சட்டத்தை/வசனத்தை மாற்றும் இறைவனும் கிறிஸ்தவர்களின் அறியாமையும்
சட்டத்தை மாற்றும் இறைவனும் கிறிஸ்தவர்களின் அறியாமையும்!! ------------------------------------------------ முஸ்லிம்களாகிய நாம் ஒவ்வொரு தொழுகையிலும் இறைவினிடம் கேட்கும் பிரார்த்தனை என்னவென்றால், " எங்களை நேரான வழியில் செலுத்துவாயாக! நீ யார் மீது அருள்புரிந்தாயோ அத்தகையோரின் வழியில். (அது) உன் கோபத்திற்குள்ளானவர்களினதும் வழிதவறியவர்களினதும் வழியில் அல்ல !" (1:6-7) இதில் இறைவனின் கோபத்திற்குள்ளானவர்கள் யூதர்கள் ஆவர்.. வழிதவறியவர்கள் கிறிஸ்தவர்கள் ஆவர். அவர்களை போன்றவர்களும் இதில் அடங்குவர். கிறிஸ்தவர்களை வழிதவறியோர் என கூற காரணம், அவர்களின் அறியாமையாலும் தெளிவின்மையாலும் நேரான வழியைவிட்டும் விலகிவிட்டனர் என்பதாலேயே ஆகும். இவர்களின் இவ் அறியாமையே அவர்களை நேர்வழியிலிருந்து விலக்கிவிட்டது. அவ் அறியாமையை அறிவு என்பதாக நினைத்தும்விடுவதுண்டு. அந்த வகையில் இறைவன் பல சட்டங்களை காலத்துக்கு காலம் மாற்றியுள்ளான். இது சாதாரண வேத அறிவு உள்ள ஒருத்தனால் இலகுவாக புரிந்துவிடும். ஆனால் இந்த கிறிஸ்தவர்களோ , தமக்கு அதில் அறிவு இல்லாததால் அப்படியொன்றே நடக்கவில்லை என அ...