புதன், 4 மே, 2022

யோவானின் படி இயேசு ஏன் கடவுளல்ல! பாகம் 2

 பாகம் 1

52.இயேசுவை பிதா முத்திரித்திருக்கிறாராம்.. முத்திரித்தவர் தேவனா முத்திரிக்கப்பட்டவர் தேவனா?


²⁷ "அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்."

(யோவான் 6:27)


53.தேவனுக்கேற்ற கிரியை என்பது தேவன் அனுப்பியவரை நம்புவது என இயேசு கூறி, தன்னை தேவனால் அனுப்பப்பட்டவர் என்கிறார்.

²⁸ அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள்.

²⁹ இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார். 

(யோவான் 6:28-29)


-------------



54.இயேசு வானத்திலிருந்து தேவனால் கொடுக்கப்பட்ட அப்பமாம்!


³² "இயேசு அவர்களை நோக்கி: வானத்திலிருந்து வந்த அப்பத்தை மோசே உங்களுக்குக் கொடுக்கவில்லை; என் பிதாவோ வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்."

³³ வானத்திலிருந்திறங்கி. உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார்.

³⁴ "அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்குத் தரவேண்டும் என்றார்கள்."

³⁵ "இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்."

(யோவான் 6:33-35)

தேவன் கொடுத்த சாப்பாடும் தேவனும் ஒன்றாகுமா?? சாப்பாடு கடவுளாகுமா? இந்த அப்பத்தை கொடுத்தவர் கடவுளா?


நானே என்பது தெய்வீகமா?

-------------

55.இயேசு எதையும் சுயமாக உடையவரல்ல!! பிதா கொடுப்பதே அவருக்கு வருகிறது.

 

³⁷ பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. (யோவான் 6:37)

-----------------


56.இயேசு பூமிக்கு வந்தது, அவரை அனுப்பியவருடைய சித்தத்தின்படி செய்யவே என்கிறார். 


³⁸ "என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்." (யோவான் 6:38)

இயேசு வானத்திலிருந்து இறங்கி வந்தார் என இதை எழுதிய நபர் நம்பியதால் அதை இயேசுவுடைய வாயில் போட்டிருக்கிறார்.


காரணம், இயேசு பிறக்க முன்பு இயேசு இருக்கவே இல்லையே!! தேவனது ஒரு கட்டளை மூலம் மரியாள் இயேசுவை பெற்றெடுத்ததால், வார்த்தை தான் மனிசனானது என நம்பிய யோவான், இயேசு குழந்தையாக பிறந்ததால், தேவனிடம் இயேசு ஏற்கனவே அவரது மடியில் இருந்த குழந்தை என நம்பினார்.

அதன் வெளிப்பாடே இது!!

-----------------

57. இயேசு கடைசி நாளில் அவரை நம்பியோரை எழுப்புவது அவரை அனுப்பினவருடைய சித்தமாம்! இயேசுவுடைய சித்தம் அல்ல!



³⁹ "அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது."



⁴⁰ "குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்."

(யோவான் 6:39-40)

இயேசு தேவனுக்கு அடிபணிந்திருக்கும் அவரது பையன் என்பதே இவை கூறும் கருத்து.. ஒரே மெய்யான தேவனாக இயேசுவை யோவான் சித்தரிக்கவில்லை!

-------------------


58.பிதா இழுத்துக்கொண்டால் மட்டுமே இயேசுவிடம் ஒருவன் வருவானாம்! அதேபோல் பிதாவிடம் கேட்டு கற்றுக்கொள்பவன் தான் வருவானாம்


⁴⁴ என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.

⁴⁵ எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.

(யோவான் 6:44-45)

அதாவது இயேசுவாக தன் வல்லமையால் யாருக்கும் நேர்வழி கொடுக்க இயலாது.. மாறாக பிதாவே கொடுக்கிறார் என்பதே இது கூறும் கருத்து!

-----------------------------



59. இயேசு பிதாவை கண்டவராக சித்தரிக்கப்படுகிறது. இதன் மூலம் பிதா வேறொரு நபர் என அறிய்ப்படுகிறார்.


⁴⁶ "தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர்."(யோவான் 6:46)

இயேசு தேவனுடைய பையன் என நம்பியதால், அவர் தன் தகப்பனை கண்டிருப்பார் என்பதே இதன்மூலம் யோவான் சொல்ல வருகிறார்.

-------



.60.இயேசு ஜீவனுள்ள பிதாவின் மூலமாக தான் பிழைத்திருக்கிறாராம்!


⁵⁷ "ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்."(யோவான் 6:57)

அதாவது இயேசு சுயமாக பிழைத்திருக்கவில்லை! அப்படி இருக்க இவர் எப்படி ஒரே தேவனாவது??

--------------


61.இயேசு ஏற்கனவே இருந்த இடத்திற்கு ஏறிப்போவாராம்!

⁶² மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்? (யோவான் 6:62)

இயேசு ஏற்கனவே குழந்தையாக தேவனிடம் இருந்தார் என்பதே இது கூறவரும் மறைமுக கருத்து!

--------------

62.இயேசு சொல்லுகிற வசனங்கள் ஆவியும் ஜீவனுமாக இருக்கிறதாம்!


⁶³ "ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது." (யோவான் 6:63)

இயேசு சொல்லக்கூடிய வசனங்கள் அவருடையதல்ல.. தேவனுடையது என்பதால் அவை ஆவியும் ஜீவனுமாக உள்ளன


-------

.




63.இயேசுவை அவரது சொந்த சகோதரர்கள் கூட ஆரம்பத்தில் நம்பவில்லை. தேவனுக்கு சகோதரர் இல்லை!


⁵ அவருடைய சகோதரரும் அவரை விசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள் (யோவான் 7:5)

--------.



64.இயேசுவின் உபதேசம் அவருடையவை அல்ல!. அவரை அனுப்பியவருடையதாம்! அதுமட்டுமின்றி இயேசு சுயமகிமையௌ தேடாமல் அனுப்பினவருடைய மகிமையையே தேடுபவராம்!


¹⁶ "இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது."

¹⁷ "அவருடைய சித்தத்தின்படி செய்யமனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்."

¹⁸ "சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை." (யோவான் 7:16-18)

-------------



65.இயேசு சுயமாக வரவில்லையாம்! பிதா தான் அவரை அனுப்பினாராம்!



²⁸ "அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கையில் சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கேயிருந்து வந்தேனென்றும் அறிவீர்கள்; நான் என்சுயமாய் வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர், அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்."

²⁹ "நான் அவரால் வந்திருக்கிறபடியினாலும், அவர் என்னை அனுப்பியிருக்கிறபடியினாலும், நானே அவரை அறிந்திருக்கிறேன் என்றார்."(யோவான் 7:28-29)

அனுப்பப்பட்டவர், சுயமாக வராதவர் எப்படி ஒரே தேவனாவார்?

-----------------



66.இயேசுவின் பேச்சை கேட்டவர்கள் கூட அவரை தீர்க்கதரிசி என்றும் கிறிஸ்து என்றும் தான் சொன்னார்கள்-(யோவான் 7:40-41)


 -----------



67.இயேசு உலகத்துக்கு ஒளியாக இருக்கிறாராம்! அவரை பின்பற்றுபவரும் ஜீவ ஒளியை அடைவார்களாம்!

¹² "மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்." (யோவான் 8:12)

இருளான பாதையில் செல்வதற்கு வழிகாட்டுதல் தேவை. அந்த வழிகாட்டுதல் தான் ஒளி..

-------


68.இயேசு வேறு பிதா வேறு என மூளை உள்ள எல்லோரும் புரிந்துகொள்வார்கள். ஆனால் கிறாஸ்தவர்களிலுள்ள ஒரு பிரிவினர் இயேசு தான் பிதா என்று வேறு கூறுகிறார்கள். அவர்களுக்கு பதிலாக இயேசுவும் பிதாவும் இரண்டு பேர் என இயேசு நேரடியாக சொல்வதாக யோவான் எழுதுகிறார்.



¹⁷ இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே.

¹⁸ "நான் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவனாயிருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறார் என்றார். (யோவான் 8:17-18)

------------"


69.நானே அவர் என இயேசு சொன்னதால் அவர் தன்னை கடவுளென வாதிட்டதாக மடத்தனமான வாதத்தை சிலன் வைப்பார்கள்!


²⁴ ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்.

²⁵ அதற்கு அவர்கள்: நீர் யார் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் ஆதிமுதலாய் உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர்தான்.

²⁶ உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்களுண்டு. என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன் என்றார்.

²⁷ பிதாவைக்குறித்துப் பேசினாரென்று அவர்கள் அறியாதிருந்தார்கள்.

²⁸ "ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தினபின்பு, நானே அவரென்றும், நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்."

(யோவான் 8:24-28)

தான் பிதாவால் அனுப்பப்பட்ட கிறிஸ்த்து என்பதை தான் அவ்வாறு சொல்கிறார் என படித்தாலே புரிந்துவிடும்.. ஒரு வசனத்தை மட்டும் பிடித்து மற்றதை விட்டுவிட்டு பார்த்தால் தப்பாக தான் தெரியும்!

நானே அவர் என்பது தெய்வீகமா?

----------------

70.இயேசுவை அனுப்பியவர் இயேசுவுடனே இருக்கிறாராம். அவருக்கு பிரியமானவைகளையே இயேசு செய்பவராம்!


²⁹ "என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்கவிடவில்லை என்றார்." (யோவான் 8:29)

இயேசு தேவனால் பக்கபலம் கொடுக்கப்பட்டதாக தான் இவை சொல்கின்றன.

----------



71.இயேசு தேவனிடத்தில் சத்தியத்தை கேட்ட மனுசன் என்றே இயேசு சொல்வதாக எழுதப்பட்டுள்ளது.


⁴⁰ "தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே." (யோவான் 8:40)

--------------


72.இயேசு சுயமாக வரவில்லை.. அவரே இயேசுவை அனுப்பினாராம்!


⁴² "இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்." (யோவான் 8:42)

சுயமாக வராதவர் தேவனா?

-----------+



 73.இயேசு தனக்கு மகிமையை தேடமாட்டாராம்! அதை தேடி நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் இருக்கிறாராம்!


⁵⁰ "நான் எனக்கு மகிமையைத் தேடுகிறதில்லை; அதைத் தேடி, நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் இருக்கிறார்." (யோவான் 8:50)


---------------.

74.இயேசு ஆப்ராகாமிற்கு முன்பே இருக்கிறாராம்!



⁵⁶ உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார்.

⁵⁷ "அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்."

⁵⁸ அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான் 8:56-58)

ஆப்ரகாம் இயேசுவுடைய நாளை கண்டு களிகூர்ந்தான் என கூறப்படுவதிலிருந்து, ஆப்ரகாம் தீர்க்கதரிசனத்தில் இதை கண்டார்.. அந்த படி இயேசு தேவனுடைய சித்தத்தில் ஆப்ரகாமுக்கு முன்பே இருக்கிறார் என்பதே இதன் கருத்து.


ஆனாலும் இயேசு ஆரம்பத்திலேயே தேவனுடைய குழந்தையாக மடியில் இருந்தார் என்பதே இப்புத்தகம் சொல்லும் கருத்து!

நானே என்பது தெய்வீகமா 

--------


75.இயேசு மூலம் பாரவையடைந்த குருடன் கூட இயேசுவை தேவன் என நம்பவில்லை!! மாறாக தீர்க்கதரிசி என்றே நம்பினான்.


¹⁷ "மறுபடியும் அவர்கள் குருடனை நோக்கி: உன் கண்களைத் திறந்தானே, அவனைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய் என்றார்கள். அதற்கு அவன்: அவர் தீர்க்கதரிசி என்றான்."(யோவான் 9:17)

-----------

 

76.இயேசுவை சுகப்படுத்தப்பட்ட குருடன் பணிந்து கொண்டாராம்!



³⁵ "அவனை அவர்கள் புறம்பே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைக் கண்டபோது: நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா என்றார்."

³⁶ "அதற்கு அவன்: ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாயிருக்கும்படிக்கு அவர் யார் என்றான்."

³⁷ "இயேசு அவனை நோக்கி: நீ அவரைக் கண்டிருக்கிறாய், உன்னுடனே, பேசுகிறவர் அவர்தான் என்றார்."

³⁸ "உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான்." (யோவான் 9:35-38)


இயேசுவை ஆண்டவராக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36

பணிந்துகொள்வது பைபிளில் வழமையாக காணக்கிடைக்கும்

.தாவீதையும் தேவையும் மக்கள் பணிந்து கொண்டதாக பைபிளில் காணமுடிகிறது.

“"அதின்பின்பு தாவீது சபை அனைத்தையும் நோக்கி: இப்போது உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்தரியுங்கள் என்றான்; அப்பொழுது சபையார் எல்லாரும் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்தரித்து, தலை குனிந்து கர்த்தரையும் ராஜாவையும் பணிந்துகொண்டு,"”

  — 1 நாளாகமம் 29:20 (TBSI)


---------------


77.இயேசு ஆடுகளுக்காக உயிரை கொடுப்பாராம்! அதே உயிரை பிதா திருப்பி கொடுப்பாராம்!


¹⁵ நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.


¹⁷ நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக்கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். (யோவான் 10:17-15,17)

உயிரை திருப்பி இவருக்கு கொடுக்கிறவர் தான் கடவுள்.. இவரல்ல!!

----------

78.இயேசுவுக்கு அந்த தன் உயிரை கொடுக்கவும் அதை திரும்ப எடுக்கவும் அதிகாரம் உண்டாம்!! இந்த கட்டளையை பிதா விடம் பெற்றுக்கொண்டாராம!



¹⁸ "ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்."(யோவான் 10:18)

பெற்றுக்கொண்டார் கடவுளல்ல!! கொடுத்தவரே கடவுள்!

-------------


79.இயேசுவும் பிதாவும் ஒரே நபர் என இயேசு சொன்னாரா? நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம என்பதன் அர்த்தம்:




“"நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதுமில்லை."”

 ²⁹ அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.

³⁰ நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.

இயேசுவின் கையிலிருந்து பிதா அவருக்கு கொடுத்த ஆடுகளை ஒருவராலும் பறித்துக்கொள்ள முடியாது. காரணம் பிதா எல்லோரிலும் பெரியவர். அவரது கையிலிருந்து யாருக்கும் பறிக்க இயலாது. . பிதா என்னை கைவிட்டுவிடவில்லை.. நாம் ஒன்றாக ஒற்றுமையாக தான் இருக்கிறோம் என்று தான் அதை படித்தால் புரிகிறது.


இது ஒற்றுமையை தான் குறிக்கிறது என்பதற்கு இதே யோவான் 17 இல் இயேசு சொன்னதாகவே எழுதப்பட்டுள்ளது.

²⁰ "நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும், வேண்டிக்கொள்ளுகிறேன்."

²¹ "அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்."

²² "நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்."

(யோவான் 17:20-22)

 அதாவது பிதா இயேசுவுடன் ஒற்றுமையாக தான் உள்ளார். அதனால் அவரது கையிலிருந்து ஆடுகளை பறிக்க முடியாது என்றே இங்கே கூறப்படுகிறது!

--------------------



80.கிறிஸ்தவர்களின் இன்னொரு தப்பான புரிதல்: இயேசு நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என சொன்னதற்காக யூதர்கள் தேவதூசனம் சொன்னதாக கூறி கல்லெறிந்தார்கள் என அதே அதிகாரத்தில் உள்ளது. ஆகவே இயேசு தெய்வீகத்தை இதில் வாதிட்டுள்ளார் என அடம்பிடிக்கிறார்கள்!

இது உண்மையா என பார்ப்போம்:




³³ "யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி, இவ்விதமாக தேவதூஷணஞ்சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்."

³⁴ இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா?

³⁵ "தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க,"

³⁶ "பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ்சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?"

(யோவான் 10:33-36)


இதை படித்தால், இயேசு தேவதூசனம் சொன்னதாக யூதர்கள் கூற காரணம் "ஒன்றாக இருக்கிறோம்" என்பதற்காக அல்ல! மாறாக தேவனை பிதா என்றும் தன்னை தேவனுடைய குமாரன் என்றும் சொன்னதை குறித்து தான் என தெளிவாக புரிகிறது! அதை தான் யோவான் 10:36 இல் இயேசு சொன்னதாகவே எழுதப்பட்டுள்ளது!


ஏன் தன்னை தேவகுமாரன் என சொல்வதையும் அங்கே கூறப்படுகிறது!!

அதாவது தேவன் அவரை அனுப்பியதாலும், தேவனால் பரிசுத்தம்பண்ணப்பட்டதாலுமே அவ்வாறு சொன்னதாக கூறப்பட்டுள்ளது!

இதே போல பிதா குமாரன் உறவு பைபிளில் சாதாரணமாக காணக்கிடைக்கும் .


உதாரணமாக சாலமோனை குறித்து, 

“"நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனுஷருடைய மிலாற்றினாலும் மனுபுத்திரருடைய அடிகளினாலும் தண்டிப்பேன்."”

  — 2 சாமுவேல் 7:14 


ஆனாலும் இதை எழுதியவர் இயேசு தேவனிடம் அவரது மடியில் ஏற்கனவே குழந்தையாக இருந்தார் என்ற நம்பிக்கை உடையவர் தான் (யோவான் 1:18) அதை குறித்து அதிகாரம் 1 இல் எழுதியுள்ளேன்.

----------------------------

81. இயேசுவினுள் பிதா இருந்தாரா? 


³⁷ "என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்கவேண்டியதில்லை."

³⁸ "செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார்." (யோவான் 10:37-38)

இயேசு மூலம் பிதா தான் அற்புதம் செய்தார்.. அதனால் தான் 10:38 இல் அந்த கிரியைகளை விசுவாசிக்க சொல்கிறார்.


மேலும் இயேசு மூலம் தேவன் தான் அற்புதம் செய்தார் என்பதே ஆரம்பகால சீடர்கள் ஆவி தூண்டி பேசியதாக கூறப்படுகிறது -அப்போஸ்தலர் 2:22

இதே போல இயேசுவும் சீடர்களில் இருப்பதற்கும், பிதா இயேசுவில் இருப்பதற்கும் இயேசு வேண்டுதல் செய்கிறதாக இதே புத்தகம் கூறுகிறது:

“"ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்."”

  — யோவான் 17:23 

பிதா இவரது உடலுக்குள் புகுந்துவிடவில்லை என்பதை இவை காட்டுகிறது! ஏனெனில் புகுந்துவிட்டால், இவர் பிதாவிடம் வேண்டவேண்டியதில்லை... காரணம் அவரே பிதாவாகிவிடுவார். மேலும் சீடர்களுக்குள்ளும் இயேசு புகுந்தார் என நம்பவேண்டிவரும்.. அப்படி பார்த்தால் அவர்களும் இயேசு என புரியவேண்டும்!!


----------------




82.இயேசுவை நம்பிய மார்த்தாள் கூட இயேசுவை கடவுளென நம்பவில்லை! மாறாக கடவுளிடம் இயேசு எதை கேட்டாலும் கடவுள் இயேசுவுக்கு கொடுப்பார் என்றே நம்பினாள்


²¹ "மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான்."

²² இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன் என்றாள். (யோவான் 11:21-22)


-----------------------

83.இயேசு தன்னை உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் என சொல்வது தெய்வீகமான?



²³ இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார்.

²⁴ அதற்கு மார்த்தாள்: உயிர்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.

²⁵ "இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;"

²⁶ உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.

²⁷ "அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்." (யோவான் 11:23-27)

தேவன் ஒன்றும் உயிர்த்தெழுதல் அல்ல!! காரணம் அவர் மரணிப்பவர் அல்ல!

இதை சொன்னபோது கூட, இயேசுவை கிறிஸ்த்து என்றே நம்பினாள்!! தேவன் என்று அல்ல (யோவான் 11:27)

மேலும் இயேசுவை கிறிஸ்துவாக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36 

-----------------------------.


84.இயேசு லாசருவை உயிர்ப்பித்ததுகூட தேவன் அவருக்கு செவிகொடுப்பதால் தான் .


 …  

⁴¹ "அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்."

⁴² நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள்நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார்.

⁴³ "இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்."(யோவான் 11:41-43)

சோ இது தெய்வீகம் அல்ல-!

-----------------------

.

85. இயேசு கர்த்தரின் நாமத்தில் வந்தார்


 …  

¹³ "குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள்." (யோவான் 12:13)

கர்த்தரின் நாமத்தில் தான் தீர்க்கதரிசிகள் வருவார்கள்.

தாவீது கூட தான் கர்த்தரின் நாமத்தில் வந்தேன் என்றான் என் எழுதப்பட்டுள்ளது. 1 சாமுவேல் 17:45

-------------------


86.இயேசுவிடம் விசுவாசமாயிருக்கிறவன் அவரை அனுப்பியவருக்கு விசுவாசமாக இருப்பவனாம். அதேபோல் இயேசை கண்டவன் அவரை அனுப்பினவரை கொண்டவனாய்!



⁴⁴ "அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான்."

⁴⁵ என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான்.(யோவான் 12:44-45)


-------

87.இயேசு சுயமாக பேசாமல், அவருக்கு பிதா கட்டளையிட்டவற்றையே பேசுகிறாராம்.. உபதேசிக்கிறாராம்!


⁴⁹ "நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்."

⁵⁰ அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.

(யோவான் 12:49-50)

இவை அவர் கடவுள் அல்ல என தெளிவாக சொல்கிறது!.


----------------------

88.இயேசு தன்னை ஆண்டவர் என சொன்னாராம்.


¹³ "நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்."

¹⁴ "ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்."(யோவான் 13:13-14)


இயேசுவை ஆண்டவராக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36

அதிகாரம் உள்ள நபரை ஆண்டவர் என அழைப்பர்.. மற்றபடி கடவுள் அல்ல!

தாவீதை அடிக்கடி ஆண்டவன் என அழைக்கப்பட்டதை சாமுவேல், நாளாகம புத்தகங்களில் காண கிடைக்கிறது. ஏற்கனவே எழுதியும் விட்டேன்!

----------------------



 89. அனுப்பினவரை விட அனுப்பப்பட்டவன் பெரியவனல்ல என சொல்லிவிட்டு, என்னை ஏற்பவன் என்னை அனுப்பியவரை ஏற்கிறார் என கூறி தன்னைவிட பிதா பெரியவர் என கூறுகிறார்.


¹⁶ "மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல."


 …  

²⁰ "நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்." (யோவான் 13:16,20)

---------------


90.இயேசு வழியும் சத்தியமுமாம்.


⁴ "நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார்."

⁵ "தோமா அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான்."

⁶ அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

(யோவான் 14:4-6)

பிதாவிடம் செல்வதற்கான வழியாகவே தன்னை காட்டுகிறார். அதாவது பிதாவிடம் போகவேண்டுமானால் இயேசு மூலமாக தான் போகவேண்டும் என்கிறார்.


இதன்மூலம் பிதா வேறு அவர் வேறு என்பதுடன், பிதா ஒருவரே மெய்யான தேவன்-யோவான் 17:3 என அவர் கூறியதாக எழுதவும் பட்டுள்ளது.

தேவன் எப்படி சத்தியமுள்ளவரோ, அதேபோல் சத்தியத்தை போதிக்க வருவோரும் சத்தியமானவரே.. அவர் தேவனல்ல!


------------------

91.இயேசுவை கண்டவன் பிதாவை கண்டவன் என்பது தெய்வீகத்தை வாதிடுவதா??


⁷ என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.

⁸ "பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்."

⁹ "அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?"

¹⁰ "நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்."

¹¹ நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.

(யோவான் 14:7-11)

இயேசு மூலம் காரியங்களை செய்தது பிதா என்பதால், தன்னை கண்டவன் பிதாவை கண்டவன் என கூறுகிறார். 

பிதா இயேசுவில் வாசமாயிருக்கிறார் என்பதை விளக்கும் வகையில் 14:23 உள்ளது.

²³ "இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்


மற்றபடி இயேசு தேவனிடம் சத்தியத்தை கேட்ட மனுசன்-யோவான் 8:40

-------------------------


92. இயேசு பிதாவிடம் வேண்டும் வராமலே உள்ளார்.

 …  

¹⁶ "நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்." (யோவான் 14:16)


 …  

--------


93.இயேசுவிடம் கேட்கும் வசனங்கள் பிதாவினுடையவை. இயேசுவினுடையவை அல்ல!


²⁴ என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது. (யோவான் 14:24)



 ------------------

94.பிதா இயேசுவிலும் பெரியவர்.


²⁸ "நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக்குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்."(யோவான் 14:28)

--------------


95.பிதா கட்டளையிட்டபடியே இயேசு செய்கிறாராம்.


³¹ "நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இவ்விடம்விட்டுப் போவோம் வாருங்கள் என்றார். " (யோவான் 14:31)

----------------



96.இயேசு திரிட்சை செடி.. தேவன் அதன் தோட்டக்காரன்


 அதாவது தேவனால் நடப்பட்ட செடியே இயேசு..

¹ "நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர்."

² "என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்." (யோவான் 15:1-2)

-----------------


97.பிதாவின் கற்பனைகளை கைக்கொள்வதால் இயேசு பிதாவின் அன்பில் நிலைத்திருக்கிறாராம்!

.

¹⁰ "நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்."

(யோவான் 15:10)

------------


98.இயேசு பிதாவிடம் கேள்விப்பட்டவற்றை அறிவிப்பவரே.

 …  

¹⁵ "இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்."

(யோவான் 15:15)



----------------


99.யூதர்கள் இயேசுவையும் பிராவையும் கண்டும் பகைத்தார்களாம்.



²³ என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான்.

²⁴ "வேறொருவரும் செய்யாத கிரியைகளை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தேனானால், அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் கண்டும் பகைத்துமிருக்கிறார்கள்."(யோவான் 15:23-24)



இயேசு மூலம் தேவனே அற்புதம் செய்தார் என்பதாலும் தேவனது கட்டளைகளையே இயேசு போதித்ததாலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது

-----------





 100. பிதாவினுடையவை யாவும் இயேசுவுடையதாம். இயேசு பிதாவின் மடியிலிருந்த அவரது வாரிசு என்பதே இந்நூலாசிரியரின் கருத்து!


¹⁵ பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன். (யோவான் 16:15)

 … -----------



101. பிதா ஒருவரே மெய்யான தேவன் என்பதையே இயேசு பிதாவிடம் சொல்கிறார்.


³ ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். (யோவான் 17:3)

பிதா மட்டுமே மெய்யான தேவனாக வானத்தில் இருக்க, இயேசு அவரால் அனுப்பபட்டுமிருக்க இயேசு எப்படி தேவனாவார்?

------------------


102.உலக தோற்றம் முன்பே இயேசு இருந்தாரா?



²⁴ "பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்கவிரும்புகிறேன்.". (யோவான் 17:24)



இயேசு தேவனிடம் உலக தோற்றத்தின் முன்பே இருந்தார் என்பதே யோவான் கூறவரும் கருத்து. ஆனாலும் இயேசு நேரடியாக இருக்கவில்லை என்பதே உண்மை.. இல்லாத ஒன்று உருவாக முன்பே அதை நேசிக்க அன்பு காட்ட இறைவனுக்கு இயலும்!

-------------



103.தேவன் தான் பிதா. அவர் இயேசுவுக்கும் தேவன்.. ஏனையோருக்கும் பிதா!



¹⁷ "இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்." (யோவான் 20:17)


-------------

104. தோமா இயேசுவை என் தேவனே என் ஆண்டவனே என சொன்னாராம்.



²⁷ "பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்."

²⁸ தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.(யோவான் 20:27-28)

இயேசுவை ஆண்டவராக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36

மேலும் தேவன் என்பது அதிகாரம் கொடுக்கப்பட்டவர்களை தேவ வசனத்தை பெற்றுக்கொண்டவர்களை தேவன் என அழைப்பது பைபிளில் சாதாரணமாக காணக்கிடைக்கும்.


உதாரணமாக இயேசு கூட, தேவ வசனத்தை பெற்றுக்கொண்டவர்கள் தேவர்கள் என அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என யோவான் 10:35 இல் சொல்கிறார். அதேபோல ராஜாவை குறித்து தேவனே என ஊழியகாரனால் அழைக்கப்பட்டிருக்கிறான்.



⁶ "தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உமது ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது."

⁷ "நீர் நீதியை விரும்பி, அக்கிர

மத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்ததைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்."


 …  



¹⁶ உமது பிதாக்களுக்குப் பதிலாக உமது குமாரர் இருப்பார்கள்; அவர்களைப் பூமியெங்கும் பிரபுக்களாக வைப்பீர்.(சங்கீதம் 45:6-7,16)


இதுபோன்றே தோமா அழைத்திருக்கிறார்.


ஆனால் இயேசு , பிதா ஒருவரே மெய்யான தேவன் என்கிறார்-யோவான் 17:3


இதை எழுதிய யோவான் கூட, இவைற்றையெல்லாம் இயேசுவை கிறிஸ்த்து என அறியவேண்டும் என்பதற்காக எழுதியதாகவே சொல்கிறான்:


³¹ "இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது. " (யோவான் 20:31)

----------------

அப்போஸ்தலர் நடபடிகளின்படி இயேசு  கடவுளல்ல



புதன், 9 மார்ச், 2022

யோவானின் படி இயேசு ஏன் கடவுளல்ல பகுதி 1

 லூக்காவின்படி இயேசு  கடவுளல்ல

 யோவானின் படி இயேசு ஏன் கடவுளல்ல?

¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯ ¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯


யோவான் சுவிசேஷம் மற்ற மூன்று சுவிசேஷங்களைவிட வித்தியாசமானது.


இது இயேசுவை பற்றி கூறும் கருத்து என்னவென்றால், இயேசு பூமியில் பிறக்க முன்பே வார்த்தையாக அவர் தேவனிடம் இருந்தார். அந்த வார்த்தை மூலமே சகலதையும் தேவன் படைத்தார். அந்த வார்த்தை மனிதனாக மாறியது. ஆனாலும் ஒரே மெய்யான தேவன் பிதா மட்டும் தான். அந்த பிதாவையே ஆவியோடு தொழ வேண்டும். அந்த பிதா தான் இயேசுவை (வார்த்தையை) பூமிக்கு அனுப்பினார். அந்த வார்த்தை முன்பே ஒரு நபராக இருந்தது. ஆனாலும் ஒரே மெய்யான தேவனாக அவர் இருக்கவில்லை . மெய்யான தேவன் இவருக்கு அதிகாரத்தை கொடுத்துவிட்டு ஓரமாய் இருக்கிறார் என்பதே சுருக்கம்!


(யோவானுடைய கருத்து தவறானது என்றும் இடையிடையே இதில் பதிகிறேன்.)



1.ஆதியிலே வார்த்தை இருந்ததாம். அது தேவனாயிருந்ததாம். அவர் மூலமே சகலதும் உண்டானதாம்.

¹ "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்து, அந்த வார்த்தை தேவனாயிருந்தது."

² அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.

³ சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. (யோவான் 1:1-3)


மை கமெண்ட்: 


இது யோவானின் அறிவீனம் ஆகும்.

வார்த்தை என்பது முதலில் ஒரு நபரே கிடையாது. அது "ஆகக்கடவது" என தேவன் மொழிந்த கட்டளை ஆகும். அதன் மூலமே சகலதும் உண்டாக்கப்பட்டது.


³ தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று.

⁶ "பின்பு தேவன்; ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்டவது என்றும் சொன்னார்."

⁹ "பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று."

¹¹ "அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று."

¹⁴ "பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்."

¹⁵ அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

²⁰ "பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்."

²⁴ "பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று."

(ஆதியாகமம் 1:3,6,9,11,14,15,20,24)

இதை சுருக்கமாக சங்கீத புத்தகத்தில் இவ்வாறு காணலாம்:

⁸ பூமியெல்லாம் கர்த்தருக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிகளெல்லாம் அவருக்கு அஞ்சியிருப்பதாக.

⁹ "அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்."(சங்கீதம் 33:8-9)

“அவைகள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது.”

  — சங்கீதம் 148:5

அதாவது தேவன் ஒவ்வொரு விசயத்தையும் தனித்தனியாக கட்டளையிட அவைகள் உண்டாக்கப்பட்டன.

ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியாகவே கட்டளையிட்டு படைத்திருக்கிறார்

இந்த கட்டளைகளை வார்த்தை என்றும் சொல்லலாம். ஆனால் அது நபர் அல்ல!

 இறைவன் இட்ட கட்டளை ஆகும்.

இயேசுவை குறித்து வார்த்தை மாம்சமானார் என்கிறார். (1:14). 

இதில் இயேசு மாம்சமாக முன்பு, இயேசு என்ற பொருளே இருக்கவில்லை என தெளிவாகிறது. ஆனாலும்

ஃபைலோ எனும் யூதர் , தேவனுக்கு வார்த்தை என்று ஒரே மகன் இருந்தார் என்றும், அவர் மூலமே சகலமும் படைக்கப்பட்டது என்றும், கடவுளுக்கும் படைப்புக்கும் இணைக்கும் பாலமாக அவர் செயற்படுகிறார் என்று கூறினார். 

அதை தான் யோவானும் சொல்கிறார்

ஆனாலும் ஒரே மெய்யான தேவன் பிதா (17:3) என்றும், பிதாவையே ஆவியுடன் தொழ வேண்டும் என்றும் (4:23_24), அந்த பிதாவிடம் இயேசுவின் பெயரால் வேண்டுதல் செய்யவேண்டும் என்றும், அந்த பிதா இயேசுவுக்கும் தேவனாக இருக்கிறார் என்றும் (20:17) இயேசு சொன்னதாக இந்த புத்தகம் கூறுகிறது

அடுத்து, அவர் ஆதியிலே தேவனோடு இருந்தார் என்கிறார் யோவான். (1:2).

இந்த வார்த்தை தேவனோடு இருந்ததாம்..

 .. இங்கே தெளிவாக இந்த வார்த்தை தேவனோடிருந்தது என கூறி, தேவன் என்பவர் ஏற்கனவே உள்ளார் என தெளிவாக கூறுகிறார்.. 

அந்த தேவன் யார் என இயேசு கூறியதாக இவர் எழுதியது என்னவென்றால்,

பிதா ஒருவரே மெய்யான தேவன் என்று -யோவான் 17:3

இங்கே வார்த்தை தேவனாயிருந்தது என்பது இந்த ஒரே மெய்யான தேவன் என்பதல்ல! அந்த உண்மையான தேவனோடு அது இருந்தது என்று சொல்கிறார்.

ஏனெனில் தேவனுடைய வார்த்தைகளை பெற்றுக்கொண்டவர்களையே தேவர்கள் என சொல்லியிருக்கிறீர்கள் (யோவான் 10:35), இந்த வார்த்தையை தேவன் என்று சொல்வதில் ஆச்சரியம் இல்லையே!

ஆகவே, இதன்படி, ஒரே மெய்யான தேவன் பிதா மட்டுமே.. (யோவான் 17:3), அவர் இடும் கட்டளைகளும் தெய்வீகமானவை.. ஆனால் அது தனியான வேறொரு நபரோ தேவனோ அல்ல! அந்த வார்த்தையை ஃபைலோவின் வார்த்தையுடன் இயேசுவை கன்ஃபீஸாகி எழுதியுள்ளார்.

----------------------------

2.மேலும் தேவனுடைய வார்த்தையில் ஜீவனுண்டு. அவை வெளிச்சமானவை!


⁴ "அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது."

⁵ அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.

⁶ "தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான்."

⁷ அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான்.

⁸ "அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்."

⁹ உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.

(யோவான் 1:4-9)


“"உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது."”

  — Psalms 119:105 (TBSI)“


"உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்."”

  — Psalms 119:130 (TBSI)



இதே யோவான் தேவனது கட்டளை நித்தியஜீவனாயிருக்கிறது என இயேசு சொன்னதாக யோவான் 12:50 கூறுகிறது.

தேவனது வார்த்தையில் ஒளியும் நித்தியஜீவனும் இருப்பதால், இயேசுவை தேவனது மொத்த வார்த்தை என கருதி இவ்வாறு எழுதியுள்ளார். காரணம் ஃபைலோவால் ஈர்க்கப்பட்டு இவ்வாறு எழுதியுள்ளார்.


------------------




3.இயேசு பூமியில் இருந்ததை குறித்து, அவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாய் உண்டாகிற்று என்கிறார்.



¹⁰ "அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை."

¹¹ "அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை."

(யோவான் 1:10-11)



ஆனால் தேவன் கட்டளை மூலமே சகலமும் படைக்கப்பட்டது.  இயேசுவை குமாரனாகிய வார்த்தை என நம்பி இவ்வாறு எழுதியுள்ளார்



ஆனால் இயேசுவோ, தேவன் தான் உலகத்தை படைத்தார் என்றார்.மாற்கு 13:19. 



தேவன் ஒருவரே.. அவரை தவிர வேறொரு தேவன் இல்லை வேதபாரகன் ஏகத்துவத்தை கூறியபோது இயேசு அதை சரிகண்டார். மாற்கு 12:32-34



இயேசு அந்த ஒரே தேவன் பிதா தான் என்கிறார்-யோவான் 17:3. அவரே இயேசுவுக்கும் சீடர்களுக்கும் தேவன் என்கிறார் இயேசு-யோவான் 20:17


இங்கே யோவான் தன் ஞானத்தை காட்ட முற்பட்டு தவறாக சித்தரிக்கிறார். அதாவது வார்த்தையை (ஆக கடவது) என்ற கட்டளையை இயேசு என கூறி அதற்கு தனி கதையே கட்டிவிட்டார்.


-------------------



4.இயேசுவை ஏற்றுக்கொண்டவர்களை தேவனுடைய பிள்ளைகளாகும்படி அதிகாரம் கொடுத்தாராம்! அவர்களெல்லாம் தேவனால் பிறந்தவர்களாம்



¹² "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்."

¹³ "அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்."

(யோவான் 1:12-13)




இயேசு தேவனை பிதா என்று அழைத்ததாகவும் மற்றோருக்கும் அவர் பிதா என சொன்னதாலும் , இயேசு அவர்களை தேவனுக்கு பிள்ளையாக அதிகாரம் கொடுத்ததாக நினைத்து விட்டார் ஆசிரியர்.




பழைய ஏற்பாட்டில் மக்களை இரண்டு விதமாக அழைக்கப்பட்டுள்ளது.



1.தேவனுடைய பிள்ளை/குமாரன். (உபாகமம் 14:1)


"நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்." உபா 14:1


தேவனுக்கு சித்தமில்லாததை செய்தால், அவர்களின் பிள்ளைகள் அல்லவாம்!


"அவர்களோ தங்களைக் கெடுத்துக் கொண்டார்கள். அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல.-உபாகமம் 32:5


2.தேவனுடைய ஒய்ஃப் (மனைவி). 



ஜெரேமியா 3 (TBSI)

¯¯¯¯¯¯¯¯¯

⁸ "சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் விபசாரம்பண்ணின முகாந்தரங்கள் எல்லாவற்றினிமித்தமும் நான் அவளை அனுப்பிவிட்டு, அவளுடைய தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுத்தபோதும், அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி பயப்படாமல்; இவளும் போய் வேசித்தனம்பண்ணினாள், இதை நான் கண்டேன்."

⁹ பிரசித்தமான அவளுடைய வேசித்தனத்தினாலே தேசம் தீட்டுப்பட்டுப்போயிற்று; கல்லோடும் மரத்தோடும் விபசாரம்பண்ணிக்கொண்டிருந்தாள் என்றார்.

¹⁰ "இவைகளையெல்லாம் கண்டும், யூதா என்கிற அவளுடைய சகோதரியாகிய துரோகி, கள்ளத்தனமாய்த் திரும்பினாளேயன்றி, முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்பவில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்."

¹¹ பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: யூதா என்கிற துரோகியைப்பார்க்கிலும் சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் தன்னை நீதியுள்ளவளாக்கினாள்.


“"உங்கள் தாயோடே வழக்காடுங்கள்; அவள் எனக்கு மனைவியுமல்ல, நான் அவளுக்குப் புருஷனுமல்ல; அவள் தன் வேசித்தனங்களைத் தன் முகத்தினின்றும், தன் விபசாரங்களைத் தன் ஸ்தனங்களின் நடுவினின்றும் விலக்கிப்போடக்கடவள்."”

  — Hosea 2:2 (TBSI)


இவையெல்லாம் உவமைகள்.. இதே போல தான் இயேசு தேவனை அழைத்ததும்.. அழைக்க கற்றுக்கொடுத்ததும்.

இதனால் இவர்கள் தேவனது தத்து பிள்ளைகள் அல்ல! (புதிய ஏற்பாடு தத்துப்பிள்ளையாக தான் சித்தரிக்கிறது)

----------------




5.அந்த வார்த்தை மாம்சமானதாம்! அதாவது மனிதனானதாம்!





¹⁴ "அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது."(யோவான் 1:14)




வார்த்தை என்பது நபரல்ல.. வார்த்தை மாம்சமாக முன்பு, இயேசு என்ற ஒன்றே இருக்கவில்லை!! 

அடுத்து தேவனது வார்த்தை என்பது அவர் பேசிய கட்டளை.. அது எப்படி தேவனுக்கு பிள்ளை ஆகும்?? அதுவும் ஒரே பிள்ளையாக ஆகும்??

வார்த்தை எனும் குமாரன் மனிதனாக பிறந்தார் என்று கூறுகிறார். 

ஆனாலும் மெய்யான தேவனும் இயேசுவுக்கே தேவனும் பிதா தான்-யோவான் 17:3 & 20:17



----------





6.யோவான் இயேசுவுக்கு முன்பே வந்தாலும், இயேசு அவருக்கு முன்பே இருந்தாராம்!




¹⁵ "யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்."

(யோவான் 1:15)


வார்த்தை மாம்சமாக முன்பு இயேசு இருக்கவே இல்லையே! பிறகு எப்படி யோவானுக்கு முன்பே அவர் இருந்திருப்பார்??


 ஃபைலோ கூறியவிதமாக , வார்த்தை எனும் குமாரன் இருந்ததாக நம்பினார். அவரே இயேசு என நம்பியதால் இவ்வாறு யோவான் ஸ்நானன் சொன்னதாக எழுதியுள்ளார்

----





7.தேவனை ஒருவரும் கண்டதில்லையாம்! பிதாவின் மடியிலிருக்கிற குமாரன் தான் அவரை (தேவனை) வெளிப்படுத்தினாராம்!




¹⁸ "தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்."

(யோவான் 1:18)




இயேசுவை தேவன் தன் மடியில் வைத்து கொஞ்சிக்கொண்டிருந்தாரா?? இயேசு குழந்தையாக பிறந்ததால், தேவனிடத்தில் இயேசு குழந்தையாக மடியில் உக்கார்ந்து கொண்டிருந்தார் என நினைத்திருக்கிறார் இதன் ஆசிரியர்.. 


முதலில் வார்த்தை மாம்சமாக முன்பு இயேசுவே இருக்கவில்லையே.. தன் கட்டளையை மடியில் வைத்து விளையாடினாரா?? 

ஃபைலோ கூறியவிதமாக , வார்த்தை எனும் குமாரன் தேவனுக்கு இருந்ததாக நம்பினார்

இதற்கு பழைய ஏற்பாட்டில் எவ்வித ஆதாரமும் இல்லை



-------------------&





8.யோவான் தன்னை எலியா அல்ல என்றாராம்..


²¹ அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள். அதற்கும்: அல்ல என்றான். (யோவான் 1:21)



ஆனால் இயேசுவோ, இந்த யோவான் தான் எலியா என தவறாக கூறிவிட்டார் போலும்.. மூன்று சுவிசேஷங்களும் அவரை எலியா என்கின்றன.. (மத்தேயு 11:14)


இவர் எலியா அல்ல என தெரியாமல், இயேசு இவரை எலியா என்று, இயேசு இவரை பற்றி அறிந்திருக்கவில்லை எனக் காட்டுகிறது.

-------------



9.யோவான் கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணுபவராம்!



²² "அவர்கள் பின்னும் அவனை நோக்கி: நீர் யார்? எங்களை அனுப்பியவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படி, உம்மைக்குறித்து என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டார்கள்."


²³ "அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ்வைப்பண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன்."

(யோவான் 1:22-23)


இதிலுள்ள கர்த்தர் என்பது இயேசுவை குறிக்கும் என வாதிட்டாலும், இதே போல ஏசாயா தீர்க்கதரிசி யாவே என அழைக்கப்படிருக்கிறார்.-ஏசாயா 7:10



தேவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் யாவே என அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆதி 18 & 19 32:25-30


தீர்க்கதரிசிகள் கர்த்தரின் நாமத்தில் வருவார்கள்.


தாவீது ராஜா “நான் கர்த்தரின் (யாவேயின்) நாமத்தில் உன்னிடத்தில் வருகிறேன் ” என சொன்னார்- 1 சாமுவேல் 17:45



தீர்க்கதரிசி காத் கர்த்தரின் நாமத்தில் பேசினான்- 1 நாளாகமம் 21:19


இவ்வாறே இயேசுவும் தீர்க்கதரிசி என்பதால் , கர்த்தரின் நாமத்தில் வருவதால் அவ்வாறு கூறப்படுகிறது.


இயேசு சுயமாக எதுவும் செய்துவிடவில்லை.


மாறாக தேவன் தான் இயேசு மூலமாக அற்புதம் செய்தார்- அப்போஸ்தலர் 2:22


இதை மற்ற சுவிசேசங்களின் கீழ் எழுதியுள்ளேன்

 -------------------------




10.இயேசு யோவானுக்கு பின் இயேசு வந்தாலும் , இயேசு யோவானைவிட மிக மிக மேன்மையானவர் என யோவான் சொன்னாராம்.



²⁷ அவர் எனக்குப் பின்வந்தும் என்னிலும் மேன்மையுள்ளவர்; அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல என்றான். (யோவான் 1:27)


ஆனால் இயேசுவோ, ஸ்திரீயிடம் பிறந்தவர்களில் யோவானைவிட பெரியவன் எவரும் எழும்பவில்லை என்கிறார்-மத்தேயு 11:11



இயேசுவும் ஸ்திரீயிடம் பிறந்தவர்.... அப்படிப்பார்த்தால் இயேசுவின் வார்த்தைப் படி யோவான் மிக சிறந்தவர்.. 


யோவானின் வார்த்தைப் படி இயேசுவே மிக சிறந்தவர்..  காரணம் இவரது நம்பிக்கையாகவும, இயேசு வார்த்தை எனும் குமாரனின் அவதாரம்

சரி இருந்துட்டு போகட்டும்!

-------


..

11.யோவான் இயேசுவை பார்த்து தேவ ஆட்டுக்குட்டி என்றானாம்.. 


அதாவது தேவனுடைய ஆட்டுக்குட்டி என்றானாம். (Lamb of God.. not God lamb)


²⁹ "மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி." (யோவான் 1:29 & 36)


தேவனுடைய ஆடு எப்படி அதே தேவனாக ஆகும்??

ஆக இயேசு தேவனாக ஆக இயலாது!

பாவத்தை சுமக்க தேவனுடைய ஆடு தான் சரி என்றால், தேவன் ஒரு ஒழுங்கான ஆட்டையே இயேசுவோடு அனுப்பியிருக்கலாமே!! ஏன் மனிதனை பலி கொடுத்து, அந்த மனிதனை ஆடு என பெயரிடுவதற்கு பதிலாக,


ஆட்டை பலிகொடுத்து, அதை மனிதன் என்றோ தேவன் என்றோ பெயரிட்டிருக்கலாம்!!

----------



12.இயேசு யோவானுக்கு முன்பே இருந்தாராம்.



³⁰ "எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடி என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர்தான்."



திரும்பவும் வார்த்தையை இயேசுவோடு கன்ஃபீஸாக்கி, அதை யோவான் சொன்னதாக இந்த யோவான் எழுதியுள்ளார்..




----------




13.பரிசுத்த ஆவியை இயேசு உடையவரல்ல!! மாறாக அவர் வளர்ந்த பின்பு தான் பரிசுத்த ஆவியானவர் அவர் மேல் இறங்கினார்.



³² "பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன்."


³³ "நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார்."

(யோவான் 1:32-33)


----



14.இயேசு தேவனுடைய குமாரன் என யோவான் சாட்சி கொடுத்தாராம்!


³⁴ "அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சிகொடுத்துவருகிறேன் என்றான்." (யோவான் 1:34)


தேவனுடைய குமாரன் ஒன்றும் தேவனல்ல!! 


மாறாக பிதா மட்டுமே ஒரே மெய்யான தேவன்- என இயேசு சொன்னதாக யோவான் சொல்கிறார்.17:3



தேவனுடைய குமாரன் என பலரும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்..



இஸ்ரேலை என் குமாரன் என தேவன் சொன்னதாக எழுதப்பட்டுள்ளது-யாத்திராகமம் 4:22, ஓசியா 11:1-2.. 


இதே போல பழைய ஏற்பாட்டில் நிறையவே காணலாம்!.


இயேசு குழந்தையாக பிறந்தார் என்பதால், தேவனிடம் அவர் ஒரு குழந்தையாக மடியில் இருந்தார் என இவர் நம்பியே இதை யோவான் ஸ்நானனின் வாயில் போட்டு இட்டுக்கட்டி யுள்ளார்..  


!

மேலும் இயேசு தன்னை தேவகுமாரன் என சொன்னதாக வருவதில் கூட,


பிதா அவரை அனுப்பியதாலும் பரிசுத்தம் பண்ணியதாலும் தான் என்கிறார்.. யோவான் 10:34-36




---------



15.இயேசுவை பார்த்த சீடன் அந்திரேயா, இயேசுவை தேவன் என்றோ தேவனது அவதாரம் என்றோ கூறவில்லை! மாறாக மெசியா என்றே சொன்னார்


⁴¹ அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்.

(யோவான் 1:41)


இயேசுவை மெசியாவாக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36


-----------------


16.இயேசு சீமோனை அவன் வர முன்பே அறிந்திருந்தாராம்.


⁴² "பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம்." யோவான் 1:42


இவ்வாறு தீர்க்கதரிசிகள் அறிந்திருப்பர் என்பதே அக்கால மக்களின் நம்பிக்கையும்கூட.. லூக்கா 7:39.


இவன் தீர்க்கதரிசியாக இருந்தால், தம்மை தொடுகிற ஸ்திரீ இன்னாள் என்றும் இப்படிப்பட்டவள் என்றும் அறிந்திருப்பார்”-லூக்கா 7:39

----




17.பிலிப்பு என்ற சீடனோ, இயேசுவை யோசேப்பின் குமாரன் என்றானாம்


⁴⁵ பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான். யோவான் 1:45



இதன்படி பார்த்தால், அக்கால மக்கள் இயேசுவை யோசேப்புக்கு பிறந்தவர் என தான் நம்பியுள்ளார்கள் என்பது போல சித்தரிக்கப்படுகிறது.

அப்படி இருப்பின், கன்னிப் பிறப்பு மரியாளுக்கும் யோசேப்புக்கும் மட்டுமான அடையாளமோ??

ஆனால் மத்தேயு கூறும் இம்மானுவேல் தீர்க்கதரிசனமோ , மக்களுக்கு கொடுக்கப்படும் அடையாளம்... இங்கே மக்கள் அறிந்திருக்கவே இல்லையே..


அடுத்து, யோசேப்பின் குமாரன் எப்படி தேவனாவார்??

--------



18.நாத்தான்வேலையும் இயேசு அறிந்திருந்தாராம்.. 



⁴⁷ "இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்."

⁴⁸ "அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்குமுன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார்."

(யோவான் 1: 47-48)



தீர்க்கதரிசிகள் இப்படி அறிந்திருப்பார்கள் என்பதே அக்கால மக்களின் நம்பிக்கையும்கூட.. லூக்கா 7:39 (குறிப்பு 16)


----




19.நாத்தான்வேலும் இயேசுவை தேவனுடைய குமாரன் என்றாராம்



⁴⁹ "அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்." (யோவான் 1:49)



இதற்கு குறிப்பு 14 இல் கூறப்பட்டுவிட்டது.

ஆனால் நாத்தான்வேல் சொன்னதுபோல் அவர் ராஜாவாக ஆகவில்லை.. 


இனி ஆகுவார் என பார்த்தால் கூட, அது இஸ்ரேலின் ராஜாவாக தான் ஆகுவார்..

----




20.வானம் திறந்து தேவதூதர்கள் இயேசுவிடம் ஏறுவதை யும் இறங்குவதையும் அதுமுதல் காண்பார்கள் என்றாராம் இயேசு..



⁵⁰ இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார்.



⁵¹ "பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் .என்றார். " (யோவான் 1:51-52)



ஆனால் கடைசிவரை யாரும் கண்டதாக இல்லை!! ஒருவேளை நிறைவேறாத தீர்க்கதரிசனமோ?


மேலும் இங்கே தன்னை மனுஷ குமாரன் என கூறி, தேவனல்ல.. மனிதனுக்கு பிறந்தவனே என நிரூபித்தார். தானீயேல் கூறும் மனுசகுமாரனும் அதிகாரம் கொடுக்கப்பட்டவரே-தானி7:14-15

---------------------------




21.இயேசு முதலாவதாக செய்த அற்புதம் தண்ணீரை ஒய்னாக மாற்றியது.



¹¹ "இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்."


இதன் மூலம் இயேசு தம் மகிமையை வெளிப்படுத்தினாராம்!


ஆனால் இயேசு மூலம் அற்புதம் செய்தது தேவன் தான்.-அப்போஸ்தலர் 2:22


இயேசு கூட, தான் சுயமாக எதுவும் செய்வதில்லை என கூறியுள்ளார்-யோவான் 5:30


---


22.இயேசுவுக்கு தாயும் சகோதரர்களும் உண்டு.


¹² "அதன் பின்பு, அவரும் அவருடைய தாயாரும் அவருடைய சகோதரரும் அவருடைய சீஷரும் கப்பர்நகூமுக்குப்போய், அங்கே சில நாள் தங்கினார்கள்."

(யோவான் 2:12) 


ஒரு பெண் பெற்றெடுத்த குழந்தை இறைவனது படைப்பு மட்டுமே!!

----

 


23.இயேசு ஆலயத்தை இடியுங்கள்.. மூன்று நாளையில் எழுப்புவேன் என்றாராம். அது அவரது உடலை தான் குறிக்குமாம்!



¹⁸ "அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீர் இவைகளைச் செய்கிறீரே, இதற்கு என்ன அடையாளத்தை எங்களுக்குக் காண்பிக்கிறீர் என்று கேட்டார்கள்."


¹⁹ இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள்; மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார்.


²⁰ "அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம் சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள்."


²¹ அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார்.


²² "அவர் இப்படிச் சொன்னதை அவர் மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள்." (யோவான் 2:18-22)



ஆனால் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பியதே தேவன் தான் என்று சீடர்கள் சொன்னதாக எழுதியுள்ளார்கள்.அப்போஸ்தலர் 2:24.


இங்கே இவர் தான் தன் ஆலயமான உடலை இடித்துப் போடுங்கள் என சொன்னதாக எழுதிவிட்டு,

அந்த ஆலயத்தை இடிக்க முற்படுவோரை சாத்தானின் பிள்ளைகள் என்கிறார்.-யோவான் 8:40-44



பிறகு அந்த ஆலயமான உடலை இடிக்க ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவம் உண்டு என்கிறார்-யோவான் 19:11


இறைவன் சொன்னதையே மறந்துவிட்டு இப்படி பேசுவாரா??


குறிப்பாக யோவான் 8:40 இல் தன்னைக் குறித்து, தேவனிடம் சத்தியத்தை கேட்ட மனிதன் என்கிறார்... சோ கடவுளல்ல!


----


24.இயேசு செய்த அற்புதங்களை பார்த்து மக்கள் அவருடைய நாமத்தில் விசுவாசம் வைத்தார்களாம்.. ஆனாலும் அவர்களை பற்றி இயேசுவுக்கு தெரிந்திருந்தால், யாரையும் அவர் நம்பி இறங்கவில்லையாம்


²³ "பஸ்கா பண்டிகையிலே அவர் எருசலேமிலிருக்கையில், அவர் செய்த அற்புதங்களை அநேகர் கண்டு, அவருடைய நாமத்தில் விசுவாசம் வைத்தார்கள்."


²⁴ "அப்படியிருந்தும், இயேசு எல்லாரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பி இணங்கவில்லை."

²⁵ "மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை. " (யோவான் 2:23-25)


-முதலில் இயேசு சுயமாக எதுவும் செய்யவில்லை-யோவான் 5:30


இயேசு மூலம் தேவன் தான் அற்புதம் செய்தார்-அப்போஸ்தலர் 2:22


-அடுத்து, மனுஷருடைய உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தாராம்.

தீர்க்கதரிசிகள் இவ்வாறு அறிந்திருப்பார்கள் என்பதே அக்கால மக்களின் நம்பிக்கையும்கூட.


சமாரியப்பெண்ணுக்கு கணவன் இருந்த கதையை இயேசு சரியாக சொன்னபோது, அவளும் அவரை தீர்க்கதரிசி என்றே சொன்னாள். யோவான் 4:17-19

சோ இது தீர்க்கதரிசி என்பதற்கு ஆதாரமாக உள்ளது..

--------


.


25.இயேசுவை தவிர வேறு யாரும் பரலோகத்துக்கு ஏறினதில்லைனு இயேசு சொன்னாராம்!


¹³ பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.(யோவான் 3:13)


ஆனால் எலியா வானத்துக்கு ஏறிப்போனதாக 2 இராஜாக்கள் 2:10-11 சொல்கிறது.


இதே எலியா இயேசுவை சந்திக்க மோசேயுடன் இறங்கி வந்ததாக லூக்கா குறிப்பிடுகிறார்- லூக்கா 9:30


இதை இயேசு அறியாமல் சொல்லிவிட்டாரா?? 


இயேசு வானத்திலிருந்து இறங்கி வந்த வார்த்தை என்று நம்பியதாலும், வார்த்தை குழந்தையாக தேவனிடம் இருந்ததாக நம்பியதாலும் இயேசு பெயரில் இவ்வாறு எழுதியுள்ளார்.


ஆனால் ஒரே மெய்யான தேவனாக பிதாவே உள்ளதாக இயேசு சொன்னதாகவும் எழுதியுள்ளார்-17:3

--------




26.தேவனுக்கு ஒரே பேறான குமாரனாம் இயேசு


 ¹⁶ "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்."(யோவான் 3:16)


ஆனால் பழைய ஏற்பாட்டில் நிறைய தேவகுமாரர்கள் உள்ளனர்.


உதாரணமாக இஸ்ரேலை தன் குமாரன் என சொன்னதாக யாத்திராகமம் 4:22, ஓசியா 11:1-2



இயேசு தன்னை தேவனது ஒரே குமாரன் என சொல்லாமல்,, தேவனால் அனுப்பப்பட்டதாலும், பரிசுத்தம்பண்ணப்பட்டதாலுமே தன்னை தேவகுமாரன் என சொன்னதாக இதே யோவானே எழுதுகிறார்.யோவான் 10:34-36



இயேசேவை ஒரேபேறான குமாரன் என இவர்கள் கருத காரணம், இயேசு குழந்தையாக பிறக்க முன்பு, தேவனது மடியில் குமாரனாக குழந்தையாக இருந்தார் என நம்பியதால் ஆகும்.


மேலும் பழைய ஏற்பாட்டில் தேவகுமாரன் என வருவதெல்லாம் இயேசுவை குறிக்கும் என நம்பியதாலும் ஆகும்.



உதாரணமாக , தாவீதை குமாரன் என்றும், இன்று உம்மை ஜனிப்பித்தேன் என்றும் சங்கீதம் 2;7 கூறுவதை இயேசுவை குறிப்பதாகவும், சொலமோனை அவன் எனக்கு குமாரனாக இருப்பான். நான் அவனுக்குப் பிதாவாக இருப்பேன் என சொன்னதாக 2 சாமுவேல் 7:14-16 இல் கூறப்பட்டதை இயேசுவையே குறிப்பதாக எபிரேயர் 1 இல் எழுதப்பட்டுள்ளது.


இப்படி எல்லாத்தையும் தப்பு தப்பாகவே புரிந்ததால் இவ்வாறு எழுதியிருக்கிறார் யோவான்!

--------



27.இயேசு பரலோகத்தில் இருந்து வந்ததாக யோவான் சொன்னதாக இவர் சொல்கிறார்


.

³¹ "உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்; பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாய் இருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்; பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்." (யோவான் 3:31)


ஆனால், இயேசு மரியாள் பெற்றெடுத்தே உலகத்துக்கு வந்தார்.

இயேசு பிறக்க முன் அவர் இருக்கவில்லை!


வார்த்தை என்பது நபராக இருக்கவில்லை!


ஆனால் இவர்களோ வார்த்தை என்பது கடவுள் மடியில் இருந்த மகன் என நம்பியதால் , இவ்வாறு எழுதியுள்ளனர்!!

----




28.இயேசு தாம் கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுபவர்



³² தாம் கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்கிறார்; அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளவில்லை.


³³ அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோட்டு நிச்சயப்படுத்துகிறான்.

(யோவான் 3:32-33


அதாவது இவர் தேவன் அல்ல!

தேவனிடம் சத்தியத்தை கேட்ட மனுசன்- யோவான் 8:40

-------------




29.இயேசு தேவனுடைய ஆவி கொடுக்கப்பட்டவர்

மேலும் குமாரனில் அவர் அன்பாக இருந்து எல்லாத்தையும் ஒப்புக்கொடுத்தாராம்!



³⁴ தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.


³⁵ பிதாவானவர் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார். (யோவான் 3:34-35)


இயேசு தேவனால் ஆவி கொடுக்க பட்டவர்.. கொடுக்க பட்டவர் தேவனல்ல!!


! கொடுத்தவரே தேவன்..

அவருக்கு சகலத்தையும் ஒப்புக்கொடுத்தாராம்!! ஒப்புக்கொடுக்கப்பட்டவர் கடவுளல்ல!



பைபிள் படி சாத்தானும் பூமியின் ராஜ்ஜியங்கள் ஒப்புக்கொடுக்கப்பட்டான் என லூக்கா 4:6 கூறுகிறது.!

அடுத்து குமாரன் பற்றி பலதடவை சொல்லி போரடிக்கிறது.

--------------




30.சமாரிய பெண்ணுக்கு கணவன் இல்லை என்பதை விளக்கமாக இயேசு சொன்னபோது, அவள் கூட அவரை தீர்க்கதரிசி என்றே சொன்னாள்.. தேவன் என்று அல்ல!


.

¹⁶ "இயேசு அவளை நோக்கி: நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டுவா என்றார்."

¹⁷ அதற்கு அந்த ஸ்திரீ: எனக்குப் புருஷன் இல்லை என்றாள். இயேசு அவளை நோக்கி: எனக்குப் புருஷன் இல்லையென்று நீ சொன்னது சரிதான்.

¹⁸ "எப்படியெனில், ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல, இதை உள்ளபடி சொன்னாய் என்றார்."


¹⁹ "அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்."

(யோவான் 4:16-19)


தீர்க்கதரிசிகள் இவ்வாறு அறிவுகொடுக்கப்படுவர் என்பதே அவர்களின் நம்பிக்கை;!!


-------



31. தொழவேண்டியது பிதாவை தான்.. உண்மையாய் தொழுது கொள்வோர் பிதாவையே தொழுது கொள்வார்களாம்!

 


²¹ "அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது."


²² நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது.


²³ "உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்."


²⁴ "தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்."

(யோவான் 4:21-24)


ஏனெனில் பிதா ஒருவரே மெய்யான தேவன்-யோவான் 17:3..

--------



32.இயேசு மெசியா மட்டுமே.. தேவன் அல்ல!


²⁵ "அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள்."


²⁶ அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார். (யோவான் 4:25-26)

------




33.இயேசு தேவனால் அனுப்பப்பட்டார்.. அவருடைய சித்தப்படி செய்து அவருடைய கிரியை முடிப்பதே இயேசுவின் போஜனம்!!



³⁴ இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது. (யோவான் 4:34)


அனுப்பப்பட்ட இயேசு கடவுளல்ல!!!; அனுப்பியவரே கடவுள்..

அதாவது பிதா ஒருவரே மெய்யான தேவன்-யோவான் 17:3

-----

----



 34.இயேசு தன்னை தீர்க்கதரிசி என்று அவரே சொல்கிறார்.


⁴³ "இரண்டுநாளைக்குப்பின்பு அவர் அவ்விடம்விட்டுப் புறப்பட்டு, கலிலேயாவுக்குப் போனார்."


⁴⁴ ஒரு தீர்க்கதரிசிக்குத் தன் சொந்த ஊரிலே கனமில்லையென்று இயேசு தாமே சொல்லியிருந்தார். (யோவான் 4:43-44)



 -------

35. சாகப்போன பிள்ளையை இயேசு காப்பாற்றினாராம்.. இதுவே இயேசு செய்த இரண்டாம் அற்புதமாம். (யோவான் 4:47-54)


இயேசு சுயமாக ஒன்றும் செய்யவில்லை-யோவான் 5:30

இயேசு மூலம் அற்புதம் செய்தது தேவன் தான்-அப்போஸ்தலர் 2:22

-------



36.தேவதூதன் குளத்தை கலக்கும்போது அதில் முதலாவது இறங்குபவனுக்கு எந்த வியாதி இருந்தாலும் குணமாகுமாம்! (யோவான் 5:3-4)


இயேசு செய்த அற்புதத்தை விட பயங்கரமாக இருக்கே!!

---


37.இயேசு நோயாளியை எழுந்து நட என்றாராம்.. அவன் சுகமாகிவிட்டாராம்.(



⁸ "இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்."


⁹ "உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது." (யோவான் 5:8-9)


இயேசு மூலம் அற்புதம் செய்தது தேவன் தான்-அப்போஸ்தலர் 2:22


இயேசு சுயமாக எதுவும் செய்வது இல்லை. -யோவான் 5:30


-------



38.இயேசு தேவனை பிதா என்றதால், இயேசு தேவனுக்கு தன்னை சமமாக்கினார் என யோவான் கருதுகிறார்..


 இதனால் யூதர்கள் அவரை கொல்ல பார்த்தாராம்!!



¹⁷ "இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்து வருகிறார், நானும் கிரியை செய்து வருகிறேன் என்றார்."


¹⁸ "அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்று சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்."

(யோவான் 5:17-18)



தேவனை தன் பிதா என சொல்வது தேவனுக்கு தம்மை சமமாக்குவதல்ல என யோவான் அறியவில்லை!!


ஏனெனில், சொலமோனை குறித்து, 



""நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனுஷருடைய மிலாற்றினாலும் மனுபுத்திரருடைய அடிகளாலும் தண்டிப்பேன்.""

  — 2 சாமுவேல் 7:14 (TBSI)



சொலமோனுக்கு தேவன் பிதாவாக இருப்பேன் என்றும் அவன் தேவனுக்கு குமாரனாக இருப்பான் என்றும் சொல்லப்பட்டுள்ளது.


இதன் அர்த்தம், சொலமோனை தேவன் தனக்கு சமமாக ஆக்கினார் என்பதா??



இதை எழுதிய யோவான் பழைய ஏற்பாட்டில் இயேசுவை தேடிய அளவுக்கு, உண்மையை தேடவில்லை என புரிகிறது.



மேலும் இதற்கு இயேசுவே விளக்கம் சொன்னதாக இதே யோவான் எழுதுகிறார்..



³³ "யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி, இவ்விதமாக தேவதூஷணஞ்சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்."


³⁴ இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா?


³⁵ "தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க,"


³⁶ "பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ்சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?" (யோவான் 10:33-36)



இயேசு தேவனை பிதா என்றும் தன்னை தேவ குமாரன் என்றும் சொன்னதால் , தன்னை தேவன் என கூறிவிட்டான்.. தேவதூசணம் செய்துவிட்டான் என யூதர்கள் சொன்னார்கள்.



அதற்கு இயேசு,,,. வேதவசனங்களை பெற்ற தீர்க்கதரிசிகளையே தேவர்கள் என சொல்லியிருக்க, என்னை தேவ குமாரன் என்பது எப்படி தேவதூசணம் சொல்வதாகும் என கேட்கிறார்!! 



அதாவது தன்னை பிதா அனுப்பியதாலும், பிதாவால் பரிசுத்தம் பண்ணப்பட்டதாலுமே தேவகுமாரன் என சொன்னேன் என்பதாக தெளிவாக 10:36 கூறுகிறது..


இதை எழுதிய அதே யோவான் தான் புரிதலற்று அவ்வாறும் எழுதியுள்ளார்!!

-------



39.பிதா செய்வதை அப்படியே குமாரனும் செய்வாராம். பிதா தான் செய்வதை குமாரனுக்கு காட்டுகிறாராம். குமாரன் பிதா செய்ய கண்டதை அப்படியே காப்பி பண்ணி செய்வாராம்.. 



¹⁹ "அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்."


²⁰ "பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார்." (யோவான் 5:19-29)


சுயமாக தன் சித்தப்படி செய்யாமல், பார்த்து அப்படியே செய்பவராக, அதாவது தேவனது மடியில் இயேசு அப்போதே குழந்தையாக இருந்தார் என 1:18 இல் எழுதியதை போல எழுதியுள்ளார்.


ஆனாலும் இயேசு மூலம் அற்புதம் செய்தது தேவன் தான்-அப்போஸ்தலர் 2:22.


இயேசு சுயமாக இதை செய்யவுமில்லை.. தேவன் செய்வதை பார்த்து செய்வதாக சொல்கிறார்.. அவர் மூலம் அவ்வாறு செய்ததே தேவன் தான் என அதே புதிய ஏற்பாடு சொல்கிறது!!



இயேசு ஏன் தேவனல்ல எனின்,,,


அதே இயேசு சொல்கிறார்: பிதா ஒருவரே மெய்யான தேவன்-யோவான் 17:3. இயேசுவுக்கும் பிதாவே தேவன்-யோவான் 20:17


பிதாவையே ஆவியோடு தொழ வேண்டும்- யோவான் 4:22-23

______

_____




40.பிதா இறந்தவர்களை எழுப்பி உயிர்ப்பிப்பது போல குமாரனும் தமக்கு சித்தமானவர்களை உயிர்ப்பிப்பாராம்.



²¹ "பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார்."

(யோவான் 5:21)



இயேசு மூலம் அற்புதம் செய்தது தேவன் தான்-அப்போஸ்தலர் 2:22


மேலும் இயேசு இறந்த லாசருவை உயிர்ப்பித்து விட்டு, தேவன் தனக்கு செவி கொடுத்ததற்காக தேவனை ஸ்தோத்திரம் செய்தார்..


⁴¹ "அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்."


⁴² நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள்நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார். (யோவான் 11:41-42)


தேவன் செவிகொடுத்ததால் தான் அவ்வாறு செய்தார் என அதே யோவானிலேயே பதில் உள்ளது!!

இயேசு சொந்த வல்லமையால் இஷ்டப்படி செய்யவில்லை என இது காட்டுகிறது!!

----------------


41.பிதாவை கனம் பண்ணுவது போல குமாரனை கனம் பண்ணும் படிக்கு , பிதா குமாரனுக்கு நியாயத்தீர்ப்பு செய்யும் அதிகாரத்தை கொடுத்தாராம்!



²² "அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்." (யோவான் 5:22)


அதிகாரம் கொடுக்கப்பட்டவர் கடவுளா? கொடுத்தவர் கடவுளா??


இயேசு சொல்கிறார் பிதா ஒருவரே மெய்யான தேவன்-யோவான் 17:3


பிதாவுக்கு சரிசமமாக இயேசுவை கனம் பண்ண வேண்டும் என்பதல்ல இதன் அர்த்தம்!!!!


தேவனை கனம் பண்ணுவது கடமையோ, அதேபோல் தேவனால் அனுப்பப்பட்டவரையும் கனம் செய்ய வேண்டும்.. தேவனால் அனுப்பப்பட்ட நபரை ஒருவர் கனம் செய்யவில்லை எனில், அது தேவனை கனம் செய்யாதது போன்றதே.. 

இதுவே இதன் அர்த்தம்!!

அதையே அடுத்த வசனத்தில் கூறப்படுகிறது:



²³ குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான்.(யோவான் 5:23)


சீடர்களை ஏற்காதவன் இயேசுவை ஏற்காதவன் என கூறப்பட்டது போலவே இதுவும்..(மத்தேயு 10:40)


-------




42.இயேசாவின் வசனத்தை கேட்டு அவரை அனுபிபினவரை விசுவாசித்து க்கு நித்தியஜீவன் உண்டாம்.. அவன் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறானாம்.



²⁴ "என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." (யோவான் 5:24)



இதன்படி தேவனை குறித்து கற்பிக்கவே இயேசு அனுப்பப்பட்டார் என தெளிவாகிறது.. அதுவும் தேவனால் அனுப்பப்பட்டார் என்பதாகும்.. தேவனால் அனுப்பப்பட்ட நபர் எப்படி அதே தேவன் ஆவார்??

----




43.இயேசு தம்மில் தாமே ஜீவனுடையவராக இருப்பதற்கு பிதா அருள் செய்திருக்கிறாராம்!



²⁶ "ஏனெனில் பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக்கிறார்."

(யோவான் 5:26)



ஜீவனுடையவராக இருப்பதற்கு இன்னொருவரால் அருள் செய்யப்பட வேண்டியிருக்கும் நபர் எப்படி தேவனாயிருப்பார்??


அவரே சொல்கிறார், பிதா ஒருவரே மெய்யான தேவன்-யோவான் 17:3

-----





44.நியாயதீர்ப்பு செய்வதற்கும் அதிகாரத்தையும் இயேசுவுக்கு பிதா கொடுத்திருக்கிறாராம்.



²⁷ "அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படி அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்." (யோவான் 5:27)



இதுக்கு கூட அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறார் எனில் , அதிகாரம் கொடுத்தவர் தேவனா? கொடுக்கப்பட்டவர் தேவனா??


அதிகாரம் கொடுத்த நபரான பிதாவே ஒரே மெய்யான தேவன்-யோவான் 17:3

-----




45.கல்லறைகளில் இருப்பவர்கள் கூட இயேசுவின் சத்தத்தை கேட்பார்களாம்.. அப்போது எல்லோரும் அவரவர் பலனை அடைய எழுந்திருப்பார்களாம்!



²⁸ இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்;


²⁹ "அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்." (யோவான் 5:28-29)



இயேசுவை நியாயம் தீர்ப்பவராக இது சித்தரிக்கிறது.. அந்த அதிகாரத்தை தேவன் முழுமையாக இயேசுவுக்கு கொடுத்துவிட்டு, ஓரமாய் இருக்கிறார் என்பதே இது கூறும் கருத்து.. ஆனால் அந்த தேவன் இவர் அல்ல!


மாறாக பிதா மட்டுமே அந்த ஒரே மெய்யான தேவன்- யோவான் 17:3

--------

------




46.இயேசு சுயமாக ஒன்றும் செய்யாமல் கேட்கிறபடியே இந்த தீர்ப்பை செய்வாராம்!. மேலும் இயேசு தனக்கு சித்தமானதை தேடுபவர் அல்லாமல் பிதாவுக்கு சித்தமானதையே தேடுபவராம்..



³⁰ "நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது." (யோவான் 5:30)



அதாவது இயேசு நியாயத்தீர்ப்பு செய்யும் நீதிபதியாக தேவன் அதிகாரம் கொடுத்திருந்தும், இயேசு சுயமாய் தீர்ப்பு செய்யாமல், கேட்டபடியே செய்வதோடு , பிதாவுக்கு சித்தமானதையே தேடுபவர் என்பதால், இவர் அந்த தேவன் அல்ல!!


பிதா ஒருவரே மெய்யான தேவன்-யோவான் 17:3.


யோவானின் கருத்துப்படி, இவர் தேவனது மடியிலிருந்த பிள்ளை என்றதே சொல்லும் மையக் கருத்து!

-------



 47.இயேசு எதை நிறைவேற்றவேண்டும் என்பதைக்கூட பிதா தான் கற்பித்து கொடுக்கிறாராம்.



³⁶ "யோவானுடைய சாட்சியைப்பார்க்கிலும் மேன்மையான சாட்சி எனக்கு உண்டு; அதென்னவெனில், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறது." (யோவான் 5:36)

---------




48.பிதாவுடைய சத்தத்தை யாரும் கேட்டதுமில்லை, அவரை யாரும் கண்டதுமில்லை 



³⁷ "என்னை அனுப்பின பிதா தாமே என்னைக்குறித்துச் சாட்சிகொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை."(யோவான் 5:37)


இந்த பிதா தான் ஒரே மெய்யான தேவன்-யோவான் 17:3

----



49.இயேசு பிதாவின் நாமத்தில் வந்தாராம்!



⁴³ "நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுயநாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்ளுவீர்கள்." (யோவான் 5:43)


தீர்க்கதரிசிகள் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் கர்த்தரின் நாமத்தில் தான் வருவார்கள்..


தாவீது கர்த்தரின் நாமத்தில் உன்னிடம் வந்தேன் என்றார். 1 சாமுவேல் 17:45


காத் கர்த்தரின் நாமத்தில் பேசினான் -1 நாளாகமம் 21:19


சோ இதில் ஸ்பெஷல் எதுவுமே இல்லை!!

------

----------------




50.இயேசு நிறைய பேருக்கு கொஞ்சம் உணவால் அற்புதம் செய்ததை கண்ட மக்கள் கூட, அவரை தீர்க்கதரிசி என்றே எண்ணினார்கள்.. 


இவர்களை போல தேவன் மனுசனாக வந்தான் என்று அல்ல!!



⁶ "தாம் செய்யப்போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார்."

⁷ "பிலிப்பு அவருக்குப் பிரதியுத்தரமாக: இவர்களில் ஒவ்வொருவன் கொஞ்சங்கொஞ்சம் எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்து அப்பங்களும் இவர்களுக்குப் போதாதே என்றான்."


 …  

¹⁰ இயேசு: ஜனங்களை உட்காரவையுங்கள் என்றார். அந்த இடம் மிகுந்த புல்லுள்ளதாயிருந்தது. பந்தியிருந்த புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள்.

¹¹ "இயேசு அந்த அப்பங்களை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, சீஷர்களிடம் கொடுத்தார்; சீஷர்கள் பந்தியிருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படியே மீன்களையும் அவர் எடுத்து அவர்களுக்கு வேண்டியமட்டும் கொடுத்தார்."


 …  

¹⁴ இயேசு செய்த அற்புதத்தை அந்த மனுஷர் கண்டு: மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள்.

(யோவான் 6:6,,7,10,11,14)



-------------





51.இயேசு தன்னை நான் தான் என சொன்னது தெய்வீகமா??



¹⁸ பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளித்தது.

¹⁹ "அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மயில்தூரம் தண்டுவலித்துப் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதைக் கண்டு பயந்தார்கள்."

²⁰ "அவர்களை அவர் நோக்கி: நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்." (யோவான் 6:18-20)



அவர்கள் இயேசுவை அறிந்திருந்தால், தன்னை நான் என அடையாளப்படுத்துகிறார்.. 



தேவன் தன்னை பற்றி மக்கள் அறிந்திருந்ததால்"நான்" என தன்னை பற்றி சொன்னார்..


நான் என்பது தெய்வீக வார்த்தை அல்ல.

இதே வார்த்தையை குருடனும் பாவித்திருக்கிறார்.


⁸ "அப்பொழுது அயலகத்தாரும், அவன் குருடனாயிருக்கையில் அவனைக் கண்டிருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவனல்லவா என்றார்கள்."

⁹ சிலர்: அவன்தான் என்றார்கள். வேறு சிலர்: அவனுடைய சாயலாயிருக்கிறான் என்றார்கள். அவனோ: நான்தான் (Ego Eimi) அவன் என்றான். (யோவான் 9:9)

எபிரேய பாசையில் எஹ்யே என்பது (நான் இருக்கிறேன்/இருப்பேன்) என்பது கூட பொதுவாக பாவிக்கப்படும் ஒன்று தான்.

உதாரணமாக ஊசாயும் தன்னைக்குறித்து, (אֶהְיֶ֖ה-எஹ்யே) என்று எபிரேயத்தில் கூறியிருக்கிறார்.

“"அதற்கு ஊசாய் அப்சலோமை நோக்கி: அப்படி அல்ல, கர்த்தரும் இந்த ஜனங்களும் இஸ்ரவேல் மனுஷர் அனைவரும் தெரிந்துகொள்ளுகிறவரையே நான் சேர்ந்து அவரோடே இருப்பேன் (אֶהְיֶ֖ה-எஹ்யே)."”

  — 2 Samuel 16:18 (TBSI)

1 சாமுவேல் 23:17 இலும் யோனத்தான் தன்னை தாவீதுக்கு அடுத்தவனாக இருப்பேன் என்று சொல்வதற்கு எஹ்யே என்று தான் பாவித்திருக்கிறார்

ஆகவே இதை வைத்து தெய்வீகம் என்று வாதிடுவது மடத்தனம்.


பிதா ஒருவரே மெய்யான தேவன்-யோவான் 17:3 என இதே இயேசு சொன்னதாக யோவான் எழுதுகிறார்!!

விரிவாக இதை அறிய

பாகம் 2

வார்த்தை 

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

லூக்காவின்படி இயேசு ஏன் கடவுளல்ல

 மாற்குவின்படி இயேசு  கடவுளல்ல

லூக்காவின்படி இயேசு ஏன் கடவுளல்ல?

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



லூக்கா சுவிசேசத்தின்படி இயேசு பரிசுத்த ஆவி மூலம் மரியாளிடம் பிறந்த மனிதர். அவரை தேவன் தன் பிள்ளையாக தத்தெடுத்துக் கொண்டார்.. அவருக்கு அதிகாரங்களை கொடுத்து ஓரமாய் நின்று வேடிக்கை பார்க்கிறார் என்பதே இதன் சுருக்கம்!

லூக்கா ஏனைய சுவிசேங்களை போலல்லாமல், இயேசு செய்த அற்புதங்கள் அனைத்துமே தேவன் நிகழ்த்தியது என கூறுவதோடு, அவ்வாறே மக்கள் புரிந்து கொண்டனர் என்பதை தெளிவாக சொல்லும் சுவிசேஷ கதையே இது!




 

1.அவர் ஒரு பெண் பெற்றெடுத்த குழந்தை! ஒரு பெண் பெற்றெடுத்த குழந்தை ஒரு படைப்பே அன்றி வேறில்லை!


³¹ "இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக." (லூக்கா 1:31)




2.அவர் பெரியவராக இருப்பார். தேவனுடைய குமாரன் எனப்படுவாராம்.

கர்த்தராகிய தேவன் அவருக்கு இயேசுவின் பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை கொடுப்பாராம்!

³² "அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்." (லூக்கா 1:32)

தேவன் தான் இயேசுவுக்கு தாவீதின் சிங்காசனத்தையே கொடுக்க போகிறாராம்.. வாங்குபவர் கடவுளல்ல.. சிங்காசனத்தை கொடுப்பவரே கடவுள்




3.அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவாராம்! அவருடைய ராஜ்யத்துக்கு முடிவு இருக்காதாம்!


³³ அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான். (லூக்கா 1:33)

அதாவது இவர் ஒட்டுமொத்த மக்களுக்கும் ராஜாவாக அல்லாமல், யாக்கோபின் குடும்பத்தாரை மட்டுமே அரசாள போகிற நபர்.

அந்த ஆட்சியை கூட தேவனே கொடுப்பார்- லூக்கா 1:32





4.இயேசு தேவனுடை குமாரன் என்பது , பரிசுத்த ஆவியால் மரியாள் கர்ப்பமானதால் ஆகும் என்பதே லூக்கா பதிந்தது.

³⁴ அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.

³⁵ தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக; பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.

(லூக்கா 1:34-35)

இங்கேயும் பெண் பெற்றதால் படைப்பு என தெளிவாகிறது.





5.இயேசு தேவனின் கனி அல்ல! மரியாளின் கர்ப்பத்தின் கனி ஆவார். இதை நான் சொல்லல. பரிசுத்த ஆவியால் எலிசபத்து சொன்னார்!

⁴¹ "எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று; எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு,"

⁴² "உரத்த சத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது." (லூக்கா 1:41-42)

6.இயேசுவை எலிசபெத் தன் ஆண்டவர் என்கிறார். அதாவது மரியாளை தன் ஆண்டவரின் தாய் என்கிறார்


⁴³ என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது. (லூக்கா 1:43)

ஆண்டவர் என்பது பொதுவாக அதிகாரத்தில் இருப்போரை குறிக்க பாவிக்கப்படும்.

ஆரோன் தன் தம்பி மோசேயை தன் ஆண்டவன் என்கிறார்- எண்ணாகமம் 12:11

மேலும் இயேசுவை ஆண்டவராக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36

சோ, இது அவரை கடவுளாக்காது.

மேலும் இதில் இயேசுவை விட மரியாளே உயர்ல்தப்பட்டிருக்கிறாள்.. ஆண்டவர் தன்னிடம் வந்தார் என சொல்லாமல், ஆண்டவரின் தாய் வந்தாள் என் கூறி மரியாளையே அதிகம் சிறப்பிக்கிறது.




7.இயேசு என்பவர் தாவீதின் வம்சத்தில் அவர்களுடைய எதிரிகளிடமிருந்து தேவன் அவர்களை பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இரட்சணியக்கொம்பாம்!


⁷⁴ "தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும்படிக்கு,"

⁷⁵ தம்முடைய தாசனாகிய தாவீதின்வம்சத்திலே நமக்கு இரட்சணியக்கொம்பை ஏற்படுத்தினார்.

(லூக்கா 1:74-75)

தேவன் ஒன்றும் தாவீதுடைய வம்சத்தார் அல்ல!

வேடிக்கையாக இங்கே சொல்லப்பட்டது போல, இயேசு அவர்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்றவில்லை..




8.யோவான் கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம் பண்ணுபவனாம்

⁷⁶ "நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,"

⁷⁷ "நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய ஜனத்துக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்னாக நடந்துபோவாய்." (லூக்கா 1:76-77)


இதிலுள்ள கர்த்தர் என்பது இயேசுவை குறிக்கும் என வாதிட்டாலும், இதே போல ஏசாயா தீர்க்கதரிசி யாவே என அழைக்கப்படிருக்கிறார்.-ஏசாயா 7:10

தேவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் யாவே என அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆதி 18 & 19 32:25-30

தீர்க்கதரிசிகள் கர்த்தரின் நாமத்தில் வருவார்கள். 

தாவீது ராஜா "நான் கர்த்தரின் (யாவேயின்) நாமத்தில் உன்னிடத்தில் வருகிறேன் " என சொன்னார்- 1 சாமுவேல் 17:45


தீர்க்கதரிசி காத் கர்த்தரின் நாமத்தில் பேசினான்- 1 நாளாகமம் 21:19 

இவ்வாறே இயேசுவும் தீர்க்கதரிசி என்பதால் , கர்த்தரின் நாமத்தில் வருவதால் அவ்வாறு கூறப்படுகிறது.

இயேசு சுயமாக எதுவும் செய்துவிடவில்லை.

மாறாக தேவன் தான் இயேசு மூலமாக அற்புதம் செய்தார்- அப்போஸ்தலர் 2:22





9.இயேசு மரியாளுக்கே முதற்பேரான குமாரன். மரியாளின் குமாரன் தேவனல்ல!

 …  

⁷ "அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்."

(லூக்கா 2:7)



10.கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாவீதின் ஊரில் பிறந்தார் என தேவதூதன் மேய்ப்பர்களுக்கு சொன்னானாம்!


¹⁰ "தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்."

¹¹ இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.

(லூக்கா 2:10-11)

இங்கே கர்த்தர் என கூறப்படுவது, ராஜாக்கள் அவ்வாறு அழைக்கப்படுவார்கள்.

இயேசுவை கர்த்தராக (கர்த்தர் என்றால் ஆண்டவர் lord) , மெசியாவாக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36

அடுத்து பிறந்தவர் கடவுளல்ல! பிறக்க வைப்பவரே கடவுள்!


¹² "பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்."

."




11.மேய்ப்பர்கள் இயேசு குழந்தையை பார்த்து எல்லாவற்றுக்காகவும் தேவையே மகிமைப்படுத்தினார்கள். 

²⁰ "மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்." (லூக்கா 2:20)

அவர்கள் கூட தேவன் யார் குழந்தை யார் என அறிந்து வைத்திருந்தார்கள்.. இவர்களுக்கு தான் இன்னும் அறிவு வரவில்லை!




12.சிமியோன் என்ற தீர்க்கதரிசி இயேசுவை தேவனுடைய மெசியா என்றும், அவரை கண்டதற்காக தேவனையே ஸ்தோத்திரித்தார்.

தேவனால் ஆயத்தம் பண்ணப்பட்ட இரட்சணியமே இயேசு.. தேவனல்ல!


²⁵ "அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன்மேல் பரிசுத்தஆவி இருந்தார்."

²⁶ கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது.

²⁷ "அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாணமுறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டுவருகையில்,"

²⁸ "அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து:"

²⁹ "ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்;"

³⁰ "புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,"

³¹ தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின.

³² உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.

(லூக்கா 2:25-32)



13.இதை கேட்டு மரியாள் ஆச்சரியப்படுகிறார். தேவதூதன் நேரடியாகஜமரியாளிடம் பேசியும் , இயேசுவை குறித்து எடுத்துச் சொல்லியும் சென்ற பின்பு கூட இயேசுவை தேவன் என அவர் நம்பவில்லை.. அதனால் தான் சிமியோன் இதை சொன்னபோது ஆச்சரியப்பட்டார்.


³³ அவரைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் அவருடைய தாயாரும் ஆச்சரியப்பட்டார்கள். (லூக்கா 2:33)



14.இயேசு ஞானத்திலும் வளர்த்திலும் தேவகிருபையிலும் விருத்தியடைந்தாராம்!


⁵² "இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் ் விருத்தியடைந்தார். "(லூக்கா 2:52)

தேவனென்பவர் பூரணமானவர்.. படைப்புகள் தான் படிப்படியாக விருத்தியடைவார்கள்!








15.கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள் என ஏசாயா வில் சொன்னது யோவானை குறிக்குமாம். (லூக்கா 3:3-5)





இயேசுவை கர்த்தர் என்று லூக்கா 3:3 சொல்வது தேவனாகிய கர்த்தர் என்பதல்ல. அதனால் தான் ஏசாயா 40:3 இலுள்ள தேவன் என்பதை நீக்கிவிட்டு வெறும் கர்த்தர் என்கிறார் லூக்கா.


புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் கிரேக்க மொழியில் தான் பழைய ஏற்பாட்டை படித்தனர். அதனால் யாஹ்வே,அதோன் என்பன இரண்டையுமே குரியோஸ் என்று தான் கூறுவதால் இயேசுவுக்கு அப்லை பண்ணியுள்ளார்கள்.


இயேசு தேவனால் கர்த்தராக ஆக்கப்பட்டவர்-அப் 2:36 என்று கூறுகிறது. இதை எழுதியவர் லூக்கா என்று நம்பப்படுகிறது


இன்னொரு விதமாக புரிவதானால், இயேசுவை கர்த்தருடைய தூதன் என்பதால் கர்த்தருடைய தூதனின் வருகை கர்த்தரின் வருகையாக கூறப்படுகிறது.


ஆனாலும் இவர் தேவன் அல்ல என்பதால், ஏசாயா 40:3 இலுள்ள தேவன் எனும் சொல்லை லூக்கா நீக்கியுள்ளார்.


அதனால் தான் மலையில் ஏறி தேவனிடம் ஜெபம்  செய்தார். லூக்கா 6:12






16.யோவான் இயேசுவை குறித்து அவரது செருப்பு வாரை அவிழ்ப்பதற்கு கூட நான் பாத்திரன் அல்ல என சொன்னாராம். -லூக்கா 3:16

யோவானே ஸ்திரிகளிடம் பிறந்தவர்களில் மிகப்பெரியவன் என இயேசு சொல்கிறார்-(மத்தேயு 11:11)




 இயேசுவும் ஸ்திரீயிடம் பிறந்தவர். சோ இயேசுவின் வார்த்தைப் படி யோவானே இயேசுவிலும் பெரியவர்.


சோ அவர் கடவுளாக இயலாது



17.இயேசு ஞானஸ்நானம் பெற்று ஜெபம் செய்தார்


²¹ "ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம்பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம்பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது;"

(லூக்கா 4:21)

இயேசு யாரிடம் ஜெபம் செய்தாரோ அவரே கடவுள்.. இயேசு அல்ல!



18.பரிசுத்த ஆவி இயேசு மேல் அப்போது தான் இறங்கினார். வானத்திலிருந்து சத்தமும் டாக்ஸி நீர் என் நேசகுமாரன் என்றதாம்!

²² "பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது."

லூக்கா 3:22


ஆனால் யோவானோ கர்ப்பத்தில் இருக்கும் போதே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார்-லூக்கா 1:15

மேலும் தேவனது குமாரன் என்பது புதிதான ஒன்று அல்ல.

இஸ்ரேலை (யாக்கோபின் பிள்ளைகளை) தன் குமாரன் என தேவன் சொன்னதாக யாத்திராகமம் 4:22, ஓசியா 11:1-2 இல் எழுதப்பட்டுள்ளது


சொலமோனை குறித்து அவன் எனக்கு குமாரனாக இருப்பான், நான் அவனுக்கு பிதாவாக இருப்பேன் என தாவீதிடம் சொன்னதாக எழுதப்பட்டுள்ளது- 2 சாமுவேல் 7:14-16



19.அவர் யோசேப்பின் குமாரன் என்று எண்ணப்பட்டாராம். (எண்ணப்பட்டார் என்பது பழைய பிரதிகளில் இல்லை.. லூக்கா அவரை யோசேப்பின் மகன் என கருதி அதற்கேற்ப ஆதாம் வரை வம்ச வரலாற்றை எழுதியுள்ளார்)

²³ அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்;

(லூக்கா 3:23)




20.இயேசு பிசாசினால் சோதிக்கப்பட்டார். தேவனை சோதிக்க இயலாது!

உணவு சாப்பிடாததால் அவருக்கு பசி ஏற்பட்டுவிட்டது.

² நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று.

(லூக்கா 4:2)

உணவு சாப்பிட்டு மலம் கழித்து வாழ்பவர் பலவீனமான படைப்பே அன்றி வேறில்லை.

 …  



21.இயேசு அவர் மீது இறங்கிய ஆவியானவருடைய பலத்தினால் தான் செய்யவேண்டியவற்றை செய்தார்.

¹⁴ பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று. (லூக்கா 4:14)

 …  



22.இயேசு சுவிசேஷத்தை பிரசங்கிப்பதற்காக அபிஷேகம் பண்ணப்பட்டவரே. தேவனால் அற்புதங்களும் அனுப்பப்பட்டவரே இயேசு. தேவன் அல்ல!


¹⁸ "கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,"

¹⁹ "கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு,"

²⁰ "வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெப ஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது." (லூக்கா 4:18-20)




 23.தன்னை ஒரு தீர்க்கதரிசி என்றே இயேசு கருதினார்.. தேவன் என்று அல்ல!

²⁴ ஆனாலும் தீர்க்கதரிசி ஒருவனும் தன் ஊரிலே அங்கீகரிக்கப்படமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.(லூக்கா 4:24)



24.அசுத்த ஆவி ஒன்று இயேசுவை தேவனுடைய பரிசுத்தர் என சொன்னதால்! 

 …  

³³ ஜெப ஆலயத்திலே அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு மனுஷன் இருந்தான்.

³⁴ "அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று உரத்த சத்தமிட்டான்."

(லூக்கா 4:33-34)

இதேபோல் ஆரோனும் தேவனுடைய பரிசுத்தர் என பைபிள் சொல்கிறது. சங்கீதம் 106:16

இதில் தெய்வீகம் இல்லை!

இயேசுவை பரிசுத்தம் பண்ணியதே தேவன் தான் என இயேசு சொன்னதாக யோவான் 10:36 இல் எழுதப்பட்டுள்ளது!

அவரை பரிசுத்தம் பண்ணியவர் தான் தேவன்.. இயேசு அல்ல!



25.இயேசு பிசாசை போ என அதட்டியதும் அது ஓடிவிட்டதாம்- லூக்கா 4:35

இயேசு பேயோட்டியது தேவனது ஆவியால் என்று அவரே சொல்கிறார். -மத்தேயு 12:28.

அந்த ஆவியே ஞானஸ்நானத்தின்போதே அவர்மீது இறங்கியது-லூக்கா 3:22

விசுவாசமிருந்தால் மலையை பார்த்து கடலில் போய் விழச்சொன்னாலும் அது நிகழுமாம்! மத்தேயு 21:21

சோ இயேசுவுக்கு விசுவாசம் இருந்ததால் இது முடிந்தது.

மேலும் இயேசு மூலம் அற்புதம் செய்தது தேவன் தான்-அப்போஸ்தலர் 2:22



26.சீமோனின் மாமியாருக்கு காய்ச்சல் நீங்க கட்டளையிட்டார் அது நீங்கியது. நோயாளிகளை சுகப்படுத்தினார்.பேய்களை ஓட்டினார்- லூக்கா 4:38-41

இதற்கு குறிப்பு 25இலும் பதில் கொடுக்கப்பட்டு விட்டது.


27.பிசாசுகள் இயேசுவை தேவனுடைய குமாரன் என சத்தமிட்டனவாம்! லூக்கா 4:41

 …இதற்கும் பதில் குறிப்பு 18 போதுமானது.



28.இயேசு தேவனுடைய ராஜ்யத்தை குறித்து பிரசங்கிக்க அனுப்பப்பட்டவரே. ஆவார்.

⁴³ "அவரோ அவர்களை நோக்கி: நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன் என்றார்." (லூக்கா 4:43)

அனுப்பப்பட்டவர் கடவுளல்ல! இயேசுவை அனுப்பியவரே கடவுள்.



29.இயேசு குஷ்டரோகியை சுகப்படுத்தினாராம்!

¹² "பின்பு அவர் ஒரு பட்டணத்தில் இருக்கையில், குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனுஷன் இயேசுவைக் கண்டு, முகங்குப்புற விழுந்து: ஆண்டவரே, உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மாலே ஆகும் என்று அவரை வேண்டிக்கொண்டான்."

¹³ "அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று."

(லூக்கா 5:12-13)

இயேசு மூலம் அற்புதம் செய்தது தேவன் தான்-அப்போஸ்தலர் 2:22

மேலும் இயேசுவை ஆண்டவராக மெசியாவாக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36.

விசுவாசம் இருந்ததால் மலையை பார்த்து கடலில் போய் விழச்சொன்னாலும் அது நிகழுமாம்-மத்தேயு 21:21..

இயேசுவுக்கு விசுவாசம் இருந்ததால் இது முடிந்தது.


 

30.இயேசு தனித்து போய் ஜெபம் பண்ணினார்.

¹⁶ "அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்."

லூக்கா 5:16

இயேசு யாரிடம் ஜெபம் செய்தாரோ அவரே கடவுள்.. இயேசு அல்ல!



31.திமிர்வாதக்காரனை நோக்கி உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார் -லூக்கா 5:20

பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்றாராம் லூக்கா 5:24


இதைக்கண்ட மக்கள் தேவனை மகிமைப்படுதினார்கள்.லூக்கா 5:26

மை கமெண்ட்: 


*இயேசு தன்னை மனுஷகுமாரன் என சொல்லி , தான் ஒரு மனுஷனே ஆவேன். கடவுள் அல்ல என்கிறார்.




*.இதை கண்ட மக்கள் கூட, இவரை தேவன் என நம்பவில்லை.. இது போன்ற மனுசனுக்கு அதிகாரத்தை கொடுத்ததே தேவன் தான் என்பதால், தேவனை மகிமைப்படுத்தினார்கள்.



*இயேசுவுக்கு எல்லா பாவத்தையும் மன்னிக்க பூமியில் அதிகாரமில்லை.. பாரிசவாதத்துக்கு காரணமான பாவம் (??), அதை தான் மன்னிக்க முடிந்தது.


ஆனால் இயேசுவை கொல்ல பார்த்த பாவத்தை இயேசுவால் மன்னிக்க முடியல.. பிதாவிடம் மன்னிக்க வேண்டினார் என எழுதப்பட்டுள்ளது.(லூக்கா 23:34



*தீர்க்கதரிசிகளுக்கு பாவத்தை மன்னிக்க இயலும் என்பதே பைபிள் கூறுவது. அதனால் தான் சவுல் தன் பாவத்தை மன்னிக்க சாமுவேல் தீர்க்கதரிசியிடம் வேண்டினார். 1 சாமுவேல் 15:25

இயேசு தீர்க்கதரிசி என்பதால் இது முடிந்தது. அது கூட தேவன் கொடுத்ததே.



*இயேசுவின் கூற்றுப்படி, பரிசுத்த ஆவியை பெற்றவர்களுக்கு பாவத்தை மன்னிக்க இயலுமாம். சீடர்களுக்கு பரிசுத்த ஆவி வழங்கப்பட்ட பின், 


"“"எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்."”

  — John 20:23 (TBSI)


சோ, பரிசுத்த ஆவி வழங்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் அதிகாரமாக இது பார்க்கப்படுகிறது.


*இயேசுவுக்கு ஆதிமுதல் பரிசுத்த ஆவி இருக்கவில்லை.. மாறாக ஞானஸ்நானம் பண்ணிய பின்னே பரிசுத்த ஆவி வழங்கப்பட்டது.(லூக்கா 3:21-22


*பரிசுத்த ஆவி வழங்கப்பட்ட பின்பு கூட, இயேசு பாவம் செய்வோரை மன்னிப்பவராக இல்லாமல், அவர்களுக்கு பிதாவிடம் பரிந்து பேசுபவராகவே உள்ளார் என யோவான் எழுதுகிறார். 1 யோவான் 2:1


சோ, இதுவெல்லாம் இயேசு என்ற மனிதனை கடவுளாக்காது.



32.பரிசேயர் நினைத்ததை இயேசு அறிந்துகொண்டாராம்-லூக்கா 5:21-22

மை கமெண்ட்:

பைபிள் படி தீர்க்கதரிசிகளுக்கு தேவன் வெளிப்படுத்தி கொடுப்பதால், அறிந்திருப்பார்கள்.


*அனனியா என்பவன் தன் சொத்துக்களை விற்று சிலதை தனக்கு வைத்துக்கொண்டு, சீடர்களிடம் மற்றதை கொடுக்கிறான். பேதுரு இதை அறிந்திருந்தான் என கூறப்படுகிறது.

அப்போஸ்தலர் 5:1-3



*தீர்க்கதரிசிகள் மறைவான விடயங்களை (தேவன் வெளிப்படுத்தி கொடுப்பதால்) அறிந்திருப்பார்கள் என்பதே அக்கால மக்களின் நம்பிக்கையும்கூட. 


"இவன் தீர்க்கதரிசியாக இருந்தால், தம்மை தொடுகிற ஸ்திரீ இன்னாள் என்றும் இப்படிப்பட்டவள் என்றும் அறிந்திருப்பார்"-லூக்கா 7:39


* கேயாசி நாகமானிடம் செய்த செயல்களை பார்க்காமலேயே எலீஷா அறிந்திருந்தான் என கூறப்படுகிறது. 2 இராஜாக்கள் 5:19-26


சோ, தீர்க்கதரிசி இப்படி இருப்பதால் தெய்வீகமெல்லாம் இல்லை!!





33.மனுஷகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவர் என சொன்னாராம்- லூக்கா 6:5


-முதலாவது ஓய்வு நாள் மனிதனுக்காக உண்டாக்கப்பட்ட து- மாற்கு 3:27


-இயேசு மனுச குமாரன். மனுசகுமாரன் ஒரு மனிதனே.


-இயேசுவை ஆண்டவராக தேவனே ஆக்கினார்- அப்போஸ்தலர் 2:36


இயேசுவை ஆண்டவராக ஆக்கியவரே கடவுள். இயேசு வல்ல!


34.சூம்பின கையுடையவனை சுகப்படுத்தினார்- லூக்கா 6:6-8

இயேசு மூலம் அற்புதம் செய்தது தேவன் தான்-அப்போஸ்தலர் 2:22.



 35.மலையில் ஏறி இரவு முழுவதும் தேவனிடம் ஜெபம் செய்தார் இயேசு

¹² "அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்."

(லூக்கா 6:12)

இயேசு யாரிடம் ஜெபம் செய்தாரோ அவரே கடவுள். இயேசு அல்ல!!





36.இயேசு மரித்துப் போன ஒரு பையனை உயிர்ப்பித்தாராம்.

இதை கண்ட மக்கள் கூட இயேசுவை மகா தீர்க்கதரிசி என்று கூறியதோடு தேவனை தான் மகிமைப்படுத்தினார்கள்.



¹² "அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள்."

¹³ "கர்த்தர் அவளைப் பார்த்து, அவள்மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி,"

¹⁴ "கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்."

¹⁵ "மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்."

¹⁶ "எல்லாரும் பயமடைந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்." (லூக்கா 7:12-16)

தேவன் தீர்க்கதரிசி மூலம் அற்புதம் செய்வார் என யூதர்கள் அறிந்திருந்ததாலே இவ்வாறு சொன்னார்கள்.

இயேசு மூலம் அற்புதம் செய்தது தேவன் தான்-அப்போஸ்தலர் 2:22



37.தேவன் மக்களை சந்தித்தார் என மக்கள் ஏன் சொன்னார்கள்?


¹⁶ "எல்லாரும் பயமடைந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்." (லூக்கா 7:12-16)

லூக்கா 7:16

தேவன் தீர்க்கதரிசிகளை அனுப்பி அற்புதங்கள் செய்வதையே தேவன் மக்களை சந்தித்தார் என கூறப்படுகிறது.

மோசேயும் ஆரோனும் இஸ்ரேலியர் மத்தியில் அற்புதம் செய்ததால், "கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை சந்தித்தார்" என மக்கள் சொன்னதாக யாத்திராகமம் 4:31 கூறுகிறது.

இது போல் பல வசனங்களை பழைய ஏற்பாட்டில் காணலாம்! அனைத்தும் குறிப்பிட்டால் பதிவு இதைவிட நீண்டு விடும் என்பதால் தவிர்க்கிறேன்!

சோ, இதில் இயேசு அவர்களுக்கு தெய்வீகம் என வாதிட எந்த முகாந்திரமும் இல்லை!!!




38.இயேசு தேவனால் அனுப்பப்பட்டவரே. அவருக்கு முன்பாக இயேசுவின் வழியை ஆயத்தம் பண்ண யோவான் அனுப்பப்பட்டாராம்.

.

²⁷ "இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான்." லூக்கா 7:27

அனுப்பப்பட்ட இயேசு கடவுளல்ல!! அவரை அனுப்பியவரே கடவுள்!



39.யோவான் இயேசுவை விட பெரிய தீர்க்கதரிசி

²⁸ "ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப்பார்க்கிலும் பெரிய தீர்க்கதரிசி ஒருவனுமில்லை; ஆகிலும், தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்."-லூக்கா 7:28

இயேசுவும் ஸ்திரீயிடம் பிறந்தவர்.


 …  



40.தேவனுடைய வசனத்தை கேட்டு அதன்படி செய்கிறவர்கள் இயேசுவுக்கு தாயும் சகோதரர்களும் ஆவார்களாம். லூக்கா 8:21

தேவனுக்கு தாயும் சகோதரருமாக மனிதர்கள் ஆக முடியாதே...


41.படகு ஓடும்போது இயேசுவுக்கு நித்திரை போய்விட்டது-லூக்கா 8:23

தூங்குபவர் கடவுளல்லவே.. பலவீனமான மனிதனுக்கு தான் தூக்கம் வரும்.



42.இயேசு காற்றை அதட்டினாராம்.. உடனே அமைதி ஏற்பட்டு விட்டதாம்!


²³ "படவு ஓடுகையில் அவர் நித்திரையாயிருந்தார். அப்பொழுது கடலிலே சுழல் காற்றுண்டானதால், அவர்கள் மோசமடையத்தக்கதாய்ப் படவு ஜலத்தினால் நிறைந்தது."

²⁴ "அவர்கள் அவரிடத்தில் வந்து, ஐயரே, ஐயரே, மடிந்து போகிறோம் என்று அவரை எழுப்பினார்கள்; அவர் எழுந்து, காற்றையும் ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டினார்; உடனே அவைகள் நின்றுபோய்,, அமைதலுண்டாயிற்று."

²⁵ "அவர் அவர்களை நோக்கி: உங்கள் விசுவாசம் எங்கே என்றார். அவர்கள் பயந்து ஆச்சரியப்பட்டு: இவர் யாரோ, காற்றுக்கும் ஜலத்துக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்."(லூக்கா 8:23-25)

சீடர்கள் இங்கே பயப்பட காரணம் விசுவாசம் இல்லாமை என 8:25இல் கூறுகிறார்.

கடுகளவு விசுவாசம் இருந்தால் காட்டு அத்தி மரத்தை கடலில் போய் போட்டுக்கொள்ள சொன்னாலும் அப்படியே ஆகுமாம்-லூக்கா 17:6

இயேசுவுக்கு விசுவாசம் இருந்ததால் இது முடிந்தது.

இயேசு மூலம் அற்புதம் செய்தது தேவன் தான்-அப்போஸ்தலர் 2:22




43.பிசாசுக்கூட்டத்தை பன்றிக்கூட்டத்தில் அனுப்பிய பின், பிசாசுபிடித்திருந்தவனை சுகமாக்கியது தேவன் தான் என இயேசுவே சொல்கிறார்.


 …  

³⁸ பிசாசுகள் நீங்கின மனுஷன் அவரோடேகூட இருக்கும்படி உத்தரவு கேட்டான்.

³⁹ "இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் பிரசித்தப்படுத்தினான்."(லூக்கா 8:38-39)

அதாவது "தேவன் உனக்கு செய்தவை கையெல்லாம் அறிவி" 8:39 அறு சொன்னார்.

ஏனெனில் இயேசு மூலம் அற்புதம் செய்தது தேவன் தான்-அப்போஸ்தலர் 2:22




44. 12 வருடம் நோயுள்ள பெண் இயேசுவை தொட்டதும் அவளது நோய் நீங்கி விட்டது.

ஆனால் இயேசுவுக்கு யார் அவரை தொட்டார் என தெரியவில்லை! தன்னிடமிருந்து வல்லமை புறப்பட்டதை உணர்ந்தார். ஆனால் யாரென அறிய கேட்கிறார். (லூக்கா 8:46)

⁴³ "அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரீ,"

⁴⁴ "அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று."

⁴⁵ "அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லாரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனேகூட இருந்தவர்களும்: ஐயரே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள்."

⁴⁶ அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார்.

⁴⁷ "அப்பொழுது அந்த ஸ்திரீ தான் மறைந்திருக்கவில்லையென்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தான் சொஸ்தமானதையும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள்."

⁴⁸ "அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்."(லூக்கா 8:43-48)

தொட்டது யாரென அறியாதவர் அறிவில் குறைவுள்ளவர்.

அதுமட்டுமின்றி இயேசு மூலம் அற்புதம் செய்தது தேவன் தான்-அப்போஸ்தலர் 2:22



 


45.இயேசு சீடர்களுடன் சேர்ந்து ஜெபம் செய்துகொண்டிருந்தார்.(லூக்கா 9:18)

 இயேசுவை யூதர்கள் யாரும் தேவனென நம்பவில்லை-லூக்கா 9:19

¹⁸ "பின்பு அவர் தமது சீஷரோடேகூடத் தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், அவர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்."

¹⁹ "அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்." (லூக்கா 9:18-19)


46.சீடர்கள் கூட இயேசுவை தேவனுடைய கிறிஸ்து என்றே நம்பினர். தேவன் என நம்பவுமில்லை

²⁰ அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் தேவனுடைய கிறிஸ்து என்றான்.

²¹ அப்பொழுது அவர்கள் அதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார்.(லூக்கா 9:20-21)



 47.இயேசு தம் மகிமையுடனும் பிதாவுடைய மகிமையுடனும் தேவதூதரின்ஸமகிமையுடனும் வருவாராம்!


²⁶ "என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்."(லூக்கா 9:26)

இயேசுவை தேவனால் தான் மகிமைப்படுத்த இயலும். அதனால் தேவனிடம் தன்னை மகிமைப்படுத்த வேண்டுகிறார்-யோவான் 17:2




 48.மீண்டும் இயேசு ஜெபம் பண்ண மலைக்கு ஏறினார்.

²⁸ "இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டுநாளானபின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார்."

²⁹ "அவர் ஜெபம்பண்ணுகையில் அவருடைய முகரூபம் மாறிற்று, அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது." லூக்கா 9:28-29

இயேசு யாரிடம் ஜெபம் செய்தாரோ அவரே கடவுள்.




49.பொல்லாத வேறொரு ஆவியை சீடர்களால் விரட்ட முடியாமல் போய்விட்டது. காரணம் அவர்களுக்கு விசுவாசம் இல்லை-லூக்கா 9:39-41

பிறகு இயேசு அதை விரட்டினார். அப்போது மக்கள் தேவனுடைய மகத்துவத்தை குறித்து பிரம்மித்தார்கள்-லூக்கா 9:42-43

காரணம் தேவன் தான் இயேசு மூலம் அற்புதம் செய்தார் - அப்போஸ்தலர் 2:22



³⁹ "ஒரு ஆவி அவனைப் பிடிக்கிறது. அப்பொழுது அலறுகிறான், அது அவனை நுரைதள்ள அலைக்கழித்து, அவனைக் கசக்கினபின்பும், அவனை விட்டு நீங்குவது அரிதாயிருக்கிறது."

⁴⁰ "அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரை வேண்டிக்கொண்டேன், அவர்களால் கூடாமற்போயிற்று என்றான்."

⁴¹ "இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார்."

⁴² "அவன் சமீபித்துவருகையில், பிசாசு அவனைக் கீழே தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்த ஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார்."

⁴³ அப்பொழுது எல்லாரும் தேவனுடைய மகத்துவத்தைக்குறித்துப் பிரமித்தார்கள். இயேசு செய்த யாவையுங்குறித்து அனைவரும் ஆச்சரியப்படுகையில் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: (லூக்கா 9:39-43)




50.சிறுபிள்ளைகளை இயேசுவுக்காக ஏற்றுக்கொள்பவன் இயேசுவை ஏற்றுக்கொள்பவன். இயேசுவை ஏற்றுக்கொள்பவன் அவரை அனுப்பியவரை ஏற்றுக்கொண்டவன்.


⁴⁸ அவர்களை நோக்கி: இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; உங்களெல்லாருக்குள்ளும் எவன் சிறியவனாயிருக்கிறானோ அவனே பெரியவனாயிருப்பான் என்றார். லூக்கா 9:48

இதன் மூலம் இயேசுவை அனுப்பி வைத்த பெரியவர் இருக்கிறார் என தெளிவாகிறது.



51.இயேசுவை பின்பற்றாத ஒருவன் இயேசுவின் நாமத்தினால் பிசாசுகளை விர்டினானாம்!

⁴⁹ "அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களுடனேகூட உம்மைப் பின்பற்றாதவனானபடியால், அவனைத் தடுத்தோம் என்றான்."

⁵⁰ அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான் என்றார். (லூக்கா 9:49-50)


இயேசு பிசாசுகளை தேவனுடைய விரலினால் விரட்டினாராம்.லூக்கா 11:20





52.சீடரை அசட்டை பண்ணுபவன் இயேசுவை அசட்டை பண்ணுபவன். இயேசுவை அசட்டை பண்ணுபவன் அவரை அனுப்பினவரை அசட்டை பண்ணுபவன்

¹⁶ "சீஷரை நோக்கி: உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான், உங்களை அசட்டைபண்ணுகிறவன் என்னை அசட்டைபண்ணுகிறான், என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைப்பண்ணுகிறான் என்றார்."லூக்கா 10:16

மீண்டும் இயேசுவை அனுப்பிய பெரியவர் இருக்கிறார் என தெளிவாகிறது.


 


53.இயேசு சீடர்களுக்கு அதிகாரம் கொடுத்தாராம்.

¹⁹ "இதோ, சர்ப்பங்களையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகலவல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது." (லூக்கா 10:19)

இயேசுவும் அதிகாரம் கொடுக்கப்பட்டவரே- மத்தேயு 28:18

அதேபோல் சாத்தானும் ராஜ்யங்களின் மீது அதிகாரம் ஒப்புக்கொடுத்தார் பட்டுள்ளது. அதை அவன் விரும்பியவனுக்கு கொடுக்க இயலுமாம்- லூக்கா 4:6-7


சோ இதை வைத்து தெய்வீகம் உண்டு என கூற முடியாது.

.



54.பிதா தான் வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவர்-

²¹ "அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது."

லூக்கா 10:21


இயேசுவை ஆண்டவராக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36



55.இயேசுவுக்கு பிதாவினால் சகலதும் ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளதாம்

²² "சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனுந்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று, அறியான் என்றார்."லூக்கா 10:22.

ஒப்புக்கொடுத்தவரே கடவுள்.. கொடுக்கப்பட்டவர் அல்ல!

அதேபோல் சாத்தானும் ராஜ்யங்களின் மீது அதிகாரம் ஒப்புக்கொடுக்கபட்டுள்ளதாம்- லூக்கா 4:6




56. இயேசு மீண்டும் ஜெபம் செய்கிறார்

 சீடர்களுக்கு பிதாவிடம் ஜெபம் செய்யுமாறு கற்றுக்கொடுத்தார்

¹ "அவர் ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீஷரில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம்பண்ணப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்குப் போதிக்கவேண்டும் என்றான்."

² "அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக;"

(லூக்கா 11:1-2)

இதன் மூலம் இயேசு கடவுளல்ல என்பதை இயேசுவே நம்பவில்லை என தெளிவாக புரிகிறது




 57.இயேசு தேவனுடைய விரலினால் பிசாசுகளை விர்டினாராம்

¹⁹ "நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள்."

²⁰ "நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே."

லூக்கா 11:19-20

தேவன் இவரல்ல!



 


58.இயேசு கர்ப்பத்தில் சுமத்தப்பட்டு முலைப்பால் குடித்து வளர்ந்தவர்.. தேவனுடைய வார்த்தையை கேட்டு நடப்போரே இயேசுவை சுமந்த கர்ப்பத்தைவிடவும் அவர் பாலுண்ட முலைகளைவிடவும் பாக்கியவான்கள்

²⁷ "அவர் இவைகளைச் சொல்லுகையில், ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்று சத்தமிட்டுச் சொன்னாள்."

²⁸ "அதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்."

லூக்கா 11:27-28

இதன் மூலம் இயேசு பலவீனமாக படைப்பு என தெளிவாகிறது. தேவன் அல்ல!.




59.தேவனுக்கு பயப்படுமாறு இயேசு போதித்தார்.இயேசுவுக்கு சீடர்கள் சிநேகிதர்கள் என்பதால் அவர்கள் அவருக்கு பயப்பட தேவையில்லை.. ஆனால் தேவனுக்கு பயப்பட வேண்டும்.


⁴ "என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள்."

⁵ "நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலேதள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."

லூக்கா 12:4-5



60. இயேசு பரிசுத்த ஆவியிலும் தாழ்ந்தவர்.. ஆவியை திட்டினால் மன்னிப்பில்லை.. ஆனால் இயேசுவை திட்டினால் மன்னிப்பு கிடைக்கலாம்

¹⁰ எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான விசேஷத்தைச் சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; பரிசுத்த ஆவிக்கு விரோதமாய்த் தூஷணஞ்சொல்லுகிறவனுக்கோ மன்னிக்கப்படுவதில்லை. லூக்கா 12:10




.61.இயேசு முதுகுவளைந்த பெண்ணை சுகப்படுத்தியபோது கூட அந்த பெண்ணும் தேவனை தான் மகிமைப்படுத்தினாள்- லூக்கா 13:11-13


¹¹ அப்பொழுது பதினெட்டுவருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக்கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்.

¹² "இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி,"

¹³ "அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்." லூக்கா 13:11-13

காரணம் அவளுக்கு தெரியும்.. இயேசு மூலம் தேவன் தான் அற்புதம் செய்தார்-அப்போஸ்தலர் 2:22






62.குஷ்டரோகிகள் பத்து பேரை சுகப்படுத்தினாராம். சுகப்படுத்தப்பட்டவர்களில் ஒருவன் மட்டுமே திரும்பி வந்தான். அவனும் தேவனையே மகிமைப்பஞுத்தினான்- லூக்கா 17:15



¹² "அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, குஷ்டரோகமுள்ள மனுஷர் பத்துப்பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று:"

¹³ "இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள்."

¹⁴ "அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள்."

¹⁵ "அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி," 

லூக்கா 17:12-15



63.இயேசுவிடம் முகங்குப்புற விழுந்தானாம் அவன்

¹⁶ "அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான்."லூக்கா 17:16

தீர்க்கதரிசிகள் பாதத்தில் விழுந்து வணங்கும் வழக்கம் அவர்களிடம் இருந்தது. (1 சாமுவேல் 28:14)

ராஜாவை வணங்குவது அதைவிட அதிகமாக உள்ளது. உதாரணமாக 1 நாளாகமம் 29:20



64.ஒருவன் இயேசுவை நல்ல போதகரே என கூப்பிடுகிறார்.. உடனே இயேசு என்னை ஏன் நல்லவன் என்கிறாய் என கேட்டு , தேவன் ஒருவனை தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே என கூறி தனக்கு தெய்வீகம் இல்லை என நிரூபித்தார்.

 …  

¹⁸ "அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்."

¹⁹ அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்லுவானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.

லூக்கா 18:18-19



65.இயேசு ஒரு குருடனை சுகப்படுத்தியபோது , அவனும் தேவனையே மகிமைப்படுத்தினான். மக்களும் தேவனையே மகிமைப்படுத்தினார்கள்

 

⁴¹ "நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்."

⁴² "இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்."

⁴³ "உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்சென்றான். ஜனங்களெல்லாரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள். "

(லூக்கா 18:41-43)

அவர்களெல்லாரும் இயேசுவை தேவனல்ல என அறிந்திருந்தனர்.

இயேசு மூலம் தேவன் தான் அற்புதம் செய்தார்- அப்போஸ்தலர் 2:22

..




66.இயேசு கர்த்தருடைய நாமத்தில் வந்தார் . அதற்காக மக்கள் தேவனை தான் புகழ்ந்தார்கள்

³⁷ "அவர் ஒலிவமலையின் அடிவாரத்துக்குச் சமீபமாய் வருகையில் திரளான கூட்டமாகிய சீஷரெல்லாரும் தாங்கள் கண்ட சகல அற்புதங்களையுங்குறித்துச் சந்தோஷப்பட்டு,"

³⁸ "கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள்." லூக்கா 19:37-38

கர்த்தருடைய நாமத்தில் தான் தாவீதும் வந்ததாக வேறொரு ராஜாவிடம் சொன்னார்- 1 சாமுவோல் 17:45

சோ இதில் தெய்வீகம் இல்லை!!

மக்களும் தேவனை தான் புகழ்ந்தனர்.



 67.இயேசு தேவனுடைய மார்க்கத்தை போதிப்பவர்



²¹ "அவர்கள் வந்து: போதகரே, நீர் நிதானமாய்ப் பேசி உபதேசிக்கிறீரென்றும், முகதாட்சணியமில்லாமல் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீரென்றும் அறிந்திருக்கிறோம்."

லூக்கா 20:21



 …  

.68. கிறிஸ்த்து தாவீதின் குமாரன் என எப்படி சொல்லலாம்? காரணம் தாவீது அவரை ஆண்டவர் என சொன்னாரே என்கிறார்



⁴¹ அவர் அவர்களை நோக்கி: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று எப்படிச் சொல்லுகிறார்கள்?

⁴² "நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று,"

⁴³ கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று தாவீது தானே சங்கீத புஸ்தகத்தில் சொல்லுகிறானே.

⁴⁴ "தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்."

முதலில் சங்கீதம் 110:1 தாவீது மெசியாவை பற்றி பாடியதல்ல.. தாவீதை பற்றி பாடகர் பாடியது ஆகும்.


ஒரு பேச்சுக்கு மெசியாவை குறித்து தாவீது பாடியிருந்தால், மெசியா தாவீதின் குமாரனில்லை என ஆகிவிடுவாரா?




ஆரோன் தன் தம்பியான மோசேயை ஆண்டவன் என சொல்லவில்லையா?? யாத்திராகமம் 32:22


அண்ணன் தன் தம்பியை ஆண்டவனே என கூறியிருக்க முடியுமாயின், தாவீதை விட பெரிய ராஜாவான மெசியாவை தாவீது அப்படி கூறுவதில் ஆச்சரியம் இல்லையே..




இதில் இயேசு சிறு புரிதல் குறைபாட்டை விட்டுள்ளார். இறைவனுக்கு இப்படி நிகழாது. (இது மத்தேயுவிலும் இடம்பெற்றுள்ளது.. நான் அதை மத்தேயு பற்றிய ஆக்கத்தில் குறிப்பிடவில்லை




69.ஆலயத்தின் ஒரு கல்லின் மீது மறு கல் இல்லாதவாறு இடிபட்டு போகும் என இயேசு முன்னறிவித்தார்.


⁶ அவர்: நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார்.

லூக்கா 21:6


ஆனால் இன்றுவரை மேற்கு சுவர் இருந்துகொண்டே உள்ளது.. 




70. மனுசகுமாரன் மிகுந்த வல்லமையோடு மேகத்தில் வருவாராம்!

²⁷ அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.

லூக்கா 21:27

இங்கே கூட தன்னை மனுஷகுமாரன் என கூறி தெய்வீகம் இல்லை என நிரூபித்தார்.




71.தேவனுடைய ராஜ்யத்தில் கூட இயேசு அப்பம் சாப்பிட்டு திராட்சை பழரசம் குடிப்பவராகவே உள்ளார்.

¹⁶ "தேவனுடைய ராஜ்யத்திலே இது நிறைவேறுமளவும் நான் இனி இதைப் புசிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,"

¹⁷ "அவர் பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி: நீங்கள் இதை வாங்கி, உங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொள்ளுங்கள்;"

¹⁸ தேவனுடைய ராஜ்யம் வருமளவும் நான் திராட்சப்பழரசத்தைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

லூக்கா 22:16-18

அப்போது கூட அவர் மனிதராக தான் இருப்பார்.. தேவனாக அல்ல



72.இயேசுஸசீமோனுக்காக வேண்டிக்கொண்டாராம்.

 …  

³¹ "பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்."

³² நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்.லூக்கா 22:31-32

இயேசு யாரிடம் வேண்டினாரோ அவரே கடவுள்..





73.இயேசு தேவனிடம் தன்னை காப்பாற்ற சித்தமிருந்தால் காப்பாற்றுமாறு ஜெபம் பண்ணினார்.


 …  

⁴¹ "அவர்களை விட்டுக் கல்லெறி தூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு:"

⁴² "பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்."

லூக்கா 22:41-42

இயேசு யாரிடம் ஜெபம் செய்தாரோ அவரே கடவுள்.. இயேசு அல்ல




74.இயேசுவை வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி அவரை பலப்படுத்தினாராம்.

⁴³ "அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்." லூக்கா 22:43

தேவதூதனால் பலப்படுத்தப்பட காரணம் அவர் தேவனல்ல.. தேவதூதனிலும் வல்லமையால் தாழ்ந்தவர் என்பதால் தான்!!



75 அவர் மிகவும் பயந்தாராம்.ஊக்கத்தோடே ஜெபம் செய்தாராம்.

⁴⁴ "அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது."

லூக்கா 22:44

அவர் பலவீனமான உணர்வுள்ள மனிதரேயன்றி கடவுளல்ல..




 76.இயேசு தேவனது வலது பக்கத்தில் வீற்றிருப்பாராம்.

⁶⁹ இதுமுதல் மனுஷகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பார் என்றார்.லூக்கா 22:69

சர்வ வல்லமையுள்ள தேவனாக இவர் இல்லை.. மாறாக அவருக்கு வலது பக்கத்தில் வீற்றிருப்பாராம்.. இது கூட அவர் தேவனல்ல என்பதற்கு ஆதாரம்.



77.இயேசு அவரை தேவனுடைய குமாரன் என்றாராம்

⁷⁰ "அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார்."

லூக்கா 22:70

இயேசு தன்னை தேவன் பெற்றெடுத்த பிள்ளை என சொல்லவில்லை .. மாறாக பழைய ஏற்பாட்டில் உள்ளது போல் தான் சொல்லியிருக்கிறார்.

இதை ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன்.




77.தன்னை கொடுமைப்படுத்தி சிலுவையில் அறைவோரை மன்னிக்கும்படி பிதாவிடம் வேண்டினாராம். காரணம் பிதா தான் தேவன்.


³⁴ "அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்." லூக்கா 23:34




78.இயேசு தன் ஆவியை பிதாவுடைய கையில் ஒப்புவிக்கிறேன் என்று சத்தமிட்டு சொன்னாராம்!

இதைக்கேட்ட நூற்றுக்கு அதிபதி அவரை நீதிபரன் என்று கூறி தேவனை மகிமைப்படுத்தினார்.

⁴⁶ "இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்."

⁴⁷ "நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்."

லூக்கா 23:46-47

மரணிப்பவர் கடவுளல்ல!! அவரது உயிரை தன் கையில் வாங்குபவரே கடவுள். நூற்றுக்கு அதிபதி கூட அவரை யாரென அறிந்திருந்தான். அவரை கடவுள் எனஜசொல்லவில்லை!




79.இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதை கூட ஆரம்பத்தில் யாரும் நம்பவில்லை. காரணம் அவர் தேவனல்ல என அறிந்திருந்தனர் என்பதால் தான். அவர் தேவனல்ல என்பதால் தான் அதை குறித்து ஆச்சரியப்பட்டனர்.


¹¹ "இவர்களுடைய வார்த்தைகள் அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றினதினால், அவர்கள் இவர்களை நம்பவில்லை."

¹² "பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்துபார்க்கையில், சீலைகளைத் தனிப்பட வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக் குறித்துத் தன்னில் ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான்."

(லூக்கா 24:11-12)




80.சீடர்கள் கூட இயேசுவை வல்லமையுள்ள தீர்க்கதரிசி என்றே நம்பினார்கள். கிறிஸ்தவர்களை போல அவரை வல்லமையுள்ள தேவன் என நம்பவில்லை!


¹⁸ அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் பிரதியுத்தரமாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ என்றான்.

¹⁹ அவர்: எவைகள் என்றார். அதற்கு அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைக் குறித்தவைகளே; அவர் தேவனுக்கு முன்பாகவும் ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தார்.

லூக்கா 24:18-19

.



 81.இந்த போலி உயிர்த்தெழுதலின் பின்பு கூட இயேசு உடலோடு தான் இருந்தார்.. உணவு சாப்பிடுபவராக தான் இருந்தார்.

³⁶ "இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்."

³⁷ "அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள்."

³⁸ அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?

³⁹ "நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும், எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,"

⁴⁰ தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.

⁴¹ ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார்.

⁴² அப்பொழுது பொரித்த மீன் கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள்.

⁴³ "அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்து,"

லூக்கா 24:36-43



82.இயேசு பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டாராம்.

எடுத்துக்கொள்ளப்பட்டவர் கடவுளா? எடுத்தவர் கடவுளா?

 …  

⁵¹ "அவர்களை ஆசிர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்." லூக்கா 24:51


83.அவரை பணிந்து கொண்டார்களாம்! தீர்க்கதரிசிகளை பணிந்து கொள்ளும் வழமை அவர்களுக்கு உண்டு (1 சாமுவேல் 28:14). ராஜாவை வணங்குவது அதைவிட அதிகமாகவே உள்ளது. உதாரணமாக 1 நாளாகமம் 29:20.


⁵² "அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பிவந்து," லூக்கா 24;52


84.இதன் பின்பு கூட, தேவனை தான் புகழ்ந்து துதித்துக் கொண்டிருந்தனர். இயேசுவை அல்ல


⁵³ நாடோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென். லூக்கா 24:53

அல்லாஹ் வழிதவறச்செய்கிறான் என்பதன் விளக்கம்

1.மனிதனுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது  --மனிதனுக்கு இறைவன் வழி காட்டியுள்ளான். ஒன்று அவன் நன்றியுள்ளவனாக இருக்கிறான் அல்லது காஃபிராக இருக்கிறான...