புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள்- பாகம் 2
பாகம் 1 தொடர்ச்சி உள்ளடக்கம் 4.இயேசு பிறந்த பின் பெற்றோர் எங்கே போனார்கள்? 5.இயேசுவை சாத்தான் சோதித்த ஒழுங்கு வரிசை 6.ஞானஸ்நானம் நடந்த பின் நிகழ்ந்த நிகழ்வு 7.சாத்தானால் சோதிக்கப்பட்டது நாப்பது நாள்களிலா? நாப்பது நாள் முடிந்த பின்பா? 8.பேதுரு சீடராக தெரிவு செய்த இடமும் தருணமும் 4.இயேசு பிறந்த பின் பெற்றோர் எங்கே போனார்கள்? மத்தேயு - இயேசு மகா ஏரோதின் காலத்தில் பிறந்ததால், பெற்றோர் அவனுக்கு பயந்து அவன் சாகும்வரை எகிப்துக்கு போய் வாழ்ந்தனர். ஏரோது செத்த பின் அவனது மகன் ஆட்சிக்கு வந்ததால், அவனுக்கும் பயந்து நாசரேத்துக்கு வந்தார்கள். ¹³ "அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான் ; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான்." ¹⁴ "அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய்," ¹⁵ " ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான் . எகிப்திலிருந்து என்னுடைய கும...