வியாழன், 23 டிசம்பர், 2021

கிறிஸ்தவம் ஒரு கேள்விக்குறி

கிறிஸ்தவம் ஒரு கேள்விக்குறி
  ------------- 



 கிறிஸ்தவத்தை சில வசனங்களில் சொல்வதென்றால், ஆதம் என்ற ஒரு மனிதன் பாவம் செய்தாராம். அதனால் அனைவரும் மரணிக்கிறார்களாம். குற்றமற்றிருந்தும் ஆதமின் பாவத்தினால் மரணிக்கிறார்களாம்.-ரோமர் 5:12-14 


 பாவத்தின் சம்பளம் மரணம் என்பதால், அனைவரும் பாவம் செய்வதாலும் செய்யாவிட்டாலும் ஆதமுடைய பாவம் காரணமாக அனைவரும் மரணிக்க வேண்டுமாம். 

இதிலிருந்து காப்பாற்ற இயேசு மரணித்தாராம். பின் மூன்றாம் நாள் எழுந்துவிட்டாராம். 

இதை நம்பினால் மட்டும் இரட்சிப்பு கிடைக்குமாம். இலலைனா நித்திய மரணத்தை அடைவார்களாம்.


 கிறிஸ்தவர்கள் இயேசு வெறும் மனிதரல்ல.. 

அவர் மனித வேசம் போட்ட கடவுள் என்கிறார்கள். 

 ஆகவே நாம் ஒவ்வொன்றாக இயேசு முதல் சிலுவைப்பலி வரை அலசுவோம்:

 தலைப்புகள்: 

 1.இறைவன் மனிதனாக முடியுமா? 


 2.இயேசு இறைவனுடைய மகனா? 


 3.இயேசு தேவ வார்த்தை என்பதனை அலசல்: 

 அ.வார்த்தை என்பது ஒரு நபரா? 

 ஆ.இயேசு இறைவனுடைய வார்த்தை என்பது என்ன? 

 இ. இயேசு சகலதும் உண்டாக முன்பே இருந்தாரா? 


 4.ஆதமுடைய பாவத்தினால் மரணம் உண்டானதா? அவரினால் நாம் மரணிக்கிறோமா? 


 5.பாவத்தின் சம்பளம் மரணம் என்பது உலக மரணமா? நித்திய அக்கினி எனும் மரணமா? 

 6.பாவத்திற்கு இரத்தப்பலி கட்டாயமா? 

 7.இயேசுவை பலியாக்குவது நீதியா? 

 8.இயேசுவா சாத்தானா? 

 9.இயேசு பலியாக இருக்க தகுதியா? 

 10.இந்த சிலுவை நம்பிக்கை எப்படி ஊடுருவி இருக்கும்? 

 ஒவ்வொன்றாக அலசுவோம்:

 ------------------------------------------------ 

 1.இறைவன் மனிதனாக முடியுமா?? 

 ------------------------------------------------ 

 மனிதன் என்பவன் இறைவனது படைப்பு ஆவான். ஒரு பிள்ளை பிறக்கிறது என்றால், இறைவன் அப்பிள்ளையை படைக்கிறான் என்பதாகும். 

 இயேசு மர்யமிடம் பிறந்தார். அதாவது மரியமின் இரத்தக்கட்டி தான் இயேசு.
 ஆகவே இயேசு இறைவனது படைப்பு ஆவார். இறைவன் படைப்பது அவனது அவதாரமோ , இறைவனோ ஆகமுடியாது. 

 கன்னிப்பிறப்பாயினும் கலப்பு பிறப்பாயினும் இறைவனே படைக்கிறான். இராணி தேனீக்கள் கலப்பின்றி (ஆண்-பெண் கலப்பு இல்லாமல்) சிறிய தேனீக்களை உற்பத்தி செய்வதில்லையா? அதே போன்று தான், அன்னை மர்யமிடம் தலைவர் படைக்கப்பட்டார். (சில லூசுகள் குர்ஆன் 27:8 ஐ காட்டி வாதிட முனைவதுண்டு. அங்கே இறைவன் தன் கண்ணியத்திற்கு ஏற்றவாறு நின்ற இடத்தை சூழ நெருப்பு இருந்தது. அவ்வளவே இறைவன் நெருப்பாகவோ நெருப்பிலிருந்து தோன்றவோ இல்லை)

 ஆகவே இறைவனால் படைக்கப்பட்டவர், படைப்பே அன்றி இறைவனாகவோ அவதாரமாகவோ முடியாது 

 ------------------------------------------------ 

 2.இயேசு இறைவனுடைய மகனா?

 ------------------------------------------------

 இறைவனுக்கு மனைவி என யாரும் இல்லை என்பதால், யாரும் இறைவனது மகனாக ஆக முடியாது.. 

 இறைவன் ஒரு பெண்ணிடம் படைத்த ஒரு மனிதர், ஓர் அடியாரே அன்றி மகனாக மாட்டார்.

 (பழைய ஏற்பாட்டில், இறைவனை வணங்குவோர் இறைவனின் பிள்ளைகள் என்றும், பேலியாளை வணங்கியோர் பேலியாளின் பிள்ளைகள் -உபா13:12,நியா19:22- என்றும், அந்நிய தேவதைகளை வணங்கிய பெண்களை அந்நிய தேவதைகளின் குமாரத்திகள் என்றும் -மல்கியா2:11- உவமையாக சொல்லப்பட்டுள்ளன. இதேபோல இறைவனது மனைவி-ஓசியா2:2-19,எரேமியா3:8- என மக்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அது உவமையே அன்றி நேரடி அர்த்தம் அல்ல!) 


 ஆகவே இறைவனின் மனைவி அல்லாத ஒரு பெண்ணிடம் படைக்கப்பட்டவர், இறைவனுடைய மகனாக ஆக இயலாது. அவர் படைப்பே ஆவார். மேலும் அப்பெண்ணின் மகன் ஆவார் 

 ------------------------------------------------ 


 3.இயேசு தேவ வார்த்தை என்பதை சற்று ஆராய்வோம்


   

அ.வார்த்தை என்பது ஒரு நபரா?:


 வார்த்தை என்பது இறைவனது பேச்சு ஆகும். இறைவனது பேச்சு , இறைவனது பண்பு. அது ஓர் ஆள்தத்துவம் (தனியான நபர்) அல்ல!

 பைபிள் இறைவனது வார்த்தை என அடையாளப்படுத்துவது, இறைவனின் "ஆகு" என்ற கட்டளை ஆகும். 

 பைபிள் அடிப்படையில் இவ்வார்த்தை மூலம் சகலதும் படைக்கப்பட்டது. 

 "தேவன் வெளிச்சம் உண்டாகக் கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று" (ஆதியாகமம் 1:3) 

 "பின்பு தேவன் பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாய விரிவிலே சுடர்கள் உண்டாகக் கடவது..... அவைகள் பூமியின் மேல் பிரகாசிக்கும்படி வானம் என்கிற ஆகாய விரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார். அது அப்படியே ஆயிற்று" (ஆதியாகமம் 1:14-15) 

 இதை சுருக்கமாக,

 "அவர் சொல்ல ஆகும். அவர் கட்டளையிட நிற்கும்" -சங்கீதம் 33:9 


 "அவைகள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது; அவர் #கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது"- சங்கீதம் 148:5 


 ஆகவே, வார்த்தை என்பது இறைவனது " ஆகு" என்ற கட்டளையே அன்றி, ஒரு நபர் அல்ல! 

 இறைவன் "ஆகு" என கட்டளையிடுவார். அது உடனே உண்டாகிவிடும். ஆகவே , இறைவன் இடும் கட்டளை , இறைவனது குமாரனாகவோ, அல்லது நபராகவோ இருக்க முடியாது. அது பேச்சு மட்டுமே
  ---- 


 ஆ. இயேசு இறைவனுடைய வார்த்தை என்பது என்ன?: 




 "வார்த்தை மாம்சமாகியது" என யோவான் 1:14 இல் யோவான் எழுதுகிறார் (அது யோவானின் புரிதல்). 

 வார்த்தை மாம்சமாக முன்பு, இயேசு என்ற ஒரு பொருளே இருக்கவில்லை!

 மாறாக வார்த்தை தான் இருந்தது. இந்த வார்த்தை "ஆகு" என்ற கட்டளை ஆகும் என்பதை மேலே சொல்லிவிட்டோம். 

 இந்த கட்டளை ஒரு படைப்பு அல்ல! மாறாக மர்யம் பெற்றெடுத்த இயேசு ஒரு படைப்பு ஆவார். "ஆகு" என்ற கட்டளையை மர்யமின் மீது போட்டதால், இயேசு மர்யமின் கருவில் படைக்கப்பட்டு விட்டார். 

 அதை தான், வார்த்தை மாம்சமாகியது என அர்த்தப்படுத்த முடியும்.

 இவ் வார்த்தை மூலம் மாம்சமாக ஆக்கப்பட்டதால் தான் , இயேசு இறைவனுடைய வார்த்தை என அழைக்கப்படுகிறார். 

 அதாவது "வார்த்தையின் மூலமாக மாம்சமாக ஆக்கப்பட்டார்" அவ்வளவே! மற்றபடி , இயேசு ஒரு படைப்பே அன்றி வேறில்லை! 

ஏனையோர் ஆண்-பெண் கலப்பு மூலம் படைக்கப்படுகின்றனர். இயேசு பெண்ணில் வார்த்தைமூலம் படைக்கப்பட்டார். இறைவன் தன் வார்த்தை மூலம் படைத்த படைப்பு, இறைவனாகவோ , குமாரனாகவோ , அவதாரமாகவோ ஆக இயலாது. 
 ---- 


 இ. இயேசு சகலதும் உண்டாக முன் இருந்தாரா?: 



 நிச்சயமாக இல்லை! வார்த்தை மாம்சமாக முன் இயேசு இல்லை!
 வார்த்தை என்பது நபரும் அல்ல!! 
அது இறைவனது கட்டளை.


 இறைவனுடைய சித்தத்தில் நாம் எல்லோருமே நாம் உண்டாக்கப்பட முன்பே இருந்தோம். 
அது போன்று தான் இயேசுவும். 

 எரேமியா தீர்க்கதரிசியை குறித்தான வசனத்தை இதற்கு ஓர் உதாரணமாக கருதலாம்! 

 “"நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார்."” — Jeremiah எரேமியா 1:5 (TBSI) 

 பிறக்க முன்பே இறைவனது தீர்மானத்தில் அனைவரும் உள்ளோம். அது போன்றே இயேசுவும்!


 ------------------------------------------------ 

 4. ஆதமுடைய பாவத்தினால் மரணம் உண்டானதா? அவரினால் நாம் மரணிக்கிறோமா? பழைய ஏற்பாடு என்ன சொல்கிறது? 

 ------------------------------------------------ 



 ஆதம் மரணிக்க முக்கிய காரணமே, இறைவன் அவரை மரணிக்கக்கூடியவராக படைத்தான் என்பதும், ஜீவ மரத்திலிருந்து அவர் சாப்பிட விடப்படவில்லை என்பதும் மட்டுமே காரணம்! 

 “"பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று,"”
 — Genesis ஆதியாகமம் 3:22 (TBSI)


 அதாவது, ஆதம் ஜீவ மரத்திலருந்து சாப்பிட்டுவிட்டால் என்றென்றைக்கும் உயிரோடு இருந்துவிடுவாராம். அவ்வாறு இருந்து விட கூடாது என்பதற்காக ஏதேனிலிருந்து விரட்டப்பட்டார்.


 இதன் காரணமாக தான், பழைய ஏற்பாட்டின்படி மரணம் ஏற்படுகிறது. பாவத்தினால் அல்ல! 

 ஆகவே இந்த பாவத்தினால் மரணம் ஏற்படுகிறது என கூறுவது பச்சை அபத்தமாகும்.


 இறைவன் ஏற்கனவே மனிதனை மரணிக்க கூடியவனாக படைத்தான்.

 அந்த ஜீவ பழத்தை சாப்பிட்டால் மட்டுமே என்றென்றைக்கும் இருக்க முடியும். ஏற்கனவே இருந்த மரணம் , ஜீவ மரத்திலிருந்து சாப்பிடாததால் இல்லாமல் செய்யப்படவில்லை! அதுமட்டுமின்றி, பைபிள்படி ஏனோக் (ஆதி 5:22,24), எலியா (2இராஜாக்கள்2:11) ஆகியோர் மரணித்ததாக இல்லை! மாறாக வானத்திற்கு உடலுடன் ஏறிவிட்டனர். இவர்களுக்கு பாவம் கடத்தப்படவில்லையா?


 நிச்சயமாக மரணம் பாவத்தினால் உண்டாகவில்லை! இறைவன் மரணிப்போராக மனிதனை படைத்தார் என்பதே பழைய ஏற்பாடு கூறுவது!! 


 ------------------------------------------------

 5.பாவத்தின் சம்பளம் மரணம் என்பது, உலக மரணமா? நித்திய அக்கினி எனும் மரணமா?

 ------------------------------------------------ 



 பழைய ஏற்பாட்டில், மரணம் என்பது நித்திய அழிவு எனும் நரகத்தையும், வாழ்வு என்பது அதிலிருந்து ஈடேற்றம் பெறுவதையுமே குறிக்கும். இவ்வுலக மரணத்தை அல்ல!


 ²¹ "துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை." 

 ²² அவன் செய்த எல்லா மீறுதல்களும் நினைக்கப்படுவதில்லை; அவன் தான் செய்த நீதியிலே பிழைப்பான். 

 ²³ துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 

 ²⁴ "நீதிமான் தன் நீதியைவிட்டுவிலகி, அநீதி செய்து, துன்மார்க்கன் செய்கிற சகல அருவருப்புகளின்படியும் செய்வானேயாகில், அவன் பிழைப்பானோ? அவன் செய்த அவனுடைய எல்லா நீதிகளும் நினைக்கப்படுவதில்லை; அவன் செய்த தன் துரோகத்திலேயும் அவன் செய்த தன் பாவத்திலேயும் சாவான்." 
 (எசேக்கியேல் 18:21-24) 


 இங்கே துன்மார்க்கனாக இருந்து பிறகு திருந்தி நீதமானாக மாறுபவன் தன் பாவத்தின்படி சாகமாட்டானாம்-21 

 அவன் பிழைத்து கொள்வானாம்-22

  ஆனால் எல்லோரும் மரணிக்கிளார்கள். நீதிமான் இவ்வசனத்தின் படி சாக கூடாதே? 

 ஆகவே இவ்வசனம் சொல்வது, இவ்வுலக மரணத்தை அல்ல! நித்திய அழிவான நரகம் ஆகும். 

 ஆகவே பாவத்தின் சம்பளம் மரணம் என்பது, இவ்வுலக மரணம் அல்ல! மாறாக நீதிமான் பிழைத்துக்கொள்ளும், துன்மார்க்கன் பிழைத்துக்கொள்ளாத மரணம் ஆகும். அதாவது நரகம்.. ஆகவே இதை கிறிஸ்தவர்கள் தம் வாதத்திற்கு ஆதாரமாக காட்டுவதே தப்பு!



 ------------------------------------------------ 

 6.பாவத்திற்கு இரத்தப்பலி அவசியமா? -பழைய ஏற்பாட்டு அடிப்படையில்?

 ------------------------------------------------ 



 பைபிள் படி பலி என்பது ஒரு தண்டப்பணம் போல அறவிடப்படும் ஒன்று ஆகும். இதற்காக ஆட்டை பலி கொடுக்கலாம். அல்லது புறாவை பலி கொடுக்கலாம். அல்லது மாவை பலியாக கொடுக்கலாம். 


 ⁶6 "தான் செய்த பாவத்துக்குப் பாவநிவாரணபலியாக, ஆடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது, ஒரு பெண்குட்டியைக் குற்றநிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்." 

 ⁷7. "ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், அவன் செய்த குற்றத்தினிமித்தம் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைப் பாவநிவாரண பலியாகவும் மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும், கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன்." …

 11."இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், பாவம் செய்தவன் பாவநிவாரணத்துக்காக ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கைத் தன் காணிக்கையாகக் கொண்டுவருவானாக; அது பாவநிவாரண பலியாயிருப்பதினால், அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலும் இருந்து," 
 (லேவியராகமம் 5:6-7,11)




 ஆகவே இரத்தப்பலி கட்டாயம் இல்லை! மாவை கூட பலியாக கொடுக்கலாம் . யோனாவின் மக்கள் பாவம் செய்த போது, மன்னிப்பதற்கு பலி கோரப்படவில்லை! மாறாக மன்னிக்கப்பட்டனர்.


 “வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.” — Jonah யோனா 4:11 (TBSI)


 அதுமட்டுமின்றி , தேவனுக்கு இதுபோன்ற பலிகளில் இஷ்டம் இல்லை! 

 “"பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல், என் செவிகளைத் திறந்தீர்; சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் நீர் கேட்கவில்லை."” — சங்கீதம் 40:6 (TBSI)


 “"பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல."” — சங்கீதம் 51:16 (TBSI) 


 -தேவன் விரும்பும் பலி நொறுங்குண்ட ஆவி தான். அதாவது மனந்திருந்தி இறைவனிடம் முற்றாக மீண்டுவிடுவதையே தேவன் விரும்புகிறார்: 

 17 "தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்." .

 19 அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய நீதியின் பலிகளில் பிரியப்படுவீர்; அப்பொழுது உமது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள். 
 (சங்கீதம் 51:17,19) 



 -மனந்திருந்தி மன்னிப்பு கேட்டால் , இறைவன் மன்னிப்பார் என்றே பைபிள் சொல்கிறது: (புதிய ஏற்பாட்டு கட்டுகதை அல்ல) 


 “"துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்."” 
 — ஏசாயா 55:7 (TBSI) 



 “"அவர்கள் எனக்கு விரோதமாய்க்குற்றஞ்செய்த அவர்களுடைய எல்லா அக்கிரமங்களுக்கும் அவர்களை நீங்கலாக்கிச் சுத்திகரித்து, அவர்கள் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணின அவர்களுடைய எல்லா அக்கிரமங்களையும் மன்னிப்பேன்."” — எரேமியா 33:8 (TBSI)


 “"நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். (சேலா)"” — சங்கீதம் 32:5 (TBSI) 



 “"என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்."” — 2 நாளாகமம் 7:14 (TBSI)



 மேலும், இஸ்ரேலியர் குற்றம் செய்தபோது கூட, மோசேயின் பிரார்த்தனைப்படி மன்னிக்கப்பட்டனர். இரத்தப்பலி கோரப்படவில்லை! பாவம் மன்னிக்க இரத்தப்பலி அவசியம் என்பது பச்சை பொய் ஆகும்! 



 ------------------------------------------------ 

 7.இயேசுவை பலியாக்குவது நீதியா?

 ------------------------------------------------



 மனந்திருந்தியோரின் பாவத்திற்காக பலியாக இயேசு கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. 

 ஒருவரை அவர் செய்யாத பாவத்திற்காக தண்டிப்பது எப்படி நீதி ஆகும்? அவர் தண்டிப்பது கூட , மர்யமின் மகனான இயேசுவின் உடலை ஆகும்! உயிரை அல்ல! 


 ஒரு மனிதனின் பாவத்திற்காக, இன்னொரு மனிதனை தண்டிப்பது அநீதி ஆகும். இதில் அன்பு இல்லை!


 இயேசுவை கொன்றதால், யோக்கியன் இவ்வுலகில் சாகாமல் இருக்கிறானா? இல்லையே!!


 இது நித்திய மரணத்திலிருந்து காப்பாற்ற இயேசுவை கொன்றதாயின், இயேசுவையும் நித்திய மரணத்தில் போட்டு அல்லவா தண்டிக்க வேண்டும்? இங்கேயே லாஜிக் பல்லிளிக்குதே! 




 ------------------------------------------------ 

 8.இயேசுவா சாத்தானா?

 ------------------------------------------------



 இயேசு எனும் அப்பாவியை மற்றோருக்காக தண்டிப்பதற்கு பதிலாக , சாத்தானை தண்டித்தால் எல்லாம் நீதியாக இருக்குமல்லவா? பைபிள் அடிப்படையில், இயேசுவை கொல்லுவதற்கு சாத்தானே திட்டம் தீட்டினான். 


 

 26⁶ "இயேசு பிரதியுத்தரமாக: நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார்."

 27⁷ "அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். . இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார்." இயேசுவை கொல்லுவது சாத்தானின் பிள்ளைகளுடைய வேலை என இயேசுவே சொல்கிறார்: 
(யோவான் 14:26-27)


 40⁰ "தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொள்ளத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே." … 

 44. நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப்பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான். (யோவான் 8:40,44)


 இயேசுவை கொல்ல ஒப்படைத்தவர்களுக்கு அதிக பாவம் உண்டு என்றும் சொல்கிறார்:


 “"இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது; ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார்."” — John யோவான் 19:11 (TBSI)



 இயேசுவை தேவன் பலிகொடுத்தால், எப்படி பாவம் உண்டாகும்? 


சாத்தான் ஏன் கொல்ல விரும்புவான்? சாத்தானின் பிள்ளைகள் ஏன் கொல்வார்கள்? 

 பாவத்திற்கு காரணமான சாத்தானை கொல்லாமல், நீதிமானை ஏன் தண்டிக்க வேண்டும்? 

 அப்படி தண்டிப்பது அநீதி அல்லவா?


 -இதற்கு பதிலாக ஒரு ஆட்டுக்குட்டியையோ ஒரு புறாக்குஞ்சையோ அல்லது மாவையோ இயேசுவின் கையோடு கொடுத்து அனுப்பி அதை பலியாக்கலாம் இல்லையா?? 

 ஆகவே இப்பலி மடத்தனம் ஆகும். தேவன் தன் குமாரனின் (இவர்கள் நம்பிக்கைப்படி) ஆவியை கொல்லாமல், மர்யமின் மகனான உடலை அல்லவா பலி கொடுக்கிறார்? அது எப்படி நீதி ஆகும்? 


 ------------------------------------------------ 

 9.இயேசு பலியாக தகுதியானவரா?

 ------------------------------------------------ 


 கிறிஸ்தவ நம்பிக்கைப்படி பாவமற்றவரே பலியாக வேண்டும். 

 ஆதிபாவத்தை இவர்கள் நம்புகிறார்கள். மர்யமின் மூலம் பிறந்தவர் இவர்களின் நம்பிக்கைப்பிரகாரம் மரணமுள்ளவராக தான் பிறக்கிறார்.


 மரணம் என்பது இவர்களின் நம்பிக்கைபிரகாரம் ஆதமின் பாவத்தினால் உண்டானது (இது தவறான கொள்கை என விளக்கிவிட்டோம்). 

ஆக ஆதமின் பாவத்தினால் மரணிக்கக்கூடியவர் அதற்கேற்றாற்போல் பாவத்தோடே பிறந்துள்ளார். அது உண்மையாயின்,


 பாவத்தோடு பிறந்த இயேசு எப்படி பலியாக முடியும்?? 

 இறைவன் நாடினால் பாவம் இல்லாமல் பிறக்கச்செய்ய முடியும் என வாதிட்டால், அது தவறு.


 ஏனெனில் அவர் மரணிக்ககூடியவராக படைக்கப்பட்டார் என்றாலே இந்நம்பிக்கைப்பிரகாரம் பாவத்தோடு தான் பிறந்துள்ளார். ஆகவே அவர் பலியாக இருக்க தகுதியற்றவர். இதற்கு தகுதியாகனும் எனின் , பெண்ணிடம் பிறக்காமல் இருந்திருக்க வேண்டும்.


 ----------------------------------------------- 

 10.இந்த சிலுவை நம்பிக்கை எப்படி ஊடுருவி இருக்கும்? 

 ------------------------------------------------


 இயேசுவை நீதிமானாக இவர்கள் பார்த்தார்கள். ஆனால் நீதிமானான இயேசுவை ரோம சிப்பாய்கள் மூலம் மரத்தில் தொங்கவிட்டனர் என நம்பினர். மரத்தில் தொங்கவிடப்பட்டவனோ சபிக்கப்பட்டவன் என உபாகாமம் 21:23


 “இரவிலே அவன் பிரேதம் மரத்திலே தொங்கலாகாது; அந்நாளிலேதானே அதை அடக்கம் பண்ணவேண்டும்; தூக்கிப்போடப்பட்டவன் தேவனால் சபிக்கப்பட்டவன்; ஆகையால் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் உன் தேசத்தைத் தீட்டுப்படுத்தாயாக.” — Deuteronomy உபாகமம் 21:23 (TBSI) 


 ஆகவே இயேசு சபிக்கப்பட்டவராக ஆகிவிடுவார். 

 இதை சமாளிக்க தான், இயேசு தன் பாவத்தினால் சாபமாகவில்லை. பாவிகளுக்காக சாபமானார் என எழுதினார் பவுல்- கலாத்தியர்3:13.

 இங்கே இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. இயேசு நீதிமான் என்றால், நீதிமானை கொன்ற பாவம் ரோம சிப்பாய்களுக்கும் பிலாத்துக்கும் ஏற்படுமே. அதை சொன்னால், அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்வதாக கருதி கொன்றுவிடுவார்களே. 

 அதற்காக முழு பலியையும் யூதன் மேல் போட்டுவிட்டனர் பவுலிய கிறிஸ்தவர்கள். அதாவது சைக்கோ பிளாத்து நல்லவனை போல சித்தரித்து , அவனையும், அவன் மனைவியையும், ரோமர்களையும் இதிலிருந்து விடுவித்தனர்.:



 17. "பொறாமையினாலே அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து," 

 18. "அவர்கள் கூடியிருக்கையில், அவர்களை நோக்கி: எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாசையோ? கிறிஸ்து என்னப்படுகிற இயேசுவையோ? என்று கேட்டான்." 

 19. "அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர்நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச்சொன்னாள்." 

 20."பரபாசை விட்டுவிடக் கேட்டுக்கொள்ளவும், இயேசுவைக் கொலைசெய்விக்கவும் பிரதான ஆசாரியரும் மூப்பரும் ஜனங்களை ஏவிவிட்டார்கள்." … 

 22. "பிலாத்து அவர்களை நோக்கி: அப்படியானால், கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று எல்லாரும் சொன்னார்கள்." 


 23. "தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்." 


 24. "கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான்." 

 25.⁵ அதற்கு ஜனங்களெல்லாரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள்மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள்.
 (மத்தேயு 27:17-20,22-25)



 -இயேசுவை தொங்கவிட்டதால் இயேசு சபிக்கப்பட்டவர் என்பதாலும் ரோமர்களை காப்பாற்றவும், அதை சமாளிக்க தேவன் தான் இயேசுவை பலியாக அனுப்பினார் என்றனர்.



 -தேவன் பலியாக ஒரு மனிதனை கொடுப்பதாயின், அம்மனிதனுக்கு விருப்பம் இருக்கவேண்டுமே. அதற்காக இயேசு தன் ஆத்மாவை கொடுக்கவே வந்தார் என எழுதினர். 



 -நரபலி கூடாது இல்லையா? அதை சமாளிக்க இயேசு சாதாரண மனிதர் அல்ல. பரலோகத்திலிருந்து வந்தவர் என எழுதினர்.



 -தேவன் அநியாயமாக ஒருவரை கொன்றுவிட்டார் என தேவனை கேவலமாக சித்தரிப்பதால், மூன்றாம் நாளில் தேவன் அவரை எழுப்பினார் என்றும் அடித்துவிட்டனர்.

 இப்படி தான் இந்த கதை காலத்துக்கு காலம் மாறுதலடைந்து, சுவிசேச கதைகளாக எழுதப்பட்டன. அவற்றை வேறொரு பதிவில் ஆராய்வோம்!! 
 ----------------------------------------------- 

திங்கள், 7 டிசம்பர், 2020

கிறிஸ்தவம் ஓர் அறியாமை

கிறிஸ்தவம் ஓர் அறியாமையா? 
------------------------------------------------



கிறிஸ்தவம் என்பது இறைவன் நம் பாவத்தை மன்னிக்க இயேசுவை சிலுவையில் கழுவேற்றி நமக்காக சாகடித்தார் பின்பு அவரை உயிர்த்தெழுப்பினார்/உயிர்த்தெழுந்தார் என்பதாகும்.


கிறிஸ்தவர்கள் இதை கூறும்போது, கடவுள் நம் பாவத்திற்காக மனிதராக (இயேசுவாக) வந்து நமக்காக இன்னல்பட்டு மரித்தார் என சொல்லி, "பார்த்தீர்களா கடவுளின் அன்பை? எவ்வளவு அன்பு ? இப்படி எந்த கடவுளாவது தன் பக்தருக்காக செத்துப்போவாரா?" என்றெல்லாம் கூறி நம்மைல்லாம் முட்டாள்கள் என கூறுகிறார்கள்.


அதனால் தான் இதை எழுதுகிறேன்.


இதை நாம் சில கோணங்களில் ஆராய்வோம்:

1.கடவுளால் மனிதனாக இயலுமா? தகுமா?

2.கடவுள் மனிதனாக பிறந்து வருவது கடவுளது அறிவீனமா? அறிவாளித்தனமா?



3.இயேசுவை கொன்றது பலியா? பாவமா?


4.இயேசுவை கொன்றது கடவுளின் அன்பா? கொடூரமா? அல்லது ஏமாற்று வேலையா?



5. இப்படிப்பட்டவர் கடவுள் எனின், அவருக்கு நாம் கூறும் ஆலோசனை அல்லது அட்வைஸ் என்ன?

ஆகிய ஐந்து சிறு பிரிவுகளாக பிரித்து ஆராய்வோம்:



1.கடவுளால் மனிதனாக வர இயலுமா? தகுமா?:
-----

கிறிஸ்தவர்களை பொருத்தமட்டில், 

கிருஷ்ணர் கடவுள், அவர் மனிதனாக வந்தார், புத்தராக வந்தார்,இராமராக வந்தார் என்றெல்லாம் இந்துக்கள் சொன்னால், அதையெல்லாம் கேலி செய்வார்கள். ஆனால் அதுவே கடவுள் இயேசு மனிதனாக வந்தார் என சொன்னால்,

"பார்த்தீர்களா? நமக்ககாக மரிப்பதற்கு வந்திருக்கிறார். எந்த கடவுளாவது தன் பக்தனுக்காக மரிப்பாரா? எவ்வளவு அன்பு?" அப்படீனு எல்லாம் பீத்திக்கொள்வார்கள்.


முதலில் கடவுள் மனிதனாக வர இயலுமா?



இறைவன் மனிதனாக வருவதாக இருந்தால், ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது. அது மனிதனை போல மாறு வேசத்தில் வருவது மட்டும் தான்.

அப்படி உலகத்தில் எந்த மதமும் கூறுவதில்லை.

மாறாக மனிதனாக பெண்ணிடம் பிறந்து முலைப்பால் அருந்தி வளர்ந்து பெரியவர்களான மனிதர்களை குறித்தே இறைவன் மனிதனாக வந்தார் என வாதிடுகிறார்கள்.

இது சாத்தியமா????


-இறைவன் என்பவன் சகலதையும் படைத்தவன், மற்றும் படைக்கப்படாதவன், ஆரம்பம் இறுதி அற்றவன்.


-மனிதனை பொருத்தமட்டில் , அவன் ஒரு படைப்பு, ஆரம்பம் முடிவு உள்ளவன்.


மனிதன் ஒரு நாளும் இறைவனாக முடியாது. காரணம் அவன் ஒரு படைப்பு ஆவான். படைப்பு ஒரு நாளும் இறைவனாகாது. மாறாக சகலதையும் படைத்தவனே இறைவன்.




-இறைவன் மனிதனாக பிறந்து வருகிறான் எனின், அதை இரு வகையாக பிரிக்கலாம்.

1.வானத்திலிருக்கிற இறைவன் முழுவதுமாக மனிதனாவது. வானத்தில் இறைவன் அற்றுப்போவது.:

இப்படி நடந்தால், இறைவன் படைப்பாக மாறுவதால், அவரால் திரும்ப இறைவன் எனும் அந்தஸ்த்தை அடைய இயலாது.

ஏனெனில் எந்த ஒரு படைப்புக்கும், மனிதனக்கும் இறைவன் எனும் அந்தஸ்த்தை அடைய இயலாது.

ஆகவே இறைவன் இப்படி பூரணமாக மனிதனானால், அவர் மனிதனாகவே அழிந்து விடுவார். கடவுளே இல்லாமலாகிவிடுவார்.



2.இறைவன் வானத்திலிருந்து கொண்டே பூமியில் மனிதனாக வருதல்:


இந்த கிறிஸ்தவர்கள் உட்பட அத்வைதிகளின் கோட்பாடு கூட இதுவே தான்.

இங்கேயும் பெரிய பிரச்சினை உள்ளது.

மனிதனாக பிறந்து வருவதால், படைப்பாக மாறுகிறார்.

அதாவது இறைவன் தன்னை ஒரு மனிதனாக படைக்கிறார் என்பதாகும். ஏனெனில் மனிதன் ஒரு படைப்பு ஆகும்.


இறைவன் தன்னை போல படைத்தால் என்ன எப்படி படைத்தால் என்ன , அது படைப்பாக தான் இருக்க போகிறது.

படைப்பு படைத்தவன் அல்ல.


ஆகவே இறைவன் வானத்தில் இருக்க, பூமியில் மனிதனாக வருதல் என்பது,,, வானத்திலிருந்து கொண்டு ஒரு மனிதனை படைப்பதாகவே அமைகிறது.

ஆகவே படைக்கப்பட்டவர் தன்னை படைத்தவராக ஒருநாளும் இயலாது



ஆகவே இறைவன் ஒருநாளும் மனிதனாக பிறந்து வர இயலாது.


ஒரே நேரத்தில் படைப்பாகவும் படைத்தவராகவும் இருக்க இயலாது. படைக்கப்பட்டவர் இறைவனாகவும் முடியாது.


*இறைவன் மனிதனாக வந்தார் என முற்கால மக்கள் ஏன் இட்டுக்கட்டினார்கள்??


குறித்த மனிதர்கள் மீதுள்ள அளவுகடந்த நேசத்தாலும் மரியாதையாலும் , "குறித்த மனிதர்களை இறைவனின் அவதாரங்கள் அல்லது இறைவன் தான் மனிதனாக வந்தார்" என இட்டுக்கட்டினார்கள்.


இது போன்ற கிறிஸ்தவர்களுக்கு குர்ஆன் ஒரே வசனத்தில் தெளிவை கொடுக்கிறது:


"மர்யமின் மகன் தூதுவரே அன்றி வேறில்லை. அவருக்கு முன்னர் பல தூதுவர்கள் சென்றுவிட்டனர். அவருடைய தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உட்கொள்வோராகவே இருந்தனர். பல அத்தாட்சிகளை கொண்டு நாம் அவர்களுக்கு எவ்வாறு தெளிவாக்குகிறோம் என்பதை கவனிப்பீராக! பின்னர் , அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனிப்பீராக!"
(5:75)


இவ்வசனத்தில்

-அவர் மர்யமின் மகன் என சொல்கிறது. ஒரு பெண்ணுக்கு பிறந்தவர் படைப்பாகவே இருக்கிறார். இறைவனுக்கு தாய் இல்லை

-அவர் ஒரு தூதுவர். அவர் மட்டும் அல்ல. அவருக்கு முன்னரும் பலர் இருந்துள்ளனர். அதன்படி அன்னாருக்கும் முடிவு உண்டு.

-அவரது தாய் உண்மையாளர். அவருக்கு தாய் உண்டு. ஆகவே ஆரம்பம் உண்டு. மேலும் அவர் படைப்பின் மகன் படைப்பாகவே ஆகுவார்.


-அவ்விருவரும் உணவு உட்கொள்வோராகவே இருந்தனர். அதாவது சாதாரண படைப்பாக அல்லாமல் பலவீனமான இரு படைப்புகளாக அவர்கள் இருந்தனர். உணவு இல்லாமல் சில உயிர்கள் வாழும். ஆனால் இவ்விருவருமோ உணவு உட்கொண்டே வாழ்ந்தனர்.


இப்படி தெளிவாக விளக்கிய பின்னரும், இதற்கு நொண்டி சாக்குபோக்குகளை கூறி அன்னவரை கடவுள் என வாதிடுவோர் பலர் இருப்பார்கள் என்பதையும் தெளிவாக்குகிறது.




ஆகவே மனிதன் இறைவன் அல்ல. மாறாக படைப்பு ஆகும்.

இறைவன் ஒருவரை படைத்தால், குறித்த நபர் படைப்பாகவே இருப்பார். இறைவன் அல்ல.

இறைவனால் மனிதனாக பெண்ணிடம் பிறந்து வர இயலாது. காரணம் இறைவன் அப்படி செய்வது என்பது ஒரு படைப்பாகவே இருக்கும்.


ஆகவே இவ்வாதம் மிகவும் அபத்தமான ஒன்று ஆகும்.
------------------


அடுத்த தலைப்பிற்கு நகர்வோம்
------


2.கடவுள் மனிதனாக பிறந்து வருவது கடவுளது அறிவீனமா? அறிவாளித்தனமா?



முதல் பகுதியில் இறைவன் மனிதனாக வர இயலாது என்பதை பார்த்தோம். ஏனெனில் படைப்பு படைத்தவனாக இருக்க இயலாது. படைப்பும் படைக்கப்பட்டவரும் ஒரே நபராக இருக்க இயலாது.



ஒரு பேச்சுக்கு இவர்களது கற்பனைகளின்படியே கவனித்தால்,

இப்படி வருவது இவர்களின் வேதப்படி அறிவாளித்தனமா? மடத்தனமா?



இறைவன் மனிதனோ மனிதகுமாரனோ அல்ல என எண்ணாகமம் 24:19 , 1 சாமுவேல் 15:29


“இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய்சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை; மனம் மாற அவர் மனுஷன் அல்ல என்றான்.”
  — 1 சாமுவேல் 15:29 (TAM)



மனிதனை இறைவன் என்று சொல்வது தேவ தூசணம் ஆகும்.



அப்படியிருக்க, தேவன் மனிதனாக வந்தால், மனிதர்கள் பார்வையில் அவர் தன்னை தேவன் என சொல்வது தேவதூசணம். ஏனெனில் அவர் பூமியில் மனிதனாகவே இருக்கிறார் என்பதால்.


தேவன் போதித்த சட்டத்தின்படியே, தேவதூசணம் செய்வோர் கொல்லப்பட வேண்டியவர்கள்.

ஆகவே தேவன் மனிதனாக பூமிக்கு வந்தால், அவர் தன்னை தேவன் என வாதிப்பதாலோ மறைமுகமாக வாதிப்பதாலோ தேவதூசணம் செய்ததால், மரணதண்டனைக்கு உட்படுவார்.


அதாவது, தேவன் மனிதனாக வந்தால் கொல்லப்பட வேண்டும். அவர் என்ன ஆதாரம் கொடுத்தாலும், அவர் தன்னை தானே காப்பாற்றிக்கொள்ளாதவரை , மரணதண்டனைக்கு உட்படுவார்.



அவராக வந்து அவரே விதித்த தண்டனைச்சட்டப்படி, அவர் கொல்லப்பட வேண்டியவர்.


இது மற்றவர்களின் பாவத்திற்காக அல்ல. அவர் மனிதனாக வந்த பாவத்திற்காகவே அமையும்.


அதுமட்டுமின்றி தேவனையே கொன்ற பாவம் மனிதர்களுக்கு ஏற்படும். 

ஆனால் கொன்ற மனிதர்களோ, தேவதூசணம் செய்த பாவியை கொன்றோம் என்றும் தேவசித்தத்தை செய்தோம் என்றே கருதுவார்கள்.


ஆகவே இது பச்சை முட்டாள்தனமாகும்.


அதாவது
இவர் மனிதராகி தன்னை தேவன் என சொன்னால், அது தேவதூசணம். தேவதூசணத்தை செய்ததால் அவர் கொல்லப்படுவார். கொன்றவருக்கோ தேவனை கொன்ற பாவம் உண்டு. அதுமட்டுமின்றி கொன்றவனோ தேவனது சித்தப்படி கொலைக்கு பாத்திரமானவனையே கொன்றான் என்பதாக ஆகிவிடும்.


இந்த கதையை தான் இப்போதுள்ள கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள்.


அதாவது கடவுள் மனிதனாக வந்தாராம்.

அவர் தன்னை தேவனாக வெளிப்படுத்தியதால், அது தேவதூசணம் என யூதர்கள் அவரை கொன்றார்களாம். 



⁶65.⁵ அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவதூஷணம் சொன்னான்; இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ இவன் தூஷணத்தை இப்பொழுது கேட்டீர்களே.
⁶⁶66. உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறதென்று கேட்டான். அதற்கு அவர்கள்: மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றார்கள்.
(மத்தேயு 26:65-66)


தேவ தூசணத்திற்கு மரண தண்டனை என விதித்தது யார்?

இதே தேவன் அல்லவா?


ஆனால், இவரை இப்படி கொல்ல ஒப்படைத்த யூதர்களுக்கு அதிக பாவம் உண்டு என அவரே சொல்கிறார்:


“இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது; ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார்.”
  — யோவான் 19:11 


 
இது பச்சை முட்டாள் தனம் இல்லையா?

இவர் மனிதனாக வந்தால், தன்னை தேவன் என தெளிவாக்க வேண்டும்..

ஆனால் இவரோ தேவதூசணத்தினால் கொல்லப்படுகிறார். அதுவும் அவர் கொடுத்த சட்டப்படி தான்.

அவர் வந்தால் கொல்லப்படுவார்- கொல்லப்பட்டால் கொன்றவனுக்கும் அவனைவிட ஒப்புக்கொடுத்தவனுக்கும் அதிக பாவம் உண்டு என்றால் 

அவர் வந்ததே மனிதர்களை பாவியாக்குவதற்கு தான் என தெளிவாக புரிகிறதல்லவா?

இது பச்சை மடத்தனமான செயல் ஆகும்.



இனி அடுத்த பகுதிக்கு செல்வோம்
-------------


3.இயேசுவை கொன்றது பலியா? பாவமா?
--------------

இவர்களின் நம்பிக்கைப்படி தேவதூசணத்திற்காக கொல்லப்படுகிறார் இயேசு (மத்தேயு 26:65-66)


இது பலி ஆயின், பலி இட்ட யூதர்களுக்கு நன்மை அல்லவா சேரவேண்டும்?


ஆனால் அவரோ,

தன்னை ஒப்படைத்தவனுக்கு அதிக பாவம் உண்டு என்கிறார்:

“இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது; ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார்.”
  — யோவான் 19:11



இங்கே அவரை கொல்வதை பாவம் என்கிறார்.


பலியாக வந்தால், பலிகொடுப்பது தானே சிறந்தது. அப்படி இருக்க எப்படி பாவமாகும்??


அவரது குற்றமான தேவதூசணத்திற்கு அல்லவா கொல்லப்படுகிறார்? அதுவும் அவர் விதித்த சட்டங்களின்படி தேவதூசணம் செய்பவன் கொல்லப்பட வேண்டியவன்.

அப்படி மரணதண்டனைக்கு உட்பட்டதை பலி என்கிறார்கள்.

ஆனால் அதே பலியை இட்டவர்களை பலியிட்டதால் பாவிகள் என்கிறார்கள்.

இது பச்சை மடத்தனம் இல்லையா?


---------


4.இயேசுவை கொன்றது கடவுளின் அன்பா? கொடூரமா? அல்லது ஏமாற்று வேலையா?
--------



இவர்களின் நம்பிக்கைப்பிரகாரம், இயேசு கொல்லப்பட்டது தேவனின் அன்பு ஆகும்.

ஆனால் உண்மையில் இது அன்பா?


நம் பாவத்தை மன்னிப்பதற்காக இரத்த லஞ்சம் கேட்கிறார். இது அன்பா?

இவர்களின் நம்பிக்கை பிரகாரம், பிதாவோ ஆவியோ சாகவில்லை. மாறாக குமாரன் மட்டுமே கொல்லபடுகிறார்.


பிதா தன் குமாரனை கொல்வதே அன்பு கிடையாதே. அது கொடூரம் ஆகும்.

ஒரு நீதிபதி குற்றவாளிக்கு தண்டனை கொடுக்காமல், தன் மகனுக்கு தண்டனை கொடுக்கிறார் என்றால்,

அது அன்பா? அல்லது அநீதியா?

அதே போல கடவுள் தன் நீதியை நிலைநாட்டாமல், அநீதியாக ஒருவரை கொல்கிறார் என்றால் அது அன்பா?

இயேசுவை கொன்றதற்கு பதிலாக பிதா குமாரன் ஆவி மூன்று பேருமே செத்துப்போனால் அதை அன்பு என சொல்லலாம்.


ஆனால் பிதாவோ தன் மகனை கொலை பண்ணுகிறார். மகனை கொலை பண்ணாவிட்டால் மற்ற எல்லாரையும் கொலை பண்ணுவாராம்.


இங்கே தேவன் தன் குமாரனை கொலை பண்ணினால், அங்கேயும் அன்பு இல்லை. கொடூரனாக ஆகிறார்.

 மகனை யாருக்கு பலியிடுகிறார்?

தனக்கு தானே பலியிடுகிறார்? பிறகு எப்படி அன்பாகும்?

அதாவது சொந்த மகனை தனக்கே பலியிட்டுகொல்லுகிறார் என்றால் இது அன்பாக இருக்குமா?

மிகவும் இரத்தவெறி பிடித்தவன் கூட தன் மகனை தனக்கே பலியிட மாட்டான்.

மூட நம்பிக்கையாளன் கூட தன் பிள்ளையை போலிக்கடவுளுக்கு பலியிடுவான்.

ஆனால் இவரோ தன் மகனை தனக்கே பலியிடுகிறார்.

இதைவிட பச்சை பைத்தியகாரத்தனம் வேறு என்ன இருக்க முடியும்?

தேவனே தன்னை பலியாக்கினார் எனின், அப்போதும் தன்னை தனக்கே பலிகொடுக்கிறார்.

இது பச்சை பைத்தியகாரத்தனம் இல்லையா?

இதைவிட வேறு என்ன மூடநம்பிக்கை இருக்க போகிறது????


----
5.இப்படிப்பட்டவர் கடவுள் எனின் நாம் அவருக்கு கூறும் ஆலோசனை அல்லது அட்வைஸ் என்ன?
----------


I.மனிதன் படைக்க முன்பு பாவம் செய்வான் என தேவனுக்கு தெரியுமா? தெரியாதா?

தெரியும் எனின் ஆதாமை பாவம் செய்யாதவனாக படைத்திருக்க இயலுமா இயலாதா?

இயலும் எனின் பாவம் செய்யாத விதமாக படைத்திருக்கலாமே



2.சோதனைக்காக படைத்தார் எனின், திருந்தினால் மன்னிப்பை கொடுக்க நேரடியாக கொடுக்க வேண்டுமே



3.இரத்தம் சிந்தினால் தான் மன்னிப்பு எனின், ஆரம்பத்திலேயே அதற்காக ஒரு தடவை ஆதாமின் கையாலேயே கொன்றிருக்கலாமே


4.சரி உங்களுக்கு ரத்தம் தானே வேண்டும்? அப்படியென்றால் , இயேசுவுக்கு விருத்தசேதனம் செய்தபோது வடிந்த ரத்தத்தை ஏன் பாவநிவாரனமாக உங்களுக்கு ஏற்றுகொள்ள இயலாது? கொன்றே ஆகவேண்டுமா?


5.பாவத்துக்கு மன்னிக்க இரத்தம் வேண்டுமாயின், இயேசுவை வெறும் ஆட்டுக்குட்டியாக அல்லது இயேசுவுடன் ஒரு ஆட்டுக்குட்டியை கையில் கொடுத்து அனுப்பி இயேசுவை வைத்தே அந்த ஆட்டுக்குட்டியை உம்முடைய கொடூர இரத்தவெறி ஆசை நிறைவேற்றும்விதமாக அறுத்திருக்கலாமே?

இதெல்லாம் புரிஞ்சுக்க தேவனுக்கு அறிவு கிடையாதா?

 

மனித பலியே வேண்டுமா?


6.இயேசுவின் கையில் ஒரு ஆட்டுக்குட்டியை கொடுத்து அதை அறுத்திருந்தால், அநியாயமாக இயேசுவை கொன்று தேவகொடூரமோ அல்லது கிறிஸ்தவ நம்பிகைப்படி யூதர்கள் மேல் பாவமோ வந்திருக்காது அல்லவா??



ஆகவே இந்த மார்க்கமே ஒரு மார்க்கமாக இல்லையா???

வெள்ளி, 5 ஜூன், 2020

20 குற்றச்சாட்டிகளுக்கான பதில்கள்

20 அவதூறுகளுக்கான பதில்கள்:


///1. Thou shall Rape, Marry, and Divorce Pre-pubescent Girls. Koran 65:4///

ﻭَﺍﻟﻠَّﺎﺋِﻲ ﻳَﺌِﺴْﻦَ ﻣِﻦَ ﺍﻟْﻤَﺤِﻴﺾِ ﻣِﻦ ﻧِّﺴَﺎﺋِﻜُﻢْ ﺇِﻥِ ﺍﺭْﺗَﺒْﺘُﻢْ ﻓَﻌِﺪَّﺗُﻬُﻦَّ ﺛَﻠَﺎﺛَﺔُ ﺃَﺷْﻬُﺮٍ ﻭَﺍﻟﻠَّﺎﺋِﻲ ﻟَﻢْ ﻳَﺤِﻀْﻦَ ۚ ﻭَﺃُﻭﻟَﺎﺕُ ﺍﻟْﺄَﺣْﻤَﺎﻝِ ﺃَﺟَﻠُﻬُﻦَّ ﺃَﻥ ﻳَﻀَﻌْﻦَ ﺣَﻤْﻠَﻬُﻦَّ ۚ ﻭَﻣَﻦ ﻳَﺘَّﻖِ ﺍﻟﻠَّﻪَ ﻳَﺠْﻌَﻞ ﻟَّﻪُ ﻣِﻦْ ﺃَﻣْﺮِﻩِ ﻳُﺴْﺮًﺍ

4. உங்கள் பெண்களில் மாதவிடாய் அற்றுப்போனவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும், *மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய காலக்கெடு மூன்று மாதங்கள்*. கர்ப்பிணிகளின் காலக்கெடு அவர்கள் பிரசவிப்பதாகும். அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவரது காரியத்தை அவன் எளிதாக்குவான்.
திருக்குர்ஆன் 65:4


மாதவிடாய் ஏற்படாதோருக்கு 3 மாதம் காலக்கெடு 3 மாதங்கள் என்று சொல்வதை தப்பாக புரிந்திகொண்டுள்ளார்கள்!!


அன்றைய அரேபியர்கள் தம் பெண்பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே திருமண நிச்சயம் செய்துவிடும் வழக்கமும் இருந்தது.


அப்படி செய்யப்பட்ட பெண்கள் பருவத்தை (மாதவிடாய் அடைதல்) ஏற்படும் வரை பெற்றோரின் வீட்டில் தங்குவார்கள்.. அல்லது கணவன் வீட்டில் கற்பிக்கப்படுவார்கள்.

அந்த அடிப்படையில் தான் அன்னை ஆயிஷா அவர்களும் 6 வயதில் முடிக்கப்பட்டு , 9 வயது வரை அவரது பெற்றோர் வீட்டிலே இருந்தார்கள்.

நபிகளாரின் மூத்த மகள் ஸைனப் அவர்களும் ஆரம்பத்தில் தம் ஏழு வயதில் தான் அவரது தாயார் மூலம் திருமணம் செய்துவைக்கப்பட்டார்கள்.

 திருமண பருவத்தை அடைந்தவுடன் , குடும்ப வாழ்வுக்கு தகுதியானவராக ஆனவுடன் கணவனுடன் சேர்த்துவைக்கப்படுவார்கள்.

ஆனால் சில பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதில் தாமதம் ஏற்படும். சிலருக்கு 20 வயது ஆகியும் மாதவிடாய் ஏற்படாதிருக்கும்.

 இது போன்ற பெண்கள்  குடும்ப வாழ்க்கைக்கு தகுதியாக இருக்கும் பட்சத்தில் வாழ விரும்பும் பட்சத்தில் அவர்கள் திருமணம் செய்யலாம். அத்தகைய பெண்களுக்கே இங்கு இத்தா காலம் 3 மாதங்கள் என சொல்கிறது.

இதில் கற்பழிப்போ எதுவும் இல்லை..

இத்திருமண ஒப்பந்தத்தின்போதோ அல்லது சிறுவயதில் பேசிவைக்கப்பட்டவர்கள் சேரும்போதோ மணமகளான அப்பெண்ணுக்கு இல்லாதுவிட்டால், அத்திருமணம் செல்லுபடி அற்றது ஆக மாறிவிடும்.
  

கன்னி பெண்களாயினும் விதவையாயினும் திருமணத்திற்கு சம்மதம் பெறவேண்டும்
[அறி: ஆயிஷா Bukhari 6971,6964,5137]

என் தந்தை எனது சம்மதம் பெறாமல் மணம் முடித்துவைத்தார்கள் அதை விரும்பாத நான் நபியிடம் கூறியபோது அதை ரத்து செய்தார்கள்
[அறி: கன்ஸா பின்த் கிதாம் Bukhari 5139,6945,6969]

இவற்றின்படி ஒரு திருமணம் செல்லுபடியாவதற்கு பெண்களின் சம்மதம் தேவை என்றும் சம்மதம் இல்லாவிட்டால் அது செல்லுபடியற்றது என்று விளங்கலாம்


மேலும் பெண்களுக்கும் விவாகரத்தை கேட்டு பெரும் உரிமையையும் இஸ்லாம் கொடுத்துள்ளது.
********

பைபிள்:

 கன்னி பெண்ணை கற்பழித்தால் அவளே அவனுக்கு கூலி.. அவளது அப்பன் அதை விரும்பாவிட்டால் bill ஐ மட்டும் அவளது அப்பனிடம் கட்ட வேண்டும்.
உபாகமம் 22:28-29

பெத்த மகளை செக்ஸ் அடிமையாக விற்று போடலாம்..அவளை வாங்குபவன் தனக்கு அவளை வைத்துகொள்ளலாம். அல்லது மகனுக்கு முடித்து  கொடுக்கலாம்
யாத்திராகமம் 21:6-10

தாவீதின் பொண்டாட்டிகளை எப்பாவமும் செய்யாதவர்களை கற்பழிக்க வைத்து தாவீதுக்கு அதை காட்டுவாராம்!!
2 சாமுவேல் 12:11-12

இதை பேச உங்களுக்கு தகுதி இருக்கா??
+++++++++++++++
+++++++++++++++
+++++++++++++++
++++++++++++++++++


2.
////2. Thou shall have Sex Slaves and Work Slaves. Koran 4:3, 4:24, 5:89, 33:50, 58:3, 70:30///

 work slave உடன் வைக்க சொல்வது உன் செக்சி பைபிள் தான்.

. போரில் கிடைக்கும் அடிமைகளுடன் உறவு கொள்ளல், விற்றலை இஸ்லாம் அனுமதிக்கிறதா .
பதில்:
அடிமைகள் ஏன்??


107. அடிமைப் பெண்கள் திருக்குர்ஆனின் பல வசனங்களில் "வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள்" என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது அடிமைப் பெண்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல்லாகும். "அடிமைப் பெண்களுடன் திருமணம் செய்யாமல் அவர்களின் எஜமானர்கள் குடும்பம் நடத்தலாம்" என்று பல வசனங்களில் கூறப்பட்டுள்ளது
.
இன்று அடிமைப் பெண்களோ, அடிமை ஆண்களோ இல்லாததால் இதைப் புரிந்து கொள்வதற்கு இது பற்றிய வரலாறு தெரிந்திருப்பது அவசியம்.
இரண்டு நாடுகளுக்கிடையே போர் நடக்கும் போது, போரில் வெற்றி பெற்றவர்கள் தோற்றவர்களைச் சிறைப்பிடிப்பார்கள்.

சிறைப் பிடிக்கப்பட்டவர்களில் ஆண்களும் இருப்பார்கள். குறைந்த அளவில் பெண்களும் இருப்பார்கள்.

இவ்வாறு சிறைப்பிடிக்கப்
பட்டவர்களை அடைத்து வைக்க அன்று சிறைக்கூடங்கள் இல்லை.

அவர்களுக்கு உணவளித்துப் பராமரிப்பதும் தேவையற்ற சுமையாக அமையும்.

எனவே கைது செய்யப்பட்டவர்க
ளைப் போரில் ஈடுபட்டவர்களுக்
குப் பங்கிட்டுக் கொடுப்பார்கள்.
அவர்களிடம் வேலை வாங்கி விட்டு அவர்களுக்கு உணவளிப்பது சிரமமாக இருக்காது.
வேலைக்கு ஆள் தேவையில்லை என்ற நிலையில் இருப்பவர்கள் தமக்குக் கிடைத்த அடிமைகளை வசதியானவர்களிடம் விற்று விடுவார்கள்.
இதனால் அடிமைச் சந்தைகளும் கூட செயல்பட்டு வந்தன.
இஸ்லாமிய
எத்தனையோ சமூகக் கொடுமைகளை ஒரு உத்தரவின் மூலம் ஒழித்துக் கட்டிய இஸ்லாம் அடிமைகளையும் ஒழித்துக் கட்டியிருக்க முடியாதா?

ஏன் அதை இஸ்லாம் ஏற்றுக் கொண்டது?
என்ற கேள்வி சிலருக்குத் தோன்றலாம்.
இதில் பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

போர்க்களத்தில் பிடிக்கப்படுவதன் மூலம் அடிமைகள் உருவானாலும் போர் வீரர்கள் உடனுக்குடன் அவர்களை விற்றுக் காசாக்கி விடுவார்கள்.

பெரும்பாலும் விலை கொடுத்து வாங்கியவர்களிடம் தான் அடிமைகள் இருந்தனர்.
இனிமேல் அடிமைகள் இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டால் அடிமைகளை விலைக்கு வாங்கியவர்கள் பெரிய அளவில் நஷ்டமடைவார்கள்.

அவர்கள் அனைவருக்கும் இழப்பீடு அளித்தால் அரசை நடத்த முடியாது.

இழப்பீடு அளிக்காமல் உத்தரவு போட்டால் சட்டப்பூர்வமான அனுமதி இருந்த போது செய்த வியாபாரத்தில் மக்களுக்கு இழப்பு ஏற்படுத்துவது அநியாயமாகும்.

அப்படியே அனைத்து அடிமைகளுக்காகவும் இழப்பீடு கொடுத்து விடுவிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டாலும் அது கேடாகத் தான் முடியும்.

ஏனெனில் அடிக்கடி போர்கள் நடந்து கொண்டிருந்த அன்றைய சூழ்நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் ஒருதலைப்பட்சமாக இவ்வாறு அறிவித்தால், முஸ்லிம் கைதிகள் மற்ற நாட்டில் அடிமைகளாக இருக்கும் நிலை ஏற்படும். எதிரிகள் உடனே விடுதலையாகும் நிலையும் ஏற்படும்.
நபிகள் நாயகத்தை எதிர்த்துப் போர் செய்தால் நமக்குப் பெரிய இழப்பு ஏற்படாது.

அவருக்குத் தான் இழப்பு ஏற்படும் என்ற எண்ணம் சுற்றியுள்ள நாடுகளுக்கு ஏற்படும்.
எனவே தான் உத்தரவு போட்டு அடிமை முறையை ஒழிக்கவில்லை. உலக நாடுகள் அனைத்தும் ஒருமித்த தீர்மானத்திற்கு வரும் வரை நபிகள் நாயகம் (ஸல்) மட்டும் முடிவெடுப்பது நன்மை பயக்காது.

அதே சமயத்தில் அடிமைகளை இல்லாதொழிக்க வேறு பல ஏற்பாடுகளை நபிகள் நாயகம் (ஸல்) செய்தார்கள்.

* ஒருவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து விட்டு அதை முறித்தாலோ, அல்லது நோன்பை முறித்தாலோ இது போன்ற குற்றங்களுக்குப் பரிகாரமாக வசதியுள்ளவர்கள் அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டினார்கள்.

* ஒப்பந்த அடிப்படையில் அடிமைகள் விடுதலையாவதற்கும் ஏற்பாடு செய்தார்கள். உன்னை நான் விடுதலை செய்கிறேன். நீ உழைத்து சிறிது சிறிதாக எனது கடனை அடைக்க வேண்டும் என்று எஜமானர்கள் அடிமைகளிடம் உடன்படிக்கை செய்து விடுவிக்க ஆர்வமூட்டினார்கள்.

* யாரேனும் அடிமையை விடுதலை செய்தால் அந்த அடிமை பிற்காலத்தில் சம்பாதிப்பவைகளுக்கு அவனது எஜமான் வாரிசாவார் என்று சட்டம் கொண்டு வந்து அடிமைகளை விடுவிக்கத் தூண்டினார்கள்.

* பொதுவாக மனிதன் செய்யும் நல்லறங்களில் அடிமைகளை விடுவித்தல் சிறப்பானது எனவும் ஆர்வமூட்டினார்கள்.
தமது வாழ் நாளில் கணிசமான அளவுக்கு அடிமைகளின் எண்ணிக்கையைக் குறைத்தார்கள்.
இது பொதுவாக அடிமைகள் பற்றியது.
அடிமைப் பெண்கள் விஷயத்தையும் அறிந்து கொள்வோம்.

அடிமைப் பெண்களாக விற்கப்படுவோர் எஜமான் வீட்டில் தான் தங்கும் நிலை. அவளது கணவன் வேறு நாட்டில் இருப்பான்;

அல்லது இல்லாமலும் இருப்பான். இந்த நிலையில் அப்பெண்ணை, அன்னிய ஆண்கள் தகாத முறையில் பார்ப்பதைத் தடுப்பதற்கு வேலி போட்டாக வேண்டும்.

அவளுக்கும் உடல்ரீதியான தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு தான் அடிமைகளை விலைக்கு வாங்கிய எஜமான் (பல எஜமான் இருந்தால் அவர்களில் ஒரே ஒருவர் மட்டும்) குடும்பம் நடத்தலாம்.
இவ்வாறு குடும்பம் நடத்தும் போது அவள் குழந்தையைப் பெற்றால் அவளும், குழந்தையும் அடிமைத்தளையிலிர
ுந்து விடுபடுவார்கள் என்று இஸ்லாம் சட்டம் போட்டது.

இதை அந்தச் சமயத்தில் அனுமதிக்காவிட்டால் அவளுக்காகப் பரிந்து பேச யாருமில்லாத நாட்டில் அவளது எஜமானையே முழுவதும் சார்ந்திருக்கும் போது அவளை அவன் அனுபவிப்பதைத் தடுக்க முடியாது போகும்.

அடிமை தானே! நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணம் மற்றவர்களுக்கும் ஏற்படும்.
அவளுக்கு கணவன் நிலையில் எஜமான் இருக்கிறான் என்ற எண்ணம் ஏற்படும் போது அவளுக்குப் பாதுகாப்பு ஏற்படும்.

அவளுடன் ஒரு எஜமானர் தான் குடும்பம் நடத்த வேண்டும் எனக் கூறுவதாலும், அவருக்குப் பிறந்த குழந்தை சொந்த எஜமானின் குழந்தையாகவே கருதப்படும் என்பதாலும் இது விபச்சாரமாகாது.
அடிமைப் பெண்கள் என்ற நிலை இருந்த காலத்தில் இந்த அனுமதியை அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இன்று உலகமெங்கும் அடிமை முறை ஒழிக்கப்பட்டு விட்டதால் இப்போது இதை நடைமுறைப்படுத்த முடியாது.
வேலைக்காரிகளை அடிமைகள் என நினைக்கக் கூடாது.

வேலைக்காரிகள் விலைக்கு வாங்கப்பட்டோர் அல்லர். விரும்பினால் இந்த முதலாளியை விட்டு வேறு முதலாளியை அவர்களால் மாற்றிக் கொள்ள முடியும். அடிமைகள் விரும்பிய போது எஜமானை மாற்ற முடியாது.
நன்றி(இது பி.ஜெ அவர்களின் தர்ஜமாவிலிருந்து எடுக்கப்பட்டது)
®®®®®®®®
எனவே அன்றைய காலத்தில் அடிமைகளை விற்பதை தவறாக பார்க்கமுடியாது.
.
.பைபிள் போர்களத்தில் கிடைக்கும் பெண்களை உயிருடன் வைத்து செகஸ் வைக்கலாம் என்கிறது.
(உபாகமம் 20:11-14 ==>> 21:10-14. எண்ணாகமம் 31:18)
இது கல்யாணமுடித்து செய்வதை சொல்கிறது என்பார்கள் கிறிஸ்தவர்கள்..
திருமணம் என்று பைபிள் சொல்வது, பிறக்கும் பிள்ளைக்கு சொத்துருமை வழங்குவதை தான் மற்றபடி எதுவுமில்லை.. இதையே தான் ஹதீஸ்கள் சொன்னது.
.அடிமைகளை விற்கலாம், வாங்கலாம். ஆனால் இஸ்ரவேலர்களுக்கு மட்டெம் அப்படி செய்ய கூடாதாம்.
லேவியராகமம் 25:44-46
.பெத்த மகளையே அடிமையாக விற்று போடலாம்.
யாத்திராகமம் 21:7-10
.நியமிக்கப்பட்ட அடிமை பெண்ணுடன் விபச்சாரம் செய்தால்,, அவளை அடிக்க வேண்டும். இவன் ஆட்டுகுட்டியை பலு கொடுக்க வேண்டும்.
லேவியராகமம் 19:20-23 கேஜேவீ

தன்னுடைய அடிமைப்பெண் அல்லாத அடிமைப்பெண்ணோடு குடும்பம் நடாத்த வேண்டுமானால் அவர்களை மஹர் கொடுத்து திருமணம் முடித்தே வாழ முடியும் (குர்ஆன் 4:25), 

அவள் தன் மனைவியின் அடிமைப்பெண் என்பதால் திருமணம் செய்யாமல் உறவு கொண்டால் அதுவும் விபச்சாரமாக கருதப்பட்டு தண்டனை வழங்கப்படும் (புகாரி 2290) .. 

அத்தோடு தன் அடிமைப் பெண்ணை வேறொரு அடிமைக்கு திருமணம் செய்துகொடுத்தால், எஜமானுக்கு அவளது மறைவுறுப்புகளை பார்ப்பதை இஸ்லாம் தடுக்கிறது. அதாவது அவளோடு உடலுறவு கொள்ள முடியாது (அபூதாவூத் 496,, மிஷ்காத்துல் மஸாபீஹ் 3111). அவளை விவாகரத்து செய்யும் முழு உரிமையும் அவளது அந்த கணவனையே சாரும்.(முஅத்தா பாடம் 29 ஹதீஸ் 51) அதாவது எஜமானுக்கு அதை தீர்மானிக்க முடியாது. 

(பைபிளிலும் அடிமையானவனுக்கு எஜமான் திருமணம் செய்து வைத்திருந்தால், அவன் விடுதலைபெற்று போவதானால் தனியாக தான் போகவேண்டும். அவனது மனைவியும் பிள்ளைகளும் எஜமானையே சாரும் (யாத்திராகமம் 21:4).

அடிமைப் பெண்கள் என்போர் எஜமானின் சொத்து என்பதாலும் அக்கால நடைமுறையில் இருந்ததாலும் அவர்களுடன் வாழ்வது அனுமதிக்கப்பட்டது. 

இவ்வடிமைகள் போர்களில் கைதிகளாக பிடிக்கப்பட்டு வீரர்களுக்கு பங்காக கிடைப்பார்கள்.,. இதுவே அக்கால அரேபியர்களின் நடைமுறை....

அப்போது கூட இஸ்லாம் நல்லொழுக்கத்தை கற்பிக்கிறது அதாவதுஅவ்வடிமை கர்ப்பிணியாக இருந்தால் குழந்தை பிரசவிக்கும்வரையும், கர்ப்பிணி அல்லாத பெண்ணாக இருந்தால் ஒருதடவை மாதவிடாய் ஏற்பட்டு சுத்தமடையும் வரை உடலுறவு வைக்க கூடாது (அபூதாவூத் 2157).

இதேபோல் அடிமையாக இருப்பவரை எஜமானரிடமிருந்து விலைக்கு வாங்கியும் அடிமைகளாக பெறப்பட்டனர். (ஆனால் பைபிளில் மகளையே அடிமையாக விற்றுப் போடலாம் -யாத்திராகமம் 21:7-10)

ஆனாலும்

*  தன் அடிமைப்பெண்ணுக்கு கல்வியை கற்றுக்கொடுத்து, விடுதலை செய்து திருமணமும் செய்துகொண்டால், அத்தகையவருக்கு இறைவனிடம் இருமடங்கு நற்கூலி உண்டு என்பதையும் நபிகளார் கூறியுள்ளார்கள் (புகாரி 97, 3446)

ஆகவே திருமணத்திற்கு வெளியே என்பது தன் சொந்த சொத்தாக உள்ள அடிமைப்பெண்ணை மட்டுமே குறிக்கும். காரணம் உரிமையாளருக்கு உரிமை உண்டே.

பைபிளும் வைப்பாட்டிகளும்

*பைபிள் திருமணத்திற்கு வெளியே வப்பாட்டி வைத்தவர்களை சிறப்பித்து பேசுவதோடு, வப்பாட்டி வைத்துக் கொள்வதை விபச்சாரம் என்றோ அது கூடாது என்றோ பைபிளில் ஒரு வசனம் கூட கிடையாது.

*தேவனின் நண்பரான ஆபிரகாமுக்கு (2நாளாகமம்20:7,ஏசாயா 41:8) மனைவிகள் அல்லாத பல வப்பாட்டிகள் இருந்தனர் (ஆதியாகமம் 25:6)- இந்த ஆபிரகாம் செய்தது தவறு அல்ல என்று அடுத்த அதிகாரமே சொல்கிறது, அவர் தேவனது சொல்லுக்கு கீழ்படிந்து ,அவரது கட்டளைகளையும் நியமங்களையும் பிரமானங்களையும் கைக்கொண்டார் (ஆதியாகமம் 26:4 (ஆங்கிலம் 26:5))

*உரியாவின் மேட்டரை தவிர தப்பே செய்யவில்லை என்றும் , தேவன் அவனுக்கு கட்டளையிட்டதில் ஒன்றையும் விட்டு விலகாமல் அவரது பார்வைக்கு செம்மையானதையே செய்தான் என பைபிள் கூறும் தாவீது (1 இராஜாக்கள் 15:5), பல வப்பாட்டிகளை திருமணத்திற்கு வெளியே வைத்திருந்தார் (2 சாமுவேல் 5:13)

இதேபோல் அநேக பரிசுத்தவான்கள் என கூறப்பட்டவர்கள் வப்பாட்டி வைத்திருப்பவர்களாக பழைய ஏற்பாடு கூறுகிறது. இப்படி வைப்பாட்டி வைப்பதை தவறு என்றோ விபச்சாரம் என்றோ பைபிள் எங்கேயும் சொன்னதில்லை என்பதோடு, தாவீது செய்தவற்றில் உரியாவின் மனைவியிடம் முதல் தடவை விபச்சாரம் செய்தது அவனை கொன்றதை தவிர வேறு பாவமே செய்யவில்லை என கூறி வப்பாட்டி வைத்ததையும் தப்பு அல்ல என்று பைபிளே காட்டிவிட்டது.

இந்த லட்சணத்தில் உரிமையாளன் தன் உரிமைச் சொத்தான அடிமைப்பெண்ணுடன் குடும்பம் நடாத்துவதை குறை சொல்லலாமா?

இஸ்லாம் அடிமைகளை நடாத்தும்விதம்

+++++++++++++++
++++++++++++±++
+++++++++++++++
++++++++++++++++++


3.
///
3. Thou shall Beat Sex Slaves, Work Slaves, and Wives. Koran 4:34///

34. சிலரை விட சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்
பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றை (கற்பை) காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:34

இதில் செக்ஸ் அடிமைனு இல்ல..

ஆண் , பெண்ணை பராமரித்து செலவழிக்க வேண்டும் அவள் இவனுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் நல்ல விசயங்களில்..

குடும்பம் ஒன்று நல்ல முறையில் நடக்க வேண்டுமானால், இருவரும் இரண்டுமாதிரி நடந்தால் குடும்பம் நடத்த முடியாது.
ஆண் செலவழித்து பராமரிக்க வேண்டும் என்பதாலும் அது போன்ற காரணங்களாலும், ஆணுக்கு தலைமை பொறுப்பை கணவன் அந்தஸ்த்தில் கொடுக்கிறது.

பெண்ணுக்கு உடனே அடிக்கலாம் என்று சொல்லவில்லை.. பரசணினை ஏற்படும் என்று பயந்தால ,

1.முதலில் உபதேசம் செய்ய வேண்டும்.
2.அது பயனளிக்கா விட்டால்,படுக்கையை விட்டு ஒதுக்க வேண்டும்.
3.அதுவும் பயனளிக்காத போது தான் அடிக்க அனுமதிக்கிறது.

12.மனைவியரை அடிப்பது குறித்து, குர்ஆன் 4:34 மனைவியரை அடிக்க அனுமதிக்கிறது என்பதை குறித்து இவர்கள் குற்றம்சாட்டுவர். இந்துக்களோ கிறிஸ்தவர்களோ வேறு மதத்தவர்களோ தம் மனைவியரை அடிப்பதில்லையா? இஸ்லாம் அடிக்க வேண்டாம் என்று சொன்னாலும் அடிப்பவன் அடிக்கத்தான் செய்வான்.

*இஸ்லாம் பெண்களுக்கு உரிமைகளை சுதந்திரங்களை முன்பே வழங்கி விட்டதால், பெண்ணும் ஆண்களை எதிர்த்து நிற்பர். குடும்ப வாழ்வை கொண்டு செல்வதற்கு ஒருவர் மற்றவருக்கு நல்லவிசயங்களில் கீழ்ப்படிய வேண்டும். அவ்வாறு நடக்காத போது மனைவியை அடிக்க இஸ்லாம் அனுமதிக்கின்றது. எப்படி அடிக்க வேண்டும் என்றும் சொல்கிறது. அதாவது காயம் ஏற்படாமல் இலேசாக அடியுங்கள் என்றே சொல்கிறது. அதுவும் எப்போது என்றும் கூறுகிறது:

அவர்களுடன் நல்லமுறையில் நடந்துகொள்ளுங்கள். அதுவல்லாத முறையில் நடந்துகொள்ள உரிமையில்லை. ஆனால் அவர்கள் தெளிவான ஒழுக்கக்கேட்டை கொண்டு வந்தாலே தவிர. அப்போது அவர்களை படுக்கையை விட்டு ஒதுக்கி வையுங்கள். இலேசாக காயமேற்படாமல் அடியுங்கள்அவர்கள் உங்களுக்கு கீழ்படிந்து விட்டால் அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் (இப்னுமாஜா 1851, திர்மிதீ 1163, வேறு வாசகங்களுடன் முஸ்லிம் 2334 (1218a), அபூதாவூத் 1905)

இலேசாக காயமேற்படாதவாறு அடிக்கலாம் என்று சொன்ன நபிகளார், மனைவியின் முகத்தில் அடிக்க கூடாது என்றும் தடைவிதிக்கிறார்கள்.

கணவனின் மீதுள்ள மனைவியின் உரிமையானது, நீ உண்ணும்போது அவளுக்கும் உணவளிப்பதும், நீ ஆடை அணியும்போது அவளுக்கும் ஆடை அணிவிப்பதும், (ஒழுக்கப்படுத்துவதற்காக ) நீ முகத்தில் அடிக்க வேண்டாம், அவளை கேவலப் படுத்த வேண்டாம் , வீட்டிலே தவிர அவளை ஒதுக்க வேண்டாம் (அபூதாவூத் 2142, 2143) (கேவலப்படுத்த வேண்டாம் என்பது, அல்லாஹ் உன்னை கேவலப்படுத்துவானாக என்று சொல்வது என இமாம் அபூதாவூத் கூறுகிறார்)

அத்தோடு மனைவியை அடிக்கிறவர்களை உங்களில் நல்லவர்கள் அல்லர் என்றும் நபிகளார் கூறினார்கள் (அபூதாவூத் 2146)..

 ஆக மனைவியை அடிப்பது காலங்காலமாக இருப்பதுவே. அதை இஸ்லாம் ஒழுங்குபடுத்தியதோடு , பெண்களோடு நல்லமுறையில் நடந்துகொள்ளவும் , அவர்களோடு நல்லமுறையில் நடந்துகொள்வர்களே உங்களில் சிறந்தவர் என்றும் மனைவியரை அவர்கள் முறையிடும்படி அடிக்கிறவர்களை உங்களில் சிறந்தவர் அல்ல என்றும் நல்வழிப்படுத்தியது.

பைபிளிலோ பெண் ஒரு அடக்கப்பட்டே இருப்பதாலும் உரிமைகள் இல்லாதவளாக இருப்பதாலும் அவள் கணவனை எதிர்ப்பதை நினைத்து கூட பார்க்க முடியாது. காரணம் எஜமானுக்கு அடிமைப்பெண் எப்படி நடப்பாளோ அதுவே பைபிளில் அவளது நிலை.

இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள். அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மை செய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்.

1 பேதுரு 3:5-6

மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குக்கீழ்ப்படியுங்கள்கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும்.

எபேசியர் 5:22-24



அத்துடன் அவள் அமைதியாகவே அடக்கத்தோடு இருக்க வேண்டும் (1 பேதுரு 3:4, 1 தீமோத்தேயு 2:11-12, 1 கொரிந்தியர் 14:34). இப்படி உரிமை பறிக்கப்பட்ட பெண்ணாக இருப்பதால் அவள் மேலே வரவே மாட்டாள். அத்துடன் அவர்களை அடிக்க கூடாது என்று பைபிளில் எங்கேயும் குறிப்பிடவில்லை.... மனைவியரை அடிக்கும் காலத்தில் அதை பற்றி மௌனமாக இருப்பதென்பதே அதை அனுமதிப்பதாகிவிடும்.

ஆகவே இவர்களுக்கு இந்த நிலையில் இஸ்லாத்தை விமர்சிக்க தகுதியேயில்லை.


இதில் தவறில்லை..

மேலும் அப்பெண்ணுக்கு கணவனை விருப்பமில்லாவிட்டால், விவாகரத்தை பெற அனுமதி கொடுக்கிறது இஸ்லாம்.
******

பைபிள்:

* இரு ஆண்கள் சண்டை பிடிக்கும் போது, தன் கணவனை காப்பாற்றுவதற்காக, எதிர்ப்பவனின் மானத்தை பிடித்தால்,,
அவளது கையை வெட்டி போட வேண்டும். உரக்கம் காட்டக்கூடாது.
உபாகமம் 25:11-12

இது என்ன தண்டனைபா,?? ஒரு பெண் இன்னொருத்தனின் மர்மஸ்தானத்தில் கை போடுவாளா??

எப்படியாவது மனைவியை போட்டு தள்ள இது ஐடியா கொடுக்கிறது..

*மனைவி மேல் சந்தேகம் வந்தால், மனைவிக்கு சேற்று நீரை குடிக்க கொடுக்க வேண்டும்.
எண்ணாகமம் 5:11-29

நல்ல போதனை பா??
இவனுக்கு சந்தேகம் வந்ததற்காக அவளுக்கு ஏன் கொடுமை??

*கணவன் விபச்சரம் செய்ததற்காக மனைவிகளை விபச்சாரம் செய்வித்து அப்பெண்களை இழிவு படுத்துகிறர் கர்த்தர்.
2 சாமுவேல் 12:11-12

*கடவுளுக்கு அவரது அடிமைகளான சபைகள் எப்படி கட்டுபட்டு நடக்கிறார்களோ, அதே போல மனைவி கணவனுக்கு கட்டுபட்டு நடக்க வேண்டும் என்கிறது பைபிள்.
அதாவது மனைவி கணவனின் அடிமை.
கணவனுக்கு பயபக்தியாக மனைவி நடந்து கொள்ள வேண்டும்.
எபேசியர் 5:22,24,33

இஸ்லாம் இப்படி அடிமையாக மனைவியை பார்க்கவில்லை..

*ஆணுக்கு டைம் பாஸுக்காகவே பெண் படைக்கப்பட்டாள் என்கிறது பைபிள்.
ஆதி 2:18,20-25

*கர்த்தர் தன் மனைவி தவறு செய்யும்போது, அவளை மற்றவனுக்கு கூடனிக்கொடுத்து அடிக்க பண்ணுவாராம். இதனால் அவள் தன் முலைகளை கீறி கொள்வாளாம்.
எசேக்கியேல் 23:24-35

இதில் கூறப்பட்ட எருசலேம் கர்த்தருக்கு பிள்ளை பெற்ற பொண்டாட்டியாம்.
எசேக்கியேல் 16:20 ஓசியா 2:16-19
முதலில் கர்த்தரை ஜெயில்ல போடுங்கப்பா!!
+++++++++++++++
+++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++


4
////
4. Thou shall have 4 Muslim male witnesses to prove rape. Koran 24:13
////

13. இதற்கு நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்திருக்கக் கூடாதா? சாட்சிகளை அவர்கள் கொண்டு வரவில்லையானால் அல்லாஹ்விடம் அவர்களே பொய்யர்கள்.
திருக்குர்ஆன் 24:13

இது ஒரு பெண்ணின் மீது விபச்சாரம் சுமத்துவதற்கு எதிராக கூறப்பட்டது..
கற்பழிப்பிற்கு 4 சாட்சி தேவையில்லை..
சுனன் அபூதாவூத் புத்தகம் 38 ஹதீஸ் எண் 4366 (English)
இந்த ஹதீஸை படித்தால் புரிந்துவிடும்..
24 ம் அத்தியாயம் 4ம் வசனம் முதல் படித்தால் புரியும் அது எதை சொல்கிறது என்று..
*********

பைபிள்:
கற்பழித்தால் 50 சேக்கல் வெள்ளியை அப்பனிடம் கொடுத்துவிட்டு போய்க்கொண்டே இருக்கலாம்..
யாத்திராகமம் 22:16-17 உபாகமம் 22:28-29
கற்பழிப்பை ஊக்குவிக்கிறாரா? பைபிள் கர்த்தர்.
+++++++++++++++
+++++++++++++++
+++++++++++++++
++++++++++++++++++

5.
////
5. Thou shall Kill those who insult Islam or Mohammed. Koran 33:57
////

ﺇِﻥَّ ﺍﻟَّﺬِﻳﻦَ ﻳُﺆْﺫُﻭﻥَ ﺍﻟﻠَّﻪَ ﻭَﺭَﺳُﻮﻟَﻪُ ﻟَﻌَﻨَﻬُﻢُ ﺍﻟﻠَّﻪُ ﻓِﻲ ﺍﻟﺪُّﻧْﻴَﺎ ﻭَﺍﻟْﺂﺧِﺮَﺓِ ﻭَﺃَﻋَﺪَّ ﻟَﻬُﻢْ ﻋَﺬَﺍﺑًﺎ ﻣُّﻬِﻴﻨًﺎ
57. அல்லாஹ்வையும், அவனது தூதரையும் தொந்தரவு செய்வோரை இவ்வுலகிலும், மறுமையிலும் அல்லாஹ் சபிக்கிறான்.6 அவர்களுக்கு இழிவு தரும் வேதனையையும் தயாரித்துள்ளான்.
திருக்குர்ஆன் 33:57

இதில் எங்கே கொல்ல சொல்லியுள்ளது??
இறைவன் சபிக்கிறான் என்றே சொல்கிறான்.. நரகத்தில் வேதனை இருப்பதாகவே சொல்கிறான்.
********

பைபிள்:
*கர்த்தரை தூசித்தால்/
இழிவு படுத்தினால் , கல்லால் அடித்து கொல்ல வேண்டும்.
லேவியர்காமம் 24:10-23

*கர்த்தர் அல்லாதவருக்கு பலியிட்டால், சங்கை அறுக்க வேண்டும்.
யாத்திராகமம் 22:20

*கர்த்தரை வணங்காமல் வேறு கடவுளை வணங்கினால், கல்லால் அடித்து கொல்ல வேண்டும். அல்லது வெட்டி கொல்ல வேண்டும்.
உபாகமம் 17:3-5 13:13-16

*கர்த்தரை வணங்காமல் வேறு கடவுளை வணங்கினால், அப்படி வணங்குவோரை ஓரின சேர்க்கை (homosexuality) , lesbianism (இல் ஈடுபட வைப்பாராம்.
ரோமர் 1:23-29

!!!
+++++++++++++++
+++++++++++++++
+++++++++++++++
++++++++++++++++++


6.
////
6. Thou shall Crucify and Amputate non-Muslims. Koran 8:12, 47:4////


8:12
12. "நான் உங்களுடன் இருக்கிறேன். நம்பிக்கை கொண்டோரைப் பலப்படுத்துங்கள்! (என்னை) மறுப்போரின் உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்துவேன். எனவே கழுத்துகளுக்கு மேலே வெட்டுங்கள்! அவர்களின் ஒவ்வொரு இணைப்பையும் வெட்டுங்கள்!'' என்று (முஹம்மதே!) உமது இறைவன் வானவர்களுக்கு அறிவித்ததை நினைவூட்டுவீராக!
திருக்குர்ஆன் 8:12

இது பத்ர் என்ற யுத்தத்தின் போது , அல்லாஹ் 3000 Angels ஐ முஸ்லிம்கள் சார்பாக இறக்கி வைத்தான்..

அந்த angels க்கு கட்டளையிடப்பட்ட
தே இது..
அப்படியிருந்தும் 70 பேர் தான் போரில் கொல்லப்பட்டனர்.
தப்பி ஓடுபவர்கள் கொல்லப்படவில்லை.. அப்படி கொன்றிருந்தால், எதிரிகள் 1000 பேரும் கொல்லப்பட்டிருப்பார்கள்.
எனவே , போரில் வெட்டாமல் விளையாட முடியாது.. இதில் பிரச்சினை இல்லை..


47:4
4. (ஏகஇறைவனை) மறுப்போரை (போர்க்களத்தில்) சந்தித்தால் பிடரியை வெட்டுங்கள்! முடிவில் அவர்களை வென்றால் போர் (செய்பவர்) தனது ஆயுதங்களைக் கீழே போடும் வரை கட்டுகளைப் பலப்படுத்துங்கள்! அதன் பிறகு ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம்! அல்லது பெருந்தன்மையாக விட்டுவிடலாம். இதுவே (இறை கட்டளை). அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை (அவனே) தண்டித்திருப்பான். மாறாக உங்களில் ஒருவர் மூலம் மற்றவரை அவன் சோதிக்கிறான்.484 அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரின் செயல்களை அவன் வீணாக்கவே மாட்டான்.
திருக்குர்ஆன் 47:4

இதுவும் போர்களத்தில. தான்.. அந்த வசனத்தில் எத்தவறும் இல்லை..
***********

பைபிள்:
*பிலிஸ்தியரில் பெண்கள்,குழந்தைகள், ஆடுமாடுகள்,கழுத
ைகளையும் வெட்டி கொல்ல சொன்னார் கர்த்தர்.
1 சாமுவேல் 15:3-5

*மோசேயிடம், சில ஊர்களில் மூச்சுவிடக்கூடிய எதையும் உயிரோடு வைக்காமல் கொல்ல சொல்கிறார்.
உபாகமம் 20:16-17

*சிலை வணங்கியவர்களை கொல்ல சொன்ன கர்த்தர். பெண்கள் உட்பட.
எசேக்கியேல் 9:6

*வேறு கடவுளை வணங்கினால் கல்லால் அடித்து கொல்ல வேண்டும்.
உபாகமம் 17:3-5

*ஒரு ஊரார் வேறு கடவுளை வணங்கினால், அனைவரையும் வெட்டி கொன்று, ஊரை கொழுத்தி போட வேண்டும்.
உபாகமம் 13:13-16
இப்படி சொன்ன உங்க பெரிய மனுசன் யாரு??
+++++++++++++++(++++++++++++++
+++++++++++++++
++++++++++++++++++

7.
///7. Thou shall Kill non-Muslims to guarantee receiving 72 virgins in heaven. Koran 9:111///


111. நம்பிக்கை கொண்டோரிடமிருந்து அவர்களின் உயிர்களையும், செல்வங்களையும் சொர்க்கத்திற்குப் பகரமாக அல்லாஹ் விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்றனர். அவர்கள் கொல்கின்றனர்; கொல்லப்படுகின்றனர். இது, தவ்ராத்திலும், இஞ்சீலிலும்,391 குர்ஆனிலும் அவன் தன்மீது கடமையாக்கிக் கொண்ட வாக்குறுதி. அல்லாஹ்வை விட வாக்குறுதியை நிறைவேற்றுபவன் யார்? நீங்கள் ஒப்பந்தம் செய்த இந்த வியாபாரத்தில் மகிழ்ச்சியடையுங்கள்! இதுவே மகத்தான வெற்றி.
திருக்குர்ஆன் 9:111

இதில் அப்படி இல்லை..
ஏன் போரிட வேண்டும்??
அப்பாவிகளை பாதுகாகாக்க, குழப்பத்தை ஒழிக்க.
4:75 22:39-40
இதில் எத்தவறும் இல்லை.

**********

பைபிள்:
அறுவாளால் இரத்தம் சிந்தாதவன் சபிக்கப்பட்டவன்..எரேமியா 48:10
+++++++++++++++
+++++++++++++++
+++++++++++++++
++±+++++++++++++++


8.
////
8. Thou shall Kill anyone who leaves Islam. Koran 2:217, 4:89/////

2:217
217. புனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். "அதில் போரிடுவது பெருங்குற்றமே. அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் (மற்றவர்களைத்) தடுப்பதும், அவனை ஏற்க மறுப்பதும், அதற்கு (மஸ்ஜிதுல் ஹராமுக்கு) உரியோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடம் இதைவிடப் பெரியது. கொலையை விட கலகம் மிகப் பெரியது' எனக் கூறுவீராக! அவர்களுக்கு இயலுமானால் உங்கள் மார்க்கத்தை விட்டும் உங்களை மாற்றும் வரை உங்களுடன் போரிட்டுக் கொண்டே இருப்பார்கள். உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏகஇறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும்1 அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 2:217
இதில் அப்படி இல்லை...


4:89 உடன் சேர்த்து 4;90 ஐயும் சேர்த்து படிக்கவும்..
89. "அவர்கள் (ஏகஇறைவனை) மறுப்போராக ஆனது போல் நீங்களும் மறுப்போராக ஆகி அவர்களும் நீங்களும் (கொள்கையில்) சமமாக ஆக வேண்டும்' என்று அவர்கள் விரும்புகின்றனர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத்460 செய்யும் வரை அவர்களில் (எவரையும்) உற்ற நண்பர்களாக89 ஆக்காதீர்கள்! அவர்கள் புறக்கணித்தால் அவர்களைப் பிடியுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்!53 அவர்களில் எந்தப் பொறுப்பாளரையும், உதவியாளரையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்!
திருக்குர்ஆன் 4:89
90. உங்களுடன் உடன்படிக்கை செய்த சமுதாயத்துடன் சேர்ந்து கொண்டோரைத் தவிர. அல்லது உங்களை எதிர்த்துப் போரிடுவதையோ, தமது சமுதாயத்தை எதிர்த்துப் போரிடுவதையோ ஒப்பாமல் உங்களிடம் வந்து விட்டோரைத் தவிர. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது அடக்கியாளச் செய்திருப்பான். அப்போது அவர்கள் உங்களை எதிர்த்துப் போரிட்டிருப்பார்கள். அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் செய்யாது, உங்களிடம் சமாதானத்துக்கு வந்தால் அவர்களுக்கு எதிராக அல்லாஹ் எந்த வழியையும் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை.
திருக்குர்ஆன் 4:90

இந்த இரண்டு வசனங்களையும் சேர்த்து படித்தால் பிரச்சினை இல்லை..
போர் செய்யாதவர்களை விடுவித்து விட சொல்கிறது.
இதன் அடிப்படையில் 4;89 உம் யுத்தம் செய்பவர்களையே குறிக்கிறது..
இதில் தவறு ஏதுமில்லை..
**********

பைபிள்:
மதம் மாறினால் கல்லால் அடித்து கொல்ல வேண்டும்.
உபாகமம் 17:3-5 13:6-10
முதலில் உன் புத்தகத்தை படீயா!!
+++++++++++++++
+++++++++++±+++
+++++++++++++++
++++++++++++++++++


9.////
9. Thou shall Behead non-Muslims. Koran 8:12, 47:4/////
6வது பதிலில் பதில் கொடுக்கப்பட்டுவிட்டது.
+++++++++++++++
+++++++++++++++++++++++++++


10.
////
10. Thou shall Kill AND be Killed for Islamic Allah. Koran 9:5////

9:5 "ஆகவே சிறப்புற்ற மாதங்கள் சென்றுவிட்டால், இணைவைத்து கொண்டிருப்போரை_ அவர்களை கண்ட இடமெல்லாம் கொல்லுங்கள்; அவர்களை பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்க
ள்;ஒவ்வொரு பதுங்குமிடத்தில
ும், அவர்களை குறிவைத்து உட்காருங்கள்;"
இதுவும் அனைவரையும் கூறிக்காது!
9:1-14 வரை முழுமையாக படித்தால் புரியும்.
அவற்றை குற்றம் சாட்டுபவர்கள் கூறவே மாட்டார்கள் ஏனெனில் அது அவர்களின் கருத்துக்கு எதிராகவே உள்ளது!!
இவ்வசனங்கள் கூறுவது, முஸ்லிம்களுடன் ஒப்பந்தம் செய்து அதை முறித்தவர்களுக்
கே இப்படி செய்யுமாறு கூறினான்.

9:6 இல் இந்த எதிரிகளை சேர்ந்த ஒருவர் முஸ்லிம்களிடம் அபயம் தேடினால் அபயம் கொடத்து பாதுகாப்பான இடத்தில் அவர்களை சேர்க்குமாறு கூறுகிறது!!

இதன்படி 9:5 பார்த்தோமானால் அது குறிப்பிடுவது , உடன்படிக்கையை முறித்து முஸ்லிம்களோடு சமாதானமாக முன்வராத அரபுகளையே!
9:7 இன்படி முஸ்லிம்களோடு ஒப்பந்தம் செய்து முறிக்காத அரபுகளின் ஒப்பந்தத்தை பூர்த்தி செய்யுமாறு இறைவன் ஏவுகிறான்!

9:2 இன்படி அந்த எதிரி கூட்டத்திற்கு 4 மாதம் அவகாசம் கொடுக்கபட்டுள்ளது!


மேலும் 9:5 இல் சிறப்புற்ற மாதங்கள் சென்றபின்பே இதை செய்யுமாறு கூறுகிறது.

 இதுவும் போரையே குறிக்கிறது! அதுவும் ஒப்பந்தத்தை முறித்து துரோகம் செய்த மக்கா முஷ்ரிக்களையே குறிக்கிறது. அதை 9:13 உறுதியாக கூறுகிறது!

அந்த மக்காவாசிகள் தான் முதலாவதாக போரை ஆரம்பித்ததோடு நபியையும் சொந்த ஊரைவிட்டு வெளியேற்றினார்கள்!!

அப்படியிருந்தும் அத்தகைய எதிரியானவன் முஸ்லிம்களிடம் அபயம் கேட்டால் 9:6 இன்படி அபயம் கொடுக்கும்படி கூறுகிறது!
மேலும் பாதுகாப்பான இடத்தில் சேர்க்க சொல்கிறது! இதைவிட நீதம் வேறு என்ன???
******

பைபிள்:
மாற்று மத்ததவனை கொல்லு.
யாத்திராகமம் 22:20
+++++++++++++++
+++++++++++++++++++++++++++


11.
//////
11. Thou shall Terrorize non-Muslims. Koran 8:12, 8:60////

8:12 பற்றி 6வது பதிலில் பார்க்கவும்.

8:60
60. உங்களால் இயன்ற அளவு பலத்தையும், போர்க்குதிரைகளையும் அவர்களுக்கு எதிராகத் தயாரித்துக் கொள்ளுங்கள்!359 அதன் மூலம் அல்லாஹ்வின் எதிரிகளையும், உங்களின் எதிரிகளையும் அவர்கள் அல்லாத மற்றவர்களையும் நீங்கள் அச்சமடையச் செய்யலாம். அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள்!53 அல்லாஹ்வே அவர்களை அறிவான். அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கு முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.
திருக்குர்ஆன் 8:60

இது தயார் நிலையில் இருப்பதற்கே கூறுகிறது. அன்றைய அரேபியாவில் பல பிரிவினர் முஸ்லிம்களுக்கு எதிராக போர்புரிய தயாரானார்கள்..

முஸ்லிம்கள் தயாரானால் தீவிரவாதமோ?.
8:61 இல் எதிரிகள் சமாதானமானால் சமாதானமாக சொல்கிறது போர்களத்திலும்.
*******

பைபிள் தீவிர வாதத்தை மேலே சொல்லிவிட்டோம்..
யோசுவா புத்தகத்தை படித்தால் புரியும்..
+++++++++++++++
+++++++++++++++
+++++++++++++++
++++++++++++++++++


12.
/////
12. Thou shall Steal and Rob from non-Muslims. Koran Chapter 8 (Booty/Spoils of War)////

போரில் எதிரிகளின் பொருளை எடுப்பது அன்றைய வழமை.. அந்த படியே முஸ்லிம்களும் செய்தார்கள்..
இதில் தவறு இல்லை..
********

பைபிள் :
*உபாகமம் 20:12-14 இல்,
போரில் பெண்களையும் , ஆடுமாடுகளையும் கொள்ளையிட்டு, கொள்ளை பொருளை அனுபவிக்க உன் வேத காமம் சொல்கிறது.
*. எகிப்தியனின் நகைகளை இரவலாக கேட்டு , சுருட்டிக்கொண்ட
ு ஓடிவிடுமாறு இவனின் கர்த்தர் தான் சொன்னார்.
யாத்திராகமம் 3:22 12:35-36
*திருடி சாப்பிடலாம் என்பதும் பைபிளே.
உபாகமம் 23:24
+++++++++++++++
+++++++++++++++
+++++++++++++++
++++++++++++++++++


13.
////
13. Thou shall Lie to Strengthen Islam. Koran 3:28, 16:106////

28. நம்பிக்கை கொண்டோர், நம்பிக்கை கொண்டோரை விட்டு விட்டு (ஏகஇறைவனை) மறுப்போரைப் பொறுப்பாளர்களாக ஆக்கக் கூடாது.89 அவர்களிடமிருந்த
ு தற்காத்துக் கொள்வதற்காக தவிர. இவ்வாறு செய்பவருக்கு அல்லாஹ்விடமிருந்து (பாதுகாப்பு) எதுவுமில்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான். திரும்புதல் அல்லாஹ்விடமே உள்ளது.
திருக்குர்ஆன் 3:28

இதில் அப்படி எதுவுமில்லை...

106. அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு உள்ளத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் அல்லாஹ்வின் கோபமும், கடும் வேதனையும் உண்டு. உள்ளத்தில் நம்பிக்கை வலுப்பெற்ற நிலையில் நிர்பந்திக்கப்பட்டவர் தவிர.
திருக்குர்ஆன் 16:106

இதிலும் அப்படி இல்லை.
********

பைபிள்.:

.*கர்த்தர் ஆகாபை கொல்லுவதற்காக, சதி செய்து பொய் பேசும் ஆவியை அனுப்பி தீர்க்கதரிசிகளை பொய் சொல்ல வைத்தார்.
1 இராஜாக்கள் 22:19-23
உன் கர்த்தரை குறை சொல்லிக்கொள்.
+++++++++++++++
+++±++++++++++++++++++±+++++++
±+++++++++++++++++


14.
///
14. Thou shall Fight non-Muslim even if you don't want to. Koran 2:216///

216. உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் போர் செய்வது உங்களுக்குக் கடமையாக்கப்பட்ட
ுள்ளது. ஒன்றை நீங்கள் வெறுக்கலாம். அது உங்களுக்கு நன்மையானதாக இருக்கும். ஒன்றை நீங்கள் விரும்பலாம். அது உங்களுக்குக் கெட்டதாக இருக்கும். அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.53
திருக்குர்ஆன் 2:216
இதில் எத்தவறும் இல்லை..
போர் செய்வது 4:75 22:39-40 இன்படி, தற்பாதுகாப்பிற்கும், அப்பாவிகளை பாதுகாத்து , அநியாயக்காரனை ஒடுக்கவும் தான்..
****

கர்த்தரின் யுத்தபடை, பற்றி 1 சாமுவேல் 15:3-5 , உபாகமம் 20:13-17 , யோசுவா இல் பார்க்கலாம்.. எவ்வளவு தீவிரவாதி தேவன் என்று..
+++++++++++++++
+++++++++++++++
+++++++++++++++
++++++±+++++++++++


15.///
15. Thou shall not take non-Muslims as friends. Koran 5:51///

5:51 உடன் சேர்த்து 5:57 ஐ படியுங்கள்..
மார்க்கத்தை கேலி செய்கிறவர்களாக உள்ளார்கள்.

மேலும் முஸ்லிம்களிடம் வஞ்சகமாக இருக்கிறார்கள். (3:118-121)

இவர்களிடம் அப்படி தானே இருக்க வேண்டும்.


60:8.
மார்க்க அடிப்படையில் போர் செய்யாமலும் வீட்டைவிட்டு விரட்டாமலும் இருப்போருக்கு நன்மை செய்வதில் தடை இல்லை

60:9 அப்படி செய்பவர்களை தான் நண்பர்களாக எடுக்க கூடாது..
இதில் எத்தவறும் இல்லை..
********

பைபிள்:
கிறிஸ்தவனல்லாதவனை வீட்டுக்கு எடுக்காதே. அவனுக்கு வாழ்த்து சொல்லாதே.
2 யோவான் 1:9-10
நல்ல போதனை!!.
+++++++++++++++
++++±+++++++++++++++++++(+++++
++++++++++++++++++


16.
////
16. Thou shall Call non-Muslims Pigs and Apes. Koran 5:60, 7:166, 16:106////

16:106 இல் அப்படி எதுவுமில்லை..

5:60
60. "அல்லாஹ்விடம் இதை விட கெட்ட கூலி பெறுபவனைப் பற்றி உங்களுக்கு நான் கூறட்டுமா?'' என்று கேட்பீராக! அல்லாஹ் எவர்களைச் சபித்து6 கோபம் கொண்டானோ, எவர்களைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் உருமாற்றினானோ,23 எவர்கள் தீயசக்திகளுக்கு அடிபணிந்தார்களோ அவர்களே தீய இடத்திற்குரியவர்கள். நேர்வழியிலிருந்து தவறியவர்கள்.
திருக்குர்ஆன் 5:60

இது உருமாற்றப்பட்டவர்களையே சொல்கிறது..
திட்ட சொல்லவில்லை..

7:163-166 இன்படி, அவர்கள் சனிக்குழமையில் வரம்பு மீறியவர்களை குறிக்கிறது..
இதில் தப்பாக பேசும்படி இல்லை..
******,
பைபிளில் யேசு புறஜாதிகளை நாய்களுக்கு ஒப்பிடுகிறார்.
மத்தேயு 15:26
அத்தாட்சி கேட்டவர்களை விபச்சார சந்ததி என்றார்.
மத்தேயு 12:39

+++++++++++++++
++++++++++±++++
++++++++++++++++++±(++++++++++
+++


17.
///
17. Thou shall Treat non-Muslims as the vilest creatures deserving no mercy. Koran 98:6///

6. (ஏகஇறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும்27 இணை கற்பிப்போரும் நரக நெருப்பில் இருப்பார்கள். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்.
திருக்குர்ஆன் 98:6
இதில் என்ன தவறு??
****
+++++++++++++++
+++++++++++++++
+++++++++++++++++(++++++++++++
+++


18.////
18. Thou shall Treat non-Muslims as sworn enemies. Koran 4:101////

101. நீங்கள் பூமியில் பயணம் மேற்கொள்ளும் போது (ஏகஇறைவனை) மறுப்போர் உங்களைத் தாக்கக் கூடும் என்று அஞ்சினால் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது. (ஏகஇறைவனை) மறுப்போர் உங்களுக்குப் பகிரங்க எதிரிகளாகவுள்ளனர்.
திருக்குர்ஆன் 4:101

முஸ்லிம்கள் தொழும்போது அவர்களை தாக்குவோம் என திட்டம் போட்டவர்கள் விசயத்தில் இது இறக்கபட்ட வசனமாகும்.
*****
பைபிள் கர்த்தர் எப்படி கட்டளையிட்டார் என்று மேலே சொல்லிவிட்டோம்.
+++++++++++++++
+++++++++++++++
++++++++++++++++++++++++++++!+
+++

19-20
////
19. Thou shall Kill non-Muslims for not converting to Islam. Koran 9:29
20. Thou shall Extort non-Muslims to keep Islam strong. Koran 9:29.////////


ஸூரா தவ்பா (9TH CHAPTER) இன் பெரும் பகுதி # தபூக் என்ற போருடன் சம்பந்தபட்டதாகும்!
தபூக் யுத்தம் என்பது கிறிஸ்தவ சாம்ராஜ்யமாக இருந்த ரோம பேரரசுடன் நடக்க இருந்த போராகும். ரோம பேரரசன் ஹிர்கல் (ஹேர்குயூலிஸ்) பெரும்படையுடன் மதீனாவை தாக்க தயாராவதாக அங்கிருந்து வந்த வியாபார கூட்டம் முஸ்லிம்களிடம் சொன்னது. எனவே இந்த பைஸாந்தியர்களின் அச்சம் மதீனாவையே சூழ்ந்திருந்தது!

இவர்களை மதீனாவை நெருங்க விடக்கூடாது. அதற்காக தபூக் என்ற இடத்தை நோக்கி நபியவர்களும் தோழர்களும் தயாரானார்கள்!
முஸ்லிம்களுக்கு எதிராக பைசாந்தியர்களுடன் சில அரபு கிறிஸ்தவ கூட்டங்களும் வேறு சிலரும் சேர்ந்துகொள்ள தயாரானார்கள்!
தபூக் இல் நபியவர்கள் 20 நாட்கள் தங்கியிருந்தார்கள்!

ஆனால் பைசாந்தியர்கள் திரும்பிவிட்டனர்! எனவே முஸ்லிம்களின் பார்வை , முஸ்லிம்களுக்கு எதிராக பைசாந்தியருக்கு உதவ முன்வந்தவர்கள் மீது திரும்பியது!
!!

29. வேதம் கொடுக்கப்பட்டோர
ில்27 அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பாமல், அல்லாஹ்வும், அவனது தூதரும் விலக்கியவற்றை விலக்கிக் கொள்ளாமல்,186 உண்மையான மார்க்கத்தைக் கடைப்பிடிக்காமல் இருப்போர் சிறுமைப்பட்டு ஜிஸ்யா வரியைத்201 தம் கையால் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிடுங்கள்!53
திருக்குர்ஆன் 9:29

இதுபோன்று முஸ்லிம்களின் கீழ் உள்ளவர்கள் ஜிஸ்யா கட்ட வேண்டும்.

அவர்கள் தாங்களாகவே ஜிஸ்யா வரி கொடுக்கும் வரை போரிட சொல்கிறது!


*ஏன் ஜிஸ்யா வரி???? மாற்றுமதத்தவர்களிடம் இஸ்லாமிய அரசு இந்த வரியை அறவிடும்!

இந்த வரியானது அந்த மக்களின் பாதுகாப்பிற்கும் அவர்களது மத பாதுகாப்பிற்கும் உத்தரவாதமாக இது வாங்கப்படும்!

முஸ்லிம்களிடம் இப்படி வாங்குவதில்லை என்று சிலர் நினைக்கலாம்!

ஆனால் முஸ்லிம்கள் தான் இவர்களுக்கு பாதுகாப்பை கொடுப்பார்கள்.

அதேநேரம் தம் வருமானத்தில் ஸகாத் கொடுப்பார்கள்.

இந்த தொகையோடு ஜிஸ்யா வரியின் அளவை ஒப்பிட்டால் "ஸகாத்" ஜிஸ்யாவை விட பல மடங்கு அதிகமானது!

இந்த ஸகாத்தை அரசு விரும்பிய வழியில் செலவழிக்கமுடியா
து!

இதை 8 கூட்டத்தினருக்க
ே கொடுக்கலாம்! 1. வறியவர்களுக்கு 2.ஏழைகளுக்கு 3. ஸகாத்தை வசூலிக்க உழப்பவர்களுக்கு 4.உள்ளம் ஈர்க்கபட்டவர்களுக்கு 5. அடிமைகளை விடுதலை செய்வதற்கு 6. ஆகுமாக்கபட்டவற்
றிற்காக கடன்பட்டவர்களின் கடனை அடைப்பதற்கு 7.அல்லாஹ்வின் பாதையில் போராடுபவர்களுக்கு 8.வழிப்போக்கர்களுக்கு (தன் பயணத்தை பூரணப்படுத்தி கொள்ள முடியாதவர்களுக்கு).

இவர்களுக்கே ஸகாத்தை வினியோகிக்கலாம்!
ஜிஸ்யாவரியானது அரசின் இராணுவ நடவடிக்கைகளுக்க
ாகவும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் இன்னும் பல தேவைகளுக்காகவும
ே பயன்படுத்த படுகிறது!

நாம் எந்த ஒரு நாட்டை எடுத்துகொண்டாலும் அந்த நாடுகளில் பொதுமக்களிடம் வரி வசூலிக்கபடுகிறது!

இதை யாரும் தவறாக நினைக்கமாட்டோம்! அதே போன்றத ஜிஸ்யா வரியும்!!

இந்த ஜிஸ்யாவை பொருத்தமட்டில், இது அனைத்து மனிதர்களிடமும் வாங்குவதில்லை!
சிறுவர்கள் பெண்கள் தொழில் செய்ய இயலாத பலவீனர்களிடம் இதை வசூலிப்பதில்லை!!
இதை தவறாக பார்க்கவே முடியாது!
நாட்டுமக்களின் பாதுகாப்பிற்கே இது அறவிடப்படும். 
இந்தவரி மிகமிக சொற்பமானதே!
பிரித்தானியர் ஒல்லாந்தரின் கீழ் பல நாடுகள் இருந்த போது அவர்கள் அறவிட்ட வரயை போன்று இது கஷ்டமானதல்ல!!
. . . . . . . . . .
ஜிஸ்யா வரி பைபிளில்
- - - - -
DEUTERONOMY (உபாகமம்)
20:10. நீ ஒரு ஊரின் மேல் யுத்தம் பண்ண நெருங்கம் போது அந்த பட்டனத்தாருக்கு சமாதானம் கூறகடவாய்.
11.அவர்கள் உனக்கு சமாதானமாக உத்தரவு கொடுத்துவாசலை திறந்தால், அதில் உள்ள ஜனங்கள் எல்லோரும் உனக்கு
#பகுதிகட்டுகிறவர்களாகி உனக்கு # ஊழியம் செய்யகடவர்கள்
+++++++++++++++
+++++++++++++++
+++++++++++++++
++++++++++++++++++

புதன், 8 ஏப்ரல், 2020

நபியின் பிறப்பை இழிவுபடுத்தும் கிறிஸ்தவர்களுக்கான மறுப்பு


💎💎நபியின் பிறப்பை இழிவுப்படுத்தும் கிறிஸ்தவர்களுக்கான மறுப்பு💎💎





✍இயேசு விபச்சார சந்ததியில் இருந்து வந்தவர் என்று பைபிள் இயேசுவை இழிவுப்படுத்துவதை முஸ்லிம்கள் சுட்டிக்காட்டியதும், தங்களது இயலாமையை போக்க முஹம்மது நபியின் பிறப்பை குற்றப்படுத்தி கிறிஸ்தவர்கள் பேசி வருகின்றனர். அதன் உண்மை தன்மையை பற்றி பார்ப்போம்.


✍நபியின் பிறப்பை குற்றப்படுத்த கீழேயுள்ள ஹதிஸையும் ஆதாரமாக காட்டுகின்றனர். ஆனால் அந்த ஹதிஸ் அவர்கள் சொல்லும் அர்த்தத்தில் இல்லை. அந்த ஹதிஸை திரிவுப்படுத்தும் வேலையை தான் கிறிஸ்தவர்கள் செய்துள்ளனர்.


⭐2375. அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார். பத்ருப் போரில் கிடைத்த பொருட்களில் (என்னுடைய பங்காக) அல்லாஹ்வின் தூதருடன் சேர்ந்து கூட்டாக ஒரு முதிர்ந்த வயதுடைய ஒட்டகம் எனக்குக் கிடைத்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு மற்றொரு (கிழட்டு) ஒட்டகத்தையும் கொடுத்திருக்கிறார்கள். ஒரு நாள், அவ்விரண்டையும் நான் அன்சாரி ஒருவரின் வீட்டு வாசலுக்கருகே அமரச் செய்தேன். 'இத்கிர்' புல்லை, விற்பதற்காக அதன் மீது ஏற்றிக் கொண்டு வர நான் விரும்பியிருந்தேன். அப்போது பனூ கைனுகா குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லன் ஒருவன் (புல் வாங்கி ஏற்றிக் கொண்டு வர உதவியாக) என்னுடன் இருந்தான். ஃபாத்திமாவை மணம் புரிந்த வலீமா விருந்திற்காக அந்தப் புல் விற்ற பணத்தைப் பயன்படுத்த நான் நாடியிருந்தேன். (நான் என் ஒட்டகத்தை வாசலில் அமரச் செய்திருந்த) அந்த வீட்டில் (என் சிறிய தந்தை) ஹம்ஸா இப்னு அப்தில் முத்தலிப் மது குடித்துக் கொண்டிருந்தார். அவருடன் ஓர் அடிமைப் பாடகியும் இருந்தாள். அவள், 'ஹம்ஸாவே! இந்த முதிர்ந்த, பருத்த ஒட்டகங்களைக் கொன்று (உங்கள் விருந்தாளிகளுக்குப் பரிமாறி) விடுங்கள்' என்று பாடினாள். உடனே ஹம்ஸா அவர்கள் அந்த இரண்டு ஒட்டகங்களின் மீதும் பாய்ந்து அவற்றின் திமில்களை வெட்டி இடுப்பைக் கிழித்தார்கள். பிறகு அவற்றின் ஈரல் குலைகளை வெளியே எடுத்தார்கள். அருவருப்பூட்டிய அந்த பயங்கரக் காட்சியை கண்டேன். உடனே, நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அங்கு நபி(ஸல்) அவர்களிடம் நடந்த (நிகழ்ச்சியின்) செய்தியைக் கூறினேன். உடனே அவர்கள், ஸைத் இப்னு ஹாரிஸா அவர்களுடன் புறப்பட்டார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். ஹம்ஸா அவர்களிடம் சென்று தம் கோபத்தை நபி(ஸல்) அவர்கள் வெளிப்படுத்தினார்கள். ஹம்ஸா அவர்கள் தங்களின் பார்வையை உயர்த்தி, 'நீங்கள் என் முன்னோர்களின் அடிமைகள் தாமே?' என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபி(ஸல) அவர்கள், அவர்களைவிட்டு அப்படியே (திரும்பாமல்) பின்னோக்கி நடந்து வந்து வெளியேறி வந்துவிட்டார்கள். இந்த நிகழ்ச்சி மதுபானம் தடை செய்யப்படுவதற்கு முன்பு நடந்தது. அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜ்(ரஹ்) கூறினார். நான் அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப்(ரஹ்) அவர்களிடம், 'திமில்களின் இறைச்சியையுமா (ஹம்ஸா(ரலி)) எடுத்தார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம், அவ்விரண்டின் திமில்களையும் அவர் வெட்டி எடுத்துச் சென்றார்' என்று கூறினார். ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 42.


✍குடிப்போதையில் இருந்த ஹம்ஸா (ர) அவர்கள் நபியை பார்த்து மட்டும் நீங்கள் என் மூதாதையர்கள் அடிமைகள் தானே என்று சொல்லவில்லை. பொதுவாக பன்மையில்  அவ்வாறு சொல்கிறார். அதாவது நபியையும், அலியையும் சேர்த்தே அவர் அவ்வாறு கூறுகிறார். இந்த விசயம் எந்த விதத்திலும் நபியின் தாயாகிய ஆமினாவுடன் சம்பந்தப்பட்டது இல்லை. 
அவ்வாறு இருந்தால் அதற்கான ஆதாரத்தை கிறிஸ்தவர்கள் தரட்டும்.


💎அப்துல்லாஹ் தனது மனைவியுடன் முஹம்மது மூன்று நாட்கள் மட்டும் தான் இருந்தாரா?💎



✍நபியின் தந்தையாகிய அப்துல்லாஹ் அவரது மனைவியுடன் மூன்று நாட்கள் மட்டுமே இல்லற வாழ்வு வாழ்ந்தார் என்பது கிறிஸ்தவர்களின் இட்டுகட்டாகும். மூன்று நாட்கள் மட்டும் அப்துல்லாஹ் அவரது மனைவியுடன் தனது மனைவியின் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். அதன் பிறகு மனைவியுடன் மக்காவிற்கு சென்றார் என்றே வரலாற்று நூல்கள் சொல்கின்றன். 
திருமணம் முடித்து மூன்று நாட்கள் பெண்ணின் வீட்டில் இருக்க வேண்டும் என்பது அவர்களின் சடங்காக இருந்தது. ஆதாரம்: கிதாப் மின் இப்னு கதீர் தபாகத் இப்னு சாத்சாத்


✍அப்துல்லாஹ் தனது மனைவியுடன் மக்காவில் இல்லற வாழ்க்கையில் ஈட்பட்டு சில மாதங்களுக்கு பிறகே வியாபார நிமித்தமாக ஷாம் சென்றார் என்று இஸ்லாமிய வரலாற்று நூல்கள் சொல்கின்றன. ஆதலால் இதன் மூலம் மூன்று நாட்கள் மட்டுமே அப்துல்லா தனது மனைவியுடன் இல்லறம் நடத்தினார் என்ற கிறிஸ்தவ குற்றச்சாட்டு போலியானது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.


💎முஹம்மது நபி பிறப்பதற்கு நான்கு வருடங்கள் முன்பே அப்துல்லாஹ் மரணித்து விட்டாரா?💎



✍முஹம்மது நபி பிறப்பதற்கு சில மாதங்கள் முன்புதான் அப்துல்லாஹ் மரணித்தார் என்று இப்னு கதிர் தனது தப்ஸீர் நூலில் சொல்கின்றார்.

✍அல் பைஹீகி தனது நூலில் நபி கருவுற்று 7வது மாதத்தில் அப்துல்லாஹ் இறந்தார் என்று சொல்கிறார்.

وقال بعضهم: مات أبوه وهو ابن سبعة أشهر.”
said: He passed away when he was seven months”
அவர்களில் சிலர்  கூறுகிறார்கள்: அவர்  ஏழு மாத பிள்ளையாக இருந்த நிலையில் அவரது தந்தை மரணித்தார்.

  ✍சில ஆதாரங்களின் படி முஹம்மது நபி பிறந்து இரண்டு வருடங்கள் கழித்து தான் இறந்தார் என்று சொல்கிறது.

✍இப்னு இஸ்ஹாக் தனது நூலான நபிவிய்யா மின் இப்னு இஸ்ஹாக்கில் முஹம்மது நபி பிறந்து 28 மாதங்களுக்கு பிறகு தான் அவரது தந்தை அப்துல்லாஹ் இறந்தார் என்று குறிப்பிடுகிறார்.

ويقال : إن عبد الله هلك والنبي صلى الله عليه وسلم ابن ثمانية وعشرين شهرا.
“And it is said, that Abdullah passed away when the Prophetsaw was of twenty eight months”
மேலும் சொல்லப்படுகிறது: நபி (ஸல்) அவர்கள் 28 மாதங்களை அடைந்த பிள்ளையாக இருந்தநிலையில் அப்துல்லாஹ் இறந்தார்.


✍இப்னு ஷாத் எழுதிய நூலான கிதாப் அல் தபாகத் அல் கபீரும் அதே செய்தியை குறிப்பிடுகின்றது.


قالا: توفي عبد الله بن عبد المطلب بعدما أتى على رسول الله صلى الله عليه وسلم ثمانية وعشرون شهرا، ويقال: سبعة أشهر.
“ said: The death of the father of the Holy Prophetsaw was after twenty eight months after the birth of the Prophetsaw, and it is also said seven months”


✍ஆதலால் முஹம்மது நபி பிறப்பதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பே அப்துல்லாஹ் மரணித்து விட்டார் என்ற கிறிஸ்தவர்களின் கூற்று பொய்யானது.


⭐இன்னும் முஹம்மது நபிக்கும் அவரது சித்தப்பா ஹம்ஸாக்கும் 4 வயது வித்தியாசம் உள்ளது என்ற செய்தி பலவீனமான செய்தி என்று இப்னு சயீத் கூறி அதனை மறுக்கிறார். ஏனெனில் அதே நூலில் அதன் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தாமல் அல்லாஹ்வே அனைத்தும் அறிந்தவன் என்று சொல்லி முடிக்கப்பட்டுள்ளது. (இப்னு ஷயீத் )


⭐முஹம்மது நபியை எதிர்த்தவர்களும் அவரது பிறப்பை கண்ணியப்படுத்துதல்⭐

✍இவற்றை எல்லாம் காட்டிலும் முஹம்மது நபியை எதிர்த்தவர்கள் முஹம்மது நபி அப்துல்லாஹ்வின் மகன் தான் என்பதற்கு சாட்சியம் பகர்ந்துள்ளனர். தாங்கள் வணங்கும் சிலை தெய்வங்களை வணங்கக் கூடாது என்று சொல்லி தங்களோடு யுத்தம் செய்யும் முஹம்மது நபி எதாவது தவறு செய்யாமாட்டாரா.... அவ்வாறு தவறு செய்தால் அதனை கொண்டு அவரை இழிவுப்படுத்தலாம் என்று இருந்த இஸ்லாமிய விரோதிகளும் நபியின் பிறப்பை குற்றம் சொல்லவில்லை. ஹூதைபியா உடன்படிக்கையின் போது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி என்று எழுதுவதற்கு சம்மதிக்காத இஸ்லாமிய எதிரிகள் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது என்று எழுத சொன்னார்கள். முஹம்மது நபியின் காலத்தில் வாழ்ந்த நபியின் எதிரிகளும் நபியின் பிறப்பை குற்றம் சாட்டவில்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது.


💎3655. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவுக்குச் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டபோது, "முஸ்லிம்கள் (அடுத்த ஆண்டு) மக்காவிற்குள் நுழைந்து மூன்று நாட்கள் தங்கலாம்; நகருக்குள் உறையிலிட்ட வாளுடன்தான் நுழைய வேண்டும்; மக்காவிலிருந்து திரும்பிச் செல்லும்போது மக்காவாசிகளில் யாரையும் தம்முடன் அழைத்துச் செல்லக் கூடாது. அவர்களுடன் வந்திருப்பவர்களில் மக்காவிலேயே தங்கிக்கொள்ள விரும்பும் யாரையும் தடுக்கக்கூடாது" ஆகிய நிபந்தனைகளின் பேரில் மக்காவாசிகள் நபி (ஸல்) அவர்களடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டனர். நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், "நமக்கிடையிலான சமாதான ஒப்பந்தத்தின் நிபந்தனைகளைப் பின்வருமாறு எழுதுவீராக:
"அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...
இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் எழுதிக்கொண்ட ஒப்பந்த பத்திரம்..." என்று கூறினார்கள். உடனே இணைவைப்பாளர்கள், "நீர் அல்லாஹ்வின் தூதர்தாம் என நாங்கள் அறிந்திருப்போமாயின், நாங்கள் உம்மைப் பின்தொடர்ந்திருப்போமே! மாறாக, "அப்துல்லாஹ்வின் புதல்வர் முஹம்மத்" என்று எழுதுங்கள்" என்று கூறினார்கள்.

ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் அ(ந்த வாசகத்)தை அழித்துவிடுமாறு கூறினார்கள். அதற்கு அலீ (ரலி) அவர்கள், "இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! அதை நான் அழிக்கமாட்டேன்"என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அந்த இடத்தை எனக்குக் காட்டுவீராக!" என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள் அந்த (வாசகம் இருந்த) இடத்தைக் காட்டினார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை (தமது கரத்தால்) அழிந்துவிட்டார்கள். மேலும், "அப்துல்லாஹ்வின் புதல்வர்" என்று எழுதச் செய்தார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 32. 


முஹம்மது நபியின் முக்கிய எதிரியான அபூசூப்யானிடம் ரோம் அரசர் ஹெராக்ளியஸ் முஹம்மது நபியின் நபித்துவத்தை விசாரிப்பதற்காக அவரது குடும்ப பாரம்பரியத்தை பற்றி கேட்கும் போது, எங்களில் சிறந்த குடும்ப பாரம்பரியத்தை உடையவர் முஹம்மது என்று அபூசூப்யான் கூறினார். முஹம்மது நபியின் காலத்தில் வாழ்ந்த அவரது முக்கிய விரோதியான அபூசூப்யானே முஹம்மது நபியின் பிறப்பை கண்ணியப்படுத்தி பேசுவதில் இருந்து நபியின் குடும்ப பாரம்பரியத்தின் சிறப்பை புரிந்து கொள்ளலாம். நபியின் காலத்தில் வாழ்ந்தவர் எவரும் நபியின் பிறப்பை பற்றி சந்தேகப்படவில்லை என்பதே உண்மை.



4553. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். அபூ சுஃப்யான்(ரலி) தம் வாய்ப்பட எனக்கு அறிவித்தாவது: (குறைஷியரின் முக்கிய தலைவராயிருந்த) எனக்கும் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குமிடையிலான (ஹுதைபியா சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த) காலகட்டத்தில் நான் (வியாபாரத்திற்காக வாணிபக் குழுவினருடன் ஷாம் நாட்டிற்குச்) சென்றிருந்தேன். நான் ஷாம் நாட்டில் இருந்துகொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்களிடமிருந்து (ரோம பைஸாந்தியப் பேரரசர் சீசர்) ஹெராக்ளியஸிற்கு நிருபமொன்று கொண்டுவரப்பட்டது. அதை நபி(ஸல்) அவர்களிடமிருந்து 'திஹ்யா அல் கல்பீ' அவர்கள் கொண்டு வந்து, 'புஸ்ரா'வின் அரசரிடம் கொடுக்க, அவர் அதை ஹெராக்ளியஸிடம் கொடுத்தனுப்பியிருந்தார். அப்போது ஹெராக்ளியஸ் (தம்மைச்சூழ அமர்ந்திருந்த பிரதிநிதிகளிடம்) 'தம்மை இறைவனின் தூதரெனக் கூறிக்கொண்டிருக்கும் இந்த மனிதரின் (முஹம்மதின்) சமுதாயத்தைச் சேர்ந்த எவரேனும் இங்கு (நம் நாட்டில்) இருக்கிறார்களா?' என்று கேட்டதற்கவர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள். அப்போது (ஷாமில் வியாபாரத்திற்காகத் தங்கயிருந்த) நான் குறைஷியர் சிலருடன் அழைக்கப்பட்டேன். எனவே, நாங்கள் ஹெராக்ளியஸிடம் சென்றோம். அவர் முன்னிலையில் (அரசவையில்) எங்களை அமரச் செய்தார்கள். அப்போது ஹெராக்ளியஸ், 'தம்மை இறைத்தூதர் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த மனிதருக்கு உங்களில் நெருங்கிய உறவினர் யார்?' என்று கேட்டதற்கு நான், 'நான் (தான் நெருங்கிய உறவினன்)' என்று சொன்னேன். எனவே, அவரின் முன்னிலையில் என்னை அமர்த்தினர். என் சகாக்களை எனக்குப் பின்னால் அமர்த்தினர். பிறகு ஹெராக்ளியஸ் தம் மொழிபெயர்ப்பாளரை அழைத்து (அவரிடம்), 'தம்மை இறைத்தூதர் என்று சொல்லிக்கொண்டிருக்கும் இந்த மனிதரைப் பற்றி இவரிடம் கேட்கப் போகிறேன்; இவர் என்னிடம் பொய் சொன்னால் (நமக்குத்) தெரிவிக்கும்படி இவருடைய சகாக்களிடம் சொல்' என்றார். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் பொய் சொன்னால் அதை என் சகாக்கள் தெரிவித்துவிடுவார்கள் என்பது (குறித்த அச்சம்) மட்டும் இல்லாதிருந்தால் (முஹம்மத்(ஸல்) அவர்களைப் பற்றி) நான் பொய்(யான விவரங்களைச்) சொல்லியிருப்பேன். பிறகு, ஹெராக்ளியஸ் தம் மொழிபெயர்ப்பாளரிடம், 'உங்களிடையே அந்த மனிதரின் குடும்பப் பாரம்பரியம் எப்படிப்பட்டது? என்று இவரிடம் கேள்' என்று கூறினார். நான், 'அவர் எங்களிடையே சிறந்த குடும்பப் பாரம்பரியத்தை உடையவராவார்' என்று பதிலளித்தேன். ஹெராக்ளியஸ் 'அவரின் முன்னோர்களில் அரசர் எவராவது இருந்திருக்கிறாரா?' என்று கேட்டார். நான் 'இல்லை' என்று சொன்னேன். ஹெராக்ளியஸ் 'அவர் தம்மை 'நபி' என வாதிப்பதற்கு முன் அவர் (மக்களிடம்) பொய் கூறினார் என்று (எப்போதாவது) நீங்கள் சந்தேகித்திருக்கிறீர்களா?' என்று கேட்டார். நான், 'இல்லை' என்று சொன்னேன். 'அவரை மக்களில் மேட்டுக்குடியினர் பின்பற்றுகின்றனரா? அல்லது அவர்களில் பலவீனர்கள் (ஒடுக்கப்பட்டவர்கள்) பின்பற்றுகின்றனரா?' என்று கேட்டார். நான், 'இல்லை; பலவீனமானவர்கள் தாம் அவரைப் பின்பற்றுகின்றனர்' என்றேன். அவர், 'அவரைப் பின்பற்றுவோர் அதிகரித்துக்கொண்டே செல்கின்றனரா? அல்லது குறைந்துகொண்டே போகின்றனரா?' என்று கேட்டார். நான் 'இல்லை; அவர்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர்' என்று சொன்னேன். அவர், 'அவரின் மார்க்கத்தில் இணைந்த பிறகு தம் புதிய மார்க்கத்தின் மீது அதிருப்தியடைந்து எவரேனும் தம் பழைய மதத்திற்கே திரும்பிச் செல்வதுண்டா?' என்று கேட்டார். நான், 'இல்லை' என்று சொன்னேன். அவர், 'அவருடன் நீங்கள் போர் புரிந்ததுண்டா?' என்று கேட்டார். நான், 'உண்டு' என்று சொன்னேன். அவர், 'அவ்வாறாயின், அவருடன் நீங்கள் நடத்திய போர்க(ளின் முடிவு)கள் எவ்வாறு இருந்தன?' என்று கேட்டார். நான், எங்களிடையேயான போர்கள் (கிணற்று) வாளிகள்தாம். (அவை சுழல் முறையில் மாறி மாறி வருகின்றன. ஒரு முறை) அவர் எங்களை வெற்றிகொள்வார். (மறுமுறை) நாங்கள் அவரை வெற்றி கொள்வோம்' என்று சொன்னேன். அவர், 'அந்த மனிதர் வாக்கு மீறுகிறாரா?' என்று கேட்டார். நான், 'இல்லை; (தற்போது நடைமுறையிலுள்ள ஹுதைபியா சமாதான உடன்படிக்கையின்) இந்தக் கால கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். இதில் அவர் எப்படி நடந்துகொள்வார் என்று எங்களுக்குத் தெரியாது' என்று சொன்னேன். அல்லாஹ்வின் மீதாணையாக! இதைத் தவிர (நபியவர்களைக் குறைசொல்வதற்கு) வேறு எந்த வார்த்தையையும் புகுத்த எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. (பிறகு) அவர், 'இவருக்கு முன்னால் (குறைஷியரில்) வேறு எவரேனும் இப்படி (தம்மை 'நபி' என) வாதித்ததுண்டா?' என்று கேட்டார். நான், 'இல்லை' என்று சொன்னேன். பிறகு ஹெராக்ளியஸ் தம் மொழி பெயர்ப்பாளரிடம் (இவ்வாறு) கூறினார்: 'அவரிடம் கூறுங்கள்: நான் உம்மிடம் உங்களிடையே அவரின் குடும்பப் பாரம்பரியம் குறித்துக் கேட்டேன். அவர் சிறந்த பாரம் பரியத்தைச் சேர்ந்தவர் என்று நீர் பதிலளித்தீர். இவ்வாறே இறைத்தூதர்கள் சிறந்த பாரம் பரியத்திலிருந்தே தேர்ந்தெடுக்கப்படுவார். நான் உம்மிடம் அவரின் முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருக்கிறாரா என்று கேட்டேன். அதற்கு நீர் 'இல்லை' என்றீர். அவரின் முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருப்பாராயின், 'தம் முன்னோர்களின் ஆட்சியதிகாரத்தை (தாமும் அடைய) விரும்பும் ஒருவர் இவர்' என்று கூறியிருப்பேன். 'மக்களில் அவரைப் பின்பற்றுபவர்கள் மேட்டுக்குடியினரா? அல்லது பலவீனமானவர்களா?' என்று அவரைப் பின்பற்றுபவர்களைக் குறித்துக் கேட்டேன். அதற்கு நீர் ஒடுக்கப்பட்ட மக்களே அவரைப் பின்பற்றுகின்றனர் என்று பதிலளித்தீர். (பெரும்பாலும்) அவர்கள் தாம் இறைத்தூதர்களைப் பின்பற்றுவோர் ஆவர். நான் உம்மிடம் 'அவர் தம்மை 'நபி' என வாதிப்பதற்கு முன்பு (அவர் மக்களிடம்) பொய் பேசினார் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா?' என்று கேட்டேன். அதற்கு நீர் 'இல்லை' என்று பதிலளித்தீர். இதிலிருந்து மக்களிடம் பொய் பேச(த் துணியா)த அவர் அல்லாஹ்வின் மீது பொய் சொல்லமாட்டார் என்று நான் புரிந்துகொண்டேன். உம்மிடம் நான் 'அவரின் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டோரில் எவராவது தம் (புதிய) மார்க்கத்தின் மீது அதிருப்திகொண்டு அதிலிருந்து வெளியேறிச் செல்வதுண்டா?' என்று கேட்டேன். அதற்கு 'இல்லை' என்றீர். இறை நம்பிக்கை இத்தகையதே! உள்ளத்தின் எழிலோடு அது கலந்துவிடும்போது (அதைக் குறித்து யாரும் வெறுப்படையமாட்டார்.) உம்மிடம் நான் 'அவரைப் பின்பற்றுவோர் (நாளுக்கு நாள்) அதிகரித்து வருகின்றனரா? அல்லது குறைந்து வருகின்றனரா?' என்று கேட்டேன், நீர் 'அதிகரித்தே வருகின்றனர்' என்று பதிலளித்தீர். இறை நம்பிக்கை அத்தகையது தான். அது முழுமையடையும் வரை (அதிகரித்துக்கொண்டே செல்லும்). மேலும், உம்மிடம் நான் 'அவருடன் நீங்கள் போர் புரிந்ததுண்டா?' என்று கேட்டேன். அதற்கு நீங்கள் போர் புரிந்தீர்கள் என்றும், உங்களுக்கும் அவருக்குமிடையே போர் கிணற்று வாளிகள் தாம்; (போரில் வெற்றியும் தோல்வியும் சுழல் முறையில் மாறி மாறி வருகின்றன என்றும், (ஒரு முறை) அவர் உங்களை வெற்றி கொண்டால் (மறு முறை) நீங்கள் அவரை வெற்றிகொள்கிறீர்கள் என்றும் பதிலளித்தீர். இறைத்தூதர்கள் அப்படித்தான் சோதிக்கப்படுவார்கள். ஆனால், இறுதி வெற்றி அவர்களுக்கே கிடைக்கும். 'அவர் வாக்கு மீறுகிறாரா?' என்று உம்மை நான் கேட்டதற்கு நீர், 'அவர் வாக்கு மீறுவதில்லை' என்று கூறினீர். இறைத்தூதர்கள் இத்தகையவர்களே; அவர்கள் வாக்கு மீறுவதில்லை. நான் 'இவருக்கு முன் உங்களில் எவராவது இந்த வாதத்தை முன் வைத்ததுண்டா?' என்று உம்மிடம் கேட்டபோது நீர் 'இல்லை' என்று பதிலளித்தீர். அவருக்கு முன்னரும் எவரேனும் இந்த வாதத்தை முன் வைத்திருந்ததாக (நீர் கூறி) இருப்பின், 'தமக்கு முன்னர் (சிலரால்) முன் வைக்கப்பட்ட ஒரு வாதத்தையே பின்பற்றிச் செல்கிற ஒருவர் இவர்' என நான் சொல்லியிருப்பேன்' என்று கூறினார். பிறகு ஹெராக்ளியஸ், 'என்ன செய்யும் படி அவர் உங்களுக்குக் கட்டளையிடுகிறார்?' என்று கேட்டார். நான், 'தொழுகையை நிறைவேற்றும்படியும், தர்மம் செய்யும் படியும், உறவைக் காத்துவரும்படியும், ஒழுக்கமாக வாழும்படியும் அவர் எங்களுக்குக் கட்டளையிடுகிறார்' என்று சொன்னேன். ஹெராக்ளியஸ், 'அவரைக் குறித்து நீர் சொன்னவை அனைத்தும் உண்மையானால், அவர் இறைத்தூதர் தாம். அவர் வரப்போகிறார் என்று நான் அறிந்துவைத்திருந்தேன். ஆனால், அவர் (குறைஷிகளாகிய) உங்களிலிருந்து வருவார் என்று நான் எண்ணியிருக்கவில்லை. நான் அவரைச் சென்றடைவேன் என அறிந்தால் அவரைச் சந்திக்க நான் விரும்புவேன். அவர் அருகில் நான் இருந்திருந்தால் அவரின் கால்களைக் கழுவியிருப்பேன். அவரின் ஆட்சி (ஒரு காலத்தில்) என் இரண்டு பாதங்களுக்குக் கீழுள்ள (இந்த) இடத்தையும் எட்டியே தீரும்' என்று கூறினார். பிறகு ஹெராக்ளியஸ் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கடிதத்தைக் கொண்டு வரும்படி உத்தரவிட்டார். (அது கொண்டு வரப்பட்டது.) அதை அவர் வாசிக்கச் செய்தார். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது. ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 65. திருக்குர்ஆன் விளக்கவுரை



இவ்வாறு நபியின் காலத்தில் வாழ்ந்தவர்கள் நபியின் பிறப்பை பற்றி சிறிதும் சந்தேகம் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம். முஹம்மது நபியின் பிறப்பை குற்றப்படுத்தும் கிறிஸ்தவர்களிடம் இஸ்லாத்தின் மீதான வெறுப்பு ஒன்றே ஆதாரமாக இருக்கிறது. முஹம்மது நபியின் காலத்தில் வாழ்ந்த இஸ்லாமிய விரோதிகளும் முஹம்மது நபியின் குலப்பெருமையை அறிந்து அவரை கண்ணியப்படுத்தியுள்ளனர் என்பதே வரலாற்று உண்மை.




Credits : சத்தியத்தை நோக்கி FB page

அல்லாஹ் வழிதவறச்செய்கிறான் என்பதன் விளக்கம்

1.மனிதனுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது  --மனிதனுக்கு இறைவன் வழி காட்டியுள்ளான். ஒன்று அவன் நன்றியுள்ளவனாக இருக்கிறான் அல்லது காஃபிராக இருக்கிறான...