ஞாயிறு, 3 நவம்பர், 2024

பிணத்துடன் உடலுறவா?- மதவெறி மடையர்களுக்கு மறுப்பு

 பிணத்துடன் உடலுறவா?- மதவெறி மடையர்களுக்கு மறுப்பு 


ஒரு மதவெறி பிடித்த கிறிஸ்தவ பாதிரியார் சகரியா என்பவர் முகம்மது நபி அவர்கள் பிணத்துடன் உடலுறவு கொண்டார் என்று காமப்பிதற்றலை உலரினார். அது உலரப்பட்டு தசாப்தம் ஆன பின்பும் இன்றும் மதவெறி கும்பல்களால் இச்செய்தி பரப்பப்பட்டு வருகிறது.

முதலில் அச்செய்தி என்ன என்பதையும், அதை அவ்வாறு காமத்தனமாக புரிந்துகொள்ள என்ன காரணம் என்பவற்றை காண்போம்:


1.அந்த ஹதீஸ் என்ன என்று பார்ப்போம்: (அதன் தரம் ஆராயப்பட வில்லை)


- لمّا ماتت فاطمةُ أمُّ عليِّ بنِ أبي طالبٍ خلَع النَّبيُّ ﷺ قميصَه وألبَسَها إيّاه واضْطَجع في قبرِها فلمّا سُوِّي عليها التُّرابُ قال بعضُهم يا رسولَ اللهِ رأَيْناك صنَعْتَ شيئًا لم تصنَعْهُ بأحدٍ فقال إنِّي ألبَسْتُها قميصي لتُلْبَسَ مِن ثيابِ الجنَّةِ واضْطَجَعْتُ معها في قبرِها خفف عنها مِن ضَغْطةِ القبرِ إنَّها كانت مِن أحسنِ خَلْقِ اللهِ إليَّ صنيعًا بعدَ أبي طالبٍ

الراوي: عبدالله بن عباس • الهيثمي، مجمع الزوائد (٩/٢٦٠) • فيه سعدان بن الوليد ولم أعرفه وبقية رجاله ثقات‏‏ • أخرجه الطبراني في ((المعجم الأوسط)) (٦٩٣٥)، وأبو نعيم في ((معرفة الصحابة)) (٢٨٩)، والديلمي كما في ((الغرائب الملتقطة)) لابن حجر (٩٦٢) باختلاف يسير

அபூதாலிபின் மகன் அலீ(ர) அவர்களின் தாய் ஃபாத்திமா மரணித்த போது, நபி(ஸல்) அவர்கள் தமது சட்டையை கழற்றி அதை அவருக்கு (ஃபாத்திமாவுக்கு) அணிவித்து, அவருடைய கப்ரில் (உடல் அடக்கம் செய்யும் குழியில்) படுத்தார்கள். அதன்மீது மண்ணை போட்டு சமப்படுத்தியபோது,  சிலர், "அல்லாஹ்வின் தூதரே!மற்ற யாருக்கும் நீங்கள் செய்யாததொன்றை நீங்கள் செய்ததை கண்டோமே" என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் , "நான் என் சட்டையை அவருக்கு அணிவித்ததற்கு காரணம், அவருக்கு சுவர்க்கத்து ஆடை அணிவிக்கப்படவேண்டும் என்பதற்காக ஆகும். அவருடைய கப்ரில் (அடக்கம் செய்யும் குழியில்) அவருடன் படுத்தேன் அதற்கான காரணம், கப்ருடைய நெருக்கம் அவருக்கு இலகுபடுத்தபடுவதற்காக ஆகும். நிச்சயமாக அவர் (ஃபாத்திமா) அபூதாலிபுக்கு பின் எனக்கு அல்லாஹ்வின் சிறந்த படைப்பாக இருந்தார். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ர)

நூல்கள்:ஹைதமீ அவர்களின் மஜ்மஉஸ்ஸவாயித் (9/260), தபரானீயின் அல்முஃஜமுல் அவ்ஸத் (6935), அபூநுஐமின் மஃரிஃபதுஸ்ஸஹாபா 289, .



இதில் கப்ரில் படுத்ததாக தான் உள்ளது. 


2.ஏன் இவ்வாறு கதை கட்டவேண்டும்?

அரபியில் 

اضطجع என்பது சாதாரணமாக சாய்ந்து படுத்தான் என்பது தான் அர்த்தம். எல்லா அரபு அகராதிகளிலும் இது தான் அர்த்தம் 

واضطجعت معها في قبرها என்றால் அவளுடைய கப்ரில் அவளுடன் சாய்ந்து படுத்தேன் என்பது தான் அர்த்தம்.


உடலுறவை குறிப்பதற்கு 

ضاجع என்ற வார்த்தை பாவிக்கப்படும். اضطجع என்பது உடலுறவை குறிப்பது அல்ல!



ஆனால் இந்த மனநலம் பாதிக்கப்பட்ட பாதிரியார் இதை "அவளுடன் அவளுடைய கப்ரில் உடலுறவு கொண்டேன்" என்று கேவலமாக மொழிபெயர்த்து வெளியிட்டார்.  


அரபியில் இவ்வாறு இல்லாவிட்டாலும் ஏன் இவர் இப்படி லூசுத்தனமாக புரிந்துகொண்டார் என்று பார்க்கும்போது தான் ஆச்சரியம்.  ஏனென்றால் பைபிளில் இந்த வாசகம் உடலுறவை குறிக்க பாவிக்கப்பட்டுள்ளது என்பது தான்.


எபிரேயத்தில் שכב -சாகப் என்றால் படுத்தான் என்று அர்த்தம். இதை அரபு மொழியாக்க பைபிளில் اضطجع என்று மொழிபெயர்க்கப்படுகிறது.

இந்த எபிரேய வார்த்தை செக்ஸ் அர்த்தத்திலும் பாவிக்கப்படும். சாதாரணமாக படுத்துக்கொண்டான் என்ற அர்த்தத்திலும் பாவிக்கப்படும்.

ஆனால் அரபு மொழியில் اضطجع என்பது அவ்வாறு அல்ல... அது சாதாரணமாக படுத்துக்கொள்வதை மட்டுமே குறிக்கும். ஆனாலும் பைபிளை வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்கும் போது, அந்த  வார்த்தை உடலுறவை குறிப்பதாக அவருக்கு தென்பட்டதால் லூசுத்தனமாக மதவெறியால் இவ்வாறு புழுகினார்.

 

உதாரணமாக ஆதியாகமம் 19:33

‫اَلتَّكْوِينُ 19:‏33 AVD‬

[33] فَسَقَتَا أَبَاهُمَا خَمْرًا فِي تِلْكَ ٱللَّيْلَةِ، وَدَخَلَتِ ٱلْبِكْرُ وَٱضْطَجَعَتْ مَعَ أَبِيهَا، وَلَمْ يَعْلَمْ بِٱضْطِجَاعِهَا وَلَا بِقِيَامِهَا.


https://bible.com/bible/13/gen.19.33.AVD

அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடே சயனித்தாள்: அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.

ஆதியாகமம் 19:33

இங்கே மகள்மார் தம் தகப்பனுக்கு மதுபானத்தை குடிக்க கொடுத்து, அவரோடு உடலுறவு கொண்டதை குறிக்க அரபியில் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற வசனங்களை வைத்து இப்படி அரைவேக்காட்டுத்தனமான முடிவுக்கு வந்துவிட்டார்.

அது பைபிளின் எபிரேய மொழிநடை மட்டுமே.. அரபிய மொழிநடை அல்ல!


ஆனாலும் பைபிளிலும் இவ்வார்த்தை படுத்துக்கொள்வதை (மரணித்தல் ) குறிப்பதற்கும் பாவிக்கப்பட்டுள்ளது 


‫اَلتَّكْوِينُ 47:‏30 AVD‬

[30] بَلْ أَضْطَجِعُ مَعَ آبَائِي، فَتَحْمِلُنِي مِنْ مِصْرَ وَتَدْفِنُنِي فِي مَقْبَرَتِهِمْ». فَقَالَ: «أَنَا أَفْعَلُ بِحَسَبِ قَوْلِكَ».

https://bible.com/bible/13/gen.47.30.AVD

நான் என் பிதாக்களோடே படுத்துக்கொள்ளவேண்டும்; ஆகையால், நீ என்னை எகிப்திலிருந்து எடுத்துக்கொண்டுபோய், அவர்களை அடக்கம்பண்ணியிருக்கிற நிலத்திலே என்னையும் அடக்கம்பண்ணு என்றான். அதற்கு அவன்: உமது சொற்படி செய்வேன் என்றான்.

ஆதியாகமம் 47:30

‫اَلْمُلُوكِ ٱلثَّانِي 4:‏34 AVD‬

[34] ثُمَّ صَعِدَ وَٱضْطَجَعَ فَوْقَ ٱلصَّبِيِّ وَوَضَعَ فَمَهُ عَلَى فَمِهِ، وَعَيْنَيْهِ عَلَى عَيْنَيْهِ، وَيَدَيْهِ عَلَى يَدَيْهِ، وَتَمَدَّدَ عَلَيْهِ فَسَخُنَ جَسَدُ ٱلْوَلَدِ.


https://bible.com/bible/13/2ki.4.34.AVD


எலிசா வீட்டிற்குள் வந்தபோது, இதோ, இந்தப் பிள்ளை அவன் கட்டிலின்மேல் செத்துக்கிடந்தான். உள்ளே போய்த் தங்கள் இருவருக்கும் பின்னாக அவன் கதவைப்பூட்டி, கர்த்தரை நோக்கி வேண்டுதல்செய்து, கிட்டேபோய், தன் வாய் பிள்ளையின் வாயின்மேலும், தன் கண்கள் அவன் கண்களின்மேலும், தன் உள்ளங்கைகள் அவன் உள்ளங்கைகளின்மேலும் படும்படியாக அவன்மேல் குப்புறப் படுத்துக்கொண்டான்; அப்பொழுது பிள்ளையின் உடல் அனல்கொண்டது.

2 இராஜாக்கள் 4:32-34


இதுபோன்று ידע யதஃ என்ற எபிரேய வார்த்தை "அறிந்தான்" என்று அர்த்தம். அரபியில் "عرف" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இதுவும் பைபிள் பாசையில், உடலுறவு கொண்டான் என்ற அர்த்தம் உடையது.

உதாரணமாக ஆதியாகமம் 4:1 இல்,


ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்.

ஆதியாகமம் 4:1

‫اَلتَّكْوِينُ 4:‏1 AVD‬

[1] وَعَرَفَ آدَمُ حَوَّاءَ ٱمْرَأَتَهُ فَحَبِلَتْ وَوَلَدَتْ قَايِينَ. وَقَالَتِ: «ٱقْتَنَيْتُ رَجُلًا مِنْ عِنْدِ ٱلرَّبِّ».

https://bible.com/bible/13/gen.4.1.AVD

இதை வைத்து அறிந்தான் என்றாலே பாலியல் கலவி என்று புரிந்துகொண்டால் எப்படி இருக்கும்?


எபிரேய மொழி நடையை எபிரேய மொழிக்கு தான் பாவிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல், வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட வேறு மொழிச் சொல்லுக்கு இது போன்று லூசுத்தனமாக அர்த்தம் செய்வது மடத்தனமாகும்.



.



வெள்ளி, 6 செப்டம்பர், 2024

கடவுள் மனிதனானாரா?

 மனிதனாக வருவது கடவுளின் வல்லமையா? அறிவீனமா?



எங்கள் கடவுள் எவ்வளவு வல்லமையுள்ளவர் என்றால் அவர் எம்மை போல குசு விட்டு ஆய் போகிறவராக இருந்தார்.. பெண்ணுறுப்பு வழியாக தலைகீழாக பிறந்தார் என்றெல்லாம் சிலர் வாதிக்கிறார்கள். அதை பேரன்பு என்று பெயரிடுகிறார்கள்.


கடவுள் எப்படிப்பா மனிதனாக வருவான் என்று நாமோ அல்லது முஸ்லிம்களால் செம்மையாக்கப்பட்ட யூதனோ கேட்டால், கடவுளால் எல்லாம் கூடும் என்று பதில் சொல்கிறார்கள்.



இதை சற்று பிரித்து நோக்கலாம்.


1.ஒருவன் பூமியில் மனிதனாக பிறத்தல்:


ஒருவன் பூமியில் மனிதனாக பிறந்தால், அவனது உடல் உயிர் இரண்டுமே மனிதனுக்குரியது. அதனால் அவன் பூரண மனிதன். அவன் கடவுளின் படைப்பு. பூரண மனிதன் கடவுளல்ல.



2.மனித உடலில் இறைவன் உயிர்:


ஒருவனது உடல் மனிதன் உயிர் கடவுள் என்றால், அவன் பூரண மனிதனே கிடையாது.. மனிதனாக வேசம் போடுகிறார் என்றாகிவிடும். 


வேசம் போடுவதெல்லாம் ஒரு பொழப்பா? 


 அத்தோடு அவர் செய்யும் எதுவுமே தியாகம் கிடையாது. எல்லாமே ஏமாற்று வேலை.


காரணம் கடவுளுக்கு ஆசாபாசம் கிடையாது. அதனால் பாவத்திற்கும் நன்மைக்குமிடையில் சுயதேர்வே கிடையாது. காரணம் அவர் எப்போதும் நன்மையில் 100% தீமையில் 0% ஆக இருப்பார்.



கடவுள் என்ன நடிகனா? மாற்று உருவம் எடுத்து நடித்து நல்ல பெயர் எடுப்பதற்கு?


ஆகவே இது மடமை ஆகும். 

(ஒரு பேச்சுக்கு அவர் மனிதனாக நடிக்க வேண்டுமானால், பெண்ணுறுப்பு வழியாக தலைகீழாக பிறந்து தான் நடிக்க வேண்டுமா?)

தாம் வணங்கும் மனிதரை கடவுளாக்குவதற்காக அவர் ஏற்கனவே கடவுளாக தான் இருந்தார். மனிதனாக பிறந்தார் என்ற கதை .



3.மனிதனாக வராதிருத்தல் என்பது பலவீனமா?


எங்கள் கடவுள் பெண்ணுறுப்பு வழியாக தலைகீழாக பிறந்தார். உங்கள் கடவுளால் இயலாதா என்று கேட்கிறார்கள்.


இதே கேள்வியை நாமும் கேட்கலாம்..


உங்கள் மதம் அல்லாத வேறு மதங்களில், கடவுளுக்கு ஒய்ஃப்/மனைவி இருக்கிறாள்.. அவளோடு பரவசப்படுகிறார். இதை நம்பும் ஒருவர் , "எங்கள் கடவுள் பூரண ஆண் வடிவிலும் பெண் வடிவிலும் உள்ளார்கள்... உங்கள் கடவுளுக்கு ஏன் ஒய்ஃப் இல்லை? அவர் என்ன பேடியா? அல்லது ஆண்மை இல்லாதவரா? அல்லது பெண்ணோடு வாழ வக்கில்லாதவரா? அல்லது அவளை திருப்திப்படுத்த இயலாதவரா? அல்லது வானலோகம் gaysகளால் ஆனதா?" என்றெல்லாம் கேட்டால் என்ன சொல்வார்கள்?



கடவுள் நினைத்தால் இதையெல்லாம் செய்யலாம்பா.. ஆனால் அது அவரது கண்ணியத்திற்கு தகாது. அவரது இயல்புக்கு தகாது. என்று தானே சொல்ல முடியும்?


அதேபோல தான் நாமும் சொல்கிறோம்: 

கடவுள் மனிதனாக வேசம் போட்டு வந்து நடித்து எதை சாதிக்க போகிறார்?


அது அவரது கண்ணியத்திற்கும் உயர்வுக்கும் மிக இழிவானது.



4.கடவுள் மனிதனாக வந்து எதை செய்து கிழிக்க போகிறார்?


*போதனை செய்யவா? - இதை பூமியில் உள்ளவர் மூலமாகவே செய்யலாமே!


*முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுவதற்கா?

கடவுள் எப்படி மனிதனுக்கு முன்மாதிரியாக இருப்பார்? அவருக்கு ஆசாபாசம் கிடையாது. இப்படிப்பட்டவர் எப்படி ஆசாபாசமுள்ள நபர்களுக்கு முன்மாதிரியாவார்?

ஒரு சாதாரண நல்ல மனிதரை தான் முன்மாதிரியாக ஆக்க முடியும்.



*பாவங்களுக்காக பலியாகவா ?


இவர் மன்னிப்பதற்கு இவர் பலியாக வேண்டுமா? 


பலியாகும் இவரது உடலும் பாவத்தில் பிறந்தவர்களால் பெற்றெடுக்கப்பட்டால், அவருக்கு இன்னொருவர் பலியாக வேண்டும். அதற்கு பிறகு தான் இவர் பலியாக விட்டு போகலாம்.


அடுத்து பலிப்பிராணி உடல் குறையுள்ளதாக இருக்க கூடாது. அவரது ஆணுறுப்பு ¾ ஆக இருந்தால் இவர் எப்படி குறையில்லாதவராவார்?


(இவர் இவரது படைப்புகளை இவரிடமிருந்து காப்பாற்றுவதற்காக இவரே சாகிறாராம்... சாத்தான் சும்மா தான் இருப்பான்)


*பூமியில் நியாயம் விசாரித்து நீதியை நிலைநாட்டுவதற்கா?


(இரண்டாம் வருகையில் இதை செய்வார் என்கிறார்கள். )


நீதியை நிலைநாட்டுவதற்கு தன் படைப்புகளில் ஒருவருக்கு அதிகாரம் கொடுத்தாலே போதுமானதே..... இந்த சாதாரண அறிவு கூடவா இல்லாமல் இருப்பார்?




5.இந்நம்பிக்கை எப்படி வந்தது?


கிரேக்க ரோம மதத்தவர்களிடம் அவர்களின் கடவுளுக்கு குடும்பம் பிள்ளை இருந்தது.  


இயேசு ரோமர்களால் யூதர்களின் திட்டப்படி சிலுவையில் அறையப்பட்டார் என்று அக்கால மக்களில் பவுலின் கிறிஸ்தவர்களும், யூதர்களும்  நம்பினர்.


-ரோமர்களை இதிலிருந்து காப்பாற்றுவதற்காக, இது முழுமையாக கடவுளின் திட்டம் என்று முதல் படி போட்டனர்.(மத்தேயு 16:21-23, 26:24,39-46, 1 யோவான் 4:10 இன்னும் நிறைய)



-சிலுவை மரணம் ரோமர்களது ஒரு தண்டனை. அதை பெற்றவர் குற்றவாளியா என்று யோசிக்க வேண்டும். அதேநேரம் ரோமர்களது தண்டனையையும் நியாயப்படுத்த வேண்டும். இதற்காக தான் இயேசு பாவிகளுக்காக மரணித்தார். (ரோமர் 5:8) அவரே பாவமானார் (2 கொரி 5:21). பாவிகளுக்காக சாபமானார் (கலாத்தியர் 3:13). என்ற கருத்து


-மற்ற மனிதர்களுக்காக இவரை தண்டித்தால், கடவுள் மீது அநீதியாளர் என்ற குற்றச்சாட்டு வருகிறது. இதை சமாளிக்க தான், கடவுள் வேறொருவரையும் இப்படி செய்யவில்லை.. தன் சொந்த பையனை தான் இப்படி செய்தார் என கட்டினர். (1 யோவான் 4:10).


-சொந்த பையனையே கொன்று போட்டால், கடவுள் மீது இன்னொரு கெட்ட பெயர் வருமே... அதற்கு தான் அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். (மத்தேயு 16:21,20:19,அப் 10:40) பிறகு கடவுள் அவருக்கு யாராலும் அடைய இயலாத மிகப்பெரிய அந்தஸ்த்தை கொடுத்தார் என்பதாகும்.(1 பேதுரு 3:22, எபிரேயர் 1:3, பிலிப்பியர் 2:6-11)


-இந்த பையன் சாதாரண பையன் கிடையாது. கிரேக்க தத்துவங்களால் பாதிக்கப்பட்ட யூதரான ஃபைலோ என்பவர் "கடவுளுக்கு வார்த்தை (லோகோஸ்) என்று ஒரு பையன் இருப்பதாகவும் அவர் மூலமே சகலமும் படைக்கப்பட்டது" என்றும் நம்பினார். அந்த வார்த்தை என்ற நபரே இயேசு தான் என்று யோவான் எழுதினார். இதன்படி அவர் தான் எல்லோரையும் படைத்தார் என்றும் எழுதினார்- யோவான் 1:1-3,14,18

இப்படி தான் கடவுள் மனிதனாகி தன் உடலை தனக்கே பலி செலுத்தி நம்மை அவரிடமிருந்து காப்பாற்றினார் என்ற நம்பிக்கையாக மாறிவிட்டது 


ஃபேக் நியூஸ் பரப்பினால் இப்படி தான் நிகழும்

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

ஈஸா இறைவனது வார்த்தை (இஸ்லாமும் கிறிஸ்தவமும் முரண்படும் இடம்)

 ஈஸா நபி இறைவனுடைய வார்த்தை (இஸ்லாமும் கிறிஸ்தவமும் முரண்படும் இடம்)

--------------------------------------------------------------------------------



"கிறிஸ்தவத்தில் வார்த்தையானவர்"

-----------



ஈஸா நபி அவர்கள் காலகட்டத்தில் கிரேக்க தத்துவங்களால் வழிதவறிய யூதரான ஃபைலோ என்ற அறிஞர் இருந்தார். 


 அவர் ஏக இறைவனுக்கு வார்த்தை (லோகோஸ்) என்ற பையன் இருப்பதாகவும், அவர் மூலமாக தான் சகல படைப்புகளையும் ஏக இறைவன் படைத்தார் என்றும் அந்த பையன் கடவுளுக்கும் படைப்புகளுக்கும் இணைக்கும் பாலமாக இருக்கிறார் என்று நம்பினார்.


ஈஸா நபியிற்கு பின் பவுல் போதித்த கிறிஸ்தவத்தால் ஈர்க்கப்பட்ட யோவான் சுவிசேஷ ஆசிரியர் (பைபிளில் பவுலுடைய கடிதங்களாக்கு முன்பாக இவரது நூலை இணைத்திருப்பார்கள். ஆனால் உண்மையில் பவுல் தான் முதலில் எழுதியவர்.) இவ்வாறு எழுதினார்:


ஆதியிலே வார்த்தை (லோகோஸ்) இருந்தார். அந்த வார்த்தை கடவுளிடம் இருந்தார். (கடவுள் பையனும் கடவுள் தானே அதனால்) அவர் கடவுளாக இருந்தார். அவர் ஆதியிலே கடவுளோடு இருந்தார். சகலமும் அவர் மூலமாகவே உண்டாகின. (யோவான் 1:1-3)


என்று எழுதினார்.


இவர் எழுதியதை வேதவாக்காக நம்பும் கிறிஸ்தவர்களில் அநேகருக்கு தெரியாத ஒரு விடயம் தான் இந்த கருத்து கிரேக்க தத்துவங்களால் ஈர்க்கப்பட்ட ஃபைலோவின் கருத்து என்று.



யூதர்களின் வேதத்தில் எங்கேயும் கடவுளுக்கு வார்த்தை என்று ஒரு பையன் இருக்கிறான் என்றோ அந்த பையன் சகலத்தையும் படைத்தான் என்றோ எங்கேயும் சொல்லப்படவில்லை.



இந்த வார்த்தை தான் இயேசு என்கிறார் அத்தோடு கடவுளின் ஒரே பையன் என்கிறார் யோவான் - (யோவான் 1:14,18)



இது தான் கிறிஸ்தவம் நம்பும் கடவுளின் வார்த்தையாகிய இயேசு என்ற நம்பிக்கை.



-----------

இஸ்லாத்தில் அல்லாஹ்வின் வார்த்தையான ஈஸா நபி

----------


இஸ்லாம் ஃபைலோ சொன்ன கருத்தை யோவான் ஏற்றது போல் ஏற்றுக்கொள்ளவில்லை.


இறைவன் ஒருவன் என்றும் அவனுக்கு பையனோ அப்பனோ கிடையாது என்று நான்கு வசன அத்தியாயத்திலேயே சொல்லிவிட்டது.




"கூறுவீராக:

*அல்லாஹ் அவன் ஒருவனே

*அல்லாஹ் தேவையற்றவன்.

*அவன் (யாரையும் குழந்தையாக) பெறவில்லை. அவன் (யாராலும் குழந்தையாக) பெறப்படவில்லை.

*அவனுக்கு நிகராக எவருமில்லை 

(குர்ஆன் 112:1-4)



இனி குர்ஆன் கூறும் ஈஸா நபி பற்றி பார்ப்போம்:



*அவர் அல்லாஹ் (ஏக இறைவன்) அல்ல!


மர்யமின் மகன் தான் அல்லாஹ் என்று கூறுவோர் இறைநிராகரித்து விட்டனர். (குர்ஆன் 5:17,72)


*ஈஸா நபி அல்லாஹ்வின் (ஏக இறைவனின்) பையன் கிடையாது.


யூதர்கள் உஸைரை அல்லாஹ்வின் மகன் என்றார்கள். கிறிஸ்தவர்கள் மஸீஹை (ஈஸாவை) அல்லாஹ்வின் மகன் என்றார்கள். அது வெறுமனே அவர்கள் தம் வாய்களால் கூறும் அவர்களுடைய கூற்றாகும். இவர்களுக்கு முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு ஒத்திருக்கிறார்கள். (குர்ஆன் 9:30)


அதாவது யூத கிறிஸ்தவர்கள் தம் இறைவனுக்கு பையன் உண்டாக்கிய கதைகள் எல்லாம் அவர்களுக்கு முன்னிருந்த ஏனைய மதத்தவர்களால் கூறப்பட்ட கடவுளுக்கு பையன் இருப்பதாக கூறும் கதைகளை போன்றது தான் என்கிறது.



*ஈஸா நபியை இறைவனாக எடுக்க கூடாது.


அவர்கள் அல்லாஹ்வையன்றி தம் பாதிரிகளையும் , தம் சந்நியாசிகளையும் , மர்யமின் மகன் அல்மஸீஹையும் இறைவனாக எடுத்துக்கொண்டார்கள். ஒரே இறைவனை வணங்கவேண்டும் என்றே அல்லாமல் அவர்கள் ஏவப்படவில்லை. அவனையன்றி வேறு இறைவன் இல்லை. அவர்கள் இணைவைப்பவற்றைவிட்டும் அவன் பரிசுத்தமானவன் - குர்ஆன் 9:31


(கிறிஸ்தவர்கள் இறைவன் தோராவில் தடை செய்தவற்றை பவுலும் ஏனைய அறிசர்களும் துறவிகளும் அனுமதித்தால் அதையே ஏற்பார்கள். உதாரணமாக பன்றிக்கறி. அதேபோல் இறைவன் அனுமதித்ததை இவர்கள் தடை செய்தால் , இவர்களையே ஏற்பார்கள். 

இதுவே அவர்களை கடவுளாக எடுத்துக்கொண்டதாகும்.. மர்யமின் மகன் விசயத்தில் எல்லோரும் அறிந்த விடயமே இங்கு கூறப்படுகிறது).



ஆகவே தெளிவாக இவை ஈஸா நபியை ஃபைலோ கூறும் வார்த்தை நம்பிக்கையை யோவானைப்போன்று குர்ஆன் ஏற்கவில்லை என்பதை காட்டுகிறது.



இனி ஈஸா நபி வார்த்தை என கூறப்படுவதை பார்க்கலாம்:




*குர்ஆன் கூறும் ஈஸா நபியாகிய இந்த வார்த்தை சகலத்தையும் படைக்கவில்லை.. மாறாக படைக்கப்பட்டவர்:




(அதற்கு மர்யம்) “என் இரட்சகனே! எந்த ஒரு மனிதருமே என்னைத் தீண்டாதிருக்க எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்? என்று கூறினாள். (அதற்கு) “அவ்வாறே அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தை முடிவெடுத்தால் அவன் அதற்கு கூறுவதெல்லாம் “ஆகுக” என்பதுதான், அது ஆகிவிடும்” என்று கூறினான்.

(அல்குர்ஆன் : 3:47)



அதாவது என் வார்த்தை உங்களின் பிறப்புறுப்புவழியாக புகுந்து மனிதனாக வெளிப்படும் என்று சொல்லவில்லை..


மாறாக "இவ்வாறு தான் அல்லாஹ் நாடியதை படைக்கிறான்" என்று அன்னை அவர்களுக்கு பதில் கொடுக்கப்படுகிறது.



*குர்ஆன் கூறும் இந்த வார்த்தையின் பெயர் இறைவனது மகன் என்பதல்ல.. மாறாக மர்யமின் மகன்:






 மலக்குகள் “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து ஒரு வார்த்தையைக் கொண்டு உனக்கு (ஒரு மகனை அளிக்க) நன்மாராயங் கூறுகின்றான். அவரின் பெயர் மஸீஹ்_ மர்யமுடைய மகன் ‘ஈஸா’ என்பதாகும், அவர் இம்மையிலும், மறுமையிலும் மிக்க அந்தஸ்தையுடையவராகவும் (இரட்சகனுக்கு) மிக்க நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்” என்று கூறியபோது.

(அல்குர்ஆன் : 3:45)



அதாவது அவர் மர்யமின் மகனாவார். இதன் அர்த்தம் அவருக்கும் இறைவனுக்கும் அப்பன்-மகன் உறவு கிடையாது என்றும், அவருக்கு இருப்பதெல்லாம் மர்யமுடன் அம்மா-மகன் உறவு மட்டுமே என்பதை தெளிவாக சொல்கிறது.


அத்தோடு மர்யமின் மகன் என்பதிலேயே மீண்டும் ஒரு படைப்பு பெற்றெடுக்கும் படைப்பாகிய மகன் என்றும் அதுவே அவரது ஆரம்பம் என்பதையும் காட்டுகிறது.




*குர்ஆன் கூறும் வார்த்தையாகிய ஈஸா நபி ஒன்றும் ஃபைலோ சொல்லுவது போல் இறை மகன் அல்ல:


வேதத்தைஉடையவர்களே (கிறிஸ்தவர்களே)! உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்ல வேண்டாம்! அல்லாஹ்வின் (ஏக இறைவன்) மீது உண்மையை தவிர வேறெதையும் கூற வேண்டாம்.

நிச்சயமாக மர்யமின் மகனாகிய அல்மஸீஹ் ஈஸா அல்லாஹ்வின் தூதரும், அவன் மர்யமின்மீது போட்ட அவனுடைய வார்த்தையும் , அவனிடமிருந்து உள்ள ஓர் உயிரும் ஆவார்.

ஆகவே அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நம்புங்கள். மூவர் என்று கூற வேண்டாம். அதைவிட்டு விலகிக் கொள்ளுங்கள். நன்றாக இருக்கும். 

நிச்சயமாக அல்லாஹ் ஒரே இறைவன் தான். அவனுக்கு மகன் இருப்பதை விட்டும் அவன் பரிசுத்தமானவன் . .. (குர்ஆன் 4:171)



இங்கே ஈஸா நபி இறைவனது வார்த்தை தான் என்று சொல்லும் அதே நேரம் இவர்கள் நம்புவது போன்ற வார்த்தை கிடையாது என்கிறது குர்ஆன். அதாவது இந்த வார்த்தை கடவுளோ கடவுளின் பையனோ அல்ல..


ஆகவே இஸ்லாம் கூறும் வார்த்தையான ஈஸா நபி என்பது ஃபைலோ சொல்லி யோவான் எழுதிய லோகோஸ் அல்ல!!



ஈஸா நபி பற்றி இன்னும் சுருக்கமாக 

1.அவர் அல்லாஹ்வின் அடிமை. மகன் அல்ல. (19:30,35; 43:59, 4:172(171))

2.அவரை கடவுளாக எடுத்துக்கொண்டால் அத்தகையவர் நரகமே புகுவார்-5:72)

3.கிறிஸ்தவம் நம்புவது போல் அவர் நியாயத்தீர்ப்பு நாளில் தீர்ப்ப்பளிப்பவர் அல்ல.. மாறாக விசாரிக்கப்படுபவர்.(5:116-119)

(மேசியா நியாயந்தீர்ப்பார் என்று உலகத்தில் கூறப்படுவதை மறுமையோடு லின்க் பண்ணி விட்டார்கள்)


4.அவரும் மரணிக்கக்கூடியவரே. (குர்ஆன் 19:33, 4:159)


5.அவர் சிலுவையில் அறையப்படவில்லை. கொல்லப்படவுமில்லை. மாறாக அது அவர்களுக்கு ஒப்பாக்கப்பட்டது. அவரை அல்லாஹ் உயர்த்திக்கொண்டான்-4:157-158


6.அவர் நீதமான நீதிபதியாக இறங்குவார்- புகாரி 2476,3448

(இதை ஏசாயா புத்தகம் கூறுகிறது. ஈஸா நபி உலகில் நீதிபதியாக இருக்கவில்லை என்பதால் அவர் மறுமையில் இருப்பார் என்று பவுலின் நம்பிக்கைப்பிரகாரம் சுவிசேசங்களும் எழுதப்பட்டன.)


7.உலகத்தில் கூட சாதாரணமான உணவு உண்போராக தான் இருந்தார்- 5:75....

வியாழன், 21 மார்ச், 2024

திரித்துவத்தை குர்ஆன் தப்பாக விபரிக்கிறதா?

 குர்ஆன் திரித்துவம் விசயத்தில் தவறிழைக்கிறதா? -

பாமர கிறிஸ்தவர்களுக்கு மறுப்பு.

குர்ஆன் திரித்துவம் பற்றி பேசும்போது,  திரித்துவத்தில் இல்லாத மரியாளையும் நாங்கள் கடவுளாக வணங்குவதாக கூறுகிறது என்று சில பாமர கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். உண்மையில் திரித்துவத்தில் மரியாள் ஒரு நபர் என்று கூறுகிறதா குர்ஆன்? நாம் அலசலாம்.


குர்ஆனில் எங்குமே மரியாள் திரித்துவத்தில் ஒரு நபர் என்று கூறவில்லை.


அதாவது மரியாளும் இயேசுவும் அல்லாஹ்வும் ஒரே கடவுளாக இருக்கிறார்கள் என்று கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள் என்றோ அல்லது அல்லாஹ் மரியாளாகவும் இயேசுவாகவும் உலகத்தில் வந்ததாக கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள் (ஆள்மாறாட்ட கொள்கை) என்றோ கூறவில்லை!


மாறாக, அரேபியாவில் அப்போது இருந்த கிறிஸ்தவர்கள் இயேசுவை கடவுளாக நம்பிய அதேநேரம் மரியாளையும் சில பிரிவுகள் வணங்கி வந்தனர். இன்றும் கத்தோலிக்கர்கள் மரியாளிடம் நமக்காக வேண்டிக்கொள்ளும் என்று கூறுவோராக உள்ளனர். அத்தோடு அவரை கடவுளின் தாய் என்றே நம்புகின்றனர்.

அக்காலத்தில் இருந்த கிறிஸ்தவர்கள் மரியாளையும் இயேசுவையும் அல்லாஹ்வுக்கு மேலதிகமாக வணங்கி அவர்களிடம் உதவி தேடியதையே குர்ஆன் கண்டிக்கும் விதமாக குறிப்பிடுகிறது.. 


எப்படி மக்காவில் சிலை வணங்கிகள் அல்லாஹ்வை விடுத்து சிலைகளை வணங்கியதற்காக அவர்களுக்கு சிந்திக்க தூண்டும் வகையில் உரையாற்றுவதை போன்றே இத்தகைய கிறிஸ்தவர்களுக்கும் குர்ஆன் உபதேசிக்கிறது.

இனி அவ்வசனங்களை காண்போம்:


1.குர்ஆன் 5:116-119

மறுமையில் இறைவன் ஈஸாவிடம் நீர் தான் அல்லாஹ்வை விடுத்து என்னையும் என் தாயையும் இரு கடவுள்களாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று மனிதர்களிடம் கூறினீரா என்று கேட்பான் என்பதை குறிப்பிட்டு , மறுமையில் மாட்டிக்கொண்டுவிடாதிருக்க குர்ஆன் முன்கூட்டியே உபதேசிக்கிறது.


அன்றியும், அல்லாஹ் (மறுமை நாளில் ஈஸாவிடம்* 5:119 இது மறுமை என்பதை உறுதிப்படுத்துகிறது) “மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வைத் தவிர என்னையும், என்னுடைய தாயையும் இரண்டு வணக்கத்திற்குரியவர்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனிதர்களுக்கு நீர் கூறினீரா?” என்று கேட்பான். (அதற்கு) “நீ மிகப்பரிசுத்தமானவன், எனக்கு ஒரு சிறிதும் உரிமை இல்லாததை நான் (ஒருபோதும்) கூறுவதற்கு எனக்குத் தகுதி இல்லை, அவ்வாறு நான் கூறியிருந்தால், நிச்சயமாக நீ அதனை அறிந்திருப்பாய், என் உள்ளத்தில் உள்ளதை நீ நன்கறிவாய், உன் உள்ளத்திலுள்ளதை நான் அறிய மாட்டேன், நிச்சயமாக நீதான் மறைவானவற்றை மிக்க அறிந்தவன்” என்று கூறுவார்.

(அல்குர்ஆன் : 5:116)



“என்னுடைய இரட்சகனும் உங்களுடைய இரட்சகனுமான அல்லாஹ்வை வணங்குங்கள்” என்று நீ எதை எனக்குக் கட்டளையிட்டாயோ அதைத் தவிர (வேறு) எதையும் நான் அவர்களுக்கு கூறவில்லை, நான் அவர்களுடன் (உலகில்) இருந்தவரையில், அவர்களின் செயலைத் தெரிந்து கொண்டிருந்தேன், பின்னர், நீ என்னைக் கைப்பற்றியபொழுது, நீதான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய், நீயே ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாளன்”(,என்றும்)


(அல்குர்ஆன் : 5:117)


(இரட்சகா) “அவர்களை நீ வேதனை செய்தால், நிச்சயமாக அவர்கள் உன்னுடைய அடியார்களே! அன்றியும், அவர்களை நீ மன்னித்துவிட்டால், நிச்சயமாக நீதான் (யாவரையும்) மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன்.” என்றும் கூறுவார்.

(அல்குர்ஆன் : 5:118)


(அதற்கு) அல்லாஹ் “இது உண்மையாளர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கக்கூடிய நாளாகும், அவர்களுக்கு சுவனபதிகள் உண்டு, அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவற்றிலேயே அவர்கள் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பவர்கள் என்று கூறுவான், அவர்களைப் பற்றி அல்லாஹ்வும் திருப்தியடைவான், அவர்களும் அவனைப் பற்றித் திருப்தியடைவார்கள், அது மகத்தான வெற்றியாகும்.

(அல்குர்ஆன் : 5:119)



2.குர்ஆன் 5:73-75

அல்லாஹ் மூவரில் ஒருவன் என்று கூறுவோர் நிராகரிப்பாளர்கள் என்று கூறிவிட்டு, மற்ற இருவருமான ஈஸா மற்றும் அவரது தாய் உணவு உண்ணும் பலவீனராகவே இருந்தனர் என்று உண்மையை உணர்த்துகிறது. இதில் மரியாளை திரித்துவத்தில் ஒருவர் என்று கூறவில்லை. மரியாளையும் இயேசுவையும் வணங்கியவர்களுக்கும் வணங்குவோருக்கும் உண்மையை உணர்த்துகிறது.



“நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாவதான (ஒரு)வன்தான்” என்று கூறியவர்கள், திட்டமாகவே நிராகரிப்போராகிவிட்டார்கள், ஏனென்றால் ஒரே நாயனைத்தவிர வேறு நாயன் (இல்லவே) இல்லை, அவர்கள் கூறுவதைவிட்டும் விலகிக் கொள்ளாவிடில், அவர்களிலுள்ள நிராகரிப்போர்களைத் துன்புறுத்தும் வேதனை நிச்சயமாக பிடித்துக்கொள்ளும்.


(அல்குர்ஆன் : 5:73)


 எனவே, இவர்கள் அல்லாஹ்வின் பக்கம் மீண்டு (இன்னும் அவனிடம் (தங்கள் குற்றத்திற்காகப்) பாவமன்னிப்புத்தேட மாட்டார்களா? மேலும், அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபையுடையவன்.

(அல்குர்ஆன் : 5:74)


மர்யமுடைய மகன் மஸீஹ் ஒரு தூதரேயன்றி இல்லை, இவருக்கு முன்னரும் (இவரைப்போல்) தூதர்கள் பலர் (வந்து) சென்று விட்டனர், அவருடைய தாய் மிக்க உண்மையானவர், இவ்விருவரும் (மற்ற மனிதர்களைப்போல) உணவு உட்கொண்டே (வாழ்ந்து) வந்தனர், இதனை பல அத்தாட்சிகளைக் கொண்டு அவர்களுக்கு நாம் எவ்வாறு தெளிவாக்கினோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக! பின்னர், (உண்மையிலிருந்து) இவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் நீர் கவனிப்பீராக.

(அல்குர்ஆன் : 5:75)



அதாவது இயேசுவும் மரியாளும் பூமியில் உணவு உண்டு கக்கூஸ் போகும் மனிதர்களாக தான் இருந்தார்கள் என்பதை இறைவன் உணர்த்துகிறான்.



உடனே சில அறிவாளிகள் , "கக்கூஸ் போவதால் தேவனில்லை என்றாகுமா? கடவுள் மனிதனாக வந்ததால் கக்கூஸ் போனார். இந்த லாஜிக் கூட தெரியவில்லை "என்கிறார்கள்

முதலில் கடவுள் மனிதனாக பிறந்து வரவேண்டுமானால், அவர் ஒரு குழந்தையை தாயின் வயிற்றில் படைக்க வேண்டும். -காரணம்: பிறக்கும் குழந்தையை இறைவனே படைக்கிறான். அப்படி படைத்துவிட்டால், படைத்தது எப்படி கடவுளாகவோ கடவுளின் அவதாரமாகவோ ஆகும்?


அத்தோடு மனிதனை வணங்கும் எல்லோரும் சொல்லும் சமாளிப்பு தான் நாங்கள் மனிதனை வணங்கவில்லை .எங்கள் தேவன் மனிதனாக வந்தார் என்பதை தான். மனிதனை வணங்குவதை நியாயப்படுத்த இவ்வாறு கூறுகிறார்கள். உண்மையில் அது சாத்தியமில்லை!!


ஏன் மனிதராக கடவுள் வந்தார் என்று கேட்டால், தன்னை மேலே இருக்குற கடவுளுக்கு பலி கொடுக்க வந்தாராம். அதாவது தன்னை தானே தனக்கே பலியிட்டுக்கொள்ள தேவன் வரவேண்டுமா? 

கடவுள் நமக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட இயலுமா? காரணம் அவர் கடவுளாக இருப்பதால் அவருக்கு சுய தேர்வு பாவ இச்சை இருப்பதில்லை. அவர் எப்படி ஆசையுள்ள மனிதருக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுவார்?

குருடன் பார்வையுள்ளவனுக்கு எப்படி பார்க்க வேண்டும் என்று கற்பிப்பது போன்றதே கடவுள் மனிதனாக வந்து முன்மாதிரியாக வாழ்வதும் அமையும்.. 

-----


3.குர்ஆன் 4:171-172

மர்யமின் மகன் விசயத்தில் கிறிஸ்தவர்கள் வரம்பு மீற கூடாது என்றும், அவர் அல்லாஹ்வின் தூதரும் மர்யமின் மீது அல்லாஹ் போட்ட அவனது வார்த்தையும், அவனிடமிருந்துள்ள ஒரு ரூஹ் (உயிர்)உம் ஆவார் என்று கூறுவதோடு,கடவுள் மூவர் என்று கூறவேண்டாம் என்றும் , அல்லாஹ்வுக்கு பிள்ளை ஏற்படுத்திக்கொள்ள எந்த தேவையும் இல்லை என்கிறது.

அத்தோடு மஸீஹும் நெருக்கமான மலக்குகளும் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதை குறைவாக கொள்ளமாட்டார்கள் என்றும் கூறுகிறது



வேதத்தையுடையவர்களே! உங்கள் மார்க்கத்தில், நீங்கள் அளவு கடந்து செல்லாதீர்கள், இன்னும், அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள், நிச்சயமாக மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ், அல்லாஹ்வுடைய ஒரு தூதரும், அவனுடைய வாக்கும் ஆவார், அல்லாஹ், மர்யமின் பால் அ(ந்த வாக்கான)தைப் போட்டான், (மற்ற ஆன்மாக்களைப் போன்று அவரும்,) அவனிடமிருந்து (படைக்கப்பட்ட) ஓர் ஆன்மாவே, ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நீங்கள் விசுவாசியுங்கள், இன்னும் (வணக்கத்திற்குரிய தெய்வங்கள்) மூன்று என்று கூறாதீர்கள், (இவ்வாறு கூறுவதை விட்டு விலகி விடுங்கள், (அது) உங்களுக்குத்தான் மிக்க நன்று, (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் ஒரே நாயன்தான், அவனுக்கு மகன் இருப்பதைவிட்டும் அவன் மிகப் பரிசுத்தமானவன். வானங்களில் உள்ளவை மற்றும் பூமியில் உள்ளவை அவனுக்கே உரியன- (உங்கள் யாவரின் காரியங்களை) பொறுப்பேற்றுக் கொள்ள அல்லாஹ் (ஒருவனே) போதுமானவன்.


(அல்குர்ஆன் : 4:171)



மஸீஹும், அல்லாஹ்வுக்கு நெருக்கமான மலக்குகளும், அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் கொள்ளவே மாட்டார்கள், எவர்கள் அவனுக்கு வணக்கம் செலுத்துவதைவிட்டும் குறைவாகக்கருதி, கர்வமும் கொள்வார்களோ அவர்கள் யாவரையும் (மறுமையில் எழுப்பி) அவன் தன் பக்கமே ஒன்று திரட்டுவான்.


(அல்குர்ஆன் : 4:172)



இங்கேயும் அல்லாஹ் ஈஸா என்பவர் இறைவன் தன் வாக்கை மர்யமின் மீது போட்டதால் உண்டானவர் என்றும் அவனிடமிருந்துள்ள ஒரு உயிர் என்றும் கூறி அவரை பற்றி கிறிஸ்தவர்கள் குழம்ப காரணமாக பாவிக்கும் வாதத்தையே குறிப்பிட்டு தெளிவுபடுத்துகிறது.


அதாவது மர்யமின் மீது எவ்வாறு வார்த்தை போடப்பட்டது என்பதை 3:59 கூறுகிறது



நிச்சயமாக, அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம்: ஆதமுடைய உதாரணத்தைப்போன்றதே! அவன், அவரை மண்ணால் படைத்துப் பின் அதற்கு (மனிதனாக!) “ஆகுக” என்று கூறினான், அவர்(அவ்வாறு) ஆகிவிட்டார்.

(அல்குர்ஆன் : 3:59)



ஆதம் எவ்வாறு மண்ணால் படைக்கப்பட்டு ஆகு என்று அவர்மீது கூறப்பட்டதோ, அதுபோன்றே பெண்ணில் இருந்து இறைவன் அவரை படைத்து ஆகு என்று அவரது தாய் மீது போட , அவரும் ஆகிவிட்டார். அதை 3:47 உம் தெளிவாக உணர்த்துகிறது.

 


(அதற்கு மர்யம்) “என் இரட்சகனே! எந்த ஒரு மனிதருமே என்னைத் தீண்டாதிருக்க எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்? என்று கூறினாள். (அதற்கு) “அவ்வாறே அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தை முடிவெடுத்தால் அவன் அதற்கு கூறுவதெல்லாம் “ஆகுக” என்பதுதான், அது ஆகிவிடும்” என்று கூறினான்.

(அல்குர்ஆன் : 3:47)


இதை குறித்து கிறிஸ்தவர்கள் வாக்கு மனிதனானதாக (யோ 1:14) தப்பாக புரிந்து கொண்டுள்ளனர். காரணம் வார்த்தை என்பது ஒரு நபராக பழைய ஏற்பாட்டில் எங்குமே கிடையாது.




ஆகவே எங்குமே குர்ஆன் இவர்களது திரித்துவத்தை குறிப்பிட முற்பட்டு பிழையாக சொல்லவில்லை!!!

 பிழையான கொள்கையுடையவர்களுக்கு உபதேசமே வழங்கப்படுகிறது. அதாவது இறைவனோடு சேர்த்து மனிதர் இயேசுவையும் அவரது தாயார் மனுஷி மர்யமையும் வணங்கி உதவிதேடும் மக்களுக்கு அறிவுரையான வசனங்களே இவை.


-------


இவர்களது திரித்துவம் என்ன?


பிதா, வார்த்தை (குமாரன்), பரிசுத்த ஆவி இம்மூவரும் ஒரே கடவுளாக இருக்கிறார்கள் என்று நம்புவதாகும்.


பிதா எனப்படுபவர் மட்டுமே மெய்யான கடவுளாக பைபிளில் காணக்கிடைக்கிறது. 


வார்த்தை என்பது ஒரு நபரே அல்ல. அது தேவனது பேச்சு ஆகும். இதுவே மனுசனாகியதாக யோவான் எழுதுகிறார். காரணம் பைலோ என்ற வழிதவறிய யூதர் "வார்த்தை" என்று ஒரு நபர் இருப்பதாகவும் அவரே சகலத்தையும் படைத்தவர் என்று கதை கட்டினார். அதை வைத்தே யோவான் எழுதியுள்ளார். வேதத்தை வைத்து அல்ல.


பரிசுத்த ஆவி என்பது கடவுளின் உயிரை குறிக்கிறது என்பார்கள். கடவுளது உயிர் எப்படி இன்னொரு நபராக இருக்க முடியும்?


ஆகவே கடவுளையும் கடவுளின் இரு பண்புகளை (பேச்சு&உயிர்) இன்னும் இரு நபர்களாகவும் கற்பனை பண்ணிக்கொண்டு மூவர் என்கிறார்கள்.


ஒரே கடவுளையே மூன்றாக பிரித்து விட்டு மூன்று நபர்கள் சேர்ந்து ஒரே கடவுள் என்று வியாக்கியானம் செய்கிறார்கள்.


அந்த வார்த்தையே இயேசுவாக பிறந்ததாக நம்புகின்றனர். அப்படியானால் திடீரென தேவன் ஊமையாகிவிட்டாரா?? காரணம் அவரது பேச்சு முழுவதும் பிரிந்து பெண்ணுள் புகுந்து மனிதனாக பிறந்துவிட்டதே.


ஆகவே தம் மதத்தை பற்றியே அரைகுறைகளாக இருக்கும் போதகர்கள் குர்ஆனை பற்றி சரியாக சிந்தித்துவிடவா போகிறார்கள்??


 

அல்லாஹ் வழிதவறச்செய்கிறான் என்பதன் விளக்கம்

1.மனிதனுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது  --மனிதனுக்கு இறைவன் வழி காட்டியுள்ளான். ஒன்று அவன் நன்றியுள்ளவனாக இருக்கிறான் அல்லது காஃபிராக இருக்கிறான...