பைபிளின் பார்வையில் பலதாரமணம்!
பைபிளில் பலதாரமணம்
Polygamy in the bible
உலகெங்கிலும் அதிவேகமாக பரவி வரும் இஸ்லாமிய மார்க்கத்தின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள இயலாத யூத கிறிஸ்தவர்கள் எப்படியாவது இதன் வளர்ச்சியை தடுத்திட வேண்டும் என்ற நோக்கில் இஸ்லாத்தின் மீது அதிகமான அவதூறுகளையும் விஷம பிரச்சாரங்களையும் பரப்பிவருகின்றனர்.அதில் ஒன்று தான் கிறிஸ்தவர்களில் அதிகமானோர் விமர்சிக்கும் ஒரு விஷயம் இஸ்லாமிய மார்க்கம் ஆண்கள் ஒன்றிற்கு மேற்பட்ட திருமணங்கள் செய்ய அனுமதி அளித்துள்ளது,இது பாவம் என்கின்றனர்!
முதலில் இவர்கள் தங்களின் வேதம் இதைப்பற்றி என்ன கூறுகிறது என்று விளங்கினால் இவ்வாறு கூறமாட்டார்கள் !
பலதாரமணம் குறித்து பைபிளின் கருத்து என்ன?
இது பற்றி சற்று பார்க்கலாம் !
√ ஒட்டுமொத்த பைபிளிலும் ஒரேயொரு வசனம் கூட பலதாரமணத்தை கண்டிப்பதாக எங்குமே இல்லை !
இன்னும் சொல்லப்போனால் கர்த்தரே பல திருமணங்கள் செய்து வைத்ததாக பைபிள் கூறுகிறது:
*கர்த்தர் ஆதரித்த பலதாரம்:
¤கர்த்தர் தாவீதுக்கு பல பெண்களை தானே மணமுடித்து கொடுத்தேன் என்கிறார்.
II சாமுவேல் 12:8
"உன் ஆண்டவனின் வீட்டை உனக்கு தந்து, உன் ஆண்டவனின் மனைவிகளை உன் மடியில் தந்து....., இது போதாதிருந்தால் இன்னும் உனக்கு வேண்டியதை தருவேன்."
மடியில் ஒரு பெண்ணை கொடுப்பதென்பது அவளை மனைவியாகவோ வப்பாட்டியாகவோ கொடாப்பதையே குறிக்கும். அவ்வாறே சாராள் ஆகாரை ஆபிரகாமின் மடியில் கொடுத்ததாக ஆதியாகமம் 16:5 கூறுகிறது
• பாவமான காரியமாயிருந்தால் அதை கர்த்தரே செய்திருப்பாரா?
¤ இரண்டு மனைவியுடையவர் அந்த இரண்டு பேருடனும் நீதமாக வாழனும் என்கிறார் கர்த்தர்.!
(உபாகமம் 21:15)
• ஒன்றிற்கு மேற்பட்ட மனைவியுடன் வாழ்வது தவறென்றால் அதை கண்டிக்காமல் கர்த்தர் அதற்கு நெறிமுறைகள் கொடுத்தது ஏன் ?
¤ யுத்தகளத்தில் கைதியான பெண்ணிடம் உன் மனதை பரிகொடுத்தால் அவளையும் முடிக்கலாம்.
(உபாகமம் 21:10-14)
இவ்வசனம் தெளிவாக நேரடியாகவே பலதாரமணத்தை ஆதரிக்கிறது.ஏனெனில் போரில் திருமணம் ஆன ஆகாத எவரும் இருப்பர் இந்நிலையில் இச்சட்டம் மூலம் ஏற்கனவே திருமணமானவன் இதை செய்தால், அது அவனுக்கு பலதாரமாகவே அமையும்!
¤ ஒருவன் கன்னி பெண்ணை கற்பழித்தால், 50 SHekel (287.5 gram) வெள்ளியை அவளின் தந்தைக்கு கொடுத்துவிட்டுஅவன் அவளை கல்யாணம் முடிக்க வேண்டும்.
(உபாகமம் 22:28,29)
ஏற்கனவே கல்யானமானவன் இதை செய்தால், இதுவும் பலதாரமாகவே அமையும்!!
பல கன்னிகளை கற்பழித்தால் பல மனைவி.!!
¤சகோதரர்கள் ஒன்றாக வசிக்கும் போது, ஒருவன் பிள்ளை இல்லாமல் செத்து போனால், அவனின் மனைவியை சகோதரன் திருமணம் செய்து கொண்டு , மூத்த பிள்ளைக்கு செத்தவனின் பெயரை வைக்க வேண்டும்.
(உபாகமம் 25:5,6)
இவன் திருமணமானவனாக இருந்தால், அண்ணீ உடன் சேர்த்தால் பலதாரமாகவே அமையும்!
Note: அண்ணீயை அவன் மணமுடிக்காவிட்டால், அவனை நடு வீதியில் நிற்க வைத்து, அவனுடைய மூஞ்சியில் காரி துப்பி செருப்பை கழட்டி அடிக்க வேண்டும்.(உபா 25:6-9)
இங்கே,அவனுக்கு அதை கர்த்தர் கட்டாயமாக்குகிறார்!
¤ஒருவன் தன் மகளை அடிமையாக விற்று போட்டால், அவளை வாங்குபவன், அவளை கட்டி கொள்ள வேண்டும் or தன் மகனுக்கு கொடுக்க வேண்டும்.
(யாத்திராகமம் 21:7-10)
அவ்வாறு அவளை அந்த கிழவன் தனக்கு முடித்து கொண்டால் அதுவும் பலதாரமே!!
இவையெல்லாம் பலதார திருமணத்தை கர்த்தர் ஆதரித்ததற்கான ஆதாரம்!!
இனி பைபிளில் பலதார திருமணம் செய்தோர்:
¤லாமேக் 2 மனைவி.
(ஆதி 4:19)
¤ஆப்ரஹாம் சாரா கேதுரா ஆகாரர் + பல மறுமனையாட்டிகள்.
(ஆதி 16:3 25:6)
¤ஏசாவுக்கு 3 மனைவி.
(ஆதி 36:2,3)
¤யாகோபு 2 மனைவி + மனைவியின் 2 வேலைகாரி.
(ஆதி 29:26-31 30:4,9)
¤தாவீதுக்கு 8 மனைவி + பல (10) மறுமனையாட்டி.
(II சாமுவேல் 3:2-14 11:2-27 20:3)
இது தவிர அவருடைய ஆன்டவனின் பொண்டாட்டிகளையும் நானே அவருக்கு கொடுத்தேன்.(II சாமுவேல் 12:8)
தாவீது உரியாவின் மனைவியை தூக்கியதை தவிர வேறு பாவம் செய்யவில்லை.(I இராஜாக்கள் 15:5)
¤solomon 700 மனைவி 300 மறுமனையாட்டி.(1 இராஜாக்கள் 11:3)
(சாலமோன் விசயத்தில் புறஜாதி பெண்களை முடித்ததை குறித்து மட்டும் கண்டிக்கப்படுகிறது. அதனால் அவர் சிலை வணக்கத்தை ஆதரித்ததாக பைபிள் அவதூறு சொல்கிறது. 1 இரா 11:2-9... அப்போது கூட பலதாரமணத்தை கண்டிக்காமல் அந்நிய தேவர்களை பின்பற்ற வேண்டாம் என்பதை மட்டுமே கர்த்தர் தரிசனமாகி கூறினார் 1 இரா 11:9)
¤Rehoboam 18 மனைவி.(II Chronicles 11:21)
¤எல்கானா 2 மனைவி.(I Samuel 1:1,2)
. . .
இல்லை, பைபிள் அதனை கண்டிக்கிறது என சில கிறிஸ்தவ அன்பர்கள் சில வசனங்களை மேற்கோள் காட்டுவர் அவைகலையும் பார்க்கலாம் :-
* Malachi 2:14-16 கு பதில்:
இந்த வசனம் பலதார மணத்தை தடுப்பதாக பல கிறிஸ்தவர்கள் பிதற்றுகிறார்கள்.
ஆனால் Mal 2:11-13 இன்படி இது அந்நிய தேவதைகளின் குமாரத்திகளை முடிப்பதை தான் இவை சொல்கின்றன.
மேலும், Mal 2:14,15 உன் இளவயது மனைவிக்கு துரோகம் பண்ணாதே என்கின்றன!
Mal 2:16 இன்படி துரோகம் என்பது இளவயது மனைவியை விவாகரத்து செய்வதையே குறிக்கிறது!
*மனைவி என்று ஒருமையில் நீதிமொழிகள் 5:18-19, சங்கீதம் 128:3, மல்கியா 2:15 போன்றவற்றில் பாவிக்கப்பட்டிருப்பதால், கர்த்தர் பலதாரமணத்தை ஆதரிக்கவில்லை என நினைக்கிறார்கள்.
இங்கே ஒருமையில் பாவிக்க காரணம், அனைவரும் பலதாரமணம் செய்வதில்லை என்பதாலும் குறைந்த பட்சம் ஒரு மனைவியையாவது உடையவனாக இருப்பான் என்பதால் தான்.
மற்றபடி கர்த்தரே அதற்கான சட்டத்தை உபாகமம் 21:15-17 கொடுத்துள்ளதோடு, தாவீதுக்கு ஆண்டவரின் மனைவிகளை மடியில் கொடுத்து (2 சாமுவேல் 12:8), தாவீது மேலதிகமாக பாத்சபாவை மனந்திருந்தி சேர்த்துக்கொண்டு மீண்டும் உடலுறவுக்கு பின் சாலமோனை பெற்ற போது , அவர் அதை வெறுக்காமல் குழந்தையை நேசித்தார் (2 சாமுவேல் 12:24). அத்தோடு தாவீதுக்கு ஏற்கனவே பல வப்பாட்டிகளும் மனைவிகளும் இருந்துள்ளனர் (2 சாமுவேல் 5:13-14). அவை அனைத்தையும் சேர்த்தே , தாவீது உரியாவின் விசயத்தில் தவிர வேறு எந்த பாவமும் செய்யாமல் கர்த்தருக்கு ஏற்றபடி நடந்தான் என 1 இராஜாக்கள் 15:5 கூறுகிறது
(ஆனாலும் ஒரு இராஜா தன் இதயம் பின்வாங்கும் அளவுக்கு அதிகமாக பெண்களை மணக்க கூடாது- உபாகமம் 17:17..... இதயம் பின்வாங்காத அளவுக்கு முடித்துக் கொள்ளலாம்)
*கர்த்தர் பழைய ஏற்பாட்டில் இதை கண்டிக்கவில்லை ,புதியதில் இயேசுவாவது தடுத்தாரா?
இயேசு கூட எங்கும் பலதார மணத்தை தடுத்ததில்லை!
தன் மனைவியை விவாகரத்து செய்து வேறு திருமணம் செய்வதையும், விவாகரத்து செய்யபட்டவளை முடிப்பதையுமே விபச்சாரம் என்கிறார். பலதாரமணத்தை அல்ல! இது கூட மூடத்தனமான போதனையே! கணவனுக்கு ஆண்மையில்லை என்பதற்காகவோ, குடிகாரன் என்பதற்காகவோ விவாகரத்து கோருவதும் விபச்சாரமாம்!!
இன்றைய கிறிஸ்தவ கோட்பாட்டின் முக்கிய புள்ளி பவுல் அவராவது தடுத்தாரா?
I தீமோத்தேயு 3:2,12 தீத்து 1:6 இல் Church ல இருக்கும் கண்கானி, உதவியாளனின் தகைமைகளில் ஒன்றாக ஒரு மனைவியுடையவனாயிருத்தல் வேண்டும் என்றே பவுள் சொல்கிறார்!
இது பொதுவாக கூறப்படவுமில்லை!
இப்படி கூற காரணமே அந்த காலத்தில் பல மனைவியுடையவர்கள் இருந்தனர் என்பதாலும், அத்தகையவர்களால் இந்த பொறுப்புகளை நிறைவேற்ற முடியாது என பவுல் கருதியதாலும் தான்.
மற்றபடி திருமணம் முடிக்காமல் இருப்பது சிறந்தது (1 கொரி 7:26,27,40) என்று சொன்ன பவுல் , பலாதரமணம் பண்ண வேண்டாம் என எங்கும் கூறப்படவில்லை
Nehemiah 13 Deuteronomy 17:17 என்பன வேறு கடவுளை வணங்கும் பெண்களை மணமுடிப்பதையும், ராஜாவின் மனம் பின்வாங்கும் அளவுக்கு அதிகமாக முடிக்க கூடாது!! இது தவிர பொதுமக்கள் தாராளமாக முடிக்கலாம்! அதிகம் என்பது கட்டுபடுத்த முடியாத அளவே. இது ஆளுக்காள் வேறுபடும்!
*பலதார மணம் பற்றிய பைபிளின் முன்னறிவிப்பு
அந்நாளில் 7 பெண்கள் ஒரே ஆணை பிடித்து நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தை புசித்து எங்கள் சொந்த வஸ்திரத்தை உடுப்போம். எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன் பெயர் மட்டும் எங்கள் மேல் விளங்கட்டும் என்பார்கள்.
[ஏசாயா 4:1]
எனவே இதை தவறு என்பது தேவனை தூசிப்பதாகும்.
*பைபிளின் கூற்றுப்படி பெண்களுக்கு கணவன் இல்லாது போனால் அவளது நிலை⁉
1. சொந்த அப்பனோடு கூட தவறான உடலுறவு வைக்க தயங்க மாட்டார்கள்.
[ஆதி 19:31-36]
2. சொந்த மாமனாரொடு கூட உடலுறவு வைக்க தயங்க மாட்டார்கள்.
[ஆதி 38:14-19]
3. இளவயது விதவைகளுக்கு கூட காம விகாரம் கொன்டு திருமணம் முடிக்க மனதாவார்கள் என்று பவுள் வாக்க்குமூலம் கொடுக்கிறார்.
[I தீமோத்தேயு 5:11]
விதவைக்கே காமவிகாரம் தூண்டினால் கன்னிகளுக்கு தூண்டாதா? சிந்திக்கவும் இது பரிசுத்த ஆவி தூண்டியது தானே>
இதற்கு தான்யா பைபிளை படிச்ச்சுட்டு வாதம் வைங்க என்று சொல்றோம்.
இவையெல்லாம் பார்க்காமல் இஸ்லாமிய மார்க்கத்தை விமர்சிப்பது மல்லாக்க படுத்து எச்சில் துப்பும் கதை தான் !
√ பலதார மணம் இஸ்லாத்தில் சரியானதா?
(4:3) நான்கு மனைவியர் வரை திருமணம் செய்ய ஆண்களுக்கு அனுமதி வழங்குகிறது.
இது பெண் களுக்கு இழைக்கப்படும் அநீதி எனப் பரவலாகக் கருதப்படுகிறது. இது பற்றி சரியாக ஆய்வு செய்தால் இஸ்லாம் இவ்வாறு அனுமதித்திருப்பதன் நியாயத்தை உணர முடியும்.
முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள் என்பதால் இது பெண்களுக்கு இழைக்கப் படும் அநீதி என்று கருதப்படுகிறது.
முதல் மனைவி பாதிக்கப்படுவாள் என்பது உண்மை தான்.
இன்னொரு பெண்ணை இரண்டா வதாக மணப்பதால் மட்டும் முதல் மனைவி பாதிக்கப்பட மாட்டாள். மணக்காமல் வைப்பாட்டியாக வைக்கும் போதும், கணவன் பல பெண்களிடம் விபச்சாரம் செய்யும் போதும் முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள். இன்னொரு பெண்ணை மணப்பதால் ஏற்படும் பாதிப்பை விட இது அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும். பல பெண்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்கள் மூலம் நோயைப் பெற்று முதல் மனைவிக்குப் பரிசளிக்கும் கூடுதலான பாதிப்பு இதனால் முதல் மனைவிக்கு ஏற்படுகிறது.
இரண்டாம் திருமணத்தை எதிர்ப்பவர் கள் வைப்பாட்டி வைப்பதையும், விபச்சாரத்தையும் சட்டப்பூர்வமாகத் தடுக்க வேண்டும். பலதார மணத்தை மறுக்கும் எந்த நாட்டிலும் (நமது நாடு உள்பட) விபச்சாரத்துக்கோ, வைப்பாட்டி வைத்துக் கொள்வதற்கோ தடை இல்லை. அது குற்றமாகவும் கருதப்படுவதில்லை.
பெண்ணுரிமை பாதிக்கிறது என்பது தான் பலதார மணத்தை எதிர்க்கக் காரணம் என்றால் சின்ன வீட்டையும், விபச்சாரத்தையும் சட்டப்பூர்வமான குற்றம் என்று அறிவிக்க வேண்டும்.
சின்ன வீடு வைத்துக் கொள்ளும் ஆண்களையும், விபச்சாரம் செய்யும் ஆண்களையும் தடுக்க முடியவில்லை. இன்னொருத்தியின் கணவன் என்று தெரிந்தும் அவனைக் கைக்குள் போடும் பெண்களையும் தடுக்க முடியவில்லை என்பதால் தான் 'சட்டப்பூர்வமான மனைவி என்ற தகுதியை வழங்கி விட்டு குடும்பம் நடத்து' என்று இஸ்லாம் கூறுகிறது.
திருமணம் ஆகாமல் பெண்கள் கர்ப்பமடைவதும், கைவிடப்படுவதும் மலேசிய இந்து சமுதாயத்தில் அதிகமாகி வருவதைக் கண்டு அங்குள்ள இந்துக்கள் பலதார மணத்தைத் தங்களுக்கும் அனுமதிக்குமாறு போராடி வருகின்றனர். (மலேசிய நண்பன் நாளிதழ் - 05.01.2002)
பலதார மணத்தை இஸ்லாம் அனுமதிப்பதற்குப் பல நியாயமான காரணங்கள் உள்ளன.
1. திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த பெண்கள் திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த ஆண்களை விடப் பல மடங்கு அதிகமாக உள்ளனர். ஏனெனில் பெண்கள் ஆண்களை விட சுமார் 10 வருடங்களுக்கு முன்பே திரு மணத்திற்குத் தயாராகி விடுகின்றனர்.
2. ஆண்களை விட பெண்களே மக்கள் தொகையில் அதிகமாக இருக்கிறார்கள்.
3. இறப்பு விகிதத்தில் ஆண்களை விட பெண்கள் குறைவாக இருக்கிறார்கள்.
4. போர்க் களங்களில் இளம் மனைவியரின் கணவர்கள் கணிசமான எண்ணிக்கையில் மாண்டு வருகின்றனர்.
5. பெரும் எண்ணிக்கையிலான பெண்களுக்கு மண வாழ்வு கிடைக் காததால் விபச்சாரம் பெருகி வருகிறது.
6. பெண்களுக்குத் திருமணம் செய்து கொடுப்பதற்காக பெரும் தொகையை வரதட்சணையாகக் கொடுக்கும் அவலமும் அதிகரித்து வருகிறது.
7. வரதட்சணை கொடுக்க இயலாத வர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயிருடன் கொலை செய்வதும், கருவிலேயே சமாதி ஆக்குவதும் அன்றாட நிகழ்ச்சிகளாகி வருகின்றன.
8. திருமண வாழ்வைப் புறக்கணிக்கும் பிரம்மாச்சாரிகளும் ஆண்களின் பற்றாக் குறையை மேலும் அதிகரிக்கிறார்கள்.
9. பெற்றோரால் வரதட்சணை கொடுத்துத் திருமணம் செய்து தர முடியாது என்பதை உணரும் இளம் பெண்கள் தாமாகவே வாழ்வைத் தேடிக் கொள்வதாக எண்ணி ஏமாந்து கற்பிழந்து வருகின்றனர்.
10. தனக்குத் திருமணம் நடக்காது என்றெண்ணி தற்கொலை செய்யும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர்.
இது போன்ற நியாயமான காரணங்களின் அடிப்படையிலும், ஆண்கள் விபச்சாரத்தில் விழுவதைத் தடுப்பதற்காகவும் இஸ்லாம் பலதார மணத்தை அனுமதிக்கிறது.
இதனால் பல பெண்களுடன் தொடர்பு வைப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்பது தான் யதார்த்த நிலை.
ஏனெனில் திருமணம் எனும் போது பொறுப்புகளைச் சுமக்க வேண்டியிருப்ப தால் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஆண்கள் மட்டுமே பலதார மணத்தை நாடுவர்.
விபச்சாரத்திற்கோ, சின்ன வீடு வைத்துக் கொள்வதற்கோ எவ்விதப் பொறுப்பையும் சுமக்க வேண்டியதில்லை என்பதால் ஆண்கள் சீரழியும் நிலைமை தான் உருவாகும்.
மேலும் இது போன்ற தகாத உறவுகள் மூலம் பாலியல் நோய்களைத் தானும் பெற்று, தனது மனைவிக்கும் பரிசளிக்கும் அவலங்களும் அதிகரிக்கும்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக பலதார மணம் செய்யுமாறு இஸ்லாம் கட்டளை ஏதும் பிறப்பிக்கவில்லை.
தேவையுள்ளவர்களுக்கு அனுமதி மட்டுமே வழங்கியுள்ளது.
இரண்டாம் தாரமாகவாவது ஒரு கணவன் கிடைத்தால் போதும் என்ற நிலையில் ஏராளமான பெண்கள் இருப்பது பலதார மணத்தின் நியாயத்தை உணர வைக்கிறது.
ஆணுக்கு அனுமதிப்பது போல் பெண்ணுக்கும் பலதார மணத்தை அனுமதிக்க வேண்டுமென்று சிலர் கூறுகின்றனர்.
இது ஏற்க முடியாத வாதமாகும்.
மேலே நாம் சுட்டிக் காட்டிய காரணங்களில் எதுவும் பெண்களுக்குப் பொருந்தாது. பெண்களுக்குப் பலதார மணத்தை அனுமதித்தால் மேலே சொன்ன தீய விளைவுகள் மேலும் அதிகரிக்கும்.
எனவே, பெண்களுக்குப் பல கணவர்களை அனுமதிக்க நியாயமான ஒரு காரணமும் இல்லை.
மாறாகப் பெண்ணுக்கும் இந்த அனுமதி வேண்டும் என்போரின் விருப்பப்படி அனுமதிப்பதனால் விபரீ தங்களும், கேடுகளும் தான் ஏற்படும் என்பதையும் நாம் உணர வேண்டும்.
ஒரு ஆண் நூறு பெண்களுடன் ஒரு ஆண்டு தனித்து விடப்பட்டால் அந்த நூறு பெண்களும் நூறு குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும்!
ஒரு பெண் நூறு ஆண்களுடன் தனித்து விடப்பட்டால் அவளால் நூறு குழந்தைகளைப் பெற முடியுமா?
ஒரு ஆணுக்குப் பல பெண்கள் மூலம் பத்துப் பிள்ளைகள் பிறந்தால் அந்தப் பத்துப் பிள்ளைகளின் தந்தை யார்? தாய் யார்? என்பதை அறிந்து கொள்ள முடியும்.
பல ஆண்களிடம் உறவு வைத்துள்ள ஒரு பெண் பெற்றெடுக்கும் ஒரே ஒரு பிள்ளைக்குத் தாய் யார்? என்பது தான் தெரியுமே தவிர, தந்தை யார்? என்பதை அறிந்து கொள்ள முடியாது.
இந்த நிலையை விட அந்தக் குழந்தைக்கு வேறு கேவலம் எதுவுமிருக்க முடியாது. இது போல் உருவாகக் கூடிய, தகப்பன் யார் என்று தெரியாத சந்ததிகள் உள்ளம் நொறுங்கி மனோ வியாதிக்கு ஆளாவார்கள்.
ஒரு ஆண் நான்கு மனைவிகள் மூலம் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தால் அந்த நான்கு குழந்தை களையும் பராமரிக்கும் பொறுப்பை அவன் தலையில் சுமத்தி விடலாம். அந்தக் குழந்தைகளுக்கு ஆகும் செலவுகளைக் கொடுக்குமாறு அவனை நிர்பந்திக்க முடியும்.
ஆனால் ஒரு பெண் நான்கு ஆண்களுடன் கூடிப் பெற்றெடுக்கும் ஒரு குழந்தைக்கு இந்த உத்திரவாதம் அளிக்க முடியுமா?
ஒவ்வொருவனும் அக்குழந்தை தன்னுடையதில்லை என்று மறுத்து விட்டால் எந்தச் சான்றின் அடிப்படையில் அவன் மீது பொறுப்பைச் சுமத்த முடியும்?
அதற்குரிய செலவினங்களைக் கொடுக்கு மாறு அவனை எப்படி நிர்பந்தப்படுத்த முடியும்? வளரப் போகும் அந்தக் குழந்தையின் எதிர்காலம் இருள் நிறைந்ததாக அல்லவா ஆகும்?
அது போல் ஒவ்வொருவனும் அந்தக் குழந்தை தன்னுடையது என்று உரிமை கொண்டாடினால் அந்தக் குழந்தையைக் கூறு போட்டு ஆளுக்குக் கொஞ்சம் பிரித்துக் கொடுக்க முடியுமா?
அதுமட்டுமல்ல, தற்காலத்தில் DNA மூலம் அறிந்துகொள்ள முடியுமாக இருந்தாலும் குழந்தையின் அப்பனுக்கு நீதியாக இருக்காது. ஏனெனில் 100 பேர் உடலுறவு மூலம் சுகம் கண்டார்கள். பிள்ளைக்கு இவன் மட்டும் அப்பன் என்பதால் இவனே பிள்ளைக்கு செலவளிக்க நேரிடும். ஏனையோரின் எதிர்பார்ப்பு தோல்வியுருவதால் அவர்கள் பராமரிக்க வரமாட்டார்கள். இதனால் பாதிப்பு தான் அதிகம்
ஒருவனுக்குப் பல மனைவியர் மூலம் பல நூறு குழந்தைகள் இருந்தாலும் அவன் இறந்த பின் பல நூறு குழந்தைகளுக்கும் தந்தை இன்னார் என்று தெரிவதால் வாரிசுகள் என்ற அடிப்படையில் அவனது சொத்தில் பங்கு கேட்க முடியும்.
பல ஆண்களை மணந்தவளின் கணவர்களில் எவர் இறந்தாலும், அவளது பிள்ளைகள் தந்தையின் சொத்து என்று உரிமை கொண்டாட வழியில்லாது போகும்.
இஸ்லாம் வழங்கியுள்ள இந்த அனுமதியை சில முஸ்லிம்கள் முறைகேடாகப் பயன்படுத்துவதையும் நாம் இங்கே சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.
இரண்டாம் திருமணம் செய்யக் கூடியவர்கள், முதல் மனைவிக்கு அதைத் தெரிவிக்காமல் இரகசியமாகத் திருமணம் செய்கின்றனர். முதல் மனைவிக்கு இது பற்றித் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் இவர்கள் கருதுகின்றனர்.
உண்மையில் முதல் மனைவியின் உரிமை இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் அவளுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் கண்டிப்பாக உள்ளது.
ஒரு மனைவியுடன் ஒருவன் வாழும் போது, அவனது எல்லா நாட்களையும் அவளுக்கே கொடுக்கிறான். அவளுக்கே தனது பொருளாதாரத்தையும் செலவு செய்கிறான். இந்த நிலையில் அவன் மற்றொரு திருமணம் செய்தால் முதல் மனைவிக்குக் கிடைத்து வந்த நாட்களில் பாதி நாட்கள் குறைந்து விடுகின்றன. பொருளாதாரத்திலும் பாதி பறி போகிறது.
இரண்டாம் திருமணத்தின் மூலம் முதல் மனைவி பாதிக்கப்படும் போது, அவளுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் தானாகவே ஏற்பட்டு விடுகின்றது.
'முழு நாட்களையும் எனக்கே தருவீர்கள் என்பதற்காகத் தான் உங்களை நான் மணந்து கொண்டேன்; அதில் பாதி நாட்கள் எனக்குக் கிடைக்காது என்றால், அத்தகைய வாழ்க்கை எனக்குத் தேவையில்லை' என்று கூட அவள் நினைக்கலாம்.
இரண்டாம் திருமணத்தைப் பற்றி அவளுக்குத் தெரிவிக்கப்படும் போது தான் மேற்கண்ட உரிமையை அவள் பெற முடியும்.
முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்தால் இரண்டாம் மனைவியும் பாதிக்கப்படு கிறாள். ஏனெனில் முதல் மனைவிக்குத் தெரியாமல் திருமணம் செய்பவர்கள், அவளுக்குத் தெரியக் கூடாது என்பதற்காக சரிசமமாக இரண்டு மனைவிகளிடமும் நாட்களைக் கழிக்காமல் அவ்வப்போது ஏதேனும் பொய்க் காரணங்களைக் கூறிக் கொண்டு இரண்டாம் மனைவியிடம் செல்கின்றனர்.
இதனால் இரண்டாம் மனைவிக்கு, அவளுக்குச் சேர வேண்டிய உரிமையை அவனால் கொடுக்க முடியாத நிலை ஏற்படுகின்றது.
முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்திருக்கும் நிலையில் அவன் மரணித்து விட்டால் அப்போதும் அவனது மனைவியர் பாதிக்கப்படுகின்றனர்.
கணவனின் சொத்துக்கள் தனக்கும், தனது பிள்ளைகளுக்கும் மட்டுமே உரியது என்று முதல் மனைவி நினைத்துக் கொண்டிருப்பாள். அவன் மரணித்தவுடன் இரண்டாம் மனைவியும் அவளது பிள்ளைகளும் சொத்தில் பங்கு கேட்டு வந்தால் அதனாலும் முதல் மனைவியும் அவளது பிள்ளைகளும் ஏமாற்றப்படுகிறார்கள்.
இரண்டாம் திருமணம் பற்றி முதல் மனைவியிடம் தெரிவிக்கும் போது, அவள் ஏற்றுக் கொண்டால் பிரச்சனை இல்லை. இரண்டாம் திருமணம் செய்தால் உன்னோடு வாழ மாட்டேன்' என்ற முடிவை அவள் எடுத்தால் அதற்கான உரிமை அவளுக்கு உண்டு.
தனது கணவன் தன்னைத் தவிர யாரையும் திருமணம் செய்யக் கூடாது என்று ஒரு பெண் வலியுறுத்தினால் ஆண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமையை அவள் மறுத்தவளாக மாட்டாள்.
அலீ (ரலி) அவர்களுக்குத் தமது புதல்வியை மணம் முடித்துக் கொடுக்க ஹிஷாம் பின் முகீரா என்பவர் அனுமதி கேட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அனுமதிக்க மாட்டேன்; மீண்டும் அனுமதிக்க மாட்டேன்; மீண்டும் அனுமதிக்க மாட்டேன். வேண்டுமானால் அலீ, எனது மகளை விவாகரத்துச் செய்து விட்டு, அவரது மகளை மணந்து கொள்ளட்டும்' எனக் கூறினார்கள். (நூல்: புகாரி 5230)
சூப்பர் தோழா
பதிலளிநீக்குமெய்யாலுமா!?
நீக்குபைபிளை ஒழுங்காக படித்து விட்டு எழுதுங்கள்
பதிலளிநீக்கு66 Books in the *Protestant version*
நீக்கு73 books in the *Catholic version*
86 books in the *orthodox version*
76 books in the *Charismatic version*
இந்த நான்கு பைபிள்களில் எந்த பைபிள் பரிசுத்த ஆவியின் உந்துதலினால் எழுதப்பட்டவை?
இயேசு இந்த பூமிக்கு வந்து இந்த நான்கு பைபிள்களில் எந்த பைபிள் அடிப்படையில் நியாயம் தீர்ப்பார்.??
பைபிளின் மூலப்பிரதி இப்போதும் இருப்பது உண்மையென்றால் இந்த நான்கு பைபிள்களில் எந்த பைபிளின் மூலப்பிரதி உள்ளது.???
பரிசுத்த வேதாகமத்தை நன்கறிந்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும் ர
பதிலளிநீக்கு66 Books in the *Protestant version*
நீக்கு73 books in the *Catholic version*
86 books in the *orthodox version*
76 books in the *Charismatic version*
இந்த நான்கு பைபிள்களில் எந்த பைபிள் பரிசுத்த ஆவியின் உந்துதலினால் எழுதப்பட்டவை?
இயேசு இந்த பூமிக்கு வந்து இந்த நான்கு பைபிள்களில் எந்த பைபிள் அடிப்படையில் நியாயம் தீர்ப்பார்.??
பைபிளின் மூலப்பிரதி இப்போதும் இருப்பது உண்மையென்றால் இந்த நான்கு பைபிள்களில் எந்த பைபிளின் மூலப்பிரதி உள்ளது.???
பரிசுத்த வேதாகமத்தை நன்கறிந்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும் ர
பதிலளிநீக்கு