வெள்ளி, 23 ஜூன், 2023

பைபிளும் குர்ஆனும் ஓர் ஒப்பீடு பாகம் 1

 பைபிளும் குர்ஆனும் ஓர் ஒப்பீடு பாகம் 1


பைபிளும் குர்ஆனும் பல விசயங்களை தம்மிடையே உடன்பட்டும் முரண்பட்டும் கூறுகின்றன. ஆகவே அவை பற்றி ஒரு தொகுப்பை செய்யலாம் என்று நினைக்கிறேன்.


இதில் இரண்டு விசயங்களை மட்டும் ஒப்பிட்டு பார்ப்போம்.

1.மனித படைப்பின் நோக்கம்

2.முதல் மனிதரின் வரலாறு


1.மனித படைப்பின் நோக்கம் 

குர்ஆன் 

*இறைவனுக்கு அடிபணிந்து வணங்குவதற்கு படைக்கப்பட்டனர்- 51:56

*செயல்களால் யார் அழகானவர் என்பதை சோதிப்பதற்காக மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்- 67:2

*இறைவனை நம்பி நற்செயல் செய்தவர்கள் மறுமையில் சுவர்க்கத்தில் நுழைவார்கள்- 2:25,82 ; 3:15,134-136......79:40-41...85:11...

*இதேபோல் இறைவனை நம்பாமல் நிராகரித்து பெருமையடித்து, தீய செயல்களை செய்தவர்கள் நரகத்தில் நுழைவிக்கப்படுவார்கள். 2:39, 81, 175,....3:10....79:37-39


பைபிள்

மற்ற மிருகங்களை ஆண்டுகொள்ள படைத்தார்- ஆதியாகமம் 1:26,28

அதாவது, மிருக மேய்பாலனாக படைத்தார்

பிறகு படைத்துவிட்டு, தோட்டவேலைக்கு வைத்தாராம்- ஆதியாகமம் 2:15.

கடைசியில் இவர்களை பேசும் பாம்பு எனும் மிருகம் மேய்த்து விட்டது.(ஆதியாகமம் 3:1-15)

*இதிலிருந்து 1600 வருடங்கள் கழித்து, மனிதனை படைத்தற்காக மனஸ்தாபப்படுகிறார்- அதாவது இவனை படைத்திருக்கவே கூடாது என உணர்கிறார்- ஆதியாகமம் 6:5-7

தான் அறியாமல் படைத்துவிட்டு பிறகு கைசேதப்படுவதாக இது சித்தரிக்கிறது. தான் படைத்த நோக்கம் தனக்கே தெரியாதா என்ன?


2.முதல்மனித படைப்பின் வரலாறு

குர்ஆன் 


*இறைவன் பூமியில் ஒரு தலைமுறையை படைக்க போவதாக தன் வானதூதர்களிடம் கூறினான்- 2:30


*அதற்கு அவர்கள் பூமியில் குழப்பம் செய்து , இரத்தம் சிந்துவோரையா படைக்க போகிறாய்? நாங்களோ உன்னை உன் புகழைக்கொண்டு துதித்து, தூய்மைப்படுத்துகிறோம் என்றனர்- அதற்கு இறைவனோ, "நீங்கள் அறியாதவற்றை நான் அறிகிறேன் என்றான்- 2:30


*இறைவன் மனிதனை படைத்து , அவனுள் தன் ரூஹிலிருந்து (உயிரிலிருந்து) ஊதியவுடன் மனிதனுக்கு சிரம்பணியுங்கள் என்று இறைவன் தன் வானதூதர்களிடம் கூறினான்- 15:29, 38:72, 7:11, 2:34


அவர்கள் மத்தியிலுருந்த ஜின் இனத்தை சேர்ந்த இப்லீஸோ தனக்கும் கட்டளையிடப்பட்டிருந்தும் மறுத்து பெருமையடித்தான். அதனால் இழிவடைந்தான். (7:11-13, 15:30-35, 38:73-77, 2:34, 18:50, 20:116, 17:61)


*தன் இழிவுக்கு காரணமாக ஆதமை கருதிய இப்லீஸ் அவரையும் அவர் சந்ததியையும் வழிகெடுப்பேன் என கூறினான். அதற்கு இறைவனும் மறுமைவரை அவகாசம் வழங்கினான். ஆனால் இறைவனுடைய நல்லடியார்கள் மீது அவனுக்கு எந்த அதிகாரமும் இல்லை- (7:14-18, 15:34-43, 38:77-85)


*பிறகு இறைவன் ஆதமுக்கு சகல பெயர்களையும் கற்பித்து, தன் வானதூதர்களிடம் அவற்றின் பெயர்களை கூறுமாறு கூறினான். அவர்களோ, தமக்கு கற்றுத்தரப்பட்டதை தவிர வேறு எதுவும் தெரியாது என கூறினர்.

ஆதமிடம் அவற்றின் பெயர்களை வானவர்களுக்கு அறிவிக்குமாறு கூறினான். அவரும் அவ்வாறே செய்தார். இறைவன் வானதூதர்களிடம் "வானங்களிலும் பூமியிலும் மறைவானவற்றை நான் அறிவேன் என்றும் நீங்கள் வெளிப்படுத்துபவற்றையும் மறைப்பவற்றையும் நான் அறிவேன் என்றும் உங்களுக்கு கூறவில்லையா?" என கேட்டான் -2:31-33


இதன்மூலம் வானவர்களுக்கு அறிவிக்கப்படாத , அவர்கள் அறியாத விடயங்கள் மனிதனை பற்றி உள்ளன என இறைவன் வானவர்களுக்கு உணர்த்தினான்.


*பிறகு ஆதமை சுவர்க்கத்தில் அவருடைய மனைவியோடு வசிக்க செய்தான். இப்லீஸை காட்டி , "இவன் உன் எதிரி" என்றும் "இவன் உங்கள் இருவரையும் சுவர்க்கத்தில் இருந்து வெளியேற்றிவிட வேண்டாம்" என்றும் அறிவித்தான்- 20:117 


*சுவர்க்கத்தில் அவர்களுக்கு ஒரே ஒரு மரத்தை மட்டும் இறைவன் தடை செய்தான். (7:19, 2:35)


*இறைவனால் ஆதமுக்கு எதிரி என யாரை இறைவன் அறிவித்தானோ, அவன் அவ்விருவருக்கும் நிலையான வாழ்வை பெற உதவும் மரமே இது என கூறினான். நீஙகள் இருவரும் இதை சாப்பிட்டால்,வானதூதர்களாக ஆகிவிடுவீர்கள் அல்லது நிரந்தரமாக இருந்துவிடுவீர்கள் என்பதற்கு தான் இறைவன் இதை தடுத்தான் என பொய்கூறி அவர்களை சாப்பிட வைத்தான்- 7:20-21, 20:120)


*அதனால், அவ்விருவரும் சுவர்க்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்- 2:36, 7:24-25


*ஆதம் தன் இறைவனிடமிருந்து சில (பாவமன்னிப்பிற்காக) வார்த்தைகளை பெற்று கொண்டார். மன்னிப்பு கேட்டார்- 2:37, 7:23


*இறைவன் அவரை மன்னித்து , நேர்வழிகாட்டினான்- 2:37, 20:122


இதன் மூலம் ஆதமுக்கு இப்லீஸாகிய சைத்தான் எப்படிப்பட்ட எதிரி என்பதை உணர்த்தினான். பாவம் செய்தால் திருந்தி மன்னிப்புக் கேட்டால் இறைவன் மன்னிக்கிறான் என்பதையும் உணர்த்தினான்.


-இறைவன் மன்னித்தால், மீண்டும் ஏன் சுவர்க்கத்தில் விடப்படவில்லை?


இறைவன் அவர்களை பூமியில் தலைமுறையாக ஆக்குவதையே தீர்மானித்தான்- 2:30

சைத்தானுக்கு கட்டுப்பட்டு இறைவனுக்கு மாறு செய்தால் சுவர்க்கத்தை இழக்க நேரிடும் என்பதை அனுபவ ரீதியாக உணர்த்தினான்.

மறுமையில் நல்லவர்களுக்கு சுவர்க்கமும், கெட்டவர்களுக்கு நரகமும் கொடுக்கப்படும். 


*ஆதம் மன்னிக்கப்பட்டிருந்தால் மறுமையில் ஏன் பயப்பட வேண்டும்?

மன்னித்ததாக இறைவன் தெளிவாக சொல்லிவிட்டான்-2:37,20:122

மறுமையின் கொடூரத்தினால் தான் அவர் தன் மன்னிக்கப்பட்ட பாவத்தை நினைத்தும் அஞ்சுவார்.அவர் மட்டுமல்ல ஈசா நபியும் கூட அஞ்சுவார்- புகாரி 4712


கடைசியில் இறைவன் அவரை அழைத்து அவருடைய சந்ததிகளில் நரகவாசிகளை வேறுபடுத்த உத்தரவிடுவான்-புகாரி 4741,6529


 ஆகவே பயப்படுவார் என்பதால் மன்னிக்கப்படவில்லை என்றாகாது. இறைவனோடு முதன் முதலாக போய் பேச எல்லோருமே பயப்படத்தான் செய்வார்கள்.


-மூஸாவுக்கும் ஆதமுக்குமான விவாதம்:


சுவர்க்கத்திலிருந்து ஆதமுடைய பிள்ளைகள் வெளியேற்றப்பட ஆதம் தான் காரணம் என்பதுபோல மூஸா நபி கூறினார்.


அதற்கு ஆதம் , நான் படைக்கப்பட முன்பே என்மீது விதிக்கப்பட்ட காரியத்திற்கு என்னை பழிக்கிறீரா என கேட்டார்! (புகாரி 6614)


அதாவது ஆதம் நபி தான் செய்த பாவத்திற்கு பொறுப்பாக இருந்தாலும், அவர் சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட காரணமாக அவர் கிடையாது. அது இறைவன் ஏற்கனவே தீர்மானித்தது. குர்ஆன் 2:30 இல் கூறப்பட்டது போல. 


பைபிள் 


*தேவன் ஆறாம் நாளில் மனிதனை மிருகங்களை ஆளுவதற்காக படைப்போம் என்று கூறி ஆறாம் நாளில் மனிதனை தன் சாயலில் படைத்து மிருகங்களை ஆளுவதற்காக ஆசிர்வதித்தார்- ஆதியாகமம் 1:26-28


*பிறகு தான் படைத்த மனிதனை ஏதேன் தோட்டத்தில் வைத்து, வேலை செய்ய வைத்தார்- ஆதியாகமம் 2:8,15


*அங்கே இரண்டு மேஜிக் மரங்களான ஜீவமரம், நன்மைதீமை அறியத்தக்க மரம் ஆகியவற்றை முளைப்பித்து, இரண்டாவது மரத்திலிருந்து சாப்பிடாதே. சாப்பிட்டால் அதே நாளில் செத்துப்போவாய் என்று எச்சரித்தார் - ஆதியாகமம் 2:9,17


ஆனால் முதலாவது மரத்திலிருந்து சாப்பிட்டால், மரணமற்ற வாழ்வு கிடைக்குமாம்- ஆதியாகமம் 3:22

அதேநேரம் இரண்டாம் மரத்திலிருந்து சாப்பிட்டால் நன்மைதீமை அறியலாம்- அவ்வாறே ஆதாம் சாப்பிட்ட பின் அறிந்தார்-ஆதியாகமம் 3:22

இதிலிருந்து ஆதாம் மரணிப்பவராக தான் தேவன் படைத்திருக்கிறார் என்றும் அவர் மரணமற்ற வாழ்வை அடைய வேண்டுமானால் ஜீவமரத்திலிருந்து சாப்பிட வேண்டும் -ஆதியாகமம் 3:22 மூலம் தெளிவாகிறது..


*மிருகங்கள் பறவைகளை மண்ணால் படைத்து அவற்றுக்கு ஆதாமை பெயரிட வைத்தார்-ஆதியாகமம் 2:19-20


*பின்பு மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல என நினைத்த தேவன் , அவனை தூங்க வைத்து அவனுடைய விலா எலும்பிலிருந்து ஒன்றை எடுத்து அந்த இடத்தை சதையால் அடைத்து பெண்ணொன்றை படைத்து அவனிடம் கொடுத்தார்- ஆதியாகமம் 2:18,22


*ஆதம் அவளுக்கு இஷ்ஷா (பெண்) என்று பெயரிட்டார்- ஆதியாகமம் 2:23


*அவர்கள் நிர்வாணிகளாக அம்மணமாக இருந்தும் வெட்கப்படாதவர்களாக இருந்தனர்- ஆதியாகமம் 2:25


*காட்டு மிருகங்களை விட தந்திரமான மிருகமாக பாம்பு எனும் சர்ப்பம் இருந்தது. அது எபிரேய பாசை தெரிந்த பேசும் பாம்பு. அது பெண்ணிடம் போய், தேவன் பழங்கள் சாப்பிட கூடாது என்று சொன்னாரா என கேட்டது- ஆதியாகமம் 3:1


*பெண்ணோ, இல்லை. ஒரே ஒரு மரத்தின் கனியை தான் சாப்பிட கூடாது என்று தேவன் சொன்னார். அதை சாப்பிட்டால் அதே நாளில் செத்துப்போவீர்கள் என்றும் சொன்னதாக பாம்பிடம் சொன்னாள்- ஆதியாகமம் 3:2-3


*அதற்கு பாம்பு, அப்படி சாகமாட்டீர்கள்.

அதை சாப்பிட்டால் உங்கள் கண்கள் திறக்கப்படும். நன்மை தீமை அறிந்து தேவர்களை (எலோஹீமைப்போல)போல ஆவீர்கள் என்றது. ஆதியாகமம் 3:4-5

(எலோஹீம் என்பது தேவதூதர்களையும குறிக்கும் - சங்கீதம் 8:5)


*அதை சாப்பிட்டவுடன், பாம்பு சொன்னது போல கண்கள் திறக்கப்பட்டன- ஆதி 3:7

*நன்மை தீமை அறிந்து நம்மில் ஒருவரை போல ஆகிவிட்டான் என்று தேவனே ஒப்புக்கொள்கிறார்- ஆதியாகமம் 3:22

அப்படியென்றால், பாம்பு பொய் சொல்லவில்லை என்று இது காட்டுகிறது.

கேள்வி:

அவர்கள் இருவருக்கும் பாம்புக்கும் என்ன பிரச்சினை? 

அது ஏன் தேவனது கட்டளையை மீறவைக்க உண்மையை பேச வேண்டும்?


*இவர்கள் தாம் அம்மணமாக உள்ளோம் என அறிந்து, அத்தி இலைகளை தைத்து தம் உடலை மறைத்து, தேவனது சத்தம் கேட்டதும் ஒளிந்து கொண்டனர். தேவன் இவர்களிடம் எங்கே இருக்கிறாய் என்பதை கேட்டு அவர் கொடுத்த பதிலையும் வைத்து பழத்தை சாப்பிட்டதை அறிந்து கொண்டார்- ஆதியாகமம் 3:7-10


*உடனே ஆதாம் தன்னை காப்பாற்றிக்கொள்ள, நீர் கொடுத்த பெண் தான் பழத்தை என்னிடம் கொடுத்தார் என தன் மனைவியை தேவனிடம் மாட்டிவிட்டார் . மனைவியோ பாம்பு தான் என்னை வஞ்சித்தது என பாம்பை மாட்டிக்கொடுத்தாள்- ஆதியாகமம் 3:12-13


*இதனால் பாம்பின் மீது கோபப்பட்ட தேவன் பாம்பை சபித்து , வயிற்றால் ஊர்ந்து ,மண்ணை திண்பதை சாபமாக கொடுத்தார்- ஆதி 3:14

மேலும் பெண்ணுக்கும் பாம்புக்கும், பெண்ணின் வித்துக்கும் (மனிதர்களுக்கும்) பாம்பின் வித்துக்கும் பகை உண்டாக்குவேன் என்றும் பெண்ணின் வித்து பாம்பின் தலையை நசுக்குவார் என்றும் பெண்ணின் வித்தின் காலை பாம்பு நசுக்கும் என்றும் சாபமாக கொடுத்தார்- ஆதியாகமம் 3:15

(இதை வெட்கமே இல்லாமல் இயேசுவை குறிப்பதாக கிறிஸ்தவர்கள் கூறுவர். வித்து என்பது ஒருமையிலேயே பயன்படுத்தப்படும் என்பதை கூட அறியாமல். மேலும் பெண் பெற்றெடுத்ததை அவளுடைய வித்து என அதே பைபிளேயே இருக்கிறது. உதாரணமாக இஸ்மவேலை குறித்து "உன் வித்து/சந்ததி" என்கிறார்-ஆதி16:10

ஈசாக்கின் சந்ததியை குறித்து ரெபேக்காவை நோக்கி "உன் வித்து" என ஒருமையில் தான் சொல்கிறார்கள். மூலமொழியில் ஒருமையில் தான் உள்ளது- ஆதி 24:60)


பாம்புக்கும் மனிதனுக்கும் பகைக்கு இதுதான் காரணமாம் .


ஆரம்பத்தில் பாம்பு மனிதனை நாசமாக்க ஏன் நினைக்கவேண்டும்? இதற்கு பதில் பைபிளில் இல்லை


*பெண் செய்ததற்காக அவர் கர்ப்பவதியாக இருக்கும் போது வேதனையை பெருகப்பண்ணுவேன் என்கிறார். கணவன் அவளை ஆண்டுகொள்வான் என்பதை சாபமாக கொடுக்கிறார்- ஆதி 3:16

மலட்டு பெண்களுக்கு இப்பிரச்சினை இல்லை. சிறிய ஓட்டை வழியாக பெரிய பொருள் வரும்போது வலி ஏற்படுவது சகஜம் தானே.

கோழி முட்டை போடும்போது கூட அதுவும் வலியில் கத்த தான் செய்கிறது. இதனால் பெண்கோழிக்கும் இந்த சாபமா? இது மடமை நம்பிக்கை நிறைந்த யூத போதகர் விளக்கமாக எழுதியது பிறகு வேதத்தில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்!

*ஆதாம் செய்ததற்காக பூமியை சபித்து , முட்களை முளைப்பித்து பயிர்களை வியர்வை சிந்தி சாப்பிடுவதை சாபமாக கொடுத்தார்-ஆதியாகமம் 3:17-19

இதன்மூலம் விவசாயிகள் மட்டும் இந்த சாபத்தை பெருகிறார்கள் போலும்.


*பின்பு தேவன் ஆதாமுக்கும் அவருடைய மனைவிக்கும் தோல் ஆடைகளை அணிவித்தார் -ஆதியாகமம் 3:21


*மனிதன் நம்மில் ஒருவரை போல் நன்மைதீமை அறிகிறவனாக மாறிவிட்டதால், அவன் ஜீவ மரத்திலிருந்து சாப்பிட்டு என்றென்றும் உயிரோடிருக்க கூடாது என்பதற்காக அவனை மண்ணை பண்படுத்த ஏதேனிலிருந்து அனுப்பி, அந்த மரத்துக்கு போகும் வழியை காவல் காக்க கெரூபீன்களை வைத்தார்- ஆதியாகமம் 3:22-24

*ஆதாம் பழத்தை சாப்பிட வேண்டும் என்பதற்காக தான் பாம்பு வைக்கப்பட்டிருக்கிறது என்பதை இது காட்டுகிறது.

மற்றபடி வேறு ஏதும் இதிலிருந்து தெரிவதில்லை 

தொடரும்

பாகம் 2




வெள்ளி, 16 டிசம்பர், 2022

பழைய ஏற்பாட்டு தேவகுமாரன் vs புதிய ஏற்பாட்டு தேவகுமாரன்

பழைய ஏற்பாட்டு தேவ மகனுக்கும் புதிய ஏற்பாட்டு தேவ மகனுக்கும் உள்ள வித்தியாசம் 

--------------------------------------


பொதுவாக கிறிஸ்தவ போதகர்கள், பைபிள் எங்களை தேவனது பிள்ளை என சொல்கிறது. ஆனால் அல்லாஹ்வோ அடிமை என்கிறார். ஆகவே அல்லாஹ் உண்மையான தேவனாக இருக்க முடியாது (என்னென்ன கம்பிகட்டுற காரணங்களை சொல்றாங்க!) என்கிறார்கள்.


ஆனால் பழைய ஏற்பாட்டில் தேவகுமாரன் என்பது தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட அடிமைகளையே குறிக்கிறது என்பதை உணராமலும் , புதிய ஏற்பாட்டில் தேவகுமாரன் எனும் வரும் கருத்தை அங்கே சொருகி திரிக்கிறார்கள்.


அதை இங்கே பிரித்து அலசுவோம்.


***உப பிரிவுகள்***


1.பழைய ஏற்பாடு கூறும் தேவ குமாரர்கள்.

2.பழைய ஏற்பாடு கூறும் தேவனது அடிமைகள்

3.தேவனது குமாரன் என பாவித்ததன் அர்த்தம்

4.புதிய ஏற்பாட்டு தேவகுமாரர்கள்

5.தங்களை தேவனது பிள்ளை என வாதிடுவோருக்கு அல்லாஹ் கொடுக்கும் பதில்


இனி ஒவ்வொன்றாக பார்ப்போம் 


******************************************1.பழைய ஏற்பாடு கூறும் தேவ குமாரர்கள்

******************************************



பழைய ஏற்பாட்டில் தேவனது இயல்புகளென அறியப்படுபவைகளில் சிறிய அளவேணும் சில நபர்களுக்கு இருக்குமாயின் அவர்களை தேவனது பையன் என சொல்லப்பட்டிருக்கும். அதேபோல தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும், தேவனை அறிந்தவர்களையும் தேவ குமாரர்கள் என அழைக்கப்பட்டிருக்கிறது.



உதாரணமாக,


1.வல்லமை உடையவர்கள்


வல்லமையுடைய காமுகர்களையும் தேவனது குமாரர்கள் என சொல்லப்பட்டிருக்கிறது.



"“"தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்."”

  — ஆதியாகமம் 6:2 & 6:4



இங்கே வல்லமையிருந்த ஒரே காரணத்திற்காக அவர்கள் தேவகுமாரர்கள் என சொல்லப்பட்டிருக்கிறார்கள். மற்றபடி இவர்கள் யோக்கியர்கள் அல்ல.. 





2.தேவனை அறிந்தவர்கள் (தேவதூதர்கள், சாத்தான்)



“"ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான்."”

  — யோபு 1:6 & 2:1



3.தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்.



அ.இஸ்ரேல்-

இஸ்ரேல் என்னுடைய குமாரன் (யாத்திராகமம் 4:22, எரேமியா 31:9, ஓசியா 11:1)


“"கர்த்தர் அதைக்கண்டு, தமது குமாரரும் தமது குமாரத்திகளும் தம்மைக் கோபப்படுத்தினதினிமித்தம் மனமடிவாகி, அவர்களைப் புறக்கணித்து:"”

  — உபாகமம் 32:19 (TBSI)



ஆ. சொலமோன்


“"நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனுஷருடைய மிலாற்றினாலும் மனுபுத்திரருடைய அடிகளினாலும் தண்டிப்பேன்."”

  — 2 சாமுவேல் 7:14 



இ.தாவீது


20.“என் தாசனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம் பண்ணினேன்.”

26 "அவன் என்னை நோக்கி: நீர் என் பிதா, என் தேவன், என் இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான்."

27 "நான் அவனை எனக்கு முதற்பேறானவனும், பூமியின் ராஜாக்களைப்பார்க்கிலும் மகா உயர்ந்தவனுமாக்குவேன்." (சங்கீதம் 89:20,26-27)


“"தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி, ;நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;"”

  — சங்கீதம் 2:7 



இப்படி தேவனால் தெரிவு செய்யப்பட்டவர்களை தேவனது குமாரன் என அழைக்கப்பட்டிருக்கின்றனர்.





4.தேவன் நல்லவர் என்பதால் நல்லவர்களை அவரது பிள்ளை என அழைக்கப்பட்டிருக்கிறார்கள். கெட்டவர்கள் அவரது பிள்ளைகள் அல்ல என சொல்லப்பட்டிருக்கிறது-



“"அவர்களோ தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல; இதுவே அவர்கள் காரியம்; அவர்கள் மாறுபாடும் தாறுமாறுமுள்ள சந்ததியார்."”

  — உபாகமம் 32:5



ஆகவே இப்படிப்பட்ட நபர்களை தேவனது பையன் என சொல்லப்பட்டிருக்கின்றன.


******************************************

2.பழைய ஏற்பாடு கூறும் தேவனது அடிமைகள்

******************************************



தேவன் யாரையெல்லாம் தன் பிள்ளைகள் , குமாரன் உன்னை ஜெனிப்பித்தேன் என்று சொன்னாரோ அவர்களை தன் அடியார்கள் என்றும் சொல்லியிருக்கிறார்.



அத்தோடு தேவனது அடியார்கள் என்றே அடிக்கடி பாவிக்கப்பட்டிருக்கின்றன.



1.ஏசாயா தீர்க்கதரிசியை என் ஊழியக்காரன் (ஏபேத்) என்கிறார் -ஏசாயா 20:3


2.என் தாசனாகிய (ஏபேத்) இஸ்ரேலே! என அழைக்கிறார்- (ஏசாயா 41:8,9,; 44:1-2,21; 48:20; 49:3)



3.மேசியா

 மேசியாவை குறித்து சொல்லப்பட்டதாக சுவிசேசங்கள் கூறும் வசனம்:


"இதோ , நான் ஆதரிக்கிற என் தாசன்"- (ஏசாயா 42:1)


இங்கே இவர்கள் நம்பிக்கைப் படியே மெசிய்வையும் தன் அடியார் என்றே சொன்னதாக எழுதப்பட்டுள்ளது.



4.தாவீதை தேவனுடைய தாசன் (ஏபேத்) என கூறப்பட்டுள்ளது.


தம்முடைய தாசனாகிய தாவீதை தெரிந்துகொண்டு, ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார்- சங்கீதம் 78:70, மேலும் 89:3,20




5.இஸ்ரவேல் மக்களை தம் ஊழியக்காரர்கள் என்கிறார் (சங்கீதம் 105:25)


6.மோசேயை தாசன் என்கிறார்


தம்முடைய தாசனாகிய மோசேயையும், தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார்- (சங்கீதம் 105:26)




இப்படி தேவனது அடிமைகளாக தேவன் தான் நேசித்தவர்களை சொல்கிறார்.



இதே அர்த்தத்திலேயே குமாரன் என்பதும் பழைய ஏற்பாட்டில் பாவிக்கப்பட்டுள்ளது.


******************************************

3.தேவனது குமாரன் என பாவித்ததன் அர்த்தம்

******************************************



 அக்கால மரபுப்படி, பிள்ளை என்பவன் தகப்பனின் சொத்து என்பதாலும் அடிமை என்பவனும் எஜமானது சொத்து என்பதாலும் நல்லவர்கள் தேவனது சொத்துக்கள் எனும் கருத்துப்படவே பிள்ளை என்றும் அடிமை என்றும் அழைக்கப்பட்டுள்ளனர்.


இதனால் தான் தேவனை விட்டு விலகும்போது, அவர்களை விற்பனை செய்து போட்டார் என கூறப்பட்டிருக்கிறது


“"அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டவராகி, அவர்கள் அப்புறம் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக்கூடாதபடி கொள்ளையிடுகிற கொள்ளைக்காரர் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அவர்களைச் சுற்றிலும் இருக்கிற அவர்கள் பகைஞரின் கையிலே விற்றுப்போட்டார்."”

  — நியாயாதிபதிகள்          2:14 (TBSI)


“"கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபமூண்டவராகி, அவர்களை மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமின் கையிலே விற்றுப்போட்டார்; இப்படியே இஸ்ரவேல் புத்திரர் கூசான்ரிஷதாயீமை எட்டு வருஷம் சேவித்தார்கள்."”

  — நியாயாதிபதிகள்          3:8 (TBSI)


“ஆகையால் கர்த்தர் அவர்களை ஆத்சோரில் ஆளுகிற யாபீன் என்னும் கானானியருடைய ராஜாவின் கையிலே விற்றுப்போட்டார்; அவனுடைய சேனாபதிக்குச் சிசெரா என்று பேர்; அவன் புறஜாதிகளுடைய பட்டணமாகிய அரோசேத்திலே குடியிருந்தான்.”

  — நியாயாதிபதிகள்          4:2 (TBSI)

“"அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபமூண்டு, அவர்களைப் பெலிஸ்தர் கையிலும், அம்மோன் புத்திரர் கையிலும் விற்றுப்போட்டார்."”

  — நியாயாதிபதிகள்          10:7 (TBSI)


இதன்மூலம்  சொத்து எனும் கருத்துப்படவே இவர்கள் குமாரர்கள் என்று அழைக்கப்படுகிறது . அதனால் தான் தேவன் தன் சொத்தை விற்றுப் போட்டதாக சித்தரிக்கிறது.


நம் காலத்தில்  தன் பிள்ளையை விற்றுப்போடுவாங்களா?? பிள்ளைகள் தகப்பனின் சொத்தை பெறுபவர்கள். அவர்களை தகப்பன் விற்க இயலாது.  


பொதுவாக எல்லோருமே தேவனது சொத்துக்களாக இருந்தாலும், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் எனும் அர்த்தத்தில் நல்லவர்களுக்கும் சிலரது சந்ததிகளுக்கும் இவ்வார்த்தை பிரயோகம் பாவிக்கப்பட்டுள்ளது.





இதனால் தான் யாக்கோபு என் பங்கு என்றும் என் சுதந்தரம் (வாரிசுச்சொத்து) சொல்லப்பட்டுள்ளன.



“என் சுதந்தரம் காட்டிலுள்ள சிங்கத்தைப்போல் எனக்காயிற்று; அது எனக்கு விரோதமாய் கெர்ச்சிக்கிறது; ஆதலால் அதை வெறுக்கிறேன்.”

  — எரேமியா 12:8 (TBSI)


“"அவர்களைக்குறித்துச் சேனைகளின் கர்த்தர்: எகிப்தியராகிய என் ஜனமும், அசீரியராகிய என் கரத்தின் கிரியையும், இஸ்ரவேலராகிய என் சுதந்தரமும் ஆசீர்வதிக்கப்பட்டது என்று சொல்லி, அவர்களை ஆசீர்வதிப்பார். "”

  — ஏசாயா 19:25 



இதே போன்று தேவனையும் சுதந்தரம் என்றும், பங்கு என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் தேவன் மட்டுமே எனக்கு இருக்கிறார் என்ற தேவன் மீது வைக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடு ஆகும்.



இவ்வாறே பழைய ஏற்பாட்டில் தேவகுமாரன் என்பது பாவிக்கப்பட்டுள்ளது.



******************************************

4.புதிய ஏற்பாட்டு தேவகுமாரர்கள்.

******************************************





புதிய ஏற்பாட்டில் முதல் மூன்று சுவிசேசங்களில் இயேசு சொன்னதாக வரும் தேவ புத்திரர் , குமாரர் என்பன பழைய ஏற்பாட்டோடு பொருந்திப்போவதாக உள்ளன.


உதாரணமாக, 

“சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.”

  — மத்தேயு 5:9



ஆனால் இதை கடந்து நாம் பார்த்தோமானால், பவுல் உட்பட மற்றவர்கள் இதற்கு கொடுக்கும் அர்த்தம் வேறுபட்டதாகவே இருக்கின்றது.



அவர்கள் தேவனது சுதந்தரவாளி எனும் அர்த்தத்திலேயே தேவகுமாரன் என்பதை புரிந்து வைத்துள்ளனர். அதாவது தேவனது சொத்து என்பதல்ல.. தேவனது சொத்தையே வாரிசாக பெறும் பிள்ளைகள் என்பதாகும்.




அதாவது தகப்பனது சொத்துக்கு எப்படி குமாரன் தகப்பனை தொடர்ந்து வாரிசாவானோ, அதே போன்றே தேவனை தொடர்ந்து தேவனது சொத்துக்களை இவர்கள் பெற்று தேவனுக்கு வாரிசாக ஆவார்கள் என்பதே இவர்களின் நம்பிக்கை ஆகும்.





அதாவது இயேசு என்பவர் தேவனது மடியில் இருந்த பையன் , அதாவது சொந்த பையன் என்பதே புதிய ஏற்பாடு கூறுவதாகும்.


அதையே யோவான் 1:18,3:16 ஆகியன கூறுகின்றன.



கிறிஸ்தவர்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டதால், தேவன் அவர்களை பிள்ளைகளாக தத்தெடுத்துக் கொண்டார் . இதன்மூலம் இயேசு மூலமாக இவர்களும் தேவனுக்கு சுதந்தரவாளிகள் என்கின்றனர்.


இதை சற்று பிரித்து பார்ப்போம்.




1.இயேசுவை குமாரன் என்பதால், அவரை சகலதுக்கும் சுதந்தரவாளியாக வைத்தார் என நம்புகின்றனர்.


“"இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்."”

  — எபிரேயர் 1:2 (TBSI).




2.இயேசுவை ஏற்றதால் இவர்களும் தேவனுக்கு குமாரர்களாக தத்தெடுக்கப்பட்டனராம்.



“"தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி (தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகளாகும்படி) முன்குறித்திருக்கிறார்."”

  — எபேசியர் 1:6 (TBSI)



“"அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் (தத்துப் பிள்ளையின்) ஆவியைப் பெற்றீர்கள்."”

  — ரோமர் 8:15 (TBSI)




3.இப்படி தத்தெடுக்கப்பட்டதால், இவர்கள் தேவனுக்கே சுதந்தரர்களாக ஆவார்களாம். (அதாவது தேவனது அத்தனை சொத்தையும் பெற்றுக்கொள்வார்களாம்)



⁶ "மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்."

⁷ "ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்."

கலாத்தியர் 4:6-7





எப்படி கிரேக்க ரோம மதங்களில் தேவனது பிள்ளை எப்படி தேவனுக்கு வாரிசாக இருப்பானோ, அதே போன்றே இவர்களும் இயேசு எனும் தேவனது சொந்த பையனை ஏற்றதால், தேவனது தத்துப் பிள்ளைகளாக மாறி, இயேசுவோடு தேவனுக்கு வாரிசாக ஆவோம் என்று கருதுகிறார்கள்.




யூதர்களது கால மொழிமரபை அறியாத பவுலும் (இவரை பரிசேயன் என போலியாக புழுகப்பட்டிருக்கிறது), ஏனைய எழுத்தாளர்களும் அவர்கள் கால மொழிமரபின் படி , நேரடி அர்த்தம் கொடுத்துவிட்டனர்.



இப்போதுள்ள பாமரர்களோ , அவர்களது முன்னோர் யூதமரபறியாமல் எழுதிய நூல்களை வேதமாக நம்பி, அல்லாஹ் எங்களை பையன் என சொல்லவில்லை என்கிறார்கள்.


******************************************

5.தங்களை தேவனது பிள்ளை என வாதிடுவோருக்கு அல்லாஹ் கொடுக்கும் பதில்

******************************************




பழைய ஏற்பாட்டில் தேவனது சொத்து எனும் அர்த்தத்தில் பாவிக்கப்பட்டதை, தேவனது சொத்தை பெற போவதாக நம்பி வாதிடுவோருக்கு இறைவன் கொடுத்த பதில்:



"யூதரும் கிறிஸ்தவரும் நாம் அல்லாஹ்வின் பிள்ளைகளும் அவனது நேசத்திற்குரியவர்களுமாவோம் என்கிறார்கள். அப்படியாயின், "உங்கள் பாவங்களிற்காக ஏன் உங்களை தண்டிக்கிறான்" என்று கேட்பீராக! மாறாக நீங்கள் அவன் படைத்த மனிதர்களில் உள்ளவர்கள் தான். அவன் நாடியவர்களை மன்னிக்கிறான்; அவன் நாடியவர்களை தண்டிக்கிறான்........" -5:18



(அல்லாஹ் எங்கள் கடவுளல்ல என கூறிவிடுவார்கள். அல்லாஹ் என்றாலே மெய்யான கடவுளை தான் அரபியில் குறிக்கும். இதனால் தான் அரேபிய மொழியாக்கத்தில் மெய் தேவனை குறிக்க பாவிக்கும் இடத்தில் மட்டும் அல்லாஹ் என பாவிக்கப்பட்டிருப்பதை அவர்களே காணலாம்!)



இவ்வாதத்தை அக்காலத்தில் நேர்வழியில் இருந்தவர்களோ, அல்லது இவர்களது மனசாட்சியோ அக்காலத்திலேயே கேட்டுள்ளனர்.


இதனால் , அதற்கு பதில் எழுதுவதாக எழுதியுள்ளனர். சைத்தான் அப்போதும் அவர்களை விடவில்லை!


“எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.”

  — எபிரேயர்         12:8 (TBSI)


ஆனால் தகப்பனானவன் தன் மகனை விற்று தண்டிப்பானா? சொத்தை தான் விற்பான்!


எந்த தகப்பனாவது தன் குழந்தைகளை மோதியடித்து கொல்லவைத்து மகளை எதிரியை தூண்டி கற்பழிக்க வைப்பானா? (ஏசாயா 13:16)


எந்த தகப்பனும் தன் குழந்தையை சாகடிக்க மாட்டான். 


தன் பிள்ளையை கண்டிப்பான் தகப்பன். ஆனால் கேவலமாக தண்டிக்க மாட்டான்.


ஆகவே தேவனது சொத்து எனும் அர்த்தம்பட தேவனால் தெரிந்துகொள்ளும் பட்டவர்கள் என்பதையே பழைய ஏற்பாடு குமாரன் என்பதை கருதுகிறது.


ஆனால் புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்களோ, அதை ரோம் கிரேக்க மதங்களது மரபில் அதை விசுவாசிக்கிறார்கள்.


அது மிகவும் தவறானதாகும்!




வியாழன், 15 டிசம்பர், 2022

சுவிசேஷங்கள் சித்தரிக்கும் தேவனும் இயேசுவும்

 சுவிசேஷங்கள் சித்தரிக்கும் இயேசுவும் தேவனும்

-----------------------------------


1.பரிசுத்தமானதை நாய்களுக்கும் உங்கள் முத்துக்களை பன்றிகளுக்கும் போடாதீர்கள் என்றார். (மத்தேயு 7:6)


அதாவது கெட்டவர்களுக்கு அட்வைஸ் பண்ணாதே என்கிறார் இயேசு. 


இதுவா பாவிகளை நேசிப்பது? தன்னை ஏற்ற பாவிகளையே நேசித்திருக்கிறார்.





2.பிதாவின் சித்தப்படி செய்பவர்களே பரலோகம் போவார்கள்-(மத்தேயு 7:22)


தேவன் எல்லோரையும் நேசிக்கிறார் என்று பொய் சொல்ல கூடாது.




3.தன் பெயரால் அற்புதம் செய்தவர்களை கூட இயேசு, அக்கிரமக்காரர்களே என்னைவிட்டு அகன்று போங்கள் என கூறுவாராம்- (மத்தேயு 7:22-23)


எதிரியை நேசிப்பவரென்றால், தன் பெயரால் அற்புதம் செய்தோருக்கு அப்படி செய்வாரா?




4.இயேசுவை ஏற்காதவர்கள் நரகம் போவார்கள். அங்கே அழுகையும் பற்கடிப்புமே உண்டாம். (மத்தேயு 8:12)


அவர் பாவிகளை நேசிக்கிறார் என்றால் ஏன் இப்படி நடக்கணும்? 


தன்னை ஏற்ற விபச்சாரிகள், வட்டிக்காரர்கள் போன்ற பாவிகளையே நேசித்தார். காரணம் தன்னை ஏற்போரை எல்லோரும் நேசிப்பது வழமை தானே





5.பிசாசின் சொல்கேட்டு பன்றிகளையும் கொன்றுள்ளார் இயேசு- மத்தேயு 8:31-32, மாற்கு 5:9-13,லூக்கா 8:32-33



அன்பேயுருவானவர் என சொல்பவர்களே சிந்தியுங்கள்




6.இயேசுவின் போதனைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவர்களுக்கு சோதோம் கொமோரா நாட்டிற்கு நிகழ்ந்ததை விட கொடூரமானவை நியாயத்தீர்ப்பு நாளில் நடக்குமாம். (மத்தேயு 10:14-15),மாற்கு 6:11, லூக்கா 10:11-12


எதிரியை இப்படி நேசிப்பவரா இவர்




7.பிதாவானவர் ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்தில் அழிக்க வல்லவராம். அதனால் அவருக்கே பயப்பட வேண்டுமாம்- மத்தேயு 10:28, லூக்கா 12:5


அப்போ தேவன் அன்பாயிருக்கிறார் என்பதும் அன்பில் பயமில்லை என்பதும் என்னவாம்?






8.இயேசுவை மறுதலித்தால், இயேசு பிதாவிடம் தன்னை மறுதலிப்போரை மறுதலிப்பாராம்- மத்தேயு 10:33,லூக்கா 12:8-9



தீமை செய்வோருக்கும் நன்மை செய்ய சொன்னாரே.. ஆனால் இவர் பழிக்கு பழி வாங்குகிறார்.



பாவிகளை நேசித்தால், ஏன் தன்னை மறுப்போரை தேவனிடம் மறுக்க வேண்டும்??




9.இயேசு சமாதான பிரபு என்பார்கள். ஆனால் அவரோ தான் சமாதானத்தை அனுப்ப வராமல், வெட்டுக்கத்தியை அனுப்ப வந்தேன் என்றும் குடும்பத்தை பிரிக்க வந்தேன் என்றும் கூறுகிறார்- மத்தேயு 10:34-36,லூக்கா 12:51



இவர் தான் பிறகு பட்டயத்தை எடுத்தவன் பட்டயத்தாலே சாவான் என்றார்.




10.தாய் தந்தை மகன் மகள் எல்லோரையும் விட தன்னையே அதிகம் நேசிக்க வேண்டும் என்கிறார் இயேசு- மத்தேயு 10:37



அதாவது தன்னை அதிகம் நேசிக்காதவர் தன்னை சார்ந்தவர் அல்ல என தெளிவாக அவர் சொன்ன பின்னாலும், அவர் எதிரியை நேசித்தார் என சொல்வது பொய்.





11.யோவானை எலியா என்கிறார் இயேசு -மத்தேயு 11:14,மத்தேயு 17:20-13


ஆனால் யோவானோ தான் எலியா அல்ல என மறுத்து விட்டார் -யோவான் 1:21


அப்போ அறியாமை நிறைந்தவராயிருக்கிறார்.




12.தன்னோடு இருக்காதவன் தன் எதிரி என்கிறார் இயேசு- மத்தேயு 12:30,லூக்கா 11:23




13.பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பேசினால் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்பு கிடையாதாம்! -மத்தேயு 12:32,,லூக்கா 12:10


தேவன் தன்னையே பலிகொடுத்தவர் என சொல்வது வேஸ்ட்




14.தன்னிடம் அடையாளம் கேட்டவர்களை பொல்லாத விபச்சார சந்ததியார் என சொல்கிறார்- மத்தேயு 12:38-39



அன்பேயுருவானவரின் பேச்சை பார்த்தீர்களா?


தன்னை ஏற்காதோரை இப்படி கேவலமாக பேசலாமா?




15.இயேசு எதிரியையும் நேசிப்பவர் என்பார்கள். ஆனால் அவரோ தன் தூதர்களை அனுப்பி பாவிகளை நெருப்பில் போட்டு கொழுத்துவாராம் - மத்தேயு 13:41-42,49-50



16.பரலோகராஜ்யத்திற்காக திருமணம் முடிக்காமல் இருப்பதை ஊக்குவிக்கிறார் இயேசு- மத்தேயு 19:10-12




17.பரிபூரணனாக இருப்பதற்கு அனைத்து சொத்துக்களையும் விற்று ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும் என்கிறார்- மத்தேயு 19:21,மாற்கு 10:21,லூக்கா 12:33


அப்படி செய்தால் அவன் ஏழையாகிவிடுவான்.. அவனுக்கு இன்னொருத்தனிடம் கையேந்தும் நிலை ஏற்படும்...

அறியாமை உபதேசம்.





18.பசியில் அத்திமர இலைகளை அத்திப்பழம் என நினைத்து போய், அதை சபித்தார்- (மத்தேயு 21:18-19)


குறிப்பாக அது அத்திப்பழ சீசனே கிடையாதாம். (மாற்கு 11:13)



இதற்காகவுமா சபிப்பார்கள்?




19.அத்திமரத்தை சபித்துவிட்டு, உங்களுக்கு விசுவாசம் இருந்தால், அத்திமரத்தை சபித்து உங்களாலும் அழிக்க முடியும் என்றும் மலையை பிடுங்கி கடலில் போடவும் முடியும் என அழிவை வழிகாட்டுகிறார். (மத்தேயு 21:20-21)


இதற்கு பதிலாக அத்திமரத்தை ஆசீர்வதித்து , அப்போதே கனி காய்க்க வைத்து அவர்களுக்கும் அவ்வாறு நல்லதை வழிகாட்டலாமே



20.பரிசேயரை சர்ப்பஙகள் என்றும் விரியன் பாம்பு குட்டிகள் என்றும் கடிந்துகொள்கிறார்- மத்தேயு 23:33



இப்படியா எதிரியை ஆசீர்வதிப்பது??





21.இயேசு சாக வேண்டும் என்பது தான் வேதவாக்கியங்கள் சொல்லுதாம் -(மத்தேயு 26:54)


ஆனால் வேதவாக்கியப்படி காட்டிக் கொடுப்பவர் பிறக்காமலிருந்தால் அவனுக்கு நலமாயிருக்கும் என்கிறார் (மத்தேயு 26:24,மாற்கு 14:21)





22.இயேசு உவமையால் பேசும் நோக்கமே, புறம்பே இருக்கிறவர்கள் திருந்தாமலும், பாவம் மன்னிக்கப்படாத லும், கண்டும் காணாதவர்களாகவும் கேட்டும் கேளாதவர்களாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக என்கிறார். (மாற்கு 4:10-12, மேலும் லூக்கா 8:10)


எவ்வளவு அன்பு..


இவர் இஷ்டப்படி செய்கிற அவன் எப்படி தவறு செய்பவனாவான்?





23.கற்பனைகளை சரியாக அறியாத இயேசு..


வஞ்சனை செய்யாதிருப்பாயாக என்பதை கற்பனைகளோடு போட்டு குழப்பிக்கொண்டுள்ளார்- மாற்கு 10:19




24.கொல்லப்பட்ட சகரியா யாருடைய பையன் என்பதையும் குழப்பிக்கொண்ட இயேசு. அவன் பரகியாவின் குமாரன் எனகிறார்-(மத்தேயு 23:35)


ஆனால் அவனோ யோய்தாவின் குமாரன் ஆவார்.(2 நாளாகமம் 24:20-21)



ஆனால் லூக்கா இதை புத்திசாலித்தனமாக தந்தையின் பெயரை நீக்கி தவறை அகற்றி எழுதியுள்ளார்- லூக்கா 11:50






25.அவனவன் தன்னையும் தன் தாய் தகப்பன் பிள்ளை மனைவி சகோதர சகோதரிகளை வெறுக்காவிட்டால் தன் சீடனாக முடியாது என்கிறார்- லூக்கா 14:26



அதாவது எதிரியை நேசிக்க சொல்வாராம்.. அதை செய்யமாட்டாராம்.. பிறகு குடும்பத்தையே வெறுக்க சொல்கிறார்.



26.சம்பந்தமின்றி பேசும் இயேசு.


இயேசு ஆலயத்தில் வியாபாரம் செய்தவர்களை துரத்தியபோது, நீர் இதை செய்கிறீரே இதற்கு என்ன அடையாளத்தை காட்டுகிறீர் என்றனர்.


அதற்கு இயேசு இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள். மூன்று நாளில் எழுப்புகிறேன் என்றாராம். அது அவரது உடலை பற்றி பேசியதாம்.(யோவான் 2:18-21 )


இவரது உடலை துண்டு துண்டாக உடைத்து போட்டு (வெட்டிப் போட்டு) பிறகு இவர் மூன்று நாளைக்குள் எழும்பினால் அற்புதம் எனலாம்..


 இவரை சிலுவைல அடிச்சு கொஞ்ச நேரத்திலேயே செத்துப்போவாராம். பிறகு மூன்று நாள் கழித்து எழும்புவாராம். அது அவர் இறந்தது போல் நடித்ததாகவும் இருக்கலாமே.. எத்தனையோ பேர் கோமாவிலிருந்து எழும்புகிறார்களே.



அதுமட்டுமின்றி தான் சொன்னதையே மறந்து, உடலான இவரது ஆலயத்தை இடிக்க பார்த்தபோதொல்லாம் யூதர்களை கடிந்து கொள்கிறார்.(யோவான் 8:40, 19:11)




27.பொய்யும் பேசுகிறார் இயேசு.


வானத்திற்கு மனுசகுமாரனை தவிர வேறுயாரும் ஏறிப்போனதில்லை என்கிறார்.(யோவான் 3:13)


பழைய ஏற்பாட்டை படித்திருந்தால், எலியா ஏறிச் சென்றதை படித்திருப்பார்.(2 இராஜாக்கள் 2:10-11)



இப்படிப்பட்ட சாதாரண வேத அறிவு கூட இல்லாதவரை எப்படி நம்புவது?




28.தேவன் எல்லோரையும் நேசிக்கிறார் என்பார்கள். அது பொய். இயேசுவை ஏற்றவர்களை மட்டுமே நேசிப்பார்



 இயேசுவை நம்பாவிட்டால், அவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பு உண்டாகிவிட்டதாம்- யோவான் 3:18




29.குமாரனை விசுவாசிக்காதவன் மேல் தேவன் கோபம் கொள்கிறார்- யோவான் 3:36



அதாவது தேவன் தன்னை நம்பாதோரையும் நேசிக்கிறார் இந்துக்களை நேசிக்கிறார் யூதர்களை நேசிக்கிறார் என கதை விடுவார்கள் இவர்கள்.


ஆனால் அவர்கள் மீது தேவன் அன்பு கொள்ளாமல் கோபமே கொள்கிறார்





30.இயேசுவை யார் விசுவாசிப்பார்கள்?


தேவன் யாரை இளுத்துக்கொள்கிறாரோ அவன் தான் இயேசுவிடம் வருவானாம்- யோவான் 6:44


தேவனது அருளை பெறாதவன் வரமாட்டானாம்-யோவான் 6:65


தேவன் இளுக்காததால், அருள் செய்யாததால் விசுவாசிக்காமல் போனால் அவர்மேல் தேவன் கோபமும் கொள்வார்-யோவான் 3:36





31.இயேசுவை விசுவாசிக்காவிட்டால் பாவம் மன்னிக்கப்படுவதில்லையாம்- யோவான் 8:24


தேவன் எல்லோரையும் மன்னிப்பார் என போலியாக இவர்கள் கதைவிடுவர்



32.தேவன் தான் மனிதர்களை விசுவாசிக்காமல் இருப்பதற்காக இருதயத்தை கடினப்படுத்துபவராம். (யோவான் 12:40)





வெள்ளி, 2 டிசம்பர், 2022

பழைய ஏற்பாடு தேவனை எவ்வாறு சித்தரிக்கிறது பாகம் 2 (லேவியர்-எண்-உபாகமம்)

 பழைய ஏற்பாடு தேவனை எவ்வாறு சித்தரிக்கிறது?

 பாகம் 2

லேவியர்-உபாகமம்


(பாகம் 1)


1.தான் படைத்ததையே அறியாதவர்.


குழிமுயலும், முயலும் வாயை அசைப்பதால், அது அசைபோடுவதாக நினைத்து , அவை அசைபோடும் மிருகம் என்கிறார்- லேவியராகமம் 11:5-6




2.பெண் பிள்ளையை இழிவாக பார்க்கிறார்


ஆண்பிள்ளையினால் வரும் தீட்டின் இருமடங்கு பெண் பிள்ளையால் வரும் என்கிறார்-லேவியராகமம் 12:2-5



3.அங்கவீணனை இழிவுபடுத்துகிறார் தேவன்.


அங்கவீணன் பரிசுத்தஸ்தலத்தினுள் போனால் பரிசுத்தக்குளைச்சல் ஏற்படுமாம்.(லேவியராகமம் 21:23)



4.நரபலியையும் ஆதரிக்கிறார் தேவன்.


மனிதனை காணிக்கையாக நேர்ந்து கொடுத்தால், அந்த மனிதனை மீட்க முடியாதாம். அவனை கொல்லவே வேண்டுமாம்- லேவியராகமம் 27:28-29


அந்நிய தேவர்களுக்கு தான் நரபலி கொடுப்பதை தேவன் தடுத்துள்ளாரோ? தனக்கென வரும்போது நரபலி காணிக்கையையும் ஏற்கிறார் போலும் 😅.


இவ்வாறே யெப்தா என்பவர் தன் மகளை தேவனுக்கு பலியாக கொடுத்தார்- நியாயதிபதிகள் 11:40



5.கர்த்தர் அடிக்கடி கோபப்படுகிறார்


ஜனங்கள் முறையிட்டதால் கோபப்படுகிறார்- எண்ணாகமம் 11:1


ஜனங்கள் கூடார வாசலில் இறைச்சி வேண்டும் என அழுததால் மீண்டும் கர்த்தர் கோபப்படுகிறார் - எண்ணாகமம் 11:10


பிறகு கர்த்தர் காடைகளை குவியலாக கொடுக்கிறார். அவர்கள் சேர்த்து, திண்ற போது மீண்டும் கோபப்படுகிறார். -எண்ணாகமம் 11:32-33




6.மோசே எவ்வளவு சுமை தாங்குவார் என அறியாமல்

மோசேயால் சுமக்க இயலாத சுமையை கர்த்தர் கொடுத்துள்ளாராம்.


கர்த்தர் முழு பாரத்தையும் மோசேக்கே கொடுத்துவிட்டார். மோசே அதை தன்னால் சுமக்க முடியாது .. வேண்டுமானால் என்னை கொன்றுபோட்டுவிடும் என்கிறார். பிறகு தேவன் 70 பேருக்கு அந்த ஆவியை பிரித்து கொடுக்கிறார்- (எண்ணாகமம் 11:14-17)



மோசேயால் இவ்வளவு தான் சுமக்க முடியும் என்றும் தெரியாதவரா இவர்?



அதுவும் மோசே சொல்லி இந்த முடிவை எடுக்கிறார்..



7.தேவனது பட்சபாதம்


ஆரோனும் மிரியாமும் சேர்ந்து மோசேக்கு விரோதமாக பேசினார்களாம். ஆனால் கர்த்தர் மிராயாமை மட்டுமே தண்டித்து அவளை குஷ்டரோகியாக்கினார்- எண்ணாகமம் 12:1,9-10)




8.மீண்டும் கர்த்தருக்கு அட்வைஸ் பண்ணிய மோசே.



மக்கள் யுத்தம் பண்ண மறுத்ததால், கர்த்தர் அவர்களை கொள்ளைநோயால் வாதிப்பதாக சொல்கிறார்


உடனே மோசே, அப்படி செய்தால் எகிப்தியர் இதை கேள்விபடுவான்.


புறஜாதியார், தேவனுக்கு தேசத்தை கொடுக்க முடியாததால் கொன்று போட்டார் என்பார்கள் என்று தேவனது அவசரத்தை தடுக்க காரணம் சொன்னார்- எண்ணாகமம் 14:13,15-16



9.தேவனை பரிசுத்தம் பண்ணாத, விசுவாசிக்காத மோசேயை தவறுதலாக தெரிவு செய்தாரா தேவன்?



மேரிபாவில் இஸ்ரேலியர் தண்ணீர் கேட்ட போது , தேவன் கோலை எடுத்துக்கொண்டு போய் மலையிடம் பேச சொல்கிறார். அப்போது தண்ணீர் வரும் என்றார். ஆனால் மோசே இந்த மலையிலிருந்து தண்ணீரை புறப்பட பண்ணுவோமா என கேட்டு , தன் தடியால் அடித்து தண்ணீர் வரவைத்தார். 


(தேவன் அடிக்க சொல்லாமல் அடித்ததால்), அவர்களிருவரும் தேவனை பரிசுத்தம் பண்ணும்படி விசுவாசிக்கவில்லையாம். அதனால் ஆரோனும் மோசேயும் வாக்களிக்கப்பட்ட தேசத்தினுள் போவதில்லை என தண்டிக்கிறார். (எண்ணாகமம் 20:1-7,8-12, 24)



தன் சொந்த தீர்க்கதரிசியையே சரியாக தெரிவு செய்ய இயலாதவரா தேவன்?




10.தன் கட்டளையை செய்ததற்காக கோபப்படும் கர்த்தர்



பிலேயாமை போக சொல்கிறார் கர்த்தர். அவன் போனதால் அவர் கோபப்படுகிறார்- எண்ணாகமம் 22:20-22


பிறகு தேவதூதனும் வந்து அவனை அவர்கள் கூட போகும்படி தான் சொன்னார்.(எண்ணாகமம் 22:34-35)


தேவனது சொல்படி அவன் போனான். அதற்காகவுமா கோபப்படுவது? கொஞ்சமாவது நீதி வேண்டாமா?




11.பொய்கார அநீதியான தேவனா? அல்லது அறியாமை தேவனா?



இஸ்ரேலியர் யுத்தம் செய்து தேசத்தினுள் நுழைய மறுத்த போது, தேவன் கோபம் கொண்டார்.


இம்மக்கள் நிமித்தமாக மோசே மீதும் கோபம் கொண்டு , அவன் அதில் பிரவேசிப்பதில்லை என்றாராம். (உபாகமம் 1:31-36 & 37)



சம்பந்தமே இல்லாமல் மோசேயின் மீது கோபப்பட்டதாக இது காட்டி, தேவன் அநீதியாளர் என சித்தரிக்கிறது.



ஆனால் எண்ணாகமம் 14:12 இல் தேவன் மோசே மீது கோபப்படாமல், அவரை பெரிய ஜாதியாக ஆக்குவதாகவும் ஏனையோரை கொல்லுவதாகவுமே சொல்கிறார்.


இப்போது தான் மோசே அட்வைஸ் பண்ணினார்- (குறிப்பு 8)



ஆனால் மோசே மீது கோபப்பட காரணம், தேவன் மலைக்கு அடிக்க சொல்லாமலே அடித்து தண்ணீர் வரவைத்தார் என்பது தான் (எண்ணாகமம் 20:1-7,8-12,24)



ஆக மோசே தேவன் மீது அவதூறு சொல்கிறார்.


 அதாவது ,மேரிபாவில் தேவனை பரிசுத்தம் பண்ணாததாலும் , விசுவாசிக்காததாலும் தான் அவர் அந்த தேசத்தினுள் நுழைவதில்லை என எண்ணாகமம் 20:12, உபாகமம் 32:50-52 சொல்கிறது.


ஆனால் மோசேயோ, இஸ்ரேலியர் தேசத்திற்குள் யுத்தம் செய்ய போகவில்லை என்பதால் தன் மீது தேவன் கோபப்பட்டார் என்கிறார்.



அதாவது தேவன் தன்னை பரிசுத்தம் பண்ணி விசுவாசிக்காதவரையும், தன்மீதே அவதூறு சொல்லுபவரையும் அறியாமல் தெரிவு செய்து விட்டாரோ?



இதில் இரண்டில் ஒன்று உண்மையாகும்.


மோசே சொன்னது உண்மையானால், தேவன் அநீதியாளரும், பொய்யரும் ஆவார்! (காரணம் அவர் வேறு காரணம் சொன்னார் -உபா 32:50-52, எண் 20:12)



தேவன் உண்மையாளர் என்றால், தேவன் மீது அவதூறு சொல்லும் பொய்யரை தெரிவு செய்ததாக ஆகிவிடும்.



12.ஆண், பெண், பிள்ளைகளை கொல்லுவதற்காக ராஜாவின் இதயத்தை கடினப் படுத்துபவர்.




சீகோன் ராஜாவின் இதயத்தை கடினப் படுத்தி , அதன்மூலம் ஆண், பெண் , பிள்ளைகளையும் கொலைபண்ண வைத்தார். (உபாகமம் 2:30-34)



அத்தோடு மிருகஜீவன்களோடு கொள்ளையும் அடித்துள்ளனர் -உபாகமம் 2:35




13.எதிர்காலமும் கடந்தகாலமும் அறியாத கர்த்தர்



ஏதோமின் ராஜா இஸ்ரேலியருக்கு பயப்படுவார்கள் என்றும் அவர்களது தேசத்தை எடுக்காமல் கிரயம் கொடுத்து உண்டு குடியுங்கள் என சொன்னதாகவும், அவ்வாறு செய்ததாக சீகோனிடம் மோசே சொல்கிறார் - (உபாகமம் 2:2-7,. 27-29)



ஆனால் உண்மையில் , கர்த்தர் சொன்னதுபோல் அவர்கள் நடக்கவில்லை.


மாறாக ஜனங்களை திரட்டி அவர்களோடு யுத்தம் செய்ய தயாராகிவிட்டான். கிரயம் கொடுப்பதாக சொன்னதற்கும் அவன் மறுத்துவிட்டான். உடனே இவர்கள் அவர்கள் வழியாக கடந்து போகவே இல்லை! (எண்ணாகமம் 20:14-21)



ஆக நடக்காததை நடப்பதாக தேவன் சொல்ல, அதையே மோசேயும் உபாகமத்தில் சொல்லியுள்ளார்.



14.தேவன் எதிரியையும் நேசிப்பவர் என்பர் கிறிஸ்தவர்.


ஆனால் தேவன் தன்னை பகைக்கிறவனின் அக்கிரமத்தை நான்காம் தலைமுறைவரை விசாரிப்பவரே அவர்.


தன்னிடம் அன்புகூறுவோருக்கே 1000 தலைமுறைக்கு இரக்கம் காட்டுகிறவர்- உபாகமம் 5:9-10

மேலும் உபாகமம் 7:9-10


சோ, போலியாக தேவன் தன்னை பகைக்கிறவனையும் நேசிக்கிறார் என கதைவிட வேண்டாம்




15.தேவன் பட்சமாக இல்லை என்பர். ஆனால் செத்ததை பரதேசிக்கு சாப்பிட கொடுக்கலாமாம். அந்நியனுக்கு விற்றும் போடலாமாம்

 (உபாகமம் 14:21)



16.தன் சபைக்கு பாலியல் குறைபாடு உள்ளவர்களும் (ஆணுறுப்பு அறுபட்டவன், காயடிக்கப்பட்டவன்), வேசிப்பையனும் அவனது பத்தாம் தலைமுறை வரை உள்ளோரும் வர கூடாதாம். (உபாகமம் 21:1-3)



பாலியல் குறைபாடு இருந்தால் என்ன தப்பு?


வேசிப்பிள்ளை தன்னை வேசியிடம் பிறக்க வையும் என வேண்டினானா?


ஆகவே இது அநீதி



17.தேவன் பழிவாங்க கூடாது என்கிறார் என்பர் கிறிஸ்தவர்கள். ஆனால்


மோவாபியரும் அம்மோனியரும் சாப்பாடு தண்ணீர் கொடுக்காததாலும் , பிலேயாமை வைத்து சபிக்க பார்த்ததாலும், அவர்களுக்கு ஆயுட்காலம் முழுவதும் அவர்களுக்கு நன்மையோ சமாதானமோ செய்ய கூடாது என கண்டிப்பாக கட்டளையிட்டார். (உபாகமம் 23:4-6)


இவ்வாறு அமேலிக்கியர் ஒரு தடவை செய்ததற்காக , வானத்தின் கீழ் அவர்களது பெயர் இல்லாமல் ஆகும்விதமாக யுத்தம் செய்து அழிக்கும் படி கூறுகிறார்- உபாகமம் 25:17-19



18.பட்சபாதம் மீண்டும்.


இஸ்ரேலியனிடம் வட்டி வாங்க கூடாது. அந்நியனிடம் வட்டி வாங்கலாம் - உபாகமம் 23:19-20





19.அந்நியனுக்கும் சுதேசிக்கும் (இஸ்ரேலியருக்கும்) ஒரே சட்டமா?



யாத்திராகமம் 12:49, எண்ணாகமம் 9:14 , லேவியராகமம் 24:22 ஆகியவற்றில் சுதேசிக்கும் (இஸ்ரேலியருக்கும்) அந்நியருக்கும் ஒரே பிரமாணம் இருக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது .



அதைவைத்து கிறிஸ்தவ போதகர்கள் தேவன் எவ்வளவு நீதியானவர் பார்த்தீர்களா என்றெல்லாம் நம்மிடமே கேட்கிறார்கள்.




உண்மையில் இவர்களது அந்நியன் என்பது மாற்று மதத்தவர் அல்ல.. மாறாக தம் மதத்தையே பின்பற்றும் நபராவான்.


அவன் வேறு சிலைகளுக்கு பலி கொடுத்தால், அவனுக்கும் மரணதண்டனை கொடுக்கும்படியே சொல்லப்படுகிறது (லேவியராகமம் 20:22)



ஆகவே வேறு மதத்தவனை குறித்து இங்கே கூறப்படவில்லை.


வேறு மதத்தவர்களது சிலைகளை உடைத்துப்போடவும் , அவர்களது கடவுள்களோடு உடன்படிக்கை செய்யாமலிருக்கவுமே கட்டளையும் இடப்பட்டுள்ளது. (யாத்திராகமம் 34:11-14, 23:24, எண்ணாகமம் 33:52, உபாகமம் 7:5, 12:3)



எந்த மனிதனாவது இஸ்ரேலியனுக்கு கொடுக்கும் தேசத்தில் வேறு கடவுளை வணங்கினால் , அவர்களை கல்லெறிந்து கொல்லவேண்டும் (உபாகமம் 17:2-5)



ஆகவே இது இவர்களது மதத்தை பின்பற்றுபவர்களையே குறிக்கிறது. அந்நியனது மதத்தை மதிக்கவோ அவனை மதிக்கவோ கூறவில்லை!



அடுத்து , ஒரே பிரமாணம் (சட்டம்) இருக்க வேண்டும் என எதை சொல்கிறது?


இருவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை சொல்கிறதா ?? நிச்சயமாக கிடையாது!!



மாறாக


1.யாத்திராகமம் 12:49, எண்ணாகமம் 9:14 ஆகியன பஸ்காவை ஆசரிப்பவன் சுன்னத்து செய்யப்பட வேண்டும் என்கிறது. அது அனைவருக்கும் பொது என்று சொல்லுவதாகும்.



2.லேவியர் 24:22 , குற்றம் செய்த விசயத்தில் இருவருக்கும் ஒரே சட்டம் இருக்கவேண்டும் என்கிறது. அதாவது ஒரே மதத்தவராக உள்ளவர்கள் இவர்கள்... அவர்களில் அந்நியன் சுதேசி என பார்க்காமல் குற்ற தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்கிறது.




ஆனால், இஸ்ரேலியனும் அந்நியனும் சமனாக மாட்டார்கள் என்றே இந்த புத்தகங்கள் சொல்கின்றன.



1.வட்டியை இஸ்ரேலியனான சகோதரனிடம் வாங்க கூடாது. ஆனால் அந்நியனிடம் வாங்கலாம் (உபாகமம் 23:19-20)



2.இஸ்ரேலியனை அடிமையாக விற்கவோ வாங்கவோ கூடாது. அவன் சதாகாலமும் அடிமையாக இருக்க கூடாது. ஆனால் அந்நியனை அப்படி செய்துகொளளலாம்- லேவியராகமம் 25:42-46




3.செத்துப்போனதை இஸ்ரேலியர் உண்ண கூடாது. ஆனால் அந்நியனுக்கு உண்ண குடுக்கலாம். விற்கவும் செய்யலாம். (உபாகமம் 14:21)




4.அந்நியன் ஒருபோதும் அவர்கள் மேல் ராஜாவாக கூடாது. (உபாகமம் 17:15)




ஒரே மதத்தவராக இருந்தும்கூட பாரபட்சம் காட்டப்பட்டே உள்ளது.



குற்றவியல் சட்டங்கள் பலிக்குறிய சட்டங்கள் போன்றவற்றில் தான் ஒரே சட்டம் என கூறப்பட்டுள்ளது.


இருவரும் சமனானவர்களாக எங்கும் கூறப்படவில்லை!!



இப்படிப்பட்ட அந்நியனை ஒடுக்காமல், சுதேசியை நேசிப்பது போல அவனையும் நேசிக்கும் படியும் கூறப்பட்டுள்ளது!! அது நல்ல விடயமே..


ஆனால் சகலதிலும் ஒரே சட்டம் என கூறுவது அறியாமை வாதமாகும்.. அதுவும் சொந்த மதத்தை பின்பற்றுபவனுக்கே ஆகும்..



சிலைவணங்காக்கோ வேறு கடவுளை வணங்குபவனுக்கோ அல்ல!!


நாஸ்திகனுக்கும் அல்ல!

தவ்ராத் தான் பழைய ஏற்பாடா?



சனி, 26 நவம்பர், 2022

பழைய ஏற்பாடு தேவனை எவ்வாறு சித்தரிக்கிறது பாகம் 1 (ஆதி-யாத்தி)

 *பைபிள் தேவனை எவ்வாறு சித்தரிக்கிறது*


1.ஆதியாகமம் - யாத்திராகமம்




1.எதிர்கால அறிவு இல்லாதவர் - மனிதன் கொடுமை செய்தபோது அவனை படைத்ததற்காக மனஸ்தாபப் பட்டார்- ஆதி 6:5-7




2.சாதாரண இயற்கை அறிவும் இல்லாதவர்- வானவில்லை குறித்து அதை நோவா காலத்தில் அடையாளமாக தன் வில்லை மேகத்தில் வைத்தேன் என்றும் மேகத்தை பூமிக்கு மேலால் கொண்டுவருகையில் அது தெரியும் என்கிறார் - ஆதி 9:13-14


ஆனால் உண்மையில் அது வில் கிடையாது.. ஒளி முறிவினால் உண்டாவதாகும். அதன் வடிவமும் முழு வட்ட வடிவம் ஆகும்.




3.அவர் மனிதன் நன்மை தீமை அறிவதை விரும்பாதவர். நன்மை தீமை அறிந்ததால் அவனை நிலையாக வாழ விட கூடாது என நினைப்பவர்- ஆதி 3:22-24




4.பொறுப்பு இல்லாதவர். ஆதாமைஏதேனில் விட்டு பொல்லாத பேசும் பாம்பையும் உள்ளே விட்டவர்.(ஆதி 3:1)


 அந்த பாம்பினால் தான் இயேசு சாக வேண்டி வந்தது. அதாவது இயேசுவை சாவடிப்பதற்காகவே ஆதாமோடு பாம்பை அனுப்பி திட்டம் போட்டுள்ளார் என தெரிகிறது




5.மிருகத்துக்கும் மனிதனுக்கும் பகைமையை உண்டாக்குபவர். பேசும் பாம்பு ஏவாளை வஞ்சித்ததற்காக ஏவாளுக்கும் பாம்புக்கும் ஏவாளது வித்துக்கும் பாம்பின் வித்துக்கும் பகையை மூட்டினாராம்- ஆதி 3:15



6.கொடூர சிந்தனையுள்ளவர். ஒரு பழத்தை தின்றதற்காக பெண்ணின் கர்ப்ப வேதனையை அதிகப்படுத்துவாராம். (ஆதி 3:16)



ஒரு தாய் பிள்ளை பெறும்போது எவ்வளவு செத்து பிழைக்கிறாள். அதையும் பெருக பண்ணுவாராம்.


காரணம் ஒரே ஒரு பழத்தை தின்றதற்காக.


பிறகு இவர் தன் மகனை கொன்றார் என கிறிஸ்தவம் சொல்கிறது


அந்த படி பார்த்தால், தன் மகனை கொல்ல போட்ட திட்டம் என புரிகிறது


இவ்வளவு சாபங்களையும் கொடுத்துவிட்டு ஒரு மிருகத்தை கொன்று ஆடை அணிவித்ததை (3:21) பேரன்பு என இந்த பாமரர்கள் கூறுவர்



ஆனால் அதன் பின் ஜீவ விருட்சத்தை அடையும் வழியை அடையாதிருக்க தூரத்தியதை இருட்டடிப்பு செய்துவிடுவார்கள்




7.தேவனுக்கு மறதியும் சிறிதளவு உண்டு. ஒளி முறிவால் ஏற்படும் வட்டவடிவத்தை வில் என கூறுவது மட்டுமின்றி, தன் உடன்படிக்கையை நினைவுகூற அதை பார்ப்பாராம் தேவன். (ஆதி 9:16)


இவருக்கு மறக்காது எனின் , ஏன் அதை பார்த்து நினைவுகூற வேண்டும்?


இவ்வாறு தாவீதையும் ஏன் மறந்தீர் என தாவீது கேட்கிறார்-சங் 42:9




8.கேடுள்ளவன் முழுசாக கேடுள்ளவனாக ஆகும்வரை காத்திருப்பவர். இப்போது எமோரியரின் அக்கிரமம் பெரிதாக இல்லை என்பதால் இஸ்ரேலியர் எகிப்திலிருந்து வரும்வரை அக்கிரமத்தை முழுமைப்படுத்த டைம் கொடுக்கிறார். (ஆதி 15:16)


ஆனால் விந்து விசயம் பற்றி பின்னர் வரும்போது அவரது அவசரத்தை கூறுகிறேன்




9.அவர் கடுங்கோபி. லோத்தின் மனைவி திரும்பி பார்த்ததற்காக உப்புத்தூணாக அவளை ஆக்கிவிட்டார். (சத்தம் கேட்டால் மறந்து திரும்பி பார்ப்பதெல்லாம் சகஜம் தானே) -ஆதி 19:26



10.அநீதியான தேவன்


தந்தையை கற்பழித்த பிள்ளைகளை ஒன்றும் செய்யாதவர் திரும்பி பார்த்ததற்காக அழித்த தேவன், தன் தகப்பனோடு விபச்சாரம் செய்தபோது ஒரு சிக்னல் கூட கொடுக்கவில்லை. லோத்திடம் சொல்லி தண்டிக்கவுமில்லை.(ஆதி 19:31-36)


ஆகவே இதில் பாரிய அநீதி உள்ளது




இஸ்ரேலியர் தன் எதிரிகளை இழிவு படுத்த புகுத்தியதாக இருக்கவும் கூடும்



அபிமெலேக் சாராவை கடத்தி சேர பார்த்தபோது , அவனது கனவில் போய் எச்சரித்தவர், லோத்திற்கு இதை வாய்திறக்க வில்லை என்பது என்ன சொல்ல




11.மீண்டும் அநீதி செய்யும் தேவன்.

சாரா தன் மகனை இஸ்மவேல் பரியாசம் செய்ததால் , அவனையும் அவன் தாயையும் வெளியே போட சொல்கிறார்.. தேவனும் அப்படியே செய் என சாரா பேச்சை கேட்கிறார்-ஆதி 21:9-12


பக்கச்சார்பு தேவனாக உள்ளார்




12.அவசரக்கார தேவன் -

தேவன் புத்தியோடு ஜெபத்துக்கு பதில் கொடுக்காமல், அறிவீனமாக செய்யும் ஜெபத்துக்கு பதில் கொடுத்து அநியாயமாக இன்னொருவனை பாதிக்கப்பட செய்கிறவர். (ஆதி 27:22-35)


இப்படி ஏசா வேசம் போட்டு வந்த யாக்கோபை ஈசாக்கு ஆசீர்வதிக்க, பொய் சொல்லி ஆசீர்வாதத்தை யாக்கோபு பெறுகிறார். தேவனும் அவசரப்பட்டு அதை ஏற்கிறது வேடிக்கை.


ஏனென்றால் அவர் அவன் கர்ப்பத்தில் இருக்கும்போதே தேவன் அதை தீர்மானித்திருந்தார்-ஆதி 25:23-25


அதாவது தேவன் ப்ளான் பண்ணி தான் அவசரப்பட்டிருக்கிறார் என இது காட்டுகிறது.


(அவர் நீடிய பொறுமையுள்ளவர் என இதே பைபிள் சொல்கிறது)




13.தேவன் மிக பயங்கரமானவராக பைபிள் காட்டுகிறது. பொறுமையற்றவர்.


 , ஓனான் உடலுறவில் விந்தை கீழே சிந்தியதற்காக அவனை கொலை பண்ணினார்- ஆதி 38:8-10


விந்து சிந்தியதற்காக கொன்றவர், மதுபானத்தை ஊற்றி தகப்பனை கற்பழித்த போது ஒன்றும் செய்யவில்லை.


இதற்கு பின் மறுமகள் வேசி போல வேடமணிந்து மாமனாரோடு விபச்சாரம் செய்தபோதும் எதுவும் செய்யவில்லை. .


விந்து கீழே சிந்தியது தான் இவருக்கு பிரச்சினையாக காட்டப்படுகிறது. இது தேவனை கேவலப்படுத்துகிறது




14.சிறிதளவு மறதியும் அவருக்கு உண்டு.

யாக்கோபிடம் உன் பெயர் இனி யாக்கோபு அல்ல. மாறாக இஸ்ரேல் எனப்படும் என பெயரை மாற்றினார்- ஆதி 32:28


பிறகு இதை மறந்து, மீண்டும் "யாக்கோபே யாக்கோபே " என்று அவரே கூப்பிடுகிறார்- 46:2


இதை எழுதியவர் கூட சற்று ஞாபகத்தோடு "யாக்கோபோடு பேசினார்" என சொல்லாமல் "இஸ்ரேலோடு பேசினார் " என கரக்டாக சொல்றார்... ஆனால் தேவன் மட்டும் மறந்துவிட்டார்




15.பார்வோனை கெடுத்து அழிப்பதற்காக, அவனது இருதயத்தை கடினப் படுத்தியவர் - யாத்திராகமம் 4:21


அதாவது அவனை அழிப்பதற்கு, இவரே அவனை பாவம் செய்ய வைக்கிறார்.


(இது தெரியாமல் கிறிஸ்தவர்கள் கதைவிடுவர்)



16.பார்வோனின் (எகிப்தியரின்) மூத்த மகன்களை கொலைசெய்ய திட்டம் போட்ட தேவன்.


அவன் இஸ்ரேலியரை போகவிடாவிட்டால், அவனது மூத்த பிள்ளைகளை கொல்வேன் என சொல்ல சொல்கிறார் - யாத்திராகமம் 4:22-23


ஆனால் அவனது இதயத்தை இவர் தான் கடினப்படுத்துவாராம். அதனால் அவன் போக விடமாட்டானாம். (யாத்திராகமம் 4:21)


பச்சையாக தெரிகிறது இவர் நோக்கமே எகிப்தியரின் தலைப்பிள்ளைகளை கொல்லுவது என்று




17.தேவன் அற்ப காரியத்துக்காகவும் கோபப்படுவார்.


மோசே தன் பையனின் ஆணுறுப்புத்தோலை வெட்டி சுன்னத் செய்யாததால் , மோசேயையே கொல்ல பார்த்தார். உடனே அவரது மனைவி பிள்ளையின் ஆணுறுப்புத்தோலை சுன்னத் செய்து "நீ என் புருஷன்" என சொன்னாள். அப்போது தான் கர்த்தர் சமாதானமாகி விலகினார் - யாத்திராகமம் 4:24-26


தேவனை நோக்கி நீ என் புருசன் என்றாளா அல்லது மோசேயை பார்த்து சொன்னாரா தெரியாது




18.பொய் பேசும் தேவன்.


ஆப்ரகாம் ஈசாக்கு யாக்கோபு ஆகியோருக்கு "யெகோவா" எனும் பெயரில் அறிமுகமாகவில்லை என்கிறார் -யாத்திராகமம் 6:3


ஆப்ரகாம் ஈசாக்கை பலிகொடுக்க போன மலைக்கு யெஹோவாயீரே என பெயரிட்டார்- ஆதி 22:14 


அதாவது தேவன் பெயர் யெஹோவா என அறிந்திருக்கிறார்.. 


இது ஒன்றும் ஆப்ரகாம் சொன்னதன் எபிரேய மொழியாக்கம் அல்ல. ஆப்ரகாம் எபிரேயன் என்றே பைபிள் சொல்கிறது



ஆப்ரகாமுக்கு யெகோவா என பெயர் தெரிந்திருந்தால், நிச்சயம் அந்த பெயரில் தேவன் அறியப்பட்டிருக்கிறார் என புரிகிறது.





19.புரியாத புதிரான கர்த்தர்


பார்வோனின் இருதயத்தை கடினப் படுத்துவேன் என்றார்-யாத்தி 7:3


அவனது இருதயம் கடினப்பட்டது- யாத்தி 7:13


பிறகு கர்த்தரே அவனது இருதயம் கடினமானதற்காக நதியையும் பாத்திரத்திலுள்ள நீரையும் இரத்தமாக மாற்றுமாறு சொல்கிறார் -யாத்தி 7:14-21



அதாவது குழந்தையை கிள்ளி குழந்தை அழுததும் மூச்சை அடக்கி சாவடிப்பது போன்றே இது உள்ளது.



20.தேவன் பார்வோனின் இருதயத்தை தான் அற்புதம் செய்ய கடினப்படுத்தியிருக்கிறார்


 அவனது இருதயத்தை கடினப்படுத்தியது, தேவன் அற்புதம் செய்வதற்கும், தேவன் செய்த அற்புதத்தை இஸ்ரேலியர் தம் பிள்ளைகளுக்கு சொல்வதற்கும் , கர்த்தர் நானே என அறிவதற்குமாம். - யாத்திராகமம் 10:1-2



அதாவது ஒருத்தருக்கு புத்தி சொல்ல , மற்றவரின் இதயத்தை கடினப் படுத்திவிட்டு, அவன் இதயம் கடினப்பட்டதற்காக அவனையே தண்டிக்கிறார்.



எவ்வளவு நீதி




21.தான் மகிமைப்பட பார்வோனின் இருதயத்தை கடினப் படுத்தி அவனை சாகடித்தார் - யாத்திராகமம் 14:17




22.தன் மக்களை நாசமாக்க தப்பான தீர்க்கதரிசியை தெரிவு செய்தார்.


தேவன் முன்னறிவின்றி தீர்க்கதரிசியை தெரிவு செய்தாரா அல்லது மக்களை கெடுத்துக் போட தீர்க்கதரிசியை தெரிவு செய்தாரா?


ஆரோனிடம் தம்மை எகிப்திலிருந்து கொண்டுவந்த மோசேக்கு என்ன நடந்ததோ தெரியாது. அதனால் நமக்கு கடவுள்களை உண்டாக்க மக்கள் சொல்ல, ஆரோன் ஆபரணங்களை கேட்டெடுத்து மாட்டு குலதெய்வத்தை செய்வித்தாராம். (யாத்திராகமம் 32:1-6)


மக்களை வழிகெடுக்கும் ஒருவரை தெரிவு செய்யும் அளவுக்கு அறிவில்லாத தேவனா இவர்?


பிறகு இதற்காக மக்களை அழிக்கவும் பார்க்கிறார்-(யாத்திராகமம் 32:10)


இதற்காக ஒரு சிலரை வைத்து மறுசிலரை கொலைபண்ணுவிக்க தேவன் கட்டளையிட்டார் -யாத்திராகமம் 32:26-27


இவ்வாறு 3000 பேரை கொலை செய்தனர் -யாத்திராகமம் 32:28



அதாவது 3000 பேரை கொல்லுவதற்கு திட்டம் போட்டு ஆரோனை தெரிவுசெய்தாரோ??




23.மக்களை அழிக்க நினைத்த தேவனும், அழித்தால் எகிப்தியர் தப்பாக பேசுவர் என ஞானத்தை தூண்டிய மோசேயும்


மாட்டை வணங்கியதற்காக தேவன் அவசரப்பட்டு மக்களை அழிக்க பார்த்தார். உடனே மோசே, அப்படி செய்தால் ,



மலைகளில் கொன்று போடவும், பூமியின் மேல் இல்லாமல் அழிக்கவுமே எகிப்திலிருந்து கொண்டு போனார் என எகிப்தியர் சொல்வர் என தேவனுக்கு புத்தி சொல்கிறார் - யாத்திராகமம் 32:12




24.தன்னை கட்டுப்படுத்த இயலாது அளவு கோபமுள்ள தேவன்


அவர் இஸ்ரேல் மக்கள் நடுவே போகாமல், தன் தூதனை அனுப்புவாராம். அவர் போனால் கடுப்பாகி இவர்களை கொன்று போட்டாலும் கொன்றுபோட்டுவிடுவார் என தன்னை குறித்து சொல்கிறார் - யாத்திராகமம் 33:2-3




25.தேவன் எல்லோரோடும் அன்பானவரல்ல.


அவர் யாருடன் இரக்கமாக சித்தமாயிருக்கிறாரோ , அவர்களோடு தான் இரக்கமாயிருப்பார் -யாத்திராகமம் 33:19



இவை குர்ஆனை அரைகுறையாக திரிப்போருக்கு சமர்ப்பணம்


அடுத்த பாகம்

தவ்ராத் தான் பழைய ஏற்பாடா?



செவ்வாய், 22 நவம்பர், 2022

எலோஹிமும் திரித்துவமும்

 "எலோஹிம்" என்பது திரித்துவத்திற்கு ஆதாரமா? 

--------------------------------------------------------------------------------



பொதுவாக கிறிஸ்தவ போதகர்கள் பொய்யிற்கே பிதாவாக ஆகும்விதமாக பொய்களை கூறுவர். அதில் முக்கியமான பொய் தான் எலோஹிம் என்பது திரித்துவத்திற்கு ஆதாரம் என கூறுவதாகும்.



இதை பிரித்து அலசுவோம்


1.திரித்துவம் என்றால் என்ன?


2.எலோஹிம் என்பது திரித்துவத்திற்கு ஆதாரமா?


3.எலோஹிம் என்றாலே பன்மையா?


**************************************************


1.திரித்துவம் என்றால் என்ன?

.......


பிதா ,மகன், பரிசுத்த ஆவி ஆகிய வெவ்வேறான மூவரும் ஒரே கடவுளாக உள்ளார்கள் என்பதே திரித்துவம் ஆகும்.



**************************************************


2.எலோஹிம் என்பது திரித்துவத்திற்கு ஆதாரமா?




எலோஹிம் என்றால் நேரடி அர்த்தம் கடவுள்கள் என்பதாகும்.. அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் என்பதே மொழிரீதியான அர்த்தம்.




திரித்துவ நம்பிக்கை படி ஒரு கடவுள் தானே மூன்று நபர்களாக உள்ளார்.. ஆகவே எலோஹிம் என்பது எப்படி திரித்துவத்திற்கு ஆதாரமாகும்?


ஏனெனில் கடவுளின் எண்ணிக்கை ஒன்று என்பதே திரித்துவம்.. கடவுளின் எண்ணிக்கை மூன்று என்பதல்ல..


அப்படியாயின், "கடவுள்கள்" என்பதை வைத்து ஒரு கடவுள் மூன்று நபர்களாக உள்ளார் என்றும் கடவுளின் எண்ணிக்கை ஒன்று என்றும் சொல்ல முடியுமா?



அதாவது இவர்களது வாயினாலேயே தாங்கள் பல தெய்வ கொள்கையுடையோர் என்பதை தம்மை அறியாமலேயே சாட்சி கொடுக்கிறார்கள்.



இவர்களது திரித்துவத்திற்கு ஆதாரமாக வரவேண்டுமானால், "ஒரு கடவுள்" என்று கூறி, "அவர் வெவ்வேறான மூன்று நபர்களாக செயற்படுகிறார்" என்று நேரடியாக வரவேண்டும்... "கடவுள்கள்" என்பது ஒருநாளும் இவர்களது திரித்துவத்திற்கு ஆதாரமல்ல.. மாறாக தம்மை பலதெய்வ வணங்கிகள் என்பதற்கு தான் அவ்வாறு கூறுவது ஆதாரமாக அமையும்!!!





**************************************************


3.எலோஹிம் என்றாலே பன்மையா??



எலோஹிம் என்பது திரித்துவத்திற்கு ஆதாரமாக அமையாது என பார்த்தோம். இனி இவ்வார்த்தையின் அர்த்தமே பன்மையானதா என பார்ப்போம்!




பழைய ஏற்பாட்டில் எபிரேயத்தில் பல தேவர்களை குறிக்கவும், தேவதூதர்களை குறிக்கவும், நியாயதிபதிகளை குறிக்கவும், ஒரே இறைவனை குறிக்கவும், வேறு மதத்தவரது ஒரே கடவுளை குறிக்கவும், ஒரு வல்லமை மிக்க நபரை குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.




1.பல தேவர்கள்

என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம் (யாத்தி 20:3) 


தேவர்கள் எனுமிடத்தில் எலோஹிம் என்றே உள்ளது.



2.தேவதூதர்கள்

"நீர் அவனை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்" (சங்கீதம் 8:5)


இங்கே தேவதூதர்கள் என்பதிலுள்ள எபிரேய வார்த்தை "எலோஹிம்" என்பதாகும்.  


(இதேபோல் ஆதியாகமம் 3:5 உம் தேவதூதர்கள் என்றே வரவேண்டும்.. தேவர்கள் என மொழிபெயர்த்துள்ளனர்)



3.ஒரே இறைவன்


"ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்" -ஆதி 1:1


இப்படி இந்த ஒரே தேவனுக்கு பொதுவாக எபிரேயத்தில் எலோஹிம் என்றே பயன்படுத்தப்பட்டுள்ளது.





4.வேறு மதத்தவரின் ஒரு தேவனை குறிக்க


“"கிதியோன் மரித்தபின் இஸ்ரவேல் புத்திரர் திரும்பவும் பாகால்களைப் பின்பற்றிச் சோரம்போய், பாகால்பேரீத்தைத் தங்களுக்கு தேவனாக வைத்துக்கொண்டார்கள்."”

  நியாயாதிபதிகள் 8:33 


பால்பேரீத் என்ற ஒரு கடவுளை "எலோஹிம்" என்றே எழுதப்பட்டுள்ளது.


“"மத்தியானவேளையிலே எலியா அவர்களைப் பரியாசம்பண்ணி: உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணம் போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக்கும் என்றான்."”

  — 1 இராஜாக்கள் 18:27 



இங்கேயும் ஒரு போலி கடவுளை எலோஹிம் என்று பன்மையிலேயே கூறப்பட்டுள்ளது







5.நியாயதிபதிகளை குறிக்க


“"அவன் எஜமான் அவனை நியாயாதிபதிகளிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், அவனைக் கதவின் அருகேயாவது கதவுநிலையின் அருகேயாவது சேரப்பண்ணி, அங்கே அவன் எஜமான் அவன் காதைக் கம்பியினால் குத்தக்கடவன்; பின்பு அவன் என்றைக்கும் அவனிடத்திலே சேவித்துக்கொண்டிருக்கக்கடவன்."”

  — யாத்திராகமம் 21:6 


இங்கே நியாயாதிபதிகள் எனுமிடத்தில் "எலோஹிம்" என்றே உள்ளது.





6.மோசே எனும் தீர்க்கதரிசி


“"கர்த்தர் மோசேயை நோக்கி: பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்; உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான்."”

  — யாத்திராகமம் 7:1 


இங்கே உன்னை தேவனாக்கினேன் என்பதிலுள்ள தேவன் எனுமிடத்திலுள்ள எபிரேய வார்த்தை"எலோஹிம்" என்பதாகும்.



ஆகவே எலோகிம் என்றாலே ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள் என்ற அர்த்தம் அல்ல என்று இதிலிருந்து தெளிவாகிறது.




**************************************************



ஆகவே எலோஹிம் என்பது திரித்துவத்திற்கு ஆதாரமென கூறுவது மடமை ஆகும்.. வேண்டுமானால் பலதெய்வ கொள்கைக்கே ஆதாரமாக அமைய இயலும். ஆனாலும் எலோஹிம் என்பது கடவுள் அல்லாத நபர்களுக்கும், ஒருவரான தனி நபருக்கும் , தனி போலி கடவுளுக்கும் கூட இதை பாவிக்கப்பட்டிருப்பதை காணலாம். அதாவது ஒரு போலிக் கடவுளை குறிக்கவும் எலோஹிம் என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது. 


ஆகவே போதிய அறிவின்றி தம்மை பெரிய ஞானிகள் போல் உயர்த்துவோர் நிச்சயம் தாழ்த்தப்படுவர்!!!




வெள்ளி, 18 நவம்பர், 2022

தவ்ராத் தான் பழைய ஏற்பாடாக?

 தவ்ராத் தான் பழைய ஏற்பாடா?

--------------------------------------------------------------------------------




பொதுவாக பாமர கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டை காட்டி இது தான் தவ்ராத் என்றும் புதிய ஏற்பாட்டை காட்டி இது தான் இன்ஜீல் என்றும் கதைவிடுவார்கள்.. பாமர முஸ்லிம்கள் கூட அவ்வாறு நம்பும் நிலையில் தான் உள்ளார்கள் . 


இதில் வேடிக்கை என்னவென்றால் கிறிஸ்தவர்கள் , முகம்மது நபியும் நாமும் தவ்ராத்தை பின்பற்றாதிருக்கிறார்கள் என்று மடத்தனமான வாதத்தையும் சிலபோது முன்வைக்கிறார்கள். உதாரணமாக ஒட்டக இறைச்சி விசயத்தில் இவ்வாறு குற்றம் சாட்டுகின்றனர். ஏனெனில் முஸ்லிம்கள் ஒட்டக இறைச்சி சாப்பிடுவர். ஆனால் யூதர்களுக்கு அது ஹராம் ஆகும். ஆகவே இவற்றை விரிவாக ஆராய்வதற்கு சில பகுதிகளாக பிரித்து பார்ப்போம்.


உப பிரிவுகள்

அ.தவ்ராத் என்பது யூத நம்பிக்கை படி என்ன?

ஆ.இஸ்லாமிய நம்பிக்கை படி தவ்ராத் என்பது என்ன?

இ.பழைய ஏற்பாட்டு பிரகாரம் தோரா என்பது என்ன?

ஈ.புதிய ஏற்பாட்டின்படி தோரா என்ன?

உ.தற்போதுள்ள தோராவின் நிலை.

ஊ.தோராவை முஸ்லிம்கள் எவ்வாறு நம்ப வேண்டும்?

எ.தவ்ராத்தை நாம் பின்பற்ற வேண்டுமா?


ஒவ்வொன்றாக பார்ப்போம்:


*****************************************






அ. தவ்ராத் என்பது யூத நம்பிக்கை படி எது?



யூத நம்பிக்கை பிரகாரம் அவர்கள் தம் வேதத்தை "தநாக் " என கூறுவார்கள்.


அதிலுள்ள "த" என்பது தவ்ராத்தையும், "ந" என்பது நவியீம் (தீர்க்கதரிசிகள்/நபிமார்கள். உதாரணமாக ஏசாயா, எசேக்கியேல்,எரேமியா, சகரியா போன்ற புத்தகங்கள்), "க" என்பது கித்வீம் என்பதை குறிக்கும். அதாவது ஏனைய எழுதப்பட்ட புத்தகங்களை இது குறிக்கும்.




தவ்ராத் என இவர்கள் கூறுவது பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்களை ஆகும்.


அதாவது- ஆதியாகமம் (Genesis) , யாத்திராகமம் (Exodus) , லேவியராகமம் (Leviticus), எண்ணாகமம் (Numbers), உபாகமம் (Deuteronomy) ஆகிய ஐந்து புத்தகங்களை சேர்த்து தவ்ராத் என்கிறார்கள்.


ஆதியாகமம் என்பது உலக படைப்பு முதல் யோசேப்பு வரையான காலம் வரைக்கும் கூறுகிறது. அதாவது இஸ்ரேலியர் எகிப்தில் குடியேறும் வரையான கதையை கூறுகிறது.


யாத்திராகமம் என்பது , இஸ்ரேலியர் எகிப்தில் ஒடுக்கப்பட்டதையும் அங்கே மோசே தோன்றி இஸ்ரேலியர்களை இரட்சித்து எகிப்திலிருந்து அழைத்துக்கொண்டு சென்றபோது நடந்த நிகழ்வுகளையும் கூறுகிறது. இடையிடையே சட்டங்கள் கூறப்படுகின்றன.


லேவியராகமம் இதில் பெரும்பாலும் பலிகள் பற்றி கூறப்படுகின்றது. இடையிடையே சட்டங்கள் அதிகமாக கூறப்படுகின்றதோடு சில நிகழ்வுகளும் கூறப்படுகின்றன. அவை கூட சட்டங்களோடு சம்பந்தப்பட்டதாகவே இருக்கும்.



அடுத்து, எண்ணாகமம், இதில் இவர்களது எண்ணிக்கை தொடர்பாக கூறப்பட்டிருக்கிறது. யாத்திராகமம் புத்தகத்தில் சொல்லப்பட்ட அதே நிகழ்வுகள் சிறு மாற்றங்களோடும் முரண்பாடுகளோடும் இதிலும் எழுதப்பட்டுள்ளது. யாத்திராகமத்தில் சொல்லப்படாத நிகழ்வுகளும் இதில் எழுதப்பட்டுள்ளன.


உபாகமம்- இதுவே தோராவின் கடைசி புத்தகம். இதில் மோசே மரணித்து அடக்கம் செய்யப்பட்டது வரை கூறப்பட்டுள்ளது. இது யாத்திராகமம் , எண்ணாகமம் கூறிய நிகழ்வுகளை சுருக்கமாக கூறுவதோடு முரண்பட்டும் கூறுகிறது. இதிலும் அதிக சட்டங்கள் கூறப்பட்டுள்ளன.

*****************************************


ஆ. இஸ்லாமிய நம்பிக்கை பிரகாரம் தவ்ராத் என்பது என்ன?




தவ்ராத் என்பது மூஸா நபி அவர்களுக்கு இறைவனால் எழுதிக்கொடுக்கப்பட்ட வேதம் ஆகும். (புகாரி 4476,6614, 4736,

அதாவது தவ்ராத் என்பது இறைவனால் மூசா நபியிற்கு எழுதிக்கொடுக்கப்பட்ட வேதம் ஆகும்.

அதில் நேர்வழியும் ஒளியும் உண்டு.(5:44)

*****************************************




இ.பழைய ஏற்பாட்டு பிரகாரம் தவ்ராத் 



இதை நியாயப்பிரமாணம் என சொல்வார்கள்.. எபிரேய பாசையில் தோரா எனப்படும்.



1.தேவன் எழுதி கொடுத்தது


“"அவர் உங்களுக்கு எழுதிக்கொடுத்த திட்டங்களின்படியும், முறைமைகளின்படியும், நியாயப்பிரமாணத்தின்படியும், கற்பனைகளின்படியும், நீங்கள் சகல நாளும் செய்கிறதற்குக் கவனமாயிருந்து அந்நிய தேவர்களுக்குப் பயப்படாதிருங்கள்."”

  — 2 இராஜாக்கள் 17:37 (TBSI)


இதன்படியும் தோரா என்பது தேவன் எழுதி கொடுத்தது ஆகும்.



2.மோசே மூலமாக தேவன் இஸ்ரேலுக்கு கொடுக்கப்பட்டதாகும்.


“"நான் மோசேயைக்கொண்டு இஸ்ரவேலுக்குக் கொடுத்த சகல நியாயப்பிரமாணத்திற்கும் கட்டளைகளுக்கும் நியாயங்களுக்கும் ஒத்தபடியே அவர்களுக்கு நான் கற்பித்தவைகளையெல்லாம் அவர்கள் செய்யச் சாவதானமாய் இருந்தார்களேயாகில், நான் இனி அவர்கள் காலை அவர்கள் பிதாக்களுக்கு நிலைப்படுத்திவைத்த தேசத்திலிருந்து விலகப்பண்ணுவதில்லையென்றும், தேவன் தாவீதோடும் அவன் குமாரனாகிய சாலொமோனோடும் சொல்லியிருந்த தேவனுடைய ஆலயத்தில்தானே, அவன் தான் பண்ணுவித்த விக்கிரகமாகிய சிலையை ஸ்தாபித்தான்."”

  — 2 நாளாகமம் 33:8 (TBSI) மேலும் 34:14

நெகேமியா 8:1, 1:29


3.அது கர்த்தருடைய தோரா -எஸ்றா 7:6, நெகேமியா 8:8



4.முதலில் மோசே இதை எழுதினார். பிறகு அதை யோசுவா பேர்த்து எழுதினார்.


“இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக மோசே எழுதியிருந்த நியாயப்பிரமாணத்தை அவன் அங்கே கற்களில் பேர்த்தெழுதினான்.”

  — Joshua 8:32 மேலும் 24:26




இதன்படி தேவன் எழுதிக் கொடுத்ததை, மோசே பேர்த்து எழுத பிறகு யோசுவா பேர்த்தெழுதினார் என்று தெளிவாகிறது.


*****************************************


ஈ.புதிய ஏற்பாட்டின்படி தோரா 


பவுல் இதை தேவன் நேரடியாக கொடுத்ததாக நம்பவில்லை.. தேவதூதன் மூலமாக மத்தியஸ்தனாகிய மோசேயிடம் கொடுக்கப்பட்டது என்கிறார்.


“"அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு, தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது."”

  — கலாத்தியர் 3:19 (TBSI)


ஸ்தேவானும் ஆவி தூண்டி இவ்வாறு சொன்னதாகவே அப்போஸ்தலர் சொல்கிறது


“"தேவதூதரைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கைக்கொள்ளாமற்போனீர்கள் என்றான்."”

  — அப்போஸ்தலர் 7:53 (TBSI)



இதன்படி நியாயப்பிரமாணமாகிய தோரா என்பது தேவதூதன் மூலமாக மோசேயிடம் கொடுக்கப்பட்டது என்பதே புதிய ஏற்பாட்டு நம்பிக்கை



உ. தற்போதுள்ளது தோராவின் நிலைப்பாடு





 மோசேயிற்கு தேவன் எழுதிக் கொடுத்த அல்லது புதிய ஏற்பாட்டு பிரகாரம் தேவதூதன் மூலமாக மோசேயிடம் கொடுக்கப்பட்டதாக இது இருக்கிறதா?



நிச்சயமாக இல்லை.. மாறாக மோசேயை சம்பந்தமில்லாத நபர் போல் படர்க்கையிலேயே அதிகமாக எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக மோசேயின் மரணமும் அவர் அடக்கம்ஜபண்ணப்பட்டதும், மக்கள் துக்கம் கொண்டாடியதும் கூட எழுதப்பட்டுள்ளது (உபாகமம் 34)


ஆக அநேகமானவை மோசே அல்லாத நபர் மூலமாக மோசேயோடு சம்பந்தப்பட்ட வரலாறே இதில் எழுதப்பட்டுள்ளது.



தோராவுக்கு விளக்கமாக எழுதப்பட்ட பகுதிகளும் தோராவில் இணைக்கப்பட்டுள்ளது என்பதே இதிலிருந்து தெளிவாகிறது.


யூத போதகர்களது விளக்கங்களும் அவர்கள் அறிந்துவைத்திருந்த கதைகளும் இதில் புகுந்துள்ளது.




ஆனாலும் உண்மைக்கு வழிகாட்டுவதாக அது உள்ளது.. அதாவது இறைவனது தவ்ஹீதை பேசக்கூடியதாக இன்றும் அது இருக்கிறது. இதிலுள்ள குறைபாடு இறைவன் மோசேயிற்கு கொடுத்து மோசே எழுதி பின் யேசுவா எழுதியதற்கும் பின் வேறு மக்கள் எழுதியதிலேயே அவரவர் தம் குறிப்புகளாக தமக்கு தெரிந்ததை விளக்கமாக தமது பிரதிகளில் எழுதியிருக்கலாம். 


அடிவாங்கி உதைவாங்கி திரிந்த இவர்கள் அதுவும் தேவன் மோசேயிற்கு சொன்னதாக நினைத்திருப்பார்கள்!!




உதாரணமாக,


1.தேவன் தான் மனிதனை பூமியில் படைத்தற்காக மனஸ்தாபப்பட்டார் -ஆதி 6:5-6 என்று சொல்கிறது.


தேவன் முக்காலமும் அறிந்தவர். அவர் படைக்க முன்பே மனிதன் அக்கிரமம் செய்வான் என்று அவருக்கு தெரியாமல் இருக்குமா? தெரிந்தும் தான் செய்ததை நினைத்து மனஸ்தாபப்படுவதற்காக படைத்தாரா என்ன?


நிச்சயம் இது பிற்காலத்தில் வந்த பேதமை கொண்ட ரபீகள் விளக்கமாக எழுதியிருக்க வேண்டும்..



2.விபச்சாரக்கதைகள் எழுதப்பட்டுள்ளது.


உதாரணமாக தந்தைக்கு மது கொடுத்து பிள்ளை பெற்ற புத்திரிகள் என்று லோத்தின் மகள்களை சித்தரிக்கிறது -ஆதி 19:30-36


இது லோத்தின் பிள்ளைகளோடு கொண்ட குரோதத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். அல்லது தம் கற்பனை கதைகளை விளக்கமாக சொருகியிருக்கலாம்.


அதேபோல யூதாவின் மகன் ஓனான் என்பவர் தன் இறந்த சகோதரனின் மனைவியை சேர்ந்த போது விந்தை கீழே சிந்தியதற்காக தேவன் கொன்றார் என எழுதப்பட்டுள்ளது. (ஆதி 38:8-10)


இறந்த சகோதரனின் மனைவியை முடிக்கும் சட்டமே இதற்கு 400 வருடம் கழித்து தான் கொடுக்கப்பட்டது.


அதுவும் பிற்காலத்தில் கொடுக்கப்பட்ட சட்டத்திற்கமைய முற்காலத்திலேயே தண்டனையும் வழங்கப்பட்டுள்ளதாக எழுதியுள்ளார்கள்.


அதேபோல யூதா தன் மருமகளோடு அவளென அறியாமல் விபச்சாரம் செய்ததாகவும் அதற்கு மட்டும் தேவன் வாயே திறக்கவில்லை என்பது போன்றும் எழுதப்பட்டுள்ளது (அதே ஆதி 38)



3.தேவனது பெயரில் அநீதியான சட்டம்:


யூதன் தன் சகோதரனான சக யூதனிடம் வட்டி வாங்க கூடாது.. ஆனால் அந்நியனிடம் வட்டி வாங்கலாம் (உபாகமம் 23:19-20)


உன் சகோதரனிடம் வட்டி வாங்காதே என்ற போதனைக்கு விளக்கமாக அந்நியனிடம் நீ வாங்கினால் தப்பு கிடையாது என்பதை யாரோ புகுத்தியிருக்க வேண்டும்.



ஏனெனில் ஒட்டுமொத்தமாக வட்டிக்கு கொடுப்பதையே பாவமாக எசேக்கியேல் 18:8,13,17, 22:12 சொல்கிறது.


ஆகவே யாரோ இதில் விளக்கம் எனும் பெயரில் தம் மடத்தனமான கருத்தை எழுதியிருக்கிறார்.



4.மாட்டு கன்றின் சிலை செய்து வணங்குவித்த ஆரோன்:



ஆரோன் தான் மாட்டுக்கன்றின் சிலை செய்து வணங்குவித்த நபர் என்று இந்த தோரா சொல்கிறது. (யாத்திராகமம் 32:1-5, உபாகமம் 9:20)


ஆனால் சங்கீதம் 106:19, நெகேமியா 9:18 ஆகியவை மக்கள் தான் செய்தார்கள் என்கிறது. 


ஆரோன் அவர்களுக்கு பொறுப்பாக வைக்கப்பட்டிருந்ததால், ஆரோன் தான் இதை செய்வித்தார் என்று பேதமை கொண்ட ரபீகள் எழுதி வைத்திருக்கிறார்கள்.. அதுவும் இறுதியில் வேதத்தின் பகுதியாகிவிட்டது.




ஆகவே தோராவில் இவர்களது கற்பனைகளும் விளக்கங்களாக புகுத்தப்பட்டு அதுவும் வேதம் போன்றே காட்சியளிக்கின்றது.






ஊ. தோராவை முஸ்லிம்கள் எவ்வாறு நம்பவேண்டும்?



இறைவன் அருளிய தவ்றாத்தில் நேர்வழியும் பேரொளியும் உண்டு.


இறைவன் இறக்கிய தவ்றாத்தின் பகுதிகளும் இவர்கள் கூறும் தவ்ராத்தில் உண்டு.



ஆகவே இறைவன் அருளியதை நம்புகிறோம் என கூறி, இறைவன் மூஸா நபியிற்கு தவ்ராத்தை கொடுத்தான் என்றும் அதில் நேர்வழியும் பேரொளியும் உண்டு என நம்பினாலே போதுமானது,


 


"வேதக்காரர்கள் (யூதர்கள்) தவ்ராத்தை எபிரேய பாசையில் ஓதி , முஸ்லிம்களுக்கு அதை அரபுமொழியில் விளக்கம் கூறுவோராக இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேதக்காரர்களை உண்மைப் படுத்தி நம்பவும் வேண்டாம் மேலும் நிராகரிக்கவும் வேண்டாம்! மாறாக நாங்கள் அல்லாஹ்வையும் அவன் எங்களுக்கு இறக்கியதையும் உங்களுக்கு இறக்கியதையும் நம்பினோம் என்று கூறுங்கள் " என (முஸ்லிம்களுக்கு) சொன்னார்கள். (புகாரி 7362)




ஆகவே அதை அடிமட்டம் வரை அலச தேவையில்லை.. அல்லாஹ் தவ்ராத்தை இறக்கினான் என்பதை நம்பினாலே போதுமானது





எ.தவ்ராத்தை முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டுமா?



நிச்சயமாக கிடையாது..


ஏனெனில் மூசா நபி உயிரோடிருந்தாலும் அவர் முகம்மது நபியை பின்பற்றுவதை தவிர வேறு வழி இல்லை.



அதுமட்டுமின்றி ஈசா நபி வந்தாலும் அவரும் முகம்மது நபியின் ஷரீஅத் படியே தீர்ப்பளிப்பார்.



وَاِذْ اَخَذَ اللّٰهُ مِيْثَاقَ النَّبِيّٖنَ لَمَاۤ اٰتَيْتُكُمْ مِّنْ كِتٰبٍ وَّحِكْمَةٍ ثُمَّ جَآءَكُمْ رَسُوْلٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَـتُؤْمِنُنَّ بِهٖ وَلَـتَـنْصُرُنَّهٗ ‌ قَالَ ءَاَقْرَرْتُمْ وَاَخَذْتُمْ عَلٰى ذٰ لِكُمْ اِصْرِىْ‌ قَالُوْۤا اَقْرَرْنَا ‌ قَالَ فَاشْهَدُوْا وَاَنَا مَعَكُمْ مِّنَ الشّٰهِدِيْنَ‏

மேலும், அல்லாஹ் நபிமார்களிடம்: வாக்குறுதி வாங்கிய சமயத்தில் (அவர்களிடம்,) “வேதத்தையும், ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுத்து, (இதற்குப்) பின்னர், உங்களிடமுள்ளதை உண்மைப் படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால், அவரை நீங்கள் உண்மையாக விசுவாசித்து, நிச்சயமாக அவருக்கு உதவி செய்வீர்கள் (என்று கூறி, “இதனை) நீங்களும் உறுதிப்படுத்தினீர்களா?” இதன்மீது என்னுடைய வாக்குறுதியை எடுத்துக் கொண்டீர்களா?” என்று கேட்டதற்கு, அவர்கள் “நாங்கள் (அதனை) உறுதிப்படுத்துகிறோம்” என்றே கூறினார்கள். (“இதற்கு) நீங்கள் சாட்சியாக இருங்கள், நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் உள்ளவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.

(அல்குர்ஆன் : 3:81)




ஆகவே தவ்றாத்தை நாம் பின்பற்ற தேவை இல்லை... குர்ஆன் போதுமானது.



மேலும் தவ்றாத் இஸ்ராயீலியர்களுக்காகவே கொடுக்கப்பட்டதேயன்றி , அனைவருக்குமானதாக அல்ல...


இதையே பழைய ஏற்பாடும் சொல்கிறது (2 நாளாகமம் 33:8 , 2 இராஜாக்கள் 17:37).





சோ தவ்ராத் துல்லியமான நிலையில் தற்போது இருந்தாலும் அதை நாம் பின்பற்ற வேண்டியதில்லை... காரணம் அது நாம் பின்பற்றுவதற்கு மோசேயிற்கு தேவன் கொடுக்க வில்லை.



ஆகவே தவ்றாத் என்பது கடவுள் எழுதிக் கொடுத்ததை மோசே எழுதி அதை மீண்டும் பிறகு யோசுவா எழுதியதாகும்.


அதனோடு பிற கருத்துக்களும் விளக்கங்களும் பொய்களும் கலந்தே தற்போது உள்ளது.


அது தூய்மையான நிலையில் இருந்தாலும் அதை நாம் பின்பற்ற வேண்டியதில்லை!!!!




அல்லாஹ் வழிதவறச்செய்கிறான் என்பதன் விளக்கம்

1.மனிதனுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது  --மனிதனுக்கு இறைவன் வழி காட்டியுள்ளான். ஒன்று அவன் நன்றியுள்ளவனாக இருக்கிறான் அல்லது காஃபிராக இருக்கிறான...