுவை சாத்தானால் சோதிப்பதற்கு அழைத்து போனாராம்.(மத் 4:1)

சாத்தானால் சோதிக்க படுபவர் கடவுளாக இயலாது. படைப்பே



10.உபவாசம் இருந்ததால் , இயேசுவுக்கு பசி உண்டாகிவிட்டது. (மத் 4:2)

உண்டு மலம் கழித்து வாழ்பவர் பலவீனமான படைப்பே அன்றி கடவுளல்ல.




11.சாத்தான் அவருக்கு சகல ராஜ்யங்களையும் காட்டி, என்னை (கடவுளாக) பணிந்துகொண்டால் சகலதையும் தருவேன் என்றான். அதற்கு இயேசு , "உன் தேவனாகிய கர்த்தரை பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என வேதம் சொல்லுதே என கூறி, தான் ஒரு கடவுளல்ல.. வேதத்தை பின்பற்றும் நபர் என்றும், அந்த வேதத்தில் தேவனுக்கு மட்டுமே ஆராதனை செய்ய வேண்டும் என உள்ளது என கூறினார். மத் 4:9-10



12.இயேசு வியாதிகளை சுகப்படுத்தினார். மத் 4:23-24

இவ்வாறு இயேசு மூலம் அற்புதம் செய்தது தேவன் தான் என அப்போஸ்தலர் 2:22 கூறுகிறது.

விசுவாசமிருந்தால் மலையை அகன்று போக சொன்னாலும் நிகழுமாம்-மத்தேயு17:20

அந்த மலையை கடலில் போய் விழ கட்டளையிட்டாலும் அப்படியே ஆகுமாம்- மத்தேயு 21:21

சோ இயேசுவுக்கு விசுவாசம் இருந்ததால் தேவன் ஹெல்ப் பண்ணியிருக்கிறார். அவர் தேவன் என்பதால் அல்ல



13.ஜெபம் செய்யும்போது பிதாவிடமே ஜெபம் செய்ய வேண்டும் என போதித்து தன்னை கடவுளல்ல என நிரூபித்தார்

 (மத் 6:9)



14.பரலோகராஜ்யத்தில் நுழைபவன பிதாவின் சித்தப்படி செய்பவனே . இயேசுவை நோக்கி கர்த்தாவே (ஆண்டவரே) என அழைப்பதாலோ, அற்புதம் செய்தாலோ அல்ல. (மத் 7:21-23)

இயேசுவின் சித்தப்படி அல்ல!

பிதாவின் சித்தம், பிதாவை ஆவியோடு தொழ வேண்டும்-யோவான் 4:24

அவரை தவிர வேறு யாரையும் கடவுளாக தொழ கூடாது. யாத்திராகமம் 20:3-5

இதன் மூலம் இயேசு கடவுளல்ல என தெளிவாக்குகிறது



15.குஷ்டரோகியை சுத்தமாக்கினார்,, நோயாளிகளை பிசாசு பிடித்தவங்களை சுகப்படுத்தினார் (மத் 8:2,13-17).

இயேசு மூலம் தேவனே அற்புதம் செய்தார். அப்போஸ்தலர் 2:22.

இயேசுவின் திறமையால் அல்ல!


16.கொந்தளித்த கடலையும், காற்றையும் அதட்டினாராம். அவை அமைதியாகிவிட்டனவாம்.இதை பார்த்த சீடர்கள் இவரை கடவுள் என சொல்லவில்லை.(மத் 8:26-27)

இதே சீடர்கள் தான் இஸ்ரேலியர் மத்தியில் தேவன் இயேசு என்ற மனிதன் மூலம் அற்புதங்கள் செய்தார் என போதித்தார்கள்- அப்போஸ்தலர் 2:22

மேலும் விசுவாசம் இருந்தால் மலையையே கட்டளை மூலம் நகர்த்தலாம்- மத்தேயு 21:21, 17:20

அப்படியிருக்க கடலை அதட்டுவது அதைவிட பெரிய காரியம் அல்லவே! 



17.பிசாசுகள் இயேசுவை தேவனுடைய குமாரன் என்றனவாம். இயேசு அவற்றை பன்றிக்கூட்டத்தினுள் போகவிட்டாராம்-மத் 8:29-32

இயேசு எப்படி தேவகுமாரன் என இயேசுவே சொல்லியுள்ளார். குறிப்பு 8 இல் கூறப்பட்டுவிட்டது.



18.பாரிஷவாதகாரனை (திமிர்வாதம்) பார்த்து உன் பாவம் மன்னிக்கப்பட்டது என்றார். (மத் 9:2)

மனுஷ குமாரனுக்கு பூமியில் பாவங்களை மன்னிக்க அதிகாரமுண்டு என்றார்.(மத் 9:6)

இதை பார்த்த மக்கள் மனிதர்களுக்கு இத்தகைய அதிகாரத்தை கொடுத்தவராகிய தேவனை மகிமை படுத்தினார்கள்.(மத் 9:8)


மை கமெண்ட்: 


*இயேசு தன்னை மனுஷகுமாரன் என சொல்லி , தான் ஒரு மனுஷனே ஆவேன். கடவுள் அல்ல என்கிறார்.


*.இதை கண்ட மக்கள் கூட, இவரை தேவன் என நம்பவில்லை.. இது போன்ற மனுசனுக்கு அதிகாரத்தை கொடுத்ததே தேவன் தான் என்பதால், தேவனை மகிமைப்படுத்தினார்கள்.


*இயேசுவுக்கு எல்லா பாவத்தையும் மன்னிக்க பூமியில் அதிகாரமில்லை.. பாரிசவாதத்துக்கு காரணமான பாவம் (??), அதை தான் மன்னிக்க முடிந்தது.


ஆனால் இயேசுவை கொல்ல பார்த்த பாவத்தை இயேசுவால் மன்னிக்க முடியல.. பிதாவிடம் மன்னிக்க வேண்டினார் என எழுதப்பட்டுள்ளது.(லூக்கா 23:3


*தீர்க்கதரிசிகளுக்கு பாவத்தை மன்னிக்க இயலும் என்பதே பைபிள் கூறுவது. அதனால் தான் சவுல் தன் பாவத்தை மன்னிக்க சாமுவேல் தீர்க்கதரிசியிடம் வேண்டினார். 1 சாமுவேல் 15:25

இயேசு தீர்க்கதரிசி என்பதால் இது முடிந்தது. அது கூட தேவன் கொடுத்ததே.



*இயேசுவின் கூற்றுப்படி, பரிசுத்த ஆவியை பெற்றவர்களுக்கு பாவத்தை மன்னிக்க இயலுமாம். சீடர்களுக்கு பரிசுத்த ஆவி வழங்கப்பட்ட பின், 


"“"எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்."”

  — John 20:23 (TBSI)

சோ, பரிசுத்த ஆவி வழங்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் அதிகாரமாக இது பார்க்கப்படுகிறது.


*இயேசுவுக்கு ஆதிமுதல் பரிசுத்த ஆவி இருக்கவில்லை.. மாறாக ஞானஸ்நானம் பண்ணிய பின்னே பரிசுத்த ஆவி வழங்கப்பட்டது.(மத் 3:16-17)


*பரிசுத்த ஆவி வழங்கப்பட்ட பின்பு கூட, இயேசு பாவம் செய்வோரை மன்னிப்பவராக இல்லாமல், அவர்களுக்கு பிதாவிடம் பரிந்து பேசுபவராகவே உள்ளார் என யோவான் எழுதுகிறார். 1 யோவான் 2:1

சோ, இதுவெல்லாம் இயேசு என்ற மனிதனை கடவுளாக்காது.



19.வேதபாரகர்கள் மனதில் நினைத்ததை இயேசு அறிந்துகொண்டாராம். (மத் 9:3-4)

மை கமெண்ட்:

பைபிள் படி தீர்க்கதரிசிகளுக்கு தேவன் வெளிப்படுத்தி கொடுப்பதால், அறிந்திருப்பார்கள்.


*அனனியா என்பவன் தன் சொத்துக்களை விற்று சிலதை தனக்கு வைத்துக்கொண்டு, சீடர்களிடம் மற்றதை கொடுக்கிறான். பேதுரு இதை அறிந்திருந்தான் என கூறப்படுகிறது.

அப்போஸ்தலர் 5:1-3



*தீர்க்கதரிசிகள் மறைவான விடயங்களை (தேவன் வெளிப்படுத்தி கொடுப்பதால்) அறிந்திருப்பார்கள் என்பதே அக்கால மக்களின் நம்பிக்கையும்கூட. 


"இவன் தீர்க்கதரிசியாக இருந்தால், தம்மை தொடுகிற ஸ்திரீ இன்னாள் என்றும் இப்படிப்பட்டவள் என்றும் அறிந்திருப்பார்"-லூக்கா 7:39


* கேயாசி நாகமானிடம் செய்த செயல்களை பார்க்காமலேயே எலீஷா அறிந்திருந்தான் என கூறப்படுகிறது. 2 இராஜாக்கள் 5:19-26


சோ, தீர்க்கதரிசி இப்படி இருப்பதால் தெய்வீகமெல்லாம் இல்லை!!

ஆவியானவர் இவர்களூடாக பேசுவாராம் (சீடர்கள் குறித்து இயேசு சொன்னது) -மத் 10:19-20



20.மீண்டும் நோயாளிகளை சுகப்படுத்துவது, ஆவி விரட்டுவது இடம்பெற்றுள்ளது. (மத் 9:18-33)


இதெல்லாம் இயேசுவாக செயததல்ல. தேவன் தான் இயேசு என்ற மனுசன் மூலம் செய்வித்தார். அப்போஸ்தலர் 2:22



21.இயேசுவை தலைவன் ஒருவன் வந்து "ஆண்டவரே!" என அழைத்து பணிந்து கொண்டாராம். மத் 9:18

மை கமெண்ட்:

இயேசுவை மெசியாவாகவும், ஆண்டவராகவும் ஆக்கியதே தேவன் தான். அப்போஸ்தலர் 2:36


*ராஜாவை பணிந்து கொள்ளும் வழமை அம்மக்களின் வழமை. இது போன்றே தாவீதையும் பணிந்து கொண்டனர். 1 நாளாகமம் 29:20

யாக்கோபு ஏசாவை பணிந்து கொண்டான். ஆதி 33:3

சோ இதெல்லாம் இயேசுவுக்கு ஸ்பெஷல் அல்ல!





22.இயேசு சீடர்களுக்கு பேய் விரட்ட, நோய்களை சுகப்படுத்த அதிகாரம் கொடுத்தாராம். (மத் 10:1)


மை கமெண்ட்


இயேசுவும் அதிகாரம் கொடுக்கப்பட்டவரே. மத் 28:18


இயேசு அதிகாரம் கொடுத்த பின்பு கூட, சில நோய்க்கு காரணமான பேய்களை சீடர்களால் விரட்ட முடியவில்லை. அதற்கு ஜெபம், உபவாசம் அதிகம் தேவையாம்.(மத் 17:15-21).


இறந்துபோன லாசருவை எழுப்பிவிட்டு இயேசு, தேவனை ஸ்தோத்திரித்தார் தனக்கு செவி கொடுத்ததற்காக..(யோவான் 11:41)


மேலும் தேவனே இயேசு மூலமாக இதெல்லாம் செய்தார். (அப்போஸ்தலர் 2:22)

இயேசு சுயமாக எதுவும் செய்வது மில்லை!(யோவான் 5:30)




23.ஆத்துமாவை நரகத்தில் தள்ளி அழிக்க வல்லவருக்கு பயப்படுங்கள் என கூறி,தேவனை பயப்பட சொல்லி தான் தேவனல்ல என நிரூபித்தார்-மத் 10:28



24.மனுஷர் முன்பாக இயேசுவை அறிக்கை பண்ணினால், இயேசு பரலோகத்தில் இருக்கிற பிதாவுக்கு முன்பாக அவனை அறிக்கை பண்ணுவாராம். மறுதலிப்பவரை இயேசுவும் பரலோகத்தில் இருக்கிற பிதாவின் முன்பு அவனை மறுதலிப்பாராம! -மத் 10:32-33

இதன் மூலம் இயேசு எப்போதுமே பிதாவுக்கு சமமாக இல்லை என நிறுவினார்.



25. சீடர்களை ஏற்றுக் கொள்பவன் இயேசுவை ஏற்றுக்கொள்கிறவன். இயேசுவை ஏற்றுக்கொள்பவன் இயேசுவை அனுப்பினவரை ஏற்றுக்கொள்பவனாம்- மத் 10:40


சீடர்கள் எப்படி இயேசுவால் அனுப்பப்பட்டார்களோ, அதே போன்றே இயேசுவும் அனுப்பப்பட்டார் என கூறி, தேவனல்ல.. இயேசுவைஸ அனுப்பினவரே தேவன் என இயேசு நிறுவினார்.



26.இயேசுவின் கிரியைகளை கேள்விப்பட்ட யோவான் ஸ்நானன் , வரவேண்டியவர் இயேசுவா அல்லது வேறொருத்தருக்காக காத்திருக்க வேண்டுமா என கேட்டு அனுப்பினார்.-மத் 11:2-3


யோவான் கூட இயேசு தேவன் என நம்பவில்லை என தெளிவாக இது காட்டுகிறது.. கடவுள் என தீர்க்கதரிசி ஒருத்தனுக்கு கூட தெரியலனா எப்படி??? இயேசு கடவுளல்ல என யோவான் ஸ்நானன் அறிந்திருந்தார். 


யோவான் தீர்க்கதரிசிகளை விட மேன்மை உள்ளவர் என இயேசு சொன்னது வேறு-மத் 11:9




27.யோவான் என்பவர் தேவனால் அனுப்பப்படும் நபருக்கு வழியை ஆயத்தம் பண்ண அனுப்பப்பட்டார் என இயேசு தெளிவாக்கி, அனுப்பும் தேவன் இயேசுவல்ல என நிரூபிக்கிறார்

"“"அதெப்படியெனில்: இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான்."”

  — Matthew 11:10 (TBSI)



28.இயேசுவை விட பெரியவர் யோவான் ஸ்நானன்


“"ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவானஸ்நானனைப்பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன்."”

  — Matthew 11:11 (TBSI)

காரணம் இயேசுவும் ஸ்திரீயிடம் பிறந்தவரே! ஆனால் இயேசு யோவானை விட பெரியவர் என யோவான் சொன்னதாகவும் இதே மத்தேயு எழுதியுள்ளார்



29.இயேசுவுக்கு யோவான் யார் என்றே தெரியவில்லை.

யோவான் தான் வரவேண்டிய எலியா என இயேசு சொல்கிறார்-மத் 11:14

“"நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்."”

  — Matthew 11:14 (TBSI)


எலியாவின் ஆவி யோவானிடம் இருந்ததாக லூக்கா 1:16 எழுதப்பட்டுள்ளது



ஆனாலும் யோவானோ, நான் எலியாவுமில்லை, தீர்க்கதரிசியுமில்லை, மெசியாவுமில்லை என கூறி மறுத்து விட்டார்-யோவான் 1:21


இயேசு யோவான் எலியா அல்ல என தெரியாமல் சொல்லியுள்ளார்


இப்படி இறைவன் அறிவில் குறைபாடுள்ள வராக இருப்பாரா??




30.பிதா தான் வானம் பூமிக்கு ஆண்டவர். அவரை இயேசு தோத்திரம் பண்ணினார். (மத் 11:25)


இயேசுவை ஆண்டவராக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36




31.சகலமும் இயேசுவுக்கு பிதாவினால் ஒப்புக் கொடுக்க பட்டிருக்கிறதாம். -மத் 11:27

கொடுத்தவரே கடவுள். கொடுக்கப்பட்டவர் அல்ல.

இயேசு அவை தனக்கே சொந்தம் என சொல்லாமல், பிதாவினால் கொடுக்க பட்டிருக்கிறது என சொல்லி, தான் கடவுள் அல்ல என புரிய வைக்கிறார்


மேலும் இயேசுவுக்கு தேவையான சகலதுமே இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமானவையும் அல்ல.


.

சாத்தானுக்கும் பூமியின் ராஜ்ஜியங்கள் ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது- லூக்கா 4:6



32.மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராயிருக்கிறார் என்றார்-மத் 12:8

நான் ஓய்வுநாளுக்கு ஆண்டவர் என சொல்லாமல், மனுஷகுமாரன் என கூறி, தான் ஒரு மனிதரே என நிரூபிக்கிறார். கடவுளால்ல.


அடுத்து இயேசுவை ஆண்டவராகவும் மெசியாவாகவும் ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36

குறிப்பாக ஓய்வு நாளே மனிதனுக்காக உண்டாக்கப்பட்டது.  மனிதன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை!



33.ஏசாயா தீர்க்கதரிசி இயேசுவை குறித்து, "இதோ, நான் தெரிந்துகொண்ட என் தாசன் / ஊழியன் " என தேவன் சொன்னதாக கூறியிருக்கிறதாம்-மத் 12:18



அதாவது இயேசு தேவனின் ஊழியக்காரன். தேவனது ஊழியக்காரனை (எபிரேய த்தில் அடிமை என உள்ளது) போய் தேவன் என சொன்னால் எப்படி?? அநியாயம் இல்லையா?




34.இயேசு பரிசேயர்கள் சிந்தித்ததை அறிந்தாராம்-மத் 12:25

இதற்கு குறிப்பு 19இல் விளக்கம் தரப்பட்டுள்ளது.




35.இயேசு பிசாசு விரட்டுவது தேவனுடைய ஆவியால் தானாம். -மத் 12:28

இதன் மூலம் அவர் சுயமாக அவற்றை விரட்ட வில்லை என காட்டுகிறது.



36.இயேசு பரிசுத்த ஆவியிலும் தாழ்ந்தவர்.


“எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.”

  — Matthew 12:32 (TBSI)


முதலாவது அவர் மனுஷ குமாரன். சோ கடவுளில்லை!

பரிசுத்த ஆவியை திட்டினால் மன்னிப்பில்லை. ஆனால் இயேசுவை திட்டினால் மன்னிப்பு உண்டு என கூறி, பரிசுத்த ஆவியிலும் தாழ்ந்தவர் என கூறி தெய்வீகம் இல்லை என நிரூபித்தார்.





37.அனைவரும் பிதாவின் சித்தப்படியே நடக்க வேண்டும்.. அப்படி நடப்போர் இயேசுவின் தாயும் சகோதரர்களும் ஆவர்.



“"பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறான் என்றார். "”

  — Matthew 12:50 (TBSI)

கடவுளுக்கு சகோதரர்களோ தாயோ இல்லை! 




38.இயேசு தன்னை ஒரு தீர்க்கதரிசி என அடையாளப்படுத்துகிறார்.



“அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.”

  — Matthew 13:57 (TBSI)

கடவுள் என்றோ அவதாரம் என்றோ அல்ல!



39.தேவனிடம் ஜெபம் செய்து, தன்னை கடவுள் இல்லை என நிரூபித்தார்.


²³ "அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்."

(மத்தேயு 14:24)


 


40.இயேசு கடலின் மேல் நடந்தாராம்.(மத்தேயு 14:26).

தேவன் தான் இப்படி இயேசு என்ற மனிதன் மூலம் அற்புதங்கள் செய்தார்-அப்போஸ்தலர் 2:22

விசுவாசமிருந்தால் மலையை கடலில் விழ சொன்னாலும் நிகழும்- மத்தேயு 21:21..

இயேசுவுக்கு விசுவாசம் இருந்ததால் இது முடிந்தது.


எலியா தன் துணியால் நதியை அடித்ததும், அது அவர் நடந்து செல்ல வழிவிட்டதாம்-2 இராஜாக்கள் 2:8


இதேபோல் எலீஷாவும் அடித்தார். அப்போதும் நதி வழிவிட்டது-2 இராஜாக்கள் 2:14

ஆசாரியர்களின் உள்ளங்கால் பட்டவுடன் ஓடும் நதி அப்படியே நின்று குவியலாகிவிட்டதாம்-யோசுவா 3:13,15-17

சோ இதெல்லாம் தேவன் தீர்க்கதரிசி களுக்கு இப்படி அற்புதங்களை கொடுப்பார்



41. இயேசு தன்னை "நான் தான் பயப்படாதீர்கள்" என்றார். -மத் 14:27

"நான்" என சொல்வதை தெய்வீகத்தை வாதிடுவதாக நினைப்பதென்பது மடத்தனம். தன்னை "நான்" என சொல்லாமல், "அவன்" என்றா சொல்லமுடியும்??

பிதா மட்டுமே ஒரே மெய்யான தேவன்- யோவான் 17:3 என இயேசுவே சொல்லிவிட்டார்.


 


42.படகில் இருந்தவர்கள் இயேசுவை மெய்யாகவே ஒரு தேவகுமாரன் என சொல்லி பணிந்துகொண்டார்களாம்-மத்தேயு 14:33

தேவ குமாரன் என்பது என்ன அர்த்தம் என இயேசுவே சொல்லியுள்ளார்-யோவான் 10:34-36

இதேபோல் நன்மக்களை தேவ குமாரன் என சொல்வதுண்டு. கெட்டவர்களை பிசாசின் பிள்ளைகள் என சொல்வதுண்டு.


சொலமோனை குறித்து, அவன் எனக்கு குமாரனாக இருப்பான். நான் அவனுக்குப் பிதாவாக இருப்பேன் என சொல்லப்படுள்ளது-2 சாமுவேல் 7:14-16

இப்படி ராஜாக்களை பணிந்து கொள்வது போல (1 நாளாகமம் 29:20 ) , தீர்க்கதரிசிகளையும் பணிந்து வணங்குவார்கள்- 2 இராஜாக்கள் 2:15

சோ, இதில் எந்த விசேசமும் இல்லை!






43.காணாமல் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடம் அனுப்பப்பட்டேன் என கூறி , தான் ஒரு அனுப்பப்பட்டவரே என்றும், அனுப்பியவர் ஒருவர் உள்ளார் என தெளிவாக்கினார். மத் 15:24


²⁴ "அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்லவென்றார்."


 



 

44.இயேசு அற்புதங்கள் செய்ததை கண்ட மக்கள், தேவனை மகிமைப்படுத்தினார்களே தவிர, மனுசனான இயேசுவை அல்ல! காரணம் தேவன் தீர்க்கதரிசிகள் மூலம் இப்படி செய்வார் என அறிந்திருந்தனர்


³¹ "ஊமையர் பேசுகிறதையும், ஊனர் சொஸ்தமடைகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், குருடர் பார்க்கிறதையும் ஜனங்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்."

மத்தேயு 15:31




45. மனுசகுமாரனாகிய இயேசு மெசியாவே ஆவார். தேவன் அல்ல!


¹³ "பின்பு, இயேசு பிலிப்பு செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்."

¹⁴ "அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறு சிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்."

¹⁵ அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.

¹⁶ சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.

¹⁷ "இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்."

(மத்தேயு 16:13-17)


இயேசுவை மெசியாவாக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36

தேவனுடைய குமாரன் என்பது பற்றி ஏற்கனவே கூறிவிட்டேன்.


  



46.இயேசு தம் தூதரோடு பிதாவின் மகிமை பொருந்திய வருவாராம்.

²⁷ "மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்." (மத்தேயு 16:27)


இதே போல குழந்தைகளுக்கும் தேவதூதர்கள் உண்டு

-மத் 18:10


இங்கே கூட தன்னை மனுஷகுமாரன் என கூறி, தேவனல்லவென்று காட்டியுள்ளார்.




 


47.யோவானை குறித்து மீண்டும் எலியா என கூறுகிறார்.

இதன்மூலம் யோவானை பற்றி இவருக்கு சரியாக தெரியாது என நிரூபித்தார்.


¹⁰ "அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள்."

¹¹ இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான்.

¹² "ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார்."

¹³ அவர் யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள்.

(மத்தேயு 17:10-12,13)


ஆனால் யோவானோ தன்னை எலியா அல்ல என கூறிவிட்டார்-யோவான் 1:21

அறிவில் பூரணமற்ற மனுஷகுமாரன் ஒருநாளும் தேவனாக இயலாது!


 



48.சில பிசாசுகளை ஜெபம் மூலமாகவும் உபவாசம் மூலமாகவுமே தவிர விரட்ட முடியாதாம்!

²¹ இந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.(மத்தேயு 17:21)

இதன்மூலம் இயேசு அவற்றை விரட்ட, அதிக ஜெபமும், உபவாசமும் செய்திருக்க வேண்டும். சொ அவர் தேவனல்ல!




49.எந்த காரியத்தையும் பிதாவிடம் வேண்ட வேண்டும். பிதாவினாலே அது உண்டாகும்.


¹⁹ "அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."(மத்தேயு 18:19)




50.இயேசுவின் நாமத்தில் ஒன்று கூடினால், அதாவது இயேசுவுக்காக ஒன்று கூடினால் அங்கே இயேசுவும் இருப்பாராம்.


²⁰ "ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்."(மத்தேயு 18:20)


இது உவமையாகும். எப்படி மோசேயும், தீர்க்கதரிசிகளும் இருப்பதாக ஆபிரகாம் சொன்னது போன்றதாகும்.(லூக்கா 16:29,31)


நீ எங்கிருந்தாலும் உன்கூட இருப்பேன் என நன்பர்களை உற்சாகப்படுத்த கூறுவது போன்றது. 


 



51. மறுமை சம்பந்தமான விடயங்களை பரம பிதாவே மன்னிக்கிறவர்.



³⁵ "நீங்களும் அவனவன் தன்தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார். "(மத்தேயு 18:35)

இயேசுவுக்கு பூமியில் தான் அதிகாரம் கொடுக்கப்பட்டது. இதை ஏற்கனவே குறிப்பு 18 இல் காணவும்.




52.தீர்க்கதரிசிகளுக்கு சட்டத்தை கொடுக்க முடியுமாம். மோசே இஸ்ரேலியரின் இருதயகடினத்தினால் தள்ளிவிடுதலுக்கு இடங்கொடுத்தார் என்கிறார்.


⁸ அதற்கு அவர்: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதயகடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை. (மத்தேயு 19:8)

இது போல் தான் இயேசுவும் புதுசாக சட்டம் மாற்றினார். கடவுள் என்பதால் அல்ல.




53. இயேசுவுக்கு தேவன் ஏன் மனிதனை ஆணும் பெண்ணுமாக படைத்தார் என அறியாமல், கிரேக்க ரோம மத தத்துவங்களை சொல்கிறார். பைபிளில் உன்னதப்பாட்டு இருப்பதையே அறிந்திருக்கவில்லை போலும்!



¹⁰ "அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: மனைவியைப்பற்றி புருஷனுடைய காரியம் இப்படியிருந்தால், விவாகம்பண்ணுகிறது நல்லதல்ல என்றார்கள்."

¹¹ அதற்கு அவர்: வரம்பெற்றவர்களே தவிர மற்றவர்கள் இந்த வசனத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

¹² தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன் என்றார்.

(மத்தேயு 19:10-12)



பைபிள் படி தேவன் சந்நியாசியாக வாழ ஆணும் பெண்ணுமாக படைக்காமல், பழுகிப்பெருகவே ஆசிர்வதித்தார்-ஆதி 1:28


இதை கூட அறியாதவர் எப்படி கடவுளாவது?

(இதெல்லாம் இயேசுவுடைய வாயில் துறவறத்துக்கு சார்பாக துறவிகள் போட்டது)

 …  





54.ஒருவன் இயேசுவை நல்ல போதகர் என்கிறான். உடனே இயேசு, நல்லவன் தேவன் மட்டுமே என கூறி , இயேசு தேவனல்ல என நிரூபித்தார்.


¹⁶ "அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்."

¹⁷ அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.

(மத்தேயு 19:16-17)






 55.செபதேயுவின் குமாரருடைய தாய் தன் பிள்ளைகளிருவரும் இயேசுவுக்கு வலதிலும் இடதிலும் ராஜ்யத்தில் அமர்ந்திருக்க வேண்டுமென வேண்டினார். அதற்கு இயேசு, பிதா ஏற்கனவே யாருக்கு ஆயத்தம் பண்ணி வைத்தாரோ அவர்களை தவிர வேறு எவருக்கும் அதை தன்னால் கொடுக்க முடியாது என கூறி, பிதாவுக்கு சமனானவர் என்பது பொய் என நிரூபித்தார்.(மத்தேயு 20:20-23)





56.இயேசு கர்த்தரின் நாமத்தில் வந்தார்.


⁹ "முன்நடப்பாரும் பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்."

¹⁰ "அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள்."

¹¹ அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.

(மத்தேயு 21:9-11)



தீர்க்கதரிசிகள் கர்த்தரின் நாமத்தில் தான் வருவார்கள்.அதனால் தான் 21:11 இல் இயேசுவை தீர்க்கதரிசி என கூறப்பட்டுள்ளது.


தாவீது கர்த்தரின் நாமத்தில் தான் நான் வந்தேன் என்றார்-1சாமுவேல் 17:45

 காத் தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தில் பேசினார்-1 நாளாகமம் 21:19

எரேமியா கர்த்தரின் நாமத்தில் பேசினார்- எரேமியா 26:16




 

57.இயேசுவுக்கு பசி உண்டாகிவிட்டது. சாப்பிட்டு வாழ்ந்த மனிதரே இயேசு. கடவுளல்ல!."


  

¹⁸ "காலையிலே அவர் நகரத்துக்குத் திரும்பிவருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று."

¹⁹ "அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு, அதினிடத்திற் போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையுங்காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று."

²⁰ சீஷர்கள் அதைக் கண்டு: இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாய்ப் பட்டுப்போயிற்று! என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள்.

²¹ "இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப்பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்."

²² "மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்."

(மத்தேயு 21:18-22)


அத்திமரம் பட்டுபோனது விசுவாசத்தினால் தான் என இயேசு தெளிவு படுத்துகிறார்.. தெய்வீகத்தால் அல்ல!

இதேபோல் கேயாசீயிற்கு வெண்குஷ்டம் வர எலிசா சொன்னவுடன் வந்தது.2 இராஜாக்கள் 5:27


 



58.இயேசுவை ஜனங்கள் தீர்க்கதரிசி என்றே எண்ணியிருந்தார்கள்


⁴⁶ அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்கள் அவரைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியினால் அவர்களுக்குப் பயந்திருந்தார்கள்.

(மத்தேயு 21:46)

கடவுள் என்று அல்ல-! 



59.இயேசு தேவனுடைய மார்க்கத்தை சத்தியமாக போதிப்பவர்.


¹⁶ "தங்கள் சீஷரையும் ஏரோதியரையும் அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறவரென்றும், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராகையால் எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லையென்றும் அறிந்திருக்கிறோம்."

(மத்தேயு 22:16)

தேவனுடைய மார்க்கத்தை போதிப்பவர். தேவன் அல்ல.



 …  






60.வரலாற்று அறிவு கூட இயேசுவுக்கு கம்மியாகவே உள்ளது.


³⁵ "நீதிமானாகிய ஆபேலின் இரத்தம்முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள்." (மத்தேயு 23:35)


யொய்தாவின் குமாரனாகிய சகரியாவே கொல்லப்பட்டவர்-2 நாளாகமம் 24:20-1

இயேசு பெரகியாவின் குமாரனாகிய வேறொரு தீர்க்கதரிசியின் பெயரை சொல்கிறார்.

இறைவனுக்கு வரலாற்று அறிவில் குறை இருக்குமா??





61.தீர்க்கதரிசனத்தைகூட இயேசு தப்பாக சொல்கிறார். ஆலயத்தின் ஒரு கல்லின் மேல் ஒரு கல் இல்லாதபடிக்கு யூதரின் ஆலயம் இடிக்க பட்டு போகும் என்றார். ஆனால் இன்றுவரை ஒரு பக்கம் சுவர் இருந்துகொண்டே உள்ளது.


இறைவன் எப்படி எதிர்கால அறிவு இல்லாமல் இருப்பாரா?


¹ "இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்."

² "இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்."

(மத்தேயு 24:1-2)





62. இயேசுவுக்கு அவருடைய வருகை நாளை பற்றிய அறிவு கூட இல்லை!



³⁶ அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.

(மத்தேயு 24:36)



பிதா மட்டுமே அதை அறிந்துள்ளாராம். பிற்காலத்தில் குமாரன் என இதில் உள்ளதை நீக்கிக் டாங்க.. ஆனாலும் மாற்கு 13:32 இல் உள்ளது. ரோமன் கத்தோலிக்கர்கள் பைபிளில் குமாரன் என்பது இன்னும் உள்ளது.

சோ, இவர் எப்படி கடவுளாவார்?




63.பிதாவின் ராஜ்யத்தில் கூட, இயேசு பானம் பண்ணுபவராக தான் இருப்பார். உணவு உண்ணாத கடவுளாக அல்ல!!


²⁹ இதுமுதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடுகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள்வரைக்கும் இதைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

(மத்தேயு 26:29)




 64.தன்னை காப்பாற்ற சக்தியுள்ள பிதாவிடம் ஜெபம் பண்ணினார். சோ இவர் கடவுள் அல்ல!  


³⁶ "அப்பொழுது, இயேசு அவர்களோடே கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீஷர்களை நோக்கி: நான் அங்கே போய் ஜெபம்பண்ணுமளவும் நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி;"


 …  

³⁹ "சற்று அப்புறம்போய், முகங்குப்புறவிழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்."


⁴² "அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்."


 …  

⁴⁴ "அவர் மறுபடியும் அவர்களை விட்டுப்போய், மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார்."

(மத்தேயு 26:36,39,42,44)





65.கசப்பு கலந்த காடியை சுவைத்து பார்த்தே சுவை அறிந்துகொள்ளும் நபராகவே இருந்தார்.

³⁴ "கசப்புக்கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார்."(மத்தேயு 27:34)



 


66.கடைசியாக என் தேவனே என் தேவனே என் என்னை கைவிட்டீர் என கூறினார்! இப்படிப்பட்ட தன்னை தானே இரட்சித்துக்கொள்ள இயலாதவர் கடவுளாக முடியுமா?.

⁴⁶ "ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்." (மத்தேயு 27:46)





67.வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரங்களும் தனக்கு கொடுக்கப்பட்டது என சொன்னாராம்!



¹⁸ "அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது."(மத்தேயு 28:18)


கொடுக்கப்பட்டு வாங்குபவர் கடவுளா அவருக்கு கொடுத்தவர் கடவுளா?? 

உண்மையில் சகல அதிகாரமும் கொடுக்கப்பட்டது என்பது தவறாகும். அதற்கு பின்பும் பிதாவுக்கு அடிபணிந்து (1கொரிந்தியர் 15:28), பரிந்து பேசுபவரே (1 யோவான் 2:1)

சாத்தானும் இவ்வாறு கொடுக்கப்பட்டான்-லூக்கா 4:6



68.இயேசு உலகம் முடியும்வரை அவர்களுடன் இருப்பேன் என்றாராம்!


²⁰ "நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். "(மத்தேயு 28:20)


ஆனால் சத்திய ஆவி எனும் தேற்றவாளன் தான் என்றென்றும் இருப்பார் என்றும், இயேசு போனபின்னே தான் தேற்றவாளன் வருவார் என்றும் யோவான் எழுதுகிறார் இயேசு சொன்னதாக.-யோவான் 14:16,16:7


ஒருவேளை தேற்றவாளன் வருகை பற்றி தெரியாமல் மத்தேயு எழுதிவிட்டாரோ?


குறிப்பு 50ஐ பார்க்கவும்!!


மாற்குவின்படி இயேசு ஏன் கடவுளல்ல

 

அல்லாஹ் வழிதவறச்செய்கிறான் என்பதன் விளக்கம்

1.மனிதனுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது  --மனிதனுக்கு இறைவன் வழி காட்டியுள்ளான். ஒன்று அவன் நன்றியுள்ளவனாக இருக்கிறான் அல்லது காஃபிராக இருக்கிறான...