text format
Text format
சுவர்க்த்து மதுவில் போதையோ, தீங்கோ , தலைவலியோ இருக்காது (குர்ஆன் 37:47, 52:23, 56:19)
உலகத்தில் சிறுவர்களின் கல்வியுரிமை வேறு உரிமைகள் பறிக்கப்பட்டு எதிர்காலம் பாதிக்கப்படுவதால் சிறுவர்களிடம் வேலை வாங்குவது குற்றமாக பார்க்கப்படுகிறது.
ஆனால் சுவர்க்கத்திலோ அதற்கென்றே படைக்கப்பட்டவர்கள் அதை செய்வதால் எந்த பிரச்சனையும் இல்லை...
உதாரணமாக ரோபோவை குறித்த வேலைக்கு நியமிப்பதால் அது குற்றம் என சொன்னால் எப்படி?..
இறைவனே உடலைக் கொடுத்து உயிரைக் கொடுத்து அதற்கான தெம்பையும் கொடுத்து வேலை செய்விப்பதை எப்படி விமர்சிக்க முடியும்
??
-கண்ணழகிகள் திருமணம் முடித்தே தரப்படுவார்கள் (குர்ஆன் 52:20, புகாரி 3254)
அதிலே அவர்களது அந்தரங்க உறுப்புகளை வர்ணித்து எதுவும் கூறப்படவில்லை
78:33 இலுள்ள "கவாயிப்" என்பது கூட முலைகள் முகிழ்ந்த வயதுள்ள பெண்களை குறிக்கும். அங்கே முலை வர்ணனை எதுவும் இல்லை. அதுவும் குறிப்பிட்ட வயது பெண்களுக்கு
அவ்வார்த்தையை பாவிக்கும் வழக்கம் அவர்களிடம் இருந்தவொன்றே.
அதனையே இணைவைப்பாளர்கள் உஹதைவிட்டு திரும்பியபோது அவர்கள் கூறியதாக வருவதில்" நீங்கள் முகம்மதை கொல்லவும் இல்லை. கவாயிபை
(78:33 இலுள்ள வாசகம்)- இளம்பெண்களை சிறைபிடிக்கவுமில்லை. நீங்கள்
செய்தது மிகவும் கெட்டது" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது
(ولا
محمدا قتلتم.
ولا الكواعب أردفتم
(சுனனுல் குப்ரா (இமாம் நஸாயீயுடையது) 11083,தபரானீ (11/247) 11632)
இப்படி இளவயது பெண்கள் மனைவியராக சுவர்க்கத்தில் கிடைப்பார்கள் என்று சொல்லப்படுகிறது . உணவு பானங்கள் ஓய்வு என்பதோடு ஆணுக்கு மிகவும் விருப்பமானது பெண் என்பதால் அவர்களையும் சுவர்க்கத்தில் கொடுப்பான்
-சுவர்க்கத்தில் சாப்பிடும் நேரத்தில் சாப்பிடுதல் குடிக்கும் நேரத்தில் குடித்தல் தாம்பத்ய நேரத்தில் தாம்பத்யத்தில் ஈடுபடல், இறைவனை துதிக்கும் நேரத்தில் இறைவனை துதித்தல் என அதற்கேற்றபடியே இருக்கும் (புகாரி 3245,3246)
வெறுமனே ஆன்மீகரீதியிலோ அல்லது வெறுமனே மாம்சரீதியிலோ சுவர்க்கம் இருக்காது.
மாறாக இவ்வுலகில் நல்லோராக வாழ்ந்தோருக்கு இறைவனின் கூலி. அங்கே ஆன்மீக இன்பம் உடலியல் இன்பம் என இரண்டும் கலந்தே இருக்கும்.
ஒரு பெண்ணுக்கு பல ஆண்கள் கணவர்களாக கிடைப்பார்கள் என்பது தற்கால தற்குறிகளின் கருத்தேயாகும். ஹூருல்ஈன் என்போர் பெண்கள் மட்டுமே.. ஆண்களில் அப்படி இல்லை..
இவ்வுலகில் நல்ல கணவன் மனைவியாக இருந்தால் அதே பெண்ணுக்கு அதே நபர் கணவராக கிடைப்பார். அதனால் தான் நபிகளாரின் மனைவியர் சுவர்க்கத்திலும் அவரது மனைவியர் என கூறப்பட்டுள்ளது. இவ்வாறே நபித்தோழர்களும் புரிந்து கொண்டனர்.
இவ்வுலகில் விபச்சாரத்தை தடைசெய்த இறைவன் சுவர்க்கத்தில் அனுமதிக்கிறான் என கூறுவது இவர்களின் வேசித்தன ஆவியின் வெளிப்பாடு.. அத்தகையோர் பெண்கள் விசயத்தில் அசிங்கப்பட்டுப்போனார்கள் என்பது வரலாறு
நபி(ஸல்) இரவில் அல்லது பகலில் தம் மனைவிகளிடம் வருபவர்களாக இருந்தார்கள். அப்போது 11 பேர் இருந்தனர் என அனஸ் (ர) கூறினார்கள். அப்போது அதற்கு நபிகளார் சக்திபெருவார்களா? என்று கேட்டதற்கு, நபி(ஸல்) அவர்களுக்கு முப்பது பேருடைய சக்தி கொடுக்கப்பட்டுள்ளது என நாம் பேசிக்கொள்வோம் என்றார்கள் -புகாரி 268
நபிகளாரிடம் 11 பெண்கள் இருந்த காலம் ஹிஜ்ரி 8-10 காலத்திலாகும். மாரியா ,ரைஹானா எனும் இரு வலக்கரம் சொந்தமானவர்களும் 9 மனைவியருமாக இருந்தனர்.
இது வழமையாக நடந்த ஒன்று அல்ல. மாறாக ஒரு நாள் நடந்ததொன்றே என அனஸ் (ர) அவர்களின் வேறொரு அறிவிப்பு கூறுகிறது:
ஒரு நாள் நபிகளார் அனைத்து மனைவியரிடமும் ஒரே குளிப்பில் சென்று வந்தார்கள் என அனஸ்(ர) கூறினார்கள் (அபூதாவூத் 218)
இது எப்போது நடந்தது என்றால் நபிகளார் இறுதி ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டுவதற்கு முந்திய இரவு நிகழ்ந்தது என்பதை அன்னை ஆயிஷா (ர) கூறுகிறார்கள்:
"நான் நபி(ஸல்) அவர்களுக்கு மணப்பொருட்களை பூசுவேன். அவர்கள் தம் மனைவியரிடம் சென்றுவிட்டு காலையில் இஹ்ராம் அணிந்தவர்களாக இருப்பார்கள். அவர்களிடமிருந்து நறுமணம் கமழும் என ஆயிஷா (ர) கூறுகிறார்கள்- புகாரி 267,270
அதாவது இஹ்ராம் அணிவதற்கு முன் தன் அனைத்து மனைவியருடனும் இல்லறத்தில் ஈடுபட்டார்கள்.
வழமையாக நடப்பது போன்று (كان يدور /كان يطوف ) என்று உள்ளதும் அந்த ஒரு நாளில் ஒரு தடவை நிகழ்ந்தது என்பதையே இங்கு (அபூதாவூத் 218 -طاف ذات يوم -ஒரு நாள் <மனைவியர் அனைவரிடமும்> வலம்வந்தார்) குறிக்கிறது. இதற்கு ஆதாரமாக புகாரி 267 இலும் அன்னை ஆயிஷா (ர) மணம் பூசிவிட்டதை குறிப்பிடுவதற்காகவும் (كنت أطيب) என்று இதே "كان" என்பதையே பாவித்திருக்கிறார்கள். ஆனால் அதுவும் ஒரு தடவை நடந்ததே என புகாரி 270 காட்டுகிறது (தமிழ் மொழிபெயர்ப்பில் சற்று தவறியுள்ளார்கள். அரபியில் (أنا طيبت-நான் மணம்பூசிவிட்டேன்") என்றே உள்ளது.
இது ஆபாசமா?- நிச்சயமாக இல்லை.. இக்காலத்தில் நீலப்பட (2சாமு12:11-12) கலாச்சாரத்தில் ஊறி இருப்பதால், உடலுறவு என்பதே நீலப்படம் என்று நினைத்து விடுகிறார்கள். உண்மையில் அது கணவனுக்கு மனைவி மீதும் மனைவிக்கு கணவன்மீதுமுள்ள உரிமை.. பல நாட்களுக்கு மீண்டும் தாம்பத்யத்தில் ஈடுபட கிடைக்காது என்பதால் அவர்களுக்குரிய உரிமையை நபிகளார் பூரணமாக நிறைவேற்றினார்கள். அது தவறு அல்ல... நீதி.
வழமையாக நபிகளார் அனைத்து மனைவியரிடமும் தினமும் வருவார்கள் என்றும் ஆனாலும் அவர்களை தீண்ட மாட்டார்கள் என்றும் இறுதியாக யாருடன் இரவு தங்கும் நாளுக்குரியதோ அவரோடே தாம்பத்யத்தில் ஈடுபடுவார்கள் என அன்னை ஆயிஷா (ர) கூறுகிறார்- அபூதாவூத் 2135
மனைவியரில் விரும்பியவர்களை (விரும்பும் காலம்) ஒதுக்கி வைக்கலாம் விரும்பியவர்களை (விரும்பும் காலம்) உங்களுடன் இருக்க வைக்கலாம் . நீங்கள் ஒதுக்கி வைத்தவர்களில் யாரை விரும்புகிறீர்களோ அவர்களை உங்களுடன் சேர்த்து கொள்ளலாம். இதனால் உங்கள் மீது குற்றம் ஏதுமில்லை (குர்ஆன் 33:51) இறங்கிய பின்பும், ஒரு மனைவியுடைய நாளில் மற்ற மனைவியிடம் செல்ல விரும்பினால், அந்நாளை விட்டுக்கொடுக்குமாறு அனுமதி கேட்பார்கள் என்கிறார் அன்னை ஆயிஷா (புகாரி 4789)
நபிகளாரிடம் ஒன்பது மனைவியர் இருந்த காலத்தில் ஒரு மனைவியிடம் சென்றால் மீண்டும் அவரிடம் செல்வதற்கு ஒன்பது நாட்கள் எடுக்கும். அதனால் அனைத்து மனைவியரும் அந்த நாளுக்குரிய மனைவியின் வீட்டில் இரவில் ஒன்று கூடுவர். ஆயிஷா (ர) அவர்களின் வீட்டில் ஸைனப் (ர) அவர்களை அன்னை ஆயிஷா என நினைத்து நபிகளார் அவரிடம் கையை நீட்டினார்கள். அப்போது அன்னை ஆயிஷா,"இவர் ஸைனப்" என்றார்கள். உடனே நபிகளார் கையை விலக்கிக் கொண்டார்கள்.. முஸ்லிம் 2898 (1462 ஆங்கில அரபு)
இதன்படி அந்த இரவுக்குரிய மனைவியல்லாதவரை தொடவும் மாட்டார்கள் என்று தெளிவாக காட்டுகிறது.
இது சம்பந்தமாக இன்னும் பல ஹதீஸ்கள் உள்ளன.
ஆகவே தன் மனைவியரின் உரிமைகளை நீண்ட நாட்கள் கழித்தே கொடுக்கவேண்டிய நிலை இருக்கும்போது அனைவரிடமும் ஒரே இரவில் சென்று வந்தார்கள். அது அவர்களது நீதியை தான் காட்டுகிறது.
நீலப்பட (2 சாமுவேல் 12:11-12) ஆதிக்கத்தினால் இது ஆபாசமாக தென்படுகிறது:
தாவீதின் அனைத்து மனைவியரையும் ஒரே ஆணுக்கு சப்லை செய்து இஸ்ரவேலர் முன்பாக பட்டப்பகலில் உறவுகொள்ள வைப்பேன் என கர்த்தர் சொன்னது குறித்து வெட்கமே இல்லை:
2 சாமுவேல் 12:11-12 IRVTam
[11] யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன்னுடைய வீட்டிலே அழிவை உன்மேல் எழும்பச்செய்து, உன்னுடைய கண்கள் பார்க்க, உன்னுடைய மனைவிகளை எடுத்து, உன்னுடைய அயலானுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன்னுடைய மனைவிகளோடு உறவுகொள்வான். [12] நீ மறைவில் அதைச் செய்தாய்; நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர்கள் எல்லோருக்கும் முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்வேன் என்றார் என்று சொன்னான்.
https://bible.com/bible/1899/2sa.12.11-12.IRVTam
கிறிஸ்தவ காமுக போதகர்கள் தம்மை ஒழுக்கசீலர்களாக காண்பித்துக் கொண்டு முகம்மது நபியை கொச்சைப்படுத்துவதற்காக இவர்களின் காமம் சொட்டும் விளக்கங்களை நுழைவித்து கொச்சையாக பேசுவதை வழமையாக வைத்திருக்கிறார்கள்.
அதிலே வழமையாக ஆயிஷா (ர) அவர்களை மணந்ததற்கு அடுத்ததாக கீழ் குறிப்பிடும் செய்திகளை ஆசையோடு எடுத்து வைப்பார்கள்
1.ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ர) அவர்களை மணந்ததுடன் சம்பந்தப்படும் கதைகள்
2.ஜாவ்னிய குலத்து பெண்ணுடன் சம்பந்தமான ஹதீஸ்
3.பாதையில் சென்ற பெண்ணை பார்த்துவிட்டு தன் மனைவியிடம் சென்றதாக வரும் ஹதீஸ்
இதை ஒவ்வொன்றாக பார்ப்போம்:
புகாரி 7420 இலே மொழிபெயர்ப்பாளர் 33:37 யார் விசயத்தில் இறங்கியதாக கூறுவதை மொழிபெயர்த்த போது தம்பதியாக இருந்த ஸைத் ஸைனப் விசயத்தில் இறங்கியது என அடைப்புக்குறியுடன் போட்டு விட்டனர். இதை அரைகுறைகள் பிடித்துக்கொண்டு கணவன் மனைவியாக இருந்தபோதே இவ்வசனம் இறங்கியது போன்று தற்குரித்தனமான விவாதங்களில் சித்தரித்தனர். இவற்றுக்கான பதில்
*அரபியில் இவ்வசனம் ஸைனப் மற்றும் ஸைத் விசயத்தில் இறங்கியது என்றே உள்ளது. மொழிபெயர்ப்பாளர் தெளிவாக புரிய வைப்பதற்காக ஸைத் மற்றும் ஸைனப் யாராக இருந்தனர் என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ளும் நோக்கில் "தம்பதியராயிருந்த" என போட்டிருக்கிறார்கள்.
*ஸைத் தன் மனைவியை விவாகரத்து செய்ய விரும்பி நபியிடம் முறையிட்டவராக ஆலோசனை செய்தார். அப்போது நபிகளார் "உன் மனைவியை உன்னோடு வைத்துக்கொள்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!" என்றே சொன்னார் (திர்மிதீ 3212)
இதன்மூலம் ஸைத் தன் விருப்பப்படியே விவாகரத்து செய்தார். நபியின் ஆலோசனைப்படி ஸைத் நடக்கவில்லை என்பதை காட்டுகிறது.
*விவாகரத்து நடந்து ஸைனபின் இத்தா (காத்திருப்புக்காலம் -மூன்று மாதவிடாய் ஏற்பட்டு சுத்தமடையும் காலம்) முடிந்த பின், ஸைதை ஸைனபிடம் அனுப்பியே நபிகளாருக்கு பெண் பேசினார்கள். அதிலே ஸைத் தனக்கு ஸைனபின் மீது மரியாதை அப்போது அதிகரித்துவிட்டது என்கிறார். அதன் பின்பே 33:37இன் இறுதிப்பகுதியான "ஸைத் அவளை விவாகரத்து செய்துவிட்ட பின்னர் உமக்கு அவளை திருமணம் செய்து வைத்தோம்." என்பது இறங்கியது (முஸ்லிம் 2798)
இதன்படி விவாகரத்து முடிந்து, ஸைதுக்கும் அப்பெண் மீது விருப்பம் இல்லாத நிலையில் அவரை வைத்தே நபிகளார் பேசினார்
*இந்த திருமணத்தின் நோக்கம் என்ன என்பதை குர்ஆன் 33:37இன் இறுதிப்பகுதி கூறுகிறது:
"ஏனெனில் முஃமின்களால் வளர்க்கப்பட்டவர்கள் தம் மனைவியரை விவாகரத்து செய்துவிட்டால், அப்பெண்களை (தம் முன்னால் கணவர்களான வளர்க்கப்பட்டவர்களின் தந்தையர்களான) அவரகள் மணந்து கொள்வதில் யாதொரு தடையும் இருக்க கூடாது என்பதற்காகவே. மேலும் இது அல்லாஹ்வின் நடைபெற்று தீரவேண்டிய கட்டளையாகும்" (33:37)
அதாவது சொந்த மகனின் விவாகரத்து செய்த மனைவியரையோ அவனுடைய விதவையான மனைவியரையோ மகனின் தந்தை திருமணம் செய்ய முடியாது (குர்ஆன் 4:23). ஆனால் வளர்க்கப்பட்டவர்கள் அத்தகைய மகன்கள் அல்ல என்பதால், அவர்கள் விவாகரத்து செய்தால் அப்பெண்ணை அந்த நபரை வளர்த்த நபர் முடிப்பதில் தவறில்லை என்பதை செய்வித்து காட்டுவதற்காக நிகழ்ந்ததோடு, இறைவனது கட்டளையும் ஆகும்.
*அத்தோடு குர்ஆன் 33:37 நபிகளாரை கண்டிக்கிறதாகவும் உள்ளது. அதாவது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை நீர் மனிதர்களுக்கு பயந்து மறைத்தீர் என கண்டிக்கிறது. (மனிதர்கள் குறை கூறுவார்கள் என்ற அச்சம். அல்லாஹ் வெளியாக்க இருந்தது இந்த திருமணம்). இதனால் தான் நபிகளார் தனக்கு இறங்கிய வசனத்தில் ஏதாவதொன்றை மறைப்பார் என்றால் இதை மறைத்திருப்பார் என ஆயிஷா அவர்களே கூறுகிறார்கள் (புகாரி 7420).
எவரும் தன் இச்சைக்கு இப்படி தன்னை கண்டித்து இட்டுக்கட்ட மாட்டார் அல்லவா?
இதிலே வளர்ப்பு மகனின் மனைவியை அபகரித்தது என்று கூற எந்தவித நியாயமும் இல்லை.
(ஒரு பேச்சுக்காக இதுபற்றி வரும் சாட்சிகளற்ற அறிவிப்புகளை உண்மையென கருதினாலும்,, அவற்றிலே நபிகளார் தற்செயலாக ஸைனபை பார்த்ததாகவும் அதனால் ஈர்க்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. ஈர்க்கப்படுவதற்கு காரணம் ஹோமோன்களே. அதனால் அவரை குற்றப் படுத்த முடியாது. அப்போதுகூட நபிகளார் தம் தலையை தாழ்த்திக்கொண்டு "உள்ளங்களை திரும்பக் கூடியவன் தூயவன்" என கூறிக்கொண்டே சென்றுவிட்டார் என்றே அவை கூறுகின்றன. (இவர்கள் புழுகுவது போன்று எதுவுமே இல்லை!). அதன் பின்பு ஸைத் ஸைனப் இருவருக்கும் ஒருவரையொருவர் வெறுப்பு உண்டாகிவிட்டது என்றும் அதனால் ஸைத் விவாகரத்து கோர ஆலோசனை கேட்டு நபிகளாரிடம் வந்தார் என்றும் நபிகளார் வேண்டாம் என்று கூறியும் ஸைத் விவாகரத்து செய்தார் என்றும் பிறகு குர்ஆன் 33:37 இறங்கியதாகவும் அவை கூறுகின்றன.
இந்த கதைகளின் படி கூட, இறைவனின் இந்த திருமணக் கட்டளை நிறைவேறுவதற்காக நபியிற்கு விருப்பம் ஏற்பட வேண்டும் என்பதற்காக நிகழ்ந்த நிகழ்வாகவே கூறப்படுகிறது. ஆனாலும் இவை அடிப்படையற்றவை ஆகும்.)
இதிலே எது எப்படி இருந்தாலும் விமர்சிக்கப்பட எந்த குறையும் இதிலே கிடையாது!!!
!
*பைபிளிலே தாவீதை திருப்திப்படுத்த அவரது ஆண்டவரின் மனைவிகளையும் தேவனே மடியில் கொடுத்தார்:
சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 12:8 TAERV
[8] நீ அவனது குடும்பத்தையும் அவனது மனைவியரையும் எடுத்துக்கொள்ளுமாறு நான் செய்தேன். நான் உன்னை இஸ்ரவேல், யூதா ஜனங்களுக்கு ராஜாவாக்கினேன். அது போதாதென்று உனக்கு இன்னும் அதிகமதிகமாகக் கொடுத்தேன்.
https://bible.com/bible/3154/2sa.12.8.TAERV
(வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பில் உன் ஆண்டவனின் மனைவிகளை உன் மடியில் கொடுத்தேன் என உள்ளது. ஒரு பெண்ணை மடியில் கொடுத்தல் என்பது மனைவியாக கொடுப்பதையே குறிக்கும் :
ஆதி 16:5 IRVTam
[5] அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: “எனக்கு நேரிட்ட அநியாயம் உம்மேல் சுமரும்; என்னுடைய அடிமைப்பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக நினைக்கிறாள்; யெகோவா எனக்கும் உமக்கும் நடுநிலையாக நியாயந்தீர்ப்பாராக” என்றாள்.
https://bible.com/bible/1899/gen.16.5.IRVTam
(சும்மா பராமரிக்க கொடுப்பதற்கு தாவீது என்ன சுதந்திர போராட்ட தியாகியா? அதை தேவன் செய்தால் எப்படி உபகாரம் என கருத முடியும்??)
*இதே தாவீது உரியாவின் மனைவியை கள்ளத்தனமாக கர்ப்பமாக்கியதால் , அக்குழந்தையை தண்டித்தார். ஆனால் அவளை இவர்கள் பாசையில் சொல்வதென்றால் ஆட்டையப் போட்டு புணர்ந்த போது பிறந்த குழந்தையை தேவன் நேசித்தார் -2 சாமுவேல் 12:14-15,24
2 சாமு 12:14-15, 24 IRVTam
[14] ஆனாலும் இந்த சம்பவத்தால் யெகோவாவுடைய எதிரிகள் இழிவாகப் பேச நீ காரணமாக இருந்தபடியால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாக சாகும் என்று சொல்லி, நாத்தான் தன்னுடைய வீட்டிற்குப் போய்விட்டான். [15] அப்பொழுது யெகோவா உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாக இருந்தது.
[24] பின்பு தாவீது தன்னுடைய மனைவியான பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி, அவளிடத்தில் போய், அவளோடு உறவுகொண்டான்; அவள் ஒரு மகனைப்பெற்றாள்; அவனுக்குச் சாலொமோன் என்று பெயரிட்டான்; அவனிடம் யெகோவா அன்பாக இருந்தார்.
https://bible.com/bible/1899/2sa.12.14-24.IRVTam
இது தாவீதின்மீது பரிசுத்த ஆவியானவர் வந்து இறங்கிய பின்பே நடந்தது. (1 சாமுவேல் 16:13)- ஆவியானவர் உள்ள போதே காமம் தலைக்கேறி குளிக்கும் பெண்ணை பார்த்துவிட்டு படுக்கையறைக்கு அழைப்பித்து விபச்சாரம் செய்தார் (2 சாமுவேல் 11:2-4) என்பதை இது காட்டுகிறது
இதற்காக தேவனோ தாவீதின் மனைவியை பக்கத்திலிருப்பவனுக்கு கொடுத்து இஸ்ரவேலர் பார்க்க பட்டப்பகலில் விபச்சாரம் செய்விப்பதாக சொல்கிறார் (2 சாமுவேல் 12:11-12)-ஃபிலிம் எடுக்கிறாரா?
இப்படி கள்ள உறவை சட்டபூர்வமாக ஆட்டையப் போட்டபோது தேவன் தன் நேசரின் செயலை கண்டிக்காமல் ஆதரித்தார். பிறகு அவரை உத்தமன் என்று வேறு சொல்கிறார் (1 இராஜாக்கள் 15:5)
இதை வைத்துக்கொண்டு, சட்டத்தை நிறைவேற்றுவதற்கு நபிகளார் செய்ததை விமர்சிக்கலாமா
அத்தனைக்கும் ஆவியானவர் இறங்கிய பின் விபச்சாரம் செய்ததும், ஆவியையுடைய தேவனே அவரது மனைவியரை விபச்சாரம் செய்விப்பேன் என சொல்வதும் எதையோ சொல்கிறது. ஆவி தானே பிரச்சினை
1.மனிதனுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது --மனிதனுக்கு இறைவன் வழி காட்டியுள்ளான். ஒன்று அவன் நன்றியுள்ளவனாக இருக்கிறான் அல்லது காஃபிராக இருக்கிறான...