இடுகைகள்

2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இஸ்லாமும் பலதாரமணமும் விவாகரத்தும்

 இஸ்லாம் அநேக மதங்களை போலன்றி ஆன்மீகத்துடன் இல்லறம் ஆட்சியதிகாரம் சமூக நீதி போன்றவற்றை உள்ளடக்கிய மார்க்கமாக இருப்பதால் வெறும் ஆன்மீகத்தை மட்டுமுடைய மதநம்பிக்கையாளர்களால் குறிப்பாக கிறிஸ்த பிரதர்களால் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் பிரதானமாக தீவிரவாதம் என்ற அவதூறுக்கு அடுத்ததாக பலதாரதிருமணத்தையும் விவாகரத்தையும இஸ்லாம் அனுமதிப்பதை குறிப்பிடுவர். ஆகவே இதை வெறும் இரண்டு தலைப்புகளின் கீழ் குறிப்பிடுகிறேன் 1.பலதார திருமணம்  2.விவாகரத்து 1.பலதார திருமணம்  முகம்மது (ﷺ) வழியாக இஸ்லாம் வருவதற்கு முன்பே பலதாரமணம் உலகிலும் அரேபியாவிலும் இருந்தது.  இஸ்லாம் அதை செவ்வையாக்கி அதிகபட்சமாக நான்கு வரைக்கும் அனுமதித்ததோடு நிபந்தனையும் விதித்தது. அதாவது மனைவியரிடையே நீதியாக நடக்க முடிந்தால் மட்டுமே அனுமதி (குர்ஆன் 4:3) *பலதாரமணம் இயற்கைக்கு ஒத்துப் போகிறதும் பயனுள்ளதுமாகும்: இயற்கையாகவே ஆணுக்கு பலதாரமணம் செய்யும் விதமாகவே மனிதயினம் படைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஓர் ஆண் ஒரே வருடத்தில் நான்கு மனைவியரோடு சேர்ந்து நான்கு பேரையும் பிள்ளை பெற வைக்க முடியும்.  ஆனால் ஒரு பெண் ஒன்றுக்கு மே...

TNTJ VS YDM விவாதமும் & ரசாது கலீஃபா குரூப் விவாதமும் மறுப்பும

TNTJ vs YDM (2018) பைபிள் கூறும் மெய்யான இறைவன் விவாதமும் மறுப்பும் text format Part 1: https://debate-review.blogspot.com/2026/03/ydm-tntj-bible-1.html Part 2: https://debate-review.blogspot.com/2026/03/ydm-tntj-bible-2.html  TNTJ vs YDM (2018) குர்ஆன் கூறும் மெய்யான இறைவன் விவாதமும் மறுப்பும் Text format Part 1: https://debate-review.blogspot.com/2026/03/ydm-vs-tntj-1.html Part 2: https://debate-review.blogspot.com/2026/03/ydm-vs-tntj-2.html  ரசாது கலீஃபா குரூப் விவாதம்- மனிதர்களை நல்வழிப்படுத்தும் வேதம் எது (கடைசி வரை பைபிள் காட்டிய நல்வழி ஒன்றை கூட கூறவில்லை) text format Part 1: https://debate-review.blogspot.com/2026/03/ydm-vs-rashad-khalifa-group-1.html Part 2: https://debate-review.blogspot.com/2026/03/ydm-vs-rashad-khalifa-group-2.html

சுவர்க்கமும் மதுவும் ஹூருல் ஈனும் வேலைக்கார சிறுவர்களும்

சுவர்க்கத்தின் மது  சுவர்க்த்து மதுவில் போதையோ, தீங்கோ , தலைவலியோ இருக்காது (குர்ஆன் 37:47, 52:23, 56:19) சிறுவர்கள் வேலைக்காரர்கள் உலகத்தில் சிறுவர்களின் கல்வியுரிமை வேறு உரிமைகள் பறிக்கப்பட்டு எதிர்காலம் பாதிக்கப்படுவதால் சிறுவர்களிடம் வேலை வாங்குவது குற்றமாக பார்க்கப்படுகிறது. ஆனால் சுவர்க்கத்திலோ அதற்கென்றே படைக்கப்பட்டவர்கள் அதை செய்வதால் எந்த பிரச்சனையும் இல்லை...  உதாரணமாக ரோபோவை குறித்த வேலைக்கு நியமிப்பதால் அது குற்றம் என சொன்னால் எப்படி?..  இறைவனே உடலைக் கொடுத்து உயிரைக் கொடுத்து அதற்கான தெம்பையும் கொடுத்து வேலை செய்விப்பதை எப்படி விமர்சிக்க முடியும் ?? கண்ணழகிகள் -கண்ணழகிகள் திருமணம் முடித்தே தரப்படுவார்கள் (குர்ஆன் 52:20, புகாரி 3254) அதிலே அவர்களது அந்தரங்க உறுப்புகளை வர்ணித்து எதுவும் கூறப்படவில்லை 78:33 இலுள்ள " கவாயிப் " என்பது கூட முலைகள் முகிழ்ந்த வயதுள்ள பெண்களை குறிக்கும் .  அங்கே முலை வர்ணனை எதுவும் இல்லை . அதுவும் குறிப்பிட்ட வயது பெண்களுக்கு அவ்வார்த்தையை பாவிக்கும் வழக்கம் அவர்களிடம் இருந்தவொன்றே . அதனையே இணைவைப்பாளர்கள் உஹதைவிட்டு திரும்பியபோ...

ஒரே இரவில் நபிகளார் தம் அனைத்து மனைவியரிடமும் சென்றதும் கர்த்தரின் செயலும்

 - ஒரே இரவில் நபிகளார் அனைத்து மனைவியரிடமும் தாம்பத்யத்தில் ஈடுபடுவார்களா? நபி(ஸல்) இரவில் அல்லது பகலில் தம் மனைவிகளிடம் வருபவர்களாக இருந்தார்கள். அப்போது 11 பேர் இருந்தனர் என அனஸ் (ர) கூறினார்கள் . அப்போது அதற்கு நபிகளார் சக்திபெருவார்களா? என்று கேட்டதற்கு, நபி(ஸல்) அவர்களுக்கு முப்பது பேருடைய சக்தி கொடுக்கப்பட்டுள்ளது என நாம் பேசிக்கொள்வோம் என்றார்கள் -புகாரி 268 நபிகளாரிடம் 11 பெண்கள் இருந்த காலம் ஹிஜ்ரி 8-10 காலத்திலாகும். மாரியா ,ரைஹானா எனும் இரு வலக்கரம் சொந்தமானவர்களும் 9 மனைவியருமாக இருந்தனர். இது வழமையாக நடந்த ஒன்று அல்ல. மாறாக ஒரு நாள் நடந்ததொன்றே என அனஸ் (ர) அவர்களின் வேறொரு அறிவிப்பு கூறுகிறது: ஒரு நாள் நபிகளார் அனைத்து மனைவியரிடமும் ஒரே குளிப்பில் சென்று வந்தார்கள் என அனஸ்(ர) கூறினார்கள் (அபூதாவூத் 218) இது எப்போது நடந்தது என்றால் நபிகளார் இறுதி ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டுவதற்கு முந்திய இரவு நிகழ்ந்தது என்பதை அன்னை ஆயிஷா (ர) கூறுகிறார்கள் : " நான் நபி(ஸல்) அவர்களுக்கு மணப்பொருட்களை பூசுவேன். அவர்கள் தம் மனைவியரிடம் சென்றுவிட்டு காலையில் இஹ்ராம் அணிந்தவர்களாக இருப்பார்...

ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ர) உடனான திருமணமும்,ஜாஉனிய பெண்ணும், ஒழுக்கமாக நடந்த நபிகளாரும்- கிறிஸ்தவ காமப்போதகர்களின் உலரல்களுக்கு மறுப்பு

 கிறிஸ்தவ காமுக போதகர்கள் தம்மை ஒழுக்கசீலர்களாக காண்பித்துக் கொண்டு முகம்மது நபியை கொச்சைப்படுத்துவதற்காக இவர்களின் காமம் சொட்டும் விளக்கங்களை நுழைவித்து கொச்சையாக பேசுவதை வழமையாக வைத்திருக்கிறார்கள். அதிலே வழமையாக ஆயிஷா (ர) அவர்களை மணந்ததற்கு அடுத்ததாக கீழ் குறிப்பிடும் செய்திகளை ஆசையோடு எடுத்து வைப்பார்கள் 1.ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ர) அவர்களை மணந்ததுடன் சம்பந்தப்படும் கதைகள் 2.ஜாவ்னிய குலத்து பெண்ணுடன் சம்பந்தமான ஹதீஸ் 3.பாதையில் சென்ற பெண்ணை பார்த்துவிட்டு தன் மனைவியிடம் சென்றதாக வரும் ஹதீஸ்  இதை ஒவ்வொன்றாக பார்ப்போம்: 1.ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ர) அவர்களை மணந்ததுடன் சம்பந்தப்படும் கதைகள் புகாரி 7420 இலே மொழிபெயர்ப்பாளர் 33:37 யார் விசயத்தில் இறங்கியதாக கூறுவதை மொழிபெயர்த்த போது தம்பதியாக இருந்த ஸைத் ஸைனப் விசயத்தில் இறங்கியது என அடைப்புக்குறியுடன் போட்டு விட்டனர். இதை அரைகுறைகள் பிடித்துக்கொண்டு கணவன் மனைவியாக இருந்தபோதே இவ்வசனம் இறங்கியது போன்று தற்குரித்தனமான விவாதங்களில் சித்தரித்தனர். இவற்றுக்கான பதில் * அரபியில் இவ்வசனம் ஸைனப் மற்றும் ஸைத் விசயத்தில் இறங்கியது என்றே உள்ளது. மொ...

IMAAM VS YDM விவாதத்தில் கிறிஸ்தவர்களால் வைக்கப்பட்ட வாதங்களும் மறுப்பும்

IMAAM VS YDM விவாதத்தில் கிறிஸ்தவர்களால் வைக்கப்பட்ட வாதங்களும் மறுப்பும் text format Summary https://debate-review.blogspot.com/2026/03/ydm-vs-imaam-summary.html complete refute word by word: Part 1 Part 2 Part 3 Part 4 part 5 Part 6

ஆயிஷா (ர) அவர்களுடனான நபிகளாரின் திருமணம்

  நபி(ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா அவர்களை முடித்தது பற்றி மிசநரிகளும் ஏனைய நிராகரிப்பாளர்களும் இஸ்லாத்தையும் உயர்வான நபிகளாரையும் கேலி செய்வதை வழமையாக கொண்டிருக்கிறார்கள். அத்தோடு கேலிச்சித்திரங்களையும் வரைந்து தம் மனதை சந்தோசப் படுத்திக் கொள்கிறார்கள் . குர்ஆனின் போதனைகளிலே நியாயமாக குறைகாண முடியாமலும் நபிகளாரின் போதனைகளிலே நியாயமாக குறைகாண முடியாமலும் இருப்பதால், இதுபோன்றவற்றை பயன்படுத்திக்கொள்ள பார்ப்பார்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தற்குரித்தனமானவை என்பதை வரலாற்றை ஆராய்ந்தால் புலனாகும். அதற்கேற்ப இதை சில பகுதிகளாக பிரித்து பார்ப்போம்  1.ஆயிஷா (ர) அவர்களுக்கு திருமணம் பேசப்படும் காலத்திலேயே நபிகளாருக்கு பேசப்பட்டார்கள் 2.அக்காலத்திலேயே இளவயது திருமணம் நடைமுறையில் இருந்தது  3.இல்லறவாழ்க்கைக்கான உடல் தகுதியை அடைந்த பின்பே நபிகளாருடன் வாழ்ந்தார்கள் . 4.இத்திருமணத்தால் அன்னை ஆயிஷா பாதிக்கப்படவில்லை  5.ஆயிஷா(ர) நபிகளாரை அதிகம் நேசிப்பவராகவே இருந்தார்  6.படித்த யூதர்கள் இவ்விசயத்தில் கப்சிப் 7.உலகளாவிய ரீதியில் இத்தகைய திருமணங்கள் சர்வசாதாரணமாக இருந்தன  8.இஸ்லாம...

பாவிகளை கடவுள் நேசிப்பாரா? - தற்குறிகளுக்கு மறுப்பு

 அல்லாஹ் பாவிகளை ,காஃபிர்களை நேசிப்பதில்லை . ஆனால் கர்த்தரோ அப்படி அல்ல.. பாவிகளை நேசிப்பவர் என  போதகர்கள் உருட்டுவார்கள். 1.அல்லாஹ் யாரை நேசிப்பதில்லை? ஏன் 2.அல்லாஹ் யாரை நேசிக்கிறான்? 3.கர்த்தர் பாவிகளை நேசிக்கிறாரா? 1.அல்லாஹ் யாரை நேசிப்பதில்லை? ஏன்? அல்லாஹ் அநியாயக்காரர்களை நேசிப்பதில்லை (3:57,140) பாவிகளான காஃபிர்களை நேசிப்பதில்லை (2:276, 3:32), வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை (2:190),கர்வமுடையோரை வீண் பெருமையுடையோரை நேசிப்பதில்லை (4:36), கொடும்பாவியான சதிசெய்துகொண்டிருப்பவனை நேசிப்பதில்லை (4:107),குழப்பம் புரிவோரை நேசிப்பதில்லை (5:64), வீண்விரயம் செய்வோரை நேசிப்பதில்லை (6:141,7:31), துரோகம் செய்வோரை நேசிப்பதில்லை (8:58), பெருமையடிப்போரை நேசிப்பதில்லை (16:23) என குர்ஆன் கூறுகிறது. இப்படி நேசிக்காமல் இருப்பதுவே நீதியானது. அத்தோடு அவ்வாறு நேசிப்பதில்லை என்று முன்பே அறிவித்து விடுவது தான் உண்மையான நேசம்.  காரணம் இத்தகையோர் நரகத்தில் புகுத்தப்படுவர் .. அதுவே குற்றவாளிகளுக்கான இறைவன் ஏற்படுத்திய தண்டனை எனும் நீதி..   ஆகவே இறைவன் அவர்களை நேசிப்பதாக பொய் கூறிவிட்டு நரகத...

இஸ்லாமும் பெண்களும் பைபிளும்

  1.பெண்களை ஒரு பொருட்டாகவும் மதிக்காதவர்களிடமே பெண்களின் உரிமைகளை குர்ஆன் கூறியது-(புகாரி 5843). ஆனால் பைபிள் பெண்ணோ விற்பனை பொருளாக பார்க்கிறது . அதாவது தகப்பனுக்கு தன் மகளை விற்பனை செய்யும் உரிமையும் உண்டு (யாத்திராகமம் 21:7-10) 2.பெண்குழந்தை பிறப்பதை இழிவாகவும், அவர்களை உயிரோடு புதைக்கும் மக்களிடையே (குர்ஆன் 16:58-59, ) , பெண் குழந்தைகளை உயிருடன் புகைப்பதை பெரும் பாவம் என்றும் (புகாரி 2408), பெண்குழந்தைகளால் சோதிக்கப்பட்டவர்களை அக்குழந்தைகள் நரகத்திலிருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள் என்றும் (புகாரி 1418), இரண்டு பெண் குழந்தைகளை நல்லமுறையில் வளர்ப்பவரும் நானும் சுவர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என தன் இரு விரல்களை இணைத்து காட்டினார்கள் (முஸ்லிம் 5127 (2631)) ஆனால் பைபிளோ பெண் குழந்தையை பெற்றெடுத்தால் ஆண்குழந்தையை பெறுவதைவிட இருமடங்கு தீட்டு ஏற்படும் ( லேவியராகமம் 12:1-5 ) 3.பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படாத காலத்தில், அவளது திருமணத்திற்கு அவளது சம்மதம் அவசியம் என்றும் அவளது விருப்பமின்றி திருமணம் செய்து வைக்க கூடாது என்றும் உரிமையை வழங்கியது (புகாரி 5136,5138, 6945,6946) ஆ...

இஸ்லாம் அடிமைகளை நடத்தியவிதம்

  இஸ்லாம் அடிமைகளை கண்ணியப்படுத்துகிறதோடு அவர்களை நல்லமுறையில் நடத்துமாறு வழிகாட்டுகிறது   * அடிமைகள் என்போர் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் தந்துள்ள உங்கள் சகோதரர்கள் என்றும் அத்தகையோருக்கு நீங்கள் உண்ணுவதிலிருந்து உணவளிக்க வேண்டும் என்றும் நீங்கள் அணிவதிலிருந்து அணியக்கொடுக்க வேண்டும் என்றும் அவர்களின் சக்திக்கு மீறிய பணியை கொடுத்து சிரமப்படுத்த கூடாது என்றும் அப்படி கொடுத்தால் அவருக்கு உதவி செய்யட்டும் என்றும் நபிகளார் வழிகாட்டினார்கள் (புகாரி 30,6050, முஸ்லிம் 3417 ,3419, 3420 (1661a,c,1662) * அடிமைகள் விசயத்தில் இறைவனை அஞ்சிக்கொள்ளுமாறு நபிகளார் கூறியுள்ளார்கள் ( அபூதாவூத் 5156,இப்னுமாஜா 2698, அஹ்மத் 585) * அடிமைக்கு அறைந்தாலோ நியாயமின்றி அடித்தாலோ அவரை விடுதலை செய்வதே அதன் பரிகாரம் (முஸ்லிம் 3408 ,3409 (1657a,b) - ஆனால் பைபிளில் பல் உடைவதற்கு அடித்தால் தான் விடுதலை செய்யவேண்டும்.அல்லது கண்ணை கெடுத்தால் தான் விடுதலை செய்ய வேண்டும் (யாத்திராகமம் 21:26,27 ) * அடிமைக்கு சாட்டையால் அடித்த நபித்தோழரை கண்ட நபிகளார் , உமக்கு உம் அடிமை மீது உள்ள அதிகாரத்தை விட , அல்லாஹ்வுக்கு உம்...

அடிமைப்பெண்களும் முத்ஆ திருமணமும்

 உள்ளடக்கம் 1.விபச்சாரத்திலிருந்து தூரமாக வழிகாட்டும் இஸ்லாம் 2.இஸ்லாமிய நம்பிக்கைப்படி விபச்சாரம் என்பது என்ன? 3.அடிமைப்பெண்களுடன் தாம்பத்திய வாழ்க்கையும் ஒழுங்குமுறையும் 4.முத்ஆ திருமணம் 1.விபச்சாரத்திலிருந்து தூரமாக வழிகாட்டும் இஸ்லாம் *இஸ்லாம் விபச்சாரத்தை நெருங்கவே வேண்டாம் என்று கூறுகிறது (குர்ஆன் 17:32). * விபச்சாரத்தில் விழுந்துவிடாதிருக்க ,,  -முதலில் ஆண்களுக்கு பார்வையை தாழ்த்திக்கொள்ளுமாறும் (குர்ஆன் 24:30), பின் பெண்களுக்கு பார்வையை தாழ்த்திக்கொள்ளுமாறும் தம் அலங்காரங்களை அந்நிய ஆண்களுக்கு வெளிப்படுத்த கூடாது என்றும் மறைத்து வைத்துள்ள அலங்காரம் வெளிப்படுவதற்காக கால்களை தட்டி நடக்க வேண்டாம் என்றும் (குர்ஆன் 24:31), ஒரு பெண் அந்நிய ஆணுடன் பேசும்போது குளைந்து குளைந்து கவர்ச்சியாக பேசக்கூடாது என்றும் அவ்வாறு செய்தால் , மனதில் நோயுள்ளவன் ஆசைப்படுவான் என்றும் (குர்ஆன் 33:32), ஒரு பெண்ணுடன் அந்நிய ஆண் (திருமணம் செய்ய தடைசெய்யப்பட்ட ஆண் அல்லது கணவன் அல்லாதவர்) தனித்திருக்க கூடாது (புகாரி 5233,3006), என்றும் தனியாக உள்ள பெண்ணிடம் கணவனின் சகோதரன் செல்வதை கூட மரணத்துக்கு ஒப்ப...