வெள்ளி, 26 டிசம்பர், 2025

இஸ்லாமும் பலதாரமணமும் விவாகரத்தும்

 இஸ்லாம் அநேக மதங்களை போலன்றி ஆன்மீகத்துடன் இல்லறம் ஆட்சியதிகாரம் சமூக நீதி போன்றவற்றை உள்ளடக்கிய மார்க்கமாக இருப்பதால் வெறும் ஆன்மீகத்தை மட்டுமுடைய மதநம்பிக்கையாளர்களால் குறிப்பாக கிறிஸ்த பிரதர்களால் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் பிரதானமாக தீவிரவாதம் என்ற அவதூறுக்கு அடுத்ததாக பலதாரதிருமணத்தையும் விவாகரத்தையும இஸ்லாம் அனுமதிப்பதை குறிப்பிடுவர்.

ஆகவே இதை வெறும் இரண்டு தலைப்புகளின் கீழ் குறிப்பிடுகிறேன்

1.பலதார திருமணம் 

2.விவாகரத்து


1.பலதார திருமணம் 

முகம்மது (ﷺ) வழியாக இஸ்லாம் வருவதற்கு முன்பே பலதாரமணம் உலகிலும் அரேபியாவிலும் இருந்தது.

 இஸ்லாம் அதை செவ்வையாக்கி அதிகபட்சமாக நான்கு வரைக்கும் அனுமதித்ததோடு நிபந்தனையும் விதித்தது. அதாவது மனைவியரிடையே நீதியாக நடக்க முடிந்தால் மட்டுமே அனுமதி (குர்ஆன் 4:3)

*பலதாரமணம் இயற்கைக்கு ஒத்துப் போகிறதும் பயனுள்ளதுமாகும்:

இயற்கையாகவே ஆணுக்கு பலதாரமணம் செய்யும் விதமாகவே மனிதயினம் படைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஓர் ஆண் ஒரே வருடத்தில் நான்கு மனைவியரோடு சேர்ந்து நான்கு பேரையும் பிள்ளை பெற வைக்க முடியும். 

ஆனால் ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை சேர்ந்தாலும் ஒருத்தனுக்கே பிள்ளை பிறப்பதோடு அதை கண்டுபிடிக்க வேறு பரிசோதனைகளும் செய்ய வேண்டி வரும்..

அத்தோடு குடும்பம் நிலைபெறவும் மனித இனம் நிலைபெறவும் அடிப்படையான அம்சம் இனப்பெருக்கமாகவுள்ளது. இதை விரைவுபடுத்துவதற்கு ஒரு முறையே பலதாரமணம். 

-பலதாரமணத்தினால் முதல் மனைவி பாதிக்கப்படுதலும் பெரு நன்மைக்குள் சிறு தீமையும்:

இதனால் முதல் மனைவியின் கணவன் மீதான உரிமை குறைவடைவதால் பாதிக்கப்படுகிறாள் என தற்குரித்தனமாக பேசுவதாயின், இரண்டாம் மூன்றாம் குழந்தைகளை பெற்றோர் ஈன்றெடுக்கும்போது முதல் குழந்தைக்கு பெற்றோர் மீதான உரிமையும் சொத்தின் மீதான உரிமையும் குறைந்து பாதிப்படைவானே. 

அப்படி பார்த்தால் ஒரு தம்பதியினர் ஒரே குழந்தையை தான் பெற்றெடுக்க வேண்டும் என்று இவர்கள் கூறவேண்டும் 

அத்தோடு எந்த பெரிய நலவுக்குள்ளும் சிறு கெடுதி இருக்கத்தான் செய்கின்றன. 

உதாரணமாக பிள்ளையை பெற்றெடுக்கும் போது தாய் பெரும் வேதனையை அடைகிறாள். சிலபோது குழந்தை பெறும்போதே உயர்ந்த அன்னை இறக்கிறாள். இதனால் உயர்ந்த தாயினம் பாதிக்கப்படுகிறது என குழந்தை பெறுவதை எந்த தற்குரியாவது நல்லதல்ல என்பானா? 

அதே போன்று தான் பலதாரமணமும் சமூக ஒழுக்கம் கருதி ஒப்பற்ற இறைவன் அனுமதித்தான்.

-பலதாரமணமும் விதவைகளும்:
பலதார மணம் இல்லாத மக்களிடையே விதவை இல்லற மறுவாழ்வு மிகவும் குறைவாகவே காணப்படும். 

இஸ்லாம் பலதாரமணத்தை ஆதரித்ததன் மூலம் விதவை மறுவாழ்வை இயல்பானதாக தொடரச்செய்தது.
 பலதாரமணமில்லாத மக்களிடையே விதவையை மணப்பதை ஏதோ ஆணின் தியாகம் போன்று சித்தரித்து விதவையை அற்பமாக கருதக்காரணமாகவுள்ளது

-பலதாரமணமும் விபச்சாரமும்:

விலைமாதுக்களிடம் செல்வோரில் அநேகர் திருமணமான ஆண்களாகவும் இருப்பர். இதிலே ஆண் பொறுப்பெடுக்க வேண்டிய நிலை இல்லாததாலும் , அந்த பெண்கள் முறையாக கணவனெனும் ஆணின் கீழே இல்லாததாலுமே அதை தொழிலாக செய்கின்றதோடு ஆண்களும் விரும்பிச் செல்கின்றனர். அதனால் இஸ்லாம் இவற்றை நெறிப்படுத்தும் ஒரு வழியாக பலதாரமணத்தை அனுமதித்தது.

ஆனாலும் நீதியாக நடக்க முடிந்தால் மட்டுமே பலதாரமணம் கூடும் (குர்ஆன் 4:3)

(இதற்கு மீறிய விபச்சாரத்திற்கு இஸ்லாம் தண்டனை வழங்குகிறது)




2.விவாகரத்து

விவாகரத்தும் முகம்மது நபியிற்கு முன்பேயிருந்துள்ள ஒரு விடயம் தான். அதை இஸ்லாம் ஒழுங்கு படுத்தியது.

விருப்பம் இல்லாதவர்களை நிர்ப்பந்தித்து வாழ வைக்க இஸ்லாம் விரும்பவில்லை.

ஆனாலும் அவர்கள் சேர்ந்து போவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கிறது.
அதாவது 
*மனைவி மாதவிடாயிலிருந்து தூய்மையானதிலிருந்து உடலுறவு கொள்ளாத போதே தலாக் சொல்லலாம்.(முஸ்லிம் 2918, புகாரி 5332

*அதன்பின் அவளது காத்திருப்புக்காலமான மூன்று மாதவிடாய் காலங்கள் (2:228) தன் கணவன் வீட்டிலேயே இருக்கவேண்டும். அவனே அவளுக்கு உணவும் உறையுளும் வழங்க வேண்டும்.(65:1,6-7) தலாக் சொன்ன கணவன் மனது மாறினால் சேரத்துக்கொள்ளலாம் (2:228)
அதன் பின்பும் சேராதபோது பிரிவார்கள்

அதன் பின்பும் சேர்ந்து வாழ விரும்பினால் , திரும்பவும் புதிதாக திருமணம் செய்து வாழலாம்.

இப்படி இரண்டு தடவைகள் அனுமதிக்கிறது.(2:229). 

ஏனெனில் மனைவியை பழிவாங்குவதற்காக அவளோடு சேர்ந்து வாழாமலும், அவளை வேறு திருமணம் செய்ய விடாமலும் இருப்பதற்காக ஒரு ஆண் தொடர்ந்து செய்துவிட கூடாது என்பதற்கான சட்டமே இது.


மூன்றாவதாக மறுபடியும் இப்படி நடந்தால், அப்போது அவளை வேறொருவன் மணந்து , தாம்பத்யமும் நிகழ்ந்து பிறகு அவனுக்கும் வெறுத்து தலாக் சொன்னால், மீண்டும் சேர இருவரும் விரும்பினால் மீண்டும் திருமணம் செய்து சேர்ந்து வாழலாம்.(2:230). அதற்கு சாட்சிகள் இருக்க வேண்டும் (65:2)

முதல் கணவனுக்கு ஆகுமாக திட்டமிட்டு திருமணம் செய்து விவாகரத்து செய்வதை (நிகாஹ் ஹலாலா) சாபத்திற்குரிய செயலாக நபிகளார் கூறியுள்ளார்கள் (அபூதாவூத் 2076)




மீண்டும் சேர்ந்து வாழ்வதானாலும் பிரிந்துவிடுவதானாலும் அவளோடு நல்ல முறையில் இரக்கமாக நடந்துகொள்ளுமாறே குர்ஆன் 2:231 சொல்கிறது 

மஹராக பொற்குவியலை கொடுத்திருந்தாலும் அதில் சிறிதும் மீள எடுக்க கூடாது (4:20)

அதுபோன்றே பெண்களுக்கும் தன் கணவனை பிடிக்காத போது , உரிமைகள் மீறப்படும் போது தன் கணவனிடமிருந்து தலாக்கை கேட்டு பெற அனுமதி உண்டு.(2:229 இன் இறுதி ).

 அதற்காக அவள் காரணத்தை சொல்ல தேவையுமில்லை. (எந்த நியாயமான காரணமுமின்றி செய்வது கண்டிக்கப்பட்டுள்ளது.) 


மீளமுடியாத தலாக்காக இருந்தாலும் ,கர்ப்பிணியாக இருந்தாலோ அல்லது பாலூட்டும் தாயாக இருந்தாலோ, அப்போதும் அவளுக்கு உடையும் உணவும் செலவும் கொடுக்க வேண்டும் (2:233, 65:6-7)

அதற்கு பின் பிள்ளைக்கு செலவழிப்பதும் ஆணின் மீது கடமை. அந்த ஆண் மரணித்தால், அவருடைய சொத்தில் ஏனைய பிள்ளைகளுக்கு சொத்து கிடைப்பது போல இப்பிள்ளைக்கும் கிடைக்கும்.. 

அத்தோடு விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணுக்கு நியாயமான கொடையை கணவன் தன் வசதிக்கேற்ப வழங்க வேண்டும் என்றும் குர்ஆன் வழிகாட்டுகிறது (2:241,236)

தாம்பத்யம் நடக்காமலே விவாகரத்து நடந்தாலும் இவ்வாறு கொடையை வழங்குவது ஆணின் மீது கடமை. (2:236). 

இதன்படி நபிகளார் திருமணம் செய்து தனக்கு நபிகளாரை பிடிக்காமல் பாதுகாப்பு தேடிய பெண்ணுக்கும் இவ்வாறு கொடையாக சணல் ஆடைகளை கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.(புகாரி 5255)


*விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணை திருமணம் முடிப்பதும் இஸ்லாத்தில் சர்வசாதாரணமானது. ஆனால் புதிய ஏற்பாடு அதையும் விபச்சாரமாக கருதுகிறது.

 *இதன்மூலம் பெண்கள் பாதிக்கப்படுவார்கள் என தற்குறித்தனமாக பேசுவார்கள். 

ஆனால் இஸ்லாம் அப்பெண்கள் பாதிக்கப்படாத விதத்திலேயே அதை ஆக்கியுள்ளது. 

1.அவர்களுக்கு மணக்கொடையாக தங்கக்குவியலை கொடுத்திருந்தாலும் எதையும் திருப்பி எடுக்க கூடாது (குர்ஆன் 4:20)

2.விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு கணவர்மீது தன்னால் இயன்ற நன்கொடையை வழங்குவதை கடமை என்கிறது (குர்ஆன் 2:236,241). அவள் கர்ப்பிணியாகவோ பாலூட்டும்தாயாகவோ இருந்தால், அப்போது அவளுக்குரிய செலவினங்களை கணவன் கொடுக்க வேண்டும் (குர்ஆன்65:6-7, 2:233)

3.அத்துடன் குழந்தைக்கான செலவு தந்தையின்மீதே உண்டாகும்.

4.அப்பெண்ணுக்கு மறுமணம் செய்வதும் சர்வசாதாரணமாக ஆக்கியுள்ளது.

5.அத்தோடு பெண்களுக்கு சொத்துரிமையும் சம்பாதிக்கும் உரிமையும் உண்டு என்பதால் பாதிப்பு என கூறுவது தற்குரித்தனமானதே

இதே நிலை தானே கணவன் நிரந்தர நோயாளியாகவோ இறந்துவிட்டாலுமோ ஏற்படும்! 

இப்படி ஒழுங்கின்றி இருந்த விவாகரத்தை மிகவும் தூய்மையாக ஒழுங்குபடுத்தியுள்ளது இஸ்லாம்.

 ஆனாலும் கணவன் மனைவி பிரிவதே சைத்தானுக்கு மிகவும் விருப்பமானது என்றும் இஸ்லாம் கூறுகிறது (முஸ்லிம் 5419 (2813b)). 

தகுந்த காரணங்களுக்காக செய்வதை தவிர மற்றையவை வெறுக்கப்பட்டதும் சைத்தானுக்கு விருப்பமானதும் ஆகும்.

பைபிளும் விவாகரத்தும்
தோரா விவாகரத்து செய்வதை அனுமதிக்கிறது -உபாகமம் 24:1-3.
ஆனால் இயேசுவோ விவாகரத்தை விபச்சாரம் அல்லாத காரணத்திற்காக செய்வது விபச்சாரம் என சொன்னதாக மத்தேயு 19:9.  ஆனால் மோசே அதை யூதர்களின் இதய கடினத்தின் காரணமாக அனுமதித்தார் என இயேசு சொல்கிறார் (மத்தேயு 19:8). அப்படியானால் இதய கடினத்திற்காக விபச்சாரம் கூடுமா? வேடிக்கையாக இயேசு காலத்தில் கூட யூதர்களின் இதயம் கடினமாக இருந்ததாக தான் யோவான் 12:40 சொல்கிறது. அப்படி பார்த்தால் இயேசு விவாகரத்தை தடை செய்வதே அறிவீனமாக தென்படுகிறது.

அத்தோடு விபச்சாரம் செய்தால் மட்டுமே விவாகரத்து செய்ய முடியும் என்று சட்டம் போடும்போது, தன் மனைவியை பிடிக்காது போனவன் தன் மனைவி மீது விபச்சார அவதூறு சொல்லி விவாகரத்து பெறுவதற்கு வழிவகுக்கிறது. ஆனால் இஸ்லாமோ காரணத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லாததால் தம்பதியினர் பிரியும்போதும் அவர்களது privacy மீதான அவதூறுகள் கூறும் வாய்ப்பை இதன்மூலம் இல்லாமலாக்கியுள்ளது.



செவ்வாய், 18 நவம்பர், 2025

TNTJ VS YDM விவாதமும் & ரசாது கலீஃபா குரூப் விவாதமும் மறுப்பும

TNTJ vs YDM (2018) பைபிள் கூறும் மெய்யான இறைவன் விவாதமும் மறுப்பும்
text format


 TNTJ vs YDM (2018) குர்ஆன் கூறும் மெய்யான இறைவன் விவாதமும் மறுப்பும்
Text format

 ரசாது கலீஃபா குரூப் விவாதம்- மனிதர்களை நல்வழிப்படுத்தும் வேதம் எது (கடைசி வரை பைபிள் காட்டிய நல்வழி ஒன்றை கூட கூறவில்லை)
text format

ஞாயிறு, 2 நவம்பர், 2025

சுவர்க்கமும் மதுவும் ஹூருல் ஈனும் வேலைக்கார சிறுவர்களும்

சுவர்க்கத்தின் மது

 சுவர்க்த்து மதுவில் போதையோ, தீங்கோ , தலைவலியோ இருக்காது (குர்ஆன் 37:47, 52:23, 56:19)


சிறுவர்கள் வேலைக்காரர்கள்

உலகத்தில் சிறுவர்களின் கல்வியுரிமை வேறு உரிமைகள் பறிக்கப்பட்டு எதிர்காலம் பாதிக்கப்படுவதால் சிறுவர்களிடம் வேலை வாங்குவது குற்றமாக பார்க்கப்படுகிறது.

ஆனால் சுவர்க்கத்திலோ அதற்கென்றே படைக்கப்பட்டவர்கள் அதை செய்வதால் எந்த பிரச்சனையும் இல்லை...

 உதாரணமாக ரோபோவை குறித்த வேலைக்கு நியமிப்பதால் அது குற்றம் என சொன்னால் எப்படி?.. 

இறைவனே உடலைக் கொடுத்து உயிரைக் கொடுத்து அதற்கான தெம்பையும் கொடுத்து வேலை செய்விப்பதை எப்படி விமர்சிக்க முடியும்

??

கண்ணழகிகள்

-கண்ணழகிகள் திருமணம் முடித்தே தரப்படுவார்கள் (குர்ஆன் 52:20, புகாரி 3254)

அதிலே அவர்களது அந்தரங்க உறுப்புகளை வர்ணித்து எதுவும் கூறப்படவில்லை

78:33 இலுள்ள "கவாயிப்" என்பது கூட முலைகள் முகிழ்ந்த வயதுள்ள பெண்களை குறிக்கும்அங்கே முலை வர்ணனை எதுவும் இல்லை. அதுவும் குறிப்பிட்ட வயது பெண்களுக்கு அவ்வார்த்தையை பாவிக்கும் வழக்கம் அவர்களிடம் இருந்தவொன்றே.

அதனையே இணைவைப்பாளர்கள் உஹதைவிட்டு திரும்பியபோது அவர்கள் கூறியதாக வருவதில்" நீங்கள் முகம்மதை கொல்லவும் இல்லை. கவாயிபை (78:33 இலுள்ள வாசகம்)- இளம்பெண்களை சிறைபிடிக்கவுமில்லை. நீங்கள் செய்தது மிகவும் கெட்டது" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது

(ولا محمدا قتلتم.

ولا الكواعب أردفتم

(சுனனுல் குப்ரா (இமாம் நஸாயீயுடையது) 11083,தபரானீ (11/247) 11632)

இப்படி இளவயது பெண்கள் மனைவியராக சுவர்க்கத்தில் கிடைப்பார்கள் என்று சொல்லப்படுகிறது . உணவு பானங்கள் ஓய்வு என்பதோடு ஆணுக்கு மிகவும் விருப்பமானது பெண் என்பதால் அவர்களையும் சுவர்க்கத்தில் கொடுப்பான்


-சுவர்க்கத்தில் சாப்பிடும் நேரத்தில் சாப்பிடுதல் குடிக்கும் நேரத்தில் குடித்தல் தாம்பத்ய நேரத்தில் தாம்பத்யத்தில் ஈடுபடல், இறைவனை துதிக்கும் நேரத்தில் இறைவனை துதித்தல் என அதற்கேற்றபடியே இருக்கும் (புகாரி 3245,3246)



வெறுமனே ஆன்மீகரீதியிலோ அல்லது வெறுமனே மாம்சரீதியிலோ சுவர்க்கம் இருக்காது.


 மாறாக இவ்வுலகில் நல்லோராக வாழ்ந்தோருக்கு இறைவனின் கூலி. அங்கே ஆன்மீக இன்பம் உடலியல் இன்பம் என இரண்டும் கலந்தே இருக்கும்.


ஒரு பெண்ணுக்கு பல ஆண்கள் கணவர்களாக கிடைப்பார்கள் என்பது தற்கால தற்குறிகளின் கருத்தேயாகும். ஹூருல்ஈன் என்போர் பெண்கள் மட்டுமே.. ஆண்களில் அப்படி இல்லை.. 

இவ்வுலகில் நல்ல கணவன் மனைவியாக இருந்தால் அதே பெண்ணுக்கு அதே நபர் கணவராக கிடைப்பார். அதனால் தான் நபிகளாரின் மனைவியர் சுவர்க்கத்திலும் அவரது மனைவியர் என கூறப்பட்டுள்ளது. இவ்வாறே நபித்தோழர்களும் புரிந்து கொண்டனர்.

இவ்வுலகில் விபச்சாரத்தை தடைசெய்த இறைவன் சுவர்க்கத்தில் அனுமதிக்கிறான் என கூறுவது இவர்களின் வேசித்தன ஆவியின் வெளிப்பாடு.. அத்தகையோர் பெண்கள் விசயத்தில் அசிங்கப்பட்டுப்போனார்கள் என்பது வரலாறு

ஒரே இரவில் நபிகளார் தம் அனைத்து மனைவியரிடமும் சென்றதும் கர்த்தரின் செயலும்

 -ஒரே இரவில் நபிகளார் அனைத்து மனைவியரிடமும் தாம்பத்யத்தில் ஈடுபடுவார்களா?



நபி(ஸல்) இரவில் அல்லது பகலில் தம் மனைவிகளிடம் வருபவர்களாக இருந்தார்கள். அப்போது 11 பேர் இருந்தனர் என அனஸ் (ர) கூறினார்கள். அப்போது அதற்கு நபிகளார் சக்திபெருவார்களா? என்று கேட்டதற்கு, நபி(ஸல்) அவர்களுக்கு முப்பது பேருடைய சக்தி கொடுக்கப்பட்டுள்ளது என நாம் பேசிக்கொள்வோம் என்றார்கள் -புகாரி 268


நபிகளாரிடம் 11 பெண்கள் இருந்த காலம் ஹிஜ்ரி 8-10 காலத்திலாகும். மாரியா ,ரைஹானா எனும் இரு வலக்கரம் சொந்தமானவர்களும் 9 மனைவியருமாக இருந்தனர்.


இது வழமையாக நடந்த ஒன்று அல்ல. மாறாக ஒரு நாள் நடந்ததொன்றே என அனஸ் (ர) அவர்களின் வேறொரு அறிவிப்பு கூறுகிறது:


ஒரு நாள் நபிகளார் அனைத்து மனைவியரிடமும் ஒரே குளிப்பில் சென்று வந்தார்கள் என அனஸ்(ர) கூறினார்கள் (அபூதாவூத் 218)


இது எப்போது நடந்தது என்றால் நபிகளார் இறுதி ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டுவதற்கு முந்திய இரவு நிகழ்ந்தது என்பதை அன்னை ஆயிஷா (ர) கூறுகிறார்கள்:


"நான் நபி(ஸல்) அவர்களுக்கு மணப்பொருட்களை பூசுவேன். அவர்கள் தம் மனைவியரிடம் சென்றுவிட்டு காலையில் இஹ்ராம் அணிந்தவர்களாக இருப்பார்கள். அவர்களிடமிருந்து நறுமணம் கமழும் என ஆயிஷா (ர) கூறுகிறார்கள்- புகாரி 267,270


அதாவது இஹ்ராம் அணிவதற்கு முன் தன் அனைத்து மனைவியருடனும் இல்லறத்தில் ஈடுபட்டார்கள்.


வழமையாக நடப்பது போன்று (كان يدور /كان يطوف ) என்று உள்ளதும் அந்த ஒரு நாளில் ஒரு தடவை நிகழ்ந்தது என்பதையே இங்கு (அபூதாவூத் 218 -طاف ذات يوم -ஒரு நாள் <மனைவியர் அனைவரிடமும்> வலம்வந்தார்) குறிக்கிறது. இதற்கு ஆதாரமாக புகாரி 267 இலும் அன்னை ஆயிஷா (ர) மணம் பூசிவிட்டதை குறிப்பிடுவதற்காகவும் (كنت أطيب) என்று இதே "كان" என்பதையே பாவித்திருக்கிறார்கள். ஆனால் அதுவும் ஒரு தடவை நடந்ததே என புகாரி 270 காட்டுகிறது (தமிழ் மொழிபெயர்ப்பில் சற்று தவறியுள்ளார்கள். அரபியில் (أنا طيبت-நான் மணம்பூசிவிட்டேன்") என்றே உள்ளது.


இது ஆபாசமா?- நிச்சயமாக இல்லை.. இக்காலத்தில் நீலப்பட (2சாமு12:11-12) கலாச்சாரத்தில் ஊறி இருப்பதால், உடலுறவு என்பதே நீலப்படம் என்று நினைத்து விடுகிறார்கள். உண்மையில் அது கணவனுக்கு மனைவி மீதும் மனைவிக்கு கணவன்மீதுமுள்ள உரிமை.. பல நாட்களுக்கு மீண்டும் தாம்பத்யத்தில் ஈடுபட கிடைக்காது என்பதால் அவர்களுக்குரிய உரிமையை நபிகளார் பூரணமாக நிறைவேற்றினார்கள். அது தவறு அல்ல... நீதி.


-வழமையாக எப்படி நடப்பார்கள்?


வழமையாக நபிகளார் அனைத்து மனைவியரிடமும் தினமும் வருவார்கள் என்றும் ஆனாலும் அவர்களை தீண்ட மாட்டார்கள் என்றும் இறுதியாக யாருடன் இரவு தங்கும் நாளுக்குரியதோ அவரோடே தாம்பத்யத்தில் ஈடுபடுவார்கள் என அன்னை ஆயிஷா (ர) கூறுகிறார்- அபூதாவூத் 2135


மனைவியரில் விரும்பியவர்களை (விரும்பும் காலம்) ஒதுக்கி வைக்கலாம் விரும்பியவர்களை (விரும்பும் காலம்) உங்களுடன் இருக்க வைக்கலாம் . நீங்கள் ஒதுக்கி வைத்தவர்களில் யாரை விரும்புகிறீர்களோ அவர்களை உங்களுடன் சேர்த்து கொள்ளலாம். இதனால் உங்கள் மீது குற்றம் ஏதுமில்லை (குர்ஆன் 33:51) இறங்கிய பின்பும், ஒரு மனைவியுடைய நாளில் மற்ற மனைவியிடம் செல்ல விரும்பினால், அந்நாளை விட்டுக்கொடுக்குமாறு அனுமதி கேட்பார்கள் என்கிறார் அன்னை ஆயிஷா (புகாரி 4789)


நபிகளாரிடம் ஒன்பது மனைவியர் இருந்த காலத்தில் ஒரு மனைவியிடம் சென்றால் மீண்டும் அவரிடம் செல்வதற்கு ஒன்பது நாட்கள் எடுக்கும். அதனால் அனைத்து மனைவியரும் அந்த நாளுக்குரிய மனைவியின் வீட்டில் இரவில் ஒன்று கூடுவர். ஆயிஷா (ர) அவர்களின் வீட்டில் ஸைனப் (ர) அவர்களை அன்னை ஆயிஷா என நினைத்து நபிகளார் அவரிடம் கையை நீட்டினார்கள். அப்போது அன்னை ஆயிஷா,"இவர் ஸைனப்" என்றார்கள். உடனே நபிகளார் கையை விலக்கிக் கொண்டார்கள்.. முஸ்லிம் 2898 (1462 ஆங்கில அரபு)


இதன்படி அந்த இரவுக்குரிய மனைவியல்லாதவரை தொடவும் மாட்டார்கள் என்று தெளிவாக காட்டுகிறது.


இது சம்பந்தமாக இன்னும் பல ஹதீஸ்கள் உள்ளன. 



ஆகவே தன் மனைவியரின் உரிமைகளை நீண்ட நாட்கள் கழித்தே கொடுக்கவேண்டிய நிலை இருக்கும்போது அனைவரிடமும் ஒரே இரவில் சென்று வந்தார்கள். அது அவர்களது நீதியை தான் காட்டுகிறது.


நீலப்பட (2 சாமுவேல் 12:11-12) ஆதிக்கத்தினால் இது ஆபாசமாக தென்படுகிறது:


தாவீதின் அனைத்து மனைவியரையும் ஒரே ஆணுக்கு சப்லை செய்து இஸ்ரவேலர் முன்பாக பட்டப்பகலில் உறவுகொள்ள வைப்பேன் என கர்த்தர் சொன்னது குறித்து வெட்கமே இல்லை:


2 சாமுவேல் 12:11-12 IRVTam

[11] யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன்னுடைய வீட்டிலே அழிவை உன்மேல் எழும்பச்செய்து, உன்னுடைய கண்கள் பார்க்க, உன்னுடைய மனைவிகளை எடுத்து, உன்னுடைய அயலானுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன்னுடைய மனைவிகளோடு உறவுகொள்வான். [12] நீ மறைவில் அதைச் செய்தாய்; நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர்கள் எல்லோருக்கும் முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்வேன் என்றார் என்று சொன்னான்.

https://bible.com/bible/1899/2sa.12.11-12.IRVTam 

சனி, 1 நவம்பர், 2025

ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ர) உடனான திருமணமும்,ஜாஉனிய பெண்ணும், ஒழுக்கமாக நடந்த நபிகளாரும்- கிறிஸ்தவ காமப்போதகர்களின் உலரல்களுக்கு மறுப்பு

 கிறிஸ்தவ காமுக போதகர்கள் தம்மை ஒழுக்கசீலர்களாக காண்பித்துக் கொண்டு முகம்மது நபியை கொச்சைப்படுத்துவதற்காக இவர்களின் காமம் சொட்டும் விளக்கங்களை நுழைவித்து கொச்சையாக பேசுவதை வழமையாக வைத்திருக்கிறார்கள்.

அதிலே வழமையாக ஆயிஷா (ர) அவர்களை மணந்ததற்கு அடுத்ததாக கீழ் குறிப்பிடும் செய்திகளை ஆசையோடு எடுத்து வைப்பார்கள்

1.ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ர) அவர்களை மணந்ததுடன் சம்பந்தப்படும் கதைகள்

2.ஜாவ்னிய குலத்து பெண்ணுடன் சம்பந்தமான ஹதீஸ்

3.பாதையில் சென்ற பெண்ணை பார்த்துவிட்டு தன் மனைவியிடம் சென்றதாக வரும் ஹதீஸ் 

இதை ஒவ்வொன்றாக பார்ப்போம்:


1.ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ர) அவர்களை மணந்ததுடன் சம்பந்தப்படும் கதைகள்

புகாரி 7420 இலே மொழிபெயர்ப்பாளர் 33:37 யார் விசயத்தில் இறங்கியதாக கூறுவதை மொழிபெயர்த்த போது தம்பதியாக இருந்த ஸைத் ஸைனப் விசயத்தில் இறங்கியது என அடைப்புக்குறியுடன் போட்டு விட்டனர். இதை அரைகுறைகள் பிடித்துக்கொண்டு கணவன் மனைவியாக இருந்தபோதே இவ்வசனம் இறங்கியது போன்று தற்குரித்தனமான விவாதங்களில் சித்தரித்தனர். இவற்றுக்கான பதில்

*அரபியில் இவ்வசனம் ஸைனப் மற்றும் ஸைத் விசயத்தில் இறங்கியது என்றே உள்ளது. மொழிபெயர்ப்பாளர் தெளிவாக புரிய வைப்பதற்காக ஸைத் மற்றும் ஸைனப் யாராக இருந்தனர் என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ளும் நோக்கில் "தம்பதியராயிருந்த" என போட்டிருக்கிறார்கள்.

*ஸைத் தன் மனைவியை விவாகரத்து செய்ய விரும்பி நபியிடம் முறையிட்டவராக ஆலோசனை செய்தார். அப்போது நபிகளார் "உன் மனைவியை உன்னோடு வைத்துக்கொள்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!" என்றே சொன்னார் (திர்மிதீ 3212)

இதன்மூலம் ஸைத் தன் விருப்பப்படியே விவாகரத்து செய்தார். நபியின் ஆலோசனைப்படி ஸைத் நடக்கவில்லை என்பதை காட்டுகிறது.

*விவாகரத்து நடந்து ஸைனபின் இத்தா (காத்திருப்புக்காலம் -மூன்று மாதவிடாய் ஏற்பட்டு சுத்தமடையும் காலம்) முடிந்த பின், ஸைதை ஸைனபிடம் அனுப்பியே நபிகளாருக்கு பெண் பேசினார்கள். அதிலே ஸைத் தனக்கு ஸைனபின் மீது மரியாதை அப்போது அதிகரித்துவிட்டது என்கிறார். அதன் பின்பே 33:37இன் இறுதிப்பகுதியான "ஸைத் அவளை விவாகரத்து செய்துவிட்ட பின்னர் உமக்கு அவளை திருமணம் செய்து வைத்தோம்." என்பது இறங்கியது (முஸ்லிம் 2798)

இதன்படி விவாகரத்து முடிந்து, ஸைதுக்கும் அப்பெண் மீது விருப்பம் இல்லாத நிலையில் அவரை வைத்தே நபிகளார் பேசினார் 

*இந்த திருமணத்தின் நோக்கம் என்ன என்பதை குர்ஆன் 33:37இன் இறுதிப்பகுதி கூறுகிறது:

"ஏனெனில் முஃமின்களால் வளர்க்கப்பட்டவர்கள் தம் மனைவியரை விவாகரத்து செய்துவிட்டால், அப்பெண்களை (தம் முன்னால் கணவர்களான வளர்க்கப்பட்டவர்களின் தந்தையர்களான) அவரகள் மணந்து கொள்வதில் யாதொரு தடையும் இருக்க கூடாது என்பதற்காகவே. மேலும் இது அல்லாஹ்வின் நடைபெற்று தீரவேண்டிய கட்டளையாகும்" (33:37)

அதாவது சொந்த மகனின் விவாகரத்து செய்த மனைவியரையோ அவனுடைய விதவையான மனைவியரையோ மகனின் தந்தை திருமணம் செய்ய முடியாது (குர்ஆன் 4:23). ஆனால் வளர்க்கப்பட்டவர்கள் அத்தகைய மகன்கள் அல்ல என்பதால், அவர்கள் விவாகரத்து செய்தால் அப்பெண்ணை அந்த நபரை வளர்த்த நபர் முடிப்பதில் தவறில்லை என்பதை செய்வித்து காட்டுவதற்காக நிகழ்ந்ததோடு, இறைவனது கட்டளையும் ஆகும்.

*அத்தோடு குர்ஆன் 33:37 நபிகளாரை கண்டிக்கிறதாகவும் உள்ளது. அதாவது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை நீர் மனிதர்களுக்கு பயந்து மறைத்தீர் என கண்டிக்கிறது. (மனிதர்கள் குறை கூறுவார்கள் என்ற அச்சம். அல்லாஹ் வெளியாக்க இருந்தது இந்த திருமணம்). இதனால் தான் நபிகளார் தனக்கு இறங்கிய வசனத்தில் ஏதாவதொன்றை மறைப்பார் என்றால் இதை மறைத்திருப்பார் என ஆயிஷா அவர்களே கூறுகிறார்கள் (புகாரி 7420). 

எவரும் தன் இச்சைக்கு இப்படி தன்னை கண்டித்து இட்டுக்கட்ட மாட்டார் அல்லவா?

இதிலே வளர்ப்பு மகனின் மனைவியை அபகரித்தது என்று கூற எந்தவித நியாயமும் இல்லை.

(ஒரு பேச்சுக்காக இதுபற்றி வரும் சாட்சிகளற்ற அறிவிப்புகளை உண்மையென கருதினாலும்,, அவற்றிலே நபிகளார் தற்செயலாக ஸைனபை பார்த்ததாகவும் அதனால் ஈர்க்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. ஈர்க்கப்படுவதற்கு காரணம் ஹோமோன்களே. அதனால் அவரை குற்றப் படுத்த முடியாது. அப்போதுகூட நபிகளார் தம் தலையை தாழ்த்திக்கொண்டு "உள்ளங்களை திரும்பக் கூடியவன் தூயவன்" என கூறிக்கொண்டே சென்றுவிட்டார் என்றே அவை கூறுகின்றன. (இவர்கள் புழுகுவது போன்று எதுவுமே இல்லை!). அதன் பின்பு ஸைத் ஸைனப் இருவருக்கும் ஒருவரையொருவர் வெறுப்பு உண்டாகிவிட்டது என்றும் அதனால் ஸைத் விவாகரத்து கோர ஆலோசனை கேட்டு நபிகளாரிடம் வந்தார் என்றும் நபிகளார் வேண்டாம் என்று கூறியும் ஸைத் விவாகரத்து செய்தார் என்றும் பிறகு குர்ஆன் 33:37 இறங்கியதாகவும் அவை கூறுகின்றன.

இந்த கதைகளின் படி கூட, இறைவனின் இந்த திருமணக் கட்டளை நிறைவேறுவதற்காக நபியிற்கு விருப்பம் ஏற்பட வேண்டும் என்பதற்காக நிகழ்ந்த நிகழ்வாகவே கூறப்படுகிறது. ஆனாலும் இவை அடிப்படையற்றவை ஆகும்.)


இதிலே எது எப்படி இருந்தாலும் விமர்சிக்கப்பட எந்த குறையும் இதிலே கிடையாது!!!

!


நமது எதிர்வாதம்:

*பைபிளிலே தாவீதை திருப்திப்படுத்த அவரது ஆண்டவரின் மனைவிகளையும் தேவனே மடியில் கொடுத்தார்:

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 12:8 TAERV

[8] நீ அவனது குடும்பத்தையும் அவனது மனைவியரையும் எடுத்துக்கொள்ளுமாறு நான் செய்தேன். நான் உன்னை இஸ்ரவேல், யூதா ஜனங்களுக்கு ராஜாவாக்கினேன். அது போதாதென்று உனக்கு இன்னும் அதிகமதிகமாகக் கொடுத்தேன். 

https://bible.com/bible/3154/2sa.12.8.TAERV

(வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பில் உன் ஆண்டவனின் மனைவிகளை உன் மடியில் கொடுத்தேன் என உள்ளது. ஒரு பெண்ணை மடியில் கொடுத்தல் என்பது மனைவியாக கொடுப்பதையே குறிக்கும் :

ஆதி 16:5 IRVTam

[5] அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: “எனக்கு நேரிட்ட அநியாயம் உம்மேல் சுமரும்; என்னுடைய அடிமைப்பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக நினைக்கிறாள்; யெகோவா எனக்கும் உமக்கும் நடுநிலையாக நியாயந்தீர்ப்பாராக” என்றாள். 

https://bible.com/bible/1899/gen.16.5.IRVTam

(சும்மா பராமரிக்க கொடுப்பதற்கு தாவீது என்ன சுதந்திர போராட்ட தியாகியா? அதை தேவன் செய்தால் எப்படி உபகாரம் என கருத முடியும்??)

*இதே தாவீது உரியாவின் மனைவியை கள்ளத்தனமாக கர்ப்பமாக்கியதால் , அக்குழந்தையை தண்டித்தார். ஆனால் அவளை இவர்கள் பாசையில் சொல்வதென்றால் ஆட்டையப் போட்டு புணர்ந்த போது பிறந்த குழந்தையை தேவன் நேசித்தார் -2 சாமுவேல் 12:14-15,24

2 சாமு 12:14-15, 24 IRVTam

[14] ஆனாலும் இந்த சம்பவத்தால் யெகோவாவுடைய எதிரிகள் இழிவாகப் பேச நீ காரணமாக இருந்தபடியால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாக சாகும் என்று சொல்லி, நாத்தான் தன்னுடைய வீட்டிற்குப் போய்விட்டான். [15] அப்பொழுது யெகோவா உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாக இருந்தது. 

[24] பின்பு தாவீது தன்னுடைய மனைவியான பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி, அவளிடத்தில் போய், அவளோடு உறவுகொண்டான்; அவள் ஒரு மகனைப்பெற்றாள்; அவனுக்குச் சாலொமோன் என்று பெயரிட்டான்; அவனிடம் யெகோவா அன்பாக இருந்தார். 

https://bible.com/bible/1899/2sa.12.14-24.IRVTam 

இது தாவீதின்மீது பரிசுத்த ஆவியானவர் வந்து இறங்கிய பின்பே நடந்தது. (1 சாமுவேல் 16:13)- ஆவியானவர் உள்ள போதே காமம் தலைக்கேறி குளிக்கும் பெண்ணை பார்த்துவிட்டு படுக்கையறைக்கு அழைப்பித்து விபச்சாரம் செய்தார் (2 சாமுவேல் 11:2-4) என்பதை இது காட்டுகிறது 

இதற்காக தேவனோ தாவீதின் மனைவியை பக்கத்திலிருப்பவனுக்கு கொடுத்து இஸ்ரவேலர் பார்க்க பட்டப்பகலில் விபச்சாரம் செய்விப்பதாக சொல்கிறார் (2 சாமுவேல் 12:11-12)-ஃபிலிம் எடுக்கிறாரா?

இப்படி கள்ள உறவை சட்டபூர்வமாக ஆட்டையப் போட்டபோது தேவன் தன் நேசரின் செயலை கண்டிக்காமல் ஆதரித்தார். பிறகு அவரை உத்தமன் என்று வேறு சொல்கிறார் (1 இராஜாக்கள் 15:5)

இதை வைத்துக்கொண்டு, சட்டத்தை நிறைவேற்றுவதற்கு நபிகளார் செய்ததை விமர்சிக்கலாமா 

அத்தனைக்கும் ஆவியானவர் இறங்கிய பின் விபச்சாரம் செய்ததும், ஆவியையுடைய தேவனே அவரது மனைவியரை விபச்சாரம் செய்விப்பேன் என சொல்வதும் எதையோ சொல்கிறது. ஆவி தானே பிரச்சினை 


2.ஜாவ்னிய குலத்து பெண்ணுடன் சம்பந்தமான ஹதீஸ் புகாரி 5255

அதற்கு முந்திய ஹதீஸிலே அந்த பெண் நபியின் மனைவி என தெளிவாக உள்ளது (புகாரி 5254). அந்த பெண்ணின் மனம் மாறி விருப்பமில்லாத போது கூறிய வார்த்தைகளே புகாரி 5255 இலே உள்ளது. அப்போது அவரை சமாதானப்படுத்துவதற்கு தொட போனார். அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடவே நபிகளார் விட்டுவிட்டார்கள் அத்தோடு இரண்டு சணல் ஆடைகளை நன்கொடையாக கொடுத்தார்கள். இதை இமாம் புகாரி விவாகரத்து எனும் தலைப்பின் கீழ் தான் கொண்டு வருகிறார். அதாவது இது விவாகரத்து தான். குறிப்பாக அங்கே அந்த பெண்ணின் செவிலித்தாயும் இருந்தார்.

இந்த ஹதீஸ் நபிகளாரின் முன்மாதிரிக்கு தான் ஆதாரம்.
 அவர் அவளை பலவந்தப்படுத்தியிருந்தால் அதை விமர்சிப்பதற்கும் யாரும் இல்லை என்றிருக்க நபிகளார் மிகவும் ஒழுக்கமாக அப்பெண்ணிற்கு நன்கொடை கொடுத்து அனுப்பினார். ?

நம் எதிர்வாதம்

 பைபிள் பிரகாரம், கன்னியை பலவந்தப்படுத்தி புணர்ந்தாலே அவளை மனைவியாக்கிக் கொள்ளலாம் என காண்பிக்கப்படுகிறது (உபாகமம் 22:28-29). இது போன்று நபிகளார் நடக்கவில்லை 

ஆனால் பைபிளிலோ உரியாவின் மனைவியை இரண்டாவது தடவையாக புணர்ந்ததை கர்த்தர் சரி கண்டு அதில் பிறந்த குழந்தையை நேசித்தார் (2 சாமுவேல் 12:24)  . விபச்சாரம் நிகழ்ந்ததே தாவீதின் மீது ஆவியானவர் இறங்கிய பின்பு தான்(1 சாமுவேல் 16:13, 2 சாமுவேல் 11:2-4)

3.பாதையில் சென்ற பெண்ணை பார்த்துவிட்டு தன் மனைவியிடம் சென்றதாக வரும் ஹதீஸ் -முஸ்லிம் 2718

*இஸ்லாம் பார்வையை தாழ்த்திக்கொள்ளுமாறே கூறுகிறது (குர்ஆன் 24:30-31)

*எதேச்சையாக ஒரு பெண்ணின் மீது பார்வை விழுந்தாலும், அப்போதும் பார்வையை திருப்பிக் கொள்ளவேண்டும் என்றே நபிகளார் கூறினார்கள் (முஸ்லிம் 4363 (2159 ஆங்கிலம் அரபு), அபூதாவூத் 2148)

*எதேச்சையாக பார்வை விழுவது தப்பு அல்ல. மாறாக அதை இரண்டாவதாகவும் பார்ப்பதே தப்பு என்கிறது இஸ்லாம் (அபூதாவூத் 2149)

*இப்படி பார்வை தற்செயலாக விழுந்து அதனால் ஈர்க்கப்பட்டால், அந்த ஈர்ப்புக்கு காரணம் ஹோமோன்கள் தான். அது அந்த நபரின் சக்திக்கு அப்பாற்பட்டது.
ஆனாலும் தன் சக்திக்குட்பட்டதான பேச்சையோ வேறு தவறான செயலையோ செய்தாலே விமர்சனத்திற்குரியதாக மாறும்.

ஆனால் நபிகளாரோ , தன் இச்சையை கட்டுப்படுத்திக்கொண்டு, தன் மனைவியிடம் சென்று அவ்வாறு தான் நடந்துகொள்ள வேண்டும் என்று வழிகாட்டினார்கள் .
இதுவே சிறந்த முன்மாதிரியுமாகும்.

(உடனே திருமணமாகாதவன் எங்கே போக வேண்டும் என்று தற்குறித்தனமாக கேட்டால், அவன் தன் மனதை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். திருமணமானவனோ தன் உணர்வை மனைவியிடம் தீர்த்துக் கொள்ளலாம்)

நம் எதிர்வாதம் 

* பைபிளிலே கர்த்தரின் தீர்க்கதரிசி (அப்போஸ்தலர் 2:30) என்றும் இதயத்திற்கேற்ப செம்மையாக நடந்தவன் (அப்போஸ்தலர் 13:22) என கூறும் தாவீதோ அழகான பெண்ணை கண்டபோது கள்ளத்தனமாக விபச்சாரம் செய்தார்:

2 சாமுவேல் 11:2-4 IRVTam
[2] ஒருநாள் மாலையில் தாவீது தன்னுடைய படுக்கையிலிருந்து எழுந்து, அரண்மனை மாடியின்மேல் உலாவிக்கொண்டிருக்கும்போது, குளிக்கிற ஒரு பெண்ணை மாடியின் மேலிருந்து பார்த்தான்; அந்த பெண் மிக அழகுள்ளவளாக இருந்தாள். [3] அப்பொழுது தாவீது, அந்த பெண் யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான்; அவள் எலியாமின் மகளும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமான பத்சேபாள் என்றார்கள். [4] அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்துவரச் சொன்னான்; அவள் அவனிடம் வந்தபோது, அவளோடு உறவுகொண்டான்; பின்பு அவள் தன்னுடைய தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக்கொண்டு தன்னுடைய வீட்டிற்குப் போனாள். 

(அத்தனைக்கும் தாவீதுக்குள் பரிசுத்த ஆவி இறங்கியிருந்தார்- 1 சாமுவேல் 16:13, சங்கீதம் 51:11.... )

*சிம்சோன் என்ற நியாயாதிபதி வேசிகளோடு உறவு வைத்தார் அவரிடமும் ஆவியானவர் பலமாக இறங்குவார். (நியா 14:6,19& 15:14) யெகோவா அப்போதும் அவனோடு கூட இருந்தார். ஆனால் தலைமுடியை வெட்டியவுடன் யெகோவா போய்ட்டார்:

நியாயாதிபதிகள் 16:1, 4, 19-20 IRVTam
[1] பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு விபச்சாரியை கண்டு, அவளிடம் போனான்
[4] அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பெயருள்ள ஒரு பெண்ணோடு அன்பாயிருந்தான். 
[19] அவள் அவனைத் தன்னுடைய மடியிலே தூங்கவைத்து, ஒருவனை அழைத்து, அவன் தலைமயிரின் ஏழு ஜடைகளையும் சிரைத்து, அவனை பலவீனப்படுத்தத் தொடங்கினாள்; அவன் பலம் அவனைவிட்டு நீங்கியது. [20] அப்பொழுது அவள்: சிம்சோனே, பெலிஸ்தர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் தூக்கத்தைவிட்டு விழித்து, யெகோவா தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான். 

(இவனை புகழ்ந்து எபிரேயர் 11:32 பேசுகிறது)
இவர்மீது ஆவியானவர் இறங்கி ஏவத்தொடங்கியவுடன் பிலிஸ்திய பெண்ணின் மீது காதலில் விழுந்தார்.  அதுல பைபிள் வச்சுது ட்விஸ்டு. அது கர்த்தர் போட்ட ஸ்கெட்ச்

நியா 14:3-4 IRVTam
[3] அப்பொழுது அவனுடைய தாயும் அவனுடைய தகப்பனும் அவனை நோக்கி: நீ போய், விருத்தசேதனமில்லாத பெலிஸ்தர்களிடத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளவேண்டியதென்ன? உன்னுடைய சகோதரர்களின் மகள்களிலும், எங்கள் மக்கள் அனைவரிலும் பெண் இல்லையா என்றார்கள். சிம்சோன் தன்னுடைய தகப்பனை நோக்கி: அவள் என்னுடைய கண்ணுக்குப் பிரியமானவள், அவளையே திருமணம் செய்துவைக்கவேண்டும் என்றான். [4] அவன் பெலிஸ்தர்களிடத்தில் குற்றம் கண்டுபிடிக்கக் காரணம் உண்டாகும்படி, இது யெகோவாவின் செயல் என்று அவனுடைய தாயும் தகப்பனும் அறியாமல் இருந்தார்கள்: அக்காலத்திலே பெலிஸ்தர்கள் இஸ்ரவேலை ஆண்டார்கள்.



*உடனே இந்த தீர்க்கதரிசிகளும் நியாயாதிபதிகளும் கர்த்தர் கூட இருந்தாலும் ஆவியானவர் உள்ளே இருந்தாலும் விபச்சாரம் செய்வார்கள் தான். ஆனால் எங்களுக்கு அவர்கள் முன்மாதிரி இல்லை.. இயேசு தான் முன்மாதிரி என கதை விடுவார்கள் .

இவர்கள் பார்வையில் இயேசு கடவுள். கடவுள் மனிதனாக வந்தால் அவர் பாவம் செய்வாரா? 
அவருக்கு பாவம் செய்யும் இச்சை இருக்குமா?
 இப்படி இச்சையே இல்லாத நபர் இச்சையுள்ள மனிதர்களுக்கு எப்படி முன்மாதிரியாக இருப்பார்?

கர்த்தர் தேர்வு செய்த தீர்க்கதரிசியும் நியாயாதிபதியும் பரிசுத்த ஆவி அருளப்பட்டவர்களும் யெகோவா கூட இருந்தும் இப்படி தரங்கெட்ட செயலில் ஈடுபடுகிறார்களே. அப்படியானால் அவர்களை அறியாமல் தேர்வு செய்தாரா? அறிந்தே தேர்வு செய்தாரா? அப்போ முழு தவறும் கர்த்தர் மீது தானே விழுகிறது.

(ஆனால் முகம்மது நபியோ உடன்படிக்கை எடுக்கும்போது கூட எந்த பெண்ணின் கையையும் தொட்டதில்லை (புகாரி 7214,2713). அத்தோடு எதேச்சையாக ஒரு பெண்ணின் மீது பார்வை விழுந்து, ஹோமோன்கள் (hormones) காரணமாக ஈர்ப்பு ஏற்பட்டபோது கூட தன் சொந்த மனைவியிடமே சென்றார்.(முஸ்லிம் 2718). அனைவரும் தன் சொந்த மனைவியிடமே செல்லவேண்டும் என்றும் வழிகாட்டினார் (முஸ்லிம் 2719). தற்செயலாக ஒரு பெண்ணின் மீது பார்வை விழுந்தாலும் அப்போதும் பார்வையை திருப்பிக் கொள்ளவேண்டும் (முஸ்லிம் 4363) என்றெல்லாம் வழிகாட்டினார்.

ஆனால் இயேசுவோ மற்ற பெண்கள் தன் காலை முத்தமிட வைத்து தலைமுடியால் வருட அனுமதித்து தைலமும் பூச அனுமதித்தார்- லூக்கா 7:38
வழிகாட்ட முன்மாதிரியாக வந்தவர் மற்ற பெண்களை தொட அனுமதித்தால், தற்காலத்தில் பரிசுத்த ஆவி இறங்கிய போதகர்கள் இவ்வாறு செய்ய வழிகாட்டலாக தானே இருக்கும்.  ஆவியானவர் இறங்கியிருந்த தாவீதும் ஆவியானவர் ஏவத்தொடங்கிய சிம்சோனும் என்ன செய்தனர் என்பதை பைபிளே கூறிவிட்டது. பிறகு பரி.ஆவி இறங்கினால் இத்தகைய போதகர்கள் ஆபாசமாக பேசுவதில் நபிகளாரை கொச்சைப்படுத்துவதில் மாற்றான் பொண்டாட்டிகளை படுக்கைக்கு கூப்பிடுவதில் ஆச்சரியம் இல்லையே. இத்தகையோரும் ஒருநாள் சிக்குவர். அப்போது இருக்கு..

சனி, 27 செப்டம்பர், 2025

ஆயிஷா (ர) அவர்களுடனான நபிகளாரின் திருமணம்

 நபி(ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா அவர்களை முடித்தது பற்றி மிசநரிகளும் ஏனைய நிராகரிப்பாளர்களும் இஸ்லாத்தையும் உயர்வான நபிகளாரையும் கேலி செய்வதை வழமையாக கொண்டிருக்கிறார்கள். அத்தோடு கேலிச்சித்திரங்களையும் வரைந்து தம் மனதை சந்தோசப் படுத்திக் கொள்கிறார்கள்.


குர்ஆனின் போதனைகளிலே நியாயமாக குறைகாண முடியாமலும் நபிகளாரின் போதனைகளிலே நியாயமாக குறைகாண முடியாமலும் இருப்பதால், இதுபோன்றவற்றை பயன்படுத்திக்கொள்ள பார்ப்பார்கள்

இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தற்குரித்தனமானவை என்பதை வரலாற்றை ஆராய்ந்தால் புலனாகும்.

அதற்கேற்ப இதை சில பகுதிகளாக பிரித்து பார்ப்போம் 

1.ஆயிஷா (ர) அவர்களுக்கு திருமணம் பேசப்படும் காலத்திலேயே நபிகளாருக்கு பேசப்பட்டார்கள்


2.அக்காலத்திலேயே இளவயது திருமணம் நடைமுறையில் இருந்தது 

3.இல்லறவாழ்க்கைக்கான உடல் தகுதியை அடைந்த பின்பே நபிகளாருடன் வாழ்ந்தார்கள் .


4.இத்திருமணத்தால் அன்னை ஆயிஷா பாதிக்கப்படவில்லை 


5.ஆயிஷா(ர) நபிகளாரை அதிகம் நேசிப்பவராகவே இருந்தார் 


6.படித்த யூதர்கள் இவ்விசயத்தில் கப்சிப்


7.உலகளாவிய ரீதியில் இத்தகைய திருமணங்கள் சர்வசாதாரணமாக இருந்தன 


8.இஸ்லாம் பருவ வயதை அடையாத பெண்களோடு உறவு கொள்ள அனுமதிக்கிறதா?


9.இறுதியாக

1.ஆயிஷா (ர) அவர்களுக்கு திருமணம் பேசிக்கொண்டிருந்த காலத்திலேயே நபிகளாருக்கு திருமணம் பேசப்பட்டது.


கதீஜா (ர) மரணித்த பின்னால் , உஸ்மான் இப்னு மழ்ஊனின் மனைவி கவ்லா பின்த் ஹகீம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் திருமணம் செய்யக்கூடாதா?" என்றார். "யாரை?" என்றார் நபிகளார்.  "நீங்கள் விரும்பினால் கன்னியையும், நீங்கள் விரும்பினால் விதவையையும் " என்றார். அதற்கு நபிகளார் "கன்னி யார்?"  என்றார். அதற்கு கவ்லா,"உங்களுக்கு அல்லாஹ்வின் படைப்புகளிலேயே நேசத்திற்குரியவரின் மகளான ஆயிஷா பின்த் அபீபக்ர்" என்றார். அதற்கு நபிகளார் "விதவை  யார்"   என கேட்டார். அதற்கு கவ்லா, "உம்மை விசுவாசித்து நீர் கூறியவற்றில் உம்மை பின்பற்றிய ஸவ்தா பின்த் ஸம்ஆ " என்றார். அதற்கு நபிகளார்,"நீ போய் இருவரிடமும் என்னைப்பற்றி பேசு" என்றார். கவ்லா அபூபக்ரின் வீட்டில் நுழைந்து "உம்முரூமானே! உங்கள் (குடும்பத்தின்)மீது அல்லாஹ் எத்தகைய நலவையும் சுபீட்சத்தையும் அளித்துள்ளான்? என்றார்.  அதற்கு உம்முரூமான் , "எதை?" என்றார்.  அதற்கு கவ்லா,"ஆயிஷாவை தனக்கு பெண் பேசி அல்லாஹ்வின் தூதர் என்னை அனுப்பினார்" என்றார்.  அதற்கு உம்முரூமான் "அபூபக்ர் வரும்வரை காத்திரு" என்றார். அப்போது அபூபக்ர் வந்ததும் கவ்லா," அபூபக்ரே! உங்கள் (குடும்பத்தின்)மீது அல்லாஹ் எத்தகைய நலவையும் சுபீட்சத்தையும் அளித்துள்ளான்? என்றார்.  அதற்கு அபூபக்ர் , "எதை?" என்றார்.  அதற்கு கவ்லா,"ஆயிஷாவை தனக்கு பெண் பேசி அல்லாஹ்வின் தூதர் என்னை அனுப்பினார்" என்றார்.  அதற்கு அபூபக்ர், "அவருக்கு அவள் பொருத்தமாவாரா?" அவள் அவரது சகோதரரின் மகள் தானே" என்றார். கவ்லா திரும்பி நபிகளாரிடம் சென்று அதை நபிகளாரிடம் கூறினார். அதற்கு நபிகளார்,"நீ அவரிடம் திரும்பிச்சென்று , "இஸ்லாத்தில் நான் உம்முடைய சகோதரனும் நீர் என்னுடைய சகோதரனும் ஆவோம். உம்முடைய மகள் எனக்கு பொருத்தமானவரே!" என்று கூறுமாறு சொன்னார். கவ்லாவும் அபூபக்ரிடம் சென்று அதை கூறினார். அதற்கு அபூபக்ர் காத்திருக்குமாறு கூறி வெளியேறினார். உம்மூரூமான் கவ்லாவிடம், "முத்யிம் இப்னு அதீ தன் மகனுக்காக ஆயிஷாவை பெண்கேட்டிருந்தார்.  அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ர் எதை வாக்குக் கொடுத்தாலும் அதற்கு மாறு செய்யமாட்டார்அபூபக்ர் முத்யிம் இப்னு அதீயிடம் அவரது மனைவியான இளைஞனின் தாய் உள்ளபோது சென்றார்.  அப்போது அவள், "அபூகுஹாஃபாவின் மகனே!  நீர் எமது தோழரை (மகனை) உமக்கு திருமணம் முடித்து தந்தால் நீர் இருக்கும் உம் மார்க்கத்தில் அவரை புகுத்திவிடுவாய் " என்றார். அப்போது அபூபக்ர் முத்யிமிடம், "உமது கூற்றும் இது தானா?" என்றார். அவரும் அவ்வாறு தான் என்றதும், அபூபக்ர் அவரிடமிருந்து தன் மீதுருந்த வாக்குறுதியை  அல்லாஹ் நீக்கிய நிலையில் வெளியேறி திரும்பி வந்து கவ்லாவிடம், "அல்லாஹ்வின் தூதரை கூப்பிடு" என்றார். அவரும் கூப்பிடவே அவருக்கு திருமணம் முடித்து வைத்தார். அப்போது ஆயிஷா ஆறு வயதுடையவராக இருந்தார். பிறகு ஸவ்தாவிடம் கவ்லா சென்றார்..... (முஸ்னத் அஹ்மத் 25769)



*இதன்படி அன்னை ஆயிஷாவுக்கு திருமணம் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் தான் நபிகளாருக்கு பேசப்பட்டது (முஸ்னத் அஹ்மத் 25769)


*நபிகளாருக்கு முன்பே அல்முத்யிம் இப்னு அதீ தன் மகனுக்கு பேசியிருந்தார். பிறகு தன் மகனை அபூபக்ர் மதமாற்றிவிடுவார் என கருதி மறுத்துவிட்டார் (முஸ்னத் அஹ்மத் 25769)


2.அக்காலத்திலேயே இளவயது திருமணம் நடைமுறையில் இருந்தது 

 இத்தகைய திருமணம் அந்த காலத்தில் சர்வசாதாரணமாக இருந்ததொன்றே.  21 வயதில் பாட்டியாகிய பெண்களும் அவர்கள் மத்தியில் இருந்தனர் (புகாரி 2664 இற்கு முந்திய தலைப்பு)


3.இல்லறவாழ்க்கைக்கான உடல் தகுதியை அடைந்த பின்பே நபிகளாருடன் வாழ்ந்தார்கள்

*நபிகளார் ஆறு வயதில் அன்னை ஆயிஷாவை மணந்தது திருமணம் உடன்படிக்கை மட்டுமே. ஒன்பது வயதில் தான் இல்லறத்தில் ஈடுபட்டார்கள்.(புகாரி 5133, 5158)


*இல்லற வாழ்க்கை ஏற்ற உடல் தகுதியை அடைய வைப்பதற்காக அதாவது நபியிடம் அனுப்பிவைப்பதற்கு அவரது தாயார் உணவுகளை நன்றாக கொடுத்து தயார் படுத்தினார் என்றும் அது பயனளித்தது என்றும் அன்னை ஆயிஷா அவர்களே கூறுகிறார் (அபூதாவூத் 3903, இப்னுமாஜா 3324) 

இதன்படி உடல் தகுதியை அடையும்வரை அவரது தாயிடம் தான் இருந்தார்கள் 




*அதன் பின்பே அவரது தாய் அவரை நபிகளாரிடம் அனுப்பிவைத்தார். அப்போது யாரும் இதை தவறாக பார்க்கவும் இல்லை, பரிதாபப்படவுமில்லை..  மாறாக ஆயிஷாவுக்கு நல்வாழ்த்து தான் சொன்னார்கள் ( புகாரி 5156) - காரணம் அது அவர்கள் மத்தியில் சர்வசாதாரணமாக இருந்ததோடு, அதற்கேற்ற தகுதியடைந்த பெண்ணாக ஆயிஷா இருந்தார் என்பதால் தான்.



4.இதனால் ஆயிஷா (ர) பாதிக்கப்படவோ அநீதியிழைக்கப்படவோ இல்லை

*இதனால் அன்னை ஆயிஷா பாதிக்கப்படவோ உரிமை மறுக்கப்படவோ இல்லை


-மாறாக தன் நண்பிகளுடன் திருமணத்திற்கு பின்பும் விளையாடுபவராக இருந்தார் (புகாரி 6130)


-தான் விரும்பும் அளவு விளையாட்டுக்களை ரசிப்பதற்கு சுதந்திரமாக நடாத்தப்பட்டார் (புகாரி 5236)


-நபிகளாரும் அன்னையின் வயதிற்கேற்பவே நடந்து கொண்டார்கள். அவருடன் ஓட்டப் போட்டியில் கலந்து கொள்வார்கள் விளையாட்டாக நடந்துகொள்வார்கள் (அபூதாவூத் 2578, இப்னுமாஜா 1979)


-அவரையோ வேறு எந்தபெண்ணையோ நபிகளார் ஒருபோதும் அடித்ததில்லை என அன்னையே கூறுகிறார்கள் ( ,இப்னுமாஜா 1984, அபூதாவூத் 4786)


-நபியவர்களை விட இச்சைகளை கட்டுப்படுத்துபவர் வேறு யாரும் இருக்க முடியாது என சொல்வதும் அன்னை ஆயிஷா அவர்களே (புகாரி 302&1927). அந்த அளவுக்கு கட்டுப்பாட்டுடன் தான் நபிகளார் வாழ்ந்தார்கள்.


5.ஆயிஷா(ர) நபிகளாரை அதிகம் நேசிப்பவராகவே இருந்தார். 

-அத்தோடு நபிகளாரை மிகவும் நேசிப்பவராகவே இருந்தார். அவரை யாருக்கும் விட்டுக்கொடுக்காதவராகவும் (4789), அவர்விசயத்தில் அதிகம் ரோசம் கொள்பவராகவும் அன்னை ஆயிஷா இருந்தார் (புகாரி 6024&6030, 4789, 6004)


ஆக அன்னை ஆயிஷா அவர்களுக்கோ, அவருடைய தாய் தந்தையருக்கோ, அக்கால மக்களுக்கோ  இதில் எந்த பிரச்சினை இருக்கவில்லை என்று இருக்க இந்த தற்குறிகள் ஏன் கதற வேண்டும்?


எல்லாம் வெறுமனே காழ்ப்புணர்ச்சிகளே!


6.தற்குறிகள் இந்த விமர்சனத்தை வைக்கும்போது யூதர்கள் கப்சிப்- காரணம் அவர்களது மூன்று வயது ரிஃப்கா பாட்டியை சேர்ந்த 40 வயது ஈசாக் தாத்தா- கத்தோலிக்கர்களுக்கு பேரிடியான மரியாளின் வயதும்


வேடிக்கையாக அசுத்த ஆவியால் அபிசேகம் பண்ணப்பட்ட முட்டாள் தற்குறிகள் இதை குற்றச்சாட்டாக வைக்கும்போது, யூதர்களோ இந்த விசயத்தில் வாயை திறக்கவே மாட்டார்கள். காரணம் அவர்களது பாட்டியான ரிப்கா (ரெபேக்கா) அவர்களை பாட்டனார் 40 வயது ஈஸாக்கு மணந்தபோது ரிப்கா பாட்டியிற்கு வெறும் மூன்று வயதே என அவர்களது முன்னோர்கள் எழுதி வைத்துள்ளனர்.


ரிப்கா பாட்டியிற்கு மூன்று வயது  ( Seder olam rabbah அத்தியாயம் 1, Genesis Rabbah 57:1, ஆதியாகமம் 25:20இற்குரிய Rabbi Rashi அவர்களின் விளக்கம் ,Tosafot on Yevamot 61b)


அத்தோடு மரியாள் கர்ப்பமானபோது அவரது வயது 13or14 என கத்தோலிக் என்சைக்லோபீடியா சொல்கிறது (heading: Mary's Pregnancy becomes known to Joseph (last Paragraph)



7.உலகலாவிய ரீதியில் இத்தகைய திருமணங்கள் சர்வசாதாரணமாக இருந்தன.


அ. உலகளாவிய ரீதியில் திருமண வயதுகள் 7,8,10 ஆக கூட 1880களில் இருந்துள்ளது.


https://cyh.rrchnm.org/primary-sources/24.html#:~:text=By%201880%2C%20the%20first%20date,of%2012%20or%2013%20years



ஆ.ஜப்பானில் 2023வரை 13 வயதிலே உறவு வைக்கமுடியும். பிறகு 16ஆக உயர்த்தப்பட்டது


https://www.asahi.com/sp/ajw/articles/14934890


இ.ஸ்பெய்னில் கூட 14 வயதிலிருந்து 16ஆக 2013இல் தான் உயர்த்தினார்கள்


https://www.theguardian.com/world/2013/sep/04/spain-raises-age-of-consent


ஆக உலகிலே அண்மை காலங்களிலேயே நடைமுறையில் இருந்த விடயத்தை 1400 வருடங்கள் முன்பு எந்த சட்டத்தையும் மீறாமல் அந்த பெண்ணும் பாதிக்கப்படாமல் வாழ்ந்த நிகழ்வை கொச்சைப்படுத்துவது தற்குறித்தனமல்லாமல் வேறென்ன?



8.இஸ்லாம் பருவமடையாத பெண்களோடு உறவு கொள்ள அனுமதிக்கிறதா?


குர்ஆன் 65:4 இலே விவாகரத்தான பெண்களுக்கு காத்திருப்புக்காலமாக மூன்று மாதவிடாய்காலமும் மாதவிடாய் நின்றுவிட்டவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதவர்களுக்கும் காத்திருப்புக்காலம் மூன்று மாதம் என்கிறது.


இதை வைத்து பருவமடையாதவர்களுடன் குழந்தைகளுடன் உறவுகொள்ள அனுமதிப்பதாக தற்குறித்தனமாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.


அவர்களின் கலாச்சாரத்தில் திருமண வயதாக நிர்ணயித்த காலமாகியும் மாதவிடாய் ஏற்படாத பெண்களுக்கு அவர்கள் விருப்பத்துடன் திருமணம் நடந்து அதன் பின் தாம்பத்யத்தில் ஈடுபடுவதையே இது குறிக்கும்.


ஏனெனில் -கன்னியோ விதவையோ யாராக இருந்தாலும் அவர்களின் சம்மதமின்றி திருமணம் செல்லாது என்பதே இஸ்லாத்தின் திருமணச்சட்டம் (5136,6946,6948)


சம்மதம் தெரிவிப்பதற்கு தாம்பத்யம் பற்றி அறிவும் சுயபுத்தியும் இருக்க வேண்டும்.


அத்தகைய பெண்ணுடன் அப்பெண்ணின் விருப்பத்துடன் திருமணம் முடித்து தாம்பத்யத்தில் ஈடுபடுவது கூடும். மாதவிடாய் ஏற்படுவது தாமதமான பெண்ணானாலும் மாதவிடாய் ஏற்படாமலே போன பெண்ணானாலும் அவர்களையும் திருமணம் முடித்து வாழலாம்.



குறிப்பு: இத்தகைய இளவயது திருமணம் இஸ்லாத்தில் வரவேற்கப்படவோ கண்டிக்கப்படவோ இல்லை.. அது அன்றைய அரேபியரதும் ஏனைய மக்களினதும் கலாச்சாரத்தில் இருந்தவொன்றே. இஸ்லாம் அதை பெண் தரப்பு பாதிக்கப்படாத விதத்தில் மட்டும் அனுமதித்தது.



அவை தற்காலத்தில் நம் கலாச்சாரத்தில் இல்லை!!!!


ஆனாலும் பைபிளோ தகப்பனுக்கு தன் மகளை இதற்காக விற்றுப் போடவும் முடியும் என்று அனுமதிக்கிறது (யாத்திராகமம் 21:7-10). இஸ்லாமோ பெண்ணின் சம்மதமின்றி திருமணமே செல்லுபடியற்றது என்கிறது (புகாரி 5136,6946,6948).



9.இறுதியாக

*ஆயிஷா (ர) அவர்களுக்கு திருமணம் பேசப்பட்டுக்கொண்டிருந்த காலத்திலேயே இத்திருமண ஒப்பந்தம் நிகழ்ந்தது 

*குடும்பவாழ்வுக்கு தகுதியான உடலமைப்பை அடைந்த பின்பே அவரது தாயார் அனுப்பிவைத்தார். 

*அக்காலத்திலே 21 வயதில் பாட்டியாக ஆகினவர்களும் இருந்தனர்.

*அண்மைக்காலம் வரை இத்தகைய திருமணங்கள் உலகலாவிய ரீதியில் இருந்தது தான்

*அத்தோடு இஸ்லாம் பெண்களின் சம்மதம் இல்லாமல் திருமணம் செல்லாது என்கிறது (புகாரி5136,6946,6948), சம்மதம் தெரிவிக்கும் அளவுக்கு புத்தியும் ,உடல் தகுதியும்  இருக்கும்போதே திருமணமே செல்லுபடியாகும். (ஆனால் பைபிளோ மகளை விற்பனை செய்து விடவும் அனுமதிக்கிறது (யாத்திராகமம் 21:7-10)

*ஏன் இத்திருமணம் என சிலர் கேட்பர்.  குடும்பவாழ்வு என்பதோடு சேர்த்து நண்பர்களிடையே உறவை பேணிக்கொள்ளவும்  திருமணங்கள் செய்தனர். உதாரணமாக சிஙார் எனும் வகையான திருமணமும் இருந்து வந்தது. அதாவது இரண்டு நபர்கள் ஒருவர் மற்றவரது மகளை மஹரின்றி மாற்றி திருமணம் செய்தும் ஒருவர் மற்றவரது சகோதரியை மஹரின்றி மாற்றி திருமணம் செய்வதும் வந்தனர்.  இஸ்லாம் இதிலே பெண்ணின் மஹர் கொடுக்கப்படாமையால் தடுத்துவிட்டது.(புகாரி 5112, 6960).  இதே போன்று நபியின் மகளை அபூபக்ர் (ர), உமர் (ர) இருவரும் ஒருவர் பின் ஒருவராக பெண் கேட்டார்கள். நபியின் பேத்தியை உமர் (ர) திருமணம் முடித்தார்கள். 


இதிலே அன்னை ஆயிஷா அவர்களுக்கு பிரச்சினை இருக்கவுமில்லை, அன்னை ஆயிஷாவை அதிகம் நேசித்த அவருடைய பெற்றோருக்கும் இதில் பிரச்சினை இருக்கவுமில்லை. , அக்கால மக்களுக்கும் இதிலே பிரச்சினை இருக்கவுமில்லை.. அண்மைக்காலம் வரை இத்திருமணத்தை இஸ்லாத்தை எதிர்க்கக் கூடியவர்கள் கூட விமர்சிக்கவில்லை... தற்காலத்தில் இருந்துகொண்டு விமர்சிப்பதென்பது இஸ்லாத்தின் பக்கம் மக்கள் செல்வதை தடுப்பதற்கான ஓர் உத்தி மட்டுமே... இத்தகையோர் ஈருலகிலும் இழிவடைவர்

வெள்ளி, 26 செப்டம்பர், 2025

பாவிகளை கடவுள் நேசிப்பாரா? - தற்குறிகளுக்கு மறுப்பு

 அல்லாஹ் பாவிகளை ,காஃபிர்களை நேசிப்பதில்லை . ஆனால் கர்த்தரோ அப்படி அல்ல.. பாவிகளை நேசிப்பவர் என  போதகர்கள் உருட்டுவார்கள்.


1.அல்லாஹ் யாரை நேசிப்பதில்லை? ஏன்

2.அல்லாஹ் யாரை நேசிக்கிறான்?

3.கர்த்தர் பாவிகளை நேசிக்கிறாரா?


1.அல்லாஹ் யாரை நேசிப்பதில்லை? ஏன்?

அல்லாஹ் அநியாயக்காரர்களை நேசிப்பதில்லை (3:57,140) பாவிகளான காஃபிர்களை நேசிப்பதில்லை (2:276, 3:32), வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை (2:190),கர்வமுடையோரை வீண் பெருமையுடையோரை நேசிப்பதில்லை (4:36), கொடும்பாவியான சதிசெய்துகொண்டிருப்பவனை நேசிப்பதில்லை (4:107),குழப்பம் புரிவோரை நேசிப்பதில்லை (5:64), வீண்விரயம் செய்வோரை நேசிப்பதில்லை (6:141,7:31), துரோகம் செய்வோரை நேசிப்பதில்லை (8:58), பெருமையடிப்போரை நேசிப்பதில்லை (16:23) என குர்ஆன் கூறுகிறது.


இப்படி நேசிக்காமல் இருப்பதுவே நீதியானது. அத்தோடு அவ்வாறு நேசிப்பதில்லை என்று முன்பே அறிவித்து விடுவது தான் உண்மையான நேசம். 

காரணம் இத்தகையோர் நரகத்தில் புகுத்தப்படுவர்.. அதுவே குற்றவாளிகளுக்கான இறைவன் ஏற்படுத்திய தண்டனை எனும் நீதி..

 ஆகவே இறைவன் அவர்களை நேசிப்பதாக பொய் கூறிவிட்டு நரகத்தில் தள்ளுவது சரியானதா? அல்லது நேசிப்பதில்லை என முன்பே அறிவித்து, இறைவன் நேசிக்கும் விதமாக வாழுவதற்கு தூண்டுவது நேசமா?


2.அல்லாஹ் யாரை நேசிக்கிறான்? அவனது கருணையின் அளவு

இவ்வாறே இறைவன் யாரை நேசிப்பான் என்பதையும் குர்ஆன் கூறுகிறது.

நன்மை செய்வோரை நேசிக்கிறான் (2:195), பாவத்தை விட்டு மனந்திரும்புவோரையும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கிறான் (2:222), நபியை பின்பற்றுவோரை நேசிக்கிறான் (3:31), இறையச்சமுடையோரை நேசிக்கிறான் (3:76), பொறுமையாளர்களை நேசிக்கிறான் (3:146),இறைவன் மீது பொறுப்புச்சாட்டி முழு நம்பிக்கை வைப்போரை நேசிக்கிறான் (3:159), நீதமாக நடந்துகொள்வோரை நேசிக்கிறான் (5:42), பூமியில் உள்ளோருக்கு இரக்கம் காட்டுங்கள் , வானத்திலுள்ளவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான் (அபூதாவூத் 4941), கருணையுடையோருக்கு கருணையுள்ளவனான இறைவன் கருணை காட்டுவான் (திர்மிதீ 1924), இரக்கம் காட்டுங்கள் இரக்கம்காட்டப்படுவீர்கள். மன்னியுங்கள்.மன்னிக்கப்படுவீர்கள் (அதபுல் முஃப்ரத் ஹதீஸ் 380) 

இப்படி இறைவனது அன்பை பெறுவதற்கு தகுதியானவர்களாக ஆகுவதற்கு  இறைவன் யாரை நேசிப்பான் என கூறி வழிகாட்டவும்பட்டுள்ளது.

அத்தோடு பாவியானவன் திருந்தி வருவதை குறித்து , பாலைவனத்தில் தன் வாகனத்தை தொலைத்தவன் அதை மீண்டும் கண்டுபிடிக்கும்போது அடையும் மகிழ்ச்சியை விட அல்லாஹ் மிகவும் மகிழ்ச்சியடைகிறான் ( புகாரி 6309, முஸ்லிம் ).

கருணையுள்ள பாலூட்டும் பெண் தன் குழந்தையை நேசிப்பதை விட அல்லாஹ் தன் அடியார்களை நேசிக்கிறான் (புகாரி 5999)

தன் அடியார்களை மன்னிக்கவும் நேர்வழியில் செலுத்தவும் இலேசாக்கவும் விரும்புகிறான் (குர்ஆன் 4:26-28)

பாவம் செய்து தமக்கு தாமே அநீதம் இழைத்துக் கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் நம்பிக்கையிழக்க வேண்டாம். நிச்சயமாக அவன் எல்லா பாவங்களையும் மன்னித்துவிடுவான் (39:53)

இவ்வாறு பாவிகளை மனந்திரும்பி வர அழைக்கிறது இஸ்லாம்!

படைப்புகள் தமக்கிடையே அன்புகாட்டிக்கொள்வதற்கு காரணம் அல்லாஹ் படைத்த கருணையின் நூறில் ஒரு பங்கு மட்டுமே.(புகாரி 6000) அந்தளவுக்கு இறைவன் படைத்த கருணையும் விசாலமானது, கருணையையே படைத்த கருணையாளனின் கருணை விசாலமானது. இதனால் தான் அல்லாஹ்வின் கருணையை அறிந்த காஃபிர் கூட சுவர்க்கத்தில் அவநம்பிக்கை கொள்ளமாட்டான் (புகாரி 6469) அதாவது அவனையும் அல்லாஹ் சுவர்க்கத்தில் நுழைவித்துவிடுவான் என்று எண்ணுமளவுக்கு கருணையுள்ளவன்.


3.இந்த தற்குரிகள் கூறுவது போல கர்த்தரோ இயேசுவோ பாவிகளை நேசிப்பார்களா?

1.புறஜாதிகள் பாவம் செய்ததாலும் தன்னையல்லாமல் வேறு கடவுளை வணங்கினாலும் அவர்களை நேசிக்கவில்லை. அவர்களின் குழந்தைகளையும் ஈவிரக்கமின்றி கொல்ல சொன்னார் (1 சாமுவேல் 15:2-3, உபாகமம் 20:16-18)

2.தான் தேர்வுசெய்த மக்களில் எவராவது தன்னையல்லாமல் வேறு கடவுளை வணங்கினால் ஈவிரக்கமின்றி கொல்ல சொன்னார் (உபாகமம் 13:6-10,12-16, 17:2-5)

குறிப்பாக சாலமோன் தேவனின் கட்டளையை மீறியதாக பைபிள் கூறுகிறது. அத்தோடு தேவன் அவன்மீது கோபமானார் என 1 இராஜாக்கள் 11:10


3.இயேசு தன்னை ஏற்காதோரை தேவன் மன்னித்துவிடவும் கூடாது அவர்கள் திருந்திவிடவும் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்தார்.(மாற்கு 4:11-12)

4.சிலைவணங்கிளை நரகத்தில் போட்டு கொல்லுவார் (வெளி 21:8)

5.ஏசா பிறந்து தீமை செய்ய முன்பே அவனை தன் தம்பிக்கு ஊழியம் செய்வான் என தீர்மானித்து கர்த்தர் வெறுத்தார் என்கிறார் பவுல் (ரோமர் 9:11-13) 

6.அக்கிரமக்காரரை கர்த்தர் வெறுக்கிறார் (சங்கீதம் 5:5)

7.துன்மார்க்கரை கர்த்தரின் உள்ளம் வெறுக்கிறது (சங்கீதம் 11:5)

8.குடும்பத்திலுள்ள சிலைவணங்கிகள் மற்றும் பாவிகளோடு ஒன்றாக சாப்பிடவோ பழகவோ கூடாது. அவர்களை துரத்தி விட வேண்டும் (1 கொரிந்தியர் 5:11-13)

9.இயேசுவை மக்கள் நம்பாததற்கு காரணம், தேவன் அவர்களின் கண்களை குருடாக்கி இருதயத்தை கடினப்படுத்தியமையே (யோவான் 12:40)

10.அப்படி இயேசுவை நம்பாதோரின்மீது தேவனின் கோபம் இருக்கும் (யோவான் 3:36) அத்துடன் அவன்மீது ஆக்கினைத்தீர்ப்பு உண்டாகும் (யோவான் 3:18)

அதாவது அவிசுவாசிமீது தேவனுக்கு அன்பு கிடையாது... மாறாக கோபமே இருக்கும் என பைபிளே சொல்லிவிட்டது (யோவான் 3:36)

இயேசு பாவிகளை மனந்திரும்புவதற்கு அழைக்கவே வந்தார்.. மனந்திருந்தாதோரை நேசிக்கவில்லை. மாறாக அவர்கள் மன்னிக்கப்பட கூடாது என்ற கடுமையானவராக தான் இருந்தார் (மாற்கு 4:11-12)

ஆகவே இயேசு பாவிகளை நேசித்தார் என்பது மனந்திருந்தாத பாவிகளை அல்ல.. மனந்திருந்துவோரை மட்டுமே. 

ஆகவே இதுவும் தற்குரித்தனமான குற்றச்சாட்டே.

வெள்ளி, 19 செப்டம்பர், 2025

இஸ்லாமும் பெண்களும் பைபிளும்

  1.பெண்களை ஒரு பொருட்டாகவும் மதிக்காதவர்களிடமே பெண்களின் உரிமைகளை குர்ஆன் கூறியது-(புகாரி 5843). ஆனால் பைபிள் பெண்ணோ விற்பனை பொருளாக பார்க்கிறது. அதாவது தகப்பனுக்கு தன் மகளை விற்பனை செய்யும் உரிமையும் உண்டு (யாத்திராகமம் 21:7-10)

2.பெண்குழந்தை பிறப்பதை இழிவாகவும், அவர்களை உயிரோடு புதைக்கும் மக்களிடையே (குர்ஆன் 16:58-59, ) , பெண் குழந்தைகளை உயிருடன் புகைப்பதை பெரும் பாவம் என்றும் (புகாரி 2408), பெண்குழந்தைகளால் சோதிக்கப்பட்டவர்களை அக்குழந்தைகள் நரகத்திலிருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள் என்றும் (புகாரி 1418), இரண்டு பெண் குழந்தைகளை நல்லமுறையில் வளர்ப்பவரும் நானும் சுவர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என தன் இரு விரல்களை இணைத்து காட்டினார்கள் (முஸ்லிம் 5127 (2631))

ஆனால் பைபிளோ பெண் குழந்தையை பெற்றெடுத்தால் ஆண்குழந்தையை பெறுவதைவிட இருமடங்கு தீட்டு ஏற்படும் (லேவியராகமம் 12:1-5)


3.பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படாத காலத்தில், அவளது திருமணத்திற்கு அவளது சம்மதம் அவசியம் என்றும் அவளது விருப்பமின்றி திருமணம் செய்து வைக்க கூடாது என்றும் உரிமையை வழங்கியது (புகாரி 5136,5138, 6945,6946)

ஆனால் பைபிளில் தகப்பனுக்கு அவளை விற்றுப்போடும் உரிமையே உண்டு(யாத்திராகமம் 21:7-10)

அத்தோடு அவளை கற்பழித்தவனுக்கோ காலம் முழுதுமே மனைவியாக இருக்க வேண்டும் என அவளை பாழ் கிணற்றிலேயே தள்ளுகிறது (உபாகமம் 22:28-29)


4.விதவை பெண்ணை அவளது மரணித்த கணவனின் குடும்ப சொத்து போல கருதி தம் இஷ்டப்படி நடத்திய காலத்தில், அவளை நிர்ப்பந்தித்து அடைந்துகொள்வது அனுமதிக்கப்பட்டது அல்ல என்று குர்ஆன் கண்டித்தது-(குர்ஆன் 4:19, புகாரி 6948)

பைபிளோ விதவை பெண்ணை அவளது கணவனின் சகோதரன் தான் முடிக்க வேண்டும் என நிர்ப்பந்தமான சட்டத்தை போடுகிறது (உபாகமம் 25:5-6). இங்கே அவளும் மனுசி தானே அவளுக்கும் விருப்பு வெறுப்பு உண்டுதானே என பைபிள் பார்க்கவில்லை.


5.தான் பராமரிக்கும் அநாதைப்பெண்களின் சொத்தை அபகரிக்கும் நோக்கத்தில் அவர்களை திருமணம் முடிப்பதையும், அவர்களுக்கு குறைவான மணக்கொடையை கொடுத்து முடிப்பதையும் இஸ்லாம் தடுத்தது-புகாரி 2763.

பைபிளில் பெண்களுக்கு சொத்துரிமையே கிடையாது. அவளை கற்பழித்ததற்கு நஷ்டயீடான ஐம்பது வெள்ளிக்காசுகளை கூட தகப்பனிடம் தான் கொடுக்க வேண்டும் (உபாகமம் 22:29) . அவள் மீது விபச்சார அவதூறு கூறினால் கூட அபராதமாக நூறு வெள்ளிக்காசுகளை அவளது தகப்பனிடம் தான் கொடுக்க வேண்டும் (உபாகமம் 22:19)


6.பெண்குழந்தைகளுக்கும் மனைவிக்கும்,தாய்க்கும், சகோதரிகளுக்கும் என பெண்களுக்கு இறந்தவர் விட்டுச் செல்லும் செல்வத்தில் சொத்துரிமையை இஸ்லாம் வழங்கியது.(குர்ஆன் 4:7,11,12,176)

ஆனால் பைபிளில் பெண்களுக்கு சொத்துரிமையே கிடையாது. தகப்பனுக்கு ஆண்குழந்தை இல்லாது போனால் மட்டும் தான் அவர்களுக்கு சொத்து கிடைக்கும்.(எண்ணாகமம் 27:8)

(பெண்ணுக்கு ஆணின் சொத்தின் பாதி தானே இஸ்லாத்தில் கிடைக்கும் என நினைக்கலாம். காரணம் ஆண் மீதே குடும்பச் செலவை இறைவன் விதியாக்கியுள்ளதாலும் (குர்ஆன் 4:34), ஆணே தன் மனைவிக்கு மணக்கொடையை கொடுக்க வேண்டும் என்பதாலும் (குர்ஆன் 4:4), அவள் நஷ்டயீடு செலுத்தவேண்டி ஏற்பட்டாலும் அவளது தந்தைவழி உறவினரே (சகோதரன் போன்றோர்) அதை செலுத்தவேண்டும் என்பதாலும் (புகாரி 6730) இவ்வாறு இஸ்லாம் வழங்கியது நியாயமானதே!)


7.தன் மனைவியின் மீது விபச்சாரம் செய்துவிட்டாள் என குற்றச்சாட்டு வைத்தால், அவ்வாறு செய்யவில்லை என எதிர்த்து அவனுக்கு சமமாக சாட்சி கூறும் உரிமையை இஸ்லாம் வழங்கியது (குர்ஆன் 24:6-9).

ஆனால் பைபிளோ அவள் முதலிரவிலே கன்னியாக இல்லை என கூறினால், அதற்கு உடலுறவில் வரும் இரத்தம் தேய்ந்த துணியை ஆதாரமாக அவளது பெற்றோர் காட்டவேண்டும். இல்லாவிட்டால் அவள் விபச்சாரி என தற்குரித்தனமான சட்டம் கூறுகிறது (உபாகமம் 22:14-21). சில பெண்களுக்கு கன்னியாக இருந்தும் முதலிரவில் இரத்தம் வராது. இதுபோன்ற அப்பாவிகளை அவதூறு கூறும் தற்குரித்தனமான போதனையை பைபிள் கூறுகிறது.

அத்தோடு தன் மனைவி மீது சந்தேகம் வந்தால் கூட அவளை தான் மண்கலந்த கசப்பு நீரை குடிக்க வைத்து ஆசாமி கூறும் சாபவார்த்தைகளுக்கு ஆமென் மட்டுமே கூற முடியும்.மறுக்கும் உரிமை கிடையாது (எண்ணாகமம் 5:14-24)


8.இஸ்லாம் கர்ப்பிணி பெண்களை மதிக்கிறது. அவள் பிள்ளை பெற்றெடுக்கும் போது மரணித்தால் அவளை உயிர்த்தியாகி என்கிறது (நஸாயீ 1846,3194, அபூதாவூத் 3111)

ஆனால் பைபிளோ கர்ப்பவேதனையை கடவுள் அதிகரிப்பார் காரணம், பெண் பாம்பிடம் ஏமாந்ததற்காக கடவுள் கொடுத்த சாபம் என்கிறது (ஆதி 3:16)


9.மாதவிடாய் பெண்களை இஸ்லாம் மதிக்கிறது. அது அல்லாஹ் ஆதமின் பெண் பிள்ளைகளுக்கு ஏற்படுத்திய காரியம் (புகாரி 294) என்றும், அதன்போது உடலுறவை தவிர அனைத்து விசயங்களிலும் அவளை சேர்த்துக்கொள்ளலாம் என்கிறது இஸ்லாம் (முஸ்லிம் 507 (302) புகாரி 295-297,299-303,) ஒரே போர்வைக்குள் தூங்கலாம் (புகாரி 298) 


ஆனால் பைபிளிலோ மாதவிடாய் பெண்ணின் முழு உடலுமே தீட்டு. அவளை தொடுபவனும் மாலைவரை தீட்டுப்படுவான். அவள் படுக்கும் இடமும் அமரும் இடமும் தீட்டுப்படும். அவளது படுக்கையை ,அமரும் ஆசனத்தை தொடுபவனும் மாலைவரை தீட்டுப்படுவான். அவளது ரத்தம் ஒர்த்தன் மேல் பட்டால் அவன் ஏழுநாட்களுக்கு தீட்டுப்படுவான். எவ்வளவு காலம் ரத்தம் வந்துகொண்டிருந்தாலும் அத்தனை காலத்திற்கும் இப்படி அவள் தீட்டுப்படுவாள். இரத்தம் நின்று ஏழாம் நாள் தான் அவள் சுத்தமாவாள் (லேவியராகமம் 15:19-28) இப்படி அவளை ஒட்டுமொத்த அசுத்த பிராணியாக ஆக்கியுள்ளது பைபிள். பன்றி போன்ற அசுத்தமான பிராணிகளை தொட்டால் தோராவின்படி மாலைவரை தீட்டுள்ளது போல இந்த பெண்ணை தொட்டாலும் மாலைவரை தீட்டு.


10.ஆணோ பெண்ணோ அவர்களின் நற்செயலை வீணாக்க மாட்டான். ஒருவர் மற்றவரிலிருந்து உள்ளவர்களே (குர்ஆன் 3:195), ஆணோ பெண்ணோ விசுவாசம் கொண்டு நற்செயல் செய்தால் அவர்கள் சுவர்க்கம் நுழைவார்கள். சிறிதும் அநீதமிழைக்கப்பட மாட்டார்கள்.(குர்ஆன் 4:124 இதேபோல் 16:97, 40:40)


11..இஸ்லாம் திருமணமான பெண்களின் நிலையை சிறைக்கைதிகளுக்கு ஒப்பிடுகிறது. அதாவது திருமணத்தின் மூலம் அவர்களால் இன்னொரு ஆணை விரும்ப முடியாது கணவனுக்கு கட்டுப்பட வேண்டிய நிலையில் உள்ளார்கள் போன்றவற்றினால். ஆகவே அவர்களுடன் நல்லமுறையில் நடந்துகொள்ளுங்கள் என்கிறது (இப்னுமாஜா 1851), அத்துடன் உங்களில் சிறந்தவர் தம் மனைவயரிடம் சிறந்தவரே ஆவார் (இப்னுமாஜா 1978,1977, திர்மிதீ 3895). அத்துடன் பெண்களுடன் நல்லவிதமாக நடந்துகொள்ளுங்கள் ஏனெனில் பெண்ணானவள் (மனிதகுல தாயான ஹவ்வா) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டார். அதன் மேல் பகுதியே மிகவும் வளைந்தது. அதை நேராக்க நினைத்தால் உடைத்துவிடுவாய் (புகாரி 3331). அவர்களுடன் நல்ல முறையில் வாழுங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தால் , நீங்கள் ஒன்றை வெறுக்க கூடும் ஆனால் அதிலே அநேக நலவுகளை இறைவன் ஏற்படுத்தக்கூடும் (குர்ஆன் 4:19)

இஸ்லாம் மனைவியர் கணவனுக்கு கட்டுப்படுவதற்கான காரணமாக பெண்களை குற்றப்படுத்தவில்லை . மாறாக ஆண்கள் மீதே செலவளிக்கும் பொறுப்பை இறைவன் வழங்கியதாலும் , சிலரைவிட சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியதாலும் (உடலாலும் மனதாலும் வேறு விதமாகவும்) தான் (குர்ஆன் 4:34). அனைவரும் ஒரே நிலையில் இருந்தால் குடும்பம் இயங்காது.

ஆனால் பைபிளோ பெண் செய்த பாவத்தினாலே இந்த நிலைமை என்கிறது. அதனாலே அவள் ஆணுக்கு அடங்க வேண்டும் என்கிறது.:

"உன் ஆசை உன் புருஷன் மீதிருக்கும். அவன் உன்னை ஆண்டு கொள்வான்"-ஆதி 3:16) 

ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள். உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும். என்னத்தினாலெனில், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.

1 தீமோத்தேயு 2:11-14



12.மனைவியரை அடிப்பது குறித்து, குர்ஆன் 4:34 மனைவியரை அடிக்க அனுமதிக்கிறது என்பதை குறித்து இவர்கள் குற்றம்சாட்டுவர். இந்துக்களோ கிறிஸ்தவர்களோ வேறு மதத்தவர்களோ தம் மனைவியரை அடிப்பதில்லையா? இஸ்லாம் அடிக்க வேண்டாம் என்று சொன்னாலும் அடிப்பவன் அடிக்கத்தான் செய்வான்.

*இஸ்லாம் பெண்களுக்கு உரிமைகளை சுதந்திரங்களை முன்பே வழங்கி விட்டதால், பெண்ணும் ஆண்களை எதிர்த்து நிற்பர். குடும்ப வாழ்வை கொண்டு செல்வதற்கு ஒருவர் மற்றவருக்கு நல்லவிசயங்களில் கீழ்ப்படிய வேண்டும். அவ்வாறு நடக்காத போது மனைவியை அடிக்க இஸ்லாம் அனுமதிக்கின்றது. எப்படி அடிக்க வேண்டும் என்றும் சொல்கிறது. அதாவது காயம் ஏற்படாமல் இலேசாக அடியுங்கள் என்றே சொல்கிறது. அதுவும் எப்போது என்றும் கூறுகிறது:

அவர்களுடன் நல்லமுறையில் நடந்துகொள்ளுங்கள். அதுவல்லாத முறையில் நடந்துகொள்ள உரிமையில்லை. ஆனால் அவர்கள் தெளிவான ஒழுக்கக்கேட்டை கொண்டு வந்தாலே தவிர. அப்போது அவர்களை படுக்கையை விட்டு ஒதுக்கி வையுங்கள். இலேசாக காயமேற்படாமல் அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு கீழ்படிந்து விட்டால் அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் (இப்னுமாஜா 1851, திர்மிதீ 1163, வேறு வாசகங்களுடன் முஸ்லிம் 2334 (1218a), அபூதாவூத் 1905)

இலேசாக காயமேற்படாதவாறு அடிக்கலாம் என்று சொன்ன நபிகளார், மனைவியின் முகத்தில் அடிக்க கூடாது என்றும் தடைவிதிக்கிறார்கள்.

கணவனின் மீதுள்ள மனைவியின் உரிமையானது, நீ உண்ணும்போது அவளுக்கும் உணவளிப்பதும், நீ ஆடை அணியும்போது அவளுக்கும் ஆடை அணிவிப்பதும், (ஒழுக்கப்படுத்துவதற்காக ) நீ முகத்தில் அடிக்க வேண்டாம், அவளை கேவலப் படுத்த வேண்டாம் , வீட்டிலே தவிர அவளை ஒதுக்க வேண்டாம் (அபூதாவூத் 2142, 2143) (கேவலப்படுத்த வேண்டாம் என்பது, அல்லாஹ் உன்னை கேவலப்படுத்துவானாக என்று சொல்வது என இமாம் அபூதாவூத் கூறுகிறார்)

அத்தோடு மனைவியை அடிக்கிறவர்களை உங்களில் நல்லவர்கள் அல்லர் என்றும் நபிகளார் கூறினார்கள் (அபூதாவூத் 2146)..

 ஆக மனைவியை அடிப்பது காலங்காலமாக இருப்பதுவே. அதை இஸ்லாம் ஒழுங்குபடுத்தியதோடு , பெண்களோடு நல்லமுறையில் நடந்துகொள்ளவும் , அவர்களோடு நல்லமுறையில் நடந்துகொள்வர்களே உங்களில் சிறந்தவர் என்றும் மனைவியரை அவர்கள் முறையிடும்படி அடிக்கிறவர்களை உங்களில் சிறந்தவர் அல்ல என்றும் நல்வழிப்படுத்தியது.

பைபிளிலோ பெண் ஒரு அடக்கப்பட்டே இருப்பதாலும் உரிமைகள் இல்லாதவளாக இருப்பதாலும் அவள் கணவனை எதிர்ப்பதை நினைத்து கூட பார்க்க முடியாது. காரணம் எஜமானுக்கு அடிமைப்பெண் எப்படி நடப்பாளோ அதுவே பைபிளில் அவளது நிலை.

இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள். அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மை செய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்.

1 பேதுரு 3:5-6

மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குக்கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும்.

எபேசியர் 5:22-24



அத்துடன் அவள் அமைதியாகவே அடக்கத்தோடு இருக்க வேண்டும் (1 பேதுரு 3:4, 1 தீமோத்தேயு 2:11-12, 1 கொரிந்தியர் 14:34). இப்படி உரிமை பறிக்கப்பட்ட பெண்ணாக இருப்பதால் அவள் மேலே வரவே மாட்டாள். அத்துடன் அவர்களை அடிக்க கூடாது என்று பைபிளில் எங்கேயும் குறிப்பிடவில்லை.... மனைவியரை அடிக்கும் காலத்தில் அதை பற்றி மௌனமாக இருப்பதென்பதே அதை அனுமதிப்பதாகிவிடும்.

ஆகவே இவர்களுக்கு இந்த நிலையில் இஸ்லாத்தை விமர்சிக்க தகுதியேயில்லை.


13.இஸ்லாம் பெண்களில் அதிகமானோர் நரகவாசிகளாக நபிகளார் கண்டதாக கூறும் ஹதீஸிலே அப்படி நரகம் போவதற்கான காரணம் கூறப்படுகின்றது 

எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலானோர் பெண்களாக இருந்தனர் ஏனெனில் அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர் என்று நபிகளார் சொன்னார்கள். "அல்லாஹ்வையா நிராகரிக்கிறார்கள்" என கேட்கப்பட்டது. அதற்கு, "கணவனை நிராகரிக்கிறார்கள், உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்கு நீ காலமெல்லாம் நன்மையே செய்து கொண்டிருந்து, பின்னர் (அவளுக்கு பிடிக்காத ஒன்றை) கண்டுவிட்டால், உன்னிடம் ஒருபோதும் எந்த நன்மையையும் கண்டதில்லை என்று பேசி விடுவாள்" என பதில் கூறினார்கள்.(புகாரி 29)

வேறொரு ஹதீஸில் அவர்கள் அதிகம் சபிப்பதும் கணவனை நிராகரிப்பதும் என கூறப்பட்டுள்ளது (புகாரி 304)

அதாவது இந்த செயல்களினால் நரகம் போகிறவர்களில் அதிகமானோராக பெண்கள் காட்டப்பட்டனர். அவர்கள் பெண்ணாக இருப்பதால் அல்ல.. மாறாக செயலினாலே அவ்வாறு நிகழுகிறது.

இதன்மூலம் அதிகமாக சபிப்பதையும் கணவனை நிராகரிப்பதையும் கைவிட்டு நரகம் போகாதிருப்பதற்கு நபிகளார் வழிகாட்டுகிறார்கள். 


14.இஸ்லாம் பெண்களின் நலன்கருதி வீட்டிலே இருக்கும்படி கட்டளையிடுகிறது. ஆனாலும் தேவைகளுக்காக அவர்கள் வெளியே செல்லலாம் (புகாரி 147), தன் கால்நடைகளை பராமரிப்பதற்காக உணவு கொண்டுவருவதற்காக தனியாகவும் வெளியே செல்லலாம் (புகாரி 5224), இதன்படி ஆண்-பெண் தனித்திருத்தல் நிலை இல்லாமலும் (புகாரி 3006, 5224) முறையாக ஆடை அணிந்த நிலையிலும் (குர்ஆன் 33:59, 24:31) ,ஆண்களோடு குளைந்து பேசாமலும் (குர்ஆன் 33:32) அனுமதிக்கப்பட்ட தொழில்களில் வேண்டியதை பெண் செய்யலாம்.. பெண் தன் குடும்பத்திற்கு செலவளிப்பதும் தர்மமே அதற்கு இறைவனிடம் கூலி உண்டு.(புகாரி 1466,5369). கணவன் செலவுக்கு தராத போதுகூட அவனது அனுமதியின்றி நியாயமான அளவை எடுத்துக்கொள்ளும் உரிமையும் மனைவிக்கு உண்டு (புகாரி 5359,5364,5370)

ஆனால் பைபிளின் படி வயோதிப பெண்கள் இளவயது பெண்களுக்கு போதிக்கலாம். எதை போதிக்க வேண்டும் என்றால் அவர்கள் வீட்டிலே இருக்கவேண்டும் என்றும் போதிக்க வேண்டும் என்கிறார் பவுல்:

தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்கு பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி, அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு.தீத்து 2:4-5


15.பெண்ணிடம் துர்ச்சகுனம் இருப்பதாக சொன்னதன் விளக்கம்:

இது இரண்டு விதமாக கூறப்பட்டுள்ளது,

1.துர்ச்சகுனம் ஒன்றில் இருப்பதாக இருந்தால், மனைவி வீடு குதிரை ஆகிய மூன்றிலுமே இருந்திருக்கும் (புகாரி2859, 5094,5095,)- இதன் அர்த்தம் எதிலுமே துர்ச்சகுனம் கிடையாது. அவ்வாறு இருப்பதென்றால் இந்த மூன்றிலும் தான் இருக்கும். ஏனெனில் ஒரு ஆணுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பது அவனது மனைவியும் அவன் தங்கும் வீடும் அவன் ஏறிச்செல்லும் வாகனமும் தான்.

2.துர்ச்சகுனம் மூன்று விசயங்களிலேயே இருக்கும். மனைவி ,வீடு , குதிரை (புகாரி 2858,5093,..) இதன் அர்த்தம் ஒரு மனிதனுக்கு கெடுதி ஏற்படுவதெல்லாம் இவர்களால் என்பதல்ல.. ஏனெனில் அனைத்து நலவும் கெடுதியும் இறைவனிடமிருந்தே வரும் (குர்ஆன் 4:78) . மனிதனுக்கு வீடு குறுகலாகவும் அயலவர்கள் தீங்கிழைப்பவர்களாகவும் இருந்தாலோ, மனைவி அதிகம் சண்டைக்காரியாக தீங்கிழைப்பவளாக இருந்தாலோ, வாகனம் அதிக செலவை ஏற்படுத்துவதாகவும் பயனற்றதாகவும் இருந்தால் அதுவே துர்ச்சகுனமென கூறப்படுகிறது. இதற்காக அவற்றை விட்டு அவன் முறையாக பிரிந்துவிடலாம்.. வீட்டையும் வாகனத்தையும் விற்று வேறு வீடும் வாகனமும் வாங்கலாம். மனைவியை விவாகரத்து செய்து வேறு திருமணம் முடிக்கலாம். அம்மனிதனை நிர்ப்பந்தித்து துன்பத்திலேயே இரு என்று கூறுவது நியாயமல்லவே.    

இதுவல்லாமல் நல்ல மனைவி குறித்து, உலகம் பயனளிக்கும் செல்வங்களே. இப்பயனளிக்கும் செல்வங்களிலேயே மிகவும் மேலானது நல்ல மனைவியே (முஸ்லிம் 2911 (715k)), செல்வங்களிலேயே சிறந்தது இறைவனை நினைவுகூறும் நாவும், நன்றி செலுத்தும் உள்ளமும், ஈமான்விசயத்தில் உதவிசெய்யும் முஃமினான மனைவி (திர்மிதீ 3094). மனைவியாகிய அவர்கள் உங்களின் ஆடை. நீங்கள் அவர்களின் ஆடை (குர்ஆன் 2:187). ஆகவே இதிலே ந்லல மனைவி குறித்து விமர்சனம் எதுவுமில்லை.

பைபிளிலும் தீய மனைவி குறித்து,

9.சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம்.

19.சண்டைக்காரியும் கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப்பார்க்கிலும் வனாந்தரத்தில் குடியிருப்பது நலம்.

நீதிமொழிகள் 21:9, 19


நீதிமொழி 27:15 TCV

[15] சண்டைக்கார மனைவி, மழைக்காலத்தில் தொடர்ச்சியான ஒழுக்கைப்போல் இருக்கிறாள்;

https://bible.com/bible/2730/pro.27.15.TCV

*பெண்களின் புத்திக்கூர்மையான ஆலோசனையை மதித்தல்- இஸ்லாத்தில் முகம்மது நபியே மனிதர்களில் ஞானத்தில் உயர்ந்தவராக கருதப்படுகிறார். ஆனாலும் அன்னவர்களே தன் மனைவியின் ஆலோசனைப்படி செயல்பட்டுள்ளார்கள்_ ஹுதைபிய்யா உடன்படிக்கையின்போது (புகாரி 

2731,2732)

*அத்தோடு கணவனின் அருவருப்பான தோற்றம், பாலியல்ரீதியாக திருப்திப்படுத்த இயலாத நபர், ஒழுக்கமில்லாதவர், நியாயமின்றி அடிப்பவர், உணவும் உறையுளும் தராதவர் போன்று அல்லது நியாயமான காரணங்களுக்காக விவாகரத்தை கேட்டுப்பெறும் உரிமையை இஸ்லாம் அன்றே வழங்கியுள்ளது.  இன்றும் நடைமுறையில் உள்ளது... பைபிளில் கற்பழித்தவனுக்கே கழுத்தை நீட்ட வேண்டும் (உபாகமம் 22:28-29)

*கணவன் உறவுக்கு அழைத்து மனைவி மறுத்து, அதனால் அவன் கோபமுற்றவனாக இரவை கழித்தால், வானவர்கள் அவளை சபிக்கிறார்கள் என்ற ஹதீஸை குறித்து,  திருமணத்தின் நோக்கமே விபச்சாரத்தில் விழாமல் இருப்பதற்கு தான் என்றிருக்கும்போது அவள் வீம்புக்காக மறுத்தால் அதற்குரிய நிலையே இது. தகுந்த காரணங்களுக்காக அதை தெளிவு படுத்தி மறுப்பதற்குரிய தண்டனை அல்ல.. அது கூடும்

இதுபோன்று இன்னும் நிறையக் கூற முடியும். இவர்கள் எதை குற்றச்சாட்டாக வைப்பார்களோ அதுவே பைபிளில் கடுமையானதாக கூறப்பட்டிருக்கும்.

இஸ்லாம் அடிமைகளை நடத்தியவிதம்

 இஸ்லாம் அடிமைகளை கண்ணியப்படுத்துகிறதோடு அவர்களை நல்லமுறையில் நடத்துமாறு வழிகாட்டுகிறது 

*அடிமைகள் என்போர் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் தந்துள்ள உங்கள் சகோதரர்கள் என்றும் அத்தகையோருக்கு நீங்கள் உண்ணுவதிலிருந்து உணவளிக்க வேண்டும் என்றும் நீங்கள் அணிவதிலிருந்து அணியக்கொடுக்க வேண்டும் என்றும் அவர்களின் சக்திக்கு மீறிய பணியை கொடுத்து சிரமப்படுத்த கூடாது என்றும் அப்படி கொடுத்தால் அவருக்கு உதவி செய்யட்டும் என்றும் நபிகளார் வழிகாட்டினார்கள் (புகாரி 30,6050, முஸ்லிம் 3417 ,3419, 3420 (1661a,c,1662)

*அடிமைகள் விசயத்தில் இறைவனை அஞ்சிக்கொள்ளுமாறு நபிகளார் கூறியுள்ளார்கள் (அபூதாவூத் 5156,இப்னுமாஜா 2698, அஹ்மத் 585)

*அடிமைக்கு அறைந்தாலோ நியாயமின்றி அடித்தாலோ அவரை விடுதலை செய்வதே அதன் பரிகாரம் (முஸ்லிம் 3408 ,3409 (1657a,b) -

ஆனால் பைபிளில் பல் உடைவதற்கு அடித்தால் தான் விடுதலை செய்யவேண்டும்.அல்லது கண்ணை கெடுத்தால் தான் விடுதலை செய்ய வேண்டும் (யாத்திராகமம் 21:26,27)

*அடிமைக்கு சாட்டையால் அடித்த நபித்தோழரை கண்ட நபிகளார், உமக்கு உம் அடிமை மீது உள்ள அதிகாரத்தை விட , அல்லாஹ்வுக்கு உம்மீது அதிகாரம் உள்ளது என எச்சரித்தார்கள். இதனால் அவர் இனிமேல் அடிமைகளை அடிக்க மாட்டேன் என உறுதி பூண்டார் (முஸ்லிம் 3413 (1659a)) இன்னொரு அறிவிப்பில், நபிகளாரின் எச்சரிப்பை கேட்ட தோழர் தான் அடித்த அடிமையை அல்லாஹ்வுக்காக விடுதலை செய்துவிட்டேன் என கூறினார். அப்போது நபிகளார் அவ்வாறு செய்யாதிருப்பின் உன்னை (மறுமையில்) நரகம் எரித்திருக்கும் என்றார்கள் (முஸ்லிம் 3414 (1659c)

ஆனால் பைபளோ அடிமையை கடுமையாக தாக்கி ஒரு நாளோ இருண்டு நாளோ கழித்து அவன் செத்தாலும் அவனுடைய சொத்து என்பதால் எந்த தண்டனையும் இல்லை. அதே நாளில் செத்தால் மட்டுமே தண்டனை உண்டு (யாத்திராகமம் 21:21-22)

*தன் அடிமை மீது அவதூறு சொன்னவருக்கு மறுமையில் கசையடி தண்டனை நிறைவேற்றப்படும் (புகாரி 6858) என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

*அடிமையை நியாயமின்றி அடித்தால் மறுமையில் அவர் பழிவாங்கப்படுவார் (அதபுல் முஃப்ரத் 181,182,185,186)

*அடிமையின் விசயத்தில் நல்லமுறையில் நடந்துகொள்ளுமாறும், நீங்கள் உண்ணுவதிலிருந்து அவர்களுக்கு உணவும் நீங்கள் அணிவதிலிருந்து அவர்களுக்கு ஆடையும் கொடுக்க வேண்டும் என்றும் அவர்களை வேதனை செய்யக்கூடாது என்றும் இஸ்லாம் கூறுகிறது (அதபுல் முஃப்ரத் 188, 199) அவர்களுக்கு இயலாத வேலையை அவர்கள்மீது சுமத்த கூடாது என்றும் கூறுகிறது (அதபுல் முஃப்ரத் 192)

*பெற்றோர் உறவினர் அயலவருக்கு நலவான உபகாரம் செய்யுமாறு குர்ஆன் கூறுவதில் அடிமைகளையும் இணைத்து அவர்களுக்கும் நல்லுபகாரம் செய்யுங்கள் என்கிறது (குர்ஆன் 4:36

*அடிமைப்பெண்களுக்கும் அடிமை ஆண்களுக்கும் திருமணம் செய்து வைக்குமாறு எஜமான்களுக்கு இஸ்லாம் வழிகாட்டுகிறது (குர்ஆன் 24:32)...  தோராவும் இந்தவிசயத்தை அனுமதிக்கிறது. ஆனால் புதிய ஏற்பாட்டுக்காலத்தில் காயடித்து விடுவார்கள்.  அத்தோடு எவருமே  திருமணம் செய்யாது துறவிகள் போல இருப்பதே நலம் என்கிறது (மத்தேயு 19:10-12, 1கொரிந்தியர் 7:26,28,37,38)

*அடிமைகளை விடுதலை செய்வதை சிறப்பித்து, அவ்வாறு விடுதலை செய்யுமாறும் (புகாரி 1054,2503,6715) ,சம்பாதித்து தன் பெறுமதியை செலுத்தி விடுதலை பெற விரும்பும் அடிமைகளுக்கு அதற்காக வாய்ப்பளிக்குமாறும் இஸ்லாம் வழிகாட்டுகிறது (புகாரி 2492)  ஆண் அடிமை பெண் அடிமை இருவருக்குமே இது பொதுவானது

.. அத்தோடு குற்றப் பரிகாரங்களில் ஒன்றாக அடிமைவிடுதலையை இஸ்லாம் ஆக்கியுள்ளது (உதாரணமாக குர்ஆன் 4:92)

இஸ்ரேலியரான ஆண் அடிமைகள் மட்டும் ஆறு வருடம் அடிமையாக இருந்துவிட்டு விடுதலை பெறலாம் என பைபிள் அனுமதிக்கிறது (யாத்திராகமம் 21:1-6)

*அடிமையாக இருப்பவர் இறைவனுக்குரியவற்றையும் தன் எஜமானுக்குரியவற்றையும் சரிவர நிறைவேற்றினால் அவருக்கு இரண்டு நற்கூலி உண்டு என்பதாக நபிகளார் கூறியுள்ளார்கள். இதை அறிவிக்கும் நபித்தோழர் இதன் சிறப்பினால் ஜிகாது செய்வதும் தாயுக்கு உபகாரம் செய்வதும் இல்லையென்றால் நானும் அடிமையாக இருப்பதை விரும்பியிருப்பேன் என்கிறார் (புகாரி 2548)

*தன் அடிமைப்பெண்ணுக்கு கற்பித்து விடுதலை செய்து அவளை திருமணம் செய்துகொண்டால், அவருக்கு இறைவனிடம் இரு நன்மைகள் உள்ளன என ஊக்குவிக்கிறது (புகாரி 97)

ஆனால் பைபிளோ சொந்த மகளையே அடிமையாக விற்றுப் போடும் உரிமையை தகப்பனுக்கு வழங்கியுள்ளது (யாத்திராகமம் 21:7-10)

*ஆனாலும் அடிமைகள் எஜமானின் சொத்துக்கள் என்பதால், அவர்களை வாங்குவது விற்பது கூடும்.

பைபிளும் புறஜாதியார்களை காலம் காலமாக அடிமைகளாக வாங்கி விற்று அடிமையாக வைத்துக்கொள்ளலாம் என்கிறது (லேவியராகமம் 25:44-46)

ஆகவே பைபிளை விட இஸ்லாம் அடிமைகள் விசயத்தில் சிறப்பாகவே போதிக்கிறது.


மேலும் வாசிக்க இஸ்லாமும் அடிமைப்பெண்களும்

அடிமைப்பெண்களும் முத்ஆ திருமணமும்

 உள்ளடக்கம்

1.விபச்சாரத்திலிருந்து தூரமாக வழிகாட்டும் இஸ்லாம்

2.இஸ்லாமிய நம்பிக்கைப்படி விபச்சாரம் என்பது என்ன?

3.அடிமைப்பெண்களுடன் தாம்பத்திய வாழ்க்கையும் ஒழுங்குமுறையும்

4.முத்ஆ திருமணம்


1.விபச்சாரத்திலிருந்து தூரமாக வழிகாட்டும் இஸ்லாம்


*இஸ்லாம் விபச்சாரத்தை நெருங்கவே வேண்டாம் என்று கூறுகிறது (குர்ஆன் 17:32).

*விபச்சாரத்தில் விழுந்துவிடாதிருக்க,,

 -முதலில் ஆண்களுக்கு பார்வையை தாழ்த்திக்கொள்ளுமாறும் (குர்ஆன் 24:30), பின் பெண்களுக்கு பார்வையை தாழ்த்திக்கொள்ளுமாறும் தம் அலங்காரங்களை அந்நிய ஆண்களுக்கு வெளிப்படுத்த கூடாது என்றும் மறைத்து வைத்துள்ள அலங்காரம் வெளிப்படுவதற்காக கால்களை தட்டி நடக்க வேண்டாம் என்றும் (குர்ஆன் 24:31), ஒரு பெண் அந்நிய ஆணுடன் பேசும்போது குளைந்து குளைந்து கவர்ச்சியாக பேசக்கூடாது என்றும் அவ்வாறு செய்தால் , மனதில் நோயுள்ளவன் ஆசைப்படுவான் என்றும் (குர்ஆன் 33:32), ஒரு பெண்ணுடன் அந்நிய ஆண் (திருமணம் செய்ய தடைசெய்யப்பட்ட ஆண் அல்லது கணவன் அல்லாதவர்) தனித்திருக்க கூடாது (புகாரி 5233,3006), என்றும் தனியாக உள்ள பெண்ணிடம் கணவனின் சகோதரன் செல்வதை கூட மரணத்துக்கு ஒப்பானதாக பார்க்கிறது (புகாரி 5232), அத்துடன் அந்நியச் பெண்ணை (திருமணம் செய்ய தடைசெய்யப்பட்ட உறவினரான பெண் அல்லாதோர் அல்லது மனைவி,தன் அடிமைப்பெண் அல்லாதோர்) தொடுவதை விட இரும்பு ஊசியால் தலை துளைக்கப்படுவது சிறந்தது என எச்சரித்துள்ளது (அல்ஸில்ஸிலதுஸ்ஸஹீஹா 226)

*அத்தோடு விபச்சாரம் செய்துவிட்டால், நிரூபிக்கப்படும் போது திருமணமானவராயின் கல்லெறிவதன் மூலம் மரண தண்டனையும், திருமணமாகாதவராயின் நூறு கசையடிகளும் ஒருவருட ஊர் நீக்கமும் தண்டனையாக கிடைக்கும் (புகாரி 6633,6634).

இவ்வாறு இஸ்லாம் விபச்சாரத்திலிருந்து தற்காத்துக்கொள்ள சகல வழிமுறைகளையும் வழங்கியுள்ளது

2.இஸ்லாமிய நம்பிக்கைப்படி விபச்சாரம் என்பது என்ன?

இஸ்லாம் ஆண்களுக்கு இரண்டுவிதமான பெண்களுடன் குடும்ப வாழ்வில் ஈடுபட அனுமதிக்கிறது. 1.தன் சொந்த மனைவியர் 2.தன்னுடைய வலக்கரம் சொந்தமாக்கப்பட்ட அடிமைப்பெண்கள் (குர்ஆன் 23:5-7, 70:29-31).  இதுவல்லாதவை விபச்சாரமாக கருதப்படும்.

3.அடிமைப்பெண்களுடன் தாம்பத்திய வாழ்க்கையும் ஒழுங்குமுறையும்

தன்னுடைய அடிமைப்பெண் அல்லாத அடிமைப்பெண்ணோடு குடும்பம் நடாத்த வேண்டுமானால் அவர்களை மஹர் கொடுத்து திருமணம் முடித்தே வாழ முடியும் (குர்ஆன் 4:25), 

அவள் தன் மனைவியின் அடிமைப்பெண் என்பதால் திருமணம் செய்யாமல் உறவு கொண்டால் அதுவும் விபச்சாரமாக கருதப்பட்டு தண்டனை வழங்கப்படும் (புகாரி 2290) .. 

அத்தோடு தன் அடிமைப் பெண்ணை வேறொரு அடிமைக்கு திருமணம் செய்துகொடுத்தால், எஜமானுக்கு அவளது மறைவுறுப்புகளை பார்ப்பதை இஸ்லாம் தடுக்கிறது. அதாவது அவளோடு உடலுறவு கொள்ள முடியாது (அபூதாவூத் 496,, மிஷ்காத்துல் மஸாபீஹ் 3111). அவளை விவாகரத்து செய்யும் முழு உரிமையும் அவளது அந்த கணவனையே சாரும்.(முஅத்தா பாடம் 29 ஹதீஸ் 51) அதாவது எஜமானுக்கு அதை தீர்மானிக்க முடியாது. 

(பைபிளிலும் அடிமையானவனுக்கு எஜமான் திருமணம் செய்து வைத்திருந்தால், அவன் விடுதலைபெற்று போவதானால் தனியாக தான் போகவேண்டும். அவனது மனைவியும் பிள்ளைகளும் எஜமானையே சாரும் (யாத்திராகமம் 21:4).

அடிமைப் பெண்கள் என்போர் எஜமானின் சொத்து என்பதாலும் அக்கால நடைமுறையில் இருந்ததாலும் அவர்களுடன் வாழ்வது அனுமதிக்கப்பட்டது. 

இவ்வடிமைகள் போர்களில் கைதிகளாக பிடிக்கப்பட்டு வீரர்களுக்கு பங்காக கிடைப்பார்கள்.,. இதுவே அக்கால அரேபியர்களின் நடைமுறை....

அப்போது கூட இஸ்லாம் நல்லொழுக்கத்தை கற்பிக்கிறது அதாவது: அவ்வடிமை கர்ப்பிணியாக இருந்தால் குழந்தை பிரசவிக்கும்வரையும், கர்ப்பிணி அல்லாத பெண்ணாக இருந்தால் ஒருதடவை மாதவிடாய் ஏற்பட்டு சுத்தமடையும் வரை உடலுறவு வைக்க கூடாது (அபூதாவூத் 2157).

இதேபோல் அடிமையாக இருப்பவரை எஜமானரிடமிருந்து விலைக்கு வாங்கியும் அடிமைகளாக பெறப்பட்டனர். (ஆனால் பைபிளில் மகளையே அடிமையாக விற்றுப் போடலாம் -யாத்திராகமம் 21:7-10)

ஆனாலும்

*  தன் அடிமைப்பெண்ணுக்கு கல்வியை கற்றுக்கொடுத்து, விடுதலை செய்து திருமணமும் செய்துகொண்டால், அத்தகையவருக்கு இறைவனிடம் இருமடங்கு நற்கூலி உண்டு என்பதையும் நபிகளார் கூறியுள்ளார்கள் (புகாரி 97, 3446)

ஆகவே திருமணத்திற்கு வெளியே என்பது தன் சொந்த சொத்தாக உள்ள அடிமைப்பெண்ணை மட்டுமே குறிக்கும். காரணம் உரிமையாளருக்கு உரிமை உண்டே.

பைபிளும் வைப்பாட்டிகளும்

*பைபிள் திருமணத்திற்கு வெளியே வப்பாட்டி வைத்தவர்களை சிறப்பித்து பேசுவதோடு, வப்பாட்டி வைத்துக் கொள்வதை விபச்சாரம் என்றோ அது கூடாது என்றோ பைபிளில் ஒரு வசனம் கூட கிடையாது.

*தேவனின் நண்பரான ஆபிரகாமுக்கு (2நாளாகமம்20:7,ஏசாயா 41:8) மனைவிகள் அல்லாத பல வப்பாட்டிகள் இருந்தனர் (ஆதியாகமம் 25:6)- இந்த ஆபிரகாம் செய்தது தவறு அல்ல என்று அடுத்த அதிகாரமே சொல்கிறது, அவர் தேவனது சொல்லுக்கு கீழ்படிந்து ,அவரது கட்டளைகளையும் நியமங்களையும் பிரமானங்களையும் கைக்கொண்டார் (ஆதியாகமம் 26:4 (ஆங்கிலம் 26:5))

*உரியாவின் மேட்டரை தவிர தப்பே செய்யவில்லை என்றும் , தேவன் அவனுக்கு கட்டளையிட்டதில் ஒன்றையும் விட்டு விலகாமல் அவரது பார்வைக்கு செம்மையானதையே செய்தான் என பைபிள் கூறும் தாவீது (1 இராஜாக்கள் 15:5), பல வப்பாட்டிகளை திருமணத்திற்கு வெளியே வைத்திருந்தார் (2 சாமுவேல் 5:13)

இதேபோல் அநேக பரிசுத்தவான்கள் என கூறப்பட்டவர்கள் வப்பாட்டி வைத்திருப்பவர்களாக பழைய ஏற்பாடு கூறுகிறது. இப்படி வைப்பாட்டி வைப்பதை தவறு என்றோ விபச்சாரம் என்றோ பைபிள் எங்கேயும் சொன்னதில்லை என்பதோடு, தாவீது செய்தவற்றில் உரியாவின் மனைவியிடம் முதல் தடவை விபச்சாரம் செய்தது அவனை கொன்றதை தவிர வேறு பாவமே செய்யவில்லை என கூறி வப்பாட்டி வைத்ததையும் தப்பு அல்ல என்று பைபிளே காட்டிவிட்டது.

இந்த லட்சணத்தில் உரிமையாளன் தன் உரிமைச் சொத்தான அடிமைப்பெண்ணுடன் குடும்பம் நடாத்துவதை குறை சொல்லலாமா?

இஸ்லாம் அடிமைகளை நடாத்தும்விதம்

4.முத்ஆ விசயம்

முத்ஆ என்பது அரபுகள் தூர பயணங்களின் போது கடைபிடித்துவந்த திருமண முறையாகும். 

சொந்த ஊரல்லாத வேறு ஊரில் தற்காலிகமாக இருக்கும் காலத்தில் தற்காலிகமாக அங்கே குறித்த பெண்ணின் சம்மதத்தோடு மணக்கொடை கொடுத்து திருமணம் செய்து கொள்வர். பிறகு தன் தேவை முடிந்து ஊரிலிருந்து வெளியேறும்போது மனைவியிடமிருந்தும் பிரிந்து விடுவர்..

இதை நபிகளார் கைபர் யுத்தத்தின்போது தடை செய்தார்கள் (புகாரி 5115,5523,6961 முஸ்லிம் 2738,2739,2740-2741,3920). 

பிறகு அவ்தாஸ் போரின்போது மூன்று நாட்களுக்கு மட்டும் இத்திருமணத்தை அனுமதித்தார்கள் பிறகு அதை தடை செய்தார்கள்.(முஸ்லிம் 2727) மக்கா வெற்றியின் போது மக்காவிற்கு சென்றவர்களுக்கு சில நாட்களுக்கு அனுமதித்தார்கள். பிறகு தடை செய்துவிட்டார்கள் (முஸ்லிம் 2728,2729),

 குறிப்பாக அப்போது இத்திருமணத்தை மறுமைவரைக்கும் அல்லாஹ் தடைசெய்து விட்டான் என அறிவித்தார்கள் (முஸ்லிம் 2730 &2733-2735,2737)

சில நபித்தோழர்களுக்கு இறுதியாக தடைசெய்த தகவல் கிடைக்காததால், அது கூடும் என கருதி செய்துவந்தனர் (முஸ்லிம் 2724,2725.) 

அதுவும் நிர்ப்பந்தமான நிலையில் தான் என்றே கருதினர் (புகாரி 5116, முஸ்லிம் 2736 ) 

அதை உமர் (ர) தன் ஆட்சியில் மீண்டும் தடைசெய்தார்கள் (முஸ்லிம் 2725,2726 ).

 அப்துல்லாஹ் பின் ஸுபைர் ஆட்சிக்காலத்தில், அவ்வாறு செய்தால் விபச்சாரமாக கருதப்பட்டு கல்லெறி தண்டனை வழங்குவேன் என அப்துல்லாஹ் கூறினார் (முஸ்லிம் 2736).

இதை நன்கு அறிந்த அபூஅம்ரா எனும் நபித்தோழர் இதுபற்றி கூறும்போது ,இஸ்லாத்தின் ஆரம்பத்தில் நிர்ப்பந்தத்திற்குள்ளானவர்களுக்கு மட்டும் செத்த பிராணி, இரத்தம்,பன்றி இறைச்சி அனுமதிக்கப்பட்டது போன்று தான் முத்ஆவும் அனுமதிக்கப்பட்டது என்றும், பிறகு அல்லாஹ் இம்மார்க்கத்தை உறுதியாக்கியதும் தடைவிதித்து விட்டான் என்றார்கள் (முஸ்லிம் 2736).

அத்துடன் முத்ஆ சம்பந்தமான அறிவிப்பை பதித்துவிட்டு இமாம் புகாரி, இந்த திருமணத்திற்கு அனுமதி மாற்றப்பட்டு விட்டது என அலீ (ர) அவர்கள் நபிகளாரிடமிருந்து அறிவித்து தெளிவுபடுத்தியுள்ளார்கள் என புகாரி 5119 இலே இறுதியில் கூறியுள்ளார்கள்.

ஆகவே இது விபச்சாரம் செய்யாமலிருக்க குடும்பத்தவர்களை விட்டும் தூரமாக உள்ளவர்களுக்கு நிர்ப்பந்தமான சூழ்நிலையில் ஒரு மாற்று வழியாக தற்காலிக திருமணம் நடைமுறையில் இருந்தது. அதை நபிகளார் இறுதியில் தடைசெய்துவிட்டார்கள்

 பைபிள் வைப்பாட்டி வைத்தால் கொள்வதையே தடைசெய்யாதபோது, அதைவிபச்சாரமாக கருதாத போது , தற்காலிகமாக திருமணம் செய்ததை விமர்சிக்க தகுதி உண்டா?

அத்தோடு கன்னிப் பெண்ணோடு விபச்சாரம் செய்தால் கூட , தகப்பனுக்கு இஷ்டமில்லாதபோது கன்னியின் மஹரை கொடுத்துவிட்டு போக வேண்டும் என யாத்திராகமம் 22:16-17 சொல்கிறது. விபச்சாரம் செய்த கன்னிப் பெண்ணுக்கு தண்டனையும் கிடையாது. மாறாக உடலுறவுக்கான கூலியை பெற்றுக்கொள்ள சொல்லி , இந்தக்கால விலைமாதுகளின் நடத்தையான போதனையை வழங்கியுள்ளது பைபிள்.

ஆனால் இஸ்லாமோ விபச்சாரம் செய்தால் திருமணமாகாதவராக இருந்தால் நூறுகசையடிகளும் (குர்ஆன் 24:2) திருமணமானவராயின் கல்லெறி தண்டனையும் வழங்குகிறது (புகாரி 6633-6634). இதிலே எது ஒழுக்கமானது? குறைசொல்ல தகுதியுண்டா?

அல்லாஹ் வழிதவறச்செய்கிறான் என்பதன் விளக்கம்

1.மனிதனுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது  --மனிதனுக்கு இறைவன் வழி காட்டியுள்ளான். ஒன்று அவன் நன்றியுள்ளவனாக இருக்கிறான் அல்லது காஃபிராக இருக்கிறான...