வெள்ளி, 31 ஜனவரி, 2020

கர்த்தரைவிட யாக்கோபு பெரியவரா?

யாக்கோபு கர்த்தரைவிட பெரிய ஆளாயிருப்பாரோ??
------------------------------------------------



புதிய ஏற்பாட்டு புத்தகங்களின்/கடிதங்களின் ஆசிரியர்களுக்கு போதியளவு பழைய ஏற்பாட்டில் ஞானம் இல்லை என்பதை இரண்டையும் படிப்போரால் இலகுவாக புரிந்துகொள்ளலாம்.



உதாரணமாக பாம்பை நோக்கி , உனக்கும் பெண்ணுக்கும் , உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை ஏற்படுத்துவேன்.(ஆதி 3:15)


இங்கே பெண் எனப்படுபவள் ஹவ்வா  என எபிரேய பெயர்கொண்ட தமிழ் ஏவாள் ஆவார்.

ஆரம்பத்தில் அவருக்கு பெயர் இடப்படவில்லை.. பிறகு தான் ஆதாம் அவரது வாழ்வே இவளாக இருப்பதால் "வாழ்வு" என பொருள்படும் ஹவ்வா (ஏவா) என்ற எபிரேய பெயரை இடுகிறார். (ஆதி 3:20)


பாம்பு ஏவாளை ஏமாத்தியதால் (?) , கர்த்தர் பெண்ணுக்கும் பாம்புக்கும் சண்டைய மூட்டிவிடுகிறார் (இதனால் ரெண்டுபேருக்கும் ஒத்துவராது!! நம்புங்க). அதனுடன் சேர்த்து பெண்ணான ஏவாளின் வித்துக்கும் பாம்பின் வித்துக்கும் சண்டைய மூட்டுறார்.

அதாவது பெரிய பாம்பும் பெரிய பெண்ணும் செஞ்சதுக்காக , பாம்பின் குட்டிகளும் பெண்ணின் குட்டிகளும் (பிள்ளைகளும்) பகையாக இருப்பாங்களாம்.

பாம்பின் தலையை பெண்ணின் குட்டி நசுக்குமாம். பெண்ணின் குட்டியின் குதிகாலை பாம்பு நசுக்குமாம் (கொட்டுமாம்!)!

இந்த கதையை அறைகுறையாக படித்த புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள், உடனே பெண்ணின் குட்டி தான் இயேசு என அடித்துவிட்டனர்.

அப்படி பார்த்தால் இயேசு மரியாவின் குட்டி.

ஆனா பிரச்சின ஏவாளுக்கும் பாம்புக்கும் என்பதையே மறந்து மேற்கோள் காட்டுகிறார்கள்.

ஏவாளின் குட்டிக்கு தான் பிரச்சினை.. ஆனா சம்பந்தமே இல்லாமல் மரியாளின் குட்டியை இங்கே செருகியிருக்கிறார்கள்.

அப்படிபார்த்தால், பாம்புக்கும் மரியாளுக்கும் தான் பகையை ஏற்படுத்தியிருக்கிறார் கர்த்தர்னு தான் வரும்.

இப்படி போதிய ஞானம் இன்றி பழைய கதைகளை இயேசுவை குறிப்பது அவரை குறிப்பது இவரை குறிப்பது என புதிய ஏற்பாட்டில் நிறைய காணலாம்.


ஆனால் நம் கிறிஸ்தவர்களோ, ஆதி அப்போஸ்தலர்கள் வேதத்தை தாய் மொழியில் படித்து ஆவிதூண்டி புதிய ஏற்பாட்டை எழுதினர் என்பார்கள்.

இவ்வாதத்தை புதிய ஏற்பாட்டையும் பழைய ஏற்பாட்டையும் ஒப்பிட்டு படிக்காத மக்களாலேயே கூற முடியும்.





இப்படி தப்பு தப்பாக பழைய ஏற்பாட்டை சொருகி தான் புதிய ஏற்பாட்டின் பெரும்பகுதி உள்ளது.


அந்த வகையில் எபிரேய புத்தக ஆசிரியர்,




13 ஆபிரகாமுக்குத் தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமதுபேரிலே தானே ஆணையிட்டு,
எபிரேயர் 6:13


என்கிறார்.


அதாவது அவர் பழைய ஏற்பாட்டை அறைகுறையாக படித்துவிட்டு கருத்து கூறும்போது,

ஆப்ரகாமிடம் ஆணையிடும்போது, கர்த்தரைவிட பெரிய ஆள் யாரும் இருக்கவில்லை.


அதனால் தன்மேல் ஆணையிட்டார் என்கிறார் ஆசிரியர்.




இவர் பழைய ஏற்பாட்டை படித்திருந்தால் இவ்வாதத்தை வச்சிருக்கவே மாட்டார்.

இவர்கள் Septuagint என்ற கிரேக்க பழைய ஏற்பாட்டிலிருந்து தான் வசனங்களை மேற்கோள் காட்டுவார்கள். எபிரேய பைபிளுக்கு சம்பந்தமே இருக்காது.



கிரேக்க பிரதிகளை படித்துவிட்டு ஆசிரியர் இவ்வாறு எழுதியுள்ளார்.


எபிரேயத்தில் படித்திருந்தால், இவரது குட்டு அவருக்கே புரிந்திருக்கும்.



ஏனெனில் கர்த்தர் யாக்கோபின் மகிமையில் ஆணையிட்டுள்ளார்.


🤣🤣🤣


"அவர்கள் செய்கைகளையெல்லாம் நான் ஒருபோதும் மறப்பதில்லையென்று கர்த்தர் யாக்கோபுடைய மகிமையில் ஆணையிட்டார்"
(ஆமோஸ் 8:7)



இதன்படி பார்த்தால், யாக்கோபு கர்த்தரைவிட பெரிய ஆளாக இருப்பார் போல என்ற முடிவுக்கு தான் எபிரேய புத்தகத்தின் ஆசிரியர் வரவேண்டி இருக்கும்.




உடனே நம்ம விஞ்ஞானிகள், அங்கே யாக்கோபின் மகிமை என்பது கர்த்தரே தான் என்று போலியாக சமாளிக்க பார்ப்பார்கள்.

ஆனால் உண்மையில் அதற்கு செறுப்படியை பைபிளே கொடுத்துவிடும்.




"நான் யாக்கோபின் மேன்மை/மகிமையை வெறுத்து, அவனுடைய அரமனைகளை பகைக்கிறேன். நான் நகரத்தையும் அதின் நிறைவையும் ஒப்புகொடுத்துவிடுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் தம்முடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டார் என்பதை சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறார்"
(ஆமோஸ் 6:8)


இதன்படி கர்த்தர் தன்னையையே வெறுக்கிறாரா?? இவர்கள் வாதப்படி கர்த்தர் தன்னை தானே வெறுத்துக்கொள்கிறார் என்ற காமடி தான் வரும்.


எபிரேய பைபிளில் ஆமோஸ் 6:8, 8:7 ஆகியவற்றில் பாவிக்கப்பட்ட "யாக்கோபின் மகிமை/மேன்மை" என்பதற்கு ஒரே வார்த்தைப்பிரயோகமே உள்ளது.


இதன்படி பார்த்தால், கர்த்தர் தன்னை தானே வெறுக்கிறார் என்று வரும்.


யாக்கோபின் மகிமை/மேன்மை என்பது கர்த்தர் அல்ல என தெளிவாகவே புரிந்துவிடும்.

யாக்கோபின் மேன்மை என்பது யாக்கோபின் பண்பு ஆகும்.

யாக்கோபின் பண்பாகிய மகிமை கர்த்தரைவிட பெரிய ஆள் போல..

இதற்கு காரணம் பழைய ஏற்பாட்டில் அறிவின்றி கருத்துச்சொல்ல வந்த எபிரேய புத்தகத்தின. ஆசிரியரே ஆவார்.



இதனோடு இன்னும்ஙசில வசனங்களும் உள்ளன.



"வெறுமையாக்குகறவர்கள் அவர்களை வெறுமையாக்கி, அவர்களுடைய திராட்சைக்கொடிகளை கெடுத்துப்போட்டாலும், கர்த்தர் யாக்கோபின் மகிமையை திரும்பி வரப்பண்ணுவதுபோல்,  இஸ்ரேலின் மகிமையையும் திரும்பி வரப்பண்ணுவார்."
(நாகூம் 2:2)

இழந்த யாக்கோபின் மகிமை திரும்பி வரப்பண்ணுவது போல இஸ்ரேலின் மகிமையையும் வரபண்ணுவதாக சொல்லுது.

பார்த்தவுடனே புரிந்துவுடும், யாக்கோபின் மகிமை என்பது கர்த்தர் அல்ல... மாறாக யாக்கோபின் உயர்வு பண்பு என்று.



அதேபோல ,

"நம் உரிமைச்சொத்தை அவர் நமக்கு தேர்ந்து அளித்தார். அது அவர் அன்புகூறும் யாக்கோபின் மகிமை/பெருமை ஆகும் (சேலா)"
சங்கீதம் 47:4


இவற்றின் படி பார்த்தாலே யாக்கோபின் மகிமை என்பது கர்த்தர் அல்ல என தெளிவாக புரிந்துவிடிம்




பழைய ஏற்பாட்டில் போதிய ஞானமற்ற ஆசிரியர்களே புதிய ஏற்பாட்டை எழுதியதால் தான் இப்படி எழுதியுள்ளார்..

அவருடைய கூற்றுப்படி பார்த்தால், யாக்கோபு கர்த்தரைவிட பெரிய ஆள் என்று தான் முடிவெடுக்க வேண்டவரும்.


ஆப்ரகாமின் பேரனே யாக்கோபு... ஆப்ரகாம் காலத்தில் கர்த்தரைவிட பெரிய ஆள் இல்லாதிருந்திருக்கும். யாக்கோபின் காலத்தில் கர்த்தரைவிட யாக்கோபு பெரியவர் என்பதால் கர்த்தர் யாக்கோபின் மகிமையில் ஆணையிட்டார் என்று முடிவு எடுக்கவேண்டி வரும்.



(கர்த்தரோட சண்டையில் ஜெயிச்சதால் இந்த நிலை வந்திருக்கலாமோ தெரியல. ஆதி 32:24-30)


சிலர் சம்பந்தமே இன்றி உபாகமம் 32:29 ஐ ஆதாரம் காட்டி இதை திசைதிருப்ப பார்ப்பார்கள்.

அவர்களுக்கும் பழைய ஏற்பாட்டில் ஞானம் இல்லாததே இவ்வாதத்தை வைக்க காரணம்.




ஏனெனில் அதில் கர்த்தரை யாக்கோபின் பட்டயம் (வெட்டுக்கத்தி) என்று தான் சொல்கிறது.


ஆமோஸ் 8:7 "யாக்கோபின் கத்தியின்மேல் ஆணையிடுகிறேன" என்று வந்திருந்தால் இவ்வாதம் நியாயம்.


ஆனால் அப்படி இல்லை.... இவர்களுக்கும் பழைய ஏற்பாட்டில் ஞானமில்லை... இவர்களது அப்போஸ்தலர்களுகும் ஞானமில்லை.


ஆனால் கதைமட்டும் எழுதுவர், யூதருக்கே டஃப் கொடுத்தார் இயேசு  யூதருக்கே டஃப் கொடுத்தார் பவுல் என்று..

ஆனால் கதைகளை படித்தால் காப்பியாகவே உள்ளது இயேசுவின் சில உபதேசங்களை தவிர

புதன், 29 ஜனவரி, 2020

இயேசு இறைமகனா??

இயேசு இறைமகனா??

------------------------------------------------



இயேசுவை கடவுளின் மகன் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள்.


ஆனால் இது பழைய ஏற்பாட்டில் கடவுளை வணங்கிய இறையடியார்களுக்கு வழங்கப்பட்ட பெயரே ஆகும்.

மற்றபடி வேறு எதுவும் இல்லை.


பல கிறிஸ்தவர்கள் , இயேசு ஆரம்பமே இல்லாமல் இருக்கிறார் என்றும் கடவுள் என்றும் நம்புகிறார்கள்.


ஆனால் இயேசு தன்னை எங்குமே கடவுள் என்றோ கடவுளின் அவதாரம் என்றோ சொல்லவில்லை.


மேலும் இயேசு கி.மு. 4வது வருடத்தில் கன்னி மரியாளிடம் பிறந்தார்.



இதைப்பற்றி யோவான் சொல்லும்போது,


"வார்த்தை  மாம்சமானது/மனிதரானது" (யோவான் 1:14)

அதாவது இயேசு கி.மு. 4 வரை பூமியிலோ வானத்திலோ எங்குமே இருக்கவில்லை


அதாவது வார்த்தை மாம்சமாக முனஆகும் யேசு என்ற நபரே இல்லை!!



சரி... வார்த்தை என்பது யாது??

இதைப்பற்றி

 ( http://answeringchristian.blogspot.com/2020/01/blog-post.html)  இல் பார்வையிடவும்!



தேவன் தன் கட்டளையான "ஆக-கடவது" என்ற வார்த்தைமூலம் சகலதையும் படைத்தார்.

அதாவது அவர் படைக்க நாடினால், "ஆக கடவது" என்று கட்டளையிடுவார். அது உடனே ஆகிவிடும்.



¤தேவன் வெளிச்சம் உண்டாக கடவது என்றார். அது உண்டாயிற்று.
(ஆதி 1:3)
¤ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாக கடவது என்றும் அது ஜலத்திலிருந்து ஜலத்தை பிரிக்க கடவது என்றார்
(ஆதி 1:6)
இது போன்று ஆதி 1:9 1:11 1:14 இலும் காணலாம். அதாவது பூமி தோன்றியது வானம் தோன்றியதெல்லாம் இப்படி என அங்கே கூறப்பட்டுள்ளது.
மேலும்,
சங்கீதம் 148:5
"அவைகள் கர்தரின் நாமத்தை துதிக்க கடவது. அவர்
#கட்டளையிட அவைகள் படைக்கபட்டது"
சங்கீதம் 33:6 "கர்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வ சேனைகளும் உண்டாயின"
இவற்றின்படி பிதாவாகிய ஏக இறைவன் படைக்க நாடியபோது "ஆகக்கடவது" (அரபியில் "குன்" என்று குர்ஆன் சொல்கிறது) என கட்டளையிட்டார்.
அவை உடனே தோன்றிவிட்டன. உண்டாகிவிட்டன.



இந்தபடி இயேசுவை உண்டாக்க நாடிய இறைவன், மரியாளிடம் கர்ப்பமாவதற்கு ஆவியை அனுப்பி செய்யவேண்டியதை கட்டளையிட்ட பின்,

"ஆக கடவது" என்ற கட்டளையை மரியாளிடம் போட்டார். அதாவது கர்ப்பம் தரித்து இயேசு பிறக்கட்டுமாக! என்பதே அதன் அர்த்தம்.


இதனால் இயேசு மரியாளிடம் பிறந்தார்.

இங்கே ஆக-கடவது என்ற வார்த்தை மூலம் மாம்சம்/மனிதர் மரியாளின் வயிற்றில் தோன்றியதால் தான் "வார்த்தை மாம்சமானது/மனிதரானது"  என யோவான் 1:14 சொல்கிறது. மேலும் இயேசு இவ்வார்த்தையின் மூலமாக மாம்சத்தில் பிறந்ததால் தான் கடவுளின் வார்த்தை என அழைக்கப்படுகிறார்.


ஆனால் கி.மு. 4 இற்கு முன் இயேசுவோ இயேசுவின் மாம்சமோ இருக்கவில்லை.



-----------------------

இயேசு கன்னியிடம் பிறந்ததால் இறைமகனா??

-----------------------


இயேசு கன்னி மரியாளிடம் பிறந்தார்.! ஆண்துனையின்றி மரியாள் கருவுற்றார்.


இதனால் நிறைய பேர் அன்னாரை இறைமகன் என வாதிடுகிறார்கள்.


ஆனால் இதற்காக ஒருவரை இறைமகன் என வாதிடுவது என்பது அர்த்தமற்றது ஆகும்.


ஏனெனில் ஆதாமை இறைவன் தாயும் தந்தையும் இல்லாமல் தன் சாயலில் படைத்தார்.(ஆதி 1:26-27)

ஏவாளை ஆதாம் என்ற ஆணிலிருந்து படைத்தார்.(ஆதி 2:20-24)


அதேபோன்று தான், தன் திட்டப்படி இயேசுவை மரியாளிடம் படைத்தார்.

இதன் அர்த்தமாவது இயேசு கருவில் மரியாளின் தொப்புள்கொடியால் மரியாளின் இரத்ததை உறிஞ்சியே வளர்ந்தவர் ஆவார்.


ஆதாமோ மண்ணினால் உண்டாக்கப்பட்டார்.  ஏவாளோ ஆதாமின் எலும்பிலருந்து உண்டாக்கப்பட்டார்

அதேபோன்று தான்  இயேசு மரியாளிடம் இறைவனால் உண்டாக்கப்பட்டார்.

இக்காரணத்துக்காக அவரை இறைமகன் என சொல்வதானால், அதற்கு மிக தகுதியானவர் ஆதாமே! ஏனெனில் அவரை இறைவன் நேரடியாக படைத்தார். ஆனால் இயேசுவை பெண்ணை கருவியாக ஆக்கி படைத்தார்.


எனவே இதற்காக அவரை இறைமகன் என வாதிடுவது அபத்தம் ஆகும்.... அப்படி வாதிட்டால் ஆதாமே முதலிடம் வருவார்


-----------------------

இறைவனுக்கு மகன் உண்டாக முடியுமா??

------------------------



இயேசு என்பவர் உட்பட சகல மனிதர்களும் இறைவனால் படைக்கப்பட்ட இறைவனது படைப்புகளே!


அப்படியிருக்க இறைவனுக்கு மகன் உண்டாக வேண்டுமானால், இறைவனுக்கு மனிதர்களில் மனைவி அவசியம். ஏனெனில் பெண்ணே பிள்ளை பெறுகிறாள். கணவன் அல்ல..

மனைவியிடம் பிறந்தாலே   பிள்ளை... இல்லாவிட்டால் அது படைப்பு.


மனைவியே அவனுக்கு இல்லாதபோது எப்படி பிள்ளை/மகன் உண்டாக முடியும்??

நிச்சயமாக முடியாது.


மரியாள் இறைவனது மனைவி அல்லவே... இறைவன் தூய்மையானவன்.

அப்படியிருக்க இயேசு இறைவனுடைய மகன் ஆக முடியாது.



-------------

இயேசுதன்னை இறைமகன் என கூறிய அர்த்தம்?
------------- 





பைபிளில் யேசு எந்த அர்த்தத்தில் இறைமகன் (son of god) தன்னை அழைக்கிறார் என்று அவரே சொல்கிறார்.





33 யூதர்கள் மறுமொழியாக, "நற்செயல்களுக்காக அல்ல, இறைவனைப் பழித்துரைத்ததற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம். ஏனெனில் மனிதானாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய்" என்றார்கள்.

34 இயேசு அவர்களைப் பார்த்து, "'நீங்கள் தெய்வங்கள் என நான் கூறினேன்" என்று உங்கள் மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா?


35 கடவுளுடைய வார்த்தையைப் பெற்றக் கொண்டவர்களே தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறார்கள். மறைநூல் வாக்கு என்றும் அழியாது.

36 அப்படியானால் தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான் என்னை " இறை மகன் "என்று சொல்லிக் கொண்டதற்காக "இறைவனைப் பழித்துரைக்கிறாய்" என நீங்கள் எப்படிச் சொல்லலாம்?

யோவான் 10:33-36


இதில் 36வது வசனத்தில் இயேசு தன்னை இறைமகன் என கூறியது எந்த அர்த்தம் என கூறுகிறார்.



அதாவது,

1. அவர் கடவுளால் அர்ப்பணிக்கப்பட்டார்.

2.கடவுளால் உலகுக்கு அனுப்பப்பட்டார்

(இதேபோல சீடர்களையும் உலகுக்கு அனுப்புவதாக இயேசு சொல்கிறார்.


14 உம் வார்த்தையை நான் அவர்களுக்கு அறிவித்தேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆதலால் உலகம் அவர்களை வெறுக்கிறது.


16 நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.

18 நீர் என்னை உலகிற்கு அனுப்பியது போல, நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன்.

யோவான்  17:14,16,18)





இந்த காரணத்துக்காகவே அவர் தன்னை இறைமகன்/தேவகுமாரன் என தன்னை கூறுகிறார்.

அதாவது தேவனால் அர்ப்பணிக்கப்பட்டு  உலகுக்கு அனுப்பப்பட்டதாலேயே.

மற்றபடி எதுவும் அல்ல..


---------

இயேசு மட்டுமா இறைமகன் என அழைக்கப்படிருக்கிறார்??

---------------------



*இஸ்ரேல்

22 நான் அவன் இதயத்தைக் கடினப்படுத்துவேன். அவன் மக்களைப் போகவிடமாட்டான். நீ பார்வோனிடம், "ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இஸ்ரயேல் என் மகன்; என் தலைப்பிள்ளை.

(விடுதலைப் பயணம் 4:22
யாத்திராகமம் 4:22)


இங்கே இஸ்ரேலை தன் மகன் என்கிறார்.



*இங்கே இஸ்ரேலை தலைப்பிள்ளை என சொல்லிவிட்டு அதற்கு முரணாக


9 அழுகையோடு அவர்கள் திரும்பி வருவார்கள்; ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன்; நீரோடைகள் ஓரமாக அவர்களை நான் நடத்திச் செல்வேன்; இடறிவிழாதவாறு சீரான வழியில் அவர்கள் நடக்கச் செய்வேன். ஏனெனில் நான் இஸ்ரயேலின் தந்தை, எப்ராயிமோ என் தலைப்பிள்ளை.

எரேமியா 31:9


எப்ராயீமை தலைப்பிள்ளை என்கிறார்.

மேலும் இஸ்ரவேலை ஓசியா 11:1-2 இலும் தன் மகன் என்கிறார்.



* ஆதாமையும் கடவுளின் மகன் என்கிறது


38 ஏனோசு சேத்தின் மகன்; சேத்து ஆதாமின் மகன்; ஆதாம் கடவுளின் மகன்.

லூக்கா நற்செய்தி 3:38


*விசுவாசிகளை தன் குமாரன் என்கிறார்


18 மேலும் நான் உங்களுக்குத் தந்தையாயிருப்பேன்; நீங்கள் எனக்குப் புதல்வரும் புதல்வியருமாயிருப்பீர்கள்" என்கிறார் எல்லாம் வல்ல ஆண்டவர்.

2 கொரிந்தியர் 6:18


* *தாவீதை தன் மகன் என்றும் பெற்றெடுத்தேன் என்றும் சொல்கிறார்.



7 ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்; 'நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 2:7


*சொலமோனை தன் மகன் என்கிறார்.


14 நான் அவனுக்கு தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் தவறுசெய்யும்போது மனித இயல்புக்கேற்ப அடித்து, மனிதருக்கே உரிய துன்பங்களைத் தருவேன்.

2 சாமுவேல் 7:14
15 உன் முன்பாக நான் சவுலை விலக்கியது போல, என் பேரன்பினின்று அவனை விலக்கமாட்டேன்.

2 சாமுவேல் 7:15



இப்படி நிறைய பேர் தேவகுமாரர்கள் இறைமகன்கள் என அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

உதாரணமாக ஆதியாகமம் 6:2-3
-------


ஏன் தேவ குமாரர்கள் என அழைக்கபடுகிறார்கள்?

---------------------



தேவகுமாரர்கள் என அவர்கள் அழைக்கப்பட காரணம், தேவனை அறிந்தவர்கள் அவரை தொழுது கட்டுப்பட்டு வாழந்தவர்கள் என்ற அர்த்தத்தில் ஆகும்.



இதேபோல சிலைகளை தேவதைகளை வணங்கியோரை அவர்களின் பிள்ளைகள் என பைபிள் அழைக்கிறது




11 யூதா நம்பிக்கைத் துரோகம் செய்தான்; இஸ்ரயேலிலும் எருசலேமிலும் அருவருப்பானவை நடந்தேறின. ஏனெனில், ஆண்டவர் விரும்பிய தூயகத்தைத் தீட்டுப்படுத்திவிட்டு, யூதா வேற்றுத் தெய்வத்தின் மகளை மணந்துகொண்டான்.

மலாக்கி 2:11



யூதா மக்கள் அந்நிய கடவுள்களை வணங்கியோரை திருமணம் முடித்தனர். அதை வேற்று தெய்வத்தின் மகளை மணந்ததாக சொல்லப்படுகிறது.



பேலியாலை வணங்கியோர் பேலியாலின் மகன்கள் பிள்ளைகள் என நியாயாதிபதிகள் 19:22 இல் கூறப்பட்டுள்ளது.



அதே போன்று கடவுளை அறிந்தவர்களையும் கடவுளை வணங்குவோரையும் கடவுளின் பிள்ளைகள்/குமாரரகள் என அழைக்கப்பட்டுள்ளது.
(ஆதியாகமம் 6:2,4 , யோபு 1:6..38:7 உபாகமம் 14:1 )


மேலும் தேவனை நம்பியோருக்கு தேவனை பிதாவாக இயேசு சொல்கிறார்.


48 ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்

மத்தேயு நற்செய்தி 5:48



*மேலும் இயேசு தேவனை என் பிதா உங்கள் பிதா என் தேவன் உங்கள் தேவன் என்று சொல்கிறார்.



17 இயேசு அவரிடம், "என்னை இப்படிப் பற்றிக் கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், "என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்" எனச் சொல்" என்றார்.

யோவான் நற்செய்தி 20:17



அப்படியிருக்க இயேசுவை மட்டும் இறைமகன் என கூறுவது தப்பு ஆகும்.



--------

இயேசு ஒரே மகனா?

-------------------


இயேசு ஒரே மகன் என யோவான் 3:16இல் கூறப்பட்டுள்ளது.


ஆனால் மேலே நிறைய பேர் இறைமகன்கள் என கூறப்பட்டுள்ளதை பார்த்தோம்.

அதேபோன்று, இயேசு தன்னை இறைமகன் என எந்த அர்த்தத்தில் சொன்னார் என்பதை யோவான் 10:'33-36 இல் இயேசு சொன்னதை பார்த்தோம்.



இயேசுவை ஒரே மகன் என யோவான் உட்பட பலர் நினைக்க காரணம் என்னவென்றால், பழைய ஏற்பாட்டில் "குமாரன்/மகன்" என்று கூறப்படுவதையெல்லாம் இயேசுவையே குறப்பதாக நம்பினர்.


உதாரணமாக, ஓசியா 11:1-2 இல் இஸ்ரவேலை குறித்து தன் மகன் என சொல்வதை, இயேசுவை குறித்த தீர்க்கதரிசனம் என மத்தேயு எழுதுகிறார்.


சங்கீதம் 2:7 இல் தாவீதை குறித்து சொல்லப்பட்ட வசனத்தை இயேசுவை குறிப்பதாக பவுல் எபிரேயர் 1 இல் கூறுகிறார்.


அதேபோல 2 சாமுவேல் 7:14-15 இல் சொலமோனை குறித்து மகன் என சொல்லப்பட்டதை இயேசுவை குறித்து சொன்னதாக எபிரேயர் 1 இல் எழுதுகிறார்.



இப்படி பழைய ஏற்பாட்டில் தனிநபரையோ தனி இனத்தையோ குறித்து இறைமகன்/தேவகுமாரன் என வரும் வசனங்களையெல்லாம்இயேசுவை குறிப்பதாக இவர்கள் போதிய ஞானமின்றி நினைத்துக்கொண்டனர். (ஆவிதூண்டி எழுதினர் என கிறிஸ்தவர்கள் அடித்துவிடுவர்)


இதனால் தான் இயேசுவை ஒரே குமாரன் என யோவான் 3:16இல் யோவான் கூறுகிறார். இயேசு அல்ல.



ஆனால் இயேசு தன்னை இறைமகன் என சொன்ன அர்த்தம் ,யோவான் 10:33-36 இல் இயேசுவே தன் வாயால் சொல்கிறார்
-----------


தேவ குமாரன் என்பது உவமையே!!

----------------


தேவனை வணங்கியோரும் அறிந்தோரும், இயேசுவும் தேவகுமாரர்கள் என அறியப்படுவது உவமையே ஆகும்.



இதேபோன்று கணவன் மனைவி உவமையும் உள்ளது.


அதாவது தேவன் தன்னை கணவனாகவும், அடியார்களை தம் மனைவியாகவும் உருவகித்து பைபிளில் கூறப்பட்டுள்ளது. (ஓசியா 2:2,16-19, எரேமியா 3:7-10)

அதேபோன்று தான் பிதா-குமாரன் என்ற உவமையும் பாவிக்கப்பட்டுள்ளது.



எனவே நாம் மற்றபடி நேரடி அர்த்தம் கொள்வது தவறான ஒன்று ஆகும்

--------------

இயேசு இறைவனின் அடியாரே!!

-------------------


13 ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, என்னும் நம் மூதாதையரின் கடவுள் தம் ஊழியர். இயேசுவைப் பெருமைப்படுத்தினார். ஆனால் நீங்கள் அவரைப் புறக்கணித்துப் பிலாத்திடம் ஒப்புவித்;துவிட்டீர்கள். அவன் அவருக்கு விடுதலைத் தீர்ப்பு அளிக்க முயன்றபோதும் நீங்கள் அவரை மறுதலித்தீர்கள்.

திருத்தூதர் பணிகள் 3:13
26 ஆகையால், நீங்கள் அனைவரும் உங்கள் தீயசெயல்களைவிட்டு விலகி ஆசி பெற்றுக்கொள்வதற்காகவே, கடவுள் தம் ஊழியரைத் தோன்றச் செய்து முதன்முதல் உங்களிடம் அனுப்பினார்.

திருத்தூதர் பணிகள் 3:26


இறைவனின் ஊழியரை இறைவனின் மகன் என்ற அடையாளத்தை கொண்டு தப்பாக புரிந்துவிட்டவர்கே அதிகமாக உள்ளனர்.


சத்தியத்தை தேடுவோர் அதை கண்டடைவர்.

வெள்ளி, 17 ஜனவரி, 2020

காப்பி அடித்தது யார்? எபிரேயர் 1

காப்பி அடித்தது யார்??

------------------------------------------------


கிறிஸ்தவ புதிய ஏற்பாட்டில் , யூதர்களின் பழைய ஏற்பாட்டை காப்பியடித்து எழுதியதில்  ஒரு புத்தகத்தின் அதிகாரத்தை பார்ப்போம்.



காப்பி எனப்படுவது யாது என முதலில் தெரிந்துகொள்ளவேண்டும்..



ஒரு விசயம் நடந்தது என ஒருத்தர் சொல்கிறார். 10 வருடத்தின் பின் இன்னொருத்தர் அதே நிகழ்வை சொல்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள்.

இதை நம்மால் காப்பி என கூற முடியாது... காரணம் 

நடந்ததை நடந்தபடி தான் சொல்ல இயலும்.

முதல் மனிதன் ஆதாம் என பைபிள் சொன்னால், அதே விசயத்தை நாமும் சொன்னால் அது காப்பி ஆகாது.

ஏனெனில் ஆதாம் தான் முதல் மனிதர் என்று இருக்கும்போது அப்படி தான் சொல்லவேண்டும்.... அதற்கு பதிலாக பாதாம் தான் முதல் மனிதர் என பெயரை மாற்றி சொல்ல இயலாது.


காப்பி என்பது என்னவென்றால்,, பைபிள் முதல் மனிதன் கி.மு 4114இல் படைக்கப்பட்டான், கி.மு 2457 இல் உலகம் முழுவதிம் வெள்ளம் ஏற்பட்டதால், உலகில் வெறுமனே 8 மனிதர்களும் சில மிருக பறவை சோடிகளும் மட்டுமே எஞ்சினர் என பைபிள் வரலாற்றை தப்பாக சொல்லும்போது, அதையும் நாம் கூறினால்  அப்போது அதை காப்பி என கூறலாம்..


வசனங்களை யார் யாருக்கு எத்தருணத்தில் சொல்லப்பட்டது என்பதையே மறந்து அவ்வசனங்களை சம்பந்தமில்லாத இடங்களில் மேற்கோள் காட்டுவது இவ்வகை காப்பி ஆகும்... அதாவது போதிய அறிவில்லாமல் வசனங்களை காப்பி பண்ணி எழுதிவிடுவது காப்பி ஆகும்.



அப்படிப்பட்ட ஒரு காப்பியை பைபிளிலிருந்து பார்ப்போம்.


எபிரேயர் அதிகாரம் 1




5 எப்படியென்றால், நீர் என்னுடைய நேசகுமாரன், இன்று நான் உம் தகப்பனானேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாக இருப்பேன், அவர் எனக்குக் குமாரனாக இருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாவது சொன்னது உண்டா? 

#கமெண்ட்: இந்த இடத்தில் இதை எழுதிய ஆசிரியர் தேவதூதர்களைவிட இயேசு எப்படி சிறந்தவர் என கூறப்போதாக கூறி துவங்கும்போது,,

தேவதூதர்கள் யாருக்கும் "நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உமக்கு தகப்பனானேன்" அப்படினு சொல்லல... இயேணுவுக்கு தான் சொன்னார் என்கிறார் ஆசிரியர்.


ஆனால், அப்படி இயேசுவுக்கு சொன்னதற்கு எங்குமே ஆதாரம் இல்லை.... மாறாக தாவீதுக்கு தான் சொன்னார்.

7 ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்; 'நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன். 

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 2:7
8 நீர் விரும்புவதை என்னிடம் கேளும்; பிறநாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்; ப+வுலகை அதன் கடையெல்லைவரை உமக்கு உடைமையாக்குவேன். 

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 2:8


இங்கே முதலாவது பொய்யாகவும் தப்பாக காப்பியும் பண்ணியுள்ளார்.



இரண்டாவதாக,

"நான் அவருக்கு பிதாவாக இருப்பேன். அவர் எனக்கு குமாரனாக இருப்பார்" என்று இயேசுவுக்கு சொன்னதாகவும், தேவதூதர்களுக்கு சொல்லவில்லைனும் சொல்கிறார் ஆசிரியர்.


ஆனால்,,, உண்மையில் அது சொலொமோனுக்கு சொல்லப்பட்டது ஆகும்.


12 உன் வாழ் நாள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில்கொள்ளும் போது, உனக்கு பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப் பின் நான் உயர்த்தி அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். 

2 சாமுவேல் 7:12

13 எனது பெயருக்காக கோவில் கட்டவிருப்பவன் அவனே. அவனது அரசை நான் என்றும் நிலைநிறுத்துவேன். 

2 சாமுவேல் 7:13

14 நான் அவனுக்கு தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் தவறுசெய்யும்போது மனித இயல்புக்கேற்ப அடித்து, மனிதருக்கே உரிய துன்பங்களைத் தருவேன். 

2 சாமுவேல் 7:14


இங்கே சொலமோனை பற்றி தாவீதிடம் சொன்னதை , இயேசுவை பற்றியது என எவ்வளவு அடித்ததுவிட்டுள்ளார் பாருங்கள்...

கோவிலை கட்டியது சாலொமோன் ஆவார்.


--------------------

6 மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர்கள் எல்லோரும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
(எபி 1:6)

கமெண்ட்: இப்படி ஒரு வசனம் எபிரேய பைபிளில் இல்லை..

ஆனாலும் கிரேக்க செப்டுஆஜின்ட் பிரதிகளிலும் சாக்கடல் பிரதிகளிலும் இவ்வசனம் உபாகமம் 32:43 இல் இடம்பெறுகிறது.


உண்மையில், ஆசிரியர் சொல்வது போல இல்லை... அதாவது பிதா தன் குமாரனை குறித்து சொல்லவில்லை.


மோசே எழுதிய பாடலில், பிதாவாகிய தேவனை குறித்தே மோசே எழுதியுள்ளார்.


உபாகம புத்தகத்தை கடவுளின் வார்த்தை என நினைத்த ஆசிரியர், அதில் மோசே எழுதியதாக வரும் பாடல் வசனத்தை, "பிதா இயேசுவை குறித்து சொன்னதாக" அடித்துவிடுகிறார்.


காப்பி பண்ணும்போது, யார் யாருக்கு எத்தருணத்தில் சொல்லப்பட்டது என்றே இந்த ஆசிரியருக்கு தெரியவில்லை!!


-----------



8 குமாரனைப்பற்றி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்கும் உள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாக இருக்கிறது. 

9 நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; எனவே, தேவனே, உம்முடைய தேவன், உமது தோழர்களைவிட உம்மை ஆனந்தத் தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்; 
(எபி 1:8-9)

கமெண்ட்: இவ்வசனங்களையும் தப்பாகவே காப்பி அடித்துள்ளார்.

இது குமாரனை பற்றி பிதா சொன்ன ஒன்று அல்ல..

மாறாக ராஜாவை புகழ்ந்து, பாடலாசிரியர்கள் எழுதியது ஆகும்.


இது சங்கீதம் 45:6-7 இல் இடம்பெறுகிறது.


பழைய ஏற்பாட்டு காலத்தில், அதிகாரமுள்ளவர்களை "தேவன் " என அழைப்பதுண்டு.

உதாரணமாக, "நீங்கள் தேவர்கள் " என சொமொல்லப்பட்டுள்ளது. (சங்கீதம் 82:6 யோவான் 10:34)


மோசேயை பாரோனின் தேவன் என்று (யாத்திராகமம் 7:1) இல் தேவன் சொல்கிறார்.

அதேபோல மோசே ஆரோனின் தேவன், ஆரோன் மோசேயின் தீர்க்கதரிசி என சொல்லப்பட்டுள்ளது (யாத்திராகமம் 4:16)


அந்த வரிசையில் தான், அந்த ராஜாவை "தேவன்" என சங்கீத ஆசிரியர் பாடுகிறார். 


அந்த தேவனை புகழ்ந்துவிட்டு, அடுத்த வசனத்திலேயே "தேவனே! உம்முடைய தூவன் உமது தோழரை பார்க்கிலும் ஆனந்த தைலத்தால் அபிசேகம் பண்ணினார்" (சங்கீதம்45:7 எபி 1:9)

அரசனை தேவன் என அழைத்து, அரசனின் தேவனான கடவுள் அரசரை மற்ற தோழர்களைவிட அபிசேகம் பண்ணினார் என புகழ்ந்து பாடுகிறார் சங்கீத ஆசிரியர்...

கடவுளுக்கு கடவுள் இருக்குமா?? இதில் ஆரம்பத்தில் கூறப்பட்ட தேவன் என்பவர்  அரசன், இரண்டாவதாக "உம்முடைய தேவன்" என கூறப்படுபவர் இறைவனான கடவுள் ஆவார்.


இதை தப்பாக இயேசுவை குறித்து கூறப்பட்டது என எபிரேய புத்தகத்தின் ஆசிரியர் மேற்கோள் காட்டுகிறார்.


சங்கீத புத்தகத்தில், இவ்வசனத்துக்கு அடுத்து வரும் வசனத்தை பாருங்கள்


9."உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் குமாரத்ததிகள் உண்டு, ராஜஸ்திரீ ஒப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலது பாரிசத்தில் நிற்கிறாள்"
(சங்கீதம் 45:9)

இந்த வசனத்தின்படி அந்த அரசனுக்கு பல மனைவிகள் உள்ளனர். அவர்களில் பலர் ராஜாக்களின் மகள்கள்... மேலும் அரசி தங்கம் அணிந்து உள்ளார்.


இயேசுவுக்கு பல மனைவிகள் உண்டா?? அவர்கள் அரசர்களுக்கு பிறந்தவர்களா??


நிச்சயம் இல்லை..

இது அரசனை பற்றி புகழ்ந்து பாடும் அத்தியாயத்திலிருந்து இரண்டு வசனங்களை பிடுங்கி, அது இயேசுவை பற்றி பிதா சொன்னது என அடித்துவிடுகிறார் ஆசிரியர்.
---------------------




10 கர்த்தாவே, நீர் ஆரம்பத்திலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கைவேலைகளாக இருக்கிறது; 

11 அவைகள் அழிந்துபோகும்; நீரோ நிலைத்திருப்பீர்; அவைகள் எல்லாம் ஆடைபோலப் பழைமையாகப்போகும்;

12 ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது அவைகள் மாறிப்போகும்; ஆனால், நீரோ மாறாதவராக இருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்து போவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது.

(எபி 1:10-12)

#கமெண்ட்:

இங்கே ஆசிரியர் மீண்டும் வழக்கம் போன்ற காப்பி பண்ணும் வேலையை செய்துள்ளார்.

இதுவும் பிதா தன் குமாரனை பற்றி சொன்னது என சொல்கிறார் எபிரேய ஆசிரியர்!!!


ஆனால், உண்மையில் இது பிதாவாகிய தேவனைக்குறித்து  நோய்வாய்ப்பட்டு துன்பத்தில் இருக்கும் ஒரு மனிதன் எழுதிய பாடல் ஆகும்..


இது சங்கீதம் 102:25-27 இல் வரும் வசனங்கள இவை ஆகும்..


அதற்கு முந்திய வசனத்தை பாருங்கள்,

"அப்பொழுது நான்: என் தேவனே!  பாதி வயதில் என்னை எடுதமுக்கொள்ளாதேயும்! உம்முடைய வருசங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்".
(சங்கீதம் 102:24)

அதனை தொடர்ந்து வரும் தொடர்ச்சியே அவ்வசனங்கள் ஆகும்.

அதாவது தேவனே! நீர் உலகத்தை படைச்சீர்.. நீர் என்றென்றும் நிலைத்திருப்பீர் அப்படியெல்லாம் தேவனை புகழ்கிறார்.


என்னை சின்ன வயதிலேயே சாக வைத்துவிட வேண்டாம் என ஜெபிக்கும் இந்த நோயாளி தேவனை புகழ்வதை எபிரேய ஆசிரியர் தப்பாக புரிந்துள்ளார்.

சங்கீத புத்தகத்தை இறைவார்த்தை என நினைத்த எபிரேய ஆசிரியர் அவ்வாறு புரிந்துள்ளார்.


அதன் தொடர்ச்சியாக

" உமது அடியாரின் பிள்ளைகள் தாபரித்திருப்பார்கள். அவர்கள் சந்ததி உமக்கு முன்பாக நிலைபெற்றிருக்கும் என்று சொன்னேன்.
(சங்கீதம் 102:28)

இங்கேயே புரிந்துவிடும், இது நோயாளி தேவனிடம் தன்னை சின்ன வயதிலேயே சாகடித்துவிட வேண்டாம் என வேண்டுதல் செய்யும் பிரார்த்தனையில் இடையில் வரும் வசனத்தை மட்டும் பிடுங்கி,, அதை தேவன் சொன்னார் குமாரனுக்கு சொன்னார் என ஆசிரியர் சொல்கிறார்.

அப்படியென்றால், தேவன் குறைமாசத்தில் தன்னை கொன்றுபோட்டுவிட வேண்டாம் என குமாரனிடம் கெஞ்சுவது போன்று தான் அர்த்தம் வரும்.. பரவாயில்லையா??

--------------



13 மேலும், நான் உம்முடைய எதிரிகளை உமது பாதத்தின் கீழே போடும்வரை நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்திரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாவது அவர் சொன்னதுண்டா? 
(எபி 1:13)

#கமெண்ட்:
இவ்வசனம் பிதா தன் குமாரனுக்கு சொன்னார் என்று திரும்பவும் சொல்கிறார்.


இதுவம் சங்கீதம் 110:1 இல் வரும் வசனம் ஆகும்..



குமாரனின் எதிரிகளை அவரது பாதத்துக்கு கீழே போடும்வரை வலது பக்கத்தில் இரும் என சொன்னாராம்.

அப்படியென்றால்,,, குமாரனுக்கு தன் எதிரிகளை எதுவும் பண்ண முடியவில்லை என காட்டுகிறது...

அவ்வளவு வீக் ஆனவராக குமாரன் உள்ளார் என்பதை இது காட்டுகிறது.

.
ஆனால் இதுவும் உண்மையில் தாவீதை பற்றி அவரது பாடகர்கள் புகழ்ந்து பாடியது ஆகும்.....


தாவீது தன் மகன் அப்சலோமால் விரட்டியடிக்கப்பட்டபோது நிறைய எதிரிகள் தாவீதுக்கு உண்டாகின..

அப்போது அவர் ஒழிந்திருத்தார்..

அதை குறித்து தான் தாவீதின் பாடகர்கள் , தாவீது மீண்டும் ராஜாவான பின்பு அவருக்காக பாடினர். 


தாவீது தப்பி ஓடியபோது, தேவன் அவரை பாதுகாத்தார், அவர்கள் பலவீனமடைந்து அழியும்வரை தாவீது வரவில்லை. அதன்பின் தாவீது வந்தார். அந்நிகழ்வை புகழ்ந்து, "அக்காலத்தில் தேவனக்கு வலப்பக்கத்தில் இருந்தார்" என புகழ்ந்து பாடினார்கள்.


இதை அறியாத புதிய ஏற்பாட்டாசிரியர்கள் குழம்பி அதை இயேசுவை குறிக்கும் என ஆக்கி, அதற்கேற்றாற்போல்,, இயேசு தேவனின் வலப்பக்கம் அமர்ந்தார் என கதை எழுதினார்கள்.


அம்புட்டும் தப்புதப்பான காப்பி ஆகுமா 

அல்லாஹ் வழிதவறச்செய்கிறான் என்பதன் விளக்கம்

1.மனிதனுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது  --மனிதனுக்கு இறைவன் வழி காட்டியுள்ளான். ஒன்று அவன் நன்றியுள்ளவனாக இருக்கிறான் அல்லது காஃபிராக இருக்கிறான...