இடுகைகள்

2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பழைய ஏற்பாட்டு தேவகுமாரன் vs புதிய ஏற்பாட்டு தேவகுமாரன்

படம்
பழைய ஏற்பாட்டு தேவ மகனுக்கும் புதிய ஏற்பாட்டு தேவ மகனுக்கும் உள்ள வித்தியாசம்  -------------------------------------- பொதுவாக கிறிஸ்தவ போதகர்கள், பைபிள் எங்களை தேவனது பிள்ளை என சொல்கிறது. ஆனால் அல்லாஹ்வோ அடிமை என்கிறார். ஆகவே அல்லாஹ் உண்மையான தேவனாக இருக்க முடியாது (என்னென்ன கம்பிகட்டுற காரணங்களை சொல்றாங்க!) என்கிறார்கள். ஆனால் பழைய ஏற்பாட்டில் தேவகுமாரன் என்பது தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட அடிமைகளையே குறிக்கிறது என்பதை உணராமலும் , புதிய ஏற்பாட்டில் தேவகுமாரன் எனும் வரும் கருத்தை அங்கே சொருகி திரிக்கிறார்கள். அதை இங்கே பிரித்து அலசுவோம். ***உப பிரிவுகள்*** 1.பழைய ஏற்பாடு கூறும் தேவ குமாரர்கள். 2.பழைய ஏற்பாடு கூறும் தேவனது அடிமைகள் 3.தேவனது குமாரன் என பாவித்ததன் அர்த்தம் 4.புதிய ஏற்பாட்டு தேவகுமாரர்கள் 5.தங்களை தேவனது பிள்ளை என வாதிடுவோருக்கு அல்லாஹ் கொடுக்கும் பதில் இனி ஒவ்வொன்றாக பார்ப்போம்  ****************************************** 1.பழைய ஏற்பாடு கூறும் தேவ குமாரர்கள் ****************************************** பழைய ஏற்பாட்டில் தேவனது இயல்புகளென அறியப்படுபவைகளில் சிறிய அளவேணு...

சுவிசேஷங்கள் சித்தரிக்கும் தேவனும் இயேசுவும்

படம்
 சுவிசேஷங்கள் சித்தரிக்கும் இயேசுவும் தேவனும் ----------------------------------- 1.பரிசுத்தமானதை நாய்களுக்கும் உங்கள் முத்துக்களை பன்றிகளுக்கும் போடாதீர்கள் என்றார். (மத்தேயு 7:6) அதாவது கெட்டவர்களுக்கு அட்வைஸ் பண்ணாதே என்கிறார் இயேசு.  இதுவா பாவிகளை நேசிப்பது? தன்னை ஏற்ற பாவிகளையே நேசித்திருக்கிறார். 2.பிதாவின் சித்தப்படி செய்பவர்களே பரலோகம் போவார்கள்-(மத்தேயு 7:22) தேவன் எல்லோரையும் நேசிக்கிறார் என்று பொய் சொல்ல கூடாது. 3.தன் பெயரால் அற்புதம் செய்தவர்களை கூட இயேசு, அக்கிரமக்காரர்களே என்னைவிட்டு அகன்று போங்கள் என கூறுவாராம்- (மத்தேயு 7:22-23) எதிரியை நேசிப்பவரென்றால், தன் பெயரால் அற்புதம் செய்தோருக்கு அப்படி செய்வாரா? 4.இயேசுவை ஏற்காதவர்கள் நரகம் போவார்கள். அங்கே அழுகையும் பற்கடிப்புமே உண்டாம். (மத்தேயு 8:12) அவர் பாவிகளை நேசிக்கிறார் என்றால் ஏன் இப்படி நடக்கணும்?  தன்னை ஏற்ற விபச்சாரிகள், வட்டிக்காரர்கள் போன்ற பாவிகளையே நேசித்தார். காரணம் தன்னை ஏற்போரை எல்லோரும் நேசிப்பது வழமை தானே 5.பிசாசின் சொல்கேட்டு பன்றிகளையும் கொன்றுள்ளார் இயேசு- மத்தேயு 8:31-32, மாற்கு 5:9-13,ல...

பழைய ஏற்பாடு தேவனை எவ்வாறு சித்தரிக்கிறது பாகம் 2 (லேவியர்-எண்-உபாகமம்)

படம்
 பழைய ஏற்பாடு தேவனை எவ்வாறு சித்தரிக்கிறது?  பாகம் 2 லேவியர்-உபாகமம் ( பாகம் 1 ) 1.தான் படைத்ததையே அறியாதவர். குழிமுயலும், முயலும் வாயை அசைப்பதால், அது அசைபோடுவதாக நினைத்து , அவை அசைபோடும் மிருகம் என்கிறார்- லேவியராகமம் 11:5-6 2.பெண் பிள்ளையை இழிவாக பார்க்கிறார் ஆண்பிள்ளையினால் வரும் தீட்டின் இருமடங்கு பெண் பிள்ளையால் வரும் என்கிறார்-லேவியராகமம் 12:2-5 3.அங்கவீணனை இழிவுபடுத்துகிறார் தேவன். அங்கவீணன் பரிசுத்தஸ்தலத்தினுள் போனால் பரிசுத்தக்குளைச்சல் ஏற்படுமாம்.(லேவியராகமம் 21:23) 4.நரபலியையும் ஆதரிக்கிறார் தேவன். மனிதனை காணிக்கையாக நேர்ந்து கொடுத்தால், அந்த மனிதனை மீட்க முடியாதாம். அவனை கொல்லவே வேண்டுமாம்- லேவியராகமம் 27:28-29 அந்நிய தேவர்களுக்கு தான் நரபலி கொடுப்பதை தேவன் தடுத்துள்ளாரோ? தனக்கென வரும்போது நரபலி காணிக்கையையும் ஏற்கிறார் போலும் 😅. இவ்வாறே யெப்தா என்பவர் தன் மகளை தேவனுக்கு பலியாக கொடுத்தார்- நியாயதிபதிகள் 11:40 5.கர்த்தர் அடிக்கடி கோபப்படுகிறார் ஜனங்கள் முறையிட்டதால் கோபப்படுகிறார்- எண்ணாகமம் 11:1 ஜனங்கள் கூடார வாசலில் இறைச்சி வேண்டும் என அழுததால் மீண்டும் கர்த்தர...

பழைய ஏற்பாடு தேவனை எவ்வாறு சித்தரிக்கிறது பாகம் 1 (ஆதி-யாத்தி)

படம்
 *பைபிள் தேவனை எவ்வாறு சித்தரிக்கிறது* 1.ஆதியாகமம் - யாத்திராகமம் 1.எதிர்கால அறிவு இல்லாதவர் - மனிதன் கொடுமை செய்தபோது அவனை படைத்ததற்காக மனஸ்தாபப் பட்டார்- ஆதி 6:5-7 2.சாதாரண இயற்கை அறிவும் இல்லாதவர்- வானவில்லை குறித்து அதை நோவா காலத்தில் அடையாளமாக தன் வில்லை மேகத்தில் வைத்தேன் என்றும் மேகத்தை பூமிக்கு மேலால் கொண்டுவருகையில் அது தெரியும் என்கிறார் - ஆதி 9:13-14 ஆனால் உண்மையில் அது வில் கிடையாது.. ஒளி முறிவினால் உண்டாவதாகும். அதன் வடிவமும் முழு வட்ட வடிவம் ஆகும். 3.அவர் மனிதன் நன்மை தீமை அறிவதை விரும்பாதவர். நன்மை தீமை அறிந்ததால் அவனை நிலையாக வாழ விட கூடாது என நினைப்பவர்- ஆதி 3:22-24 4.பொறுப்பு இல்லாதவர். ஆதாமைஏதேனில் விட்டு பொல்லாத பேசும் பாம்பையும் உள்ளே விட்டவர்.(ஆதி 3:1)  அந்த பாம்பினால் தான் இயேசு சாக வேண்டி வந்தது. அதாவது இயேசுவை சாவடிப்பதற்காகவே ஆதாமோடு பாம்பை அனுப்பி திட்டம் போட்டுள்ளார் என தெரிகிறது 5.மிருகத்துக்கும் மனிதனுக்கும் பகைமையை உண்டாக்குபவர். பேசும் பாம்பு ஏவாளை வஞ்சித்ததற்காக ஏவாளுக்கும் பாம்புக்கும் ஏவாளது வித்துக்கும் பாம்பின் வித்துக்கும் பகையை மூட்டினார...

எலோஹிமும் திரித்துவமும்

படம்
 "எலோஹிம்" என்பது திரித்துவத்திற்கு ஆதாரமா?  -------------------------------------------------------------------------------- பொதுவாக கிறிஸ்தவ போதகர்கள் பொய்யிற்கே பிதாவாக ஆகும்விதமாக பொய்களை கூறுவர். அதில் முக்கியமான பொய் தான் எலோஹிம் என்பது திரித்துவத்திற்கு ஆதாரம் என கூறுவதாகும். இதை பிரித்து அலசுவோம் 1.திரித்துவம் என்றால் என்ன? 2.எலோஹிம் என்பது திரித்துவத்திற்கு ஆதாரமா? 3.எலோஹிம் என்றாலே பன்மையா? ************************************************** 1.திரித்துவம் என்றால் என்ன? ....... பிதா ,மகன், பரிசுத்த ஆவி ஆகிய வெவ்வேறான மூவரும் ஒரே கடவுளாக உள்ளார்கள் என்பதே திரித்துவம் ஆகும். ************************************************** 2.எலோஹிம் என்பது திரித்துவத்திற்கு ஆதாரமா? எலோஹிம் என்றால் நேரடி அர்த்தம் கடவுள்கள் என்பதாகும்.. அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் என்பதே மொழிரீதியான அர்த்தம். திரித்துவ நம்பிக்கை படி ஒரு கடவுள் தானே மூன்று நபர்களாக உள்ளார்.. ஆகவே எலோஹிம் என்பது எப்படி திரித்துவத்திற்கு ஆதாரமாகும்? ஏனெனில் கடவுளின் எண்ணிக்கை ஒன்று என்பதே திரித்துவம்.. கடவுளின் எண்...

தவ்ராத் தான் பழைய ஏற்பாடாக?

படம்
 தவ்ராத் தான் பழைய ஏற்பாடா? -------------------------------------------------------------------------------- பொதுவாக பாமர கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டை காட்டி இது தான் தவ்ராத் என்றும் புதிய ஏற்பாட்டை காட்டி இது தான் இன்ஜீல் என்றும் கதைவிடுவார்கள்.. பாமர முஸ்லிம்கள் கூட அவ்வாறு நம்பும் நிலையில் தான் உள்ளார்கள் .  இதில் வேடிக்கை என்னவென்றால் கிறிஸ்தவர்கள் , முகம்மது நபியும் நாமும் தவ்ராத்தை பின்பற்றாதிருக்கிறார்கள் என்று மடத்தனமான வாதத்தையும் சிலபோது முன்வைக்கிறார்கள். உதாரணமாக ஒட்டக இறைச்சி விசயத்தில் இவ்வாறு குற்றம் சாட்டுகின்றனர். ஏனெனில் முஸ்லிம்கள் ஒட்டக இறைச்சி சாப்பிடுவர். ஆனால் யூதர்களுக்கு அது ஹராம் ஆகும். ஆகவே இவற்றை விரிவாக ஆராய்வதற்கு சில பகுதிகளாக பிரித்து பார்ப்போம். உப பிரிவுகள் அ.தவ்ராத் என்பது யூத நம்பிக்கை படி என்ன? ஆ.இஸ்லாமிய நம்பிக்கை படி தவ்ராத் என்பது என்ன? இ.பழைய ஏற்பாட்டு பிரகாரம் தோரா என்பது என்ன? ஈ.புதிய ஏற்பாட்டின்படி தோரா என்ன? உ.தற்போதுள்ள தோராவின் நிலை. ஊ.தோராவை முஸ்லிம்கள் எவ்வாறு நம்ப வேண்டும்? எ.தவ்ராத்தை நாம் பின்பற்ற வேண்டுமா? ஒவ்வொன்றாக பார்ப்ப...

சங்கீதம் 22:16 சிலுவையில் அறையப்படுவதை குறிக்குமா

படம்
 சங்கீதம் 22:16 சிலுவையில் அறையப்படுவதை குறிக்கிறதா? -------------------------------------------------------------------------------- பொதுவாக ஆதிமுதலே கிறிஸ்தவர்கள் தம் நிலைப்பாட்டை சரி என காட்டுவதற்கு பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம் என வசனங்களை திரித்து காட்டுவது வாடிக்கையாகவே இருந்துவந்தது. அந்த வகையில் மூன்றாம் நான்காம் நூற்றாண்டு கண்டுபிடிப்பே சங்கீதம் 22:16 சிலுவையில் கையும் காலும் உருவக்குத்தப்படுவதை குறித்த தீர்க்கதரிசனம் என்பதாகும். இதை உப பிரிவுகளாக பிரித்து ஆராய்வோம். 1.புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களுக்கு இவ்வசனம் ஏன் தென்படவில்லை? ஆவி ஏன் இவ்வசனத்தை மேற்கோள் காட்ட உந்தவில்லை? 2.மூன்றாம் நான்காம் நூற்றாண்டு சபைப் பிதாக்கள் எப்படி இதை கண்டுபிடித்தனர்? அல்லது உண்டாக்கினர் 3.இதன் சரியான அர்த்தம் என்ன? 4.சில பிரதிகளில் "யொத்" எழுத்துக்கு பதிலாக "வாவ் " எழுத்து எழுதப்பட்டுள்ளதா? அதனால் இவர்களுக்கு சார்பாக இது அமையுமா? 5.ஒரு பேச்சுக்கு இவர்கள் சொல்லுவது போன்றே இருந்தால் கூட இயேசுவுக்கு பொருந்துமா? ******** 1.புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களுக்கு இவ்வசனம் ஏன் தென்படவில்லை? ஆ...

தானியேல் 9:26-27 சிலுவை மரணத்தை குறிக்குமா?

படம்
 தானியேல் 9 மேசியா மற்றவர்களின் பாவத்திற்காக மரிப்பார் என்கிறதா? -------------------------------------------------------------------------------- பொதுவாக கிறிஸ்தவ போதகர்கள் பழைய ஏற்பாட்டை திரித்து தமது கற்பனைக் கதைகளை பழைய ஏற்பாட்டில் சொருகுவதில் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். முதல் நூற்றாண்டில் எவ்வாறெல்லாம் தோராவையும் நவியீமையும் திரித்தார்களோ அதைவிட தற்போது திரிபு மேலோங்கி விட்டது. அந்த காலத்திலாவது இஸ்ரேலை என் மகன் என்றதை இயேசுவை என் மகன் என்றதாகவும், ராகேல் தன் பிள்ளைகளான எப்ராயீமியர் சிறைபிடிக்கப்பட்டதற்கு அழுததாக வருவதை , ராகேலின் அக்கா லேயாளின் பிள்ளைகளான யூதாவின குழந்தைகள் கொல்லப்பட்டதற்காக ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுததாக மத்தேயு சொல்கிறார்.(மத்2:15-18) ஆனால் தற்போது உள்ளவராகளோ எழுத்துக்கு எழுத்து கதை கட்டுகிறார்கள். ஒருவர் சொல்கிறார் வினைச்சொல்லின் செயற்படுபொருளின் அடையாளப்படுத்தும் எபிரேய உரிச்சொல்லை (ஏத்) கூச்சமே இல்லாமல் இயேசுவை குறிப்பதாக சொல்கிறார். அதையும் மக்கள் நம்பி தம் மதம் எவ்வளவு உண்மையானது என ஆச்சரியப்படுகிறார்கள் !! (இதன் மூலம் இவர்களது நிலையை கண்டு நான...