செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

ஈஸா இறைவனது வார்த்தை (இஸ்லாமும் கிறிஸ்தவமும் முரண்படும் இடம்)

 ஈஸா நபி இறைவனுடைய வார்த்தை (இஸ்லாமும் கிறிஸ்தவமும் முரண்படும் இடம்)

--------------------------------------------------------------------------------



"கிறிஸ்தவத்தில் வார்த்தையானவர்"

-----------



ஈஸா நபி அவர்கள் காலகட்டத்தில் கிரேக்க தத்துவங்களால் வழிதவறிய யூதரான ஃபைலோ என்ற அறிஞர் இருந்தார். 


 அவர் ஏக இறைவனுக்கு வார்த்தை (லோகோஸ்) என்ற பையன் இருப்பதாகவும், அவர் மூலமாக தான் சகல படைப்புகளையும் ஏக இறைவன் படைத்தார் என்றும் அந்த பையன் கடவுளுக்கும் படைப்புகளுக்கும் இணைக்கும் பாலமாக இருக்கிறார் என்று நம்பினார்.


ஈஸா நபியிற்கு பின் பவுல் போதித்த கிறிஸ்தவத்தால் ஈர்க்கப்பட்ட யோவான் சுவிசேஷ ஆசிரியர் (பைபிளில் பவுலுடைய கடிதங்களாக்கு முன்பாக இவரது நூலை இணைத்திருப்பார்கள். ஆனால் உண்மையில் பவுல் தான் முதலில் எழுதியவர்.) இவ்வாறு எழுதினார்:


ஆதியிலே வார்த்தை (லோகோஸ்) இருந்தார். அந்த வார்த்தை கடவுளிடம் இருந்தார். (கடவுள் பையனும் கடவுள் தானே அதனால்) அவர் கடவுளாக இருந்தார். அவர் ஆதியிலே கடவுளோடு இருந்தார். சகலமும் அவர் மூலமாகவே உண்டாகின. (யோவான் 1:1-3)


என்று எழுதினார்.


இவர் எழுதியதை வேதவாக்காக நம்பும் கிறிஸ்தவர்களில் அநேகருக்கு தெரியாத ஒரு விடயம் தான் இந்த கருத்து கிரேக்க தத்துவங்களால் ஈர்க்கப்பட்ட ஃபைலோவின் கருத்து என்று.



யூதர்களின் வேதத்தில் எங்கேயும் கடவுளுக்கு வார்த்தை என்று ஒரு பையன் இருக்கிறான் என்றோ அந்த பையன் சகலத்தையும் படைத்தான் என்றோ எங்கேயும் சொல்லப்படவில்லை.



இந்த வார்த்தை தான் இயேசு என்கிறார் அத்தோடு கடவுளின் ஒரே பையன் என்கிறார் யோவான் - (யோவான் 1:14,18)



இது தான் கிறிஸ்தவம் நம்பும் கடவுளின் வார்த்தையாகிய இயேசு என்ற நம்பிக்கை.



-----------

இஸ்லாத்தில் அல்லாஹ்வின் வார்த்தையான ஈஸா நபி

----------


இஸ்லாம் ஃபைலோ சொன்ன கருத்தை யோவான் ஏற்றது போல் ஏற்றுக்கொள்ளவில்லை.


இறைவன் ஒருவன் என்றும் அவனுக்கு பையனோ அப்பனோ கிடையாது என்று நான்கு வசன அத்தியாயத்திலேயே சொல்லிவிட்டது.




"கூறுவீராக:

*அல்லாஹ் அவன் ஒருவனே

*அல்லாஹ் தேவையற்றவன்.

*அவன் (யாரையும் குழந்தையாக) பெறவில்லை. அவன் (யாராலும் குழந்தையாக) பெறப்படவில்லை.

*அவனுக்கு நிகராக எவருமில்லை 

(குர்ஆன் 112:1-4)



இனி குர்ஆன் கூறும் ஈஸா நபி பற்றி பார்ப்போம்:



*அவர் அல்லாஹ் (ஏக இறைவன்) அல்ல!


மர்யமின் மகன் தான் அல்லாஹ் என்று கூறுவோர் இறைநிராகரித்து விட்டனர். (குர்ஆன் 5:17,72)


*ஈஸா நபி அல்லாஹ்வின் (ஏக இறைவனின்) பையன் கிடையாது.


யூதர்கள் உஸைரை அல்லாஹ்வின் மகன் என்றார்கள். கிறிஸ்தவர்கள் மஸீஹை (ஈஸாவை) அல்லாஹ்வின் மகன் என்றார்கள். அது வெறுமனே அவர்கள் தம் வாய்களால் கூறும் அவர்களுடைய கூற்றாகும். இவர்களுக்கு முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு ஒத்திருக்கிறார்கள். (குர்ஆன் 9:30)


அதாவது யூத கிறிஸ்தவர்கள் தம் இறைவனுக்கு பையன் உண்டாக்கிய கதைகள் எல்லாம் அவர்களுக்கு முன்னிருந்த ஏனைய மதத்தவர்களால் கூறப்பட்ட கடவுளுக்கு பையன் இருப்பதாக கூறும் கதைகளை போன்றது தான் என்கிறது.



*ஈஸா நபியை இறைவனாக எடுக்க கூடாது.


அவர்கள் அல்லாஹ்வையன்றி தம் பாதிரிகளையும் , தம் சந்நியாசிகளையும் , மர்யமின் மகன் அல்மஸீஹையும் இறைவனாக எடுத்துக்கொண்டார்கள். ஒரே இறைவனை வணங்கவேண்டும் என்றே அல்லாமல் அவர்கள் ஏவப்படவில்லை. அவனையன்றி வேறு இறைவன் இல்லை. அவர்கள் இணைவைப்பவற்றைவிட்டும் அவன் பரிசுத்தமானவன் - குர்ஆன் 9:31


(கிறிஸ்தவர்கள் இறைவன் தோராவில் தடை செய்தவற்றை பவுலும் ஏனைய அறிசர்களும் துறவிகளும் அனுமதித்தால் அதையே ஏற்பார்கள். உதாரணமாக பன்றிக்கறி. அதேபோல் இறைவன் அனுமதித்ததை இவர்கள் தடை செய்தால் , இவர்களையே ஏற்பார்கள். 

இதுவே அவர்களை கடவுளாக எடுத்துக்கொண்டதாகும்.. மர்யமின் மகன் விசயத்தில் எல்லோரும் அறிந்த விடயமே இங்கு கூறப்படுகிறது).



ஆகவே தெளிவாக இவை ஈஸா நபியை ஃபைலோ கூறும் வார்த்தை நம்பிக்கையை யோவானைப்போன்று குர்ஆன் ஏற்கவில்லை என்பதை காட்டுகிறது.



இனி ஈஸா நபி வார்த்தை என கூறப்படுவதை பார்க்கலாம்:




*குர்ஆன் கூறும் ஈஸா நபியாகிய இந்த வார்த்தை சகலத்தையும் படைக்கவில்லை.. மாறாக படைக்கப்பட்டவர்:




(அதற்கு மர்யம்) “என் இரட்சகனே! எந்த ஒரு மனிதருமே என்னைத் தீண்டாதிருக்க எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்? என்று கூறினாள். (அதற்கு) “அவ்வாறே அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தை முடிவெடுத்தால் அவன் அதற்கு கூறுவதெல்லாம் “ஆகுக” என்பதுதான், அது ஆகிவிடும்” என்று கூறினான்.

(அல்குர்ஆன் : 3:47)



அதாவது என் வார்த்தை உங்களின் பிறப்புறுப்புவழியாக புகுந்து மனிதனாக வெளிப்படும் என்று சொல்லவில்லை..


மாறாக "இவ்வாறு தான் அல்லாஹ் நாடியதை படைக்கிறான்" என்று அன்னை அவர்களுக்கு பதில் கொடுக்கப்படுகிறது.



*குர்ஆன் கூறும் இந்த வார்த்தையின் பெயர் இறைவனது மகன் என்பதல்ல.. மாறாக மர்யமின் மகன்:






 மலக்குகள் “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து ஒரு வார்த்தையைக் கொண்டு உனக்கு (ஒரு மகனை அளிக்க) நன்மாராயங் கூறுகின்றான். அவரின் பெயர் மஸீஹ்_ மர்யமுடைய மகன் ‘ஈஸா’ என்பதாகும், அவர் இம்மையிலும், மறுமையிலும் மிக்க அந்தஸ்தையுடையவராகவும் (இரட்சகனுக்கு) மிக்க நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்” என்று கூறியபோது.

(அல்குர்ஆன் : 3:45)



அதாவது அவர் மர்யமின் மகனாவார். இதன் அர்த்தம் அவருக்கும் இறைவனுக்கும் அப்பன்-மகன் உறவு கிடையாது என்றும், அவருக்கு இருப்பதெல்லாம் மர்யமுடன் அம்மா-மகன் உறவு மட்டுமே என்பதை தெளிவாக சொல்கிறது.


அத்தோடு மர்யமின் மகன் என்பதிலேயே மீண்டும் ஒரு படைப்பு பெற்றெடுக்கும் படைப்பாகிய மகன் என்றும் அதுவே அவரது ஆரம்பம் என்பதையும் காட்டுகிறது.




*குர்ஆன் கூறும் வார்த்தையாகிய ஈஸா நபி ஒன்றும் ஃபைலோ சொல்லுவது போல் இறை மகன் அல்ல:


வேதத்தைஉடையவர்களே (கிறிஸ்தவர்களே)! உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்ல வேண்டாம்! அல்லாஹ்வின் (ஏக இறைவன்) மீது உண்மையை தவிர வேறெதையும் கூற வேண்டாம்.

நிச்சயமாக மர்யமின் மகனாகிய அல்மஸீஹ் ஈஸா அல்லாஹ்வின் தூதரும், அவன் மர்யமின்மீது போட்ட அவனுடைய வார்த்தையும் , அவனிடமிருந்து உள்ள ஓர் உயிரும் ஆவார்.

ஆகவே அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நம்புங்கள். மூவர் என்று கூற வேண்டாம். அதைவிட்டு விலகிக் கொள்ளுங்கள். நன்றாக இருக்கும். 

நிச்சயமாக அல்லாஹ் ஒரே இறைவன் தான். அவனுக்கு மகன் இருப்பதை விட்டும் அவன் பரிசுத்தமானவன் . .. (குர்ஆன் 4:171)



இங்கே ஈஸா நபி இறைவனது வார்த்தை தான் என்று சொல்லும் அதே நேரம் இவர்கள் நம்புவது போன்ற வார்த்தை கிடையாது என்கிறது குர்ஆன். அதாவது இந்த வார்த்தை கடவுளோ கடவுளின் பையனோ அல்ல..


ஆகவே இஸ்லாம் கூறும் வார்த்தையான ஈஸா நபி என்பது ஃபைலோ சொல்லி யோவான் எழுதிய லோகோஸ் அல்ல!!



ஈஸா நபி பற்றி இன்னும் சுருக்கமாக 

1.அவர் அல்லாஹ்வின் அடிமை. மகன் அல்ல. (19:30,35; 43:59, 4:172(171))

2.அவரை கடவுளாக எடுத்துக்கொண்டால் அத்தகையவர் நரகமே புகுவார்-5:72)

3.கிறிஸ்தவம் நம்புவது போல் அவர் நியாயத்தீர்ப்பு நாளில் தீர்ப்ப்பளிப்பவர் அல்ல.. மாறாக விசாரிக்கப்படுபவர்.(5:116-119)

(மேசியா நியாயந்தீர்ப்பார் என்று உலகத்தில் கூறப்படுவதை மறுமையோடு லின்க் பண்ணி விட்டார்கள்)


4.அவரும் மரணிக்கக்கூடியவரே. (குர்ஆன் 19:33, 4:159)


5.அவர் சிலுவையில் அறையப்படவில்லை. கொல்லப்படவுமில்லை. மாறாக அது அவர்களுக்கு ஒப்பாக்கப்பட்டது. அவரை அல்லாஹ் உயர்த்திக்கொண்டான்-4:157-158


6.அவர் நீதமான நீதிபதியாக இறங்குவார்- புகாரி 2476,3448

(இதை ஏசாயா புத்தகம் கூறுகிறது. ஈஸா நபி உலகில் நீதிபதியாக இருக்கவில்லை என்பதால் அவர் மறுமையில் இருப்பார் என்று பவுலின் நம்பிக்கைப்பிரகாரம் சுவிசேசங்களும் எழுதப்பட்டன.)


7.உலகத்தில் கூட சாதாரணமான உணவு உண்போராக தான் இருந்தார்- 5:75....

வியாழன், 21 மார்ச், 2024

திரித்துவத்தை குர்ஆன் தப்பாக விபரிக்கிறதா?

 குர்ஆன் திரித்துவம் விசயத்தில் தவறிழைக்கிறதா? -

பாமர கிறிஸ்தவர்களுக்கு மறுப்பு.

குர்ஆன் திரித்துவம் பற்றி பேசும்போது,  திரித்துவத்தில் இல்லாத மரியாளையும் நாங்கள் கடவுளாக வணங்குவதாக கூறுகிறது என்று சில பாமர கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். உண்மையில் திரித்துவத்தில் மரியாள் ஒரு நபர் என்று கூறுகிறதா குர்ஆன்? நாம் அலசலாம்.


குர்ஆனில் எங்குமே மரியாள் திரித்துவத்தில் ஒரு நபர் என்று கூறவில்லை.


அதாவது மரியாளும் இயேசுவும் அல்லாஹ்வும் ஒரே கடவுளாக இருக்கிறார்கள் என்று கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள் என்றோ அல்லது அல்லாஹ் மரியாளாகவும் இயேசுவாகவும் உலகத்தில் வந்ததாக கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள் (ஆள்மாறாட்ட கொள்கை) என்றோ கூறவில்லை!


மாறாக, அரேபியாவில் அப்போது இருந்த கிறிஸ்தவர்கள் இயேசுவை கடவுளாக நம்பிய அதேநேரம் மரியாளையும் சில பிரிவுகள் வணங்கி வந்தனர். இன்றும் கத்தோலிக்கர்கள் மரியாளிடம் நமக்காக வேண்டிக்கொள்ளும் என்று கூறுவோராக உள்ளனர். அத்தோடு அவரை கடவுளின் தாய் என்றே நம்புகின்றனர்.

அக்காலத்தில் இருந்த கிறிஸ்தவர்கள் மரியாளையும் இயேசுவையும் அல்லாஹ்வுக்கு மேலதிகமாக வணங்கி அவர்களிடம் உதவி தேடியதையே குர்ஆன் கண்டிக்கும் விதமாக குறிப்பிடுகிறது.. 


எப்படி மக்காவில் சிலை வணங்கிகள் அல்லாஹ்வை விடுத்து சிலைகளை வணங்கியதற்காக அவர்களுக்கு சிந்திக்க தூண்டும் வகையில் உரையாற்றுவதை போன்றே இத்தகைய கிறிஸ்தவர்களுக்கும் குர்ஆன் உபதேசிக்கிறது.

இனி அவ்வசனங்களை காண்போம்:


1.குர்ஆன் 5:116-119

மறுமையில் இறைவன் ஈஸாவிடம் நீர் தான் அல்லாஹ்வை விடுத்து என்னையும் என் தாயையும் இரு கடவுள்களாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று மனிதர்களிடம் கூறினீரா என்று கேட்பான் என்பதை குறிப்பிட்டு , மறுமையில் மாட்டிக்கொண்டுவிடாதிருக்க குர்ஆன் முன்கூட்டியே உபதேசிக்கிறது.


அன்றியும், அல்லாஹ் (மறுமை நாளில் ஈஸாவிடம்* 5:119 இது மறுமை என்பதை உறுதிப்படுத்துகிறது) “மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வைத் தவிர என்னையும், என்னுடைய தாயையும் இரண்டு வணக்கத்திற்குரியவர்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனிதர்களுக்கு நீர் கூறினீரா?” என்று கேட்பான். (அதற்கு) “நீ மிகப்பரிசுத்தமானவன், எனக்கு ஒரு சிறிதும் உரிமை இல்லாததை நான் (ஒருபோதும்) கூறுவதற்கு எனக்குத் தகுதி இல்லை, அவ்வாறு நான் கூறியிருந்தால், நிச்சயமாக நீ அதனை அறிந்திருப்பாய், என் உள்ளத்தில் உள்ளதை நீ நன்கறிவாய், உன் உள்ளத்திலுள்ளதை நான் அறிய மாட்டேன், நிச்சயமாக நீதான் மறைவானவற்றை மிக்க அறிந்தவன்” என்று கூறுவார்.

(அல்குர்ஆன் : 5:116)



“என்னுடைய இரட்சகனும் உங்களுடைய இரட்சகனுமான அல்லாஹ்வை வணங்குங்கள்” என்று நீ எதை எனக்குக் கட்டளையிட்டாயோ அதைத் தவிர (வேறு) எதையும் நான் அவர்களுக்கு கூறவில்லை, நான் அவர்களுடன் (உலகில்) இருந்தவரையில், அவர்களின் செயலைத் தெரிந்து கொண்டிருந்தேன், பின்னர், நீ என்னைக் கைப்பற்றியபொழுது, நீதான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய், நீயே ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாளன்”(,என்றும்)


(அல்குர்ஆன் : 5:117)


(இரட்சகா) “அவர்களை நீ வேதனை செய்தால், நிச்சயமாக அவர்கள் உன்னுடைய அடியார்களே! அன்றியும், அவர்களை நீ மன்னித்துவிட்டால், நிச்சயமாக நீதான் (யாவரையும்) மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன்.” என்றும் கூறுவார்.

(அல்குர்ஆன் : 5:118)


(அதற்கு) அல்லாஹ் “இது உண்மையாளர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கக்கூடிய நாளாகும், அவர்களுக்கு சுவனபதிகள் உண்டு, அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவற்றிலேயே அவர்கள் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பவர்கள் என்று கூறுவான், அவர்களைப் பற்றி அல்லாஹ்வும் திருப்தியடைவான், அவர்களும் அவனைப் பற்றித் திருப்தியடைவார்கள், அது மகத்தான வெற்றியாகும்.

(அல்குர்ஆன் : 5:119)



2.குர்ஆன் 5:73-75

அல்லாஹ் மூவரில் ஒருவன் என்று கூறுவோர் நிராகரிப்பாளர்கள் என்று கூறிவிட்டு, மற்ற இருவருமான ஈஸா மற்றும் அவரது தாய் உணவு உண்ணும் பலவீனராகவே இருந்தனர் என்று உண்மையை உணர்த்துகிறது. இதில் மரியாளை திரித்துவத்தில் ஒருவர் என்று கூறவில்லை. மரியாளையும் இயேசுவையும் வணங்கியவர்களுக்கும் வணங்குவோருக்கும் உண்மையை உணர்த்துகிறது.



“நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாவதான (ஒரு)வன்தான்” என்று கூறியவர்கள், திட்டமாகவே நிராகரிப்போராகிவிட்டார்கள், ஏனென்றால் ஒரே நாயனைத்தவிர வேறு நாயன் (இல்லவே) இல்லை, அவர்கள் கூறுவதைவிட்டும் விலகிக் கொள்ளாவிடில், அவர்களிலுள்ள நிராகரிப்போர்களைத் துன்புறுத்தும் வேதனை நிச்சயமாக பிடித்துக்கொள்ளும்.


(அல்குர்ஆன் : 5:73)


 எனவே, இவர்கள் அல்லாஹ்வின் பக்கம் மீண்டு (இன்னும் அவனிடம் (தங்கள் குற்றத்திற்காகப்) பாவமன்னிப்புத்தேட மாட்டார்களா? மேலும், அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபையுடையவன்.

(அல்குர்ஆன் : 5:74)


மர்யமுடைய மகன் மஸீஹ் ஒரு தூதரேயன்றி இல்லை, இவருக்கு முன்னரும் (இவரைப்போல்) தூதர்கள் பலர் (வந்து) சென்று விட்டனர், அவருடைய தாய் மிக்க உண்மையானவர், இவ்விருவரும் (மற்ற மனிதர்களைப்போல) உணவு உட்கொண்டே (வாழ்ந்து) வந்தனர், இதனை பல அத்தாட்சிகளைக் கொண்டு அவர்களுக்கு நாம் எவ்வாறு தெளிவாக்கினோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக! பின்னர், (உண்மையிலிருந்து) இவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் நீர் கவனிப்பீராக.

(அல்குர்ஆன் : 5:75)



அதாவது இயேசுவும் மரியாளும் பூமியில் உணவு உண்டு கக்கூஸ் போகும் மனிதர்களாக தான் இருந்தார்கள் என்பதை இறைவன் உணர்த்துகிறான்.



உடனே சில அறிவாளிகள் , "கக்கூஸ் போவதால் தேவனில்லை என்றாகுமா? கடவுள் மனிதனாக வந்ததால் கக்கூஸ் போனார். இந்த லாஜிக் கூட தெரியவில்லை "என்கிறார்கள்

முதலில் கடவுள் மனிதனாக பிறந்து வரவேண்டுமானால், அவர் ஒரு குழந்தையை தாயின் வயிற்றில் படைக்க வேண்டும். -காரணம்: பிறக்கும் குழந்தையை இறைவனே படைக்கிறான். அப்படி படைத்துவிட்டால், படைத்தது எப்படி கடவுளாகவோ கடவுளின் அவதாரமாகவோ ஆகும்?


அத்தோடு மனிதனை வணங்கும் எல்லோரும் சொல்லும் சமாளிப்பு தான் நாங்கள் மனிதனை வணங்கவில்லை .எங்கள் தேவன் மனிதனாக வந்தார் என்பதை தான். மனிதனை வணங்குவதை நியாயப்படுத்த இவ்வாறு கூறுகிறார்கள். உண்மையில் அது சாத்தியமில்லை!!


ஏன் மனிதராக கடவுள் வந்தார் என்று கேட்டால், தன்னை மேலே இருக்குற கடவுளுக்கு பலி கொடுக்க வந்தாராம். அதாவது தன்னை தானே தனக்கே பலியிட்டுக்கொள்ள தேவன் வரவேண்டுமா? 

கடவுள் நமக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட இயலுமா? காரணம் அவர் கடவுளாக இருப்பதால் அவருக்கு சுய தேர்வு பாவ இச்சை இருப்பதில்லை. அவர் எப்படி ஆசையுள்ள மனிதருக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுவார்?

குருடன் பார்வையுள்ளவனுக்கு எப்படி பார்க்க வேண்டும் என்று கற்பிப்பது போன்றதே கடவுள் மனிதனாக வந்து முன்மாதிரியாக வாழ்வதும் அமையும்.. 

-----


3.குர்ஆன் 4:171-172

மர்யமின் மகன் விசயத்தில் கிறிஸ்தவர்கள் வரம்பு மீற கூடாது என்றும், அவர் அல்லாஹ்வின் தூதரும் மர்யமின் மீது அல்லாஹ் போட்ட அவனது வார்த்தையும், அவனிடமிருந்துள்ள ஒரு ரூஹ் (உயிர்)உம் ஆவார் என்று கூறுவதோடு,கடவுள் மூவர் என்று கூறவேண்டாம் என்றும் , அல்லாஹ்வுக்கு பிள்ளை ஏற்படுத்திக்கொள்ள எந்த தேவையும் இல்லை என்கிறது.

அத்தோடு மஸீஹும் நெருக்கமான மலக்குகளும் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதை குறைவாக கொள்ளமாட்டார்கள் என்றும் கூறுகிறது



வேதத்தையுடையவர்களே! உங்கள் மார்க்கத்தில், நீங்கள் அளவு கடந்து செல்லாதீர்கள், இன்னும், அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள், நிச்சயமாக மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ், அல்லாஹ்வுடைய ஒரு தூதரும், அவனுடைய வாக்கும் ஆவார், அல்லாஹ், மர்யமின் பால் அ(ந்த வாக்கான)தைப் போட்டான், (மற்ற ஆன்மாக்களைப் போன்று அவரும்,) அவனிடமிருந்து (படைக்கப்பட்ட) ஓர் ஆன்மாவே, ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நீங்கள் விசுவாசியுங்கள், இன்னும் (வணக்கத்திற்குரிய தெய்வங்கள்) மூன்று என்று கூறாதீர்கள், (இவ்வாறு கூறுவதை விட்டு விலகி விடுங்கள், (அது) உங்களுக்குத்தான் மிக்க நன்று, (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் ஒரே நாயன்தான், அவனுக்கு மகன் இருப்பதைவிட்டும் அவன் மிகப் பரிசுத்தமானவன். வானங்களில் உள்ளவை மற்றும் பூமியில் உள்ளவை அவனுக்கே உரியன- (உங்கள் யாவரின் காரியங்களை) பொறுப்பேற்றுக் கொள்ள அல்லாஹ் (ஒருவனே) போதுமானவன்.


(அல்குர்ஆன் : 4:171)



மஸீஹும், அல்லாஹ்வுக்கு நெருக்கமான மலக்குகளும், அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் கொள்ளவே மாட்டார்கள், எவர்கள் அவனுக்கு வணக்கம் செலுத்துவதைவிட்டும் குறைவாகக்கருதி, கர்வமும் கொள்வார்களோ அவர்கள் யாவரையும் (மறுமையில் எழுப்பி) அவன் தன் பக்கமே ஒன்று திரட்டுவான்.


(அல்குர்ஆன் : 4:172)



இங்கேயும் அல்லாஹ் ஈஸா என்பவர் இறைவன் தன் வாக்கை மர்யமின் மீது போட்டதால் உண்டானவர் என்றும் அவனிடமிருந்துள்ள ஒரு உயிர் என்றும் கூறி அவரை பற்றி கிறிஸ்தவர்கள் குழம்ப காரணமாக பாவிக்கும் வாதத்தையே குறிப்பிட்டு தெளிவுபடுத்துகிறது.


அதாவது மர்யமின் மீது எவ்வாறு வார்த்தை போடப்பட்டது என்பதை 3:59 கூறுகிறது



நிச்சயமாக, அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம்: ஆதமுடைய உதாரணத்தைப்போன்றதே! அவன், அவரை மண்ணால் படைத்துப் பின் அதற்கு (மனிதனாக!) “ஆகுக” என்று கூறினான், அவர்(அவ்வாறு) ஆகிவிட்டார்.

(அல்குர்ஆன் : 3:59)



ஆதம் எவ்வாறு மண்ணால் படைக்கப்பட்டு ஆகு என்று அவர்மீது கூறப்பட்டதோ, அதுபோன்றே பெண்ணில் இருந்து இறைவன் அவரை படைத்து ஆகு என்று அவரது தாய் மீது போட , அவரும் ஆகிவிட்டார். அதை 3:47 உம் தெளிவாக உணர்த்துகிறது.

 


(அதற்கு மர்யம்) “என் இரட்சகனே! எந்த ஒரு மனிதருமே என்னைத் தீண்டாதிருக்க எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்? என்று கூறினாள். (அதற்கு) “அவ்வாறே அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தை முடிவெடுத்தால் அவன் அதற்கு கூறுவதெல்லாம் “ஆகுக” என்பதுதான், அது ஆகிவிடும்” என்று கூறினான்.

(அல்குர்ஆன் : 3:47)


இதை குறித்து கிறிஸ்தவர்கள் வாக்கு மனிதனானதாக (யோ 1:14) தப்பாக புரிந்து கொண்டுள்ளனர். காரணம் வார்த்தை என்பது ஒரு நபராக பழைய ஏற்பாட்டில் எங்குமே கிடையாது.




ஆகவே எங்குமே குர்ஆன் இவர்களது திரித்துவத்தை குறிப்பிட முற்பட்டு பிழையாக சொல்லவில்லை!!!

 பிழையான கொள்கையுடையவர்களுக்கு உபதேசமே வழங்கப்படுகிறது. அதாவது இறைவனோடு சேர்த்து மனிதர் இயேசுவையும் அவரது தாயார் மனுஷி மர்யமையும் வணங்கி உதவிதேடும் மக்களுக்கு அறிவுரையான வசனங்களே இவை.


-------


இவர்களது திரித்துவம் என்ன?


பிதா, வார்த்தை (குமாரன்), பரிசுத்த ஆவி இம்மூவரும் ஒரே கடவுளாக இருக்கிறார்கள் என்று நம்புவதாகும்.


பிதா எனப்படுபவர் மட்டுமே மெய்யான கடவுளாக பைபிளில் காணக்கிடைக்கிறது. 


வார்த்தை என்பது ஒரு நபரே அல்ல. அது தேவனது பேச்சு ஆகும். இதுவே மனுசனாகியதாக யோவான் எழுதுகிறார். காரணம் பைலோ என்ற வழிதவறிய யூதர் "வார்த்தை" என்று ஒரு நபர் இருப்பதாகவும் அவரே சகலத்தையும் படைத்தவர் என்று கதை கட்டினார். அதை வைத்தே யோவான் எழுதியுள்ளார். வேதத்தை வைத்து அல்ல.


பரிசுத்த ஆவி என்பது கடவுளின் உயிரை குறிக்கிறது என்பார்கள். கடவுளது உயிர் எப்படி இன்னொரு நபராக இருக்க முடியும்?


ஆகவே கடவுளையும் கடவுளின் இரு பண்புகளை (பேச்சு&உயிர்) இன்னும் இரு நபர்களாகவும் கற்பனை பண்ணிக்கொண்டு மூவர் என்கிறார்கள்.


ஒரே கடவுளையே மூன்றாக பிரித்து விட்டு மூன்று நபர்கள் சேர்ந்து ஒரே கடவுள் என்று வியாக்கியானம் செய்கிறார்கள்.


அந்த வார்த்தையே இயேசுவாக பிறந்ததாக நம்புகின்றனர். அப்படியானால் திடீரென தேவன் ஊமையாகிவிட்டாரா?? காரணம் அவரது பேச்சு முழுவதும் பிரிந்து பெண்ணுள் புகுந்து மனிதனாக பிறந்துவிட்டதே.


ஆகவே தம் மதத்தை பற்றியே அரைகுறைகளாக இருக்கும் போதகர்கள் குர்ஆனை பற்றி சரியாக சிந்தித்துவிடவா போகிறார்கள்??


 

ஞாயிறு, 30 ஜூலை, 2023

புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள்- பாகம் 2

 பாகம் 1 தொடர்ச்சி


உள்ளடக்கம்

4.இயேசு பிறந்த பின் பெற்றோர் எங்கே போனார்கள்?

5.இயேசுவை சாத்தான் சோதித்த ஒழுங்கு வரிசை

6.ஞானஸ்நானம் நடந்த பின் நிகழ்ந்த நிகழ்வு

7.சாத்தானால் சோதிக்கப்பட்டது நாப்பது நாள்களிலா? நாப்பது நாள் முடிந்த பின்பா?

8.பேதுரு சீடராக தெரிவு செய்த இடமும் தருணமும்


4.இயேசு பிறந்த பின் பெற்றோர் எங்கே போனார்கள்?

மத்தேயு -

 இயேசு மகா ஏரோதின் காலத்தில் பிறந்ததால், பெற்றோர் அவனுக்கு பயந்து அவன் சாகும்வரை எகிப்துக்கு போய் வாழ்ந்தனர். ஏரோது செத்த பின் அவனது மகன் ஆட்சிக்கு வந்ததால், அவனுக்கும் பயந்து நாசரேத்துக்கு வந்தார்கள்.


¹³ "அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான்."

¹⁴ "அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய்,"

¹⁵ "ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது."

¹⁹ "ஏரோது இறந்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குச் சொப்பனத்தில் காணப்பட்டு:"

²⁰ "நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்துக்குப் போ; பிள்ளையின் பிராணனை வாங்கத்தேடினவர்கள் இறந்துபோனார்கள் என்றான்."

²¹ அவன் எழுந்து பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்துக்கு வந்தான்.

²² "ஆகிலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்துக்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது, அவன் சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் புறங்களிலே விலகிப்போய்,"

²³ "நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம்பண்ணினான். நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. "

 (மத்தேயு 2:13-15,21-23)


லூக்கா

இயேசு மகா ஏரோது இறந்த பின்பு பிறந்ததால் (சிரேனியு தேசாதிபதியாக இருந்தபோது), பெற்றோருக்கு பயம் கிடையாது. அவர்கள் எருசலேம் ஆலயத்திற்கு போனார்கள்.அங்கே நியாயப்பிரமாணப்படி செய்த பின்பு சொந்த ஊருக்கு திரும்பிப் போனார்கள்.

²¹ "பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்."

²² "மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படியே அவர்களுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபோது,"

²³ "முதற்பேறான எந்த ஆண்பிள்ளையும் கர்த்தருக்குப் பரிசுத்தமானதென்னப்படும் என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கவும்,"

²⁴ "கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, ஒரு ஜோடு காட்டுப்புறாவையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகச் செலுத்தவும், அவரை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்."


³⁹ "கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி சகலத்தையும் அவர்கள் செய்துமுடித்தபின்பு, கலிலேயா நாட்டிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப்போனார்கள்." (லூக்கா 2:21-24,39)


அதாவது மத்தேயுவின்படி , பெத்லகேமிலிருந்து எகிப்துக்கு ஓட்டம். அங்கிருந்து நசரேத்தில் குடியமர்நதனர். இதன்படி அவர்கள் நாசரேத்தை சொந்த ஊராக கொண்டவர்கள் அல்ல என்று புரிகிறது.


லூக்காவின்படி பெத்லகேமிலிருந்து எருசலேம் ஆலயத்திற்கு போய் பிறகு சொந்த ஊரான நாசரேத்துக்கு திரும்பி போனார்கள்.


----

5.இயேசுவை சாத்தான் சோதித்த ஒழுங்கு வரிசை


மத்தேயு

எருசலேம் ஆலயத்தின் கூரையின் மேல் இருந்து கீழே குதிக்க சொன்னான். பிறகு மலையின் மேல் ஏற்றி ராஜ்யங்களை காண்பித்து தன்னை பணிந்து கொள்ளுமாறு கூறினான். இயேசு சாத்தானுக்கு அப்பாலே போ சாத்தானே என்று கூறினார். சாத்தான் போய்விட்டான்.


⁵ "அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிக்கையின்மேல் அவரை நிறுத்தி:"

⁶ "நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்."

⁷ அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.

⁸ "மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:"

⁹ "நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்;"

¹⁰ "அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்."

¹¹ "அப்பொழுது பிசாசானவன் அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடைசெய்தார்கள்." (மத்தேயு 4:5-11)


லூக்கா

 முதலில் மலைக்கு மேல் ஏற்றி ராஜ்யத்தை காட்டினான். தன்னை பணிந்து கொள்ளுமாறு கூறினான். அதற்கு இயேசு தனக்கு பின்னாக போ சாத்தானே என்றார். பிறகு எருசலேம் ஆலயத்தின் கூரையின் மேல் இருந்து கீழே குதிக்க சொன்னான். பிறகு சோதனை முடிந்ததால் அவன் சென்றுவிட்டான்.


⁵ "பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:"

⁶ "இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்."

⁷ நீர் என்னைப் பணிந்துகொண்டால் எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான்.

⁸ "இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்."

⁹ "அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும்."

¹⁰ "ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும்,"

¹¹ "உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான்."

¹² அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார்.

¹³ "பிசாசானவன் சோதனையெல்லாம் முடித்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான்."

(லூக்கா 4:5-13)


இதன்படி மத்தேயுவின்படி முதலில் ஆலயத்தின் கூரையின் மேலிருந்து குதிக்க சொன்னான் பிறகு மலைக்குமேல் ராஜ்யங்களை காண்பித்து தன்னை பணிந்து கொள்ளுமாறு கூறினான். இயேசு அப்பாலே போ சாத்தானே என்று இதற்கு சொன்னபோது அவன் போய்விட்டான்.

லூக்காவின்படியோ முதலில் மலைக்கு மேல் ராஜ்யங்களை காண்பித்து தன்னை பணிந்து கொள்ளுமாறு கூறினான். இயேசு தனக்கு பின்னாக போகுமாறு சாத்தானுக்கு சொன்னார். சாத்தானோ மறுபடியும் ஆலயத்தின் கூரையின் மேல் இருந்து கீழே குதிக்க சொன்னான். பிறகு சோதனை முடிந்ததால் அவன் சென்றுவிட்டான். 

இங்கே ஒழுங்கு வரிசை முரண்படுவதோடு, இயேசு அப்பாலே போ என்று சொன்னதும் போனதாக மத்தேயுவும், பின்னாக போ என்று சொன்னபோது மீண்டும் கூரையிலிருந்து குதிக்க சொன்னதாக லூக்காவும் குறிப்பிடுகிறார்.


மாற்கு இந்த சோதனைகளை குறிப்பிடவில்லை. யோவானோ நடக்கவில்லை என்பதை நிரூபிக்கிறார். இது அடுத்த முரண்பாடாக பதிகிறேன்.


--------------------


6.ஞானஸ்நானம் நடந்த பின் நடந்த நிகழ்வு எது?

மாற்கு

ஞானஸ்நானம் பெற்று முடிந்ததும் உடனே ஆவியானவர் வனாந்தரத்துக்கு (காட்டுக்குள்) போக சொன்னார். அங்கே நாப்பது நாள் சோதிக்கப்பட்டார்

⁹ "அந்த நாட்களில், இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்."

¹⁰ "அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார்."

¹¹ "அன்றியும், நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று."

¹² உடனே ஆவியானவர் அவரை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவினார்.

¹³ "அவர் வனாந்தரத்திலே நாற்பதுநாள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே சஞ்சரித்துக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்கு ஊழியஞ்செய்தார்கள்."

(மாற்கு 1:9-13)


மத்தேயு

ஞானஸ்நானத்தை முடித்தார். பிறகு சாத்தானால் சோதிக்கப்பட ஆவியானவர் கொண்டு சென்றார்.

¹³ அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்.

¹⁷ "அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது. "

¹ அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.

² "அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று." (மத்தேயு 3:13,17, 4:1-2)


லூக்கா-

ஞானஸ்நானம் முடிந்ததும் பரிசுத்த ஆவியில் நிறைந்தவராக ஆவியானவரால் வனாந்தரத்துக்கு கொண்டுபோகப்பட்டு நாப்பது நாள் சோதிக்கப்பட்டார்.

¹ "இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு,"

² நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று. (லூக்கா 4:1-2)

யோவான்

யோவானின் படி இயேசு 40 நாட்கள் சாத்தானால் சோதிக்கப்படவில்லை. மூன்றாம் நாளிலேயே கானாவில் திருமணத்துக்கு போனார்.


²⁸ இவைகள் யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானங்கொடுத்த பெத்தாபராவிலே நடந்தன.

²⁹ "மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி."

³¹ "நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கவந்தேன் என்றான்."

³² "பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன்."

³³ "நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார்."

 …  

³⁵ "மறுநாளிலே யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டுபேரும் நிற்கும்போது," (யோவான் 1:28-29,31-33,35)

மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள்.”

  — (யோவான் 2:1 )

யோவானிடம் இயேசு வந்த அடுத்த நாள் யோவானும் அவனது இரண்டு சீடரும் இருக்கும் போது ஒரு நிகழ்வு நிகழ்கிறது. மூன்றாம் நாள் கானாவுக்கு திருமணத்திற்காக போய்விட்டார்


ஆகவே மத்தேயு மாற்கு லூக்கா ஆகியோர் ஞானஸ்நானம் முடிந்ததும் 40 நாள் வனாந்தரத்தில் இருந்தார் என்கிறது. யோவானோ மூன்றாம் நாளே கானாவில் திருமணத்துக்கு போனார் என்கிறது.அதன்படி சாத்தானால் இயேசு சோதிக்கப்படவில்லை என்று யோவான் கருதுகிறார். ஞானஸ்நானம் கொடுத்ததாக கூட யோவான் குறிப்பிடவில்லை.


--------------------


7.சாத்தானால் சோதிக்கப்பட்டது நாப்பது நாட்கள் இருந்தபோதா? அல்லது நாப்பது நாள் முடிந்த பின்பா?

மாற்கு

நாப்பது நாட்களிலேயே அவர் சாத்தானால் சோதிக்கப்பட்டார்


“"அவர் வனாந்தரத்திலே நாற்பதுநாள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே சஞ்சரித்துக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்கு ஊழியஞ்செய்தார்கள்."”

  — மாற்கு 1:13 (TBSI)


மத்தேயு

சோதிக்கப்படுவதற்காக அழைத்தசெல்லப்பட்டாலும் நாப்பது நாள் உபவாசத்தின் பின்பே சோதிக்கப்பட்டார்.

         

¹ அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.

² "அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று."

³ "அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்." (மத்தேயு 4:1-3)

லூக்கா-

 நாற்பது நாளுமே பிசாசால் சோதிக்கப்பட்டார். அது முடிந்ததும் பசி ஏற்பட மீண்டும் சோதிக்கப்பட்டார்

¹ "இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு,"

² நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று.

³ "அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும் என்றான்." (லூக்கா 4:1-3)


யோவானோ இயேசுவை யாராலும் சோதிக்கப்பட இயலாத நபராக நம்புவதால் அவர் அவ்வாறு நடந்ததாக எழுதவில்லை.

ஆகவே மாற்கு நாப்பது நாள் சோதிக்கப்பட்டதாகவும், மத்தேயு நாப்பது நாள் முடிந்ததும் தான் சோதனைக்காரனே வருகிறான். லூக்காவின்படியோ நாப்பது நாள் சோதிக்கப்பட்டதோடு, அதன்பின்பும் சோதிக்கப்படுகிறார்.

---------

8.பேதுருவை சீடராக தெரிவு செய்த இடமும் தருணமும்


மத்தேயு, மாற்கு

இயேசு கலிலேயா கடலோரமாய் நடந்துபோகையில் ,பேதுருவும் அந்திரேயாவும் கடலில் வலை போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தெரிவு செய்யப்பட்டார்


¹⁶ "அவர் கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது அவர்களைக் கண்டார்."

¹⁷ "இயேசு அவர்களை நோக்கி: என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்."

¹⁸ "உடனே அவர்கள் தங்கள் வலைகளைவிட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்."

(மாற்கு 1:16-18)


¹⁸ "இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலைபோட்டுகொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு:"

¹⁹ "என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்."

²⁰ "உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்."

(மத்தேயு 4:18-20)


லூக்கா

- கெனேசரேத்து கடலருகில் பேதுருவின் படகில் ஏறி போதகம் செய்த பின் பேதுரு தெரிவு செய்யப்பட்டார். அவரோடு அந்திரேயா இருக்கவில்லை மாறாக செபதேயுவின் குமாரரான யோவானும் யாக்கோபுமே இருந்தனர்.


¹ "பின்பு அவர் கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள்."

³ "அப்பொழுது அந்தப் படவுகளில் ஒன்றில் ஏறினார், அது சீமோனுடையதாயிருந்தது; அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப் படவில் உட்கார்ந்து, ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார்."

⁸ "சீமோன் பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப்போகவேண்டும் என்றான்."


⁹ "அவர்கள் திரளான மீன்களைப் பிடித்ததினிமித்தம், அவனுக்கும் அவனோடுகூட இருந்த யாவருக்கும் பிரமிப்புண்டானபடியினால் அப்படிச் சொன்னான்."

¹⁰ "சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அந்தப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார்."

¹¹ "அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்."

(லூக்கா 5:1,3,8-11)


யோவான்

அந்திரேயா என்ற பேதுருவின் சகோதரன் யோவான் ஸ்நானனின் பேச்சை கேட்டு இயேசுவிடம் போகிறார். பிறகு தன் சகோதரனான பேதுருவை அழைத்து செல்கிறார்


⁴⁰ "யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன்."

⁴¹ அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்.

⁴² "பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம்." (யோவான் 1:40-42)


இதன்படி, மத்தேயுவும் மாற்கும் கலிலேயா கடலோரத்தில் அந்திரேயாவுடன் பேதுரு சீடனானதாகவும், லூக்கா கெனேசரேத் கடலோரத்தில் செபதேயுவின் குமாரரோடு பேதுரு சீடராகிறார். யோவானின்படியோ யோவான்ஸ்நானனின் பேச்சைக்கேட்டு அந்திரேயா இயேசுவிடம் செல்கிறார். பிறகு தன் சகோதரனான பேதுருவை அழைத்து செல்கிறார்..

ஆகவே இது தெளிவான முரண்பாடாகும்.


தொடரும்.

புதன், 26 ஜூலை, 2023

1 & 2 தீமோத்தேயு, தீத்து, பிலோமோன் படி இயேசு கடவுள் அல்ல

முந்தைய பதிவு:

1&2 தெசலோனிக்கேயர் படி இயேசு கடவுளல்ல


1 தீமோத்தேயு படி இயேசு கடவுள் அல்ல

—————————-

இது பவுல் தீமோத்தேயு என்ற கிறிஸ்தவருக்கு எழுதிய கடிதமாக கருதப்படுகிறது

1.தேவன் வேறு , இயேசு வேறு ன பிரித்து கூறுகிறார் பவுல்.. அதாவது பிதாவே தேவன், இயேசு கர்த்தர்

¹ “நம்முடைய இரட்சகராயிருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் கட்டளையிட்டபடியே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல்,”

² விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.

(1 தீமோத்தேயு 1:1-2)

இயேசுவுக்கும் பிதாவே தேவன் – எபேசியர் 1:17 என்பதே பவுலின் நம்பிக்கை.

இயேசுவை கர்த்தராக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36

—————

2.என்றென்றும் காணப்படாதவரான ஒருவரே தேவன் என்பதே பவுலின் நம்பிக்கை

¹⁷ “நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.” (1 தீமோத்தேயு 1:17)

—————-

3.தேவன் ஒருவரே. இயேசு என்பவர் மனிதர். அவர் தேவனுக்கும் மனிதனுக்குமான இடைத்தரகர் என்பதே பவுலின் நம்பிக்கை

⁵ "தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே."

⁶ எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்குகிறது.“”

(1 தீமோத்தேயு 2 :5-6)

——————————

4.தேவன் மனுஷனாதாக பவுல் நம்பினாரா?

அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார். ""

— 1 தீமோத்தேயு 3:16 (TBSI)

இது பிற்கால பிரதிகளில் இடைச்செருகப்பட்டதாகும்.. பழைய பிரதிகளில் hos / ho (அவர்) என்றே இருந்தது. எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டு பிரதிகளில் தான் தியோஸ் (தேவன்) என காணப்படுகிறது. இது திரித்துவ கிறிஸ்தவ எழுத்தாளர்கள் தங்கள் வேலையை காட்டியுள்ளார்கள்.

பவுலின் நம்பிக்கை என்னவெனில்,

இயேசு என்பவர் தேவனல்ல.. அவரது பையன் என்றும் அந்த பையன் சகல படைப்புகளுக்கும் முன்பே இருந்தவர் என்பதாகும். அப்படியிருக்க பவுல் தேவன் மாம்சமானார் என சொன்னார் என இட்டுக்கட்டுவது அபத்தம் ஆகும்.

பவுலின் நம்பிக்கை பிரகாரம், தேவன் என்பவர் இயேசுவுக்கும் தேவனாக இருக்கிறார் (எபேசியர் 1:17), இயேசுவுக்கு சகலத்தையும் கீழ்படுத்தி கொடுத்தவரே தேவன் என்றும், அவருக்கு யேசு இன்றும் அடிபணிவதாகவும், வலது பாரிசத்தில் இருந்து தேவனிடம் பரிந்து பேசுவது மாக இருக்கிறார் என்பதே.

ஆகவே இதில் பவுல் சொல்வது, தேவனை அல்ல!! இயேசு மனுசனானார் என்பதாகும்.

அதனால் தான் மகிமையிலே ஏறெடுத்துப் கொள்ளப்பட்டார் என சொல்கிறார்.. அதாவது வேறு ஒருவரால் எடுத்துக்கொள்ளப்பட்டார் என்பதாகும்.

————

5.இயேசு வேறு தேவன் வேறு என்பதை மீண்டும் வேறுபடுத்தி பவுல் எழுதுகிறார்

“”நீ பட்சபாதத்தோடே ஒன்றும் செய்யாமலும், விசாரிக்குமுன் நிருணயம்பண்ணாமலும், இவைகளைக் காத்து நடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தூதருக்கும் முன்பாக, உறுதியாய்க் கட்டளையிடுகிறேன்.””

— 1 தீமோத்தேயு 5:21

——

6.தேவன் என்பவர் மனுசரால் காணப்படாதவரே.. அவர் ஒருவரே என்பதே.. பவுலின் நம்பிக்கை

¹⁵ “அந்தப் பிரசன்னமாகுதலை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார். அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்,”

¹⁶ “ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.” (1 தீமோத்தேயு 6:15-16)

————————–

2 தீமோத்தேயு படி இயேசு கடவுள் அல்ல

——————–

இது பவுல் தீமோத்தேயு என்ற கிறிஸ்தவருக்கு எழுதிய இன்னொரு கடிதமாக கருதப்படுகிறது

1.பிதாவே தேவன், இயேசு கர்த்தர் என்பதே பவுலின் நம்பிக்கை

பிரியமுள்ள குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக

— 2 தீமோத்தேயு 1:2

அதாவது இயேசுவுக்கும் பிதா தான் தேவன் -எபேசியர் 1:17 என்பதே பவுலின் நம்பிக்கை

———

2.தேவன் வேறு , நியாயந்தீர்க்க போகிற இயேசு வேறு என்பதே பவுலின் நம்பிக்கை

“”நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது:””

— 2 தீமோத்தேயு 4:1

———-

3.இயேசு மரித்தோரிழுந்து எழுப்பப்பட்டவர் என்பதே பவுலின் நம்பிக்கை.. அதாவது தேவன் எழுப்பினார்

“தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின்படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள்.””

— 2 தீமோத்தேயு 2:8

———————

தீத்து படி இயேசு கடவுள் அல்ல

——————–

இது தீத்து என்ற கிறிஸ்தவருக்கு பவுல் எழுதிய கடிதமாக கருதப்படுகிறது

1.தேவன் வேறு இயேசு வேறு.. பிதா தான் தேவன் என்றும் , இயேசு என்பவர் கர்த்தர் என்பதே பவுலின் நம்பிக்கை

¹ “தேவனுடைய ஊழியக்காரனும், இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனுமாகிய பவுல், பொதுவான விசுவாசத்தின்படி உத்தம குமாரனாகிய தீத்துவுக்கு எழுதுகிறதாவது:”

² “பிதாவாகிய தேவனாலும், நம்முடைய இரட்சகராயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.” (தீத்து 1:1-2)

அதாவது இயேசுவுக்கு தேவனும் பிதா தான்-எபேசியர் 1:17

————————

2.இயேசுவை மகாதேவன் என பவுல்  சொல்கிறாரா?

¹³ “நாம் நம்பியிருக்கிற ஆனந்தபாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.” (தீத்து 2: 13)

இங்கே இயேசுவை மகாதேவன் என மொழிபெயர்த்துள்ளார்கள். இது பவுலுடைய கொள்கைக்கே முரணானதாகும்.

ஏனெனில் பவுலுடைய கொள்கை பிதாவே தேவன் என்பதும் (1:1), அவர் இயேசுவுக்கும் தேவனாக இருக்கிறார் (எபேசியர் 1:17) என்பதோடு, இயேசு வேறு தேவன் வேறு என்பதாகும்.

அப்படியிருக்க பவுல் இயேசுவை தேவன் என எங்குமே அறிமுகப்படுத்தாதிருக்க, இந்த வசனத்தை இப்படி மொழிபெயர்ப்பது தவறாகும்.

பவுலுடைய நம்பிக்கைப் படி இயேசு என்பவர் தேவன் அல்ல! மாறாக தேவனுடைய கிருபை, தேவனுடைய மகிமை , தேவனது குமாரன் என்பதாகும்.

தீத்து 2:11 இல் , இயேசுவின் முதல் வருகையை குறித்து , தேவனது கிருபை பிரசன்னமானது என்கிறார்:

“”ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி,””

— தீத்து 2:11 ,

அதே போன்றே இரண்டாம் வருகையை குறித்து , மகாதேவனதும் இரட்சகரதும் மகிமையான இயேசுவின் பிரசன்னமாதலுக்கு காத்திருக்கிறோம் என்றே அவர் கூறுகிறார்.

அதாவது appearing of the glory (doxes) of the great God and Our Saviour, Jesus Christ.

மகாதேவனும் இரட்சகருமானவருடைய மகிமையான இயேசு கிறிஸ்துவின் பிரசன்னமாதல் என்பதே இது குறிப்பதாகும்.

ஏனெனில் இயேசுவின் இரண்டாம் வருகையில் பிதாவுடைய மகிமையில் வருவதாகவே சுவிசேஷ கதைகள் கூறுகின்றன.

மேலும் இயேசுவை பவுல் இரட்சகர் என கூறுவது போல தேவனையும் பலதடவைகள் இரட்சகர் என குறிப்பிடுகிறார் (தீத்து 1:4, 2:9), அதாவது இவ்வசனங்களுக்கு சற்று முன்பு கூட தேவனை அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

பவுலின் நம்பிக்கைப் படி, இயேசு தேவனால் இரட்சகராக எழுப்பப்பட்டவர் என்பதாகும். (அப்போஸ்தலர் 13:23).

சோ, தீத்து 2:13 இயேசுவை மகாதேவன் என பவுல் சொல்வதாக கூறுவது பவுலின் கருத்துகளுக்கு முற்றிலும் மாற்றமானதாகும்.

———-

3.தேவன் வேறு இயேசு வேறு.. பரிசுத்த ஆவி என்பவர் வேறு.. இயேசு மூலமாக பரிசுத்த ஆவியை தேவன் பவுலுக்கும் தீத்துவுக்கும் பொழிந்தாராம.

⁷ “அவர் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்த ஆவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார். (தீத்து 3:7)

———————

பிலோமோன் படி இயேசு கடவுள் அல்ல

——————-

இது பிலோமோன் என்ற கிறிஸ்தவருக்கும் அவரது சபையாருக்கும் ஒநேசிம் அடிமையை சேர்த்துக்கொள்ளுமாறு வேண்டி பவுல் எழுதிய கடிதமாக கருதப்படுகிறது.

1.பிதாவே தேவன், இயேசு கர்த்தர் என்பதே பவுலின் நம்பிக்கை

.”””நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.””

— பிலோமோன் 1:3 (TBSI)

அவரே இயேசுவுக்கும் தேவன் – எபேசியர் 1:17

அடுத்த பதிவு: எபிரேயர்படி இயேசு கடவுளா


செவ்வாய், 25 ஜூலை, 2023

புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள்- பாகம் 1

 நான்கு சுவிசேச முரண்பாடுகள்.

----------------------------------------------------

புதிய ஏற்பாட்டில் நிறைய முரண்பாடுகள் காணக்கூடியதாக இருக்கும். காரணம் கேள்விப்பட்ட கதைகளை சுவிசேசங்களும் நான்கு முரண்பட்டுக்கொண்டு எழுதப்பட்டிருப்பதோடு, ஒரே சுவிசேசத்துக்குள்ளேயும் முரண்பட்டுக்கொள்வதாக இருக்கிறது. நாம் ஒவ்வொன்றாக காண்போம்.


இந்த பதிவில் உள்ளடங்கும் முரண்பாடுகள்

1.யோசேப்பின் தந்தை யார்? வம்சாவளி எது?

2.இயேசு எப்போது பிறந்தார்?

3.இயேசு பெத்லகேமில் எங்கே பிறந்தார் ?



1.சிறந்த தாயான மரியாளின் புருஷனின் தகப்பன் யார்?

ஐ.மத்தேயு- யோசேப்பின் தகப்பன் யாக்கோபு

யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான் ; அவளிடம் கிறிஸ்து என்னப்படுகிற இயேசு பிறந்தார்.”

  — மத்தேயு 1:16 (TBSI)

II.லூக்கா- யோசேப்பின் தகப்பன் ஏலி

“அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரனார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார்.அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்;”

  — லூக்கா 3:23 (TBSI)


மாற்கு யோசேப்பு என்ற இந்த நபரை பற்றி வாயே திறக்கவில்லை. யோவான் யோசேப்பை கடந்து பரம்பரை சொல்லவில்லை.


மத்தேயு யோசேப்பின் வம்சவரலாற்றை கூறுவதாகவும், லூக்கா மரியாளின் வம்சவரலாற்றை கூறுவதாகவும் கிறிஸ்தவர்கள் வாதிடுகின்றனர்.

ஆனால் லூக்காவோ யோசேப்பு ஏலியின் மகன் என்று தான் கூறுகிறார். ஏலியின் மருமகன் என்று கூறவில்லை!


 எண்ணாகமம் 27:1-8, 36:1-9 ஆகிய ஒருவனுக்கு ஆண்மகன் இல்லாதபோது அவனது மகளுக்கு சொத்து போக வேண்டும், அவர்கள் தம் தந்தையின் கோத்திரத்திலேயே திருமணம் முடிக்க வேண்டும் என்றே சொல்கிறது.

பைபிளில் எங்குமே மறுமகனின் தந்தையாக மாமனாரை குறிப்பிடும் வழக்கம் கிடையாது. யூத வரலாற்றிலும் கிடையாது.

லூக்கா தனக்கு தெரிந்த வம்ச வரலாற்றையே எழுதியுள்ளார். அதில் ஏலியை யோசிப்பின் தந்தையாக தான் கூறுகிறார். முரண்பாட்டை சமாளிக்க இவர்களாக இட்டுக்கட்டிக்கூறும் விளக்கமே இது.


இதில் மேலதிகமாக மத்தேயு யோசேப்பை சொலமோனின் வம்சத்தில் வந்தவராகவும் (மத் 1:6), லூக்காவோ தாவீதின் அடுத்த மகனான நாத்தானின் வம்சத்தில் வருபவராக சித்தரிக்கிறார் (3:31)

அத்தோடு யோசேப்பு முதல் தாவீது வரை 42 தலைமுறைகளை லூக்கா குறிப்பிடுகிறார் -லூக்கா 3:23-31

மத்தேயுவோ 28 தலைமுறைகளை குறிப்பிடுகிறார்-மத்தேயு 1:6-16. மத்தேயு 14 , 14 பிரித்து கூறுவதற்காக மற்றவர்களை விட்டுவிட்டார் என்று கூறுவது ஏற்க முடியாது. 14 ,14 தலைமுறைகள் என்று அவர் அறிந்ததை தான் சொல்கிறார்.


லூக்கா, மத்தேயு இருவருமே இயேசுவை தாவீதின் பையன் என்று நிரூபிப்பதற்காகவே இவ்வாறு எழுதியுள்ளார். காரணம் மெசியா தாவீதின் குமாரன். ஆனால் இவர்கள் இருவருமே இயேசுவின் ரத்தம் அல்லாத யோசேப்புக்கே வம்சவரலாற்றை எழுதியுள்ளனர்.இது அவர்கள் எவ்வளவு யூத பாரம்பரியத்தை அறிந்திருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறார்கள் .


இன்னும் சிலர் சவுல் தாவீதை என் மகனே என கூப்பிட்டதால் (1 சாமுவேல் 24:16), இந்த வழமை உண்டு என்கின்றனர். ஆனால் இது மடத்தனமான வாதமாகும் . தாவீதின் வம்சவரலாற்றை எழுதும்போது தாவீது சவுலின் குமாரன் என்று யாரும் சொல்லப்போவதில்லை. சொல்வதும் இல்லை.. வயதில் மூத்தவர் இளையவரை என் மகனே என்று கூப்பிடுவது வேறு. வம்சவரலாறு வேறு.

----------


2.இயேசு எப்போது பிறந்தார்? கி.மு. 6 இலா? கி.பி. 6 இலா?

மத்தேயு- மகா ஈரோடு ராஜாவின் காலத்தில் பிறந்தார் (கி.மு. 4 க்கு முன்)


¹ " ஈரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,"

² "யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ளவந்தோம் என்றார்கள்."

³ "ஏரோது ராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுங்கூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்."

¹³ "அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான்."

¹⁹ "ஏரோது இறந்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குச் சொப்பனத்தில் காணப்பட்டு:" (மத்தேயு 2:1-3,13,19)

ஏரோது ராஜா கி.மு. 72 முதல் கி.மு. 4 வரை வாழ்ந்தவர் ஆவார். அவன் கி.மு. நான்கில் இறந்தான் என்பதால், இயேசு அக்காலத்தில் இரண்டு வயது பிள்ளையாக இருப்பதால், இயேசு குறைந்தது கி.மு. 6 இல் பிறந்திருக்க வேண்டும். இந்த ஏரோதின் மகனும் ஏரோது என அறிப்பட்டாலும் அவர்கள் கி.மு. நான்கு முதல் கி.பி 18வரை இருந்தார். இறந்து போகவில்லை . அவனை அர்கலேயு என்று மத்தேயு குறிப்பிடுகிறார் (மத்தேயு 2:22). இவனுக்கு பயந்து தான் நசரேத்தில் போய் வாழ்ந்ததாக இவர் கூறுகிறார்.

அதாவது கிறிஸ்த்துவானவர் கிறிஸ்துவுக்கு முன் 6 இல் பிறந்திருக்கிறார். (அவர் எந்த கிறிஸ்துவுக்கு முன் பிறந்தாரோ?


லூக்கா- அகஸ்து சீசரின் தேசாதிபதியான சிரேனியுவின் முதலாம் குடிமதிப்பு எழுதும் காலத்தில் பிறந்தார் - கி.பி 6

¹ அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகஸ்துராயனால் கட்டளை பிறந்தது.

² சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று.

³ அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள்.

⁴ "அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,"

கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்.

⁶ "அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது."

⁷ "அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே (ஆட்டுத்தொழுவம்) கிடத்தினாள்." (லூக்கா 2:1-7)


வரலாற்றில் சிரேனியு சிரியாவின் கவர்னராக நியமிக்கப்பட்டது மத்தேயு குறிப்பிடும் ஏரோதின் மகனான அர்கலேயுவை கி.பி. 6 இல் பதவிநீக்கிய பின் ஆகும்.

குறைந்தது இந்த குடிமதிப்பு கி.பி. 6 நிகழ்ந்திருக்க வேண்டும்.. இதன்படி லூக்கா இயேசுவை கிறிஸ்துவுக்கு பின் 6 இல் பிறந்ததாக எழுதுகிறார்.

ஆகவே கிறிஸ்து கிறிஸ்துவுக்கு முன் பிறந்தாரா? கிறிஸ்துவுக்கு பின் பிறந்தாரா ? 10-12 வருட காலம் வித்தியாசம் உள்ளது.


மாற்குவும் யோவானும் இதுபற்றி கூறவில்லை.

(அறிவில்லாத விசயத்தில் லூக்கா மூக்கை நுழைவிக்க போனதால் இந்நிகழ்வு ஏற்பட்டது.)

----------


3.இயேசு பெத்லகேமில் எங்கே பிறந்தார்? வீட்டிலா? அறைகள் இல்லாததால் ஆட்டுத்தொழுவத்திலா?


மத்தேயு-மத்தேயுவின்படி இயேசுவின் பெற்றோர் ஏரோது ராஜாவின் காலத்திலேயே பெத்லகேமில் வீடொன்றில் இருந்துள்ளனர். ஏரோதின் மரணத்திற்கு பின்னரே கலிலேயாவிலுள்ள நாசரேத்தில் தங்கினர்.


¹ "ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,"

⁹ "ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது."

¹⁰ "அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்."

¹¹ "அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்."

¹³ "அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான்."

¹⁴ "அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய்,"

¹⁵ "ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது."


²² "ஆகிலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்துக்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது, அவன் சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் புறங்களிலே விலகிப்போய்,"

²³ "நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம்பண்ணினான். நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. "

(மத்தேயு 2:1,9-11,13-15,22-23)

இதன்படி ,பெத்லகேமில் வீட்டில் பிறந்துள்ளார் இயேசு. அங்கே சாஸ்திரிகள் வந்த பின் ஏரோதுக்கு பயந்து எகிப்துக்கு தப்பி ஓடினர். அவன் மரணித்தபின்பு நாசரேத்தில் வந்து தங்கியதாக புரிகிறது.


லூக்கா- இயேசுவின் பெற்றோர் நாசரேத்தில் வசித்து வந்தனர். சிரேனியுவின் (ஏரோதின் மகனை பதவிநீக்கிய பின்) குடிமதிப்பிற்காக பெத்லகேம் போனார்கள். அங்கே வீடு கிடைக்கவில்லை. பிள்ளை பெற்று ஆடுமாடு கட்டிப்போடும் இடத்தில் வைத்தனர்.


⁴ "அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,"

கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்.

⁶ "அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது."

⁷ "அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே (ஆடு மாட்டு தொழுவத்திலே) கிடத்தினாள்."

(லூக்கா 2:4-7)


மத்தேயுவின்படி பெத்லகேமில் வீட்டில் தங்கியிருந்தனர். அங்கே பிள்ளை பெற்றனர். சாஸ்திரிகள் அங்கே வந்தனர்.பின் எகிப்துக்கு போனார்கள். பிறகு ஈரோட்டின் மகனுக்கு பயந்து நாசரேத்தில் தங்கினர். (மத்தேயுவின்படி பெத்லகேம் சொந்த ஊர். பிறகு ஊரை நாசரேத்துக்கு மாற்றிக்கொண்டனர்)..

 லூக்காவின்படியோ, பெத்லகேமில் அவர்களுக்கு அறைகள் கிடைக்கவில்லை. அதனால் ஆட்டுத்தொழுவத்தில் பிள்ளையை பெற்று துணியில் அங்கே வைத்தனர். இங்கே மேய்ப்பர்கள் வந்தனர்.(லூக்கா 2:8-18). அவர்களது சொந்த ஊர் நாசரேத்.(லூக்கா2:5)


இதை தனித்தனியாக முரண்பாடாக நான் கருத்தில் கொள்ளவில்லை. அப்படி எடுத்தால் பட்டியல் இன்னும் நீண்டு விடும்.


தொடர்ச்சி பாகம் 2 




ஞாயிறு, 16 ஜூலை, 2023

ஆதியாகமம் தொடர்-5

 ஆதியாகமம் தொடர்-5

தொடர்4 இன் தொடர்ச்சி

உள்ளடக்கம்

14.தேவன் பறவைகளை எதனால் படைத்தார்? எப்போது படைத்தார்?-முரண்பாடு

15.ஆடையின்றி நிர்வாணமாக இருந்த மனிதன்

16.ஏதேன் தொட்ட வாழ்க்கை தற்காலிக பயிற்சியே

17.பாம்பு சொன்னது உண்மையானதாம். தேவன் சொன்னது பொய்யானதாம் 

18.பெண்ணின் வித்தும் கிறிஸ்தவமும்



14.தேவன் பறவைகளை மண்ணினால் படைத்தாரா தண்ணீர் உண்டாக்கியதா? பறவைகளும் மிருகங்களும் மனிதனுக்கு முன்பே படைக்கப்பட்டனவா? மனிதனுக்கு பின்பு படைக்கப்பட்டனவா?  


“"தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று."”

  — ஆதி 2:19 (TBSI)


ஆனால் பறவைகள் தண்ணீர் மூலமாகவும், மிருகங்கள் தான் மண் மூலமாகவும் படைக்கப்பட்டதாக முதலாம் அதிகாரம் சொல்கிறது.


²⁰ "பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்."

 …  

²⁴ "பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று." (ஆதியாகமம் 1:20,24)


இதிலே இன்னொரு டவுட்டும் வருகிறது, அதாவது மிருகங்களை, பறவைகளை ஆதாமுக்கு முன்பே ஐந்தாம் நாளிலும் (ஆதி 1:20-23) , மிருகங்களை ஆறாம் நாளிலும் (ஆதி 1:24-25) படைத்தாரா? அல்லது ஆறாம் நாளில் ஆதாமை படைத்த பின்பு பெயரிடுவதற்காக சகலத்தையும் படைத்தாரா என்ற பிரச்சினையும் எழுகிறது.

ஏனெனில் முதலாம் நாளிலேயே சகல மரங்களை படைத்தாலும் அவை எதுவுமே முளைக்கவில்லை , காரணம் மனிதன் இருக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

“"நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை; ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை."”

  — ஆதி 2:5 (TBSI)


மரங்கள் மனிதன் நிலத்தை பண்படுத்தும் வரை முளைக்கவில்லை என்றால், பறவைகள் , மிருகங்கள் ஒரு நாள் பட்டினி கிடந்திருக்க வேண்டும்.

ஏனெனில் தேவன் அவைகளுக்கும் மனிதனுக்கும் கனிமரங்களை புற்பூண்டுகளை தான் சாப்பாடாக கொடுத்திருந்தார்-ஆதி 1:29,30

--------

15.ஆரம்பத்திலேயே தேவன் மனிதனை ஆடையின்றி நிர்வாணமாக வைத்திருந்தாராம்.

“"ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள். "”

  — ஆதி 2:25 

ஆதாம் பழத்தை சாப்பிட்டால் எல்லோரும் மிருகங்களை போன்று ஆடையில்லாமல் சுற்றிக்கொண்டிருப்பார்களா? 

⁶ "அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்."

⁷ "அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்." (ஆதி 3:6-7)


-------


16.ஏதேன் தோட்ட வாழ்க்கை தற்காலிகமானதான பயிற்சிக்காக கொடுக்கப்பட்டது. என்றென்றும் இருப்பதற்கு அல்ல.


காரணம்,

1.தேவனது ஆசீர்வாதமானது பூமி முழுவதும் மனிதர்கள் பெருக வேண்டும் என்பதே- ஏதேனுக்குள் தோட்ட வேலை பார்ப்பதல்ல

“"பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்."”

  — ஆதி 1:28 (TBSI)


2.ஆதாம் இந்த மரத்திலிருந்து சாப்பிடுவார் என கடவுளுக்கு தெரியாதா?

இருந்தும் அவர் அதை படைக்க காரணம் ஏதேனில் இவர்களுக்கான சோதனைக்காக.

“"தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்."”

  — ஆதி 2:9 (TBSI)


3.பாம்பு தந்திரம் மிகுந்தது என்றும் அது தடுக்கப்பட்ட பழத்தை இவர்களை சாப்பிட வைக்கும் என்று தேவனுக்கு தெரியாதா? அப்படி இருந்தும் அதை அங்கே வைக்க காரணம் சுயமாக தேர்வு செய்யும்போது தேவனது கட்டளையை மீறினால் ஏற்படும் நட்டத்தை உணர்விக்கவே இது.


தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.”

  — ஆதி 3:1 (TBSI)


(ஆனாலும் பாம்பு ஏன் இவர்களை வஞ்சிக்க (?) நினைக்க வேண்டும் என்பதற்கோ விளக்கம் பைபிளில் இல்லை. குர்ஆனில் மட்டுமே உண்டு.)


இவ்வாறு அல்லாமல் , தேவன் மனிதனை நிரந்தரமாக வாழ படைத்திருந்தால், தான் எதிர்பார்த்தது போல் படைக்க தெரியாதவர் என்றே நிரூபனமாகும்..

மேலும் தேவனது சித்தமே அவன் நிரந்தரமாக பூமியில் என்றென்றும் இருக்கக்கூடாது என்பதுவே

“"பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும்ன்று,"”

  — ஆதி 3:22 (TBSI)

------------


17.பாம்பு உண்மையாளராம். கடவுள் ஞானம் இருந்தும் பொய்யாய் போன தேவவாக்கும்.


பாம்பு சொன்னதாம்: பழத்தை சாப்பிட்டால் கண்கள் திறக்கப்படும், நன்மை தீமை அறிந்து தேவர்களை போல ஆவீர்கள்


⁴ அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை;

⁵ "நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது." (ஆதி 3:4,5)


பாம்பு சொன்னது போல கண்கள் திறக்கப்பட்டன:


“"அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்."”

  — ஆதி 3:7 (TBSI)


பாம்பு சொன்னது போல நன்மை தீமை அறிந்து தேவர்களை போல ஆனார்கள்:

“"பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று,"”

  — ஆதி 3:22 (TBSI)


இங்கே பாம்பு எதுவும் பொய் சொன்னதாக இல்லை. உண்மையை மட்டுமே சொல்லியுள்ளது.


ஆனால் தேவன் என்ன சொன்னார்?:

“ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.”

  — ஆதி 2:17 (TBSI)


அதாவது சாப்பிடும் நாளில் செத்துப்போவாய் என்றாராம்..

இது ஆன்மீக மரணமல்ல என்பதை முந்தைய பதிவில் எழுதியிருக்கிறேன்.

தேவன் கருணை காட்டி வாழ்வை நீடித்தாலும், தேவன் அறிந்துகொண்டே சொன்னதால் பொய் என்றே அது சித்தரிக்கப்படுகிறது .

(தேவனிடம் ஒரு நாள் 1000 வருடம். அது முடிய முன்பே 930 வயதில் ஆதாம் மரணித்துவிட்டாரே என்று சிலர் சிந்திக்கலாம். அது சரியாக இருந்தால் இரட்டை அர்த்தத்தில் தேவன் பேசியிருக்கிறார் என்று வரும்.)

-------

18.பெண்ணுடைய வித்தும் கிறிஸ்தவமும்.

பாம்பின் சொல்லை கேட்டு பெண் பழத்தை சாப்பிட்டு தன் கணவனையும் சாப்பிட வைத்ததால் , தேவன் அதை சபித்தார். அதன் தொடர்ச்சியாக:

“"உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்."”

  — ஆதி 3:15 (TBSI)

பாம்புக்கும் பெண்ணுக்கும் பகை இருக்குமாம். அதேபோல் பாம்பின் வித்துக்கும் பெண்ணின் வித்துக்கும் பகை இருக்குமாம்.

ஏதோ ஏதேனில் இருந்தது மரியாள் என்பது போல கிறிஸ்தவர்கள் கதை கட்டி, பெண்ணின் வித்து இயேசு. காரணம் அவர் மட்டுமே ஆண் துணையின்றி பிறந்தவர் என்கிறார்கள்.


இதற்கு நம் பதிலாக,


1.இங்கே மரியாளின் வித்து என்று சொல்லப்படவில்லை. மாறாக ஏதேனில் இருந்த பெண் ஏவாள். அவளுடைய வித்து என்பது ஏவாளுடைய பிள்ளைகளையே குறிக்கும்.


2.இங்கே வித்து என்பதை குறிக்க "ஸெரஃ" (זרע) என்பதே உள்ளது.பைபிள் பிரகாரம் இது பெண்ணுக்கும் ஆணுக்கும் பொதுவாக அவரவர் சந்ததியை குறிக்க பயன்படுவதாகும்.

உதாரணமாக இதே ஆதி 16:10 இல் இஸ்மவேலை குறித்து ஆகாரின் (ஸெரஃ-זרע) ஆக சித்தரிக்கப்படுகிறது.

“"பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: உன் சந்ததியை (ஸர்ஏக்- זרעך) மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்கும் என்றார்."”

  — ஆதி 16:10 (TBSI)


மேலும் இஸ்ரவேலரை ரெபெக்காவின் ஸெரஃ ஆக ஆதி 24:60 சித்தரிக்கிறது.

“"ரெபெக்காளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியார் (ஸர்ஏக்- זרעך)  தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள்."”

  — ஆதி 24:60 (TBSI)


ஆகவே இங்கே ஆதி 3:15 ஏவாளின் வித்தையை சொல்கிறது. ஏவாள் கன்னி கழியாமல் பிள்ளை பெறுவார் என்றோ அல்லது ஏவாளின் பிள்ளைகளில் ஒரு பெண் கன்னி கழியாமல் பிள்ளை பெறுவார் என்றோ சொல்லவில்லை.



3.ஏவாளுக்கு ஆபேலுக்கு பதிலாக வேறொரு ஸெரஃ கிடைத்ததாக அடுத்த அதிகாரமே சொல்கிறது

“"பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்று: காயீன் கொலை செய்த ஆபேலுக்குப் பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் (זרע אחר) கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குச் சேத் என்று பேரிட்டாள்."”

  — ஆதி 4:25 (TBSI)

சேத்தை தனக்கு ஆபேலுக்கு பதிலாக தேவன் கொடுத்த வித்து என்று ஏவாளே சொல்கிறார்.


4.ஆதி 3:15 ஒருமையில் அவர் என்று சொல்வதால் ஒரே நபராக இருக்க வேண்டுமா?

நிச்சயமாக இல்லை. ஸெரஃ என்று வரும்போது அது ஒருமையிலேயே எபிரேயத்தில் பாவிக்கப்படுகிறது. அதாவது "அவன்/அவர்" என்று ஒருமை ஆண்பாலிலேயே எபிரேயத்தில் வரும்.

உதாரணமாக ஆதி 24:60

“"ரெபெக்காளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள்."”

  — ஆதி 24:60 (TBSI)

இங்கே எபிரேயத்தில்

வெயீரஷ் ( וירשׁ- மேலும் அவன் சுதந்தரித்துக்கொள்வான்)) ,ஸர்எக் (זרעך- உன் வித்து) , எத்ஷஅர் (את שׁער- வாசல்களை) , சொனெஆவ் (שׁנאו- அவனை பகைப்பவர்களின்)

இதன் நேரடி அர்த்தம்,

"உன் வித்து தன்னை பகைப்போரின் வாசல்களை சுதந்தரித்துக்கொள்வான்."

இதுபோன்று தான் ஆதி 3:15உம் ஒருமையில் பாவிக்கப்பட்டுள்ளது.. இதற்கும் இயேசுவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை!


வெள்ளி, 14 ஜூலை, 2023

ஆதியாகமம் தொடர்- 4

 ஆதியாகமம் பாகம் 4

பாகம்3 இன் தொடர்ச்சி

உள்ளடக்கம்

12.முதல் மனிதன் மரணத்தோடு படைக்கப்பட்டார்.

13.சரீர மரணமா ஆத்ம மரணமா?



12.முதல் மனிதன் மரணத்தோடு படைக்கப்பட்டார் என கூறும் ஆதியாகமம். 

இதன்மூலம் ஆதாமின் பாவத்தினால் மரணம் பூமியில் நுழைந்ததாக கூறும் கிறிஸ்தவம் பொய்யாக்கப்படுகிறது.


¹⁷ ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். ஆதி 2:17


-இந்த பழத்தை சாப்பிட்டால் சாப்பிடும் நாளிலேயே மரணம் ஏற்படும் என தேவன் எச்சரிப்பதன் மூலம், மரணம் என்றால் என்ன என்று ஆதாம் அறிந்திருக்க வேண்டும். 

-அத்தோடு , மரணிக்கக்கூடியவனாக ஆதாம் படைக்கப்பட்டிருக்கிறார். அதனால் மரணத்தை குறித்து எச்சரிக்கப்படுகிறது.. மரணமற்றவனாக படைக்கப்பட்டிருந்தால், பழத்தை சாப்பிடுவதால் மரணம் ஏற்படப்போவதில்லை.

(உதாரணமாக சாவே இல்லாதவன் விசத்தை சாப்பிட்டால் இறப்பானா? நீ விசத்தை சாப்பிட்டால் இறப்பாய் என்று சொன்னால் அவன் மரணமற்றவனாக இல்லை என்று புரிகிறது.)


-மேலும் இதை தெளிவாக்கும் விதமாக, ஆதாம் மரணமற்ற வாழ்வை பெற வேண்டுமானால், ஜீவ மரத்திலிருந்து சாப்பிடவேண்டும் என்று ஆதி 3:22 கூறுகிறது.


“"பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று,"” — ஆதி 3:22 


-உயிர்த்தெழுதலின்பின்பு கூட ஜீவ மரத்திலிருந்து சாப்பிட்டால் தான் , மரணமற்ற வாழ்வை பெற முடியும் என யோவான் எழுதின வெளிப்படுதல் கூறுகிறது. அதாவது ஜீவ மர கனியை இயேசு வாக்களிக்கிறாராம் -வெளி 2:7

ஆனால் பவுலோ ஆதாமின் பாவத்தினால் தான் சகலரும் மரணிக்கிறார்கள் என்று எழுதிவைத்திருக்கிறார்- ரோமர் 5:12-14


ஆகவே கிறிஸ்தவத்தின் அடிநாதமே தப்பாக இருக்கிறது.


13.ஆத்மீக மரணமா சரீர மரணமா?


ஆதாம் பழத்தை சாப்பிட்டார்-ஆதி 3:6

கர்த்தர் சொன்னது போல (ஆதி 2:17) அதே நாளில் சாகவில்லை. மாறாக 930 வருடங்கள் வாழ்ந்து மரணித்தார் ஆதாம்- ஆதி 5:5.


ஆத்மீக மரணம் என்பது தேவசாயலை இழப்பதை குறிக்கும் என கருதினால், நோவா காலத்திலும் தேவசாயலில் தான் இருந்துள்ளனர்.(ஆதி 9:6)

“"மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது."”-ஆதி 9:6

  முதல் மனிதன் தேவசாயலில் உண்டாக்கப்பட்ட படியினால், பிறப்பவர்கள் அனைவரும் தேவசாயலிலேயே பிறப்பார்கள். அதனால் தான் பிற்காலத்தில் பிறந்த மனிதனை குறித்தும் இவ்வாறு சொல்லப்படுகிறது.



தேவனோடிருந்த உறவை இழப்பதை குறிக்கும் என்று கருதினால், அப்போது கூட காயீனுடனும் கூட பேசிக்கொண்டிருந்தார்.(ஆதி 4:6-14)


பாவம் செய்யாத இயல்பை குறிக்கும் என்று கருதினால், அப்போது கூட அது தப்பாக தான் முடியும். தேவன் மனிதனை நன்மை, தீமை இரண்டையும் செய்யக்கூடியவிதமாக தான் படைத்திருந்தார். அதனால் தான் ஆதாம் தீமை செய்தார் . இல்லாவிட்டால் பாவம் செய்திருக்க மாட்டார்.


ஆதாமின் ஆத்துமா மரணமடைந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை!


அப்படியாயின் சரீரம் மரணமடைந்ததா?

தேவனிடம் தவறு செய்துவிட்டு திருந்தி ஜெபம் செய்தால், தான் செய்ய நினைத்ததை செய்யாமல் மனதை மாற்றிக்கொள்பவராகவே பைபிள் சித்தரிக்கிறது.


¹³ "உமது தாசராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரவேலையும் நினைத்தருளும்: உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, நான் சொன்ன இந்தத் தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டே அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே என்று கெஞ்சிப் பிரார்த்தித்தான்."

¹⁴ அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்ளுக்குச் செய்ய நினைத்த தீங்கைச்செய்யாதபடிக்குப் பரிதாபங்கொண்டார். (யாத்திராகமம் 32:13-14)

⁷ "பிடுங்குவேன், இடிப்பேன், அழிப்பேன் என்று நான் ஒரு ஜாதிக்கு விரோதமாகவும், ஒரு ராஜ்யத்துக்கு விரோதமாகவும் சொன்னமாத்திரத்தில்,"

⁸ "நான் விரோதமாய்ப் பேசின அந்த ஜாதியார் தங்கள் தீங்கைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன்." (எரேமியா 18:7-8)


இவ்வாறே எசேக்கியா ராஜாவிடமும், நீ பிழைக்கமாட்டாய் இறந்துவிடுவாய் என்று சொன்ன போது , அவரும் ஜெபம் செய்தபோது , மேலதிகமாக 15 வருட ஆயுளை நீடிப்பித்தார்.- 2 இராஜாக்கள் 20:1-6, ஏசாயா 38:1-5.


இதுபோன்று ஆதாமும் மனந்திருந்தி மன்னிப்பு கேட்டதால் தான் ஆதாமின் ஆயுளும் நீடிக்கப்பட்டிருக்க வேண்டும். பழைய ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெறவில்லை.


-உதாரணமாக சர்ப்பத்திற்கும் மனிதனுக்கும் ஏன் பகை ஏன் அது மனிதனை வஞ்சிக்க நினைத்தது என்பதெல்லாம் எப்படி இடம்பெறவில்லையோ அது போன்றே இதுவும்.


தேவன் ஆதாமின் மேல் கோபத்தில் நிலைத்திருக்கவில்லை என்பதற்கு ஆதாரமாக , தேவன் அவர்களுக்கு தோல் ஆடைகளை அணிவித்ததை கூறலாம்-ஆதி 3:21


ஆகவே சரீர மரணத்தையே தேவன் எச்சரித்தார். ஆனாலும் அது அதே நாளில் நிகழவில்லை.


பாகம்5

அல்லாஹ் வழிதவறச்செய்கிறான் என்பதன் விளக்கம்

1.மனிதனுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது  --மனிதனுக்கு இறைவன் வழி காட்டியுள்ளான். ஒன்று அவன் நன்றியுள்ளவனாக இருக்கிறான் அல்லது காஃபிராக இருக்கிறான...