புதன், 2 ஜனவரி, 2019

திரித்துவம் 1

திரித்துவம் உண்மையானதா?

பாகம் 1
------------------------


திரித்துவம் உண்மையானதா❓❓
--------------------------------------------


திரித்துவம் எனப்படுவது கிறித்தவ மதத்தில் அடிப்படைகொள்கை போல் ஆக்கப்பட்ட வேதாகமத்திற்கே முரணான ஒரு தவறான  நம்பிக்கை!

திரித்துவம் என்பது பிதா,பரிசுத்த ஆவி, குமாரன் ஆகிய மூன்றும் ஒரே தேவன். பிதா ஒரு தேவன். குமாரன் ஒரு தேவன். ஆவி ஒரு தேவன். மூன்றுபேரும் மூன்று தேவர்கள் அல்ல. ஒரே தேவன். பிதா ,குமாரன், ஆவி இந்த மூன்றும் சமமானவர்கள். சக்தி வல்லமை வயது எல்லாமே இம்மூவருக்கும் சமம் என்பதே இவர்களது நம்பிக்கை.

இதற்காக பைபிளை எவ்வளவு திரித்துகூற முடியுமோ அவ்வளவுக்கு திரித்து கூறி திரித்துவத்தை நியாயப்படுத்த முற்படுவார்கள்.

கடவுள் எத்தனை?

*.பைபிள் என்ன சொல்கிறது??


שְׁמַ֖ע  יִשְׂרָאֵ֑ל  יְהוָ֥ה  אֱלֹהֵ֖ינוּ  יְהוָ֥ה   אֶחָֽד׃

שְׁמַ֖ע-சமா
יִשְׂרָאֵ֑ל-இஸ்ராஏலொ
יְהוָ֥ה-யாவே
אֱלֹהֵ֖ינוּ-எலோஹைனொ
יְהוָ֥ה -யாவே
אֶחָֽד׃-எஹத்

சமா இஸ்ராஏலு! யாவே எலோஹைனு யாவே எஹத்

சமா-கேள் இஸ்ராஏலு- இஸ்ரவேலே
யாவே- கர்த்தர்
எலோஹைனு- எமது தேவன்
எஹத்- ஒன்று

"இஸ்ரவேலே கேள்! நம்முடைய தேவனாகிய கர்த்தர், கர்த்தர் ஒருவரே!"

உபாகமம் 6:4



கடவுள் ஒருத்தர் தான் என்று சொன்ன பின்னாடி, அவர் எப்படி மூனு நபர்களாக முடியும்? அப்படி ஆகிவிட்டால் மூன்றுகடவுள் என்றாகிவிடும்.

கிறிஸ்தவ போதகரின் கருத்து திரிபு

இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் இல்லாமையினால்,  ஒரு கிறிஸ்தவ போதகர் ஒருவர் அரைகுறையாக ஹிப்ருவை படித்துவிட்டு, இதில் உள்ள "எஹத்" என்ற வார்த்தைக்கு வெறும் ஒருவர் என்ற அர்த்தம் இல்லை. மாறாக பன்மையை உள்ளடக்கிய ஒருமை என கருத்துக்கூறி,

ஆதாரமாக, ஆதியாகமம் 1:5 "சாயங்காலமும் விடியற்காலையும் ஆகிமுதலாம் (ஒரு) நாள் ஆகிற்று"

ஆதி 2:24 ,  
24 இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர். 

தொடக்கநூல் 2:24


அதே போல எண்ணாகமம் 13:23

23 பின்னர் அவர்கள் எசுக்கோல் பள்ளத்தாக்குக்கு வந்தனர்; அங்கிருந்து ஒரே குலையாயிருந்த திராட்சைப் பழங்களின் கிளையொன்றை அறுத்தனர்; அதை ஒரு தடியில் கட்டி, இருவர் சுமந்து வந்தனர்; அத்துடன் அவர்கள் மாதுளம் பழங்கள், அத்திப் பழங்கள் சிலவற்றையும் கொண்டு வந்தனர்.

போன்ற வசனங்களை தம் ஆதாரத்திற்கு முன்வைத்து,  

ஒரு குலையில் நிறைய பழம் இருக்கலாம் அல்லவா? ஒரு நாளில் காலை, மாலை இருக்கலாமல்லவா? அதே போன்று ஒரு கடவுள் என்றால் அதற்குள் திரித்துவம் இருக்கவேண்டும். அத்தகைய வார்த்தையையே இங்கு வேதம் சொல்கிறது என்று போலியாக அடித்துவிடுகிறார்கள்.

இங்கே எஹத் என்பது ஒன்றுக்கு மேற்பட்டதை உள்ளடக்கிய ஒருமை. எனவே தேவன் ஒன்றுக்கு மேற்பட்டவரை உள்ளடக்கியவர் என்பதே இந்த போதகர் அடித்துவிட்ட கருத்து!!
--

எஹத் (எகாத்) என்பது திரித்துவத்திற்கு ஆதாரமா?

நம் பதில்:


உண்மையில் "எஹத்" என்ற வார்த்தைக்கு "ஒன்று", " முதலாவது" என அர்த்தம் தரக்கூடியது.

இந்த போதகர்கள் கல்லத்தனமாக கூறுவது போல அர்த்தமல்ல,

இந்த "எஹத்" என்ற வார்த்தை வெறும் ஒன்று , ஒருவர் என்பதை குறிக்கவே பயன்படும்.

உதாரணமாக,


21 ஆகவே ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும் பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார். 

தொடக்கநூல் 2:21
11 நாங்களெல்லாரும் ஒரே தந்தையின் புதல்வர்கள். நாங்கள் நேர்மையானவர்கள்; ஒற்றர்கள் அல்ல" என்றனர். 

தொடக்கநூல் 42:11


13 அவர்கள் மறுமொழியாக "உம் அடியார்களாகிய நாங்கள் கானான் நாட்டில் வாழும் ஒரே தந்தையின் பன்னிரு புதல்வர்கள். இப்பொழுது எங்களுள் இளையவன் எங்கள் தந்தையோடு இருக்கின்றான். இன்னொருவன் இறந்துவிட்டான்" என்றனர். 

தொடக்கநூல் 42:13


16 எனவே, உங்கள் சகோதரனை அழைத்துவரும்படி உங்களில் ஒருவனை அனுப்புங்கள். மற்றவர்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். உங்கள் சொற்களைச் சோதித்து உண்மை உங்களிடம் உள்ளதா என்று அறிய விரும்புகிறேன். இல்லையெனில் பார்வோனின் உயிர்மேல் ஆணை! நீங்கள் ஒற்றர்கள்தாம்" என்றார். 

தொடக்கநூல் 42:16


19 நீங்கள் குற்றமற்றவர்களானால் சகோதரராகிய உங்களில் ஒருவன் சிறைச்சாலையில் அடைப்பட்டிருக்கட்டும். மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தால் வாடும் உங்கள் குடும்பங்களுக்குத் தானியம் கொண்டு போகலாம். 

தொடக்கநூல் 42:19


10 நம் அனைவர்க்கும் தந்தை ஒருவரன்றோ? நம்மைப் படைத்தவர் ஒரே கடவுளன்றோ? பின்னர் ஏன் நாம் ஒருவருக்கொருவர் நம்பிக்கைத் துரோகம் செய்கின்றோம்? நம் மூதாதையரின் உடன்படிக்கையை ஏன் களங்கப்படுத்துகிறோம்? 

மலாக்கி 2:10

🤞🤞🤞


ஒரு விலா எலும்பு , ஒரே தகப்பன், ஒருவன், ஒரே கடவுள் என்பவற்றில் இந்த எஹத் என்ற வார்த்தை பாவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் வெறும் ஒருமையை மட்டுமே காட்டுகிறது. இவர்கள் சொல்வதுபோல அல்ல.


அவர்கள் குறிப்பிட்ட வசனங்களில் கூட, "ஒரு நாள்" என்றால் வெறும் நாளின் எண்ணிக்கை ஒன்று என்பது  தான் அர்த்தம்.

ஒரு குலை என்றால் குலைகளின் எண்ணிக்கை ஒன்று என்பது தான் அர்த்தம்

ஒரே உடல் என்றால், ஆதாமின் உடலிலிருந்து ஏவாள் படைக்கப்பட்டதால், இருவரும் ஒரே உடலை சேர்ந்தவர்கள். அதாவது ஆதாமின் உடலை சேர்ந்தவர்கள். ஆதாம் கணவன், ஏவாள் மனைவி என்பதால் இதே பிரதிபலிப்பு மற்ற கணவன் மனைவியிடமும் இருக்கும் என்பதே கூறப்படும் அர்த்தம்.

அதே போன்று ஒரே குடும்பம் என்றால் , குடும்பத்தின் எண்ணிக்கை ஒன்று. ஒரு மனிதன் என்றால், கருதப்படும் மனிதனின் எண்ணிக்கை ஒன்று ஆகும்.

அதேபோல "ஒரு கடவுள்" என்றால்,  கடவுள் என கருதப்படும் இறைவனின் எண்ணக்கை "ஒன்று" தான். ஒன்றுக்கு மேல் கடவுள் இல்லை. வேறு எவரும் கடவுள் இல்லை என்பதே இதன் அர்த்தம்.

இதை மற்ற வசனங்கள் தெளிவு படுத்துகிறது
👇👇👇👇


2 நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர். 


3 என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது. 


4 மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். 


5 நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன்; என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன். 
(யாத்திராகமம் 20:2-5)

இங்கே "நானே  கர்த்தராகிய (யகாவா ஆகிய) தேவன் (எலோஹிம்)

என்னை தவிர வேறு தேவர்கள் (எலோஹிம்) இருக்க கூடாது  என்று தெளிவாக கர்த்தர் சொல்கிறார்.

கடவுள் என்பவர் இவர்கள் கூறுவதுபோல பிதா,குமாரன்,ஆவி என இருக்குமாயின், " நாங்களே உன் கர்த்தராகிய தேவன், எங்களை தவிர வேறு தேவர்கள் இருப்பது கூடாது" என வந்திருக்கும்.

ஆனால் ஒருமையில் "நான்" "என்னை தவிர" என பாவிப்பதிலிருந்து அவர் மூவரின் சேர்க்கை அல்ல.. ஒரு குடும்பம் போல அல்ல என தெளிவாகிவிடுகிறது.

அதேபோல இன்னொரு வசனத்தை பாருங்கள்:
👇👇👇

35 "ஆண்டவரே கடவுள், அவரைத் ( הוּא)  தவிர வேறு எவரும் இலர், என நீங்கள் அறிந்து கொள்ளும் படியாக இவை உங்கள் கண்முன் நிறைவேற்றப்பட்டன. 

இணைச் சட்டம் உபாகமம் 4:35


39 மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள், அவரைத் (  הוּא)   தவிர வேறு எவரும் இலர்" என இன்று அறிந்து, உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள். 

இணைச் சட்டம் உபாகமம் 4:39


இந்த இருவசனங்களிலும் கடவுள் வெறும் தனியான நபர் என தெளிவாக விளங்குகிறது. இவர்கள் போலியாக இட்டுக்கட்டுவது போல அவர் மூவரின் சேர்க்கை என்றால்,  (hu- הוּא means "he") என்ற வார்த்தை பயன்படுத்தியிருக்க முடியாது.

இது வெறும் ஒரு ஆள் தான் ஒரே ஒருவர் தான் கடவுள். அந்த ஒருத்தரை தவிர வேறு கடவுள் இல்லை என்கிறது.

இதன்படி பரிசுத்த ஆவி, மற்றும் குமாரன் அதில் வரமாட்டார்கள்!!**

எலோஹிம் என்பது திரித்துவத்திற்கு ஆதாரமா?


*எலோஹிம் என்றது ,  திரித்துவத்திற்கு ஆதாரமா❓

"எலோஹ்-இம்" என்பதன் நேரடி அர்த்தம் "தேவர்கள்" என இருந்தாலும், அது கண்ணியமானவர்களை குறிக்க பயன்படுத்தும்போது ஒருவராக இருந்தாலும் அப்படியே பயன்படுத்தும்.

உதாரணமாக,,


1 ஆண்டவர் மோசேயை நோக்கி, "பார், நான் உன்னைப் பார்வோனுக்குக் கடவுளாக (  אֱלֹהִ֖ים-எலோஹிம்) வைத்துள்ளேன். உன் சகோதரன் ஆரோன் உன் வாக்கினனாக இருப்பான். 

யாத்திராகமம்
விடுதலைப் பயணம் 7:1


இங்கு ஒருவரான மோசேயே அவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார். காரணம் அது பன்மையை குறிக்கும் நோக்கத்தில் அல்ல. மாறாக கண்ணியத்திற்காக ஆகும்.


கடவுள் ஒருவர் என்பதையும், அவரை தவிர வேறு ஒருவர் இல்லை என்பதையும் ஏற்கனவே பார்த்துவிட்டோம். அங்கே தேவனை ஒருமையாக " அவன் (ஹூ- הוּא - he) என அழைப்பதிலிருந்தும் இதை புரிந்துகொள்ளலாம்!!

வேடிக்கை என்னவென்றால், புதிய ஏற்பாட்டில் தேவனை ஒருமையில் மட்டுமே காண கிடைக்கிறது.

கிரேக்க மொழி மூலபிரதியான Septuagint பிரதிகளில் தியோஸ் என ஒருமையில் தான் உள்ளது. 
 இது ஆதாரமல்ல

*.இயேசு ,பரிசுத்த ஆவி என்போர் யார் என பார்க்க முன்னாடி, குர்ஆன் திரித்துவத்தை போதிக்கிறதா என காண்போம்:

குர்ஆன் திரித்துவத்தை போதிக்கிறதா?

குர்ஆன்:

1. கூறு! அவன் அல்லாஹ் ஒருவனே!
(குர்ஆன் 112:1)

2. அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை!
(2:225, 3:2, ......)

3.அவனே அனைவரையும் படைத்தவன். (2:21)

இப்படி பல வசனங்கள் இருக்கின்றன.

இதையெல்லாம் விட்டுவிட்டு, தமக்கு எதுபற்றி அறிவு இல்லையோ, அதில் அறிந்தவர்கள் போல சில வசனங்களை எடுத்துக்காட்டி அப்பாவிகளை வஞ்சிக்கின்றனர்.

அதில் குறிப்பாக,

50:16 "நிச்சயமாக நாமே மனிதனை படைத்தோம்..."

இங்கு "நாம் படைத்தோம்" என்று உள்ளதே. இது பன்மையாக உள்ளதே.. இது ஒரு இறைவனல்ல , ஒன்றுக்கு மேற்பட்ட இறைவன் இருக்கவேண்டும் என வாதம் வைக்கிறார்கள்.


உண்மையில், இது அவர்களுக்கு ஆதாரமாகாது. ஒழுங்கான மொழி அறிவுகூட அவர்களுக்கு இல்லை!


ஏனெனில், இறைவனை பற்றி படர்க்கையில் (Third person) கூறும்போது "அவன்/he" என கூறப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் என்றால் "ஹும்" என அதாவது "அவர்கள்/They" என பாவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அது அவ்வாறு இல்லை. எனவே அது ஒரே ஒரு இறைவனே

அடுத்தது, இறைவனை முன்னிலையில் (second person) கூறும்போது, "அன்த" அதாவது "நீ" என ஒருமையில் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது! (உதாரணமாக குர்ஆன் 3:26,27)


ஆனால், தன்மையில் (first person) இல் பயன்படுத்தும்போது,  நேரடியாக பேசும்போது "நான், என்னிடம், எனக்கு" என ஒருமையில் பேசுவான். உதாரணமாக மூசாவோடு பேசிய போது



13. மேலும், "நான் உம்மை தேர்ந்தெடுத்துக்கொண்டேன். ஆகவே, அறிவிக்கப்படுபவைகளை நீ செவிமடுப்பாயாக!

14. நிச்சயமாக நான் தான் அல்லாஹ்;  என்னை தவிர வேறு இறைவன் இல்லை. ஆகவே, என்னையே வணங்குவாயாக! ...
(குர்ஆன் 20:13-14)

 10."... மூஸாவே பயப்படாதீர்! நிச்சயமாக என்னிடத்தில் தூதர்கள் பயப்படமாட்டார்கள்" 
(குர்ஆன் 27:10)

இவற்றின்படி இறைவன், தன்னை "நான்" என ஒருமையில் பேசுவதே இவர்களின் கூற்றை பொய்யாக்கிவிடும்.


ஆனாலும், சில இடங்களில் இறைவன் தன்னை "நாம்" என பன்மையில் சொல்ல காரணம், அது பேச்சு வழக்கில் உள்ள ஒரு விசயம் என்பதால் ஆகும். 

 

இவ்வாறு, தனிநபர்கள் கூட தன்னை "நாம்" என பன்மையில் கூறிக்கொள்வதுண்டு. அது கண்ணியத்தின் நிமித்தம் அவ்வாறு கூறிக்கொள்கிறார்கள்.

இதை குர்ஆனிலேயே காணலாம்:

மூஸா நபி , ஹிழ்ர் என்ற இறைத்தூதரிடம் சில விடயங்களை கற்றுக்கொள்ள சென்றார்கள். அதில் ஹிழ்ர் அவர்கள் ஒரு வாலிபனை கொன்றுவிட்டார்கள். அதுபற்றி அவர் கூறும்போது கூட, "நாம்" என்றே அவரும் சொல்கிறார். காரணம் பன்மை என்பதால் அல்ல!!

👇👇

80. "(அடுத்து) அந்த இளைஞனுடைய தாய், தந்தையர் இருவரும் முஃமின்களாக இருக்கிறார்கள்; அவன்  அவ்விருவரையும் வழிகேட்டிலும், குஃப்ரிலும் சேர்த்து விடுவான் என்று நாம் பயந்தோம்.




81. "இன்னும், அவ்விருவருக்கும், பரிசுத்தத்திலும் (பெற்றோரிடம்) அன்பு செலுத்துவதிலும் சிறந்திருக்க கூடிய (ஒரு மகனை) அவ்விருவருடைய இறைவன் (கொலையுண்டவனுக்குப்) பதிலாக கொடுப்பதை நாம் விரும்பினோம்.

(18:80-81)


இதே போன்றே , இறைவனும் தன்னை கண்ணியமான முறையில், "நாம்" என சில இடங்களில் கூறுகிறான்.



எனவே இவர்களது வாதம் சுக்குநூறு ஆகிவிடுகிறது.

புதன், 4 மே, 2016

முஹம்மது நபி கள்ளத்தீர்க்கதரிசியா ? 1

ஏக இறைவனின் திருப்பெயரால்..!

படைப்புகள் அனைத்தையும் செவ்வையாய் படைத்து பரிபாலித்து போற்றக்கூடிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்❕

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக❕

பலதாரமணம் செய்வது தவறு,பாவம்

முஹம்மது நபியவர்கள் பலதாரமணம் செய்தார்கள் எனவே அவர் கள்ளத்தீர்க்கதரிசி என அநேக கிறிஸ்தவர்கள் கூற கேட்டுள்ளேன்

அன்பிற்குரியவர்களே!

உங்கள் பைபிள் அப்படி போதிக்கிறதா ?

எது பாவம் ❔

4 பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான். நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.
1 யோவான் 3 :4 

17 அநீதியெல்லாம் பாவந்தான். என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுண்டு.
1 யோவான் 5 :17

• பாவம் என்பது தேவன் விதித்த கட்டளைகளை மாம்ச ரீதியாகவோ ஆத்ம ரீதியாகவோ மீறுவதாகும்

∆ 13 நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது,
→ நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது.←
ரோமர் 5 :13

↑→ ஒன்றை குறித்த சட்டம் இல்லையேல் அது பாவமாக எடுத்துக்கொள்ளப்படாது.

√ பலதாரமணத்தை தேவன் தடை செய்ததாய் அல்லது பாவம் என குறிப்பிட்டதாய் சட்டமோ வசனமோ பைபிளில் உண்டா ⁉

அவ்வாறில்லாத பட்சத்தில் எதனடிப்படையினில் அதனை விமர்சிக்கிறீர்கள்❓ குற்றமென்கிறீர்கள்❓

16 வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவையாயிருக்கிறது.

2 தீமோத்தேயு 3 :16-17 

இப்படி மனிதனுக்கு தேவையான அனைத்தும் அருளப்பட்ட தேவ ஆவியினால் வழங்கப்பட்ட வசனங்களை காட்டிலும் நீங்கள் அறிவில் தேறினவர்களோ !?

இன்னும் பலதாரமணம் தவறு அப்படி செய்பவர் கள்ளத்தீர்க்கதரிசி⁉ அவரால் வரும் வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்பீர்களேயானால் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் அவர்களின் வெளிப்பாடுகள் அவர்களால் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்கள் என அனைத்தையும் நிராகரித்து விட்டு முஹம்மது நபியவர்களை விமர்சிக்க வாருங்கள்..!

பலதாரமணத்தை அனுமதிக்கும் சட்டங்கள் கீழ்காணும் வசனங்கள் 

பழைய ஏற்பாடு
உபாகமம் 21 : 15 , 15: 17
எண்ணாகமம் 31 : 18, 46

2 சாமுவேல் 12 : 8
1 ராஜாக்கள் 15: 5

நியாயபிரமாணத்தில் உள்ள சட்டங்கள் சரி என்று புதிய ஏற்பாட்டில் பார்க்க:

மத்தேயு 5:17

மத்தேயு 22 : 24 - 26

ரோமர் 7: 12, 16

காலாத்தியர் 3: 21 , 5: 3 , 4 .

முஹம்மது நபி கள்ளத்தீர்க்கதரிசியா ?

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ !

✴#முஹம்மது நபியவர்கள் கள்ளத்தீர்க்கதரிசியா❕❔❔

பகுதி - 2⃣

அல்குர்ஆன் மனைவியை அடிக்க அனுமதி அளிக்கிறது.மனைவியை அடிக்க அனுமதி அளிப்பவர் எப்படி இறைவனாவார் ?

இந்த வெளிப்பாட்டை கொண்டு வந்தவர் எப்படி தீர்க்கதரிசியாக இருக்க முடியும் ?

என்ற மாபெரும் அறிவுப்பூர்வமான கேள்வியை முன் வைத்து ஈசாகுரான் போன்ற இனையமேதைகள் முஹம்மது நபியவர்கள் நபி கிடையாது என கூறி வருகின்றனர்.😜😄😂

என்னவென்று சொல்ல இவர்களின் அறியாமையை ❕

° மனைவியை அடிக்க அனுமதி அளிப்பவர் கள்ளத்தீர்க்கதரிசி என பைபிலில் எங்காவது குறிப்பிடப்பட்டுள்ளதா ❔

• பைபிலில் இச்செயலை தேவனோ இயேசுவோ கண்டித்ததாக ஏதேனும் ஒரு வசனமாகிலும் உண்டா ❔

இல்லை, அவ்வாறிருக்க இதன் அடிப்படையில் ஒருவர் கள்ளத்தீர்க்கதரிசி என எங்கனம் தீர்ப்பு கொடுக்கின்றீர்கள் ❔

தேவனை காட்டிலும் நீங்கள் அறிவில் தேறினவர்களோ ❔

மேலும் வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது.தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,

2 தீமோத்தேயு 3 :16

• மனிதன் எல்லா நல்ல காரியங்களும் செய்யும்படியாகவும் வேத வசனங்கள் தேவ ஆவியினால் அருளப்பட்டு விட்டது என பைபில் கூறுகிறது.அவ்வாறிருக்க ஒரு தீர்க்கதரிசியை நல்லவரா கள்ளரா என சொல்ல தேவ ஆவி மறந்து விட்டது என்கிறீர்களா ❔

ஆம் என்றுவிடாதீர் கிறிஸ்தவர்களே ஆவிக்கெதிரான தூஷனம் மன்னிக்கப்படாது.(லூக்கா 12:10)

சரி இவர்கள் வாதத்திற்கு இஸ்லாமிய நிலைபாட்டை பார்க்கும் முன் பைபில் நிலைபாட்டை பார்க்கலாம்😉

-- உன் ஆசை புருசனை பற்றியிருக்கும்.அவன் உன்னை ஆண்டு கொள்வான். ஆதி 3:16

∆ மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள்.கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான். அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்.
(எபேசியர் 5:22-23 )

பைபில் பெண்கள் ஆண்களுக்கு சேவை செய்யவே,மகிமைபடுத்தவே படைக்கப்பட்டனர் என்கிறது.
( 1 கொரிந்தியர் 11:6-7 )

மனைவி கணவனுக்கு கட்டுப்பட மறுத்தால்...?
அவள் பொல்லாதவள் தானே!

அவர்களை குறித்து பைபில் காயத்தின் தழும்புகளும், உள்ளத்தில் உறைக்கும் #அடிகளும், பொல்லாதவனை #அழுக்கறத்_துடைக்கும்.
நீதிமொழிகள் 20 :30

மனைவி கொஞ்சம் சண்டைக்காரியா இருந்தா அவள் விட வீட்டின் ஒரு மூலை சிறந்தது என்கிறார் தேவ ஆவி

24 சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும் வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம்.
நீதிமொழிகள் 25 :24 

அடப்பாவி 😀

இதாச்சும் பரவாயில்லை வீட்டு மூலை கூட வேணா காட்டுக்கு போனு சொல்றார் நீதிமொழிகள் 21:19

கொஞ்சம் டீப்பா போவோமா ❔

மனைவியை அடிப்பது குறித்து பைபில்:-

• மனைவி ஒருவேளை வேறு தேவனை சேவித்தால் அவளை கல்லால் அடித்து கொள்ளலாம்.
உபாகமம் 17:2-7;யாத் 22:20

• விபச்சாரத்தினிமித்தம் மனைவியை அடித்து கொள்ளலாம்.
உபா 22:22

மனைவியின் கையை கூட வெட்டலாம் அடுத்தவரின் ****யை கணவனை காப்பாற்ற பிடித்தால் உபா 25:11-12

➰முடிவுரை➰

• மனைவியை அடிக்க அனுமதி அளிப்பது தவரென பைபிலில் எங்கும் இல்லை

• அடிக்கலாம் கொல்லலாம் என பைபில் அனுமதி அளிக்கிறது

• அனுமதி அளிப்பவர் கள்ளத்தீர்க்கதரிசி எனில் அந்தோ பரிதாபம் தேவ ஆவி கள்ளத்தீர்க்கதரிசி❕

7 கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது, கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. சங்கீதம் 19 :7

இப்படி பைபில் சொல்ல அதற்கு மாற்றமாய் பிரசங்கிக்கும் ஊழியர்களே

மல்லாக்கப்படுத்து எச்சிலை துப்பினால் மூஞ்சியில் விழும் எனக்கூறி இப்பதிவு முடிக்கிறேன்..!

வியாழன், 10 மார்ச், 2016

கிறிஸ்தவம் விதியை மறுக்கிறதா ?

சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்வின் திருப்பெயரால்..!

அவனது சாந்தியும் சமாதானமும் நேர்வழியை பின்பற்றி வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற அனைவரின் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

அல்லாஹ்வுக்கே புகழனைத்தையும் உரித்தாக்கியவனாய் !

இஸ்லாமிய மார்க்கத்தை ஏளனம் செய்வதாக எண்ணிக் கொண்டு இன்றைய காலகட்டத்தில் கிறிஸ்தவர்கள் தாங்கள் நம்புகின்ற நம்பிக்கை கொள்ள வேண்டிய விஷயங்களையே மறந்தும் மறுத்தும் கேள்வியெழுப்பி வருகின்றனர் அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்று தான் #விதி !

விதியை குறித்து பைபிளினில் எந்த வசனமும் இல்லை !

விதியை குறித்து கிறிஸ்தவம் போதிக்கவில்லை !

இயேசு அதனை குறித்து எதனையும் சொல்லவேயில்லை !

எனவே விதி என்ற ஒன்று இல்லை என மறுதலிக்கும் கிறிஸ்தவர்களே !

உண்மையில் நீங்கள் மறுதலிப்பது கிறிஸ்தவத்தின் அடிப்படையை தான்!

உதாரணமாக சில வசனங்களை பார்க்கலாம்

• குழந்தை கருவுற்றது முதல் அதன் வளர் நிலைகள் என எல்லாமே தேவனால் முன்னமே எழுதப்பட்டிருக்கிறது.

16 என் கருவை உம்முடைய கண்கள் கண்டது, என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது. சங்கீதம் 139 :16 

• எது நடந்தாலும் அதில் தேவனின் சித்தம் இல்லாமலில்லை!
பறவை வானில் பறப்பது உட்பட⁉

29 ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. மத்தேயு 10 :29

•  தீர்சனங்களும், தீர்க்கதரிசிகளும் கூட எழுதப்பட்டபடியே நடக்கிறார்கள்

7 அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார். எபிரேயர் 10 :7 

அவ்வளவு ஏன் விதி உண்டு என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கையான சிலுவைபலியே !

ஆம்

தான் கொலை செய்யப்பட வேண்டியது விதி என இயேசு போதித்தார் !

21 அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத் தொடங்கினார். மத்தேயு 16 :21 

தீர்மானிக்கப்பட்ட(#விதிப்)படியே மனுஷகுமாரன் போகிறார், ஆனாலும் அவரைக் காட்டிக்கொடுக்கிற மனுஷனுக்கு ஐயோ என்றார். லூக்கா 22 :22

இதைவிட மறுக்கவியலாத வசனம் ஏது ?

• விதிக்கப்பட்ட யாவையும் நிச்சயமாக நடக்கும் என இயேசு கூறுகிறார்

7 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படும்போது கலங்காதேயுங்கள், இவைகள் சம்பவிக்கவேண்டியதே. ஆனாலும், முடிவு உடனே வராது. மாற்கு 13 :7
இதே கருத்து மத்தேயு 24:6லும் சொல்லப்படுகிறது.

தம்முடைய விதியின்படி தாம் செல்லவேண்டிய நேரம் குறித்து இயேசு அறிந்திருந்தார்

1 பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார். யோவான் 13 :1 

• இரட்சிப்பு கூட தேவனின் சித்த்ப்படியே முன்னமே குறிக்கப்பட்டது தானே தவிர கிரியைகலினாலே அல்ல!

9 அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை #இரட்சியாமல், #தம்முடைய_தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார். 2 தீமோத்தேயு 1 :9 

இரட்சிப்பும் முன்னமே தீர்மானிக்கப்பட்டவர்களுக்கே !

12 தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய #தீர்மானத்தின்படியே, நாங்கள் #முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி #தெரிந்துகொள்ளப்பட்டோம். எபேசியர் 1 :12 

தேவனின் சித்தப்படி, தேவனால், தேவன் முன் குறித்தபடியே முன்குறித்தவர்களுக்கே இரட்சிப்பு !

இதனை மனதிற்கொண்டு தான் இயேசு இவ்வாறான பிரார்த்தனையை செய்கிறார்

39 சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். மத்தேயு 26 :39 

பைபிளின் கூற்றுப்படி தான் மரணிக்க வேண்டும் என்பதை இயேசு அறிந்திருந்ததாக  சில வசனங்கள் இருப்பினும் அதனை  சித்தமானால் தன் விதியை மாற்றுமாறு பிரார்த்தனை செய்கிறார்(ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா என்பது வேறு)

ஆக விதியை குறித்து நீங்கள் என்னவெல்லாம் கேள்வி எழுப்புவீர்களோ அவையனைத்தும் நீங்களும் நம்பிக்கை கொள்ள வேண்டியவையே !

இன்ஷா அல்லாஹ்..!

ஆய்வுகள் இனியும் தொடரும்..!

சனி, 26 டிசம்பர், 2015

அன்னை ஆயிஷா (ர) அவர்களுடன் நபிகள் நாயகத்தின் திருமணம்- ஒரு அலசல

. ஆயிஷா (ர) அவர்களுடனான திருமணம்:


அன்னை ஆயிஷா (ர) அவர்களுடன் நபிகள் நாயகத்தின் திருமணம்- ஒரு அலசல்
✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅

நபியவர்கள் ஆயிஷாவை 6 வயதில் திருமணம் முடித்து 9 வயதில் இல்லறத்தில் ஈடுபட்டார்கள்.



தபரி மற்றும் முஸ்னத் அஹ்மதில் வரும் செய்தியின்படி ஜாபிர் பின் முத்யிம் என்பவருக்கே ஆயிஷா முதலில் பேசப்பட்டார்.

அபூபக்ர் முஸ்லிமாகவும் ஜாபிர் முஸ்லிமல்லாதவராகவும் இருந்தபடியால் ஜாபிரின் பெற்றோர் தம் மகனையும் மதமாற்றிவிடுவார் என அஞ்சி அந்த ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டார்கள்


பின்பு தான் நபியவர்களுக்கு பேசப்பட்டார்.
அன்றைய கால அரேபியாவில் .
 இளவயதிலேயே திருமணம் பேசிவிடும் வழக்கமும் இருந்தது. அதன்படியே இந்த திருமணமும் நடந்தது!

(இது அந்த காலத்தில் இருந்த எந்த சட்டத்தையும் மீறி நடந்ததும் அல்ல.
அதனால் அன்னையவர்கள்பாதிக்கப்படவுமில்லை.. எந்த உரிமையும் பறிக்கப்படவுமில்லை)
--


✳ஆயிஷாவுடன் நபி இல்லறத்தில் ஈடுபட்ட போது அவர் பருவமடைந்திருந்தார்:


6 வது வயதில் முடிக்கபட்ட ஆயிஷா 9 வது வயதிலே இல்லறத்தில் ஈடுபட்டார். அன்றைய கால அரேபியாவில் பெண்கள் 9 வயதில் பருவமடைந்துவிடுவர்.-


ْ ﻭَﺍﺣْﺘَﺠَّﺎ ﺑِﺤَﺪِﻳﺚِ ﻋَﺎﺋِﺸَﺔَ ﺃَﻥَّ ﺍﻟﻨَّﺒِﻲَّ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺑَﻨَﻰ ﺑِﻬَﺎ ﻭَﻫِﻲَ ﺑِﻨْﺖُ ﺗِﺴْﻊِ ﺳِﻨِﻴﻦَ . ﻭَﻗَﺪْ ﻗَﺎﻟَﺖْ ﻋَﺎﺋِﺸَﺔُ ﺇِﺫَﺍ ﺑَﻠَﻐَﺖِ ﺍﻟْﺠَﺎﺭِﻳَﺔُ ﺗِﺴْﻊَ ﺳِﻨِﻴﻦَ ﻓَﻬِﻲَ ﺍﻣْﺮَﺃَﺓ
ٌ
ஆயிஷா கூறியுள்ளார் :"ஒரு பெண்பிள்ளை (ஜாரியா) 👉🏾9 வயதை👈🏿 அடையும் போது, அவள் ஒரு பெண்ணாக (இம்ர அ) ஆகிறாள்
(அதாவது பருவமடைதல்). "
[ஜாமிஉத் திர்மிதி
புத்தகம்- திருமணம் 11
1109 ஆம் ஹதீஸிற்கு கீழே உள்ள கருத்து]

எனவே ஆயிஷா (ர) தன் 9வது வயதில் பருவமடைந்து விட்டார் என்று தெளிவாகிறது..


✳நவீன விஞ்ஞானம், பருவ வயதை அடையும் போது தலைமுடி உதிர்வு ஏற்படுவதாக கூறுகிறது❗

ﺣَﺪَّﺛَﻨِﻲ ﻓَﺮْﻭَﺓُ ﺑْﻦُ ﺃَﺑِﻲ ﺍﻟْﻤَﻐْﺮَﺍﺀِ، ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻋَﻠِﻲُّ ﺑْﻦُ ﻣُﺴْﻬِﺮٍ، ﻋَﻦْ ﻫِﺸَﺎﻡٍ، ﻋَﻦْ ﺃَﺑِﻴﻪِ، ﻋَﻦْ ﻋَﺎﺋِﺸَﺔَ ـ ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ ـ ﻗَﺎﻟَﺖْ ﺗَﺰَﻭَّﺟَﻨِﻲ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻭَﺃَﻧَﺎ ﺑِﻨْﺖُ ﺳِﺖِّ ﺳِﻨِﻴﻦَ، ﻓَﻘَﺪِﻣْﻨَﺎ ﺍﻟْﻤَﺪِﻳﻨَﺔَ ﻓَﻨَﺰَﻟْﻨَﺎ ﻓِﻲ ﺑَﻨِﻲ ﺍﻟْﺤَﺎﺭِﺙِ ﺑْﻦِ ﺧَﺰْﺭَﺝٍ، ﻓَﻮُﻋِﻜْﺖُ ﻓَﺘَﻤَﺮَّﻕَ ﺷَﻌَﺮِﻱ ﻓَﻮَﻓَﻰ ﺟُﻤَﻴْﻤَﺔً، ﻓَﺄَﺗَﺘْﻨِﻲ ﺃُﻣِّﻲ ﺃُﻡُّ ﺭُﻭﻣَﺎﻥَ ﻭَﺇِﻧِّﻲ ﻟَﻔِﻲ ﺃُﺭْﺟُﻮﺣَﺔٍ ﻭَﻣَﻌِﻲ ﺻَﻮَﺍﺣِﺐُ ﻟِﻲ، ﻓَﺼَﺮَﺧَﺖْ ﺑِﻲ ﻓَﺄَﺗَﻴْﺘُﻬَﺎ ﻻَ ﺃَﺩْﺭِﻱ ﻣَﺎ ﺗُﺮِﻳﺪُ ﺑِﻲ ﻓَﺄَﺧَﺬَﺕْ ﺑِﻴَﺪِﻱ ﺣَﺘَّﻰ ﺃَﻭْﻗَﻔَﺘْﻨِﻲ ﻋَﻠَﻰ ﺑﺎﺏ ﺍﻟﺪَّﺍﺭِ، ﻭَﺇِﻧِّﻲ ﻷَﻧْﻬَﺞُ، ﺣَﺘَّﻰ ﺳَﻜَﻦَ ﺑَﻌْﺾُ ﻧَﻔَﺴِﻲ، ﺛُﻢَّ ﺃَﺧَﺬَﺕْ ﺷَﻴْﺌًﺎ ﻣِﻦْ ﻣَﺎﺀٍ ﻓَﻤَﺴَﺤَﺖْ ﺑِﻪِ ﻭَﺟْﻬِﻲ ﻭَﺭَﺃْﺳِﻲ ﺛُﻢَّ ﺃَﺩْﺧَﻠَﺘْﻨِﻲ ﺍﻟﺪَّﺍﺭَ ﻓَﺈِﺫَﺍ ﻧِﺴْﻮَﺓٌ ﻣِﻦَ ﺍﻷَﻧْﺼَﺎﺭِ ﻓِﻲ ﺍﻟْﺒَﻴْﺖِ ﻓَﻘُﻠْﻦَ ﻋَﻠَﻰ ﺍﻟْﺨَﻴْﺮِ ﻭَﺍﻟْﺒَﺮَﻛَﺔِ، ﻭَﻋَﻠَﻰ ﺧَﻴْﺮِ ﻃَﺎﺋِﺮٍ . ﻓَﺄَﺳْﻠَﻤَﺘْﻨِﻲ ﺇِﻟَﻴْﻬِﻦَّ ﻓَﺄَﺻْﻠَﺤْﻦَ ﻣِﻦْ ﺷَﺄْﻧِﻲ، ﻓَﻠَﻢْ ﻳَﺮُﻋْﻨِﻲ ﺇِﻻَّ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺿُﺤًﻰ، ﻓَﺄَﺳْﻠَﻤَﺘْﻨِﻲ ﺇِﻟَﻴْﻪِ، ﻭَﺃَﻧَﺎ ﻳَﻮْﻣَﺌِﺬٍ ﺑِﻨْﺖُ ﺗِﺴْﻊِ ﺳِﻨِﻴﻦَ .

3894. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னை மணந்து கெண்டார்கள். பிறகு நாங்கள்மதீனா வந்து ஹாரிஸ் இப்னு கஸ்ரஜ் கண்டு விடவே என் முடிகள் உதிர்ந்து விழுந்தன. பிறகு (என்) முடீ வளர்ந்து அதிகமாகிவிட்டது.........

ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 63. அன்சாரிகளின் சிறப்புகள்
எனவே அவர் பருவ வயதை அடைந்தே இருந்தார்❗❗


✳அப்போது ஆயிஷா ஆரோக்கியமாகவும் உடல்தகுதியுடனே இருந்தார்:


ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻣُﺤَﻤَّﺪُ ﺑْﻦُ ﻳَﺤْﻴَﻰ ﺑْﻦِ ﻓَﺎﺭِﺱٍ، ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻧُﻮﺡُ ﺑْﻦُ ﻳَﺰِﻳﺪَ ﺑْﻦِ ﺳَﻴَّﺎﺭٍ، ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺇِﺑْﺮَﺍﻫِﻴﻢُ ﺑْﻦُ ﺳَﻌْﺪٍ، ﻋَﻦْ ﻣُﺤَﻤَّﺪِ ﺑْﻦِ ﺇِﺳْﺤَﺎﻕَ، ﻋَﻦْ ﻫِﺸَﺎﻡِ ﺑْﻦِ ﻋُﺮْﻭَﺓَ، ﻋَﻦْ ﺃَﺑِﻴﻪِ، ﻋَﻦْ ﻋَﺎﺋِﺸَﺔَ، ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ ﻗَﺎﻟَﺖْ ﺃَﺭَﺍﺩَﺕْ ﺃُﻣِّﻲ ﺃَﻥْ ﺗُﺴَﻤِّﻨِّﻲ ﻟِﺪُﺧُﻮﻟِﻲ ﻋَﻠَﻰ ﺭَﺳُﻮﻝِ ﺍﻟﻠَّﻪِ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓَﻠَﻢْ ﺃَﻗْﺒَﻞْ ﻋَﻠَﻴْﻬَﺎ ﺑِﺸَﻰْﺀٍ ﻣِﻤَّﺎ ﺗُﺮِﻳﺪُ ﺣَﺘَّﻰ ﺃَﻃْﻌَﻤَﺘْﻨِﻲ ﺍﻟْﻘِﺜَّﺎﺀَ ﺑِﺎﻟﺮُّﻃَﺐِ ﻓَﺴَﻤِﻨْﺖُ ﻋَﻠَﻴْﻪِ ﻛَﺄَﺣْﺴَﻦِ ﺍﻟﺴِّﻤَﻦِ .

ஆயிஷா அறிவித்தார்: எனது தாய் என்னை நபியின் வீட்டுக்கு அனுப்புவதற்காக என்னை கொழுக்க வைக்க நாடினார்.
ஆனால் வெள்ளரிக்காயும் புதிய பேரிச்சம் பழத்தையும் எனக்கு கொடுக்கும் வரை அவர் விரும்பிவை பயனளிக்கவில்லை. அப்போது நான் நன்கு கொழுத்துவிட்டேன்.
(சுனன் அபூ தாவூத்
கிதாபுத் திப் 29
ஹதீஸ் நம்பர்-3903)

இதன்படி ஆயிஷா பருவ வயதை அடைந்திருந்ததோட
ு இல்லறத்திற்கேற்
ற உடல் தகைமையையும் பெற்றிருந்தார்!

💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟

✳பொம்மைகளுடன் விளையாடல்

ஆயிஷா பருவ வயது உடல் தகைமையை அடைந்திருந்தாலும், அவருடைய வயதிற்குரிய விளையாட்டில் விருப்பமான நிலை இருந்து❗❗


நபியவர்கள் தன் ஏனைய மனைவியருடன் நடந்தது போல இவருடன் நடக்கவில்லை. அவருடைய தோழிகளுடன் அவரை விளையாட விடுபவர்களாகவும் , அவர் ரசிக்க விரும்பிய விளையாட்டுகளில் நீண்ட நேரம் பொறுத்து நிற்பவர்களாகவுமே நபி இருந்தார்கள்.
👇🏾👇🏾

5190. ஆயிஷா(ரலி) அறிவித்தார் அபிசீனியர்கள் தம் ஈடடிகளால் (வீர விளையாட்டு) விளையாட்டிக் கொண்டிருந்தனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை மறைத்தபடி (வீட்டு வாசலில் நின்று கொண்டு) இருக்க, நான் (அவர்களின் விளையாட்டைப்) பார்த்துக் கொண்டிருந்தேன். நானாக (ரசித்து முடித்து, சலிப்புற்று) திரும்பிச் செல்லும்வரை நான் (அதைப்) பார்த்துக்கொண்ட
ேயிருந்தேன். வயது குறைந்த இளம்பெண் எவ்வளவு நேரம் கேளிக்கை (விளையாட்டு)களைக் கேட்டுக் கொண்டு(ம் பார்த்துக்கொண்டும்) இருப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்கள். 126
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 67. திருமணம்

4827. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் பொம்மைகள் வைத்து விளையாடுவேன். என் தோழியர் என்னிடம் (விளையாட) வருவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டதும் என் தோழியர் (பயந்துபோய்) ஒளிந்துகொள்வார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை (என்னுடன் சேர்ந்து விளையாட) என்னிடம் அனுப்பிவைப்பார்கள். - மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்த
ே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் ஜரீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ”நான் நபி (ஸல்) அவர்களது இல்லத்தில் பொம்மைகள் (”பனாத்”)வைத்து விளையாடுவேன்” என்று இடம்பெற்றுள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 44. நபித்தோழர்களின் சிறப்புகள
👆👆👆

இதன்மூலம் நபி அவரை திருமணம் செய்தாலும் அவரை அவருடைய வயதிற்கேற்ற முறையிலேயூ நடத்தினார்கள்.


இடைஞ்சலாக இருக்கவில்லை.  அப்போதும் அவர் பருவ வயதையும் உடல் தகைமையிம் பெற்றிருந்தார்!
❗❗
💟💟💟💟💟


✳திருமணம் பற்றிய சட்டங்கள் -  குறிப்பாக பெண்ணின் சம்மதம் அவசியம்.


✅நம்பிக்கை கொண்டோரே
பெண்களை வலுகட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதியில்லை[4:19]

✅அப்பெண்கள் உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை எடுதத்துள்ளார்கள்[4:21]

✅கன்னி பெண்களாயினும் விதவையாயினும் சம்மதம் பெறவேண்டும்
[அறி: ஆயிஷா Bukhari 6971,6964,5137]

✅என் தந்தை எனது சம்மதம் பெறாமல் மணம் முடித்துவைத்தார்கள் அதை விரும்பாத நான் நபியிடம் கூறியபோது அதை ரத்து செய்தார்கள்
[அறி: கன்ஸா பின்த் கிதாம் Bukhari 5139,6945,6969]

இவற்றின்படி ஒரு திருமணம் செல்லுபடியாவதற்கு பெண்களின் சம்மதம் தேவை என்றும் சம்மதம் இல்லாவிட்டால் அது செல்லுபடியற்றது என்று விளங்கலாம்❗❗

சம்மதம் தெரிவிப்பதாயின் அவளுக்கு பூரண விவவரமுள்ளவளாக இருக்க வேண்டும்.
மேலும் திருமணத்தை பலமான உடன்படிக்கை என்கிறது குர்ஆன்.. ஒருவர் உடன்படிக்கை செய்வதானால் அதுபற்றிய பூரண விளக்கமுள்ளவராகவே இருக்க வேண்டும்
இதன்படி விவரமறியாத சிறுமிகளை அவர்கள் பருவ வயதை அடைந்தோராக இருந்தாலும் விவரமற்ற நிலையிலிருந்தால் அவர்களை முடிப்பது தவறாகும்❗❗

ஆனாலும் ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன், அவளுக்கு இன்னார் தான் கணவன் என பெற்றோர் நிச்சயித்து வைப்பது தடை இல்லை. ஆனால் அவள் அந்த ஆணோடு சேரும் காலம் வரும்போது அவளுக்கு சம்மதம் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் இந்த நிச்சயித்து வைத்தது செல்லுபடியற்றதாகிவிடும்.

💟💟💟


✳ஏன் ஆயிஷாவை முடித்தார்கள்?:

இதை காமத்திற்காக செய்தார் என்பதை ஏற்க முடியாது..


 ஏனெனில், ஒருவர் காமத்திற்காக முடிப்பதானால், உடனடியாக அனுபவிக்க கூடிய நிலையிலுள்ள பெண்ணையே முடிக்க வேண்டும்..

மேலும், மூன்று வருடங்கள் அவருடன் வாழ்க்கையில் ஈடுபடவே இல்லை என்பதிலிருந்து , இது காமத்திற்காக செய்யப்பட்ட ஒன்றாக பார்க்கபடுவது பெரிய அபத்தமாகும்..


இப்படி எதிரிகள் குற்றம்சாட்டுவத
ு எப்படி இருக்கிறதெனில், பசியிலுள்ள ஒருவன் 3நாளைக்கு பின்பு பழுக்கும் கனியை எடுத்து வைப்பது போன்றே அமைந்துள்ளது..

மேலும், இத்திருமணத்தில் பல நுணுக்கமான காரணங்கள் இருந்திருக்க முடியும்..


அபூபக்ர் (ர) அவர்களை பொருத்தமட்டில், நபிகள் நாயகத்தை பொய்யர் என்று மக்கள் சொன்னபோது உண்மையாளர் என்று சொன்னவர்..

நபியவர்கள் ஹிஜ்ரத் செய்தபோது அதற்கு பக்கபலமாக இருந்து கஷ்டப்பட்டவர்..

இது போன்ற நண்பருடன் மேலும் உறவை பலப்படுத்தி கொள்ள விரும்பியதால் தான், 6 வயது ஆயிஷாவை நபியவர்கள் பெண்கேட்டார்..

அதுவும் ஆயிஷா அவர்களுக்கு திருமணம் பேசப்பட்ட காலத்தில் தான் இது நடந்தது.
  
இது
காமதிற்காக என்றால் 3 வருடங்கள் ஆயிஷாவை பெற்றோருடனே இருக்க செய்திருக்க மாட்டார் என்பதை நடுநிலையுடன் சிந்திப்போர் புரிந்துகொள்வார்கள்..
இது அபூபக்ருடன் உறவை பலப்படுத்த எடுத்த நடவடிக்கையாக தான் இதை கருதலாம்!
----

அல்லாஹ் வஹீ அறிவித்து "நபியே 6 வயது ஆயிஷாவை முடிப்பீராக" என்றானா??

இதையும் குறிப்பாக மிஷநரிகள் குற்றச்சாட்டாக வைப்பார்கள்..
இதன் உண்மை நிலை என்ன??

5078. ஆயிஷா(ரலி) அறிவித்தார் (என்னிடம்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நான் உன்னை மணப்பதற்கு முன்னால்) இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டேன். ஒருவர் (உடைய தோற்றத்திலிருந்த வானவர்) உன்னை ஒரு பட்டுத் துண்டில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர் “இவர் உங்கள் (வருங்கால) மனைவி““ என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துண்டை விலக்கிப் பார்க்கிறேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) “இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்குவான்““ என்று சொல்லிக்கொண்டேன்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 67. திருமணம்

இதன் படி, எதிர்காலத்தில் இது நடக்கும் என்பதை தான் நபியவர்களுக்கு கனவில் காட்டபட்டது..

மேலும் இது கட்டளை இல்லை..
இது போன்று பல கனவுகளை, அவைகள் நடப்பதற்கு முன்னதாக கண்டுள்ளார்கள்.. அவற்றில் ஒன்றாகவே இதை நாம் பார்க்கிறோம்..
எனவே அவர்களின் குற்றச்சாட்டு அபத்தமாகவே உள்ளது..
💟💟💟💟

✳.ஆயிஷா அவர்கள் இதற்கு தகுதியற்றவர்களாக இருந்தால், அவரை அலங்கரித்த பெண்கள் வாழ்த்து சொல்வார்களா❓❓


.
5156. ஆயிஷா(ரலி) அறிவித்தார் (நான் ஆறு வயதுடையவளாக இருந்த போது) என்னை நபி(ஸல்) அவர்கள் மணந்தார்கள். பின்னர் (ஒன்பது வயதில் தாம்பத்திய உறவைத் தொடங்கிய போது) என் தாயார் (உம்மு ரூமான்) என்னிடம் வந்து, என்னை வீட்டினுள் அனுப்பி வைத்தார்கள்.
அங்கு வீட்டில் சில அன்சாரிப் பெண்கள் இருந்தனர். அவர்கள் “நன்மையுடனும் சுபிட்சத்துடனும் வருக! (அல்லாஹ்வின்) நற்பேறு உண்டாகட்டும்!““ என்று (வாழ்த்துக்) கூறினர்.
95
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 67. திதிருமணம

2778. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஆறு வயதுடையவளாக இருந்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை மணந்துகொண்டார்கள்.
நான் (பருவமடைந்து) ஒன்பது வயதுடையவளாக இருந்த போது, அவர்கள் என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள்.
அதாவது நாங்கள் (நாடு துறந்து) மதீனாவிற்கு வந்தபோது, எனக்குக் காய்ச்சல் ஏற்பட்டு (என் தலை முடி உதிர்ந்து)விட்டது. பின்னர் என் தலைமுடி பிடரிவரை வளர்ந்தது. நான் என் தோழியர் சிலருடன் ஏற்றப் பலகையில் விளையாடிக்கொண்ட
ிருந்தபோது, (என் தாயார்) உம்மு ரூமான் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து என்னைச் சப்தமிட்டு அழைத்தார். நான் அவரிடம் சென்றேன். அவர் என்னை எதற்காக அழைத்தார் என்று எனக்குத் தெரிய வில்லை. அவர் எனது கையைப் பிடித்துக் கொண்டுவந்து, கதவுக்கருகில் என்னை நிறுத்தினார். (அவர் வேகமாக இழுத்துவந்ததால் எனக்கு மூச்சு வாங்கியது.) ஆஹ்... ஆஹ்... என்றேன். பின்னர் மூச்சிறைப்பு நின்றதும் என்னை (எனது) அறைக்குள் அனுப்பினார். அங்கு சில அன்சாரிப் பெண்கள் இருந்தனர். அவர்கள், ”நன்மையுடனும் வளத்துடனும் வருக! (இறைவனின்) நற்பேறு உண்டாகட்டும்” என்று (வாழ்த்துக்) கூறினர். என் தாயார் என்னை அப்பெண்களிடம் ஒப்படைக்க, அவர்கள் எனது தலையைக் கழுவி என்னை அலங்கரித்துவிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முற்பகல் நேரத்தில் திடீரென என்னிடம் வந்தார்கள். அவர்களிடம் அப்பெண்கள் என்னை ஒப்படைத்தனர். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 16. திருமணம்

திருமணத்திற்கு தகுதியற்றவர்களுக்கு வாழ்த்து சொல்வார்களா??

நிச்சயமாக இல்லை..

அன்று இத்திருமணத்தை யாரும் தவறாக பார்க்கவில்லை!!
நபியவர்களை குற்றம் சாட்டிய அக்காலத்தவர்களில் எவருமே இத்திருமணத்தை விமர்சிக்கவில்லை!!

அவரை பொய்யர் என்றவர்கள, சூனியகாரர் என்றவர்கள் இதை குற்றச்சாட்டாக சொல்லவில்லை..
இத்திருமணத்திற்கு பின் பல யூதர்கள் கூட இஸ்லாத்தை ஏற்றார்கள்.. அவர்கள் கூட இதை விமர்சனமாக கூறவில்லை..
காரணம் அது அவர்களது வழமையாக இருந்தது❗❗.

💟💟💟💟💟💟💟

✳.நபியவர்கள் தன் இச்சையை அடக்கிக்கொள்ளக்கூடியவர்களாகவே இருந்தார்கள்❗❗.


1927. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ”நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியரைக்) கட்டியணைப்பார்கள்; முத்தமிடுவார்கள்!
👇🏾👇🏾
உங்களில் தம்(உடல்) உணர்ச்சியை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக அவர்கள் இருந்தார்கள்!”
👆👆
”ஒருவர் தம் மனைவியை இச்சையுடன் பார்த்து, அதனால் விந்து வெளிப்பட்டால் அவர் நோன்பைத் தொடரலாம்!” என்று ஜாபிர் இப்னு ஸைத் கூறுகிறார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 30. நோன்பு

302. “எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அணைத்துக் கொள்ள நபி(ஸல்) அவர்கள் விரும்பினால் மாதவிடாய் போகும் இடத்தைத் துணியால் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிட்டுவிட்டு அவரை அணைத்துக் கொள்வார்கள்.
👇🏾👇🏾
நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனதைக் கட்டுப்படுத்திக் கொள்வது போன்று உங்களில் யார் தன்னுடைய மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ளமுடியும்?“
👆👆
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 6. மாதவிடாய்

இதை சொல்வது அதே ஆயிஷா அவர்கள் தான்..

 நபியவர்கள் கடுமையாக நடந்திருந்தால் இப்படி சொல்வார்களா??


நபி(ஸல்) அவர்களை மிகவும் நேசிக்ககூடியவராக ஆயிஷா அவர்கள் இருந்தார்கள். 
💟💟💟💟💟💟💟

✳.*இத்திருமணத்தால் கிடைத்த பலன்:


நபிகள் நாயகத்தின் மரணத்திற்கு பின்னால், முஸ்லிம்களிடம் ஏற்பட்ட மார்க்க பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு சொல்ல கூடியவர்களாக இருந்தனர்..

இதற்கு முக்கிய காரணம், அவர் சிறுவயது முதல் நபிகள் நாயகத்துடன் இருந்ததுவே..
மேலும், அவர் இளவயதுள்ளவராக இருந்ததனால் தான் 2210 ஹதீஸ்களை அறிவிக்க முடிந்தது..


💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟

உலகலாவிய நாடுகளில் இளவயது திருமணம்


✳1880 பெண்களின் திருமண வயதுகள்

✅US of Delaware இல் 7

✅California #🔟

¤Russia #🔟

மேலதிகமாக அறிந்துகொள்ள இதை சொடுக்கவும்
[http://chnm.gmu.edu/cyh/primary-sources/24]

✳*ரோம பேரரசில்

✅Agnes என்ற #8⃣ வயது பெண் , 30 வயது Alexius ஐ முடித்தாள்.

✅Margaret Maria of Hungary #9⃣ வயதில் முடிக்கபட்டாள்.
மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள இதை சொடுக்கவும்

[http://www.roman-emperors.org/aggiefran.htm ]

✳.*இப்போது கூட

¤Japan la 13 வயது பெண்ணுடன் செக்ஸ் வைக்கலாம்.

¤Spain 12
வயது பெண்ணுடன் செக்ஸ் வைக்கலாம்
பார்க்க:

[http://www.ageofconsent.com/ageofconsent.htm ]

✳.USA இல் கடந்த நூற்றாண்டுகளில் திருமண வயது #10.

California முதலாவதாக 10 ஐ 14 ஆக 1889 இல் மாற்றியது.

[http://www.ageofconsent.com/comments/numberone.htm]

*9 வயது தாய்லாந்து சிறுமி குழந்தை பெற்றாள்.
[THE NEW STRAITS TIMES 10/3/2001]

✳12 வயது கிறிஸ்தவ பெண்ணின் திருமணம்
[http://www.cnn.com/2003/WORLD/europe/09/30/romanian.gypsy.ap/index.html ]

✳.*பரிசுத்த வேத காமத்தில்:
AHAZ தன் 36 வது வயதில் செத்தான்.

 அவனுடைய 25 வயது மகன் HEZEKIAH ராஜாவானான்.
[II Kings 16:2,20 18:1-2]
எனவே மகன் பிறந்தபோது Ahaz கு 11 வயது. குறைந்தபட்சமாக அவன் 10 வயதில் கல்யானம் முடித்திருப்பான்.
so அவனுடைய wife கு வயது அவனைவிட குறைவுதானே??

✳.¤சொந்த மகளை செக்சு அடிமையாக கிழவனுக்கு விற்பனை செய்யலாம்.
[Exodus 21:7-10]

¤போர்களங்களில் கன்னி குழந்தைகள் உங்களுக்கு கீப்பு.
(Numbers 31:17-18 )
இவர்களும் செக்சுக்கு தான்.(Deuteronomy 21:10-14)

✳*யூத மதத்தில் 3 வயது சிறுமிடன் செக்சு வைப்பது குடும்.
[Abodah Zarah 37a , Kethuboth 11b,39a sanhedrin 55b,69a,b yebamoth 12a,57b,58a,60b]


பெண்களுக்கு கணவனை தெரிவு செய்ய, விவாகரத்து கணவனிடமிருந்து பெற்றுக்கொள்ள சலுகையை 1400 வருடங்களுக்கு முன்பே கொடுத்த பெருமையும் இஸ்லாத்தையே சாரும்..

அல்ஹம்துலில்லாஹ
######

குறிப்பு: இப்படி தெளிவாக பதில் கொடுத்த பின்னரும் சில முட்டாள் கிறிஸ்தவர்கள்,  நபி(ஸல்) அவர்கள் செய்தது தப்பு என கூறுகிறார்கள். அவர்களிடம் நான் கேட்பது,

இது தவறு என்றால்,

1.அது நடக்கும்போது அப்படி செய்யக்கூடாது என சட்டம் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்த சட்டம் என்ன? 18-19ம் நூற்றாண்டில் போட்ட சட்டத்தை அங்கு வைத்து ஒப்பிட முடியுமா?

2.சம்பந்தப்பட்ட பெண் பாதிக்கப்படவில்லையே! அப்பெண் மிகவும் மகிழ்ச்சியோடுதான் வாழ்ந்தார். தமக்கு செல்வம் வந்தபோதுகூட தம் கணவர் இதையெல்லாம் அனுபவிக்கவில்லையே என கவலைப்பட்டார். இப்படி நேசமாக ஒழுக்கமாக வாழ்ந்தோருக்கே எந்த பிரச்சினையும் இதில் இருக்கவில்லை.

1400 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த பெண்ணுக்கு நீதி பெற்றுக்கொடுக்கவா இவர்கள் பேசுகிறார்கள்?? 
நிச்சயமாக இல்லை!!  முகம்மது நபியை வெறுப்பதால் மட்டுமே இப்படி விமர்சிக்கிறார்கள்.

சம்பந்தப்பட்ட பெண்ணும் பாதிக்கப்படவில்லை. அக்கால கல்வியை பெற்றுகொள்வதற்கு அது தடையாக இருக்கவுமில்லை. அவர் தன் நண்பிகளுடன் விளையாடுவதில் கூட இத்திருமணம் தடையாக இருக்கவில்லை.

எந்த உரிமையுமே இழக்கப்படாத போது, இதை விமர்சிப்பது வெறும் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு!!
-------


அல்லாஹ் வழிதவறச்செய்கிறான் என்பதன் விளக்கம்

1.மனிதனுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது  --மனிதனுக்கு இறைவன் வழி காட்டியுள்ளான். ஒன்று அவன் நன்றியுள்ளவனாக இருக்கிறான் அல்லது காஃபிராக இருக்கிறான...