ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ர) உடனான திருமணமும்,ஜாஉனிய பெண்ணும், ஒழுக்கமாக நடந்த நபிகளாரும்- கிறிஸ்தவ காமப்போதகர்களின் உலரல்களுக்கு மறுப்பு
கிறிஸ்தவ காமுக போதகர்கள் தம்மை ஒழுக்கசீலர்களாக காண்பித்துக் கொண்டு முகம்மது நபியை கொச்சைப்படுத்துவதற்காக இவர்களின் காமம் சொட்டும் விளக்கங்களை நுழைவித்து கொச்சையாக பேசுவதை வழமையாக வைத்திருக்கிறார்கள்.
அதிலே வழமையாக ஆயிஷா (ர) அவர்களை மணந்ததற்கு அடுத்ததாக கீழ் குறிப்பிடும் செய்திகளை ஆசையோடு எடுத்து வைப்பார்கள்
1.ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ர) அவர்களை மணந்ததுடன் சம்பந்தப்படும் கதைகள்
2.ஜாவ்னிய குலத்து பெண்ணுடன் சம்பந்தமான ஹதீஸ்
3.பாதையில் சென்ற பெண்ணை பார்த்துவிட்டு தன் மனைவியிடம் சென்றதாக வரும் ஹதீஸ்
இதை ஒவ்வொன்றாக பார்ப்போம்:
1.ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ர) அவர்களை மணந்ததுடன் சம்பந்தப்படும் கதைகள்
புகாரி 7420 இலே மொழிபெயர்ப்பாளர் 33:37 யார் விசயத்தில் இறங்கியதாக கூறுவதை மொழிபெயர்த்த போது தம்பதியாக இருந்த ஸைத் ஸைனப் விசயத்தில் இறங்கியது என அடைப்புக்குறியுடன் போட்டு விட்டனர். இதை அரைகுறைகள் பிடித்துக்கொண்டு கணவன் மனைவியாக இருந்தபோதே இவ்வசனம் இறங்கியது போன்று தற்குரித்தனமான விவாதங்களில் சித்தரித்தனர். இவற்றுக்கான பதில்
*அரபியில் இவ்வசனம் ஸைனப் மற்றும் ஸைத் விசயத்தில் இறங்கியது என்றே உள்ளது. மொழிபெயர்ப்பாளர் தெளிவாக புரிய வைப்பதற்காக ஸைத் மற்றும் ஸைனப் யாராக இருந்தனர் என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ளும் நோக்கில் "தம்பதியராயிருந்த" என போட்டிருக்கிறார்கள்.
*ஸைத் தன் மனைவியை விவாகரத்து செய்ய விரும்பி நபியிடம் முறையிட்டவராக ஆலோசனை செய்தார். அப்போது நபிகளார் "உன் மனைவியை உன்னோடு வைத்துக்கொள்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!" என்றே சொன்னார் (திர்மிதீ 3212)
இதன்மூலம் ஸைத் தன் விருப்பப்படியே விவாகரத்து செய்தார். நபியின் ஆலோசனைப்படி ஸைத் நடக்கவில்லை என்பதை காட்டுகிறது.
*விவாகரத்து நடந்து ஸைனபின் இத்தா (காத்திருப்புக்காலம் -மூன்று மாதவிடாய் ஏற்பட்டு சுத்தமடையும் காலம்) முடிந்த பின், ஸைதை ஸைனபிடம் அனுப்பியே நபிகளாருக்கு பெண் பேசினார்கள். அதிலே ஸைத் தனக்கு ஸைனபின் மீது மரியாதை அப்போது அதிகரித்துவிட்டது என்கிறார். அதன் பின்பே 33:37இன் இறுதிப்பகுதியான "ஸைத் அவளை விவாகரத்து செய்துவிட்ட பின்னர் உமக்கு அவளை திருமணம் செய்து வைத்தோம்." என்பது இறங்கியது (முஸ்லிம் 2798)
இதன்படி விவாகரத்து முடிந்து, ஸைதுக்கும் அப்பெண் மீது விருப்பம் இல்லாத நிலையில் அவரை வைத்தே நபிகளார் பேசினார்
*இந்த திருமணத்தின் நோக்கம் என்ன என்பதை குர்ஆன் 33:37இன் இறுதிப்பகுதி கூறுகிறது:
"ஏனெனில் முஃமின்களால் வளர்க்கப்பட்டவர்கள் தம் மனைவியரை விவாகரத்து செய்துவிட்டால், அப்பெண்களை (தம் முன்னால் கணவர்களான வளர்க்கப்பட்டவர்களின் தந்தையர்களான) அவரகள் மணந்து கொள்வதில் யாதொரு தடையும் இருக்க கூடாது என்பதற்காகவே. மேலும் இது அல்லாஹ்வின் நடைபெற்று தீரவேண்டிய கட்டளையாகும்" (33:37)
அதாவது சொந்த மகனின் விவாகரத்து செய்த மனைவியரையோ அவனுடைய விதவையான மனைவியரையோ மகனின் தந்தை திருமணம் செய்ய முடியாது (குர்ஆன் 4:23). ஆனால் வளர்க்கப்பட்டவர்கள் அத்தகைய மகன்கள் அல்ல என்பதால், அவர்கள் விவாகரத்து செய்தால் அப்பெண்ணை அந்த நபரை வளர்த்த நபர் முடிப்பதில் தவறில்லை என்பதை செய்வித்து காட்டுவதற்காக நிகழ்ந்ததோடு, இறைவனது கட்டளையும் ஆகும்.
*அத்தோடு குர்ஆன் 33:37 நபிகளாரை கண்டிக்கிறதாகவும் உள்ளது. அதாவது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை நீர் மனிதர்களுக்கு பயந்து மறைத்தீர் என கண்டிக்கிறது. (மனிதர்கள் குறை கூறுவார்கள் என்ற அச்சம். அல்லாஹ் வெளியாக்க இருந்தது இந்த திருமணம்). இதனால் தான் நபிகளார் தனக்கு இறங்கிய வசனத்தில் ஏதாவதொன்றை மறைப்பார் என்றால் இதை மறைத்திருப்பார் என ஆயிஷா அவர்களே கூறுகிறார்கள் (புகாரி 7420).
எவரும் தன் இச்சைக்கு இப்படி தன்னை கண்டித்து இட்டுக்கட்ட மாட்டார் அல்லவா?
இதிலே வளர்ப்பு மகனின் மனைவியை அபகரித்தது என்று கூற எந்தவித நியாயமும் இல்லை.
(ஒரு பேச்சுக்காக இதுபற்றி வரும் சாட்சிகளற்ற அறிவிப்புகளை உண்மையென கருதினாலும்,, அவற்றிலே நபிகளார் தற்செயலாக ஸைனபை பார்த்ததாகவும் அதனால் ஈர்க்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. ஈர்க்கப்படுவதற்கு காரணம் ஹோமோன்களே. அதனால் அவரை குற்றப் படுத்த முடியாது. அப்போதுகூட நபிகளார் தம் தலையை தாழ்த்திக்கொண்டு "உள்ளங்களை திரும்பக் கூடியவன் தூயவன்" என கூறிக்கொண்டே சென்றுவிட்டார் என்றே அவை கூறுகின்றன. (இவர்கள் புழுகுவது போன்று எதுவுமே இல்லை!). அதன் பின்பு ஸைத் ஸைனப் இருவருக்கும் ஒருவரையொருவர் வெறுப்பு உண்டாகிவிட்டது என்றும் அதனால் ஸைத் விவாகரத்து கோர ஆலோசனை கேட்டு நபிகளாரிடம் வந்தார் என்றும் நபிகளார் வேண்டாம் என்று கூறியும் ஸைத் விவாகரத்து செய்தார் என்றும் பிறகு குர்ஆன் 33:37 இறங்கியதாகவும் அவை கூறுகின்றன.
இந்த கதைகளின் படி கூட, இறைவனின் இந்த திருமணக் கட்டளை நிறைவேறுவதற்காக நபியிற்கு விருப்பம் ஏற்பட வேண்டும் என்பதற்காக நிகழ்ந்த நிகழ்வாகவே கூறப்படுகிறது. ஆனாலும் இவை அடிப்படையற்றவை ஆகும்.)
இதிலே எது எப்படி இருந்தாலும் விமர்சிக்கப்பட எந்த குறையும் இதிலே கிடையாது!!!
!
நமது எதிர்வாதம்:
*பைபிளிலே தாவீதை திருப்திப்படுத்த அவரது ஆண்டவரின் மனைவிகளையும் தேவனே மடியில் கொடுத்தார்:
சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 12:8 TAERV
[8] நீ அவனது குடும்பத்தையும் அவனது மனைவியரையும் எடுத்துக்கொள்ளுமாறு நான் செய்தேன். நான் உன்னை இஸ்ரவேல், யூதா ஜனங்களுக்கு ராஜாவாக்கினேன். அது போதாதென்று உனக்கு இன்னும் அதிகமதிகமாகக் கொடுத்தேன்.
https://bible.com/bible/3154/2sa.12.8.TAERV
(வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பில் உன் ஆண்டவனின் மனைவிகளை உன் மடியில் கொடுத்தேன் என உள்ளது. ஒரு பெண்ணை மடியில் கொடுத்தல் என்பது மனைவியாக கொடுப்பதையே குறிக்கும் :
ஆதி 16:5 IRVTam
[5] அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: “எனக்கு நேரிட்ட அநியாயம் உம்மேல் சுமரும்; என்னுடைய அடிமைப்பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக நினைக்கிறாள்; யெகோவா எனக்கும் உமக்கும் நடுநிலையாக நியாயந்தீர்ப்பாராக” என்றாள்.
https://bible.com/bible/1899/gen.16.5.IRVTam
(சும்மா பராமரிக்க கொடுப்பதற்கு தாவீது என்ன சுதந்திர போராட்ட தியாகியா? அதை தேவன் செய்தால் எப்படி உபகாரம் என கருத முடியும்??)
*இதே தாவீது உரியாவின் மனைவியை கள்ளத்தனமாக கர்ப்பமாக்கியதால் , அக்குழந்தையை தண்டித்தார். ஆனால் அவளை இவர்கள் பாசையில் சொல்வதென்றால் ஆட்டையப் போட்டு புணர்ந்த போது பிறந்த குழந்தையை தேவன் நேசித்தார் -2 சாமுவேல் 12:14-15,24
2 சாமு 12:14-15, 24 IRVTam
[14] ஆனாலும் இந்த சம்பவத்தால் யெகோவாவுடைய எதிரிகள் இழிவாகப் பேச நீ காரணமாக இருந்தபடியால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாக சாகும் என்று சொல்லி, நாத்தான் தன்னுடைய வீட்டிற்குப் போய்விட்டான். [15] அப்பொழுது யெகோவா உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாக இருந்தது.
[24] பின்பு தாவீது தன்னுடைய மனைவியான பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி, அவளிடத்தில் போய், அவளோடு உறவுகொண்டான்; அவள் ஒரு மகனைப்பெற்றாள்; அவனுக்குச் சாலொமோன் என்று பெயரிட்டான்; அவனிடம் யெகோவா அன்பாக இருந்தார்.
https://bible.com/bible/1899/2sa.12.14-24.IRVTam
இது தாவீதின்மீது பரிசுத்த ஆவியானவர் வந்து இறங்கிய பின்பே நடந்தது. (1 சாமுவேல் 16:13)- ஆவியானவர் உள்ள போதே காமம் தலைக்கேறி குளிக்கும் பெண்ணை பார்த்துவிட்டு படுக்கையறைக்கு அழைப்பித்து விபச்சாரம் செய்தார் (2 சாமுவேல் 11:2-4) என்பதை இது காட்டுகிறது
இதற்காக தேவனோ தாவீதின் மனைவியை பக்கத்திலிருப்பவனுக்கு கொடுத்து இஸ்ரவேலர் பார்க்க பட்டப்பகலில் விபச்சாரம் செய்விப்பதாக சொல்கிறார் (2 சாமுவேல் 12:11-12)-ஃபிலிம் எடுக்கிறாரா?
இப்படி கள்ள உறவை சட்டபூர்வமாக ஆட்டையப் போட்டபோது தேவன் தன் நேசரின் செயலை கண்டிக்காமல் ஆதரித்தார். பிறகு அவரை உத்தமன் என்று வேறு சொல்கிறார் (1 இராஜாக்கள் 15:5)
இதை வைத்துக்கொண்டு, சட்டத்தை நிறைவேற்றுவதற்கு நபிகளார் செய்ததை விமர்சிக்கலாமா
அத்தனைக்கும் ஆவியானவர் இறங்கிய பின் விபச்சாரம் செய்ததும், ஆவியையுடைய தேவனே அவரது மனைவியரை விபச்சாரம் செய்விப்பேன் என சொல்வதும் எதையோ சொல்கிறது. ஆவி தானே பிரச்சினை

கருத்துகள்
கருத்துரையிடுக