புதன், 4 மே, 2016

முஹம்மது நபி கள்ளத்தீர்க்கதரிசியா ? 1

ஏக இறைவனின் திருப்பெயரால்..!

படைப்புகள் அனைத்தையும் செவ்வையாய் படைத்து பரிபாலித்து போற்றக்கூடிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்❕

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக❕

பலதாரமணம் செய்வது தவறு,பாவம்

முஹம்மது நபியவர்கள் பலதாரமணம் செய்தார்கள் எனவே அவர் கள்ளத்தீர்க்கதரிசி என அநேக கிறிஸ்தவர்கள் கூற கேட்டுள்ளேன்

அன்பிற்குரியவர்களே!

உங்கள் பைபிள் அப்படி போதிக்கிறதா ?

எது பாவம் ❔

4 பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான். நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.
1 யோவான் 3 :4 

17 அநீதியெல்லாம் பாவந்தான். என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுண்டு.
1 யோவான் 5 :17

• பாவம் என்பது தேவன் விதித்த கட்டளைகளை மாம்ச ரீதியாகவோ ஆத்ம ரீதியாகவோ மீறுவதாகும்

∆ 13 நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது,
→ நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது.←
ரோமர் 5 :13

↑→ ஒன்றை குறித்த சட்டம் இல்லையேல் அது பாவமாக எடுத்துக்கொள்ளப்படாது.

√ பலதாரமணத்தை தேவன் தடை செய்ததாய் அல்லது பாவம் என குறிப்பிட்டதாய் சட்டமோ வசனமோ பைபிளில் உண்டா ⁉

அவ்வாறில்லாத பட்சத்தில் எதனடிப்படையினில் அதனை விமர்சிக்கிறீர்கள்❓ குற்றமென்கிறீர்கள்❓

16 வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவையாயிருக்கிறது.

2 தீமோத்தேயு 3 :16-17 

இப்படி மனிதனுக்கு தேவையான அனைத்தும் அருளப்பட்ட தேவ ஆவியினால் வழங்கப்பட்ட வசனங்களை காட்டிலும் நீங்கள் அறிவில் தேறினவர்களோ !?

இன்னும் பலதாரமணம் தவறு அப்படி செய்பவர் கள்ளத்தீர்க்கதரிசி⁉ அவரால் வரும் வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்பீர்களேயானால் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் அவர்களின் வெளிப்பாடுகள் அவர்களால் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்கள் என அனைத்தையும் நிராகரித்து விட்டு முஹம்மது நபியவர்களை விமர்சிக்க வாருங்கள்..!

பலதாரமணத்தை அனுமதிக்கும் சட்டங்கள் கீழ்காணும் வசனங்கள் 

பழைய ஏற்பாடு
உபாகமம் 21 : 15 , 15: 17
எண்ணாகமம் 31 : 18, 46

2 சாமுவேல் 12 : 8
1 ராஜாக்கள் 15: 5

நியாயபிரமாணத்தில் உள்ள சட்டங்கள் சரி என்று புதிய ஏற்பாட்டில் பார்க்க:

மத்தேயு 5:17

மத்தேயு 22 : 24 - 26

ரோமர் 7: 12, 16

காலாத்தியர் 3: 21 , 5: 3 , 4 .

முஹம்மது நபி கள்ளத்தீர்க்கதரிசியா ?

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ !

✴#முஹம்மது நபியவர்கள் கள்ளத்தீர்க்கதரிசியா❕❔❔

பகுதி - 2⃣

அல்குர்ஆன் மனைவியை அடிக்க அனுமதி அளிக்கிறது.மனைவியை அடிக்க அனுமதி அளிப்பவர் எப்படி இறைவனாவார் ?

இந்த வெளிப்பாட்டை கொண்டு வந்தவர் எப்படி தீர்க்கதரிசியாக இருக்க முடியும் ?

என்ற மாபெரும் அறிவுப்பூர்வமான கேள்வியை முன் வைத்து ஈசாகுரான் போன்ற இனையமேதைகள் முஹம்மது நபியவர்கள் நபி கிடையாது என கூறி வருகின்றனர்.😜😄😂

என்னவென்று சொல்ல இவர்களின் அறியாமையை ❕

° மனைவியை அடிக்க அனுமதி அளிப்பவர் கள்ளத்தீர்க்கதரிசி என பைபிலில் எங்காவது குறிப்பிடப்பட்டுள்ளதா ❔

• பைபிலில் இச்செயலை தேவனோ இயேசுவோ கண்டித்ததாக ஏதேனும் ஒரு வசனமாகிலும் உண்டா ❔

இல்லை, அவ்வாறிருக்க இதன் அடிப்படையில் ஒருவர் கள்ளத்தீர்க்கதரிசி என எங்கனம் தீர்ப்பு கொடுக்கின்றீர்கள் ❔

தேவனை காட்டிலும் நீங்கள் அறிவில் தேறினவர்களோ ❔

மேலும் வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது.தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,

2 தீமோத்தேயு 3 :16

• மனிதன் எல்லா நல்ல காரியங்களும் செய்யும்படியாகவும் வேத வசனங்கள் தேவ ஆவியினால் அருளப்பட்டு விட்டது என பைபில் கூறுகிறது.அவ்வாறிருக்க ஒரு தீர்க்கதரிசியை நல்லவரா கள்ளரா என சொல்ல தேவ ஆவி மறந்து விட்டது என்கிறீர்களா ❔

ஆம் என்றுவிடாதீர் கிறிஸ்தவர்களே ஆவிக்கெதிரான தூஷனம் மன்னிக்கப்படாது.(லூக்கா 12:10)

சரி இவர்கள் வாதத்திற்கு இஸ்லாமிய நிலைபாட்டை பார்க்கும் முன் பைபில் நிலைபாட்டை பார்க்கலாம்😉

-- உன் ஆசை புருசனை பற்றியிருக்கும்.அவன் உன்னை ஆண்டு கொள்வான். ஆதி 3:16

∆ மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள்.கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான். அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்.
(எபேசியர் 5:22-23 )

பைபில் பெண்கள் ஆண்களுக்கு சேவை செய்யவே,மகிமைபடுத்தவே படைக்கப்பட்டனர் என்கிறது.
( 1 கொரிந்தியர் 11:6-7 )

மனைவி கணவனுக்கு கட்டுப்பட மறுத்தால்...?
அவள் பொல்லாதவள் தானே!

அவர்களை குறித்து பைபில் காயத்தின் தழும்புகளும், உள்ளத்தில் உறைக்கும் #அடிகளும், பொல்லாதவனை #அழுக்கறத்_துடைக்கும்.
நீதிமொழிகள் 20 :30

மனைவி கொஞ்சம் சண்டைக்காரியா இருந்தா அவள் விட வீட்டின் ஒரு மூலை சிறந்தது என்கிறார் தேவ ஆவி

24 சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும் வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம்.
நீதிமொழிகள் 25 :24 

அடப்பாவி 😀

இதாச்சும் பரவாயில்லை வீட்டு மூலை கூட வேணா காட்டுக்கு போனு சொல்றார் நீதிமொழிகள் 21:19

கொஞ்சம் டீப்பா போவோமா ❔

மனைவியை அடிப்பது குறித்து பைபில்:-

• மனைவி ஒருவேளை வேறு தேவனை சேவித்தால் அவளை கல்லால் அடித்து கொள்ளலாம்.
உபாகமம் 17:2-7;யாத் 22:20

• விபச்சாரத்தினிமித்தம் மனைவியை அடித்து கொள்ளலாம்.
உபா 22:22

மனைவியின் கையை கூட வெட்டலாம் அடுத்தவரின் ****யை கணவனை காப்பாற்ற பிடித்தால் உபா 25:11-12

➰முடிவுரை➰

• மனைவியை அடிக்க அனுமதி அளிப்பது தவரென பைபிலில் எங்கும் இல்லை

• அடிக்கலாம் கொல்லலாம் என பைபில் அனுமதி அளிக்கிறது

• அனுமதி அளிப்பவர் கள்ளத்தீர்க்கதரிசி எனில் அந்தோ பரிதாபம் தேவ ஆவி கள்ளத்தீர்க்கதரிசி❕

7 கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது, கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. சங்கீதம் 19 :7

இப்படி பைபில் சொல்ல அதற்கு மாற்றமாய் பிரசங்கிக்கும் ஊழியர்களே

மல்லாக்கப்படுத்து எச்சிலை துப்பினால் மூஞ்சியில் விழும் எனக்கூறி இப்பதிவு முடிக்கிறேன்..!

வியாழன், 10 மார்ச், 2016

கிறிஸ்தவம் விதியை மறுக்கிறதா ?

சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்வின் திருப்பெயரால்..!

அவனது சாந்தியும் சமாதானமும் நேர்வழியை பின்பற்றி வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற அனைவரின் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

அல்லாஹ்வுக்கே புகழனைத்தையும் உரித்தாக்கியவனாய் !

இஸ்லாமிய மார்க்கத்தை ஏளனம் செய்வதாக எண்ணிக் கொண்டு இன்றைய காலகட்டத்தில் கிறிஸ்தவர்கள் தாங்கள் நம்புகின்ற நம்பிக்கை கொள்ள வேண்டிய விஷயங்களையே மறந்தும் மறுத்தும் கேள்வியெழுப்பி வருகின்றனர் அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்று தான் #விதி !

விதியை குறித்து பைபிளினில் எந்த வசனமும் இல்லை !

விதியை குறித்து கிறிஸ்தவம் போதிக்கவில்லை !

இயேசு அதனை குறித்து எதனையும் சொல்லவேயில்லை !

எனவே விதி என்ற ஒன்று இல்லை என மறுதலிக்கும் கிறிஸ்தவர்களே !

உண்மையில் நீங்கள் மறுதலிப்பது கிறிஸ்தவத்தின் அடிப்படையை தான்!

உதாரணமாக சில வசனங்களை பார்க்கலாம்

• குழந்தை கருவுற்றது முதல் அதன் வளர் நிலைகள் என எல்லாமே தேவனால் முன்னமே எழுதப்பட்டிருக்கிறது.

16 என் கருவை உம்முடைய கண்கள் கண்டது, என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது. சங்கீதம் 139 :16 

• எது நடந்தாலும் அதில் தேவனின் சித்தம் இல்லாமலில்லை!
பறவை வானில் பறப்பது உட்பட⁉

29 ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. மத்தேயு 10 :29

•  தீர்சனங்களும், தீர்க்கதரிசிகளும் கூட எழுதப்பட்டபடியே நடக்கிறார்கள்

7 அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார். எபிரேயர் 10 :7 

அவ்வளவு ஏன் விதி உண்டு என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கையான சிலுவைபலியே !

ஆம்

தான் கொலை செய்யப்பட வேண்டியது விதி என இயேசு போதித்தார் !

21 அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத் தொடங்கினார். மத்தேயு 16 :21 

தீர்மானிக்கப்பட்ட(#விதிப்)படியே மனுஷகுமாரன் போகிறார், ஆனாலும் அவரைக் காட்டிக்கொடுக்கிற மனுஷனுக்கு ஐயோ என்றார். லூக்கா 22 :22

இதைவிட மறுக்கவியலாத வசனம் ஏது ?

• விதிக்கப்பட்ட யாவையும் நிச்சயமாக நடக்கும் என இயேசு கூறுகிறார்

7 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படும்போது கலங்காதேயுங்கள், இவைகள் சம்பவிக்கவேண்டியதே. ஆனாலும், முடிவு உடனே வராது. மாற்கு 13 :7
இதே கருத்து மத்தேயு 24:6லும் சொல்லப்படுகிறது.

தம்முடைய விதியின்படி தாம் செல்லவேண்டிய நேரம் குறித்து இயேசு அறிந்திருந்தார்

1 பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார். யோவான் 13 :1 

• இரட்சிப்பு கூட தேவனின் சித்த்ப்படியே முன்னமே குறிக்கப்பட்டது தானே தவிர கிரியைகலினாலே அல்ல!

9 அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை #இரட்சியாமல், #தம்முடைய_தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார். 2 தீமோத்தேயு 1 :9 

இரட்சிப்பும் முன்னமே தீர்மானிக்கப்பட்டவர்களுக்கே !

12 தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய #தீர்மானத்தின்படியே, நாங்கள் #முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி #தெரிந்துகொள்ளப்பட்டோம். எபேசியர் 1 :12 

தேவனின் சித்தப்படி, தேவனால், தேவன் முன் குறித்தபடியே முன்குறித்தவர்களுக்கே இரட்சிப்பு !

இதனை மனதிற்கொண்டு தான் இயேசு இவ்வாறான பிரார்த்தனையை செய்கிறார்

39 சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். மத்தேயு 26 :39 

பைபிளின் கூற்றுப்படி தான் மரணிக்க வேண்டும் என்பதை இயேசு அறிந்திருந்ததாக  சில வசனங்கள் இருப்பினும் அதனை  சித்தமானால் தன் விதியை மாற்றுமாறு பிரார்த்தனை செய்கிறார்(ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா என்பது வேறு)

ஆக விதியை குறித்து நீங்கள் என்னவெல்லாம் கேள்வி எழுப்புவீர்களோ அவையனைத்தும் நீங்களும் நம்பிக்கை கொள்ள வேண்டியவையே !

இன்ஷா அல்லாஹ்..!

ஆய்வுகள் இனியும் தொடரும்..!

அல்லாஹ் வழிதவறச்செய்கிறான் என்பதன் விளக்கம்

1.மனிதனுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது  --மனிதனுக்கு இறைவன் வழி காட்டியுள்ளான். ஒன்று அவன் நன்றியுள்ளவனாக இருக்கிறான் அல்லது காஃபிராக இருக்கிறான...