இடுகைகள்

ஆகஸ்ட், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அப்போஸ்தலர் நடபடிகள் செய்த திரிபுகள்

படம்
1.யூதாசை பற்றிய தீர்க்கதரிசனம் ¹⁶ "சகோதரரே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவி தாவீதின் வாக்கினால் முன் சொன்ன வேதவாக்கியம் நிறைவேறவேண்டியதாயிருந்தது." ¹⁷ "அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்திலே பங்குபெற்றவனாயிருந்தான்." ¹⁸ "அநீதத்தின் கூலியினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறுவெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று." ²⁰ "சங்கீத புஸ்தகத்திலே: அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக என்றும்; அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என்றும் எழுதியிருக்கிறது." (அப்போஸ்தலர் 1:16-20) முதலிலியே யூதாசு அநீதத்தின் கூலியால் ஒரு நிலத்தை சம்பாதித்தார் என்று 1:18 கூறுகிறது. ஆனால் உண்மையில் மத்தேயுவின் கூற்றுப்படி, யூதாசு நிலத்தை சம்பாதிக்கவில்லை! அவன் முப்பது காசை ஆலயத்தினுள் எறிந்துவிட, அந்நியனை அடக்கம் செய்வதற்கு யூத ஆசாரியர்கள் தான் நிலத்தை சம்பாதித்தனர்.(மத்தேயு 27:5-7) இனி தீர்க்கதரிசனம் பற்றி பார்ப்போம்: "அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது...

இயேசு பற்றிய தீர்க்கதரிசனங்கள்-திரிபுகள் (சுவிசேசங்கள்) பகுதி 1

படம்
பழைய ஏற்பாட்டில் உள்ள அநேக வசனங்களை திரித்து புதிய ஏற்பாட்டில் இயேசுவை பற்றிய தீர்க்கதரிசனங்கள் என எழுதப்பட்டிருக்கின்றன. அவை பற்றி பார்ப்போம் 1.இம்மானுவேல் முன்னறிவிப்பு இயேசு ஒரு கன்னியிடம் பிறப்பார் என்று பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளதாக மத்தேயு எழுதுகிறார்: ²¹ “அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.” ²² தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. ²³ “அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.” ²⁵ “அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான். (மத்தேயு 1:21-23,25) பழைய ஏற்பாட்டில் இதை போய் பார்க்காமலேயே இது இயேசுவுக்கு பொருந்தாததை திணித்து எழுதியுள்ளார் மத்தேயு என புரியும் . ஏனெனில் 1.தேவதூதன் இயேசு என பெயரிடுமாறே யோசேப்புக்கு சொல்கிறார் -(மத் 1:21) 2.யோசேப்பு ...