வெள்ளி, 26 செப்டம்பர், 2025

பாவிகளை கடவுள் நேசிப்பாரா? - தற்குறிகளுக்கு மறுப்பு

 அல்லாஹ் பாவிகளை ,காஃபிர்களை நேசிப்பதில்லை . ஆனால் கர்த்தரோ அப்படி அல்ல.. பாவிகளை நேசிப்பவர் என  போதகர்கள் உருட்டுவார்கள்.


1.அல்லாஹ் யாரை நேசிப்பதில்லை? ஏன்

2.அல்லாஹ் யாரை நேசிக்கிறான்?

3.கர்த்தர் பாவிகளை நேசிக்கிறாரா?


1.அல்லாஹ் யாரை நேசிப்பதில்லை? ஏன்?

அல்லாஹ் அநியாயக்காரர்களை நேசிப்பதில்லை (3:57,140) பாவிகளான காஃபிர்களை நேசிப்பதில்லை (2:276, 3:32), வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை (2:190),கர்வமுடையோரை வீண் பெருமையுடையோரை நேசிப்பதில்லை (4:36), கொடும்பாவியான சதிசெய்துகொண்டிருப்பவனை நேசிப்பதில்லை (4:107),குழப்பம் புரிவோரை நேசிப்பதில்லை (5:64), வீண்விரயம் செய்வோரை நேசிப்பதில்லை (6:141,7:31), துரோகம் செய்வோரை நேசிப்பதில்லை (8:58), பெருமையடிப்போரை நேசிப்பதில்லை (16:23) என குர்ஆன் கூறுகிறது.


இப்படி நேசிக்காமல் இருப்பதுவே நீதியானது. அத்தோடு அவ்வாறு நேசிப்பதில்லை என்று முன்பே அறிவித்து விடுவது தான் உண்மையான நேசம். 

காரணம் இத்தகையோர் நரகத்தில் புகுத்தப்படுவர்.. அதுவே குற்றவாளிகளுக்கான இறைவன் ஏற்படுத்திய தண்டனை எனும் நீதி..

 ஆகவே இறைவன் அவர்களை நேசிப்பதாக பொய் கூறிவிட்டு நரகத்தில் தள்ளுவது சரியானதா? அல்லது நேசிப்பதில்லை என முன்பே அறிவித்து, இறைவன் நேசிக்கும் விதமாக வாழுவதற்கு தூண்டுவது நேசமா?


2.அல்லாஹ் யாரை நேசிக்கிறான்? அவனது கருணையின் அளவு

இவ்வாறே இறைவன் யாரை நேசிப்பான் என்பதையும் குர்ஆன் கூறுகிறது.

நன்மை செய்வோரை நேசிக்கிறான் (2:195), பாவத்தை விட்டு மனந்திரும்புவோரையும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கிறான் (2:222), நபியை பின்பற்றுவோரை நேசிக்கிறான் (3:31), இறையச்சமுடையோரை நேசிக்கிறான் (3:76), பொறுமையாளர்களை நேசிக்கிறான் (3:146),இறைவன் மீது பொறுப்புச்சாட்டி முழு நம்பிக்கை வைப்போரை நேசிக்கிறான் (3:159), நீதமாக நடந்துகொள்வோரை நேசிக்கிறான் (5:42), பூமியில் உள்ளோருக்கு இரக்கம் காட்டுங்கள் , வானத்திலுள்ளவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான் (அபூதாவூத் 4941), கருணையுடையோருக்கு கருணையுள்ளவனான இறைவன் கருணை காட்டுவான் (திர்மிதீ 1924), இரக்கம் காட்டுங்கள் இரக்கம்காட்டப்படுவீர்கள். மன்னியுங்கள்.மன்னிக்கப்படுவீர்கள் (அதபுல் முஃப்ரத் ஹதீஸ் 380) 

இப்படி இறைவனது அன்பை பெறுவதற்கு தகுதியானவர்களாக ஆகுவதற்கு  இறைவன் யாரை நேசிப்பான் என கூறி வழிகாட்டவும்பட்டுள்ளது.

அத்தோடு பாவியானவன் திருந்தி வருவதை குறித்து , பாலைவனத்தில் தன் வாகனத்தை தொலைத்தவன் அதை மீண்டும் கண்டுபிடிக்கும்போது அடையும் மகிழ்ச்சியை விட அல்லாஹ் மிகவும் மகிழ்ச்சியடைகிறான் ( புகாரி 6309, முஸ்லிம் ).

கருணையுள்ள பாலூட்டும் பெண் தன் குழந்தையை நேசிப்பதை விட அல்லாஹ் தன் அடியார்களை நேசிக்கிறான் (புகாரி 5999)

தன் அடியார்களை மன்னிக்கவும் நேர்வழியில் செலுத்தவும் இலேசாக்கவும் விரும்புகிறான் (குர்ஆன் 4:26-28)

பாவம் செய்து தமக்கு தாமே அநீதம் இழைத்துக் கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் நம்பிக்கையிழக்க வேண்டாம். நிச்சயமாக அவன் எல்லா பாவங்களையும் மன்னித்துவிடுவான் (39:53)

இவ்வாறு பாவிகளை மனந்திரும்பி வர அழைக்கிறது இஸ்லாம்!

படைப்புகள் தமக்கிடையே அன்புகாட்டிக்கொள்வதற்கு காரணம் அல்லாஹ் படைத்த கருணையின் நூறில் ஒரு பங்கு மட்டுமே.(புகாரி 6000) அந்தளவுக்கு இறைவன் படைத்த கருணையும் விசாலமானது, கருணையையே படைத்த கருணையாளனின் கருணை விசாலமானது. இதனால் தான் அல்லாஹ்வின் கருணையை அறிந்த காஃபிர் கூட சுவர்க்கத்தில் அவநம்பிக்கை கொள்ளமாட்டான் (புகாரி 6469) அதாவது அவனையும் அல்லாஹ் சுவர்க்கத்தில் நுழைவித்துவிடுவான் என்று எண்ணுமளவுக்கு கருணையுள்ளவன்.


3.இந்த தற்குரிகள் கூறுவது போல கர்த்தரோ இயேசுவோ பாவிகளை நேசிப்பார்களா?

1.புறஜாதிகள் பாவம் செய்ததாலும் தன்னையல்லாமல் வேறு கடவுளை வணங்கினாலும் அவர்களை நேசிக்கவில்லை. அவர்களின் குழந்தைகளையும் ஈவிரக்கமின்றி கொல்ல சொன்னார் (1 சாமுவேல் 15:2-3, உபாகமம் 20:16-18)

2.தான் தேர்வுசெய்த மக்களில் எவராவது தன்னையல்லாமல் வேறு கடவுளை வணங்கினால் ஈவிரக்கமின்றி கொல்ல சொன்னார் (உபாகமம் 13:6-10,12-16, 17:2-5)

குறிப்பாக சாலமோன் தேவனின் கட்டளையை மீறியதாக பைபிள் கூறுகிறது. அத்தோடு தேவன் அவன்மீது கோபமானார் என 1 இராஜாக்கள் 11:10


3.இயேசு தன்னை ஏற்காதோரை தேவன் மன்னித்துவிடவும் கூடாது அவர்கள் திருந்திவிடவும் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்தார்.(மாற்கு 4:11-12)

4.சிலைவணங்கிளை நரகத்தில் போட்டு கொல்லுவார் (வெளி 21:8)

5.ஏசா பிறந்து தீமை செய்ய முன்பே அவனை தன் தம்பிக்கு ஊழியம் செய்வான் என தீர்மானித்து கர்த்தர் வெறுத்தார் என்கிறார் பவுல் (ரோமர் 9:11-13) 

6.அக்கிரமக்காரரை கர்த்தர் வெறுக்கிறார் (சங்கீதம் 5:5)

7.துன்மார்க்கரை கர்த்தரின் உள்ளம் வெறுக்கிறது (சங்கீதம் 11:5)

8.குடும்பத்திலுள்ள சிலைவணங்கிகள் மற்றும் பாவிகளோடு ஒன்றாக சாப்பிடவோ பழகவோ கூடாது. அவர்களை துரத்தி விட வேண்டும் (1 கொரிந்தியர் 5:11-13)

9.இயேசுவை மக்கள் நம்பாததற்கு காரணம், தேவன் அவர்களின் கண்களை குருடாக்கி இருதயத்தை கடினப்படுத்தியமையே (யோவான் 12:40)

10.அப்படி இயேசுவை நம்பாதோரின்மீது தேவனின் கோபம் இருக்கும் (யோவான் 3:36) அத்துடன் அவன்மீது ஆக்கினைத்தீர்ப்பு உண்டாகும் (யோவான் 3:18)

அதாவது அவிசுவாசிமீது தேவனுக்கு அன்பு கிடையாது... மாறாக கோபமே இருக்கும் என பைபிளே சொல்லிவிட்டது (யோவான் 3:36)

இயேசு பாவிகளை மனந்திரும்புவதற்கு அழைக்கவே வந்தார்.. மனந்திருந்தாதோரை நேசிக்கவில்லை. மாறாக அவர்கள் மன்னிக்கப்பட கூடாது என்ற கடுமையானவராக தான் இருந்தார் (மாற்கு 4:11-12)

ஆகவே இயேசு பாவிகளை நேசித்தார் என்பது மனந்திருந்தாத பாவிகளை அல்ல.. மனந்திருந்துவோரை மட்டுமே. 

ஆகவே இதுவும் தற்குரித்தனமான குற்றச்சாட்டே.

வெள்ளி, 19 செப்டம்பர், 2025

இஸ்லாமும் பெண்களும் பைபிளும்

  1.பெண்களை ஒரு பொருட்டாகவும் மதிக்காதவர்களிடமே பெண்களின் உரிமைகளை குர்ஆன் கூறியது-(புகாரி 5843). ஆனால் பைபிள் பெண்ணோ விற்பனை பொருளாக பார்க்கிறது. அதாவது தகப்பனுக்கு தன் மகளை விற்பனை செய்யும் உரிமையும் உண்டு (யாத்திராகமம் 21:7-10)

2.பெண்குழந்தை பிறப்பதை இழிவாகவும், அவர்களை உயிரோடு புதைக்கும் மக்களிடையே (குர்ஆன் 16:58-59, ) , பெண் குழந்தைகளை உயிருடன் புகைப்பதை பெரும் பாவம் என்றும் (புகாரி 2408), பெண்குழந்தைகளால் சோதிக்கப்பட்டவர்களை அக்குழந்தைகள் நரகத்திலிருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள் என்றும் (புகாரி 1418), இரண்டு பெண் குழந்தைகளை நல்லமுறையில் வளர்ப்பவரும் நானும் சுவர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என தன் இரு விரல்களை இணைத்து காட்டினார்கள் (முஸ்லிம் 5127 (2631))

ஆனால் பைபிளோ பெண் குழந்தையை பெற்றெடுத்தால் ஆண்குழந்தையை பெறுவதைவிட இருமடங்கு தீட்டு ஏற்படும் (லேவியராகமம் 12:1-5)


3.பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படாத காலத்தில், அவளது திருமணத்திற்கு அவளது சம்மதம் அவசியம் என்றும் அவளது விருப்பமின்றி திருமணம் செய்து வைக்க கூடாது என்றும் உரிமையை வழங்கியது (புகாரி 5136,5138, 6945,6946)

ஆனால் பைபிளில் தகப்பனுக்கு அவளை விற்றுப்போடும் உரிமையே உண்டு(யாத்திராகமம் 21:7-10)

அத்தோடு அவளை கற்பழித்தவனுக்கோ காலம் முழுதுமே மனைவியாக இருக்க வேண்டும் என அவளை பாழ் கிணற்றிலேயே தள்ளுகிறது (உபாகமம் 22:28-29)


4.விதவை பெண்ணை அவளது மரணித்த கணவனின் குடும்ப சொத்து போல கருதி தம் இஷ்டப்படி நடத்திய காலத்தில், அவளை நிர்ப்பந்தித்து அடைந்துகொள்வது அனுமதிக்கப்பட்டது அல்ல என்று குர்ஆன் கண்டித்தது-(குர்ஆன் 4:19, புகாரி 6948)

பைபிளோ விதவை பெண்ணை அவளது கணவனின் சகோதரன் தான் முடிக்க வேண்டும் என நிர்ப்பந்தமான சட்டத்தை போடுகிறது (உபாகமம் 25:5-6). இங்கே அவளும் மனுசி தானே அவளுக்கும் விருப்பு வெறுப்பு உண்டுதானே என பைபிள் பார்க்கவில்லை.


5.தான் பராமரிக்கும் அநாதைப்பெண்களின் சொத்தை அபகரிக்கும் நோக்கத்தில் அவர்களை திருமணம் முடிப்பதையும், அவர்களுக்கு குறைவான மணக்கொடையை கொடுத்து முடிப்பதையும் இஸ்லாம் தடுத்தது-புகாரி 2763.

பைபிளில் பெண்களுக்கு சொத்துரிமையே கிடையாது. அவளை கற்பழித்ததற்கு நஷ்டயீடான ஐம்பது வெள்ளிக்காசுகளை கூட தகப்பனிடம் தான் கொடுக்க வேண்டும் (உபாகமம் 22:29) . அவள் மீது விபச்சார அவதூறு கூறினால் கூட அபராதமாக நூறு வெள்ளிக்காசுகளை அவளது தகப்பனிடம் தான் கொடுக்க வேண்டும் (உபாகமம் 22:19)


6.பெண்குழந்தைகளுக்கும் மனைவிக்கும்,தாய்க்கும், சகோதரிகளுக்கும் என பெண்களுக்கு இறந்தவர் விட்டுச் செல்லும் செல்வத்தில் சொத்துரிமையை இஸ்லாம் வழங்கியது.(குர்ஆன் 4:7,11,12,176)

ஆனால் பைபிளில் பெண்களுக்கு சொத்துரிமையே கிடையாது. தகப்பனுக்கு ஆண்குழந்தை இல்லாது போனால் மட்டும் தான் அவர்களுக்கு சொத்து கிடைக்கும்.(எண்ணாகமம் 27:8)

(பெண்ணுக்கு ஆணின் சொத்தின் பாதி தானே இஸ்லாத்தில் கிடைக்கும் என நினைக்கலாம். காரணம் ஆண் மீதே குடும்பச் செலவை இறைவன் விதியாக்கியுள்ளதாலும் (குர்ஆன் 4:34), ஆணே தன் மனைவிக்கு மணக்கொடையை கொடுக்க வேண்டும் என்பதாலும் (குர்ஆன் 4:4), அவள் நஷ்டயீடு செலுத்தவேண்டி ஏற்பட்டாலும் அவளது தந்தைவழி உறவினரே (சகோதரன் போன்றோர்) அதை செலுத்தவேண்டும் என்பதாலும் (புகாரி 6730) இவ்வாறு இஸ்லாம் வழங்கியது நியாயமானதே!)


7.தன் மனைவியின் மீது விபச்சாரம் செய்துவிட்டாள் என குற்றச்சாட்டு வைத்தால், அவ்வாறு செய்யவில்லை என எதிர்த்து அவனுக்கு சமமாக சாட்சி கூறும் உரிமையை இஸ்லாம் வழங்கியது (குர்ஆன் 24:6-9).

ஆனால் பைபிளோ அவள் முதலிரவிலே கன்னியாக இல்லை என கூறினால், அதற்கு உடலுறவில் வரும் இரத்தம் தேய்ந்த துணியை ஆதாரமாக அவளது பெற்றோர் காட்டவேண்டும். இல்லாவிட்டால் அவள் விபச்சாரி என தற்குரித்தனமான சட்டம் கூறுகிறது (உபாகமம் 22:14-21). சில பெண்களுக்கு கன்னியாக இருந்தும் முதலிரவில் இரத்தம் வராது. இதுபோன்ற அப்பாவிகளை அவதூறு கூறும் தற்குரித்தனமான போதனையை பைபிள் கூறுகிறது.

அத்தோடு தன் மனைவி மீது சந்தேகம் வந்தால் கூட அவளை தான் மண்கலந்த கசப்பு நீரை குடிக்க வைத்து ஆசாமி கூறும் சாபவார்த்தைகளுக்கு ஆமென் மட்டுமே கூற முடியும்.மறுக்கும் உரிமை கிடையாது (எண்ணாகமம் 5:14-24)


8.இஸ்லாம் கர்ப்பிணி பெண்களை மதிக்கிறது. அவள் பிள்ளை பெற்றெடுக்கும் போது மரணித்தால் அவளை உயிர்த்தியாகி என்கிறது (நஸாயீ 1846,3194, அபூதாவூத் 3111)

ஆனால் பைபிளோ கர்ப்பவேதனையை கடவுள் அதிகரிப்பார் காரணம், பெண் பாம்பிடம் ஏமாந்ததற்காக கடவுள் கொடுத்த சாபம் என்கிறது (ஆதி 3:16)


9.மாதவிடாய் பெண்களை இஸ்லாம் மதிக்கிறது. அது அல்லாஹ் ஆதமின் பெண் பிள்ளைகளுக்கு ஏற்படுத்திய காரியம் (புகாரி 294) என்றும், அதன்போது உடலுறவை தவிர அனைத்து விசயங்களிலும் அவளை சேர்த்துக்கொள்ளலாம் என்கிறது இஸ்லாம் (முஸ்லிம் 507 (302) புகாரி 295-297,299-303,) ஒரே போர்வைக்குள் தூங்கலாம் (புகாரி 298) 


ஆனால் பைபிளிலோ மாதவிடாய் பெண்ணின் முழு உடலுமே தீட்டு. அவளை தொடுபவனும் மாலைவரை தீட்டுப்படுவான். அவள் படுக்கும் இடமும் அமரும் இடமும் தீட்டுப்படும். அவளது படுக்கையை ,அமரும் ஆசனத்தை தொடுபவனும் மாலைவரை தீட்டுப்படுவான். அவளது ரத்தம் ஒர்த்தன் மேல் பட்டால் அவன் ஏழுநாட்களுக்கு தீட்டுப்படுவான். எவ்வளவு காலம் ரத்தம் வந்துகொண்டிருந்தாலும் அத்தனை காலத்திற்கும் இப்படி அவள் தீட்டுப்படுவாள். இரத்தம் நின்று ஏழாம் நாள் தான் அவள் சுத்தமாவாள் (லேவியராகமம் 15:19-28) இப்படி அவளை ஒட்டுமொத்த அசுத்த பிராணியாக ஆக்கியுள்ளது பைபிள். பன்றி போன்ற அசுத்தமான பிராணிகளை தொட்டால் தோராவின்படி மாலைவரை தீட்டுள்ளது போல இந்த பெண்ணை தொட்டாலும் மாலைவரை தீட்டு.


10.ஆணோ பெண்ணோ அவர்களின் நற்செயலை வீணாக்க மாட்டான். ஒருவர் மற்றவரிலிருந்து உள்ளவர்களே (குர்ஆன் 3:195), ஆணோ பெண்ணோ விசுவாசம் கொண்டு நற்செயல் செய்தால் அவர்கள் சுவர்க்கம் நுழைவார்கள். சிறிதும் அநீதமிழைக்கப்பட மாட்டார்கள்.(குர்ஆன் 4:124 இதேபோல் 16:97, 40:40)


11..இஸ்லாம் திருமணமான பெண்களின் நிலையை சிறைக்கைதிகளுக்கு ஒப்பிடுகிறது. அதாவது திருமணத்தின் மூலம் அவர்களால் இன்னொரு ஆணை விரும்ப முடியாது கணவனுக்கு கட்டுப்பட வேண்டிய நிலையில் உள்ளார்கள் போன்றவற்றினால். ஆகவே அவர்களுடன் நல்லமுறையில் நடந்துகொள்ளுங்கள் என்கிறது (இப்னுமாஜா 1851), அத்துடன் உங்களில் சிறந்தவர் தம் மனைவயரிடம் சிறந்தவரே ஆவார் (இப்னுமாஜா 1978,1977, திர்மிதீ 3895). அத்துடன் பெண்களுடன் நல்லவிதமாக நடந்துகொள்ளுங்கள் ஏனெனில் பெண்ணானவள் (மனிதகுல தாயான ஹவ்வா) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டார். அதன் மேல் பகுதியே மிகவும் வளைந்தது. அதை நேராக்க நினைத்தால் உடைத்துவிடுவாய் (புகாரி 3331). அவர்களுடன் நல்ல முறையில் வாழுங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தால் , நீங்கள் ஒன்றை வெறுக்க கூடும் ஆனால் அதிலே அநேக நலவுகளை இறைவன் ஏற்படுத்தக்கூடும் (குர்ஆன் 4:19)

இஸ்லாம் மனைவியர் கணவனுக்கு கட்டுப்படுவதற்கான காரணமாக பெண்களை குற்றப்படுத்தவில்லை . மாறாக ஆண்கள் மீதே செலவளிக்கும் பொறுப்பை இறைவன் வழங்கியதாலும் , சிலரைவிட சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியதாலும் (உடலாலும் மனதாலும் வேறு விதமாகவும்) தான் (குர்ஆன் 4:34). அனைவரும் ஒரே நிலையில் இருந்தால் குடும்பம் இயங்காது.

ஆனால் பைபிளோ பெண் செய்த பாவத்தினாலே இந்த நிலைமை என்கிறது. அதனாலே அவள் ஆணுக்கு அடங்க வேண்டும் என்கிறது.:

"உன் ஆசை உன் புருஷன் மீதிருக்கும். அவன் உன்னை ஆண்டு கொள்வான்"-ஆதி 3:16) 

ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள். உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும். என்னத்தினாலெனில், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.

1 தீமோத்தேயு 2:11-14



12.மனைவியரை அடிப்பது குறித்து, குர்ஆன் 4:34 மனைவியரை அடிக்க அனுமதிக்கிறது என்பதை குறித்து இவர்கள் குற்றம்சாட்டுவர். இந்துக்களோ கிறிஸ்தவர்களோ வேறு மதத்தவர்களோ தம் மனைவியரை அடிப்பதில்லையா? இஸ்லாம் அடிக்க வேண்டாம் என்று சொன்னாலும் அடிப்பவன் அடிக்கத்தான் செய்வான்.

*இஸ்லாம் பெண்களுக்கு உரிமைகளை சுதந்திரங்களை முன்பே வழங்கி விட்டதால், பெண்ணும் ஆண்களை எதிர்த்து நிற்பர். குடும்ப வாழ்வை கொண்டு செல்வதற்கு ஒருவர் மற்றவருக்கு நல்லவிசயங்களில் கீழ்ப்படிய வேண்டும். அவ்வாறு நடக்காத போது மனைவியை அடிக்க இஸ்லாம் அனுமதிக்கின்றது. எப்படி அடிக்க வேண்டும் என்றும் சொல்கிறது. அதாவது காயம் ஏற்படாமல் இலேசாக அடியுங்கள் என்றே சொல்கிறது. அதுவும் எப்போது என்றும் கூறுகிறது:

அவர்களுடன் நல்லமுறையில் நடந்துகொள்ளுங்கள். அதுவல்லாத முறையில் நடந்துகொள்ள உரிமையில்லை. ஆனால் அவர்கள் தெளிவான ஒழுக்கக்கேட்டை கொண்டு வந்தாலே தவிர. அப்போது அவர்களை படுக்கையை விட்டு ஒதுக்கி வையுங்கள். இலேசாக காயமேற்படாமல் அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு கீழ்படிந்து விட்டால் அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் (இப்னுமாஜா 1851, திர்மிதீ 1163, வேறு வாசகங்களுடன் முஸ்லிம் 2334 (1218a), அபூதாவூத் 1905)

இலேசாக காயமேற்படாதவாறு அடிக்கலாம் என்று சொன்ன நபிகளார், மனைவியின் முகத்தில் அடிக்க கூடாது என்றும் தடைவிதிக்கிறார்கள்.

கணவனின் மீதுள்ள மனைவியின் உரிமையானது, நீ உண்ணும்போது அவளுக்கும் உணவளிப்பதும், நீ ஆடை அணியும்போது அவளுக்கும் ஆடை அணிவிப்பதும், (ஒழுக்கப்படுத்துவதற்காக ) நீ முகத்தில் அடிக்க வேண்டாம், அவளை கேவலப் படுத்த வேண்டாம் , வீட்டிலே தவிர அவளை ஒதுக்க வேண்டாம் (அபூதாவூத் 2142, 2143) (கேவலப்படுத்த வேண்டாம் என்பது, அல்லாஹ் உன்னை கேவலப்படுத்துவானாக என்று சொல்வது என இமாம் அபூதாவூத் கூறுகிறார்)

அத்தோடு மனைவியை அடிக்கிறவர்களை உங்களில் நல்லவர்கள் அல்லர் என்றும் நபிகளார் கூறினார்கள் (அபூதாவூத் 2146)..

 ஆக மனைவியை அடிப்பது காலங்காலமாக இருப்பதுவே. அதை இஸ்லாம் ஒழுங்குபடுத்தியதோடு , பெண்களோடு நல்லமுறையில் நடந்துகொள்ளவும் , அவர்களோடு நல்லமுறையில் நடந்துகொள்வர்களே உங்களில் சிறந்தவர் என்றும் மனைவியரை அவர்கள் முறையிடும்படி அடிக்கிறவர்களை உங்களில் சிறந்தவர் அல்ல என்றும் நல்வழிப்படுத்தியது.

பைபிளிலோ பெண் ஒரு அடக்கப்பட்டே இருப்பதாலும் உரிமைகள் இல்லாதவளாக இருப்பதாலும் அவள் கணவனை எதிர்ப்பதை நினைத்து கூட பார்க்க முடியாது. காரணம் எஜமானுக்கு அடிமைப்பெண் எப்படி நடப்பாளோ அதுவே பைபிளில் அவளது நிலை.

இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள். அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மை செய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்.

1 பேதுரு 3:5-6

மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குக்கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும்.

எபேசியர் 5:22-24



அத்துடன் அவள் அமைதியாகவே அடக்கத்தோடு இருக்க வேண்டும் (1 பேதுரு 3:4, 1 தீமோத்தேயு 2:11-12, 1 கொரிந்தியர் 14:34). இப்படி உரிமை பறிக்கப்பட்ட பெண்ணாக இருப்பதால் அவள் மேலே வரவே மாட்டாள். அத்துடன் அவர்களை அடிக்க கூடாது என்று பைபிளில் எங்கேயும் குறிப்பிடவில்லை.... மனைவியரை அடிக்கும் காலத்தில் அதை பற்றி மௌனமாக இருப்பதென்பதே அதை அனுமதிப்பதாகிவிடும்.

ஆகவே இவர்களுக்கு இந்த நிலையில் இஸ்லாத்தை விமர்சிக்க தகுதியேயில்லை.


13.இஸ்லாம் பெண்களில் அதிகமானோர் நரகவாசிகளாக நபிகளார் கண்டதாக கூறும் ஹதீஸிலே அப்படி நரகம் போவதற்கான காரணம் கூறப்படுகின்றது 

எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலானோர் பெண்களாக இருந்தனர் ஏனெனில் அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர் என்று நபிகளார் சொன்னார்கள். "அல்லாஹ்வையா நிராகரிக்கிறார்கள்" என கேட்கப்பட்டது. அதற்கு, "கணவனை நிராகரிக்கிறார்கள், உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்கு நீ காலமெல்லாம் நன்மையே செய்து கொண்டிருந்து, பின்னர் (அவளுக்கு பிடிக்காத ஒன்றை) கண்டுவிட்டால், உன்னிடம் ஒருபோதும் எந்த நன்மையையும் கண்டதில்லை என்று பேசி விடுவாள்" என பதில் கூறினார்கள்.(புகாரி 29)

வேறொரு ஹதீஸில் அவர்கள் அதிகம் சபிப்பதும் கணவனை நிராகரிப்பதும் என கூறப்பட்டுள்ளது (புகாரி 304)

அதாவது இந்த செயல்களினால் நரகம் போகிறவர்களில் அதிகமானோராக பெண்கள் காட்டப்பட்டனர். அவர்கள் பெண்ணாக இருப்பதால் அல்ல.. மாறாக செயலினாலே அவ்வாறு நிகழுகிறது.

இதன்மூலம் அதிகமாக சபிப்பதையும் கணவனை நிராகரிப்பதையும் கைவிட்டு நரகம் போகாதிருப்பதற்கு நபிகளார் வழிகாட்டுகிறார்கள். 


14.இஸ்லாம் பெண்களின் நலன்கருதி வீட்டிலே இருக்கும்படி கட்டளையிடுகிறது. ஆனாலும் தேவைகளுக்காக அவர்கள் வெளியே செல்லலாம் (புகாரி 147), தன் கால்நடைகளை பராமரிப்பதற்காக உணவு கொண்டுவருவதற்காக தனியாகவும் வெளியே செல்லலாம் (புகாரி 5224), இதன்படி ஆண்-பெண் தனித்திருத்தல் நிலை இல்லாமலும் (புகாரி 3006, 5224) முறையாக ஆடை அணிந்த நிலையிலும் (குர்ஆன் 33:59, 24:31) ,ஆண்களோடு குளைந்து பேசாமலும் (குர்ஆன் 33:32) அனுமதிக்கப்பட்ட தொழில்களில் வேண்டியதை பெண் செய்யலாம்.. பெண் தன் குடும்பத்திற்கு செலவளிப்பதும் தர்மமே அதற்கு இறைவனிடம் கூலி உண்டு.(புகாரி 1466,5369). கணவன் செலவுக்கு தராத போதுகூட அவனது அனுமதியின்றி நியாயமான அளவை எடுத்துக்கொள்ளும் உரிமையும் மனைவிக்கு உண்டு (புகாரி 5359,5364,5370)

ஆனால் பைபிளின் படி வயோதிப பெண்கள் இளவயது பெண்களுக்கு போதிக்கலாம். எதை போதிக்க வேண்டும் என்றால் அவர்கள் வீட்டிலே இருக்கவேண்டும் என்றும் போதிக்க வேண்டும் என்கிறார் பவுல்:

தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்கு பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி, அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு.தீத்து 2:4-5


15.பெண்ணிடம் துர்ச்சகுனம் இருப்பதாக சொன்னதன் விளக்கம்:

இது இரண்டு விதமாக கூறப்பட்டுள்ளது,

1.துர்ச்சகுனம் ஒன்றில் இருப்பதாக இருந்தால், மனைவி வீடு குதிரை ஆகிய மூன்றிலுமே இருந்திருக்கும் (புகாரி2859, 5094,5095,)- இதன் அர்த்தம் எதிலுமே துர்ச்சகுனம் கிடையாது. அவ்வாறு இருப்பதென்றால் இந்த மூன்றிலும் தான் இருக்கும். ஏனெனில் ஒரு ஆணுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பது அவனது மனைவியும் அவன் தங்கும் வீடும் அவன் ஏறிச்செல்லும் வாகனமும் தான்.

2.துர்ச்சகுனம் மூன்று விசயங்களிலேயே இருக்கும். மனைவி ,வீடு , குதிரை (புகாரி 2858,5093,..) இதன் அர்த்தம் ஒரு மனிதனுக்கு கெடுதி ஏற்படுவதெல்லாம் இவர்களால் என்பதல்ல.. ஏனெனில் அனைத்து நலவும் கெடுதியும் இறைவனிடமிருந்தே வரும் (குர்ஆன் 4:78) . மனிதனுக்கு வீடு குறுகலாகவும் அயலவர்கள் தீங்கிழைப்பவர்களாகவும் இருந்தாலோ, மனைவி அதிகம் சண்டைக்காரியாக தீங்கிழைப்பவளாக இருந்தாலோ, வாகனம் அதிக செலவை ஏற்படுத்துவதாகவும் பயனற்றதாகவும் இருந்தால் அதுவே துர்ச்சகுனமென கூறப்படுகிறது. இதற்காக அவற்றை விட்டு அவன் முறையாக பிரிந்துவிடலாம்.. வீட்டையும் வாகனத்தையும் விற்று வேறு வீடும் வாகனமும் வாங்கலாம். மனைவியை விவாகரத்து செய்து வேறு திருமணம் முடிக்கலாம். அம்மனிதனை நிர்ப்பந்தித்து துன்பத்திலேயே இரு என்று கூறுவது நியாயமல்லவே.    

இதுவல்லாமல் நல்ல மனைவி குறித்து, உலகம் பயனளிக்கும் செல்வங்களே. இப்பயனளிக்கும் செல்வங்களிலேயே மிகவும் மேலானது நல்ல மனைவியே (முஸ்லிம் 2911 (715k)), செல்வங்களிலேயே சிறந்தது இறைவனை நினைவுகூறும் நாவும், நன்றி செலுத்தும் உள்ளமும், ஈமான்விசயத்தில் உதவிசெய்யும் முஃமினான மனைவி (திர்மிதீ 3094). மனைவியாகிய அவர்கள் உங்களின் ஆடை. நீங்கள் அவர்களின் ஆடை (குர்ஆன் 2:187). ஆகவே இதிலே ந்லல மனைவி குறித்து விமர்சனம் எதுவுமில்லை.

பைபிளிலும் தீய மனைவி குறித்து,

9.சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம்.

19.சண்டைக்காரியும் கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப்பார்க்கிலும் வனாந்தரத்தில் குடியிருப்பது நலம்.

நீதிமொழிகள் 21:9, 19


நீதிமொழி 27:15 TCV

[15] சண்டைக்கார மனைவி, மழைக்காலத்தில் தொடர்ச்சியான ஒழுக்கைப்போல் இருக்கிறாள்;

https://bible.com/bible/2730/pro.27.15.TCV

*பெண்களின் புத்திக்கூர்மையான ஆலோசனையை மதித்தல்- இஸ்லாத்தில் முகம்மது நபியே மனிதர்களில் ஞானத்தில் உயர்ந்தவராக கருதப்படுகிறார். ஆனாலும் அன்னவர்களே தன் மனைவியின் ஆலோசனைப்படி செயல்பட்டுள்ளார்கள்_ ஹுதைபிய்யா உடன்படிக்கையின்போது (புகாரி 

2731,2732)

*அத்தோடு கணவனின் அருவருப்பான தோற்றம், பாலியல்ரீதியாக திருப்திப்படுத்த இயலாத நபர், ஒழுக்கமில்லாதவர், நியாயமின்றி அடிப்பவர், உணவும் உறையுளும் தராதவர் போன்று அல்லது நியாயமான காரணங்களுக்காக விவாகரத்தை கேட்டுப்பெறும் உரிமையை இஸ்லாம் அன்றே வழங்கியுள்ளது.  இன்றும் நடைமுறையில் உள்ளது... பைபிளில் கற்பழித்தவனுக்கே கழுத்தை நீட்ட வேண்டும் (உபாகமம் 22:28-29)

*கணவன் உறவுக்கு அழைத்து மனைவி மறுத்து, அதனால் அவன் கோபமுற்றவனாக இரவை கழித்தால், வானவர்கள் அவளை சபிக்கிறார்கள் என்ற ஹதீஸை குறித்து,  திருமணத்தின் நோக்கமே விபச்சாரத்தில் விழாமல் இருப்பதற்கு தான் என்றிருக்கும்போது அவள் வீம்புக்காக மறுத்தால் அதற்குரிய நிலையே இது. தகுந்த காரணங்களுக்காக அதை தெளிவு படுத்தி மறுப்பதற்குரிய தண்டனை அல்ல.. அது கூடும்

இதுபோன்று இன்னும் நிறையக் கூற முடியும். இவர்கள் எதை குற்றச்சாட்டாக வைப்பார்களோ அதுவே பைபிளில் கடுமையானதாக கூறப்பட்டிருக்கும்.

இஸ்லாம் அடிமைகளை நடத்தியவிதம்

 இஸ்லாம் அடிமைகளை கண்ணியப்படுத்துகிறதோடு அவர்களை நல்லமுறையில் நடத்துமாறு வழிகாட்டுகிறது 

*அடிமைகள் என்போர் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் தந்துள்ள உங்கள் சகோதரர்கள் என்றும் அத்தகையோருக்கு நீங்கள் உண்ணுவதிலிருந்து உணவளிக்க வேண்டும் என்றும் நீங்கள் அணிவதிலிருந்து அணியக்கொடுக்க வேண்டும் என்றும் அவர்களின் சக்திக்கு மீறிய பணியை கொடுத்து சிரமப்படுத்த கூடாது என்றும் அப்படி கொடுத்தால் அவருக்கு உதவி செய்யட்டும் என்றும் நபிகளார் வழிகாட்டினார்கள் (புகாரி 30,6050, முஸ்லிம் 3417 ,3419, 3420 (1661a,c,1662)

*அடிமைகள் விசயத்தில் இறைவனை அஞ்சிக்கொள்ளுமாறு நபிகளார் கூறியுள்ளார்கள் (அபூதாவூத் 5156,இப்னுமாஜா 2698, அஹ்மத் 585)

*அடிமைக்கு அறைந்தாலோ நியாயமின்றி அடித்தாலோ அவரை விடுதலை செய்வதே அதன் பரிகாரம் (முஸ்லிம் 3408 ,3409 (1657a,b) -

ஆனால் பைபிளில் பல் உடைவதற்கு அடித்தால் தான் விடுதலை செய்யவேண்டும்.அல்லது கண்ணை கெடுத்தால் தான் விடுதலை செய்ய வேண்டும் (யாத்திராகமம் 21:26,27)

*அடிமைக்கு சாட்டையால் அடித்த நபித்தோழரை கண்ட நபிகளார், உமக்கு உம் அடிமை மீது உள்ள அதிகாரத்தை விட , அல்லாஹ்வுக்கு உம்மீது அதிகாரம் உள்ளது என எச்சரித்தார்கள். இதனால் அவர் இனிமேல் அடிமைகளை அடிக்க மாட்டேன் என உறுதி பூண்டார் (முஸ்லிம் 3413 (1659a)) இன்னொரு அறிவிப்பில், நபிகளாரின் எச்சரிப்பை கேட்ட தோழர் தான் அடித்த அடிமையை அல்லாஹ்வுக்காக விடுதலை செய்துவிட்டேன் என கூறினார். அப்போது நபிகளார் அவ்வாறு செய்யாதிருப்பின் உன்னை (மறுமையில்) நரகம் எரித்திருக்கும் என்றார்கள் (முஸ்லிம் 3414 (1659c)

ஆனால் பைபளோ அடிமையை கடுமையாக தாக்கி ஒரு நாளோ இருண்டு நாளோ கழித்து அவன் செத்தாலும் அவனுடைய சொத்து என்பதால் எந்த தண்டனையும் இல்லை. அதே நாளில் செத்தால் மட்டுமே தண்டனை உண்டு (யாத்திராகமம் 21:21-22)

*தன் அடிமை மீது அவதூறு சொன்னவருக்கு மறுமையில் கசையடி தண்டனை நிறைவேற்றப்படும் (புகாரி 6858) என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

*அடிமையை நியாயமின்றி அடித்தால் மறுமையில் அவர் பழிவாங்கப்படுவார் (அதபுல் முஃப்ரத் 181,182,185,186)

*அடிமையின் விசயத்தில் நல்லமுறையில் நடந்துகொள்ளுமாறும், நீங்கள் உண்ணுவதிலிருந்து அவர்களுக்கு உணவும் நீங்கள் அணிவதிலிருந்து அவர்களுக்கு ஆடையும் கொடுக்க வேண்டும் என்றும் அவர்களை வேதனை செய்யக்கூடாது என்றும் இஸ்லாம் கூறுகிறது (அதபுல் முஃப்ரத் 188, 199) அவர்களுக்கு இயலாத வேலையை அவர்கள்மீது சுமத்த கூடாது என்றும் கூறுகிறது (அதபுல் முஃப்ரத் 192)

*பெற்றோர் உறவினர் அயலவருக்கு நலவான உபகாரம் செய்யுமாறு குர்ஆன் கூறுவதில் அடிமைகளையும் இணைத்து அவர்களுக்கும் நல்லுபகாரம் செய்யுங்கள் என்கிறது (குர்ஆன் 4:36

*அடிமைப்பெண்களுக்கும் அடிமை ஆண்களுக்கும் திருமணம் செய்து வைக்குமாறு எஜமான்களுக்கு இஸ்லாம் வழிகாட்டுகிறது (குர்ஆன் 24:32)...  தோராவும் இந்தவிசயத்தை அனுமதிக்கிறது. ஆனால் புதிய ஏற்பாட்டுக்காலத்தில் காயடித்து விடுவார்கள்.  அத்தோடு எவருமே  திருமணம் செய்யாது துறவிகள் போல இருப்பதே நலம் என்கிறது (மத்தேயு 19:10-12, 1கொரிந்தியர் 7:26,28,37,38)

*அடிமைகளை விடுதலை செய்வதை சிறப்பித்து, அவ்வாறு விடுதலை செய்யுமாறும் (புகாரி 1054,2503,6715) ,சம்பாதித்து தன் பெறுமதியை செலுத்தி விடுதலை பெற விரும்பும் அடிமைகளுக்கு அதற்காக வாய்ப்பளிக்குமாறும் இஸ்லாம் வழிகாட்டுகிறது (புகாரி 2492)  ஆண் அடிமை பெண் அடிமை இருவருக்குமே இது பொதுவானது

.. அத்தோடு குற்றப் பரிகாரங்களில் ஒன்றாக அடிமைவிடுதலையை இஸ்லாம் ஆக்கியுள்ளது (உதாரணமாக குர்ஆன் 4:92)

இஸ்ரேலியரான ஆண் அடிமைகள் மட்டும் ஆறு வருடம் அடிமையாக இருந்துவிட்டு விடுதலை பெறலாம் என பைபிள் அனுமதிக்கிறது (யாத்திராகமம் 21:1-6)

*அடிமையாக இருப்பவர் இறைவனுக்குரியவற்றையும் தன் எஜமானுக்குரியவற்றையும் சரிவர நிறைவேற்றினால் அவருக்கு இரண்டு நற்கூலி உண்டு என்பதாக நபிகளார் கூறியுள்ளார்கள். இதை அறிவிக்கும் நபித்தோழர் இதன் சிறப்பினால் ஜிகாது செய்வதும் தாயுக்கு உபகாரம் செய்வதும் இல்லையென்றால் நானும் அடிமையாக இருப்பதை விரும்பியிருப்பேன் என்கிறார் (புகாரி 2548)

*தன் அடிமைப்பெண்ணுக்கு கற்பித்து விடுதலை செய்து அவளை திருமணம் செய்துகொண்டால், அவருக்கு இறைவனிடம் இரு நன்மைகள் உள்ளன என ஊக்குவிக்கிறது (புகாரி 97)

ஆனால் பைபிளோ சொந்த மகளையே அடிமையாக விற்றுப் போடும் உரிமையை தகப்பனுக்கு வழங்கியுள்ளது (யாத்திராகமம் 21:7-10)

*ஆனாலும் அடிமைகள் எஜமானின் சொத்துக்கள் என்பதால், அவர்களை வாங்குவது விற்பது கூடும்.

பைபிளும் புறஜாதியார்களை காலம் காலமாக அடிமைகளாக வாங்கி விற்று அடிமையாக வைத்துக்கொள்ளலாம் என்கிறது (லேவியராகமம் 25:44-46)

ஆகவே பைபிளை விட இஸ்லாம் அடிமைகள் விசயத்தில் சிறப்பாகவே போதிக்கிறது.


மேலும் வாசிக்க இஸ்லாமும் அடிமைப்பெண்களும்

அடிமைப்பெண்களும் முத்ஆ திருமணமும்

 உள்ளடக்கம்

1.விபச்சாரத்திலிருந்து தூரமாக வழிகாட்டும் இஸ்லாம்

2.இஸ்லாமிய நம்பிக்கைப்படி விபச்சாரம் என்பது என்ன?

3.அடிமைப்பெண்களுடன் தாம்பத்திய வாழ்க்கையும் ஒழுங்குமுறையும்

4.முத்ஆ திருமணம்


1.விபச்சாரத்திலிருந்து தூரமாக வழிகாட்டும் இஸ்லாம்


*இஸ்லாம் விபச்சாரத்தை நெருங்கவே வேண்டாம் என்று கூறுகிறது (குர்ஆன் 17:32).

*விபச்சாரத்தில் விழுந்துவிடாதிருக்க,,

 -முதலில் ஆண்களுக்கு பார்வையை தாழ்த்திக்கொள்ளுமாறும் (குர்ஆன் 24:30), பின் பெண்களுக்கு பார்வையை தாழ்த்திக்கொள்ளுமாறும் தம் அலங்காரங்களை அந்நிய ஆண்களுக்கு வெளிப்படுத்த கூடாது என்றும் மறைத்து வைத்துள்ள அலங்காரம் வெளிப்படுவதற்காக கால்களை தட்டி நடக்க வேண்டாம் என்றும் (குர்ஆன் 24:31), ஒரு பெண் அந்நிய ஆணுடன் பேசும்போது குளைந்து குளைந்து கவர்ச்சியாக பேசக்கூடாது என்றும் அவ்வாறு செய்தால் , மனதில் நோயுள்ளவன் ஆசைப்படுவான் என்றும் (குர்ஆன் 33:32), ஒரு பெண்ணுடன் அந்நிய ஆண் (திருமணம் செய்ய தடைசெய்யப்பட்ட ஆண் அல்லது கணவன் அல்லாதவர்) தனித்திருக்க கூடாது (புகாரி 5233,3006), என்றும் தனியாக உள்ள பெண்ணிடம் கணவனின் சகோதரன் செல்வதை கூட மரணத்துக்கு ஒப்பானதாக பார்க்கிறது (புகாரி 5232), அத்துடன் அந்நியச் பெண்ணை (திருமணம் செய்ய தடைசெய்யப்பட்ட உறவினரான பெண் அல்லாதோர் அல்லது மனைவி,தன் அடிமைப்பெண் அல்லாதோர்) தொடுவதை விட இரும்பு ஊசியால் தலை துளைக்கப்படுவது சிறந்தது என எச்சரித்துள்ளது (அல்ஸில்ஸிலதுஸ்ஸஹீஹா 226)

*அத்தோடு விபச்சாரம் செய்துவிட்டால், நிரூபிக்கப்படும் போது திருமணமானவராயின் கல்லெறிவதன் மூலம் மரண தண்டனையும், திருமணமாகாதவராயின் நூறு கசையடிகளும் ஒருவருட ஊர் நீக்கமும் தண்டனையாக கிடைக்கும் (புகாரி 6633,6634).

இவ்வாறு இஸ்லாம் விபச்சாரத்திலிருந்து தற்காத்துக்கொள்ள சகல வழிமுறைகளையும் வழங்கியுள்ளது

2.இஸ்லாமிய நம்பிக்கைப்படி விபச்சாரம் என்பது என்ன?

இஸ்லாம் ஆண்களுக்கு இரண்டுவிதமான பெண்களுடன் குடும்ப வாழ்வில் ஈடுபட அனுமதிக்கிறது. 1.தன் சொந்த மனைவியர் 2.தன்னுடைய வலக்கரம் சொந்தமாக்கப்பட்ட அடிமைப்பெண்கள் (குர்ஆன் 23:5-7, 70:29-31).  இதுவல்லாதவை விபச்சாரமாக கருதப்படும்.

3.அடிமைப்பெண்களுடன் தாம்பத்திய வாழ்க்கையும் ஒழுங்குமுறையும்

தன்னுடைய அடிமைப்பெண் அல்லாத அடிமைப்பெண்ணோடு குடும்பம் நடாத்த வேண்டுமானால் அவர்களை மஹர் கொடுத்து திருமணம் முடித்தே வாழ முடியும் (குர்ஆன் 4:25), 

அவள் தன் மனைவியின் அடிமைப்பெண் என்பதால் திருமணம் செய்யாமல் உறவு கொண்டால் அதுவும் விபச்சாரமாக கருதப்பட்டு தண்டனை வழங்கப்படும் (புகாரி 2290) .. 

அத்தோடு தன் அடிமைப் பெண்ணை வேறொரு அடிமைக்கு திருமணம் செய்துகொடுத்தால், எஜமானுக்கு அவளது மறைவுறுப்புகளை பார்ப்பதை இஸ்லாம் தடுக்கிறது. அதாவது அவளோடு உடலுறவு கொள்ள முடியாது (அபூதாவூத் 496,, மிஷ்காத்துல் மஸாபீஹ் 3111). அவளை விவாகரத்து செய்யும் முழு உரிமையும் அவளது அந்த கணவனையே சாரும்.(முஅத்தா பாடம் 29 ஹதீஸ் 51) அதாவது எஜமானுக்கு அதை தீர்மானிக்க முடியாது. 

(பைபிளிலும் அடிமையானவனுக்கு எஜமான் திருமணம் செய்து வைத்திருந்தால், அவன் விடுதலைபெற்று போவதானால் தனியாக தான் போகவேண்டும். அவனது மனைவியும் பிள்ளைகளும் எஜமானையே சாரும் (யாத்திராகமம் 21:4).

அடிமைப் பெண்கள் என்போர் எஜமானின் சொத்து என்பதாலும் அக்கால நடைமுறையில் இருந்ததாலும் அவர்களுடன் வாழ்வது அனுமதிக்கப்பட்டது. 

இவ்வடிமைகள் போர்களில் கைதிகளாக பிடிக்கப்பட்டு வீரர்களுக்கு பங்காக கிடைப்பார்கள்.,. இதுவே அக்கால அரேபியர்களின் நடைமுறை....

அப்போது கூட இஸ்லாம் நல்லொழுக்கத்தை கற்பிக்கிறது அதாவது: அவ்வடிமை கர்ப்பிணியாக இருந்தால் குழந்தை பிரசவிக்கும்வரையும், கர்ப்பிணி அல்லாத பெண்ணாக இருந்தால் ஒருதடவை மாதவிடாய் ஏற்பட்டு சுத்தமடையும் வரை உடலுறவு வைக்க கூடாது (அபூதாவூத் 2157).

இதேபோல் அடிமையாக இருப்பவரை எஜமானரிடமிருந்து விலைக்கு வாங்கியும் அடிமைகளாக பெறப்பட்டனர். (ஆனால் பைபிளில் மகளையே அடிமையாக விற்றுப் போடலாம் -யாத்திராகமம் 21:7-10)

ஆனாலும்

*  தன் அடிமைப்பெண்ணுக்கு கல்வியை கற்றுக்கொடுத்து, விடுதலை செய்து திருமணமும் செய்துகொண்டால், அத்தகையவருக்கு இறைவனிடம் இருமடங்கு நற்கூலி உண்டு என்பதையும் நபிகளார் கூறியுள்ளார்கள் (புகாரி 97, 3446)

ஆகவே திருமணத்திற்கு வெளியே என்பது தன் சொந்த சொத்தாக உள்ள அடிமைப்பெண்ணை மட்டுமே குறிக்கும். காரணம் உரிமையாளருக்கு உரிமை உண்டே.

பைபிளும் வைப்பாட்டிகளும்

*பைபிள் திருமணத்திற்கு வெளியே வப்பாட்டி வைத்தவர்களை சிறப்பித்து பேசுவதோடு, வப்பாட்டி வைத்துக் கொள்வதை விபச்சாரம் என்றோ அது கூடாது என்றோ பைபிளில் ஒரு வசனம் கூட கிடையாது.

*தேவனின் நண்பரான ஆபிரகாமுக்கு (2நாளாகமம்20:7,ஏசாயா 41:8) மனைவிகள் அல்லாத பல வப்பாட்டிகள் இருந்தனர் (ஆதியாகமம் 25:6)- இந்த ஆபிரகாம் செய்தது தவறு அல்ல என்று அடுத்த அதிகாரமே சொல்கிறது, அவர் தேவனது சொல்லுக்கு கீழ்படிந்து ,அவரது கட்டளைகளையும் நியமங்களையும் பிரமானங்களையும் கைக்கொண்டார் (ஆதியாகமம் 26:4 (ஆங்கிலம் 26:5))

*உரியாவின் மேட்டரை தவிர தப்பே செய்யவில்லை என்றும் , தேவன் அவனுக்கு கட்டளையிட்டதில் ஒன்றையும் விட்டு விலகாமல் அவரது பார்வைக்கு செம்மையானதையே செய்தான் என பைபிள் கூறும் தாவீது (1 இராஜாக்கள் 15:5), பல வப்பாட்டிகளை திருமணத்திற்கு வெளியே வைத்திருந்தார் (2 சாமுவேல் 5:13)

இதேபோல் அநேக பரிசுத்தவான்கள் என கூறப்பட்டவர்கள் வப்பாட்டி வைத்திருப்பவர்களாக பழைய ஏற்பாடு கூறுகிறது. இப்படி வைப்பாட்டி வைப்பதை தவறு என்றோ விபச்சாரம் என்றோ பைபிள் எங்கேயும் சொன்னதில்லை என்பதோடு, தாவீது செய்தவற்றில் உரியாவின் மனைவியிடம் முதல் தடவை விபச்சாரம் செய்தது அவனை கொன்றதை தவிர வேறு பாவமே செய்யவில்லை என கூறி வப்பாட்டி வைத்ததையும் தப்பு அல்ல என்று பைபிளே காட்டிவிட்டது.

இந்த லட்சணத்தில் உரிமையாளன் தன் உரிமைச் சொத்தான அடிமைப்பெண்ணுடன் குடும்பம் நடாத்துவதை குறை சொல்லலாமா?

இஸ்லாம் அடிமைகளை நடாத்தும்விதம்

4.முத்ஆ விசயம்

முத்ஆ என்பது அரபுகள் தூர பயணங்களின் போது கடைபிடித்துவந்த திருமண முறையாகும். 

சொந்த ஊரல்லாத வேறு ஊரில் தற்காலிகமாக இருக்கும் காலத்தில் தற்காலிகமாக அங்கே குறித்த பெண்ணின் சம்மதத்தோடு மணக்கொடை கொடுத்து திருமணம் செய்து கொள்வர். பிறகு தன் தேவை முடிந்து ஊரிலிருந்து வெளியேறும்போது மனைவியிடமிருந்தும் பிரிந்து விடுவர்..

இதை நபிகளார் கைபர் யுத்தத்தின்போது தடை செய்தார்கள் (புகாரி 5115,5523,6961 முஸ்லிம் 2738,2739,2740-2741,3920). 

பிறகு அவ்தாஸ் போரின்போது மூன்று நாட்களுக்கு மட்டும் இத்திருமணத்தை அனுமதித்தார்கள் பிறகு அதை தடை செய்தார்கள்.(முஸ்லிம் 2727) மக்கா வெற்றியின் போது மக்காவிற்கு சென்றவர்களுக்கு சில நாட்களுக்கு அனுமதித்தார்கள். பிறகு தடை செய்துவிட்டார்கள் (முஸ்லிம் 2728,2729),

 குறிப்பாக அப்போது இத்திருமணத்தை மறுமைவரைக்கும் அல்லாஹ் தடைசெய்து விட்டான் என அறிவித்தார்கள் (முஸ்லிம் 2730 &2733-2735,2737)

சில நபித்தோழர்களுக்கு இறுதியாக தடைசெய்த தகவல் கிடைக்காததால், அது கூடும் என கருதி செய்துவந்தனர் (முஸ்லிம் 2724,2725.) 

அதுவும் நிர்ப்பந்தமான நிலையில் தான் என்றே கருதினர் (புகாரி 5116, முஸ்லிம் 2736 ) 

அதை உமர் (ர) தன் ஆட்சியில் மீண்டும் தடைசெய்தார்கள் (முஸ்லிம் 2725,2726 ).

 அப்துல்லாஹ் பின் ஸுபைர் ஆட்சிக்காலத்தில், அவ்வாறு செய்தால் விபச்சாரமாக கருதப்பட்டு கல்லெறி தண்டனை வழங்குவேன் என அப்துல்லாஹ் கூறினார் (முஸ்லிம் 2736).

இதை நன்கு அறிந்த அபூஅம்ரா எனும் நபித்தோழர் இதுபற்றி கூறும்போது ,இஸ்லாத்தின் ஆரம்பத்தில் நிர்ப்பந்தத்திற்குள்ளானவர்களுக்கு மட்டும் செத்த பிராணி, இரத்தம்,பன்றி இறைச்சி அனுமதிக்கப்பட்டது போன்று தான் முத்ஆவும் அனுமதிக்கப்பட்டது என்றும், பிறகு அல்லாஹ் இம்மார்க்கத்தை உறுதியாக்கியதும் தடைவிதித்து விட்டான் என்றார்கள் (முஸ்லிம் 2736).

அத்துடன் முத்ஆ சம்பந்தமான அறிவிப்பை பதித்துவிட்டு இமாம் புகாரி, இந்த திருமணத்திற்கு அனுமதி மாற்றப்பட்டு விட்டது என அலீ (ர) அவர்கள் நபிகளாரிடமிருந்து அறிவித்து தெளிவுபடுத்தியுள்ளார்கள் என புகாரி 5119 இலே இறுதியில் கூறியுள்ளார்கள்.

ஆகவே இது விபச்சாரம் செய்யாமலிருக்க குடும்பத்தவர்களை விட்டும் தூரமாக உள்ளவர்களுக்கு நிர்ப்பந்தமான சூழ்நிலையில் ஒரு மாற்று வழியாக தற்காலிக திருமணம் நடைமுறையில் இருந்தது. அதை நபிகளார் இறுதியில் தடைசெய்துவிட்டார்கள்

 பைபிள் வைப்பாட்டி வைத்தால் கொள்வதையே தடைசெய்யாதபோது, அதைவிபச்சாரமாக கருதாத போது , தற்காலிகமாக திருமணம் செய்ததை விமர்சிக்க தகுதி உண்டா?

அத்தோடு கன்னிப் பெண்ணோடு விபச்சாரம் செய்தால் கூட , தகப்பனுக்கு இஷ்டமில்லாதபோது கன்னியின் மஹரை கொடுத்துவிட்டு போக வேண்டும் என யாத்திராகமம் 22:16-17 சொல்கிறது. விபச்சாரம் செய்த கன்னிப் பெண்ணுக்கு தண்டனையும் கிடையாது. மாறாக உடலுறவுக்கான கூலியை பெற்றுக்கொள்ள சொல்லி , இந்தக்கால விலைமாதுகளின் நடத்தையான போதனையை வழங்கியுள்ளது பைபிள்.

ஆனால் இஸ்லாமோ விபச்சாரம் செய்தால் திருமணமாகாதவராக இருந்தால் நூறுகசையடிகளும் (குர்ஆன் 24:2) திருமணமானவராயின் கல்லெறி தண்டனையும் வழங்குகிறது (புகாரி 6633-6634). இதிலே எது ஒழுக்கமானது? குறைசொல்ல தகுதியுண்டா?

வியாழன், 5 ஜூன், 2025

அல்லாஹ்வும் பிதாவும் ஒருவரா? -அலசல்

 


அல்லாஹ்வும் பிதாவும் ஒருவரா?

இதன் உள்ளடக்கம் 

1.அல்லாஹ்வை ஏன் பிதா என முஸ்லிம்கள் அழைப்பதில்லை 


2.அகிலத்தாரின் இரட்சகனும் உலகத்தின் அதிபதியும்


3.சாத்தானை ஏன் உலகின் அதிபதி என புதிய ஏற்பாடு அழைக்கப்படுகிறது?


4.படைப்புகளின்மீது சத்தியம் செய்வதும் பைபிளும்


5..பிதாவும் சாத்தானும்


1.அல்லாஹ்வை ஏன் பிதா என முஸ்லிம்கள் அழைப்பதில்லை?

தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்ளும் போதகர்களால் தமது சர்ச்சு மக்களை ஏமாற்றுவதற்காகவும், இஸ்லாத்தின்பக்கம் அவர்களது பார்வை திரும்பி விடக்கூடாது என்பதற்காக வைக்கப்படும் வாதமே "அல்லாஹ் வேறு புதிய ஏற்பாடு கூறும் பிதா வேறு" என்பதாகும்.


உண்மையில் அனைத்தையும் படைத்து பரிபாலித்து மரணிக்கவைத்து உயிர்ப்பிக்கிற கடவுள் ஒருவர் மட்டுமே. ஆனால் வெவ்வேறு மதங்களில் படைத்த கடவுளுக்கு மொழி, கலாச்சார வேறுபாடு காரணமாக வித்தியாசமான பெயர்களை அடையாளங்களை பண்புகளை கொடுக்கிறது. ஆனாலும் மெய்யான இறைவன் ஒருவனே. 


அந்தவகையில் யூதர்களின் நூல்களில், மெய்யான கடவுள் ஒருவரே என்றும் அவரை எபிரேய பாசையில் "எலோஹிம்-கடவுள் (ஆதி1:1)", "அதோனாய்,யாஹ்வே/யெஹோவா- ஆண்டவன்/கர்த்தர் (Lord) (பைபிளில் அதிகமாக கடவுளுக்கு பாவிக்கப்படும் வார்த்தை)", "பாஆல் (בעל) (Ba'al)/ ஈஷ் (אש) (ISH) -கணவர் (தமிழ் கலாச்சாரத்தில் மாமா) (ஏசாயா 54:5, எரேமியா 31:32 & ஓசியா 2:16)" , அப் (Ab -אב) -தகப்பன் (Father (ஏசாயா 63:16, 2 சாமுவேல் 7:14)" என வித்தியாசமான பெயர்களால் அழைக்கப்படுகிறார்.


கடவுள் மனைவிக்கு மாமாவாகவும் (கணவர்) , பிள்ளைகளுக்கு அப்பாவாகவும் கருதப்பட காரணம் அவை உவமைகளோடு சம்பந்தமானது.




கணவன் தன் மனைவி ஒழுக்கம் இல்லாமல் நடக்கும்போது தள்ளுதல்சீட்டை எழுதி ஒதுக்கி வைப்பது போல , விசுவாசிகள் அவரது கட்டளைகளை விட்டு விலகி மதம் மாறினால், ஒதுக்கி வைத்துவிடுவார் என்ற அர்த்தத்தில் கணவராகவும் விசுவாசிகள் மனைவிகளாகவும் கருதப்படுகிறார்கள். இதையே எரேமியா 3:7-8 கூறுகிறது.




அதுபோல தகப்பன் என்பவன் உண்டாக்கியவன் என்பதாலும், பிள்ளைகள் தவறு செய்யும் போது கண்டித்து தண்டித்து திருத்துபவனாகவும் இருப்பதாலும் விசுவாசிகளை உண்டாக்கி, அவர்கள் தவறு செய்யும்போது தண்டித்து திருத்துபவராக இருப்பதால் தகப்பன் என அக்காலத்தில் அழைத்தனர்.


இதையே 2 சாமுவேல் 7:14இலே தெளிவாக உணர முடியும். சொலமோன் ராஜாவை(யும் அவரது சந்ததிகளான யூதா கோத்திர ராஜாக்களையும்) தன் மகன் என்றும் நான் அவனுக்கு தகப்பன் என்றும் கூறிவிட்டு, அவன் தவறு செய்யும்போது மற்ற மனிதர்களை கொண்டு தண்டிப்பேன் என கூறப்பட்டுள்ளது.


அதாவது விசுவாசிகளை தவறும்போது தண்டித்து கண்டித்து திருத்துவதால் தான் தகப்பன் என கருதப்படுகிறது.




ஆனால் பிற்காலத்தில் ரோம் கிரேக்க மதங்களால் ஈர்க்கப்பட்ட யூதரும் பின்னர் கிறிஸ்தவர்களும் தகப்பன் என்பதை வேறுவிதமாக புரிந்து கொண்டனர். அதை பவுலும் ஏற்றுக்கொண்டு அப்படி சொன்ன புலவர்களை ஞானிகள் போல சித்தரித்துள்ளார் (அப்போஸ்தலர் 17:28)


இவர்களோ கடவுளுக்கு தம்மை மிகவும் நேசத்துக்குரியவர்கள் மகனுடைய அந்தஸ்த்தில் உள்ளவர்கள் என புரிந்துகொண்டனர். குறிப்பாக கிறிஸ்தவர்கள் இயேசுவின் ஆவி மூலமாக தேவனுக்கு வாரிசுகளான பிள்ளைகள் என தம்மையும் ஏனைய கிறிஸ்தவர்களையும் குறித்து பவுல் எழுதியுள்ளார் (கலாத்தியர் 4:7, ரோமர் 8:17)


இறுதியாக கூறிய இந்த கருத்தை இஸ்லாம் ஏற்கவில்லை.. கடவுளுக்கு அந்தஸ்த்தில் எவரும் மகனாகவோ, இனத்தை காரணமாக காட்டி நற்செயலின்றி மிகவும் விருப்பத்திற்குரியவர்களாகவோ ஆக முடியாது. 


இவர்கள் கூறும் விதமான மகன் மற்றும் நேசத்துக்குரியவர்கள் என்றிருந்தால், கடவுள் இவர்களின் பாவங்களுக்காக தண்டிக்க மாட்டான் மிகவும் வேதனைப்படுத்த மாட்டான் அல்லவா? ஆனால் இவர்களோ பாவம் செய்தபோது கடுமையாக வேதனைக்குள்ளாகி இருக்கிறார்கள் குறிப்பாக பாபிலோனியர்களாலும் ரோமர்களாலும். அதையே குர்ஆன் 5:18 விமர்சிக்கிறது.




பழைய ஏற்பாட்டு பிதா மகன் உறவு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்தாலும், அதன் பயன்பாடு தவறாக மாறிவிட்டது என்பதால் , இஸ்லாத்தில் எங்கேயும் இறைவனை பிதா என அழைப்பதை காண முடியாது.




இதே நடைமுறை பழைய ஏற்பாட்டிலும் உண்டு. உதாரணமாக ஆரம்பத்தில் கடவுளை பாகால் (Ba'al- בעל) எனும் வார்த்தையை பயன்படுத்தி கணவர் என பாவிக்கப்பட்டுள்ளது (உதாரணமாக ஏசாயா 54:5). ஆனால் வேறு போலி கடவுள்களும் பாகால்கள் என பிரபல்யமடைந்த போது, ஓசியா காலத்தில் "இனி என்னை பாகாலீ (என் கணவன்) என அழைக்காமல், ஈசி (என் கணவன்) என அழைப்பாய் என்றும் இவ்வாறே பாகாலீம் என்பதை அவளுடைய வாயிலிருந்து இல்லாமல் போக பண்ணுவேன் என ஓசியா 2:16-17 கூறுகிறது.


பாகால் என்பது எப்படி நீக்கப்பட்டதோ , அதுபோன்றே பிதா என்பதும் நீக்கப்பட்டு இருக்கின்றது. அதற்கு பதிலாக இறைவன்/ஆண்டவன் பரிபாலிக்கிறவன் என்பதே இஸ்லாம் பாவிக்கிறது.


இதனாலேயே நாம் இதை இப்போது பாவிப்பதில்லை.




2.அகிலத்தாரின் இரட்சகனும் உலகத்தின் அதிபதியும்

குர்ஆன் அல்லாஹ்வை அகிலத்தாரின் இரட்சகன் (The Lord) (رب العالمين) என முதல் அத்தியாயத்தின் இரண்டாம் வசனத்திலேயே சொல்கிறது.


புதிய ஏற்பாட்டில் யோவான் எழுதிய சுவிசேத்தில் சாத்தானை உலகத்தின் அதிபதி/தலைவன் என இயேசு கூறுவதாக யோவான் 12:31,14:30,16:11 கூறுகிறது. பவுலும் சாத்தானை இப்பிரபஞ்சத்தின் தேவன் என்று 2 கொரிந்தியர் 4:4இல் கூறுகிறார்.


இதை வைத்து அறிவிலிகளாகவுள்ள போதகர்கள், குர்ஆன் கூறும் அல்லாஹ் என்பவன் கிறிஸ்தவம் கூறும் சாத்தான் என்று கூறி தம் சபை மக்களை ஏமாற்றுகிறார்கள்.


உண்மையில் குர்ஆன் கூறும் அகிலத்தாரின் இரட்சகன்/ஆண்டவன் என்பதற்கு விளக்கத்தை குர்ஆனே கூறியுள்ளது. மூஸா நபியிடம் அகிலத்தாரின் இறைவன் என்றால் என்ன என்று கேட்டபோது, அதன் விளக்கம் இவ்வாறு கூறப்பட்டது.


قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ الْعٰلَمِيْنَ‏


(அதற்கு) ஃபிர் அவ்ன் “அகிலத்தாரின் இரட்சன்” என்றால் என்ன?” என்று கேட்டான்.


(அல்குர்ஆன் : 26:23)




قَالَ رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا اِنْ كُنْتُمْ مُّوْقِنِيْنَ‏




(அதற்கு) “நீங்கள் உறுதிகொண்டவர்களாக இருப்பின் வானங்கள் மற்றும் பூமி அவை இரண்டிற்கும் மத்தியிலுள்ளவை ஆகியவற்றின் இரட்சகன்” என்று (மூஸா கூறினார்),.


(அல்குர்ஆன் : 26:24)




அதாவது வானங்கள் மற்றும் பூமி ஆகியவற்றுக்கும் அவற்றுக்கிடையிலுள்ள அனைத்திற்கும் இரட்சகன்/ஆண்டவன் (The Lord) என்பதே அதன் அர்த்தம்.


அதாவது அல்லாஹ்வை தவிர மற்ற அனைத்திற்கும் அல்லாஹ்வாகிய அவன் இறைவனாக இருக்கிறான் என்பதே அர்த்தம்.




இப்பெயரை வைத்து சாத்தான் என கூறுவதானால் பிதாவையும் சாத்தான் என்று தான் கூற வேண்டும்.


ஏனெனில் இயேசுவும் வானம் பூமியின் ஆண்டவர் என பிதாவை கூறுகிறார்:


“அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.”


மத்தேயு 11:25


அரபியில் (رب السماء والارض)-வானம் பூமியின் இரட்சகன்


அப்படிப் பார்த்தால் பிதாவை தான் இயேசு சாத்தானே என்று இங்கே கூப்பிடுகிறாரா?


அதேபோல் பவுலும் அப்போஸ்தலர் 17:24இலே இதே வார்த்தையை தேவனுக்கு பாவிக்கிறார்.


உண்மையான இறைவனை தவிர , வானம் பூமியிற்கு வேறு இறைவனோ இரட்சகனோ அதிபதியோ இருக்க முடியாது .


ஆகவே மாபெரும் அறிவீனத்தினாலேயே இவர்கள் இவ்வாறு பொய் கூறுகிறார்கள்.


3.ஏன் சாத்தானை உலகின் அதிபதி என்றும் பிரபஞ்சத்தின் தேவன் என்றும் மரணத்தின் அதிபதி என்றும் கிறிஸ்தவ புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் கூறுகிறார்கள்?



புதிய ஏற்பாடு சாத்தானை வழிகெடுப்பதற்காகவேண்டி பூமியில் சகல ராஜ்யங்களின் அதிகாரம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறுகிறது.(லூக்கா 4:5-6) அவனை பணிந்து கொண்டால், இயேசுவுக்கும் அவன் தருவதாக கூறியதாக அவ்வசனங்கள் கூறுகின்றன.


ஆனால் பொதுவாக புதிய ஏற்பாடு இயேசுவையும் விசுவாசிகளையும் பரிசுத்த ஆவியையும் உலகத்தில் இருந்தாலும் உலகத்தாராக கருதவில்லை . மாறாக கெட்டவர்களை அவிசுவாசிகளை தான் உலகத்தார் என்று கூறுகிறது.


“நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது.” யோவான் 17:14


“நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது”.யோவான் 15:19


“உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.”யோவான் 14:17


இதேபோல் 1 யோவான் 3:1,13 யிலும் இவை கூறப்பட்டுள்ளது 


(சாத்தான் முன்பு தேவதூதனாக இருந்ததாக கருதி, அவனையும் அவனது தூதர்களையும் வானலோக அதிகாரப்பிரபு , வானலோக பொல்லாத ஆவிகள் என்றெல்லாம் பவுல் எழுதியுள்ளார் -எபேசியர் 2:2; 6:12)


அதாவது விசுவாசிகள் அல்லாதோரை உலகத்தார் மற்றும் உலகம் என்ற அர்த்தத்தில், அவர்களின் மீது அதிகாரத்தை சாத்தான் செலுத்துகிறான் என்ற ரீதியில் சாத்தானை உலகின் அதிபதி என்றும் பிரபஞ்சத்தின் தேவன் என்றும் கூறுகின்றன.




அத்தோடு மரணம் பாவத்தினால் வந்ததாக வருவதாக பவுலும் அவரை சார்ந்தவர்களும் நம்பியதால் (ரோமர் 5:12), மரணத்தின் அதிபதியாக சாத்தானை எபிரேயர் 2:14 கூறுகிறது. 


(ஆனால் உண்மையில் மரணிக்க செய்கிறவர் கொல்லுகிறவர் தேவன் ஒருவரே - உபாகமம் 32:39, 1 சாமுவேல் 2:6)


ஆகவே இவற்றை அறியாமல் உலருவது நியாயமல்ல.




4.படைப்புகளின்மீது சத்தியம் செய்வது

அல்லாஹ் குர்ஆனில் படைப்புகளின் மீது சத்தியம் செய்கிறான். ஆனால் கர்த்தரோ தன்னைவிட பெரியவர் இல்லாததால் தன் மீதே ஆணையிட்டார் (எபிரேயர் 6:13). அதனால் இது நம் தேவனாக இருக்க முடியாது என தற்குரித்தனமாக பேசி தம் மதத்தவர்களை மூடர்களாக்குகின்றனர்.


முதலில் இறைவன் செய்பவை பற்றி அவன் விசாரிக்கப்பட மாட்டான். இவர்கள் தான் விசாரிக்கப்படுவார்கள் (குர்ஆன் 21:23).


இறைவன் தன் படைப்புகள் மீது சத்தியம் செய்ய பூரணமாக உரிமை படைத்தவன். ஏனெனில் அவன் தான் விரும்பியதை கட்டளையிடுவான் சட்டமாக்குவான் (குர்ஆன் 5:1). படைப்புகளால் இறைவனுக்கு சட்டம் போட முடியாது.


வேடிக்கையாக எபிரேயர் 6:13ஐ எழுதிய நபர் பழைய ஏற்பாட்டை எப்போதும் தப்பு தப்பாக படித்து கதை சொல்பவர். உதாரணமாக 


*நோயாளி தேவனிடம் செய்யும் ஜெபமான சங்கீதம் 102:25-27ஐ அப்படியே தேவன் தன் மகனிடம் சொன்னது என உருட்டுவார் (எபிரேயர் 1:10-12). 


*சேவகன் தன் ராஜாவை புகழ்ந்து பாடிய சங்கீதம் 45ஐ தேவன் தன் மகனை குறித்து கூறியதாக (எபிரேயர் 1:8-9) உருட்டுவார். .


*ஏசாயா தன்னை குறித்து சொல்வதை (ஏசாயா 8:18) இயேசு ஏசாயா மூலம் பேசியதாக உருட்டுவார் (எபி 2:13),


* தாவீது தன்னை குறித்து சங்கீதம் 22:22இலே கூறுவதை இயேசு தன்னை குறித்து கூறவுதாக உருட்டுவார் (எபி 2:12). 


*மெல்கிசேதேக் பற்றி வம்சவரலாறு பிறப்பு மரணம் பற்றி தோராவில் இல்லாததால் , அவர் தாய் தகப்பனற்றவர் ஆரம்பமும் முடிவும் இல்லாதவர் தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவன் என உருட்டுவார் (எபி 7:3). 


* நான் அவர்களின் நாயகராக இருந்தேன் என எரேமியா 31:32 உள்ளதை நான் புறக்கணித்தேன் என உருட்டுவார் (எபி 8:9). 


*என் செவிகளை திறந்தீர் என தாவீது வேண்டுவதை (சங்கீதம் 40:6) , அப்படியே எனக்கு சரீரத்தை ஆயத்தம் பண்ணினீர் என இயேசு சொன்னதாக உருட்டுவார் (எபி 10:5).. 


இப்படிப்பட்ட நபரே இதன் ஆசிரியர். அதாவது வேதத்தை எப்படி படிக்க கூடாது என்பதற்கு சிறந்த உதாரணமே இவர் தான்.


வேடிக்கையாக தேவன் தன் படைப்பாகிய யாக்கோபின் மகிமையின் மீது ஆணையிட்டுள்ளார்.


அவர்கள் செய்கைகளையெல்லாம் நான் ஒருபோதும் மறப்பதில்லையென்று கர்த்தர் யாக்கோபுடைய மகிமையின்பேரில் ஆணையிட்டார்.


ஆமோஸ் 8:7


இதுவும் கர்த்தர் என் கிறிஸ்தவர்கள் உருட்டுவார்கள். ஆனால் அதே ஆமோஸ் 6:8இலே கர்த்தர் இதே யாக்கோபின் மகிமையை (மேன்மை) வெறுப்பதாக சொல்கிறார்.


அப்படியென்றால் தன்னை தானே வெறுத்துக்கொள்கிறாரா என்ன? 


மாறாக யாக்கோபின் மகிமை என்பது இஸ்ரவேலர் தம்மை உயர்வாக கருதுவதை குறிக்கிறது. அதாவது பிக்காளித்தனம். அதன்மீது தான் கர்த்தர் ஆணையிட்டார்.


கர்த்தரே இப்படி ஆணையிட்டுருக்க எபிரேய ஆசிரியர் இதை ஒழுங்காக படிக்காமல் எழுதியதை கர்த்தரே சொல்வதாக உருட்டுவது சரியல்ல


5.பிதாவும் சாத்தானும்

பழைய ஏற்பாட்டில் தேவனது சித்தப்படி தேவனால் அதிகாரம் கொடுக்கப்பட்டு, தேவனையும் ஏவக்கூடியவனாக சாத்தானை சித்தரிக்கப்படுகிறது. அத்தோடு சாத்தான் செய்த தீங்குகளை தேவன் செய்த தீங்குகள் என்றும் சாத்தான் ஏவியதை தேவன் ஏவியதாக கூறப்படுகின்றன.


அ.உலகில் நினைத்தபடி சுற்றிவர தேவனோடு கருத்துப்பரிமாறி தேவனையே ஏவிவிடுபவனாக:


1.பின்னொருநாளிலே தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றான். 


2.கர்த்தர் சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார்; சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான். 


3.அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: நீ என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமான மனுஷனாகிய அவனைப்போல பூமியில் ஒருவனுமில்லை; முகாந்தரமில்லாமல் அவனை நிர்மூலமாக்கும்படி நீ என்னை ஏவினபோதிலும், அவன் இன்னும் தன் உத்தமத்திலே உறுதியாய் நிற்கிறான் என்றார். 


4.சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும், மனுஷன் கொடுத்துவிடுவான். 


5.ஆனாலும் நீர் உம்முடைய கையை நீட்டி, அவன் எலும்பையும் அவன் மாம்சத்தையும் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் என்றான்.


6. அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவன் உன் கையிலிருக்கிறான்; ஆகிலும் அவன் பிராணனைமாத்திரம் தப்பவிடு என்றார். 


7.அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால் அவனை வாதித்தான்.


யோபு 2:1-7


சாத்தான் ஏற்படுத்திய இந்த தீங்குகளை தேவன் ஏற்படுத்தியதாக அதே யோபு புத்தகம் கூறுகிறது:


அப்பொழுது அவனுடைய எல்லாச் சகோதரரும் சகோதரிகளும், முன் அவனுக்கு அறிமுகமான அனைவரும் அவனிடத்தில் வந்து, அவன் வீட்டிலே அவனோடே போஜனம்பண்ணி, கர்த்தர் அவன்மேல் வரப்பண்ணின சகல தீங்கினிமித்தம் அவனுக்காக அங்கலாய்த்து, அவனுக்கு ஆறுதல் சொல்லி, அவரவர் ஒவ்வொரு தங்கக்காசையும், அவரவர் ஒவ்வொரு பொன் ஆபரணத்தையும் அவனுக்குக் கொடுத்தார்கள்.


யோபு 42:11




ஆ.சாத்தான் ஏவியதை தேவன் ஏவியதாக பைபிள் சொல்வது:


2 சாமுயேல் 24:1 TCV


[1] யெகோவாவின் கோபம் மறுபடியும் இஸ்ரயேலுக்கு எதிராக மூண்டது, அவர் அவர்களுக்கு விரோதமாய் தாவீதை ஏவி, “நீ போய் இஸ்ரயேலரையும், யூதாவையும் கணக்கிடு” என்றார்.


https://bible.com/bible/2730/2sa.24.1.TCV


சாத்தான் தான் அதை செய்ய தூண்டினார்


1 நாளாகமம் 21:1 TCV


[1] சாத்தான் இஸ்ரயேலருக்கு எதிராக எழும்பி, இஸ்ரயேலரைக் கணக்கிடும்படி தாவீதைத் தூண்டினான். 


https://bible.com/bible/2730/1ch.21.1.TCV.


இ.வஞ்சிப்பவனாக சாத்தானையும் பாம்பையும் (ஆதி 3:13,வெளி 12:9) சொல்லும் அதே பைபிள் தான் தேவனும் வஞ்சிப்பவர் ,வஞ்சகத்தை அனுப்பி பொய்யை நம்பவைப்பவர் (எரேமியா 4:10, 2 தெசலோனிக்கேயர் 2:11-12) என்று சொல்கிறது.


ஈ.சாத்தான் தான் வழிகெடுப்பவன் என்று சொல்லும் அதே பைபிளில் தான் தேவனும் வழிகெடுப்பவர் (எசேக்கியேல் 20:25-26, 2 தெசலோனிக்கேயர் 2:11-12, ஏசாயா 63:17, யோவான் 12:40) என்கிறது


உ.சாத்தானே பொய்யின் பிதா என்றும், ஆதிமுதல் கொலைகாரன் (யோவான் 8:44) சொல்லும் அதே பைபிள் தான், தேவன் தான் பொய் பேசும் ஆவியை அனுப்புவார் (1 இராஜாக்கள் 22:18-23) என்றும் பொய்யை விசுவாசிக்க செய்வார் (2 தெசலோனிக்கேயர் 2:12) என்றும், குழந்தைகளை பலி கொடுக்க வைத்தவர் (எசேக்கியேல் 20:25-26) என்றும், குழந்தைகளையும் ஈவிரக்கமின்றி கொல்ல சொன்னவர் (1 சாமுவேல் 15:3, உபாகமம் 20:16-17) என்றும் அவரே கொல்லுகிறவர் (உபாகமம் 32:39, 1 சாமுவேல் 2:6) என்றும் சொல்கிறது.


இப்படி கணக்கில்லாமல் லிஸ்ட் போடுவதற்கு எம்மாலும் முடியும்.


ஆகவே இவற்றையும் கணக்கில் கொண்டு இவர்கள் பேச வேண்டும் 


---

புதன், 1 ஜனவரி, 2025

ஈஸா நபியின் கன்னிப் பிறப்பு - ஏன் எப்படி? இஸ்லாமும் கிறிஸ்தவமும்

 ஈஸா நபி கன்னியிடம் பிறந்தார் - எப்படி? ஏன்? 

இஸ்லாமும் கிறிஸ்தவமும் முரண்படும் இடம்

--------------------------



இஸ்லாம் கூறுவது என்ன?


எப்படி என்பதற்கான பதில்:



(அச்சமயம் மர்யம்) கூறினார்: “என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?” (அதற்கு) அவன் கூறினான்: “அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் “ஆகுக” எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.”

(அல்குர்ஆன் : 3:47)


இதன்படி அல்லாஹ் படைப்பதன் மூலம் தான் உண்டானார் என்பதை தெளிவாக சொல்கிறது. ஆகு என்ற கட்டளையிடுவதன் மூலம் அவர் படைக்கப்பட்டார்.



எப்படி மர்யம் கர்ப்பமானார்?


இறைவன் தன் தூதரான ரூஹ் மூலம் மர்யமின் மீது ரூஹை (உயிரை) ஊதியதன் மூலம் உண்டானார்.




அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்.

(அல்குர்ஆன் : 19:17)


(அப்படி அவரைக் கண்டதும்,) “நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)” என்றார்.

(அல்குர்ஆன் : 19:18)



“நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு நன்கொடை அளிக்க (வந்துள்ளேன்”) என்று கூறினார்.

(அல்குர்ஆன் : 19:19)



இன்னும் தம் கற்பைக் காத்துக் கொண்டவளைப் (மர்யம்) பற்றி (நபியே! நினைவு கூறும்); எனினும், நம் ஆன்மாவிலிருந்து நாம் அவரில் ஊதி அவரையும், அவர் புதல்வரையும் அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.

(அல்குர்ஆன் : 21:91)



இறைவன் நேரடியாக உயிரை ஊதாவிட்டாலும், செய்வித்தவன் அவனே என்பதால் "நாம் ஊதினோம்" என்கிறான்.


அந்த ரூஹ் எனும் தூதர் உயிரை மர்யமின் ஆடையின் மீது ஊதவே, அது கர்ப்பத்தில் நுழைய வேண்டிய இடம் வழியாக நுழைந்தது.


இறைவனுடைய "ஆகு" எனும் கட்டளையினால் அவர் படைக்கப்பட்டார்.



ஏன் மர்யமிடம் அவ்வாறு படைக்கப்பட்டார்?




அவர், அவ்வாறே! “அது எனக்கு எளிது அவரை மனிதர்களுக்கு, ஒரு அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஓர் அருளாகவும் நாம் ஆக்குவதற்காக என்றும், இது விதிக்கப்பட்டுவிட்ட ஒரு விஷயம் என்றும் உமதிரட்சகனே கூறுகிறான்” என்று கூறினார்.

(அல்குர்ஆன் : 19:21)


இதற்கு மூன்று காரணங்கள் கூறப்பட்டுள்ளன.


1.மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக அவரை ஆக்குவதற்காக. 


2.இறைவனிடமிருந்துள்ள ஓர் அருளாக அவரை ஆக்குவதற்காக - (இவ்வாறே முகம்மது நபியை முழு மனித-ஜின் அனைவருக்கும் அருளாக அனுப்பியதாக 21:107 கூறுகிறது)


3.இது ஏற்கனவே இறைவனால் விதிக்கப்பட்ட காரியம் என்பதால்.




இறைவனுக்கு மகனை உண்டாக்காவதற்கோ , அல்லது பலியாக ஆவதற்கோ அல்ல.


ஏனெனில், அவர் இறைவனுக்கு மகன் கிடையாது. (4:171,9:30,19:35).

அவர் மர்யமுக்கு தான் மகன் -3:45,19:19. இறைவனுக்கு அவர் ஓர் அடியார் மட்டுமே- 43:59,19:30,4:172

 

அவர் சிலுவையில் அறையப்படவோ கொல்லப்படவோ இல்லை.. இறைவன்பால் உயர்த்திக் கொள்ளப்பட்டார் - 4:157-158




கிறிஸ்தவம்/கிறிஸ்தவர்கள் கூறுவது என்ன?



முதலில் கிறிஸ்தவர்கள் சொல்வதை பார்ப்போம்:


1.கடவுள் மனிதனாக பிறப்பதற்கு கன்னியை தெரிவு செய்தார்-


நம்பதில்-

முதலில் இதற்கு ஆதாரம் இல்லை.


கடவுள் தான் கர்ப்பத்தில் குழந்தையை உருவாக்குபவர் -ஏசாயா 44:2,49:5, எரேமியா 1:5...


இயேசு பிறந்தார் என்றால், கடவுள் தான் அவரையும் கருவில் உருவாக்க வேண்டும். ஆகவே இறைவன் படைத்த ஒன்று கடவுளாகாது. பிறந்தவரும் கடவுளாகவோ கடவுளின் அவதாரமாகவோ ஆகமுடியாது..



வெறும் படைப்பாகவே அமைவார்...



ஆகவே கடவுள் தன்னை ஒரு வயிற்றில் எப்படி படைப்பார்?


ஒரு பேச்சுக்கு இதை ஏற்றுக்கொண்டால், கன்னியின் வயிற்றில் மட்டும் தான் தன்னை படைக்க முடியுமா? கன்னி அல்லாத பெண்கள் அசுத்தமானவர்களா?


அதையும் விட்டுவிடுவோம். இதைவிட பெரிய பிரச்சினை என்னவென்றால், கடவுள் மனிதனாக பிறந்தார் என்றால், அவர் பிறப்பதற்கு கர்ப்பத்திற்கு உள்ளே போக வேண்டும். கர்ப்பத்திற்கு செல்லும் ஒரே வழி பிறப்புறுப்பு தான். கடவுள் பிறப்புறுப்பில் நுழைந்து தலைகீழாக பிறப்புறுப்பு வழியாக பிறந்தார் என்பது கடவுளை கேவலப்படுத்துவதாக புரியவேயில்லையா?



2.பிறவிப்பாவம்/ஆதிபாவம் இல்லாமல் பிறப்பதற்காக கன்னியை தெரிவு செய்தார். அப்போது தான் பாவமில்லாதவராக இருந்து மனிதர்களின் பாவத்திற்காக பலியாக முடியும்


நம் பதில்:

ஆதாம் ஏவாள் (ஹவ்வா-எபிரேயம்) தோட்டத்தில் தடைசெய்யப்பட்ட கனியை சாப்பிட்டதால் அவர்களுடைய பாவம் அவர்கள் சந்ததிக்கும் கடத்தப்படுகிறது இதனால் அனைவரும் பாவிகளாக பிறக்கிறார்கள் என்பது தான் ஆதிபாவ கோட்பாடு.



இதன்படி மரியாளுக்கும் இதே பாவம் கடத்தப்பட்டிருக்க வேண்டுமே. அப்படியாயின் மரியாளின் இரத்தத்தை உறிஞ்சி கர்ப்பத்தில் வளர்ந்த இயேசுவுக்கும் அதே பாவம் கடத்தப்பட்டிருக்க வேண்டுமே. அப்படியாயின் அவரே பாவமுள்ளவராக இருக்க எப்படி பலியாக முடியும்?


அப்படி ஆதிபாவமின்றி பிறக்க வேண்டுமானால், மனிதனிடம் பிறக்கவே கூடாது.. மிருகத்திடம் தான் பிறக்க வேண்டும்.


இல்லை இல்லை.. மரியாவுக்கு பாவம் கடத்தப்படவில்லை அல்லது மரியாளிடமிருந்து இயேசுவுக்கு கடத்தப்படவில்லை என்று வாதிட்டால், அதே போன்று மற்றவர்களுக்கும் கடத்தப்படவில்லை.. அதனால் இந்த பலியிற்கு அவசியமும் இல்லை.. கன்னிப் பிறப்புக்கு இது காரணமும் இல்லை




வேடிக்கையாக பலிப்பிராணிக்கு உடம்பில் குறைகள் இருக்க கூடாது. ஆனால் இனத்தால் யூதரிடம் பிறந்தால், அவர்கள் விருத்தசேதனம் செய்துவிடுவார்கள். அதன்படி உடலின் ஒரு பகுதி நீக்கப்பட்டுள்ளது. இதுவும் குறை தான்.. ஆணுறுப்பு ஓரம் அறுபட்ட ஆட்டை கடவுளுக்கு பலி செலுத்த முடியுமா என்ன?



3.கடவுள் தன் மகனை பிறக்க வைப்பதற்கு அல்லது தனக்கு ஒரு பையனை ஏற்படுத்திக் கொள்வதற்கு 


நம் பதில்:

இதற்கும் கன்னிப் பெண்ணாக இருக்க வேண்டிய அவசியமில்லை.. கன்னிப் பிறப்பு ஏன் என்பதற்கு பதிலாகவும் இல்லை..


ஏனெனில் ஒரு கன்னி பெற்ற குழந்தையில் அவருடைய உயிர் தான் அவரது மகன் என்றால், அதே உயிர் கன்னி அல்லாதவரிடமும் பிறக்கலாமே.


(ஒரு குழந்தை பிறக்கும்போது உயிர் உடல் இரண்டுமே மனித இயல்புக்குரியது தான். இல்லையென்றால் இயேசு பூரண மனிதர் என்ற கிறிஸ்த நம்பிக்கை பொய்யாகி விடும்.. அப்போது மனித வேசம் தரித்திருக்கிறார் என்றே வரும்.)


 ஆதிபாவகோட்பாடு உண்மையானால் அப்போதும் இவர் உடல்ரீதியாக பாவம் கடத்தப்பட்டவராகவே இருப்பார்..



ஒரு பேச்சுக்கு ஏற்கனவே மகன் இருந்தால், புதிதாக ஏன் பிறக்க வேண்டும்? பலியாவதற்கு என்றால் மேலே இரண்டாவது கூற்றுக்கு பதிலாக எழுதியிருக்கிறேன்



இல்லை.. மகனை ஏற்படுத்திக் கொள்வதற்கு என்றால், கன்னிப்பெண் பெற்ற குழந்தை கடவுளுக்கு எப்படி மகனாகும்? அப்பெண்ணுக்குத் தானே மகன்.


அப்பெண் கடவுளின் மனைவி அல்லவே.. மனைவியாக இருந்தால் தத்துப் பிள்ளை என்றாவது சொல்லலாம்.


(யூதர்களின் வேதத்தில் இஸ்ராஈல் (இஸ்ராஏல்) கடவுளின் மூத்த பையன் என்றும் மகன் என்றும் சொல்லப்படுகிறது -யாத்திராகமம் 4:22, ஓசியா 11:1.  


இன்னோரு இடத்தில் பலமிகுந்த மனிதர்களை தேவனுடைய குமாரர்கள் என்று சொல்கிறது. அவர்கள் மனித பெண்களை அழுகுள்ளவர்கள் என கண்டு அவர்களோடு புணர்ந்து பிள்ளை பெற்றதாக ஆதியாகமம் 6:2-4 சொல்கிறது.



இது தேர்வு செய்யப்பட்டவர் என்ற அர்த்தத்திலேயே எடுக்கப்படுகிறது.


அதாவது கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் என்பதுவே இதன் அர்த்தம்.    


இதே அர்த்தத்தையே இயேசுவுக்கும் எடுக்க வேண்டும். ஆனால் புதிய ஏற்பாடு ஃபைலோ சொன்ன கருத்தான "கடவுளுக்கு வார்த்தை என்ற மகன் இருக்கிறார் என்றும் அவர் மூலமே சகலமும் படைக்கப்பட்டது என்றும் நம்பப்படுகிறது. இந்த வார்த்தை தான் இயேசுவாக பிறந்தார் என்கிறார்கள். (பார்க்க யோவான் 1:1-3,14,18)


இவரை ஏற்றவர்கள் தத்துப்பிள்ளைகள் என்றும், இவரோடு கூட தேவனுக்கு வாரிசுகளாக இருப்பார்கள் என்றும் கூறுகிறார்கள் -(பார்க்க ரோமர் 8:17, கலாத்தியர் 4:7, இயேசுவும் இப்படி ஆக்கப்பட்டவர் -எபிரேயர் 1:2)




இனி புதிய ஏற்பாடு கன்னிப் பிறப்பை பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்:



புதிய ஏற்பாட்டில் பவுல் இயேசு கன்னியிடம் பிறந்தார் என்று எதையும் எழுதவில்லை.. எல்லாரையும் போல பெண்ணிடம் பிறந்தவர் என்பதை தான் அவர் சொல்கிறார்.


அதேபோல், நான்கு சுவிசேசங்களில் யோவான் கன்னிப் பிறப்பு பற்றி எதுவும் சொல்லவில்லை.


மாற்கு அவர்கள் இயேசுவை மக்கள் மரியாளின் மகன் என்று சொன்னதாக (மாற்கு 6:3) எழுதுகிறார். யோசேப்பை பற்றி வாய் திறக்கவில்லை.


மத்தேயுவும் லூக்காவும் இயேசு கன்னிக்கு பிறந்ததாக சொல்கிறார்கள். அப்பெண் யோசேப்பு என்பவரின் மனைவி என்கிறது.



மத்தேயு மட்டும் இதற்கான காரணகாரியம் ஒன்றை குறிப்பிடுகிறார்.


1.ஏசாயா நபி (தீர்க்கதரிசி) இம்மானுவேல் எனும் பையன் ஒரு கன்னியிடம் பிறப்பான் என்று சொல்கிறார். அதன் நிறைவேற்றமே இயேசுவின் கன்னிப் பிறப்பு என்கிறார். மக்கள் அவரை இம்மானுவேல் என்று கூப்பிடுவார்கள் என்கிறார். (மத்தேயு 1:22-23)



உண்மை என்ன?:

அக்குழந்தையின் பிறப்பு இயேசுவுக்கு 700 வருடங்கள் முன்பு வாழ்ந்த மக்களுக்கு, சீரிய ராஜாவும் இஸ்ரவேல் ராஜாவும் எருசலேம் மீது யுத்தம் செய்ய வந்தபோது, அவர்கள் நினைத்தது நடக்காது என்பதற்கு கடவுள் கொடுத்த அடையாளமே இது. பிறப்பை மட்டும் அடையாளமாக கூறவில்லை.. அதன் சாப்பாடு என்ன? வாக்களித்தநிகழ்வு அக்குழந்தையின் எப்பருவத்தில் நிகழும் என்பதையும் கூறுகிறது- (ஏசாயா 7:1-16)


எழுநூறு வருடங்கள் முன்பு வாழ்ந்தவர்களுக்கு அவர்கள் எதிரிகள் நினைத்தது நடக்காது என்பதற்கு பின்னால் பிறப்பவர் எப்படி அடையாளம் ஆவார்?



-அடுத்ததாக இயேசுவின் பிறப்பு அடையாளமாக யாருக்கும் கிடையாது. காரணம் இயேசு பிறப்பதற்கு முன்பே மரியாளின் புருஷர் மரியாளை சேர்த்துக்கொண்டார் என்று மத்தேயு சொல்கிறார். (மத்தேயு 1:24-25)


இதிலிருந்து மக்கள் யாருக்கும் தெரியாது இயேசு என்பவர் கன்னியின் பிறப்பு என்று. அதனால் தான் இயேசுவின் ஊர் மக்கள் இயேசுவை யோசேப்பின் (தச்சனுடைய) மகன் என்று அழைத்ததாக எழுதியுள்ளார் -(மத்தேயு 13:55)


லூக்கா மரியாள் எப்படி கர்ப்பமாவார் என்று தேவதூதன் சொன்னதாக எழுதுகிறார்:



34.அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.


35.தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக; பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.

லூக்கா 1:34-35


பரிசுத்த ஆவி மரியாள் மீது வருவாராம் . இதேபோல் பழைய ஏற்பாட்டில் கூட கடவுளின் ஆவி மக்களின் மீது இறங்கியுள்ளார்- (1 சாமுவேல் 16:13)


உன்னதமானவருடைய பலம் மரியாளை நிழலிடும் என்பது கடவுளின் வல்லமையால் இந்த பிறப்பு நிகழ்கிறது என்பதை காட்டுகிறது..


தேவனுடைய வல்லமையினால் பிறக்கும் பரிசுத்த குழந்தையாக இருப்பதால் அது தேவனுடைய குமாரன் எனப்படும் என்கிறார். 


(தேவனுடைய குமாரன் என்பது தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர் என்பதே அர்த்தமாகும். அதனால் தான் இஸ்ரவேல் என் மூத்த குமாரன் என்றும் என் குமாரன் என்றும் யாத்திராகமம் 4:22, ஓசியா 11:1 கூறுகிறது. 


பிற்காலத்தில் இது தத்துப்பிள்ளை ரேஞ்சுக்கு மாறிவிட்டது... அதாவது மகனுடைய அந்தஸ்தில் இருப்பதுபோல் ஆக்கப்பட்டு விட்டது.)


ஆகவே இந்த விசயத்தில் இஸ்லாம் சொல்வதோடு புதிய ஏற்பாடு ஓரளவு ஒத்துப்போனாலும் கிறிஸ்தவர்கள் கூறும் காரணங்கள் ஒத்துப் போவதாக இல்லை. அது உண்மைக்கு புறம்பானதாகவே  உள்ளது.


குறிப்பு:

பெண்ணின் வித்து என்று ஆதியாகமம் 3:15 கூறுவது இதை குறிக்காது. 

காரணம்:

1.ஆதியாகமம் 3:15 கூறும் பெண் ஏவாள் ஆவார்

2.அவளது வித்து முழு மனித இனத்தையும் குறிக்கும்.

3.பழைய ஏற்பாட்டில், ஒரு இனத்தை அவர்களது தாயின் வித்து என்றும் கூறப்படும்

உதாரணமாக இஸ்மவேலை ஆகாருடைய வித்து (ஆதி 16:10), இஸ்ரவேலரை ரெபேக்காளின் வித்து (ஆதி 24:60) என்றும் எபிரேயத்தில் உள்ளதுடன், ஆதி 3:15இலுள்ளது போல் அங்கேயும் ஒருமையில் தான் எபிரேயத்தில் உள்ளது

அல்லாஹ் வழிதவறச்செய்கிறான் என்பதன் விளக்கம்

1.மனிதனுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது  --மனிதனுக்கு இறைவன் வழி காட்டியுள்ளான். ஒன்று அவன் நன்றியுள்ளவனாக இருக்கிறான் அல்லது காஃபிராக இருக்கிறான...