இடுகைகள்

எபிரேயர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எபிரேயர் படி இயேசு கடவுள் அல்ல

 எபிரேயர் படி இயேசு கடவுள் அல்ல ———— இந்த புத்தகம் யாரென்று அறியப்படாத நபர் மூலமாக எபிரேயர்களுக்கு எழுதப்பட்ட கடிதம் 1.இதை எழுதிய ஆசிரியர் தேவன் வேறு இயேசு வேறு என வித்தியாசப்படுத்துகிறார். அதாவது இயேசவை தன் வாரிசாக தேவன் நியமித்தார் என்கிறார். அதாவது சொந்த பிள்ளை என்கிறார். இயேசு மூலமாக தேவன் உலகங்களை படைத்தார் என்கிறார். சோ இயேசு வேறு தேவன் வேறு. ¹ “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன்,” ² “இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.” (எபிரேயர் 1:1-2) ———– 2.மீண்டும் இயேசு வேறு தேவன் வேறு என வேறு பிரிக்கிறார். இயேசு தேவனுடைய வலது பக்கத்தில் உட்கார்ந்தாராம்! குறிப்பாக தேவன் இனப்பெருக்கம் செய்த குழந்தை இயேசு என்பதாக இவர் கருதுகிறார். ³ “இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை ...