இடுகைகள்

ஜனவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கர்த்தரைவிட யாக்கோபு பெரியவரா?

யாக்கோபு கர்த்தரைவிட பெரிய ஆளாயிருப்பாரோ?? ------------------------------------------------ புதிய ஏற்பாட்டு புத்தகங்களின்/கடிதங்களின் ஆசிரியர்களுக்கு போதியளவு பழைய ஏற்பாட்டில் ஞானம் இல்லை என்பதை இரண்டையும் படிப்போரால் இலகுவாக புரிந்துகொள்ளலாம். உதாரணமாக பாம்பை நோக்கி , உனக்கும் பெண்ணுக்கும் , உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை ஏற்படுத்துவேன்.(ஆதி 3:15) இங்கே பெண் எனப்படுபவள் ஹவ்வா  என எபிரேய பெயர்கொண்ட தமிழ் ஏவாள் ஆவார். ஆரம்பத்தில் அவருக்கு பெயர் இடப்படவில்லை.. பிறகு தான் ஆதாம் அவரது வாழ்வே இவளாக இருப்பதால் "வாழ்வு" என பொருள்படும் ஹவ்வா (ஏவா) என்ற எபிரேய பெயரை இடுகிறார். (ஆதி 3:20) பாம்பு ஏவாளை ஏமாத்தியதால் (?) , கர்த்தர் பெண்ணுக்கும் பாம்புக்கும் சண்டைய மூட்டிவிடுகிறார் (இதனால் ரெண்டுபேருக்கும் ஒத்துவராது!! நம்புங்க). அதனுடன் சேர்த்து பெண்ணான ஏவாளின் வித்துக்கும் பாம்பின் வித்துக்கும் சண்டைய மூட்டுறார். அதாவது பெரிய பாம்பும் பெரிய பெண்ணும் செஞ்சதுக்காக , பாம்பின் குட்டிகளும் பெண்ணின் குட்டிகளும் (பிள்ளைகளும்) பகையாக இருப்பாங்களாம். பாம்பின் தலையை...

இயேசு இறைமகனா??

இயேசு இறைமகனா?? ------------------------------------------------ இயேசுவை கடவுளின் மகன் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். ஆனால் இது பழைய ஏற்பாட்டில் கடவுளை வணங்கிய இறையடியார்களுக்கு வழங்கப்பட்ட பெயரே ஆகும். மற்றபடி வேறு எதுவும் இல்லை. பல கிறிஸ்தவர்கள் , இயேசு ஆரம்பமே இல்லாமல் இருக்கிறார் என்றும் கடவுள் என்றும் நம்புகிறார்கள். ஆனால் இயேசு தன்னை எங்குமே கடவுள் என்றோ கடவுளின் அவதாரம் என்றோ சொல்லவில்லை. மேலும் இயேசு கி.மு. 4வது வருடத்தில் கன்னி மரியாளிடம் பிறந்தார். இதைப்பற்றி யோவான் சொல்லும்போது, "வார்த்தை  மாம்சமானது/மனிதரானது" (யோவான் 1:14) அதாவது இயேசு கி.மு. 4 வரை பூமியிலோ வானத்திலோ எங்குமே இருக்கவில்லை அதாவது வார்த்தை மாம்சமாக முனஆகும் யேசு என்ற நபரே இல்லை!! சரி... வார்த்தை என்பது யாது?? இதைப்பற்றி  ( http://answeringchristian.blogspot.com/2020/01/blog-post.html )  இல் பார்வையிடவும்! தேவன் தன் கட்டளையான "ஆக-கடவது" என்ற வார்த்தைமூலம் சகலதையும் படைத்தார். அதாவது அவர் படைக்க நாடினால், "ஆக கடவது" என்று கட்டளையி...

காப்பி அடித்தது யார்? எபிரேயர் 1

காப்பி அடித்தது யார்?? ------------------------------------------------ கிறிஸ்தவ புதிய ஏற்பாட்டில் , யூதர்களின் பழைய ஏற்பாட்டை காப்பியடித்து எழுதியதில்  ஒரு புத்தகத்தின் அதிகாரத்தை பார்ப்போம். காப்பி எனப்படுவது யாது என முதலில் தெரிந்துகொள்ளவேண்டும்.. ஒரு விசயம் நடந்தது என ஒருத்தர் சொல்கிறார். 10 வருடத்தின் பின் இன்னொருத்தர் அதே நிகழ்வை சொல்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள். இதை நம்மால் காப்பி என கூற முடியாது... காரணம்  நடந்ததை நடந்தபடி தான் சொல்ல இயலும். முதல் மனிதன் ஆதாம் என பைபிள் சொன்னால், அதே விசயத்தை நாமும் சொன்னால் அது காப்பி ஆகாது. ஏனெனில் ஆதாம் தான் முதல் மனிதர் என்று இருக்கும்போது அப்படி தான் சொல்லவேண்டும்.... அதற்கு பதிலாக பாதாம் தான் முதல் மனிதர் என பெயரை மாற்றி சொல்ல இயலாது. காப்பி என்பது என்னவென்றால்,, பைபிள் முதல் மனிதன் கி.மு 4114இல் படைக்கப்பட்டான், கி.மு 2457 இல் உலகம் முழுவதிம் வெள்ளம் ஏற்பட்டதால், உலகில் வெறுமனே 8 மனிதர்களும் சில மிருக பறவை சோடிகளும் மட்டுமே எஞ்சினர் என பைபிள் வரலாற்றை தப்பாக சொல்லும்போது, அதையும் நாம் கூறினால்  அப்...