வெள்ளி, 16 செப்டம்பர், 2022

இயேசு பற்றிய தீர்க்கதரிசனங்கள்-திரிபுகள் (சுவிசேசங்கள்) பகுதி 2

 இயேசுவை பற்றி பழைய ஏற்பாடு முன்னறிவிப்பதாக சுவிசேசங்கள் போலியாக கூறுவது பற்றிய பதிவின் இரண்டாம் பாகம்

முதல் பாகத்தின் தொடர்ச்சி

9.தம்மை பிரசித்தம் பண்ண வேண்டாம் என கூறல்

¹⁵ "இயேசு அதை அறிந்து, அவ்விடம்விட்டு விலகிப்போனார். திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்; அவர்களெல்லாரையும் அவர் சொஸ்தமாக்கி,"

¹⁶ தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.

¹⁷ ஏசாயா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அவன் உரைத்ததாவது:

¹⁸ "இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார்."

¹⁹ "வாக்குவாதம் செய்யவுமாட்டார், கூக்குரலிடவுமாட்டார்; அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை."

²⁰ "அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார்."

²¹ அவருடைய நாமத்தின்மேல் புறஜாதியார் நம்பிக்கையாயிருப்பார்கள் என்பதே. (மத்தேயு 12:15-21)

யேசு நோயாளிகளை சுகப்படுத்திவிட்டு, அதை வெளியில் சொல்ல வேணாம்னு சொன்னதால் அது நிறைவேறிவிட்டதாம்.

அதுவும் யேசுவுக்கு பொருந்தாத ஒன்று.

12:18 இல் அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை அறிவிப்பார். ஆனால் யேசு இவர்களது நம்பிக்கைப் பிரகாரம் இறக்கும் வரை இஸ்ரவேலருக்கு அறிவிக்குமாறு தான் சீடர்களை ஏவினார் (மத்தேயு 10:5 15:22-26)

12:19 அவர் பாதையில் சத்தம் போட மாட்டாராம். வாக்கு வாதம் பண்ண மாட்டாராம்.

ஆனால் யேசு பாதையில் கத்தி சத்தம் போட்டு போதனை செய்தார். 

“"பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்."”

  — யோவான் 7:37 

இதே ஏசாயா 42:1-4 இல், அவர்


4 அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை (சோர்வடையமாட்டார்), பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும்.(ஏசாயா 42:4)

அவர் கடைசிவரை சோர்வடையமாட்டாராம். தளர மாட்டாராம்.

ஆனால் யேசு தளர்ந்து போனார். ஏன் என்னை கைவிட்டீர் என்று தேவனிடம் கேட்டார்.

(மாற்கு 15:34 மத்தேயு 27:46)

எனவே இதுவும் யேசுவுக்கு பொருந்தாது

ஆகவே இதுவும் ஒரு திரிபே ஆகும்.

----------

10.உவமைகளால் பேசுதல்

³⁴ "இவைகளையெல்லாம் இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார்; உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை."

³⁵ என் வாயை உவமைகளினால் திறப்பேன்; உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. (மத்தேயு 13:34-35)

இயேசு உவமைகளை கூறியதால் , இந்த தீர்க்கதரிசனம் நிறைவேறிவிட்டதாம்.

ஆனால் உண்மையில் அது தீர்க்கதரிசனமே அல்ல!

தன் முன்னோரிடமிருந்து கேட்டவற்றை அறிவிப்பதாகவே சங்கீத புத்தகம் சொல்கிறது:

¹ "என் ஜனங்களே, என் உபதேசத்தைக் கேளுங்கள்; என் வாயின் வசனங்களுக்கு உங்கள் செவிகளைச் சாயுங்கள்."

² என் வாயை உவமைகளால் திறப்பேன்; பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன்.

³ அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்; எங்கள் பிதாக்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.

⁴ "பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதியங்களையும் விவரிப்போம்."

பழைய காலத்து கதைகளை முன்னோர் சொல்ல கேட்டதை அப்படியே அறிவிப்பதாக சொல்வதை அப்படியே இயேசு உவமைகளால் வாயை திறப்பதாக அடித்து விடுகிறார்.

-------------

11.கழுதைக் குட்டியில் ஏறிப்போதல்

²"உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடே ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள்."”

  ³ "ஒருவன் உங்களுக்கு ஏதாகிலும் சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவைகளை அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்."

⁴ "இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள் என்று,"

⁵ தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. (மத்தேயு 21:2-5)

மெசியா கழுதை மீதும் கழுதைக்குட்டி மீதும் ஏறீ சீயோனுக்கு வருவார் என உள்ளதை அப்படியே இயேசுவுக்கு பொருத்துவதற்காக மத்தேயு கழுதையையும் அதன் குட்டியையும் அவிழ்த்து வருமாறு அனுப்பியதாகவும், சீடர்கள் வர இயேசு கழுதைமேலும் அதன் குட்டி மேலும் ஏறி வந்தது போன்று எழுதுகிறார்.

ஆனால் மாற்கு மற்றும் லூக்கா , யோவான் ஆகிய மூவரும் ஒரு கழுதையை அவிழ்த்து வர சொன்னதாகவும் , ஒரு கழுதையிலேயே ஏறி சென்றதாகவும் கூறுகிறார்கள்.

² "உங்களுக்கு எதிரேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; அதில் பிரவேசித்தவுடனே, மனுஷர் ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருக்கக் காண்பீர்கள், அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள்."

⁴ "அவர்கள் போய், வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைக் கண்டு, அதை அவிழ்த்தார்கள்."

⁷ "அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, அதின்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டார்கள்; அவர் அதின்மேல் ஏறிப்போனார்." (மாற்கு 11:2,4,7)


³⁰ "உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள், அதிலே பிரவேசிக்கும்போது மனுஷரிலொருவனும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்."

³¹ "அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடத்தில் கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் என்றார்." (லூக்கா 19:30-31)

¹⁴ "அல்லாமலும்: சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக்குட்டியின்மேல் ஏறிவருகிறார் என்று எழுதியிருக்கிறபிரகாரமாக,"

¹⁵ இயேசு ஒரு கழுதைக்குட்டியைக் கண்டு அதின்மேல் ஏறிப்போனார்.(யோவான் 12:14-15)

இதிலிருந்து பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனங்களிற்கேற்ப மத்தேயு போலியாக கதைகளை உண்டாக்கி எழுதுபவர் என்று புரிகிறது.

 ஒரு நபர் எப்படி இரு கழுதைகளில் பயணம் செய்ய இயலும் என்று கூட யோசிக்காமல் சகரியா 9:9 இல் இருப்பதற்கு ஒத்துப்போக இவ்வாறு எழுதியுள்ளார்.

ஆனாலும் இதுகூட இயேசுவுக்கு பொருந்தாது.

ஏனெனின், சீயோனுக்கு வரும் அந்த நபர் ஒரு ராஜா ஆவார்.

⁹ "சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்."

¹⁰ "எப்பிராயீமினின்று இரதங்களையும் எருசலேமினின்று குதிரைகளையும் அற்றுப்போகப்பண்ணுவேன், யுத்தவில்லும் இல்லாமற்போகும்; அவர் ஜாதிகளுக்குச் சமாதானம் கூறுவார்; அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கி பூமியின் எல்லைகள்பரியந்தமும் செல்லும்." (சகரியா 9:9-10)

அந்த ராஜா பெரும் நிலப்பரப்பை ஆளுபவர் என்று சகரியா 9:10

 தெளிவாக கூறுகிறது.

கழுதை மேல் ஏறி போகிறதால் மட்டும் அந்த தீர்க்கதரிசனத்திற்கு பொருத்தமானவராக ஆகிவிடுவதில்லை!.. 

இரண்டாம் வருகையில் அது நிகழும் என கதை விட கூடாது. 

இறந்து போன போலி மெசியாக்கள் அனைவருக்கும் இவ்வாதத்தை பிரயோகிக்கலாம்.  அதாவது இரண்டாம் வருகையில் நிறைவேற்றுவார் என்று..

---------------------

12.ஆடைகளுக்கு சீட்டு போடுதல்

"அவரைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டுக் கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது."”

  — மத்தேயு 27:35 

அப்பொழுது அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அதன்பின்பு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டு, ஒவ்வொருவன் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளும்படி அவைகளைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்."”

  — மாற்கு 15:24 

“"அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்."”

  — லூக்கா 23:34 

அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் போர்ச்சேவகர் இப்படிச் செய்தார்கள்."”

  — யோவான் 19:24

இயேசுவை சிலுவையில் அறைந்த பின்பு அவரது ஆடைகளை பெறுவதற்காக சீட்டுப்போட்டார்களாம்.

இயேசுவுக்கு அவரது ஆடைகளை மீண்டும் அணிவித்த பிறகு தான் அவரை வாரினால் அடித்தார்கள். அதாவது கிழிஞ்ச துணிக்காக சீட்டுக்குழுக்கி போட்டுப்பாங்களா?

சங்கீதம் 22:18 இல் தாவீது ராஜா தனக்கு ஏற்பட்ட துன்பத்தை குறித்து சொல்லும்போது, அவரது ஆடைகளை தங்களுக்குள்ளே பங்கிட்டு , என் உடையின் மேல் சீட்டு போடுகிறார்கள் என்கிறார்.

அங்கு தாவீதுக்கு ஏற்பட்ட இழிநிலையை தீர்க்கதரிசனம் போல் சித்தரித்து, அதற்கு பொருத்திப் போகும் விதமாக, வாரினால் அடிபட்ட பின்னாளுள்ள ஆடைக்கு சீட்டுப்போட்டதாக நான்கு சுவிசேஷங்களும் கதைவிடுகின்றன.

தாவீது ஒன்றும் ,"அவருடைய வஸ்திரங்களை தங்களிடையே பங்கிட்டு, அவருடைய உடையின் பேரில் சீட்டும் போடுவார்கள்" என்று சொல்லவில்லை!

மாறாக தன்னுடைய ஆடையை குறித்தே சொல்கிறார்.

 இவர்கள் தான் தாவீது எழுதும்போது பார்த்துக்கொண்டு இருந்தது போல் தீர்க்கதரிசனம் என புழுகுகிறார்கள்!

-----------

13.முப்பது வெள்ளிக்காசுக்கு குயவனுடைய நிலத்தை வாங்குதல்.

⁹ "இஸ்ரவேல் புத்திரரால் மதிக்கப்பட்டவருக்குக் கிரயமாகிய முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து,"

¹⁰ கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று. (மத்தேயு 27:9-10)

இப்படி ஒன்று எரேமியாவில் இல்லை! 

மாறாக சகரியாவிலேயே உள்ளது. அதில் கூட இவர்கள் கூறுவது போல தீர்க்கதரிசனம் அல்ல!

¹² "உங்கள் பார்வைக்கு நன்றாய்க் கண்டால், என் கூலியைத் தாருங்கள்; இல்லாவிட்டால் இருக்கட்டும் என்று அவர்களோடே சொன்னேன்; அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள்."

¹³ "கர்த்தர் என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து, அவைகளைக் குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன்." (சகரியா 11:11-12)

சகரியாவுக்கு முப்பது காசு கொடுக்கப்பட்டது.

 அதை குயவனிடம் வீசிவிட சொன்னதும், அதை குயவனுக்காக கர்த்தருடைய ஆலயத்தில் எறிந்துவிட்டார்..

சகரியா செய்து முடித்தது எப்படி தீர்க்கதரிசனமாகும்??

 சகரியா செய்ததை யூதாஸ் செய்ததுபோல பில்டப் விடப்படுகிறது.

ஏதோ கர்த்தர் யூதாஸிடம் கூலி கேட்கும்படியும், அந்த கூலியை நிலத்தை வாங்குவதற்காக ஆலயத்தில் எறிந்துவிட சொன்னதுபோன்றும் இட்டுக்கட்டியுள்ளார் மத்தேயு.

வேடிக்கையாக யூதாஸ் அந்த நிலத்தை வாங்கி வில்லை.. 

அக்காசு தனக்கு தேவையில்லை என வீசிவிட்டான். அதை எடுத்து யூத ஆசாரியர் தான் குயவனிடம் அந்நியரை அடக்கம் செய்வதற்காக நிலத்தை வாங்கினார்கள்.(மத்தேயு 27:7)

ஆகவே இதுவும் தீர்க்கதரிசனம் அல்ல!!!

-----------

14.அவர் பல அற்புதங்களை செய்தும் நம்பவில்லை 

³⁷ "அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை."

³⁸ "கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வசனம் நிறைவேறும்படி இப்படி நடந்தது." (யோவான் 12:37-38)

இதுகூட தீர்க்கதரிசனம் அல்ல.. அதுவும் ஏசாயாவின் கூற்றும் அல்ல!

 நோய்வாய்ப்பட்ட ஒரு நபரைக் குறித்து அவரது ஜனங்கள் கூறும் வார்த்தையாகும். 

 ஏசாயா 53 இல் இது இடம்பெறுகின்றது. 

"எங்கள் மூலமாய் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்?" (ஏசாயா 53:1)

இதில் "நாம்/அவர் செய்த அற்புதங்களை கண்டு விசுவாசித்தவன் யார்?" என்று கூறப்படவில்லை!

"விசுவாசித்தவன் யார்" என இருப்பதால், உடனே இயேசுவை விசுவாசிக்கவில்லை என்பதோடு லின்க் பண்ணுகிறார்கள்.!

ஆனால் இயேசுவை அநேகர் விசுவாசித்தார்கள் என அதே அதிகாரத்தில் முரண்பட்டு சொல்கிறார்

“"ஆகிலும் அதிகாரிகளிலும் அநேகர் அவரிடத்தில் விசுவாசம்வைத்தார்கள். அப்படியிருந்தும் ஜெப ஆலயத்துக்குப் புறம்பாக்கப்படாதபடி, பரிசேயர்நிமித்தம் அதை அறிக்கைபண்ணாதிருந்தார்கள்."”

  — யோவான் 12:42 

இப்படி தான் எல்லா தீர்க்கதரிசனமும் உள்ளது. மதத்தைப் பரப்ப இப்படி திரிபு வேலை செய்ய வேண்டுமா?

------------

15.இயேசுவை விசுவாசிக்காததால் ஏசாயாவின் தீர்க்கதரிசனம் நிறைவேறியதாக யோவான் கூறுகிறார்.

³⁹ ஆகையால் அவர்கள் விசுவாசிக்கமாட்டாமல்போனார்கள். ஏனெனில் ஏசாயா பின்னும்:

⁴⁰ "அவர்கள் கண்களினால் காணாமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருக்கும்படிக்கும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமல் இருக்கும்படிக்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார் என்றான்."

⁴¹ "ஏசாயா அவருடைய மகிமையைக் கண்டு, அவரைக்குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான்."“(யோவான் 12:39-41)

வசனத்தை நான் கீழே பதிகிறேன்.

அதற்கு முன் , இதே வசனத்தை மத்தேயு தீர்க்கதரிசனம் என கூறும்போது, இயேசு உவமையாக பேசியது அவர்களுக்கு புரியவில்லை என்பதால் இது நிறைவேறியது என்கிறார்.

¹³ "அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்."

¹⁴ ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்.

¹⁵ "இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே." (மத்தேயு 13:13-15)

யோவானின் படி இயேசுவை விசுவாசாப்பதை குறிக்கிறது

 மத்தேயுவின்படி இது உவமை புரியவில்லை என்பதை குறிக்கிறது.

இந்த இருவருமே பொய்யாக தான் பேசுகிறார்கள் என்பதை ஏசாயா வசனத்தை படித்தால் புரிந்துவிடும்.

இவர்கள் அவ்வசனத்தில் கட்டிங் ஒட்டிங் செய்திருக்கிறார்கள் என்றும் புரியும்.

⁹ "அப்பொழுது அவர்: நீ போய், இந்த ஜனங்களை நோக்கி, நீங்கள் காதாரக் கேட்டும் உணராமலும், கண்ணாரக்கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல்."

¹⁰ "இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி, அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு என்றார்."

¹¹ "அப்பொழுது நான்: ஆண்டவரே, எதுவரைக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர்: பட்டணங்கள் குடியில்லாமலும், வீடுகள் மனுஷசஞ்சாரமில்லாமலும் பாழாகி, பூமி அவாந்தரவெளியாகி,"

¹² "கர்த்தர் மனுஷரைத் தூரமாக விலக்குவதினால், தேசத்தின் நடுமையம் முற்றிலும் வெறுமையாக்கப்படும்வரைக்குமே." (ஏசாயா 6:9-12)

ஏசாயாவுக்கு கர்த்தர் இட்ட கட்டளையை, இயேசு கால யூதர்களுக்கு உவமை புரியாததால் நிறைவேறியதாக அடித்துவிடுவதும், இயேசுவை நம்பாததால் நிறைவேறியது என்றும் கூறுவது மாபெரும் திரிபு அல்லவா???

------------------

16.அக்கிரமக்காரரில் ஒருவர் என எண்ணப்படல்.

அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் முடிவு பெறுங்காலம் வந்திருக்கிறது என்றார்.”

  — லூக்கா 22:37 

²⁷ "அல்லாமலும், அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும் அவருடைய இடதுபக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு கள்ளரை அவரோடேகூடச் சிலுவைகளில் அறைந்தார்கள்."

²⁸ அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதனாலே நிறைவேறிற்று. (மாற்கு 15:27-28)

இயேசு அக்கிரமக்காரரில் ஒருவர் என எண்ணப்படுவது எப்படி என்று லூக்கா சொல்லாவிட்டாலும், மாற்கு சொல்கிறார். அதாவது இரு திருடர்களோடு இவரை சிலுவையில் அறைந்ததால் அக்கிரமக்காரரில் ஒருவர் என எண்ணப்படுவார் என்ற தீர்க்கதரிசனம் நிறைவேறியதாம்.

இதுவும் ஏசாயா 53இல் இடம்பெறும் ஒரு வசனமாகும்.

“"அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார். "”

  — Isaiah 53:12 

ஏசாயாவில் கூறப்படுபவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்படுவார் என்பதால், அது இயேசுவை குறிக்கும் என்பதாகாது.

அதற்கு முந்திய வசனத்தில்,

“"கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்."”

  — ஏசாயா 53:10 

அவர் தன் சந்ததியையும் கண்டு நீடித்த நாளாக இருப்பார் என்று உள்ளது.

இங்கே உள்ளது zera என்ற எபிரேய வார்த்தை ஆகும். இது சொந்த பிள்ளைகளை மட்டுமே குறிக்கும்.

ஆனால் இயேசுவுக்கோ இப்படியொரு சந்ததி இல்லை!!

 சம்பந்தமின்றி சங்கீதம் 22:30ஐ காட்ட வேண்டாம்.. அதிலுள்ளது "அதோர்" என்பதாகும். அது வேறு வார்த்தை

மேலும் அந்த நபர் ஆயுள் நீடிக்கப்படுவார் என்று உள்ளது. ஆனால் இயேசு 33வயதில் இறந்துவிட்டதாக இவர்கள் நம்புகின்றனர்.. சந்ததியும் இல்லை!

சோ பொருந்தாதை பொருத்திப் பார்ப்பது தவறு!!

----------------

17.அப்பம் புசிக்கிறவன் தன் குதிகாலை தூக்குதல்.

உங்களெல்லாரையுங்குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்; ஆகிலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்."”

  — யோவான் 13:18 

இதுவும் ஒரு தீர்க்கதரிசனமே கிடையாது..

 மாறாக தாவீதுடன் இருந்த பகைவர்களை யும் துரோகிகளை குறித்து தேவனிடம் முறையிடுவதே அப்பாடல் ஆகும். (சங் 41:9)

⁷ "என் பகைஞரெல்லாரும் என்மேல் ஏகமாய் முணுமுணுத்து, எனக்கு விரோதமாயிருந்து, எனக்குப் பொல்லாங்கு நினைத்து,"

⁸ தீராவியாதி அவனைப் பிடித்துக் கொண்டது; படுக்கையில் கிடக்கிற அவன் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள்.

⁹ "என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்."

¹⁰ "கர்த்தாவே, நீர் எனக்கு இரங்கி, நான் அவர்களுக்குச் சரிக்கட்ட என்னை எழுந்திருக்கப்பண்ணும்." (சங்கீதம் 41:7-10)

உற்ற நண்பரும் , அவர் நம்பியவருமான நபர் தன் மீது தன் குதிகாலை தூக்கினான் என்கிறார்.

ஆனால் இயேசு யூதாசை நம்பவே இல்லை என்று இதே யோவானில் இயேசு முன்னரும் சொல்லிவிட்டதாக எழுதப்பட்டுள்ளது.

“"ஆகிலும் உங்களில் விசுவாசியாதவர்கள் சிலர் உண்டு என்றார்; விசுவாசியாதவர்கள் இன்னாரென்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இன்னானென்றும் ஆதிமுதலாக இயேசு அறிந்திருந்தபடியால், அவர் பின்னும்:"”

  — யோவான் 6:64 

“இயேசு அவர்களை நோக்கி: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார்.”

  — யோவான் 6:70 

ஆகவே இயேசு யூதாசை ஆரம்பம் முதலே நம்பவில்லை..

 பிறகு எப்படி சங்கீதம் 41:9 யூதாசுக்கு பொருந்தும்??

ஆகவே தம் இஷ்டம் போல எழுதி வைத்திருக்கிறார்..

--------------

18..அவரது எலும்புகளில் ஒன்றும் முறிக்கப் படுவதில்லை 

³⁶ அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது. (யோவான் 19:36)

அதாவது இயேசு கொஞ்ச நேரத்திலேயே செத்துவிட்டதால், காலை உடைக்கவில்லையாம். (19:34) . இதனால் இது (சங் 34:20) நிறைவேறியதாம்!

இது சங்கீதம் 34இல் இடம்பெறுகிறது.

 அதாவது நீதிமான்களை கர்த்தர் காப்பாற்றுவார் துன்மார்க்கரை அழிப்பார் என்று கூறும் அதிகாரமே இது.

¹⁹ "நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்."

²⁰ அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை.

²¹ தீமை துன்மார்க்கனைக் கொல்லும்; நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள்.

²² கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது.(சங்கீதம் 34:19-21)

ஆனால் இங்கு கர்த்தர் அவனுடைய எல்லா எலும்பையும் காப்பாற்றுவார் என்றே கூறுகிறது.. கால் எலும்பை மட்டும் அல்ல!

சிலுவையில் கையை துளைத்து ஆணி அடித்தாலே கையில் உள்ள எலும்புகள் உடையும்! 

ஆகவே அது அவருக்கு பொருந்தாது.

22ம் வசனத்தில், அவரை நம்புவோர் ஒருவர் மீதும் குற்றம் சுமராது என்கிறது.

 ஆனால் இவரையோ குற்றம் சுமத்தி தான் சிலுவையில் அறைந்தனர் என எழுதப்பட்டுள்ளது.

------------

19..அவர்கள் குத்தினவரை நோக்கிப் பார்த்தல்

³⁷ அல்லாமலும் தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது. (யோவான் 19:37)

முதலில் குத்தினவரை நோக்கிப் பார்ப்பார்கள் என்று எங்கும் இல்லை!

 சகரியா 12:10 இல் இடம்பெறும் வசனத்தை தனக்கு ஏற்றாற்போல் வளைத்து இயேசுவை பற்றிய தீர்க்கதரிசனம் போன்று கூறுகிறார்.

“And I will pour upon the house of David, and upon the inhabitants of Jerusalem, the spirit of grace and of supplication; and they shall look unto Me because they have thrust him through; and they shall mourn for him, as one mourneth for his only son, and shall be in bitterness for him, as one that is in bitterness for his first-born.”

  — Zech 12:10 (JPOT)

நான் தாவீது குடும்பத்தார்மீதும் எருசலேம் குடிகளின் மீதும் கிருபையின் ஆவியையும் , விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அவர்கள் (எதிரிகள்) #அவனை குத்தியதால், இவர்கள் (தாவீதின் குடும்பத்தாரும்,எருசலேம் குடிகளும்) #என்னை நோக்கி பார்ப்பார்கள். தன் ஒரே மகனுக்கு புலம்புகிறதுபோல #அவனுக்காக புலம்புவார்கள். தன் முதற்பேறானவனுக்கு துக்கிப்பது போல அவனுக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள். (சகரியா 12:10)

இந்த அதிகாரம் எருசலேமைச்சூழ யுத்தம் நடக்கும் போது நிகழுவதாகும்.(சகரியா 12:2-3)

இங்கே குத்தின நபரை பார்ப்பதில்லை!

 எதிரிகள் குத்தியதற்காக தேவனை நோக்கி பார்ப்பார்கள்.

அதில் குத்தியது எதிரிகள்.. பார்ப்பது தாவீதின் குடும்பத்தார்.

யோவான் பிரகாரம், பார்த்தது யூதர்கள் அல்ல! ரோமர்கள்.

எப்படியோ யாரோ யாரையோ பார்த்தாங்க என்பதால் யுத்தத்தின் போது நடப்பதை, சம்பந்தமற்ற நிகழ்வில் சொருகுவதென்பதை ஏற்க இயலாது!!

--------

20..மரித்தோரிலிருந்து எழ வேண்டும் .

அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவேண்டும் என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாதிருந்தார்கள்.”

  — John 20:9 

இப்படி ஒரு வேதவாக்கியம் இல்லை! சும்மா போற போக்கில் அடித்துவிட்டிருக்கிறார்.






புதன், 17 ஆகஸ்ட், 2022

அப்போஸ்தலர் நடபடிகள் செய்த திரிபுகள்

1.யூதாசை பற்றிய தீர்க்கதரிசனம்

¹⁶ "சகோதரரே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவி தாவீதின் வாக்கினால் முன் சொன்ன வேதவாக்கியம் நிறைவேறவேண்டியதாயிருந்தது."

¹⁷ "அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்திலே பங்குபெற்றவனாயிருந்தான்."

¹⁸ "அநீதத்தின் கூலியினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறுவெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று."

²⁰ "சங்கீத புஸ்தகத்திலே: அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக என்றும்; அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என்றும் எழுதியிருக்கிறது." (அப்போஸ்தலர் 1:16-20)

முதலிலியே யூதாசு அநீதத்தின் கூலியால் ஒரு நிலத்தை சம்பாதித்தார் என்று 1:18 கூறுகிறது.

ஆனால் உண்மையில் மத்தேயுவின் கூற்றுப்படி, யூதாசு நிலத்தை சம்பாதிக்கவில்லை! அவன் முப்பது காசை ஆலயத்தினுள் எறிந்துவிட, அந்நியனை அடக்கம் செய்வதற்கு யூத ஆசாரியர்கள் தான் நிலத்தை சம்பாதித்தனர்.(மத்தேயு 27:5-7)

இனி தீர்க்கதரிசனம் பற்றி பார்ப்போம்:

"அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது" என்று யூதாசை குறித்து கூறப்பட்டுள்ளதாம்!

ஆனால் உண்மையில் தாவீது ராஜா தன் எதிரிகளையே அவ்வாறு சபித்தார். ஒரே ஒரு நபரை சபிக்கவில்லை! மாறாக எதிரிகள் கூட்டத்தை சபிக்கிறார். அதன் ஒரு வரியை தூக்கியெடுத்து , அது யூதாசை குறித்து தாவீது சொன்னதாக அடித்து விடுகிறார்!

¹⁹ தேவரீர் என் நிந்தையையும் என் வெட்கத்தையும் என் அவமானத்தையும் அறிந்திருக்கிறீர்; என் சத்துருக்கள் எல்லாரும் உமக்கு முன்பாக இருக்கிறார்கள்.

²³ அவர்களுடைய கண்கள் காணாதபடி அந்தகாரப்படக்கடவது; அவர்கள் இடுப்புகளை எப்போதும் தள்ளாடப்பண்ணும்.

²⁴ உம்முடைய உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றும்; உம்முடைய கோபாக்கினி அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக.

²⁵ அவர்கள் வாசஸ்தலம் பாழாகக்கடவது; அவர்களுடைய கூடாரங்களில் குடியில்லாமற்போவதாக.(சங்கீதம் 69:19,23-25)

இதேபோல் "அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன்" என்றும் யூதாசை குறித்து தாவீது சொன்னதாக அடித்து விடுகிறார்.

அதுகூட தாவீதை கொல்ல நினைத்த பகைவனையே தாவீது சபிக்கிறார். அதை சம்பந்தமே இல்லாமல், யூதாசை குறிப்பதாக பொய்யாக புழுகியுள்ளார்கள்.

² "துன்மார்க்கனுடைய வாயும், கபட்டுவாயும், எனக்கு விரோதமாய்த் திறந்திருக்கிறது; கள்ளநாவினால் என்னோடே பேசுகிறார்கள்."

³ "பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு, முகாந்தரமில்லாமல் என்னோடே போர்செய்கிறார்கள்."

⁸ அவன் நாட்கள் கொஞ்சமாகக்கடவது; அவன் உத்தியோகத்தை வேறொருவன் பெறக்கடவன்.

¹⁶ "அவன் தயைசெய்ய நினையாமல், சிறுமையும் எளிமையுமானவனைத் துன்பப்படுத்தி, மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே."

²⁰ "இதுதான் என்னை விரோதிக்கிறவர்களுக்கும், என் ஆத்துமாவுக்கு விரோதமாய்த் தீங்கு பேசுகிறவர்களுக்கும் கர்த்தரால் வரும் பலன்."

²² "நான் சிறுமையும் எளிமையுமானவன், என் இருதயம் எனக்குள் குத்துண்டிருக்கிறது."(சங்கீதம் 109:2,3,8,16,20,22)

தாவீது தன் எதிரிகளை குறித்து சபித்து ஜெபித்த ஜெபத்தை, யூதாசை குறித்து சொன்னதாக எழுதுவது இலக்கிய மோசடி இல்லையா?? தம் மதத்தை பரப்புவதற்கு இப்படி பொய் பேசவேண்டுமா?

-------------------------------------------------

2.யோவேலின் தீர்க்கதரிசனம் பெந்தகோஸ்து 

¹⁶ தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது.

¹⁷ "கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்;"

¹⁸ "என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்."

¹⁹ "அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழ பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன்."

²⁰ "கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்."

²¹ அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார். (அப்போஸ்தலர் 2:16-21)

இது யோவேல் 2:28-32 இல் உள்ளது.

இங்கு கூட, மாம்சமான அனைவரிலும் தன் ஆவியை ஊற்றுவதாகவும், குமாரரும் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள் என்று கூறப்படுகிறது.

ஆனால் இங்கு ஆவியானது அனைவர் மீதும் இறங்கவில்லை! சீடர்கள் மீது இறங்கியதாகவே கூறப்படுகிறது. 

மேலும் அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லவில்லை!! மாறாக ஏனைய யூதர்களின் ஜென்மபாசைகளில் பேசினார்கள் அவ்வளவே. (அப்போஸ்தலர் 2:6-11)

ஆகவே இதுவும் போலியாக திரித்தே எழுதியுள்ளார்!

--------------------------------------------

3.இயேசு அழிவை காண்பதில்லை என்று தாவீது தீர்க்கதரிசனம் சொன்னானாம்!

²⁵ அவரைக்குறித்துத் தாவீது: கர்த்தரை ஏப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்;


²⁶ "அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்;"

²⁷ "என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்;"

²⁸ ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சந்நிதானத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான்.

²⁹ "சகோதரரே, கோத்திரத்தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது."

³⁰ "அவன் தீர்க்கதரிசியாயிருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க மாம்சத்தின்படி உன் சந்ததியிலே கிறிஸ்துவை ஏழும்பப்பண்ணுவேன் என்று தேவன் தனக்குச் சத்தியம்பண்ணினதை அறிந்தபடியால்,"

³¹ "அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்." (அப்போஸ்தலர் 2:25-31)

தாவீது தன்னை குறித்து பாடியதை மீண்டும், இயேசுவை குறித்து சொன்னதாக பொய்யாக இட்டுக்கட்டி எழுதுகிறார்.

¹ "தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்."

⁸ கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.

¹⁰ என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்.

¹¹ "ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு. " (சங்கீதம் 16:1,8,10-11)

இங்கே தெளிவாக "என் ஆத்துமாவை பாதாளத்தில் விடீர்" என்று இருப்பதை அப்படியே "இயேசுவின் ஆத்துமாவை பாதாளத்தில் விடீர் " என்று பொய்யாக புழுகுகிறார்.

இது இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி சொன்னதாக வேறு கதை விடுகிறார்.

இவர்களது நம்பிக்கை படி, இயேசு இழிவான மரணத்தை பெற்றதாக நம்புகிறார்கள். பிறகு எப்படி அழிவை காணவிடமாட்டீர் என்பது இயேசுவை குறிக்கும்??

அழிவை கண்டுவிட்டாரே..

அடுத்து உயிர்த்தெழுதல் என்பது அனைவருக்கும் உள்ள ஒன்று தான்.

மோசே இயேசுவை வந்து சந்தித்ததாக இதே லூக்கா எழுதி வைத்திருக்கிறார்.

ஆபிரகாமின் மடியில் லாசரு இருப்பதாக வேறு கதையை எழுதியும் வைத்திருக்கிறார்.

இப்படி எல்லாருமே உயிர்த்தெழுந்து இருக்கும்போது,, இவர்களது நம்பிக்கைப் படி இழி மரணத்தை சந்தித்த இயேசு அழிவை காணவில்லையாம். பாதாளத்தில் விடப்படவில்லையாம். எவ்வளவு வேடிக்கை??

தாவீது தன்னை குறித்து பாடியதை இயேசுவை குறித்து சொன்னதாக பொய்யாக பேசுவதால் பயன் இல்லை!!

தாவீதை பாதாளத்தில் விடவில்லை என இதே சங்கீதம் 30:3 கூறுகிறது.

இழிவான மரணத்திலிருந்து இரட்சிக்கப்படுவதையே இது குறிக்கும்.. மற்றபடி மரணித்து அடக்கம் செய்யப்பட்டார் என்பதை அல்ல!

ஆனால் இயேசுவுக்கோ அப்படி இல்லை!!

----------------------------------------------

4.இயேசு பரலோகத்துக்கு போவார் என தாவீது சொன்னதாக மீண்டும் பொய்யாக சொல்கிறார்.

³⁴ "தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே. நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும்,"

³⁵ நீர் என் வலதுபாரிசத்தில் உட்காருமென்று கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று அவனே சொல்லியிருக்கிறான்.

³⁶ "ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்." (அப்போஸ்தலர் 2:34-36)

தாவீதுக்கு வலது பாரிசசத்தில் தேவன் இருக்கிறார் என்று சங்கீதம் 16:8 சொல்கிறதே.

அப்படி என்றால் தாவீது பரலோகத்தில் தேவனுடைய இடது பக்கத்தில் நின்றுகொண்டிருக்கிறார் என்று அர்த்தமா? அல்லது தேவன் பூமியில் தாவீதுக்கு வலது பக்கத்தில் நின்றுகொண்டிருந்தார் என்று அர்த்தமா?

தாவீதுடைய சங்கீதக்காரன் தாவீதைக்குறித்து சங்கீதம் 110:1-2 இல் பாடுவதை, தாவீது இயேசுவை குறித்து சொல்லியிருப்பதாக புழுகுகிறார்

-------------------------------------

5.மோசேயை போன்ற தீர்க்கதரிசி 

²² மோசே பிதாக்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.

²³ "அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனெவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான் என்றான்."(அப்போஸ்தலர் 3:22-23)

இது உபாகமம் 18:15-19ஐ திரித்து கூறியுள்ளார்.

“உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.”

  — உபாகமம் 18:15 

அந்த தீர்க்கதரிசி யின் சொல்கேளாதவன் நிர்மூலமாக்கப்படுவான் என்று அந்த புத்தகத்திலேயே கிடையாது..

மாறாக அவனை நான் விசாரிப்பேன் என்றே உள்ளது.

“என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.”

  — உபாகமம் 18:19 

பழைய ஏற்பாட்டு வசனங்களுக்கு பட்டி டிங்கரிங் பார்த்து தான் இயேசுவுக்கு அதை பொருத்துவதற்கு அப்போதே முற்பட்டுள்ளனர்.

சரி.. இது இயேசுவுக்கு பொருந்துமா?

இயேசு மோசேயை போன்ற தீர்க்கதரிசியாக இருந்தாரா?

1.மோசே புது சட்டத்தை (தோரா) கொண்டுவந்தார். இயேசு அதற்கு கீழ்படிந்தே வாழ்ந்தார். அப்படியாயின் இயேசுவை அதிகபட்சமாக ஆரோனை போன்ற தீர்க்கதரிசி என்று தான் சொல்லலாம்.. மோசேயை போன்றவராக மாட்டார்.

2.மோசேயின் பிறப்பு முதல் மரணம் வரை எதிலுமே இயேசு அவரை போன்றவராக இருக்கவில்லை! 

3.மோசே தன் இனத்தாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், அவர்களுக்கு தலைவராக இருந்தார். அவரை ஏற்றுக்கொள்ளாதோர் அப்போதே அழிக்கப்பட்டனர். ஆனால் இயேசுவையோ அப்படி முழு இனத்தாரும் ஏற்றுக்கொள்ளவில்லை! 

சோ எந்த விதத்திலும் மோசேக்கு சமானமாக இயேசு இருக்கவில்லை! அவரை பின்தொடர்ந்தவராகவே இருந்தார்.

மேலும் யோவான் சுவிசேசத்தின்படி, அக்கால யூதர்கள் கூட "எலியா,மெசியா, தீர்க்கதரிசி ஆகிய மூவரும் வெவ்வேறானவர்கள் " என்றே நம்பியிருந்தனர். யோவான் கூட அதற்கு பதிலளிக்கும் போது அதை மறுத்து பேசவில்லை (யோவான் 1:19-22)

----------

6.கர்த்தருக்கு விரோதமாகவும், அவரது கிறிஸ்வுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் கூட்டம் கூடினார்கள்.

²⁶ "கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே."

²⁷ "அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி,"

²⁸ "ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள்."(அப்போஸ்தலர் 4:26-28)

இது சங்கீதம் 2:1-2 இல் இடம்பெற்றுள்ளது.

அதில் குறிப்பாக 2:7ஐ பார்க்கும்போது, 

“"தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி, நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;"”

  — சங்கீதம் 2:7 (TBSI)

கர்த்தர் என்னை நோக்கி சொன்னார் என்று கூறி, என்னை அவரது குமாரன் என்று சொன்னதாக சொல்கிறார் தாவீது. அதாவது தாவீதை தான் தன் குமாரன் என தேவன் சொன்னதாக இங்கு கூறப்படுகிறது.

---------------------

7.ஆப்ரகாமின் வரலாற்றை மாற்றி பேசுதல்.

² "அதற்கு அவன்: சகோதரரே, பிதாக்களே, கேளுங்கள். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்னமே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி:"

³ "நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார்."

⁴ "அப்பொழுது அவன் கல்தேயர் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, காரானூரிலே வாசம்பண்ணினான். அவனுடைய தகப்பன் மரித்தபின்பு, அவ்விடத்தை விட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இத்தேசத்திற்கு அவனை அழைத்துக்கொண்டுவந்து குடியிருக்கும்படி செய்தார்." (அப்போஸ்தலர் 7:2-4)

அதாவது ஆப்ரகாம் காரான் என்ற ஊரிலிருந்து வெளியேறியது தனது தந்தை மரணித்த பின்னர் என்கிறார் ஸ்தேவான்.. அதுவும் பரிசுத்த ஆவியால் நிறைந்து சொன்னாராம்.

ஆனால் பழைய ஏற்பாட்டை போய் பார்த்தால், ஆப்ரகாம் தன் தந்தை மரணிக்க முன்பே காரான் ஊரிலிருந்து வெளியேறிவிட்டார்.

²⁶ "தேராகு எழுபது வயதானபோது, ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்."

³¹ "தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், ஆரானுடைய குமாரனும், தன் பேரனுமாயிருந்த லோத்தையும், தன் குமாரன் ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு, கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான் மட்டும் வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள்."

³² தேராகுடைய ஆயுசு நாட்கள் இருநூற்றைந்து வருஷம்; தேராகு ஆரானிலே மரித்தான். (ஆதியாகமம் 11:26,31-32)

ஆப்ரகாமின் தகப்பன் 70 வயதில் ஆப்ரகாம் பிறந்துவிட்டார்.. (ஆதி 11:26)..

ஒரு பேச்சுக்கு இதை 80 என்று வைத்தாவது ஸ்தேவான் சொன்னதை காப்பாற்ற முடியுமா என பார்ப்போம்.

அவர்கள் ஆரான் (காரான்) எனும் ஊருக்கு வந்து அங்கு தங்கினார்கள். (ஆதி 11:31)

தேராகு 205 வயதில் இறந்தார்.(ஆதி 11:32)

அதாவது ஆப்ரகாமின் 145ஆவது வயதில் இறந்திருக்க வேண்டும். அதன் பின்னர் தான் ஆரானிலிருந்து வெளியேறி இருக்க வேண்டும் (அப்போஸ்தலர் 7:4)

 என்று ஸ்தேவான் ஆவி தூண்டி பேசினாராம்.

ஆனால் பழைய ஏற்பாடு ஆப்ரகாம் 75 வயதில் ஆரானிலிருந்து வெளியேறி போய்விட்டார் என்கிறது.

“"கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப்போனான்; லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான்."”

  — ஆதியாகமம் 12:4 

அதாவது தன் தந்தை மரணிப்பதற்கு 70 வருடங்கள் முன்னரே ஆப்ரகாம் ஆரானிலிருந்து வெளியேறிவிட்டார்.

இது தான் இவர்களது பரிசுத்த ஆவி... பழைய ஏற்பாட்டில் இருப்பதை கூட சரியாக வாசித்து சொல்லாமல் தப்புதப்பாகவே கூறும்.

--------------------

8.யாக்கோபின் அடக்கத்தளம் பற்றி மாற்றி பேசுதல்.

¹⁵ "அந்தப்படி யாக்கோபு எகிப்துக்குப் போனான். அவனும் நம்முடைய பிதாக்களும் மரித்து,"

¹⁶ "அங்கேயிருந்து சீகேமுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம் சீகேமின் தகப்பனாகிய ஏமோருடைய சந்ததியாரிடத்தில் ரொக்கக்கிரயத்துக்கு வாங்கியிருந்த கல்லறையில் வைக்கப்பட்டார்கள்."

¹⁷ "ஆபிரகாமுக்கு தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறுங்காலம் சமீபித்தபோது," (அப்போஸ்தலர் 7:15-17)

அதாவது யாக்கோபும் கோத்திரபிதாக்களும் சீகேமில் அடக்கம் பண்ணப்பட்டார் என்று இதே ஸ்தேவான் சொல்கிறார்.

உண்மையில் சீகேமின் தகப்பனிடம் யாக்கோபு தான் நிலத்தை வாங்கினார். ஆப்ரகாம் அல்ல. (ஆதி 33:18) ,

 அங்கேயோசேப்பின் எலும்புகளை தான் 470+ வருடங்கள் கழித்து அடக்கம் செய்தார்கள். யாக்கோபை அல்ல!(யோசுவா 24:32) 

ஆனால் ஆப்ரகாம் ஏத்தியனான எப்ரோனிடம் தான் கல்லறைக்காக குகையை வாங்கினார். அங்கு தான் யாக்கோபு அடக்கப்பட்டார்.

“"அவனைக் கானான் தேசத்துக்குக் கொண்டுபோய், ஆபிரகாம் மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்திலே தனக்குச் சொந்தக் கல்லறை பூமியாக ஏத்தியனாகிய எப்பெரோனிடத்தில் வாங்கின நிலத்திலுள்ள குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்."”

  — ஆதியாகமம் 50:13 

அதாவது ஆவி தூண்டி பேசிய ஸ்தேவான் பழைய ஏற்பாட்டை சரியாக படிக்கவில்லை.. அவரிடம் இருந்த ஆவிக்கு கூட இது தெரியவில்லை!

-------------

9.எகிப்துக்குப்போன இஸ்ரேலிய மக்களின் எண்ணிக்கையை மாற்றி பேசுதல்.

“"பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபும் தன்னுடைய இனத்தார் யாவருமாகிய, எழுபத்தைந்துபேரை அழைக்க அனுப்பினான்."”

  — அப்போஸ்தலர் 7:14 (TBSI)

ஆனால் பழைய ஏற்பாட்டில் 70 பேர் என்றே உள்ளது.(ஆதி 46:27, யாத்திராகமம் 1:5)

இதுவும் ஆவி தூண்டி பேசிய ஸ்தேவான் தான் சொல்கிறார்... பாருங்கள் ஆவியின் இலட்சியத்தை!!!

------------------------

10.வரலாற்றை மாத்தி பேசும் ஆவிதூண்டிய ஸ்தேவான்.

⁴⁰ ஆரோனை நோக்கி: எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும் என்று சொல்லி;

⁴¹ "அந்நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்கள் கையின் கிரியைகளில் களிகூர்ந்தார்கள்."

⁴² "அப்பொழுது தேவன் அவர்களை விட்டு விலகி, வானசேனைக்கு ஆராதனை செய்ய அவர்களை ஒப்புக்கொடுத்தார். அதைக்குறித்து: இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்தரத்திலிருந்த நாற்பது வருஷம்வரையில் காணிக்கைகளையும் பலிகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ என்றும்,"

⁴³ "பணிந்துகொள்ளும்படி நீங்கள் உண்டாக்கின சொரூபங்களாகிய மோளோகினுடைய கூடாரத்தையும், உங்கள் தேவனாகிய ரெம்பான் என்னும் நட்சத்திர சொரூபத்தையும் சுமந்தீர்களே; ஆகையால் உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப்பண்ணுவேன் என்றும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதே."(அப்போஸ்தலர் 7:40-43)

மோசேயின் காலத்தில் மாட்டை வணங்கியதற்காக, ஆமோஸ் காலத்தில் நட்சத்திர கடவுளை வணங்க வைத்ததோடு லின்க் பண்ணுகிறார்.

குறிப்பாக அதில் தமஸ்குவுக்கு அப்பால் குடிபோக பண்ணுவேன் (ஆமோஸ் 5:27) என்று உள்ளதை அப்படியே ஆவி தூண்டியதால், குழம்பி "பாபிலோனுக்கு அப்பால் குடிபோக பண்ணுவேன் "(அப்7:43) என்று மாற்றி கூறுகிறார்.

இவர்களது பரிசுத்த ஆவியின் லட்சணம் இது தான்... பழையதை சரியாக வாசிக்கவே மாட்டார்கள்.

-------------

11.மோசேயிடம் சொன்னதை ஆப்ரகாமிடம் சொன்னதாக தப்பாக பேசும் ஆவி தூண்டிய ஸ்தேவான்.

“அவர்களை அடிமைப்படுத்தும் ஜனத்தையோ நான் ஆக்கினைக்குட்படுத்துவேன். அதற்குப்பின்பு அவர்கள் புறப்பட்டுவந்து இவ்விடத்திலே எனக்கு ஆராதனை செய்வார்கள் என்றார்.”

  — அப்போஸ்தலர் 7:7 

ஆப்ராகமிடம் இதை தேவன் சொன்னதாக சொல்கிறார். ஆனால் ஆப்ராகமிடம் மிகுந்த பொருட்களுடன் புறப்பட்டு வருவார்கள் என்று தான் சொன்னார்.

“இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள்.”

  — ஆதியாகமம் 15:14 .

எனக்கு ஆராதனை செய்வார்கள் என்று இதே விசயத்தை மோசேயிடம் தான் சொன்னார்:

“"அதற்கு அவர்: நான் உன்னோடே இருப்பேன்; நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்துவந்தபின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார்."”

  — யாத்திராகமம் 3:12 

இதை கூட மாற்றியே சொல்கிறார்.

--------------------

11.அடிக்கப்படும் ஆட்டை போல இருந்தார். பழைய ஏற்பாட்டை மீண்டும் திரிக்கிறார்.

³² அவன் வாசித்த வேதவாக்கியம் என்னவென்றால்: அவர் ஒரு ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்; மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்.

³³ அவர் தம்மைத் தாழ்த்தினபோது அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது; அவருடைய ஜீவன் பூமியிலிருந்து எடுபட்டுப்போயிற்று; அவருடைய வம்சத்தை யாராலே சொல்லிமுடியும் என்பதே.(அப்போஸ்தலர் 8:32-33)

ஏசாயா 53இல் இடம்பெறும் வசனமே இது.

ஆனால் இது இயேசுவுக்கு பொருந்தாது. காரணம், அந்த நபருக்கு சந்ததி காணப்படும். 

அந்த சந்ததியை அவர் ஆயூள் நீடிக்கப்பட்டு காண்பார் என்று அதே ஏசாயா 53:10 இல் தெளிவாக உள்ளது.

பாவிகளால் பாதிக்கப்பட்டு பாவிகளின் இழிசொல்லுக்கு அகப்பட்ட நல்ல மனிதர்களை பற்றியே இவ்வதிகாரம் உவமையாக பேசுகிறது.

அந்த தன் ஆவியை குற்ற நிவாரண பலியாக கொடுக்கும்போது அவர் சாகாமல், ஆயுள் நீடிக்கப்பட்டு தன் சந்ததியை காண்பார்.

ஆனால் இயேசுவுக்கு சந்ததி கிடையாது. 

Zera என்பது மாம்ச சந்ததியையே குறிக்கும்.

தோர் என்பது அல்ல! சோ இயேசுவுக்கு சம்பந்தப்படாத வசனத்தை எத்தியோப்பியர் வாசிப்பார்கள். அதுக்கு பிலிப்பு விளக்கம் வேறு தப்பு தப்பாக கொடுப்பாராம்.

----------------------

12.தீர்க்கதரிசிகள் கூறாததை கூறியதாக கூறுதல்

“அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.”

  — Acts 10:43 (TBSI)

இப்படி பழைய ஏற்பாட்டில் எங்கே உள்ளது??

------------_----

13.தாவீது பேரில் மீண்டும் திரித்து பேசும் பவுல்.

³² "நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று இரண்டாம் சங்கீதத்தில் எழுதியிருக்கிறபடியே,"

³³ இயேசுவை எழுப்பினதினாலே தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் என்று நாங்களும் உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கிறோம்.

³⁴ இனி அவர் அழிவுக்குட்படாதபடிக்கு அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்பதைக்குறித்து: தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக் கட்டளையிடுவேன் என்று திருவுளம் பற்றினார்.

³⁵ "அன்றியும், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர் என்று வேறொரு சங்கீதத்தில் சொல்லியிருக்கிறது."

³⁶ "தாவீது தன் காலத்திலே தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியஞ்செய்தபின்பு நித்திரையடைந்து, தன் பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான்."

³⁷ தேவனால் எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை. (அப்போஸ்தலர் 13:32-37)

முதலில் "நீர் என்னுடைய குமாரன். இன்று நான் உம்மை ஜெனிப்பித்தேன்" சங்கீதம் 2:7 தாவீதிடம் தேவன் சொன்னதாகும்.

அதாவது அதிலேயே, "அவர் என்னை நோக்கி சொன்னார்" என்றே இருக்கிறது. ஆகவே முதலாவதே பொய்.

இயேசுவை எழுப்பியதால் , இவர்களும் தேவனுடைய பிள்ளைகள் ஆகிவிட்டார்கள் என்று பவுல் இங்கு கதைவிடுகிறார்.

மீண்டும் தாவீது இறந்ததால் அழிவை கண்டதாகவும், இயேசு எழுந்து விட்டதால் அழிவை காணவில்லை என்றும் கதைவிடுகிறார்.

தாவீது இறந்தாலும், தீர்க்கதரிசி எவர் இறந்தாலும் தேவனிடம் பரலோகத்தில் உயிரோடு தான் இருப்பார்கள்..

இயேசுவை சந்திக்க எலியாவும் இறந்துபோன மோசேயும் வந்ததாக இதை எழுதிய அதே லூக்கா எழுதுகிறார். (லூக்கா 9:30)

இதே போன்றே ஆப்ரகாம் பரலோகத்தில் இருப்பதாகவும் , அவரது மடியில் லாசரு இருந்ததாகவும் இயேசு சொன்னதாக லூக்கா எழுதியுள்ளார் (லூக்கா 16:23)

அழிவை காணவொட்டீர் என்பது இழிவான மரணத்தை விட்டு பாதுகாப்பதையே குறிக்கும்.

ஆனால் இவர்கள் நம்பிக்கைப் படி இயேசு இழிவான மரணத்தை சந்தித்தார். அதாவது அழிவை கண்டுவிட்டார்..  

அழிவை கண்டவரை அழிவை காணாதவர் என்று சித்தரிப்பது திரித்து பேசுவதாகும்.

------------------------------

14.எகிப்திலிருந்து புறப்பட்டது முதல் தாவீது வரை உள்ள காலத்தை தப்பாக சொல்லும் பவுல்

¹⁸ "நாற்பது வருஷகாலமாய் வனாந்தரத்தில் அவர்களை ஆதரித்து,"

¹⁹ "கானான் தேசத்தில் ஏழு ஜாதிகளை அழித்து, அவர்களுடைய தேசத்தை இவர்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிட்டுக் கொடுத்து,"

²⁰ பின்பு ஏறக்குறைய நானூற்றைம்பது வருஷகாலமாய் சாமுவேல் தீர்க்கதரிசிவரைக்கும் அவர்களுக்கு நியாயாதிபதிகளை ஏற்படுத்திவந்தார்.

²¹ அதுமுதல் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்; அப்படியே தேவன் பென்யமீன் கோத்திரத்தானாகிய கீசுடைய குமாரனான சவுலை நாற்பதுவருஷகாலமாய் அவர்களுக்குக் கொடுத்தார்.

²² "பின்பு அவர் அவனைத் தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜவாக ஏற்படுத்தி, ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியும் கொடுத்தார்."(அப்போஸ்தலர் 13:18-22)

அதாவது 40 வருடம் வனாந்தரத்தில் அலைதல்

பிறகு 450 வருடம் சாமுவேல் வரை 

பிறகு 40 வருடம் சவுல் ஆட்சி. 

பிறகு தான் தாவீது வருகிறார். ஆக 40+450+40= 530 வருடங்கள்.

ஆனால் 1 இராஜாக்கள் 6:1 ஆனது, எகிப்திலிருந்து புறப்பட்டதிலிருந்து சொலமோன் ராஜாவானதுவரை 476 வருடங்கள் என்கிறது. (480வது வருடம் சொலமோன் ராஜாவாகிய 4வது வருடம்).

தாவீது 40 வருடம் ஆண்டார். ஆகவே தாவீது ராஜாவாகும்வரை உள்ள காலம் வெறும் 436 வருடங்கள் ஆகும் .

ஆனால் பவுல் பரிசுத்த ஆவி தூண்டி 94 வருடங்களை கூட்டி சொல்கிறார்..

ஆவி தூண்டினாலே பழைய ஏற்பாட்டில் குழம்பி விடுவார்கள்.

----------

15.ஏதோம் என்பதை ஆதாம் (மனிதன்) என்று ஆவி தூண்டி தப்பாக வாசிக்கும் யாக்கோபு

¹⁶ "எப்படியெனில், மற்ற மனுஷரும், என்னுடைய நாமந்தரிக்கப்படும் சகல ஜாதிகளும், கர்த்தரைத் தேடும்படிக்கு,"

¹⁷ "நான் இதற்குப்பின்பு திரும்பிவந்து, விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை மறுபடியும் எடுப்பித்து, அதிலே பழுதாய்ப்போனவைகளை மறுபடியும் சீர்ப்படுத்தி, அதைச் செவ்வையாக நிறுத்துவேன் என்று இவைகளையெல்லாஞ்செய்கிற கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது."

(அப்போஸ்தலர் 15:16-17)

மனுசரில் (ஆதாமில்) என்று இவர் வாசிக்கிறார். ஆனால் உண்மையில் ஏதோமில் என்றே உள்ளது

¹¹ "ஏதோமில் மீதியானவர்களையும், என் நாமம் விளங்கிய சகல ஜாதிகளையும் வசமாக்கிக்கொள்ளும்படிக்கு,"

¹² "அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன் என்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார்." (ஆமோஸ் 9:11-12)

யூத ரபீயிடம் ஒழுங்காக க்ளாஸ் போயிருந்தால், ஏதோமை ஏதோம் என்று வாசித்திருப்பார்கள். இவர்களோ ஆதாம் என்று வாசித்து ஒட்டுமொத்த அர்த்தத்தையே மாற்றுகிறார்கள்

இவர்கள் தப்பாக வாசிப்பதை பொழுதுபோக்காக கொண்டிருக்கிறார்களோ என்பதை நான் அறியமாட்டேன்.





செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

இயேசு பற்றிய தீர்க்கதரிசனங்கள்-திரிபுகள் (சுவிசேசங்கள்) பகுதி 1

பழைய ஏற்பாட்டில் உள்ள அநேக வசனங்களை திரித்து புதிய ஏற்பாட்டில் இயேசுவை பற்றிய தீர்க்கதரிசனங்கள் என எழுதப்பட்டிருக்கின்றன. அவை பற்றி பார்ப்போம்

1.இம்மானுவேல் முன்னறிவிப்பு

இயேசு ஒரு கன்னியிடம் பிறப்பார் என்று பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளதாக மத்தேயு எழுதுகிறார்:

²¹ “அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.”

²² தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.

²³ “அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.”

²⁵ “அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான். (மத்தேயு 1:21-23,25)

பழைய ஏற்பாட்டில் இதை போய் பார்க்காமலேயே இது இயேசுவுக்கு பொருந்தாததை திணித்து எழுதியுள்ளார் மத்தேயு என புரியும் .

ஏனெனில்

1.தேவதூதன் இயேசு என பெயரிடுமாறே யோசேப்புக்கு சொல்கிறார் -(மத் 1:21)

2.யோசேப்பு குழந்தைக்கு இயேசு என்றே பெயரிட்டார்- (மத் 1:25)

3.மரியாளிடமும் தேவதூதர் இயேசு என பெயரிடுமாறே சொல்கிறார் -(லூக்கா 1:31)

4.மரியாளும் யோசேப்பும் சேர்ந்து குழந்தைக்கு இயேசு என்று தான் பெயரிட்டார்கள் -(லூக்கா 2:21)

ஆகவே இம்மானுவேல் என்று பெயரிடப்படவில்லை! ஆகவே அது இவரை குறிக்க இயலாது.

இனி பழைய ஏற்பாட்டில் போய் இதை பார்ப்போம்:

¹⁴ “ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.”

¹⁵ தீமையை வெறுத்து நன்மையைத் தெரிந்துகொள்ள அறியும் வயதுமட்டும் அவர் வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவார்.

¹⁶ “அந்தப் பிள்ளை தீமையை வெறுக்கவும், நன்மையைத் தெரிந்துகொள்ளவும் அறிகிறதற்குமுன்னே, நீ அருவருக்கிற தேசம் அதின் இரண்டு ராஜாக்களால் விட்டுவிடப்படும்.” (ஏசாயா 7:14-16)

அந்த இம்மானுவேல் பருவ வயதை அடையும் முன்பே , ஆகாஸ் ராஜா வெறுக்கும் தேசம் , அதன் இரண்டு இராஜாக்களாலும் விடப்பட்டுவிடும் என்று உள்ளது.

இயேசு காலத்தில் ஆகாஸ் வெறுத்த தேசம் இரண்டு ராஜாக்களால் விடப்பட்டதா??

ஏன் கர்த்தர் அடையாளத்தை கொடுத்தார்?

ஆகாஸுடைய ஆட்சியில் இஸ்ரவேலின் ராஜாவும், சீரிய ராஜாவும் எருசலேமின் மீது யுத்தம் செய்ய வந்தனர்-(ஏசாயா 7:1)

சீரியர் எப்ராயீம் (இஸ்ரேல்) மக்களுடன் இருப்பதை அறிந்து ராஜா ஆகாஸ் பயந்தான் -7:2

கர்த்தர் ஏசாயாவையும் பையனையும் அனுப்பி ராஜாவிடம் இதை குறித்து அஞ்ச வேண்டாம் என்று சொல்ல சொல்கிறார் -7:3-6

அவர்கள் திட்டம் போட்டது நடக்காது என்றும், 65 வருடங்களில் இஸ்ரேல் /எப்ராயீம் தேசம் நிலைக்காமல் அழிந்து போகும் என்கிறார் -7:7-9

இது நடப்பதற்கு தேவனிடம் அடையாளத்தை வேண்டிக்கொள் என ராஜாவிடம் கூற, ராஜா கேட்கமாட்டேன் என்கிறான்-7:10-12

அப்போது தான் இந்த அடையாளம் கொடுக்கப்படுகிறது.

அதாவது ஒரு கன்னி/இளம் பெண் கர்ப்பமாகி ஒரு குமாரனை பெற்று இம்மானுவேல் என பெயரிடுவான். அவன் வளர்ந்து பெரியாளாக முன்பே அவன் அவருவருத்த எப்ராயீம் தேசம் சீரிய ராஜாவினாலும், இஸ்ரேல் ராஜாவினாலும் கைவிடப்படும் என்ற அடையாளம் கொடுக்கப்படுகிறது !

இயேசு காலத்தில் இஸ்ரேல் ராஜா இருந்ததா? சீரிய ராஜா இருந்ததா? அவர்கள் ஆகாஸ் காலத்திலிருந்து 65 வருட காலத்தினுள்ளே வாழ்நதனரா?

இல்லை.. மாறாக 700 வருடங்கள் பின்பு இயேசு பிறந்தார்.

65 வருடத்தில் இஸ்ரேல்/எப்ராயீம் அழியும் என்பதற்கு அடையாளமாக கொடுக்கப்பட்ட குழந்தை பருவ வயதை அடைய முன்பே எப்ராயீம் தேசம் கைவிடப்படும் என்பதிலிருந்து இம்மானுவேல் ஆகாஷ் காலத்தில் பிறப்பவன் என்று தெளிவாகிறது.

-அடுத்து கன்னி கர்ப்பமாகி குழந்தை பெறுவாள் என்பது, உடலுறவின்றி பிறக்கும் என்பது அல்ல!! மாறாக கன்னிப் பெண்ணை திருமணம் முடித்து அவள் பெறும் முதல் குழந்தை என்பதாகும்.

இவ்வாறே ஏசாயா ஒரு தீர்க்கதரிசி பெண்ணை சேர்ந்து பிள்ளை பெற வைக்கிறார்- ஏசாயா 8:3

இந்த பையன் பேச துவங்கும் முன்பே இஸ்ரேல் (சமாரியா), தமஸ்கு (சீரியா) செல்வங்களெல்லாம் அசீரிய ராஜாவுக்கு கிடைத்துவிடும் என்கிறார் -8:4

அசீரிய ராஜா மூலம் இஸ்ரேலை அளிப்பார் என்கிறார்-8:6-7

இது யூதாவுக்குள்ளும் புகும் என்று இம்மானுவேலை விளித்து சொல்கிறார்-ஏசாயா 8:8

ஆகவே இம்மானுவேல் என்பவர் ஏசாயா காலத்தில் உள்ளவனே அல்லாமல் ,700 வருடம் பிறகு பிறப்பவர் அல்ல!

ஒரு கன்னி/இளம் பெண் கர்ப்பமாகி ஆண்பிள்ளையை பெறுவாள் என்பதால், இயேசு கன்னியின் பையன் என்பதால், அதனுடன் சம்பந்தமின்றி லின்க் செய்துள்ளார் மத்தேயு!

வேடிக்கையாக கன்னியை குறிப்பதற்கு பாவிக்கும் பெத்தூலா என்ற வார்த்தையே இங்கு இல்லை !

மாறாக அல்மா என்ற வார்த்தையே உள்ளது. அது இளம் பெண்ணையே குறிக்கும்! கன்னியும் அதில் அடங்கினாலும், எப்போதும் அது கன்னியையே குறிக்கவேண்டியதில்லை!

—————–

2.பெத்லகேமில் பிறப்பார்.

⁵ அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அதேனென்றால்:

⁶ “யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள்.”(மத்தேயு 2:5-6)

இங்கே பெத்லகேமில் பிறப்பார் என வேதபாரகர் மெசியாவை குறித்து சொன்னார்களாம்.

லூக்கா 2:5இன்படி , நாசரேத் ஊரில் வாழ்ந்த இருவர் குடிமதிப்பு எழுத பெத்லகேமுக்கு போக , அங்கே இயேசு பிறந்தார். பின்பு மத்தேயு 2:22, லூக்கா 2:39,51,மாற்கு 1:24,6:1 ,யோவான் 7:41-42 படி அவர்கள் மீண்டும் நாசரேத் ஊரில் தான் வாழ்ந்தனர்…

குறிப்பாக யூதர்கள் இயேசுவை ஏற்காததற்கு காரணமாக கிறிஸ்த்து (மெசியா) தாவீதின் ஊரிலிருந்து வருவார். ஆனால் இயேசுவோ கலிலேயா (இதன் ஒரு ஊர் நாசரேத்) இலிருந்து கிறிஸ்து (மெசியா) வரமாட்டார் என்ற கருத்தும் இருந்தது. (யோவான் 7:41-42).

மெசியா பெத்லகேமிருந்து புறப்படுவாரே தவிர, அவர் பெத்லகேமில் பிறப்பார் என கூறப்படவில்லை

இயேசு பெத்லகேமில் வாழ்ந்தவர் அல்ல என்பதால் (அவர் நசரேத்தில் தான் வாழ்ந்தார்.) அவரை பெத்லகேமில் ஜாயின் பண்ணி விடுவதற்காக தான் பெத்லகேமுக்கு அவரது பெற்றோர் போனதாகவும், அங்கே அவர் பிறந்ததாகவும் கதை எழுதப்பட்டுள்ளது.

இதற்கு வேடிக்கையான ஒரு காரணம் கூறப்படுகிறது. குடிமதிப்பு எழுதுவதற்காக யோசேப்பு தன் தந்தையான தாவீதின் ஊருக்கு போனாராம்.காரணம் அவர் தாவீதின் வம்சத்தானாம். (லூக்கா 2:4-5).

யோசேப்பு தனக்கு முன் 1000 வருடத்திற்கு முன் வாழ்ந்த தன் முன்னோரின் ஊருக்கு ஏன் குடிமதிப்பு எழுத போக வேண்டும்?? அப்படி சட்டம் ஏதும் இருக்கவில்லை…. இயேசுவுக்கு பெத்லகேமுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு இவ்வாறு எழுதியுள்ளார்கள்.

அடுத்து இந்த மெசியா இஸ்ரேலை ஆளப்போகும் பிரபு ஆவார். ஆனால் இயேசுவை குறித்து அப்படி புதிய ஏற்பாடு சொன்னாலும், அவர் இஸ்ரேலை ஆளவில்லை!!!

ஆகவே இது இயேசுவுக்கு பொருந்தாது.

காரணம்

1.மீகா 5:2 இல் மெசியா பெத்லகேமில் பிறப்பார் என சொல்லவில்லை!

2.இயேசு பெத்லகேமில் வாழவில்லை. அவர் வாழ்ந்தது கலிலேயாவில் நாசரேத் ஊரில் ஆகும்.

மேலும் அவர் இஸ்ரேலை ஆளுபவர். இயேசு ஆளவில்லை!

————-

3.எகிப்தில் மெசியா வாழ்வார் என்று உள்ளதாம்.

¹⁴ “அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய்,”

¹⁵ “ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.” (மத்தேயு 2:14-15)

முதலில் இது தீர்க்கதரிசனமே கிடையாது. இஸ்ரேல் மக்களை மோசே காலத்தில் எகிப்திலிருந்து புறப்படப் பண்ணியதை கூறும் வசனம் ஆகும்.

“”அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன்.””

— யாத்திராகமம் 4:22

¹ இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்.

² “அவர்கள் தங்களை அழைக்கிறவர்களின் முகத்துக்கு விலகிப்போய்விட்டார்கள்; பாகால்களுக்குப் பலியிட்டு, விக்கிரகங்களுக்குத் தூபங்காட்டினார்கள்.” (ஓசியா 11:1-2)

ஓசியா 11:1 இல் , இஸ்ரேலிய மக்களை ஒருமையில் ஒரு இனமாக கூறி , அவர்களை எகிப்திலிருந்து வெளிக்கொண்டுவந்ததை, அப்படியே இயேசுவை குறித்து சொன்னதாக புழுகியுள்ளார் மத்தேயு.

அங்கே “என்னுடைய குமாரன்” என உள்ளதால், இயேசுவை தேவனுடைய குமாரன் என இவர் நம்புவதால், அப்படியே அதை தீர்க்கதரிசனம் என்பது போல இட்டுக்கட்டி எழுதுகிறார்.

ஆகவே இது இயேசு குறித்த தீர்க்கதரிசனம் அல்ல.

காரணம்:

அது இஸ்ரேலிய மக்களை குறித்து கூறுவது. அதுவும் கடந்த கால நிகழ்வை குறிப்பதாகும்.

—————–

4.குழந்தைக்கொலை

¹⁶ “அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான்.”

¹⁷ “புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாதிருக்கிறாள் என்று,”

¹⁸ எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.(மத்தேயு 2:16-18)

இதுகூடவேடிக்கையாக உள்ளது.

இங்கு குழந்தை கொலை நடந்ததாக கூறப்படுவது பெத்லகேமில் ஆகும். அதாவது யூதா கோத்திரத்திற்கு கிடைக்கப்பெற்ற இடத்தில் ஆகும்.

யூதாவோ லேயாள் (லேயா) என்ற பெண்ணுக்கு பிறந்தவர் ஆவார்.

ராகேலுக்கு இரண்டு பிள்ளைகள் தான் பிறந்தனர். முதலாவது யோசேப்பு. அவரது தம்பி பென்யமீன். யோசேப்பின் ஒரு மகனான எப்ராயீம் மக்களுக்கு கிடைக்கப்பெற்ற இடமே ராமா என்ற இடமாகும்.

அதாவது லேயாளுடைய பையன்கள் பெத்லகேமில் கொல்லப்பட்டதற்காக, அவளுடைய தங்கச்சி தன் பேரக்குழந்தையின் ஜனங்களுக்காக அழுகிறாளாம்.. ஏதாவது சம்பந்தம் உள்ளதா?

அதுமட்டுமின்றி அலுகுரல் எப்ராயீம் மக்கள் வாழ்ந்த வேறோரு இடத்தில் கேட்கப்பட்டதா?

ஆகவே சம்பந்தமின்றி மத்தேயு மேற்கோள் காட்டியுள்ளார்.

மேலும் மத்தேயு குறிப்பிடும் எரேமியா வசனத்தை பாருங்கள்:

¹⁵ “ராமாவிலே புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாதபடியால் அவைகளினிமித்தம் ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”

¹⁶ “நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர்விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன் கிரியைக்குப் பலனுண்டென்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் சத்துருவின் தேசத்திலிருந்து திரும்பிவருவார்கள்.”

¹⁷ உன் முடிவைப்பற்றி உனக்கு நம்பிக்கையுண்டு; உன் பிள்ளைகள் தங்கள் தேசத்துக்குத் திரும்பிவருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். (எரேமியா 31:15-17)

இதன்படி எப்ராயீம் கோத்திரத்தினர் ராமாவிலிருந்து பிடிக்கப்பட்டு சென்றுவிட்டனர். அதற்காக ராகேல் அழுவதாகவும், ராமாவில் அழுகுரல் கேட்பதாகவும் எழுதப்பட்டுள்ளது. அந்த ராகேலின் பிள்ளைகள் திரும்பவும் அதே தேசத்திற்கு வருவார்கள் என்றும் (17ம் வசனம் ) கூறுகிறது.

ஆகவே அடிமைகளாக கடத்திச்செல்லப்பட்ட எப்ராயீம் இனமக்களை குறித்து கூறப்பட்டதை, சம்பந்தமேயின்றி குழந்தைக்கொலையுடன் இணைத்து புழுகுகிறர் மத்தேயு.

ஆகவே இது திரிக்கப்பட்டதாகும்.

காரணம்:

1.இது கடத்திச் செல்லப்பட்ட எப்ராயீம் கோத்திரத்தினரை குறித்தது.

ஆனால் குழந்தைக்கொலையோ யூதா கோத்திரத்துடன் சம்பந்தப்பட்டது.

2.எப்ராயீம் கோத்திரத்தினரே ராமாவில் வாழ்ந்தனர். பெத்லகேமில் அவர்கள் இருக்கவில்லை.

3.ராகேலின் பிள்ளைகளில் யோசேப்பின் பையனான எப்ராயீம் கோத்திரத்தினர் தான் வருவர். லேயாளின் பையனாகிய யூதா கோத்திரம் அல்ல!

————-

5.நசரேயன் என அழைக்கப்படுவார்

²³ “நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம்பண்ணினான். நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. ” (மத்தேயு 2:23)

இப்படி ஒரு தீர்க்கதரிசனம் எந்தவோர் புத்தகத்திலும் இல்லை! சிம்சான் என்பவர் பிறந்தது முதல் நசரேயனாக இருப்பார் என்று உள்ளது. இங்கே நசரேயன் என்பது ஊர் சார்ந்தது அல்ல… விரதமிருப்பவரை குறிக்கிறது. அதுகூட மெசியாவை பற்றிய தீர்க்கதரிசனம் அல்ல.. சிம்சானை பற்றியது. (நியாயாதிபதிகள் 13:5,7)

ஆனால் மத்தேயுவோ ஊரோடு லின்க் பண்ணி கதை விடுகிறார். ஆனால் மெசியா வை குறித்து அவர் நசரேயனாக இருப்பார் என எந்த தீர்க்கதரிசன புத்தகத்திலும் இல்லை!

ஆகவே இதுவும் போலி

————

6.வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம்

“”கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே.””

— மத்தேயு 3:3

³ “கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்;” மாற்கு 1:3

³ “அப்பொழுது: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,”

⁴ “பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் செவ்வையாகும், கரடானவைகள் சமமாகும் என்றும்,”

⁵ “மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள் என்றும், வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்று ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தில் எழுதியிருக்கிறபிரகாரம்,”

⁶ “அவன் யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும் போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான்.” (லூக்கா 3:3-6)

²³.அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ்வைப்பண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்.””(யோவான் 1:23)

ஏசாயா தீர்க்கதரிசி யோவானைக்குறித்தே இவ்வாறு சொன்னதாக நான்கு சுவிசேசங்களும் பொய்யாக பேசுகின்றன.

உண்மையில் இது ஏசாயா தீர்க்கதரிசியிடம் பேசிய சத்தமாகும் .

³ “கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,”

⁴ “பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும்,”

⁵ “கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று.”

⁶ “பின்னும் கூப்பிட்டுச் சொல் என்று ஒரு சத்தம் உண்டாயிற்று; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேன் என்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது.” (ஏசாயா 40:3-6)

ஏசாயாவிடம் பேசிய சத்தத்தை யோவானை குறித்து சொல்வதாக நான்கு சுவிசேசங்களும் கூறுகின்றன.

————

7.இயேசு நசரேத்தை விட்டு கப்பர்நகூமில் வாசம் பண்ணுதல்

¹³ “நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர்நகூமிலே வந்து வாசம்பண்ணினார்.”

¹⁴ “கடற்கரையருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலுமுள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடும் ஆகிய புறஜாதியாருடைய கலிலேயாவிலே,”

¹⁵ “இருளில் இருக்கும் ஜனங்கள் பெரியவெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று,”

¹⁶ ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.(மத்தேயு 4:13-16)

இயேசு கப்பர்நகூமுக்கு வருவதற்கும் செபுலோன் நப்தலி நாட்டில் இருக்கும் ஜனங்கள் வெளிச்சத்தை காண்பதற்கும் என்ன சம்பந்தம்??

இயேசு செபுலோன் நப்தலி நாட்டுக்கு வரவுமில்லையே.

மேலும் ஏசாயா 9:1-4 பார்த்தால், இது இயேசுவுக்கு சம்பந்தமில்லை என்று புரியும்.

ஏசாயா 8 முதல் 9 அதிகாரம் அசீரியருக்கு அடிமையாகப்போகும் மக்களை குறித்து சொல்கிறது. ஆனால் அப்போது செபுலோன் நப்தலீ நாடுகளுக்கு அப்படி நிகழாது என்றும் கூறி, அவர்கள் தான் வெளிச்சத்தை கண்டவர்கள்.

அசீரியருக்கு அடிமையாகி விடுதலைபெற்று ரோமருக்கு அடிமையாக இருந்தோரை பற்றி இங்கு பேசவில்லை! ஆகவே இயேசுவை குறித்து சொல்லியிருப்பதாக மத்தேயு பொய்யே சொல்கிறார்.

—————–

8.நோயாளிகளை சுகப்படுத்தல்

¹⁶ “அஸ்தமனமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார்.”

¹⁷ “அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.”(மத்தேயு 8:16-17)

இயேசு நோயாளிகளை சுகப்படுத்தியதை, அவர் நம் நோய்களை சுமந்தார் என்று சம்பந்தமின்றி ஏசாயா 53:4 ஐ குறிப்பிடுகிறார்.

“ஆனால், அவர் நமது நோய்களை எடுத்து தனதாக்கிக்கொண்டார். அவர் நமது வலியை எடுத்துக்கொண்டார். தேவன் அவரைக் தண்டித்துவிட்டார் என்று நாம் நினைத்தோம். அவர் செய்தவற்றுக்காகத் தேவன் அவரை அடித்தார் என்று நாம் நினைத்தோம்.”

— எசாயா 53:4 (ERV-TA)

ஏசாயா கூறும் நபரோ, மற்றவர்களின் நோயையும் சுமந்த பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி ஆவார்.

ஆனால் இயேசு நோயாளி அல்லவே!

நோயை சுமந்தார் என்று இருப்பதால், கொஞ்சமும் யோசிக்காமல் நோயை சுகபபடுததிதுடன் லின்க் பண்ணுகிறார்.

ஆகவே இதுவும் ஒரு திரிபே ஆகும்.

—————–

அடுத்து பாகம்




புதன், 20 ஜூலை, 2022

வெளிப்படுத்தின விசேஷம் படி இயேசு கடவுள் அல்ல

 யூதா படி இயேசு கடவுள் அல்ல

வெளிப்படுத்தின விஷேசம் படி இயேசு கடவுள் அல்ல

இது யோவான் என்பவர் தான் கண்ட கனவை எழுதியதாக கருதப்படுகிறது


1.இதன் முதலாவது வசனமே இயேசு வேறு தேவன் வேறு என்று தெளிவாக கூறுகிறது.


அதாவது தேவன் இயேசுவுக்கு ஒப்புவித்ததை , இயேசு தூதனை அனுப்பி யோவானுக்கு வெளிப்படுத்தியதாம் இது… தேவன் சொல்லி கொடுத்தால் தான் யேசுவுக்கு தெரியவரும் போல.


¹ “சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம்.”(வெளி 1:1)


2.இயேசு வேறு தேவன் வேறு.. அதாவது இயேசுவுடைய பிதா தான் தேவனாம்.


⁶ “நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.” (வெளி 1:6)


3.இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவரும் இயேசு அல்ல

“"இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்."”

  — Revelation 1:8 (TBSI)


Note: “இதில் இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய” என வருவது இயேசுவை குறித்து அல்ல. ஏனெனில் கிரேக்க பிரதிகளில் தியோஸ் (தேவன்) என உள்ளது..





தேவன் என்பது மொழிபெயர்ப்பில் விடப்பட்டுள்ளது. ஆனால் வெளி 4:8,16:5-7 இல் விடப்படவில்லை. தேவனே இருக்கிறவர் இருந்தவர் வருகிறவர். இயேசு அல்ல


————–


3.இயேசு தன்னை அல்ஃபா, ஒமேகா , முந்தினவர் பிந்தினவர் என சொன்னாராம்.



¹¹ “அது: நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது.” (வெளி 1:11)

இதே புத்தகத்தில் இயேசுவே தேவனது முதல் படைப்பு என்று கூறப்பட்டுள்ளது


“"லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;"”

  — Revelation 3:14 (TBSI)


இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு இன்னும் தெளிவாக இருக்கும்:

“And unto the angel of the church of the Laodiceans write; These things saith the Amen, the faithful and true witness, the beginning of the creation of God“And unto the angel of the church of the Laodiceans write; These things saith the Amen, the faithful and true witness, the beginning of the creation of God;”

  — Revelation 3:14 (KJV)

அதாவது இயேசு தேவனது முதல் படைப்பாக இருப்பதால், முந்தினவர் என்றும்

மேலும் கடைசி காலத்திலும் இயேசு வருகிறதாக சொல்லப்படுவதால், அவரை பிந்தினவர் என்றும் சொல்லப்படுகிறது.


இதில் தெய்வீகம் இல்லை.


இயேசு வேறு தேவன் வேறு னு இதே புத்தகம் கூறும்போது, இது இயேசுவை தேவனாக சித்தரிப்பதாக கூறுவது அபத்தமாகும்.


மேலதிகமாக

 யேசு என்பவர் வார்த்தை மனிதனாக வந்தவர் என்கிறது புதிய ஏற்பாடு.(யோவான் 1:14).

 வார்த்தை என்பது , தேவனது பேச்சிலிருந்து உள்ளது ஆகும்.. அது நபர் கிடையாது.. அது ஏற்கனவே தேவனது பையனாக அவரது மடியில் இருந்தது என்பதாக நினைத்துக்கொண்டனர்..(யோவான் 1:18). காரணம் யேசு குழந்தையாக தாயின் வயிற்றிலிருந்து வந்ததால், பிறக்க முன்பும் குழந்தையாக இருந்ததாக கருதினர்.


தேவன் தான் கட்டளையிட்டதன் மூலம் சகலதும் உண்டானதாக (ஆதி 1:3,5,7..) பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளதால், இது இயேசு தான் என புரிந்த இவர்கள், இயேசு மூலமாக தேவன் சகலத்தையும் படைத்தார் எழுதியுமுள்ளார்கள். (உதாரணமாக யோவான் 1:2-3, கொலோசெயர் 1:16-17)

குறிப்பு: கடவுள் முந்தினவரும் பிந்தினவரும் ஆவார் என்பது அவருக்கு முன் வேறு தேவன் இருக்கவில்லை. அவருக்கு பின் வேறு தேவன் உருவாவதில்லை என்பதை குறிக்கிறது. அதாவது நான் மட்டுமே கடவுள் என்பதை குறிக்கிறது (ஏசாயா 44:6).

ஆனால் இயேசுவோ கடவுளுடைய ஒரே மகன் என்பதை குறிப்பதற்காக (யோவான் 1:18 ,எபிரேயர் 1:2) அதாவது இயேசுவுக்கு முன் தேவனிடம் ஜனிப்பிக்கப்பட்ட மகன் இல்லை என்றும் பிறகும் உண்டாவதில்லை என்பதையே வெளிப்படுத்தின விசேஷம் சித்தரிக்கிறது. இதனால் இயேசுவின் ஆவியை பெற்று தேவனுக்கு இயேசுவின் உடன் பங்காளிகளாக நாம் இருப்போம் என பவுல் எழுதுகிறார் (ரோமர் 8:17 , கலாத்தியர் 4:7)


----------


5.இயேசு மீண்டும் தன்னை முந்தினவர் பிந்தினவர் என சொன்னாராம். அவர் மரணித்தாராம். பிறகு எப்போதும் உயிருடன் இருக்கிறாராம்.


¹⁷ “நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;”

¹⁸ “மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன் (வெளி 1:17-18) also 2:8


முந்தினவர் பிந்தினவர் குறித்து குறிப்பு 4ஐ பார்க்கவும்.


இயேசு மரணித்ததாக கூறுகிறார்.. மரணித்தவர் இறைவனில்லையே..


மரணித்த பின் சகலரும் உயிரோடு. தான் இருப்பதாக தான் கூறப்படுகிறது.


ஏனெனில் தேவன் தன்னை குறித்து முட்செடி கதையில் மோசேயிடம் தன்னை இறந்தோரின் தேவன் அல்ல.. உயிருள்ளோரின் தேவன் என்பதை நான் ஆப்ரகாம் ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் தேவன் என சொன்னாராம் என இயேசு சொன்னாராம்.(மாற்கு 12:26-27, லூக்கா 20:37-38)


அதேபோல ஆப்ரகாம் சொர்க்கத்தில் உயர் அந்தஸ்த்தில் இயேசு காலத்திலேயே இருந்துள்ளார். (லூக்கா 16:23-31)


சோ மரணித்த பின் உயிரோடு இருப்பதால் ஆச்சரியம் இல்லையே..


எலியா , ஏனோக் மரணிக்காமல் வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக கூறுகிறது.. அதேபோல் மெல்கிசேதேக் என்ற ஆசாரியனும் முடிவில்லாதவனாக எபிரேயர் (தப்பாக) புத்தகம் கூறுகிறது.

------


6.தேவன் வேறு இயேசு வேறு. இயேசு தன்னை தேவனுடைய பையன் என்றாராம்.

.


¹⁸ “தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: அக்கினிஜூவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது;” (வெளி 2:18)

இவர்களது நம்பிக்கை தேவன் வேறு இயேசு வேறு என்பதே.

இயேசு எப்படி தேவகுமாரன் ஆனார் என்று இயேசு சொல்லும்போது,

 தேவனால் பரிசுத்தம்பண்ணப்பட்டதாலும், அவரால் அனுப்பப்பட்டதாலுமே என்று யோவான் 10:36 என்கிறார்.

இதேபோல் சொலமோனை குறித்தும் அவனுக்கு நான் பிதாவாக இருப்பேன். அவன் எனக்கு குமாரனாக இருப்பான் என்று 2 சாமுவேல் 7:14 இல் கூறப்படுகிறது.

தேவனது குமாரன் என்றாலே தேவன் என்பவர் வேறு நபர் என்றாகிவிடும்.

-------


7.இயேசு பிதாவிடம் அதிகாரம் பெற்றவரே என்று இயேசு சொன்னார்னு எழுதுகிறார்.. அதாவது இவர் கடவுள்னா கடவுளுக்கு சமம்னா ஏன் பிதா கொடுத்து இவர் பெற வேண்டும்?


²⁶ “ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.”(வெளி 2:26)

-----------


8.தேவன் என்பவர் இயேசுவுக்கும் தேவனாயிருக்கிறார்…சோ இயேசு வேறு தேவன் வேறு;”


¹² “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.”(வெளி 3:12)


இதில் மட்டும் தேவனை “என் தேவன்” என இயேசு சொன்னதாக நான்கு தடவைகள் வந்துள்ளன.

------------


9.இயேசு என்பவர் தேவனது படைப்பின் ஆரம்பம்

“"லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;"”


  — வெளி 3:14 (TBSI)




இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு இன்னும் தெளிவாக இருக்கும்:


“And unto the angel of the church of the Laodiceans write; These things saith the Amen, the faithful and true witness, the beginning of the creation of God“And unto the angel of the church of the Laodiceans write; These things saith the Amen, the faithful and true witness, the beginning of the creation of God;

  — Revelation 3:14 (KJV)

அதாவது தேவன் முதலாவதாக இவரை படைத்ததாக இது சித்தரிக்கிறது.

-------


10.தேவன் வேறு இயேசு வேறு.. தேவன் தான் சகலத்தையும் படைத்ததாகவே இப்புத்தகம் கூறுகிறது


.

⁸ “அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.”


¹⁰ “இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்குமுன்பாக வைத்து:”

¹¹ “கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள். ” (வெளி 4:8,10-11)

இயேசுவும் இதில் அடங்கும் (வெளி 3:14)

---------


11.தேவன் வேறு.. ஆட்டுக்குட்டியாகிய இயேசு வேறு என்பதே இது கூறுவது


“”பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை. மறைத்துக்கொள்ளுங்கள்;””

— வெளி 6:16


ஆட்டுக்குட்டி வேறு தேவன் வேறு.


⁵ “அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.”

⁶ “அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.”

⁷ “அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்து புஸ்தகத்தை வாங்கினார்.”

⁸ “அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து:”

⁹ “தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,”

¹⁰ எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.


¹² அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்.

¹³ “அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன். (வெளி 5::5-10,12-13)


தேவன் வேறு இயேசு வேறு னு 5:9,10 இல் தெளிவாகவும், 5:7,13 இல் தேவனாகியவர் சிங்காசனத்தில் இருப்பதாகவும், இவரோ ஆட்டுக்குட்டியாக இருப்பதாகவும் சித்தரிக்கிறது.

--------

12.மீண்டும் தேவன் வேறு ஆட்டுக்குட்டி வேறு என இப்புத்தகம் சித்தரிக்கிறது.


¹⁰ அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.


¹¹ “தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழநின்று, சிங்காசனத்திற்குமுன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு:”

¹² “ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள்.”


¹⁷ “சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான். ” (வெளி 7:10-12,17)

அதாவது ஆட்டுக்குட்டி மற்ற ஆடுகளை மேய்ப்பவர்.

சோ இயேசு வேறு தேவன் வேறு


------

13.தேவன் வேறு அவருடைய கிறிஸ்து வேறு

.


¹⁰ “அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ்சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத்தள்ளப்பட்டுப்போனான்.” (வெளி 12:10)


14.மீண்டும் தேவன் வேறு இயேசு வேறு என்கிறது


⁴ ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.(வெளி 14:4)

----


15.தேவன் ஒருவரே பரிசுத்தர்.. அதாவது அவர் ஒருவர்.. ஆட்டுக்குட்டி வேறு தேவன் வேறு..


³ “அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.”


⁴ “கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள்.” (வெளி 15:3-4)

----------


16.ஆட்டுக்குட்டி கர்த்தாதி கர்த்தரால். ராஜாதி ராஜாவாம்


இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான்.”

— வெளி 17:14


இயேசுவை கர்த்தராக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36


ராஜாதி ராஜா என்பது ஏனைய மனித ராஜாக்களுக்கும் பைபிளில் பயன்படுத்த பட்டுள்ளது… உதாரணமாக தேவனே தன் வாயால் நெபுகாத்நசரை ராஜாதிராஜா என்கிறார் - எசேக்கியேல் 26:7


இதனால் தேவனாவதில்லை.


----------


17.தேவன் என்பவர் அவருடைய சிங்காசனத்தில் இருப்பவர்


¹ “இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நீயாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.”


⁴ “இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் வணக்கமாய் விழுந்து: ஆமென், அல்லேலூயா, என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள்.”


⁵ “மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது.”


⁶ “அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்.” (வெளி 19:1,4-6)


இங்கு தேவன் என்பவர் ஒரு நபராகவே சித்தரிக்கப்பட்டுள்ளார்…

-----------


18.தேவனையே தொழுது கொள்ளுமாறு தேவதூதன் கூறியதாக கூறப்பட்டுள்ளது. இயேசுவுக்கு இங்கு எங்குமே தேவன் என்ற பட்டம் வழங்கப்படவில்லை!


¹⁰ அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான்.(வெளி 19:10)


---------


19.இயேசுவின் பெயர் தேவனுடைய வார்த்தையாம்…. இந்த பெயரால் தான் கிறிஸ்தவர்கள் மனோ இச்சையால் வழிகெட்டனர்.


¹³ இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.

¹⁶ “ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.” (வெளி 19:13,16)

மேலும் குறிப்பு 16ஐ பார்க்க.

இயேசு வார்த்தை மூலம் உண்டானதால் இப்பெயர் வந்தது. இவர்களோ அவரையே தேவனது பேச்சாக மாற்றி தனி நபராக இருந்ததாக எழுதியுள்ளனர் (பார்க்க யோவான் 1:1)

இப்புத்தகமோ இயேசுவுக்கு தேவன் இருப்பதாகவும் (3:12), இயேசுவே முதல் படைப்பு (3:14) என்றும் கூறி இவர் கடவுளல்ல என்கிறது.

------


20.வேறு சிலருக்கும் நியாயத்தீர்ப்பு வழங்க அதிகாரம் கொடுக்கப்பட்டதாம். அவர்கள் இயேசுவோடு 1000 வருடம் அரசாண்டார்களாம்.


⁴ “அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.”(வெளி 20:4)


இவ்வாறே இயேசுவும் அதிகாரம் கொடுக்கப்பட்ட நபராக பவுலின் கடிதங்கள் கூட கூறுகின்றன


.----


21.மீண்டும் தேவன் வேறு கிறிஸ்து வேறு என சித்தரிக்கிறது இப்புத்தகம்

அதாவது கிறிஸத்து வேறு தேவன் வேறு

⁶ “முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.”(வெளி 20:6)


22.தேவன் தான் தான் மக்களுக்கு தேவனாக இருப்பார்.. இயேசுவல்ல… மக்கள் தேவனது பிள்ளையாக இருப்பார்களாம்.


² “யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.”


³ “மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.”


⁴ “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.”


⁵ “சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாத்குகிறேன் என்றார். பின்னும் அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.”


⁶ “அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.”


⁷ “ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.” (வெளி 21:2-7)


அதாவது ஜெயங்கொள்ளுகிறவன் தேவனுக்கு வாரிசாகி தேவனுடைதை எடுத்துக்கொள்வானாம்.. காரணம் அவன் தேவனது பையனாக இருப்பானாம்.. ஆனாலும் அவர் அவனுக்கு தேவனாக தான் இருப்பாராம். (21:7)

இயேசுவுக்கும் அவரே தேவன் (வெளி 3:12)


.

23.சர்வ வல்லமை உள்ள கர்த்தராகிய தேவன் வேறு இயேசு வேறு என மீண்டும் வேறுபடுத்தி கூறுகிறார்


²² அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்

²³ “நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.” (வெளி 21:22-23)


24.மீண்டும் யேசு வேறு தேவன் வேறு என பிரித்து கூறுகிறார்


¹ “பின்பு, பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான்.”


³ இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்.

⁴ “அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.”

⁵ அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள். (வெளி 22:1,3-5)


25 .மீண்டும் யோவான் தேவதூதனை வணங்க முற்படுகிறான்.. மீண்டும் ஏவதூதன் தேவனை வணங்குமாறே கூறுகிறார்.. ஆட்டுக்குட்டியையும் சேர்த்து வணங்கு என கூறவில்லை.


⁸ “யோவானாகிய நானே இவைகளைக் கண்டும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுக் கண்டபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன்.”


⁹ “அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள் என்றான்.” (வெளி 22:8-9)


26.மீண்டும் யேசு தன்னை குறித்து சொன்னதாக வருவதில் கூட, தன்னை கடவுளாக அறிமுகப்படுத்தியவில்லை!! தன்னை தாவீதின் வேறும் சந்ததியும் என்றே கூறுகிறார்.


முந்தினவர் பிந்தினவர் கதைக்கு ஆரம்பத்திலேயே விளக்கம் கூறிவிட்டேன்

.

இயேசு அவனவனுடைய கிரியைகளுக்கு தக்க பலனளிப்பாராம். இயேசுவை அதிகாரம் பெற்ற நபராக இது சித்தரிக்கிறது அவ்வளவே.


¹² “இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.”

¹³ “நான் அல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.”

¹⁴ “ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.”


¹⁶ “சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.”


²⁰ “இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.”

(வெளி 22:12-14,16,20)


தேவனானவர் இயேசுவுக்கும் தேவன் தான் -வெளி 3:12


சோ இயேசு தான் தேவன் என அடம்பிடிப்பதை நிறுத்தவும்


முந்தைய பதிவு: யூதாவின்படி இயேசு கடவுளா?

எபிரேயர் படி இயேசு கடவுள் அல்ல

 எபிரேயர் படி இயேசு கடவுள் அல்ல

————

இந்த புத்தகம் யாரென்று அறியப்படாத நபர் மூலமாக எபிரேயர்களுக்கு எழுதப்பட்ட கடிதம்


1.இதை எழுதிய ஆசிரியர் தேவன் வேறு இயேசு வேறு என வித்தியாசப்படுத்துகிறார்.


அதாவது இயேசவை தன் வாரிசாக தேவன் நியமித்தார் என்கிறார். அதாவது சொந்த பிள்ளை என்கிறார். இயேசு மூலமாக தேவன் உலகங்களை படைத்தார் என்கிறார். சோ இயேசு வேறு தேவன் வேறு.


¹ “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன்,”


² “இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.” (எபிரேயர் 1:1-2)

———–



2.மீண்டும் இயேசு வேறு தேவன் வேறு என வேறு பிரிக்கிறார். இயேசு தேவனுடைய வலது பக்கத்தில் உட்கார்ந்தாராம்! குறிப்பாக தேவன் இனப்பெருக்கம் செய்த குழந்தை இயேசு என்பதாக இவர் கருதுகிறார்.


³ “இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்தார்.” (எபிரேயர் 1:3)


——



3.இயேசு தேவனால் ஜனிப்பிக்கப்பட்ட (பெற்றெடுக்க பட்ட) பையன் என்பதே இவரது கருத்து.


இதற்காக தாவீதை குறித்து தேவன் சொன்னதாக கூறப்படும் வசனத்தையும் (சங் 2:7), சொலமோனை குறித்து தேவன் சொன்ன கருத்தையும் (2 சாமு 7:14-15) மிக்ஸ் பண்ணி, இயேசுவை குறித்து சொன்னதாக கதைவிடுகிறார்.


⁵ “எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா?” (எபிரேயர் 1:5)


எது எப்படியோ, இயேசு வேறு தேவன் வேறு என இவரும் வேறுபடுத்துகிறார்.

———–


4.மீண்டும் இயேசு வேறு தேவன் வேறு என்கிறார். அதாவது இயேசு என்பவர் தேவனுடைய மூத்த மகனாம்.


⁶ “மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார்.” (எபிரேயர் 1:6)


இப்படி ஒரு வசனம் பழைய ஏற்பாட்டில் இல்லை… சும்மா அடித்து விடுகிறார். ஆனாலும் இயேசு வேறு தேவன் வேறு என பிரிக்கிறார்.

———–



5.அதிகாரமுள்ள ராஜாக்களை தேவன் என சொல்லும் வழக்கம் பழைய ஏற்பாட்டில் உள்ளதால், சங்கீதம் 45 இல் ராஜாவை குறித்து அவரது ஊழியர்கள் கூறியதை, அப்படியே இயேசுவை குறித்து சொன்னதாக கதைவிடுகிறார். (அதில் அந்த ராஜாவுக்கு தகப்பன்மாரும், மகன்களும், மகளும், மனைவியும் இருப்பதோடு மட்டுமல்ல, அவருக்கு தோழர்களும், அவருக்கு ஒரு தேவனும் இருப்பதாக எழுதப்பட்டுள்ளது)


⁸ “குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.”


⁹ “நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்தத் தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்;” (எபிரேயர் 1:8-9)


இந்த வசனத்தில் கூட, குமாரன் எனப்படுபவருக்கு தேவன் இருப்பதாகவும், அந்த தேவன் தான் அவரை அவரது தோழர்களை விட மேன்மையாக்கி வைத்ததாகவும் கூறுகிறார்.. சோ இயேசு வேறு தேவன் வேறு என்பதே இவரது கொள்கை (1:9)


—————–


6 .இயேசு மூலமாக தேவன் படைத்தார் என்று நம்பிக்கையுடைய இவர், நோயாளி தேவனிடம் தன்னை பாதி வயதிலேயே சாகடித்து விட வேண்டாம் என ஜெபிக்கும் வசனத்தை , அப்படியே இயேசுவை குறிப்பதாக அவர் கதைவிடுகிறார்.


அத்தோடு இயேசுவை தேவன் பெற்ற மகன் என இவர் கருதுவதால், அவரும் பெற்றெடுத்த பின் நிலையாக உள்ளார் என்பதை கூறுவதற்கு இவ்வசனங்களை புகுத்துகிறார்.


¹⁰ “கர்த்தாவே, நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது;”


¹¹ அவைகள் அழிந்துபோகும்; நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போலப் பழைமையாய்ப்போகும்;


¹² “ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது மாறிப்போகும்; நீரோ மாறாதவராயிருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது.” (எபிரேயர் 1:10-12)


——————


7.குமாரனுடைய எதிரிகளை குமாரனது காலடியில் தேவன் போடும் வரை, தன் வலது பக்கத்தில் உட்கார சொன்னாராம்.


¹³ “மேலும், நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா?” -எபிரேயர் 1:13)


இவ்வசனங்களில் இயேசு தேவதூதரை விட மேலானவர் என்பதை காட்ட, இவ்வாறெல்லாம் திரித்து எழுதிய இவர், இயேசு வேறு தேவன் வேறு என்றே கருதுவதோடு, இயேசுவுக்கும் அந்த தேவன் தேவனாக இருக்கிறார் (1:9) என்கிறார்

————–


8.இயேசுவை தேவதூதரிலும் சற்று சிறியவராக்கினாராம். பிறகு அவரை முடிசூட்டினாராம்.இயேசு என்ற இரட்சிப்பின் அதிபதியை உபதிரவங்களால் பூரணப்படுத்தினாராம்.


⁹ “என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.”(எபிரேயர் 2:9-10)


¹⁰ “ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது.”


சோ இயேசுவை தேவனின் லிருந்து வித்தியாசப்படுத்தியே இவரும் எழுதியுள்ளார்

————-



9.மீணாடும் இயேசு வேறு தேவன் வேறு என வேறுபடுத்துகிறார்.


அதாவது தேவனது நாமத்தை இயேசு தன் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவே தேவனை துதிபாடுவாராம். (2:12)


அதேபோல தேவனிடத்தில் நம்பிக்கையாயிருப்பாராம்… நான் வேறு தேவன் வேறு பிரித்து சொன்னதாக சொல்கிறார் (2:13)


இயல்பிலே அவர் தேவனது பிள்ளை என்பதே இவரது கருத்து.. ஆனாலும் தேவன் இயேசுவுக்கும் தேவன் என்பதும் இவரது கருத்து

¹² “உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப்பாடுவேன் என்றும்;”


¹³ “நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார்

¹⁴ “ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், (எபிரேயர் 2:12-14)

சோ இயேசு வேறு தேவன் வேறு


—————–


10.இயேசு என்பவரும் தேவனது வீட்டில் மோசேயை போல ஏற்படுத்தப்பட்டவர் என்பதே இவரது கருத்து. அதாவது இயேசு வேறு தேவன் வேறு




² “மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்ததுபோல, இவரும் தம்மை ஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார்.”

⁴ “ஏனெனில், எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்.” (எபிரேயர் 3:2,4)

————



11.இயேசு என்பவர் தேவனது மகனாம்.. அவர் பிரதான ஆசாரியனாம். அவர் எபிரேயரை போல் பரிதவிக்கும் பிரதான ஆசாரியராம்..


ஆசாரியர் வேறு தேவன் வேறு..குமாரன் வேறு தேவன் வேறு.


¹⁴ “வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்.”

¹⁵ “நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.”

(எபிரேயம் 4:14-15)

—————–


12.இயேசு ஒன்றும் தானாக ஆசாரியனாக ஆகவில்லையாம்… தேவன் தான் அவரை அவ்வாறு உயர்த்தி ஏற்படுத்தினாராம்..

சோ தேவன் வேறு இயேசு வேறு என்பதே அவரது கருத்து




⁴ “மேலும், ஆரோனைப்போல தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை.”

⁵ “அந்தப்படியே கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை; நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று அவரோடே சொன்னவரே அவரை உயர்த்தினார்.”

⁶ அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார். (எபிரேயர் 5:4-6)

—————


13.இயேசு பூமியில் மனுசனாக உள்ள வேளையில் கூட தேவன் ஒருவர் இருந்துள்ளார்.. அவரிடமே இயேசு ன்னை இரட்சிக்குமாறு வேண்டினார் என இவர் எழுதுகிறார். ஆனாலும் அவர் அந்த தேவனோட பையன் என்பதே இதன் கருத்து.

⁷ “அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லைமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,”

⁸ “அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு,” (எபிரேயர் 5:7-8)

————-



14.பிரதான ஆசாரியன் என்ற நாமத்தை இயேசுவுக்கு கொடுத்ததே தேவன் தான் என்கிறார் இவர். அதாவது இயேசு வேறு தேவன் வேறு

¹⁰ மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார். (எபிரேயர் 5:10)

———–


15.இயேசு எப்போதுமே கிறிஸ்தவர்களுக்காக தேவனிடம் வேண்டுதல் செய்கிற ஆசாரியர் என்றே இதை எழுதியவர் கூறுகிறார்



²⁵ “மேலும், தமது மூலமாய்  தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.”


²⁶ “பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார்.” (எபிரேயர் 7:25-26)


சோ, தேவனிடம் வேண்டுதல் செய்பவர் தேவனல்ல…இயேசு வேறு தேவன் வேறு

————




16.இயேசு மகத்துவ ஆசனத்தின் வலது பாரிசத்தில் உட்காருகிறவராம்.. அதாவது தேவனுடைய ஆசனத்தில் அல்ல என்பது இவரது கருத்து.


இயேசு ஆசாரியன் ஊழியத்தை பெற்றவர்.


சோ அவரு வேறொரு நபர்.. தேவனல்ல


¹ “மேற்சொல்லியவைகளின் முக்கியமான பொருளென்னவெனில்; பரலோகத்திலுள்ள மகத்துவ ஆசனத்தின் வலதுபாரிசத்திலே உட்கார்ந்திருக்கிறவருமாய்,”


² “பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷரால் அல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ்செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு.”


⁶ “இவரோ விசேஷித்த வாக்குத்தத்தங்களின்பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்தியஸ்தராயிருக்கிறாரோ, அப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும் பெற்றிருக்கிறார்.” (எபிரேயர் 8:1-2,6)

———–


17.இயேசு தன்னை தேவனுக்கு பலியாக செலுத்தினாராம். மேலும் இயேசு என்பவர் மத்தியஸ்தர் என்பதே இவரது கருத்து


¹⁴ நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!


¹⁵ “ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.” (எபிரேயர் 9:14-15)


————–


18.தேவன் வேறு இயேசு வேறு என்பதே இவரது கொள்கை.. அதுமட்டுமின்றி யேசுவுக்கும் அந்த தேவனே தேவனாக இருக்கிறார் என்பதே இவரது கொள்கை



⁵ “ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்;”


⁶ “சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரணபலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர்.”


⁷ “அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்.”

⁹ “தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன் என்று சொன்னார். இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார்.” (எபிரேயர் 10:5-7,9)


இயேசுவுக்கு உடலை ஆயத்தம் செய்தவர் தேவன், இயேசு அந்த தேவனை என் தேவனே என அழைத்ததாக அவர் குறிப்பிடுகிறார்

—————-




19.இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணினவர் தான் தேவன் என்கிறார்..


²⁰ “நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன்,” (எபிரேயர் 13:20)

முந்தைய பதிவு: 

அடுத்த புத்தகம்: யாக்கோபின் படி இயேசு கடவுளா

அல்லாஹ் வழிதவறச்செய்கிறான் என்பதன் விளக்கம்

1.மனிதனுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது  --மனிதனுக்கு இறைவன் வழி காட்டியுள்ளான். ஒன்று அவன் நன்றியுள்ளவனாக இருக்கிறான் அல்லது காஃபிராக இருக்கிறான...