இடுகைகள்

இயேசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஈசா நபி பற்றி குர்ஆன் ஹதீஸ்

படம்
 ஈஸா நபி பற்றி குர்ஆன் ஹதீஸ் ---------------------------------------------------------- ஈசா நபி குறித்து பைபிளே அவரை தேவனது தாசன் (ஊழியன்) (மத் 12:18) என்றும் , பிதா ஒருவரே மெய்யான தேவன் (யோவான் 17:3) என்றும் தன்னை தேவனுடைய பையன் என்று சொல்ல காரணம், தேவனால் அனுப்பப்பட்டும் பரிசுத்தம் பண்ணப்பட்டும் இருப்பதால் தான் என்றும் வேதத்தை பெற்றவர்களை தேவர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவரே சொல்வதாக (யோவான் 10:33-36) எழுதப்பட்டிருந்தாலும், தெளிவாக தேவன் வேறு இயேசு வேறு என்று சொல்லப்பட்டிருந்தாலும் (வெளி 3:12, யோவான் 20:16-17, 17:3) இயேசு ஒருவரே மெய்யான தேவன் என்று கிறிஸ்தவர்கள் கூறுவார்கள். அதற்கு சான்றாக மூடலான வசனங்களையும் , புதிய ஏற்பாட்டாசிரியர்களே குழம்பிப்போய் எழுதியதையும் காட்டுகிறார்கள். அதோடு நிறுத்தாமல் ஏகத்துவத்தை போதிக்கும் இஸ்லாத்தில் கூட அவரை கடவுளாக தான் கூறப்பட்டுள்ளது என்று வாய் கூசாமல் பேசுவதோடு அதை வைத்து கதைப்புத்தகங்கள் கூட எழுதியுள்ளார்கள். ஆகவே இந்நிலை குறித்து அலசுவோம்: 1.ஈசா நபி தன்னையும் தன் தாயையும் கடவுள்களாக கூறவில்லை. மறுமையில் இறைவன் அவரிடமே இது...

லூக்காவின்படி இயேசு ஏன் கடவுளல்ல

  மாற்குவின்படி இயேசு  கடவுளல்ல லூக்காவின்படி இயேசு ஏன் கடவுளல்ல? ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- லூக்கா சுவிசேசத்தின்படி இயேசு பரிசுத்த ஆவி மூலம் மரியாளிடம் பிறந்த மனிதர். அவரை தேவன் தன் பிள்ளையாக தத்தெடுத்துக் கொண்டார்.. அவருக்கு அதிகாரங்களை கொடுத்து ஓரமாய் நின்று வேடிக்கை பார்க்கிறார் என்பதே இதன் சுருக்கம்! லூக்கா ஏனைய சுவிசேங்களை போலல்லாமல், இயேசு செய்த அற்புதங்கள் அனைத்துமே தேவன் நிகழ்த்தியது என கூறுவதோடு, அவ்வாறே மக்கள் புரிந்து கொண்டனர் என்பதை தெளிவாக சொல்லும் சுவிசேஷ கதையே இது!   1.அவர் ஒரு பெண் பெற்றெடுத்த குழந்தை! ஒரு பெண் பெற்றெடுத்த குழந்தை ஒரு படைப்பே அன்றி வேறில்லை! ³¹ "இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக." (லூக்கா 1:31) 2.அவர் பெரியவராக இருப்பார். தேவனுடைய குமாரன் எனப்படுவாராம். கர்த்தராகிய தேவன் அவருக்கு இயேசுவின் பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை கொடுப்பாராம்! ³² "அவர் பெரியவராயிருப்பார், உன்னதமா...

மத்தேயுவின்படி இயேசு ஏன் கடவுளல்ல

 மத்தேயுவின்படி இயேசு ஏன் கடவுள் அல்ல? ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- சுருக்கம்: மத்தேயு , மாற்கு, லூக்கா ஆகிய மூன்று சுவிசேசங்களும் இயேசுவை கடவுளுக்கு நெருக்கமான நல்லடியாராக காட்டுகின்றன. கடவுளாக அல்ல! இயேசுவை தேவன் தன் பிள்ளையாக தத்தெடுத்து, அவருக்கு சகல அதிகாரங்களையும் கொடுத்துவிட்டு ஓரமாக இருக்கிறார் என்பதே இவற்றின் சுருக்கம்! இதற்காக பல பொய்களை கலந்து எழுதியிருக்கிறார்கள். இவற்றில் குர்ஆனையோ ஹதீசையோ உள்நுழைக்காமல், ஒரு கிறிஸ்தவருக்கு இதில் கூறப்பட்டதை அவர் மத்தேயுவை படித்தால் புரிந்துவிடும்! 1.அவர் ஆப்ரகாமின் குமாரனும் தாவீதின் குமாரனுமானவர்- மத்தேயு 1:1  இவர்களின் பிள்ளை கடவுளாக முடியாது. 2.இவரது பரம்பரையிலேயே விபச்சாரம் செய்தவர்களும் வேசிகளும் இடம் பெறுகிறார்கள். இதில் கூறப்படும் நான்கு பெண்களில் மூவரும் ஒழுக்கத்தில் குறையுள்ளவர்கள். (மத் 1:3,5,6) விபச்சார சந்ததி மட்டுமல்ல.. எந்த சந்ததியிலும் இறைவன் வர இயலாது. 3.இவர் ஒரு பெண்ணுக்கு பிறந்தார். அவரது ப...